Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    3061
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87990
    Posts
  3. valavan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    1569
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/01/24 in Posts

  1. ம்ம்.. இப்படியான சம்பவங்களை வைத்து ஒட்டு மொத்த இந்தியரும் அப்படித்தான் என்று வன்மம் கட்டத்தேவையில்லை. புதிதாக குடியேறிய இந்தியர்களால் பல அசௌகரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. பொதுவாக சமூக பிரக்ஞய் குறைவாக இருப்பவர்களாக இருக்கிறார்கள். இந்த வசாகா பீச் தொடர்பான கதைகள் இந்தியர்களுக்கு எதிராக ஒரு சில tiktok பதிவுகளின் விளைவுதான் இது என்றும் பேசப்படுகிறது. அங்கே பணிபுரிபவர்கள் யாரும் இப்படியான சம்பவங்களை அல்லது மலக்கழிவுகளை காணவில்லை என்றும் கூட செய்தி சொல்கிறது. பக்கத்தில் போனால் மணக்கும் என்றால்... கீர்த்தி சுரேஷ், நமீதா ரெட்டி, ஹன்சிகா மொட்டவானி நயன், த்ரிஷா வுக்கு ஜொள்ளுவிட்டுக்கொண்டு நாங்க இப்படி பேசலாமா?
  2. 🤣..... பலகாரத்தை சுத்தி வந்த பேப்பர்ல இருக்கிற செய்தி மாதிரி அவரின் கதை இதுக்குள்ள வந்திட்டுது........
  3. உங்கள் கருத்து கவனத்தில் கொள்ளபட வேண்டிய கருத்து.அவரை கொண்டாடினால் தவறு தான். அதில் சில மறுப்புக்களை தெரிவிக்கின்றேன் உதாரணமாக நான் இருக்கின்ற வட்சப் குழுவில் நாவலர் என்ற நபரை ஒருவருக்கும் தெரியாது அல்லது சிலருக்கு என்னை மாதிரி அப்படி ஒரு சாதிவெறியர் முற்காலத்தில் இருந்திருக்கிறார் என்று தெரிந்திருந்தாலும் அவரை பற்றி கதைப்பதும் இல்லை. பிறந்தநாள் கொண்டாட்டம் போன்ற விழாக்களில் மற்றவர்கள் அரசியல் மற்றய விடயங்கள் பேசும் போது கூட இந்த பெயரை நான் கேட்டது இல்லை. யாழ்களத்தில் மட்டுமே இவரை புகழ்ந்து சிலர் கருத்து வைத்ததை பார்த்து இருக்கின்றேன்.
  4. ஈரான் - ஈராக் பெரும் யுத்தம் ஷியா சுன்னி என்ற மதபிரிவுகளுக்கு இடையிலான மோதல்தான் மிக பெரும் சர்வதேச பிரச்சனையானது குமாரசாமியண்ணா, அவனோட நாட்டில் தஞ்சம் புகுந்து வாழ்வுபெற்றுவிட்டு அவன் குடிமக்களையே கொன்று குவிப்பதை வினைவிதத்தவர்கள் வினை அறுக்கமுடியுமென்றால். நமது பிரச்சனையிலும் சர்வதேசம் ஓரவஞ்சகம் செய்து வினைவிதைத்தது , அதற்காக இஸ்லாமியர்கள்போல் நாமும் அரசுகள் செய்த தவறுகளுக்காக அவன் குடிமக்களை கொல்லலாமா அல்லது அப்படி செய்தால் நாங்கள் நல்லவர்களா கெட்டவர்களா? அவர்கள் செய்ய முடியுமென்றால் நாங்களும் ஏன் செய்யகூடாது? இப்படி கேள்வி எழுப்புவதுகூட எனக்கு கொடூரமாகவே உள்ளது ஆனாலும் ஒரு கருத்து பகிர்வை நிறுவுவதற்காக பேச்சுக்கு கேட்கிறேன் அமெரிக்கா இஸ்ரேல் மேற்குலகம் மட்டுமல்ல, உலகின் அனைத்து கண்டங்களிலும் உள்ள ஆதிக்க சக்தி பெற்ற நாடுகள் அனைத்தும் பிறநாடுகள்/இனங்கள்/சமூகங்களுக்கெதிராக தீங்கிழைத்திருக்கின்றன ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன அப்படி நடந்து கொள்ளவில்லை என்று உலகில் எந்த ஒரு வல்லமை கொண்ட நாட்டையும் நீங்கள் விரல் நீட்டி காண்பிக்க முடியாது. ஆனால் இஸ்லாமியநாடுகள் உள்நாட்டிலும் அண்டைநாடுகளுடனும் கொண்ட மோதல் போக்க்கினால்தான் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மேற்குலகமும் அமெரிக்காவும் இடையில் புகுந்து தமது ஆயுத வியாபாரம் பொருளாதார நலன்கள் அரசியல் தலையீடுகள் என்று மூக்கை நுழைத்தன. இப்போது தவறு எங்கிருந்து ஆரம்பித்தது என்கிறீர்கள்? கடாபியும் சதாமும் எப்படியான மேற்குலகுக்கு எதிரான கடும்போக்கை கொண்டிருந்தார்கள் என்பது யாரும் சொல்லி யாரும் அறியவேண்டிய ஒரு விஷயம் அல்ல, கடாபி மேற்குலத்தை எதிர்ப்பதே கொள்கையாக வைத்திருந்தார் ,அமெரிக்க பயணிகள் விமானத்தையே தகர்த்து நூற்றுக்கணக்கான பயணிகளை கொன்று அமெரிக்காவுடன் தீரா பகை வளர்த்தார், சதாம் அமெரிக்காவுடன் கூடி குலவிவிட்டு பின்னர் சோவியத் பக்கம் சாய்ந்தார், குர்து இனமக்களை விஷவாயு செலுத்தி ஆயிரக்கணக்கில் கொன்றார், அண்டைநாடான குவைத்மீது படை எடுத்து மேற்குலகத்தை அந்த பிராந்தியத்தில் இழுத்து அவர்கள் கையினாலேயே தனக்கான தூக்கு கயிறை கேட்டு பெற்றார். ஆசாத் சதாம் போலவே சொந்த நாட்டின் மக்கள்மீது ரசாயன தாக்குதல் நடத்தி அட்டூளியம் பண்ணி ரஷ்யாவுடன் நெருங்கிய நட்புறவை பேணி தனக்கெதிரானவர்களுக்கெதிராக மிக பெரும் போர் தொடுத்து மேற்குலகுடன் போர் செய்தார், ஆம் சிரிய அதிபருக்கெதிரான போராளிக்குழுக்களுக்கு ஆதரவாக மேற்கின் அனைத்து நாடுகளும் உதவி செய்தன, அதேபோல சிரிய அதிபருக்கு ஆதரவாக ரஷ்யா S-400 வான்பாகுகாப்பு கட்டமைப்பு, சுக்கோய் ரக விமானங்களுட்பட தனது ராணுவபடையையே கொண்டு சென்று இறக்கியது, ஆக அங்கே மோதியது அமெரிக்கவும் அதன் நேச படைகளும் எதிர் ஆசாத்தும் ரஷ்யாவும். அப்படியிருக்க ஆசாத் அவர்களுக்கு என்ன செய்தார் என்கிறீர்கள். சிரியாவின் மோதல்களில் எதிரும்புதிருமாக நின்ற ரஷ்யா மேற்குலபோரில் தமது ஆதரவுக்குட்பட்ட பகுதிகளில் இருந்த சிரிய அகதிகளை அழைத்து வந்தார்கள் அதனால் பூ கொடுத்து வரவேறார்கள், ஆதரவு வழங்கிய மேற்குலகத்திற்கு இவர்கள் நன்றிக்கடன் எப்படி மீள செலுத்தினார்கள் என்பதே இங்கேயுள்ல விவாத பொருள். முஸ்லீம்களுக்காக வாதாடவில்லை ஆனால் மேற்குலகத்தினர் சாதுக்கள் இல்லை என்கிறீர்கள், அப்போ முஸ்லீம்கள் சாதுக்களா இல்லையா? என்னைபொறுத்தவரை பிராந்திய கொள்ககள் என்று மேற்குலகம் வெவ்வேறு நிலைகளை கொண்டிருந்தாலும், தனது நாட்டில் பாதுகாப்பில்லையென்று தஞ்சம் தேடி வந்தவர்களுக்கு வதிவிட உரிமை கொடுத்து வசதிகள் கொடுத்து அவர்கள் சந்ததி சந்ததியாக வாழ் இடமும் கொடுத்து வாழவைத்த மேற்குலகம் சாதுக்கள்தான். இல்லையென்றால் அவன்நாட்டில் வாழ்ந்துகொண்டு அவனது மக்களையே கொன்று குவித்து அவனதுநாட்டை இஸ்லாமியநாடு ஆக்குவோம் என்று அறைகூவல் விட்டு எவ்வளவோ அநியாயம் பண்னினாலும் இன்னும் அவர்களை அகதியா தனது நாட்டுக்குள் அனுமதித்துக்கொண்டேயிருக்கிறான். இதையே ஒரு பேச்சுக்கு இந்துக்களும் கிறிஸ்தவர்களும் இஸ்லாமிய நாடு ஒன்றில் லட்சக்கணக்கில் வாழ்விட உரிமைபெற்றுவிட்டு வாராவாரம் அவனோட மக்களை கொன்று குவித்தால் உங்களை சும்மா விட்டிருப்பானா? அவன் நாட்டிற்குள் அகதிகள் என்று யாரையும் நுழைய அனுமதித்திருப்பானா? அவன்நாட்டினரை கொன்றவர்களையும் அதனுடன் தொடர்புடையவர்களையும் பொதுவெளியில் கழுத்தில் கயிறுமாட்டி கிரேனில் தொங்கவிட்டு கொலை செய்திருப்பான். எத்தனையோ உலகபணக்கார இஸ்லாமியநாடுகள் இருந்தும் எந்தநாடும் சக இஸ்லாமியர்களை தனதுநாட்டுக்குள் அகதியாக அனுமதிப்பதேயில்லை, அவர்களுக்கு தெரியும் அதன் பின் விளைவுகளும் தாக்கமும். மேற்குலகமும் அதன் அரசுகளும் சாதுக்கள் இல்லையென்றால் என்றோ அவனது பாஸ்போட்டுக்களை தூக்கி எறிந்துவிட்டு சாரை சாரையாக ஊர் திரும்பியிருப்போம். அப்படி திரும்பும் நிலையில் யாரேனும் உள்ளார்களா புறநடையாக ஓரிருவர் தவிர? அவர்கள் சாதுக்களா இல்லையா என்ற பந்து உங்கள் பக்கம் அதை உதைப்பதும் அணைப்பதும் உங்கள் செளகரியம்.
  5. யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டது 90ம் ஆண்டு. அதற்குமுதல் எந்த முஸ்லிம்நாடுகள் எமக்கு ஆதரவும் ஆயுதமும் தந்தன? எந்த முஸ்லீம்நாடுகள் எமக்கு ஆயுதங்கள் தரும் வாய்ப்பு இருந்தன? இன்று பாலஸ்தீன பிரச்சனையில் வலிமைமிக்க சவுதி,எகிப்து,குவைத்,ஜோர்டான் அமீரகம், துளிகூட சக முஸ்லீம்கள்மேல் கருணை காட்டவில்லை, எகிப்து காசா முஸ்லீம்களுக்காக தமது எல்லைகளை திறந்திருந்தால் பொதுமக்கள் இறப்பு சில நூறுகளிலேயே இருந்திருக்கும், 40 ஆயிரம்பேர் இறப்பும் ஒரு லட்சம்பேர் அங்கவீனமாயும் போயிருக்க மாட்டார்கள். மாறாக இஸ்ரேல் தாக்குதலில் அவர்களை முழுமையாக கொல்ல எல்லைகளில் தற்காலிக பெரும் தடுப்பு சுவர்களை போட்டு அதனை தாண்டி ஒருவேளை எவராவது வந்தால் போட்டு தள்ள டாங்கிகளையும் நிறுத்தியிருப்பார்கள். இஸ்லாமியர்கள் ஒரு விநோதமானவர்கள், அவர்கள் எந்த சமூகத்துடனும் உளபூர்வமாக ஒற்றுமையாக வாழாதவர்கள், ஏன் தமக்குள்லேயே நாட்டுக்கு நாடு ஒற்றுமையில்லாதவர்கள், இன்றைய பாலஸ்தீன பிரச்சனையில்கூட பொருளாதாரமும் ஆயுதபலமும் கொண்ட அரபுநாடுகள் தமது வலிமையை வைத்தே உலகை பெரும் அழுத்ததிற்குள் கொண்டு வந்திருக்கலாம், பெட்ரோலிய வழங்கலை வைத்தே ஒரு அச்சுறுத்தலை உலகத்திற்கு கொடுத்திருக்கலாம், மாறாக ஏமனில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு தமது வான் பரப்பை அனுமதித்ததன் மூலம் சவுதியும், இஸ்ரேலை தாக்க ஈரான் அனுப்பிய ஈரான் ஏவிய ஏவுகணைகள் ட்ரோன்களை சுட்டுவீழ்த்தியதன்மூலம் ஜோர்டானும் இஸ்ரேலுக்கு மறைமுக ஆதரவு வழங்கின. பாலஸ்தீன பிரச்சனையில் பாலஸ்தீனம் புலிகள் இலங்கை முஸ்லீம்களுடன் நடந்து கொண்டமாதிரி ஏனைய அரபுநாடுகளுடன் நடந்து கொண்டனவா அதனால்தான் அவர்களின் ஆதரவு வர்களுக்கு கிடைக்கவில்லையா? இல்லையென்றால் அந்த அரபுநாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாய் இருந்திருக்குமா? இலங்கை போரின்போது முஸ்லீம்களுடன் கைகோர்த்து நின்ற சிங்களவனுக்கே குண்டு வைத்த சஹ்ரான் சிங்களவர்கள் எந்த முஸ்லீம்களை வெளியேற்றியதால் அந்த கொடூரத்தை பண்ணினான், அது அரசியல் சதியென்று மழுப்பமுடியாது, அடுத்தவன் சொன்னால் தம்மோடு கூட நின்றவர்களுக்கே மதத்தின் பெயரால் குண்டு வைப்பவர்கள் கூலிபடை என்று ஆகிவிடுவார்கள். அமெரிக்காவிற்கு பயந்து ஆதரவு வழங்கவில்லையென்று கடந்து சென்றுவிட முடியாது இன்று மேற்குலகுடன் ஒருவித முறுகல் போக்கை கொண்டிருந்து பாலஸ்தீனத்திற்கு பெரும் ஆதரவு வழங்கும் துருக்கி அமெரிக்க நேசநாடு மட்டுமல்ல, நேட்டோவின் அக்கத்துவநாடும்கூட. ஈரானும் ஈராக்கும் மோதிக்கொண்டது, ஈராக்கும் குவைத்தும் மோதிக்கொண்டது,பாகிஸ்தானும் ஈரானும் மோதல் நிலையில் உள்லது, இந்தியாவும் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும், சவுதியும் ஏமனும் மோதல் நிலையில் உள்ளது இவை எல்லாவற்றிற்கும் காரணம் பாலஸ்தீன பிரச்சனைகள்தானா? ஏறக்குறைய ஒட்டுமொத்த உலகமுமே பாலஸ்தீனத்தை கைவிட்ட நிலையில் ரஷ்யா மட்டுமே உறுதியாக அவர்கள் பக்கமும் ஈரான் பக்கமும் நின்ற வல்லரசு , அவர்களையே போர் நடந்து கொண்டிருக்கும் காலத்திலேயே இரு தடவை இஸ்லாமிய பயங்கரவாதம் கொன்று குவித்திருக்கிறது தேவாலயத்தில் புகுந்து மதகுருவை வெளியே இழுத்துவந்து கழுத்தை அறுத்து கொன்றிருக்கிறது, அரங்கம் ஒன்றில் புகுந்து பெண்கள் குழந்தைகளென நூற்றுக்கணக்கில் கொன்று குவித்திருக்கிறது. அப்போ ரஷ்யாவும் பாலஸ்தீன பிரச்சனையில் எதிராக நின்றதுதான் அந்த தாக்குதலுக்கு காரணமா? சிரியபோரின்போது விமானங்களை அனுப்பி முஸ்லீம்களை மீட்டு தமது நாட்டிற்கு கொண்டு வந்து ரோஜாபூக்களை வழங்கி நிரந்தர அனுமதியும் வழங்கி தாங்கு தாங்கென்று தாங்கியது மேற்குலகம், வந்து ஓரிரு மாதங்களிலேயே வாழ்வு தந்த நாடுகளின் பெண்கள்மீது வல்லுறவும், கத்திக்குத்து, லொறி ஏத்தி நசுக்கி கொல்வது, துப்பாக்கி சூடுஎன்று வகை வகையாக நன்றிக்கடன் தீர்த்தார்கள் அதற்கு தம் குடிமக்களை பெரிதும் காவு கொடுத்தது பிரான்சும் ஜேர்மனியும் பிரிட்டனுமே. அதற்கும் பாலஸ்தீன பிரச்சனைகள்தான் காரணமா? பாலஸ்தீன பிரச்சனையை தீர்த்துவிட்டால் முஸ்லீம்கள் அடங்குவார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது ஒரு மாயை, அது தீர்தால் புதிதாய் இன்னொரு பிரச்சனையை உருவாக்குவார்கள், இல்லாவிட்டால் தமக்குள்ளேயே பிரச்சனைகளை உருவாக்கி தமது பள்ளிவாசல்களுக்குள்லேயே குண்டு வைப்பார்கள் ஏற்கனவே பலதடவை வைத்திருக்கிறார்கள். அவர்களை பொறுத்தவரை முஸ்லீம் என்று வந்தால் அவர்கள் எது செய்தாலும் சரி என்றே வாதிடுவார்கள், வக்காலத்து வாங்குவார்கள், அதையும் மீறி அவர்கள் செயல்கள் அவர்களுக்கே கொடூரமா இருந்தால் அதெல்லாம் அமெரிக்க யூத சதி என்று அடுத்தவர்மேல் பழி போடுவார்கள். நாம் தவறே செய்யாதவர்களா என்று யாரும் கேட்கலாம், நாம் தவறு செய்யும் போது அதனை முதலில் சுட்டிக்காட்டுவதும் தவறென்று வாதிடுவதும் நாங்களே. எமது இனம் மதம் என்பதற்காக வக்காலத்து வாங்குவதில்லை. அவர்கள் அப்படி அல்ல, இப்போது மட்டுமல்ல இனி எப்போதுமே!
  6. ஸ்ராலின் மோடிக்கு இன்னுமொரு கடிதம் எழுதும் வாய்ப்பு கிடைத்துவிட்டது
  7. பக்கத்து வீட்டு ஆன்ரி... பாத் ரூமில் டிரஸ் இல்லாம குளிச்சு கிட்டு இருந்தா . பக்கத்து வீட்டு பார்வை இல்லாத வாலிபன் அவள் வீட்டுக்குள் வந்து அழைப்பது கேட்டது. சரி , பார்வை இல்லாத பையன் தானேன்னு அப்படியே குளிச்ச கோலத்தில் வெளியே வந்து கேட்டாள். " என்ன தம்பி சாக்கெலட் எல்லாம் கொண்டு வந்து இருக்கே ? " அவன் சொன்னான்..... " எனக்கு பார்வை வந்துருச்சு ஆன்ரி, அதான்….” 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
  8. கிழிஞ்சுது இது எப்ப லெப்.கேணல் இம்ரான் சங்கரப்பிள்ளை சதானந்தன் கொக்குவில் யாழ்ப்பாணம் லெப்.கேணல் பாண்டியன் செல்லத்துரை சிறிதரன் பிரம்படி கொக்குவில் யாழ்ப்பாணம்
  9. வாழ்த்துக்கள் விசுகர் இங்கும் முகநூல் முழுக்க பிள்ளைகளின் யுனி பட்டம்களை பெற்றோருக்கு போடுவதும் பெற்றோர் அதை வாங்கி தங்கள் தலையில் போட்டு மகிள்வதுமாய் படங்கள் வந்து கொண்டே இருகின்றன அதில் அநேக பெற்றோர் வெட்டு புள்ளி என்ற இனவாத பூதம் இலங்கையை விட்டே கலைத்து அவர்கள் இரண்டு நேர வேலை மூன்று நேர வேலை செய்து தங்களின் கனவுகளை நிறைவேற்றி கொண்டார்கள் இனித்தான் .........................................................................இந்த இடைப்பட்ட வெளி எதையும் சொல்லும் 😃 சிலர் பெருமாள் இப்படித்தான் கருத்து வரும் என்று படிக்காமலே கருத்து போடும் கனவான்களுக்காக வேணுமென்றே இடைவெளி .
  10. லொல்..ப்றோ😂! பலஸ்தீனம் இன்று இருக்கும் நிலையையும்,இஸ்ரேலின் நிலையயும் மனதில் வைத்து இந்த வரலாற்றுத் துணுக்குகளை வாசித்துப் பாருங்கள்: 1. ஓட்டோமான் (பழைய துருக்கி தேசம்) வீழ்ந்த நேரம் இஸ்ரேலுக்கு பல்போர் பிரகடனம் மூலம் நிலத்தை பிரிட்டன் ஒதுக்கிக் கொடுத்தது. அந்த நேரம் பலஸ்தீன அரபுக்கள் நிராகரித்து வன்முறையை ஆரம்பித்தார்கள். இந்த வன்முறையை எதிர் கொள்ள யூதர்கள் உருவாக்கிய பராமிலிற்றரிக் குழு ஹகானா (Haganah) இஸ்ரேலிய இராணுவத்தின் (IDF) முன்னோடிப் படை இது தான். 2. சேர்ச்சிலுக்கு யூதர், இந்தியர், ஆபிரிக்கர் ஆகிய யாரையும் பிடிக்காது. அவர் பல்போர் பிரகடனத்தில் இருந்த இஸ்ரேல் நிலப்பரப்பைப் பிரித்து ஜோர்தான் நாட்டை உருவாக்கினார் (இதுவும் பலஸ்தீன அரபுக்களுக்குப் பிடிக்கவில்லையென்பது வேறு கதை). 3. 1947 இல், ஐ.நா வினால் இஸ்ரேல் அங்கீகரிக்கப் பட்ட போது, பல்போர் பிரகடனம் ஒதுக்கிய நிலப்பரப்பை விட குறைந்த நிலம் தான் இஸ்ரேலுக்கு வழங்கப் பட்டது. இப்போது ஹமாஸ் இருப்பது போல இஸ்ரேல் தரப்பில் இருந்த கடும்போக்காளர்கள் "இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது, அடித்துப் பிடிப்போம்!" என்ற போது இஸ்ரேல் தலைவராக இருந்த டேவிட் பென்கூரியன் "ஒரு மேசைத்துணி அளவிலான நிலம் கூட சர்வதேச அங்கீகாரத்தோடு கிடைத்தால் நாம் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று இஸ்ரேலை உருவாக்கினார். 4. ஒருவாறாக இஸ்ரேலை உருவாக்கிய பின்னர் அதன் சனப்பரம்பலைப் (demography) பார்த்தால், இஸ்ரேல் நாட்டில் அரபுக்களுக்கும், யூதருக்கும் ஒரு லட்சம் சனத்தொகை அளவு தான் வித்தியாசம். அரபுக்களின் பிறப்பு வீதப் படி பார்த்தால், ஒரு தலைமுறையில் இஸ்ரேல் இன்னொரு அரபு நாடாகும் சாத்தியம் தெரிந்தது😂. இதைப் பார்த்து இஸ்ரேல் தலைவர்கள் கையைப் பிசைந்து யோசித்துக் கொண்டிருக்க, "இஸ்ரேலை ஏற்றுக் கொள்ள மாட்டோம்" என்று போரை ஆரம்பித்து இஸ்ரேலின் பிரச்சினையைத் தீர்த்து வைத்தனர் பலஸ்தீன அரபுக்கள். பின்னர் நடந்தது வரலாறு!
  11. தமிழ் பொது வேட்பாளர் யார்? சசிகலா ரவிராஜ் அல்லது நீதிபதி. ம. இளஞ்செழியன்? | இரா மயூதரன்
  12. இது 'கீற்று' இணையத்தில் இருந்தது. கவிஜி இதை எழுதியிருந்தார். இதை வாசிக்கும் போது மனம் இலேசாக ஆனது. உங்களுக்கும் இது பிடிக்கலாம். ************************************************* மதகத ராசாக்களே சிரியுங்கள் வயதாகும் போது கோமாளிகள் ஆகாமல் இருக்க கவனத்தோடு இருக்க வேண்டும். பல கெத்துகள் வெத்துகளானதை பார்த்து விட்டோம். பார்த்துக் கொண்டிருக்கிறோம். பார்க்க பார்க்க வயதாகி விடுவது இயல்பு. அது ஒரு ப்ரோஸஸ். வயது ஏற ஏற மனதின் வடிவம் மாற வேண்டும். தன்மையின் தகவமைப்பில் பழம் போல பழுத்து... சுவை கூடும் இனிப்பில் புன்னகைக்க வேண்டும். மொட்டு விடும் அனிச்சையின் மொழி கொள்ளலே வயதாவதின் வடிவம். இயல்பினும் இயல்பாக பனி உருளும் நுனிப் புல் ஆகி எட்டு திசைக்கும் இசை பட அசைதல் அது. முந்திக் கொண்டு நிற்பது கூடாது. முன்ன விட்டு வழி நடத்துதலே அழகு. பின்னிருந்து பேசுதல் ஆகாது. உண்மையில் இருந்து பேசுதல் பேரழகு. உரக்க பேச வேண்டிய தேவை இல்லை. உள்ளத்தின் கதவுகள் திறந்திருந்தாலே போதும். மௌனமும் மொழி ஆகும். மனமெல்லாம் பூ வாகும். கருணை கொப்பளிக்க காலம் கூடும். கடவுள் ஆகி விட்டால் கவலை தீரும். ஒன்று புத்தகம் போல இருக்க வேண்டும். எந்தப் பக்கம் திருப்பினாலும்... செய்தி கிடைக்கும். அல்லது ட்ரங்கு பெட்டியாக இருக்க வேண்டும். திறக்க திறக்க நினைவுகளில் நீந்தும் சிறுபிள்ளை வாசம். இரண்டும் இல்லாமல் டிவி பொட்டியாக இருந்துவிடல் ஆகாது. சலிப்பு ஏற்படும். பக்கத்து வீட்டை எட்டிப் பார்க்க கற்றுத்தரும் சீரியல் மொழி மனிதன் சின்னவனாகும் வழி. குறுக்கு புத்தியில் இருந்து வெளியேறும் வயதுக்கு பலம் அதிகம். குதர்க்க சித்துவில் இருந்து வெளியேறும் மனதுக்கு பவள வண்ணம். வளைந்து கொடுக்காத மரம் புயலுக்கு தாங்காது போல.. வாழ்க்கை பொழியாத மனம் வயதாவதற்கு ஆகாது. வாரி அணைக்க தெரிந்த கைகளில் ஒரு மொத்த வாழ்வின் முத்தங்கள் ரேகையாய் படிந்திருக்கும். எல்லாருக்கும் கொடுத்து விட்டு எல்லையில் நிற்கும் சாமியாகும் வரம் வயதாவதற்கே கிடைக்கிறது. எனக்கு எனக்கு என்று ஆளாய் பறக்கும் மனதில் அனுபவமற்ற அரைவேக்காடு தானே மூடி உதைத்துக் கொண்டிருக்கும். முழு மனிதர் ஆக வயதாவதை ஏற்றுக் கொள்ளல் முக்கியம். பிறகு அதற்கு தகுந்தாற் போல காரியங்களை ஆற்றுவது அதன் பக்குவத்திற்கு கிடைக்கும் பரிசு. வெளித் தோற்றத்திற்கான பூச்சு காலத்துக்கு தக்க இயல்பாகி விட்டாலும்.... உள்ளே பூச்சற்ற வெண்மை தாலாட்ட வேண்டும். முகத்துக்கும் தலைக்கும் பூசும் பூச்சு நிம்மதி தரும் என்றால்... மனதுக்கு பூசும் பூச்சு நிம்மதி எடுக்கும். பொறுமைக்கு அருஞ்சொற்பொருள் மூத்த மனிதனின் முகக்கனிவென்றே இருக்கட்டும். குற்றம் கண்டு கொண்டே இருக்க சுற்றம் இருப்பது இருக்கட்டும்... உற்றதே விலகத் தொடங்கும். மரணத்துக்கு பயந்தவர் மற்றவருக்கு இரங்குவதில்லை. தன்னைப் பற்றியே சிந்திக்கும் சீக்கு முதுமைக்கு அழகல்ல. தன்னியல்பின் நிழலாக அசையும் ஆறு போல இருந்தால்... வேறு என்ன வேண்டும். விதி விட்ட வழி என்றெல்லாம் ஒன்றுமில்லை. வீட்டுக்கே வெளிச்சமாகும் வல்லமை வயதாவதற்கு உண்டல்லவா. கிடந்து தவித்தல் கடிந்து கொண்டே இருத்தல். எழுந்து பறக்க... கடினப்பட்ட கவசத்துக்கு ஆகாது. பழம் போல இருக்க வேண்டும்... வயதான மனது. விழுந்து சிதறினாலும்... பல உயிர்களுக்கு உணவாக வேண்டும். முடங்கிக் கொண்ட மூச்சில் விஷம் ஏறுவது இயல்பு. மூர்க்கம் கொண்ட மனதில் சர்ப்பம் ஊர்வது இயல்பினும் இயல்பு. உணர்வினில் இருக்க... சில இயல்புகளை தகர்ப்பது காலத் தேவை. பூக்களின் குதூகலத்திற்கு பழகிய மனதில் உடல் ஒரு சாது. வீதியில் இருக்கும் வேப்ப மர பூவையும் ரசிக்க பழகு. செய்தித்தாளில் சிக்கி சீரழியாமல் இருக்க மாற்று வழிகள் நிறைய உண்டு... மதகத ராசாக்களே. வேடிக்கை பார்க்கும் கண்களில் வானம் பூமி யாவும் பேரழகு. வீடியோ பார்க்கும் கண்களில் தான் புரை விழுகிறது. மீசையை முறுக்கிக் கொண்டே கிடப்பது வெத்து. கொத்து சாவியை இடுப்பில் கொண்டே திரிவது வெத்திலும் வெத்து. வியாக்கியானத்தை விட்டொழிந்த கணத்தில் கவனிக்கலாம்... கனமற்ற கண்களில் சிறுபிள்ளை கோலி குண்டு சுழலும். நினைவுகளை அசை போடுதலில் இருக்கும் சுகம் கண்டு கொள்ளுங்கள். எதிர் வீட்டு மனிதர்க்கும் இரங்கும் குணம் வாழ்வின் அடிப்படை. பிடிவாதங்களில் இருந்து விடுபடும் போது ஒரு வாதமும் உடன் இருப்பதில்லை. முடக்கு வாதம் கால்களில் வருவதை விட மனதில் வருவது பேராபத்து. வயதாவதைப் போல துக்கம் இல்லை தான். ஆனால் வாழ்வின் போக்கில் அதை அப்படியே ஏற்க பழகுதலே அதைக் கொண்டு வெளிப்படும் தீவிரத்தை அடக்கும் வழி. இனம் புரியாத கோபங்களை தவிர்க்க... முளைத்த கொம்புகளை மடக்க முயற்சியுங்கள். தேவையில்லாத பதட்டங்களை அழகாய் அழிக்க மூத்தவனாகுதலே முறை. வழியை அடைத்துக் கொண்டு நிற்கையில் தான் கூட்டம். வழி விட்டு விட்டால்... ஆட்டம் பாட்டம் தான். அமைதிக்குள் செல்வது தான்... வயதாவது. மரணத்துக்குப் பழகுவது தான்... வயதாவது. மனிதர்களிடையே தெய்வமாகுதல் தான் வயதாவது. இப்படி நோக்கினால்... எப்படி வரும் மன நோவு. உடல் நோவுக்கும்கூட உடன் இருக்கும் அழுத்தம் தானே முதற் காரணம். மூடி இருக்கும் கைகளில் வியர்வை இருக்கும். திறந்து சிலுவையாகி விடுங்கள்.. சிள் காற்றில் சிலிர்க்கலாம். பேரன்பில் திளைக்கும் மனதுக்கு வயது ஆவதே இல்லை. பெரு வனமாய் ஆகும் சிந்தைக்கு சீக்கு எப்படி வரும். உடல் கடந்த உன்னதத்திற்கு பழக... வயதாவதைப் போல சிறந்த வண்ணம் ஏது. பிள்ளைகளிடம் இருக்கும் கண்டிப்பு அவர்கள் பிள்ளைகளிடம் ஏன் இல்லை தெரியுமா. அது தான் முதிர்ச்சி. தளர்ச்சி என்று எடுத்துக் கொள்வது பின்னடைவு. மலர்ச்சி என்று எடுத்துக் கொண்டால்... மரணமும் நிறைவு. மனம் விட்டு சிரியுங்கள். மற்றவர் சிரிக்க ரசியுங்கள். மாதுளை என இருக்கட்டும் உங்கள் மௌனம். தலை வாழையென கிடக்கட்டும் உங்கள் வாழ்வு. பூமியை முதுகில் சுமப்பதை விட்டு விட்டு... இதயத்தில் வானத்தை ஏற்போம். - கவிஜி https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-83/47000-2024-07-30-21-29-09
  13. இது சுமத்திரனின். தொழில் அல்லது வியாபாரம் நாங்கள் இலங்கை என்ற நாட்டில் ஒன்றாக சிங்களவருடன். வாழப் போகிறோம் சுயாட்சி வேண்டாம் பேச்சுவார்த்தையும் வேண்டாம் முடிய அறையிலிருந்து இரகசியமாக தின்று குடித்து பேசவும். வேண்டாம் எதை பேசினாலும். தொலைக்காட்சி முன்னர் அனைவரும் பார்க்கும் படியாக பேசுங்கள் மற்றும்படி வாக்கு போட்டு ஒருவரை ஐனதிபதி ஆக்கி பேச வேண்டிய அவசியம் தமிழருக்கு இல்லை பேச்சுவார்த்தையில் இடுபடும். தமிழ் பிரதிநிதிகளுக்கு பேசமாலே அவர்கள் விரும்பியது எல்லாம் கிடைக்கும் தமிழ் மக்களுக்கு தான் பேச வேண்டி உள்ளது” ஐனதிபதி ஆனதும் பொலிஸ் அதிகாரம் இல்லை காணி அதிகாரம் இல்லை 13. இல்லை ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் கோடி கோடியாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் இன்று சுமத்திரன். தமிழர்களை ஏமாற்றுவார் நாளை சிங்கள ஐனதிபதி ஏமாற்றுவார் .. இதை இந்த சுமத்து ......சொல்லும் எனவே… தமிழர்களே உங்களுக்கு இலங்கையில் வெற்றி ஒருபோதும் கிட்டாது ஆகையினால் பொது வேட்பாளராக தமிழரை நிறுத்தி உங்கள் வாக்குகளை போடுங்கள் நாங்கள் விரும்புவது தோல்வியோ ஒரு சிங்களவனை ஐனதிபதி ஆக்குவதும். தோல்வி தான் படுதோல்வி ஆனால் தமிழன் தோற்பது வெற்றி ஆகும். 🙏
  14. முந்தி என்றால் 'பொங்கலுக்குள்.........' தீர்வு என்று சொல்வார்கள். இப்ப என்னடாவென்றால் இனிமேல் தான், அதுவும் அடுத்த அதிபருடன் தான் பேச்சுவார்த்தையே நடத்த வேண்டும் என்கின்றார்கள். சம்பந்தரைப் போலவே சனங்களும் வயது நல்லா வந்து ஒரு நாள் போய்ச் சேர்ந்து விடுங்கள் போல........
  15. பயங்கரவாதி ஹணியாவுக்கும் நரியன் நாவலனுக்கும் என்ன தொடர்பு? 🤔
  16. கருத்தொருமித்த காதலர் கண்களுக்கு அவர்களைச் சுற்றி நடப்பவை எதுவும் தெரியாது.......அதற்காக யாரும் விடுப்பு பார்க்காமல் சும்மா இருப்பதில்லை ..........! 😍
  17. ஒரு அணியாக வென்றால், அந்த நாட்டிற்கு அது ஒரு பதக்கம் என்றே கணக்கிடப்படுகின்றது. ஆனால் வென்ற அணியின் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் பதக்கங்கள் வழங்கப்படும். அஞ்சலோட்டத்திலும் இதுவே தான் நடைமுறை. நாலு வீரர்களுக்கும், வென்றால், பதக்கம் உண்டு, ஆனால் நாட்டிற்கு ஒன்று தான் கணக்கில் சேரும்.
  18. இன்று தடகளப் போட்டிகள் ஆரம்பித்துவிட்டன. பலருக்கும் இனி போட்டிகளில் கூடிய ஈடுபாடு இருக்கும். சில நாடுகள் இதில் பதக்கங்களை அள்ளி எடுத்துவிடும்.
  19. அமெரிக்க‌ன் ஒலிம்பிக் கிங்😁...................................
  20. 1) 100% ✅ 2) 100% ❌ அவர் காலத்தில் தமிழுக்கு எந்த அழுத்தங்களும் இருக்கவில்லை. நாவலர் சைவ சமத்தை பாதுகாப்பதனூடாக அதுவரை இருந்துவந்த சமூக அமைப்புமுறையை பாதுகாக்க முனைந்தவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். தமிழுக்கு யாரால் அழுத்தம் ஏற்பட்டது என்று உங்களால் கூற முடியுமா? வழமைபோல பிழையான கற்பிதங்களை விதைக்க முற்படுகிறீர்கள்.
  21. அல்வாயன்… இப்படித்தான் நடக்கும் என்று, முன்பே கணித்த உங்களுக்கு பாராட்டுக்கள். 🙂 தொப்பிக்காரரின் சாதகத்தை, விரல் நுனியில் வைத்திருக்கின்றீர்கள். 😅 மௌலவி ஏன் துவக்கு வாங்கினவராம்… கொக்கு சுடவா…??? 😂 🤣
  22. கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்தின் இராணுவத்தலைவரும் கொல்லப்பட்டு விட்டார் என இஸ்ரேல் அறிவித்துள்ளதாக இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை ஹமாஸ் இன்னும் மறுக்கவில்லை. கடந்த வாரம் ஐக்கிய அரபு இராச்சியம் வங்காளதேசம் (Bangladesh) சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், 50 பேருக்கு 10 வருட சிறைத்தண்டனையும் விதித்து இருக்கு. ஏன் இந்த தண்டனை? தன் மண்ணில் வங்காளதேசத்தின் ஆட்சிக்கு எதிராக (அதாவது ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு எதிராக அல்ல) கண்டன ஆர்ப்பாட்டம் நடாத்தியமைக்கு! அரபு தேசத்தின் நீதி இப்படித்தான் உள்ளது. https://www.middleeasteye.net/news/uae-life-sentence-three-bangladesh-protesters
  23. பக்கச் சார்பான ஊடகவியலாளர் இரா. மயூரதன். தோற்கப்போகும் ஒன்றிற்காக பலியாட்டை மஞ்சள் பூசிக் குளிக்க வைக்க ஆயத்தம் செய்கின்றனர். 🤣
  24. மேலுள்ள காணொளியின்.... ஆறாவது நிமிடத்தில், முக்கியமான தகவல் ஒன்றை சொல்கிறார் உன்னிப்பாக கேளுங்கள். 😂
  25. 2009 அழிவில் புலம்பெய்ர்சின் பங்கு மிகவும் முக்கியமானது. 2009 காலப்பகுதியில் புலம்பெயர்ஸ்கள் உலகெங்கிலும் நடாத்திய பேரணிகளின் பங்களிப்பில் ஒரு சிறிய பகுதியினைத்தானும் சமாதானப் பேச்சுவார்த்தை க்கு வழங்கும்படி இருபகுதியினரையும் ஊக்கப்படுத்தியிருந்தால் நாம் இன்னும் பலமாக இருந்திருப்போம். புலம்பெயர்ஸ்களின் தலைமை முட்டாள்களாலும் , வியாபாரிகளாலும், சுயநலவாதிகளாலும் நிரப்பப்பட்டதன் பலன்தான் எமது அழிவு.
  26. கிழக்கு மாகாணத்தில் 13 வயது தமிழ் குழந்தை ஒன்றினை இஸ்லாமியர்கள் கூட்டாக வல்லுறவு செய்வதற்கும் பின்னர் அந்த குழந்தையினை கல்லெறிந்து கொல்வதற்கு உடந்தையாக இருந்த இஸ்லாமியர்கள் பலர் அந்த குழந்தையின் பெற்றோரின் வயதொத்தவர்கள், இந்த நிகழ்வுகள் தொடர் இஸ்லாமியர்களின் வன்முறைகளின் தொடரின் ஒன்றாக இருந்த காலகட்டத்தில் நிகழ்ந்த ஒன்று. தமது வக்கிர புத்தியினை எவ்வாறு மதத்தினுள் புகுத்தி கல்லெறிந்து கொல்லும் மதசடங்காக மாற்றியதுபோல எமது யாழ் சமூகத்திலும் இந்து மதத்தின் பேரால் சாதிக்கொடுமை மூலம் பலரை வனுமுறைக்குட்படுத்தப்படுவதற்கும் கொல்லப்படுவதற்கும் உறுதுணையாக இருந்த கருத்தியலை விதைத்த நாவலரை இப்போதும் கொண்டாடும் சமூகமாக இருந்து கொண்டு மற்ற சமூகங்கள் மேல் சகட்டுமேனிக்கு குற்றம் சாட்டுகின்றோம். இஸ்லாமியர்களுக்கும் எங்களுக்கும் அதிக வித்தியாசமில்லை, ஆனால் நாங்கள் புனிதர்கள் போல பேசுவது வேடிக்கையானது.
  27. உண்மையில் சிறப்பான கருத்து இது. ஆனால், ஈழத்தமிழரின் வரலாற்றில் உரிய நேரத்தில் பெறக்கூடியதை பெற முயற்சிக்காமல் வெற்று வீராப்புடன் தவறான கோலங்களை போட்டு காலத்தை கடத்தி பெறக்கூடியதை இழந்த பின் புலம்புவது ஈழத்தமிழரின் வாடிக்கை. சமஸ்டியை கண்டி சிங்களவர்கள் வலியுறுத்திய போது அதை நிராகரித்து காலங்கடத்தி, பின்னர் காலங்கடந்த பின் சமஸ்டி கட்சி( தமிழரசுக்கட்சி) ஆரம்பித்து சமஸ்டி கேட்டதை போல அந்த நிலையே ஆயுதப்போரளிகள் காலத்திலும் தொடர்ந்தது.
  28. இம்ரான் பாண்டியன் படையணி தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டது. தமிழீழ தேசியத் தலைவரின் தனிப்பட்ட பாதுகாப்புப் படையணி 1983 ஆம் ஆண்டில் தமிழீழ தேசியத் தலைவரின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக ஒரு திறமையான படையணி தேவைப்பட்டது. அந்தக் கால கட்டத்தில் தலைவருக்கு தமிழ்நாட்டிலிருந்து பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. எனினும், தலைவரின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக இம்ரானைத் தெரிந்தெடுத்து நியமித்திருந்தார். பின்னர் இம்ரான் சிகிச்சைக்காக தமிழ்நாடு சென்ற பின் தலைவர் தனது பாதுகாப்புப் படையணியின் தலைவராக இம்ரானின் நெருங்கிய நண்பனாகிய பாண்டியனையே தெரிந்தெடுத்தார். தலைவரின் பாதுகாப்புக்கான படையணியினரை இம்ரானும் பாண்டியனுமே தேர்ந்தெடுத்து படையணியில் சேர்த்து வந்தனர். அந்த அளவுக்கு தலைவருக்கு மிக விசுவாசமுள்ள பாதுகாப்பாளர்களாக இம்ரானும் பாண்டியனும் இருந்து வந்தனர். இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய கால கட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் பெரும் பின்னடைவுக்குள்ளானது. அப்போது யாழ்ப்பாணத்தின் விடுதலைப் புலிகள் படையணித் தலைவராக பாண்டியன் இருந்தார். இந்திய இராணுவத்தினரால் பாண்டியன் இருந்த இடம் சுற்றிவளைக்கப்பட்டபோது கைத்துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு பாண்டியன் வீரச்சாவை தழுவிக்கொண்டார். பாண்டியன் வீரச்சாவு அடைந்த பின்னர் யாழ்ப்பாணத்தின் விடுதலைப் புலிகள் படைத்தலைவராக இம்ரான் நியமிக்கப்பட்டார். இவரும் இந்திய இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவை தழுவிக்கொண்டார். நான் பொல்லை கொடுத்து அடி வாங்க‌ வில்லை அண்ணா த‌லைவ‌ர் இவ‌ர்க‌ளின் நினைவாக‌ ப‌டைய‌ணிய‌ உருவாக்கினார் என்று தான் என்னை விட‌ வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் ஊட‌க‌ம் முன்னாள் சில‌ வ‌ருட‌த்துக்கு முத‌ல் சொன்னார்...............................
  29. உங்க‌ளுக்கு எப்ப‌ பார்த்தாலும் ஆட்டுக்கை மாட்டை க‌ல‌ப்ப‌தே வேலையா போச்சு😁😛 விளையாட்டு திரியில் ச‌ம்ம‌ந்த‌ம் இல்லாம‌ சீமானின் பெய‌ரை எழுதுவீங்க‌ள்.................அதுக்கு விள‌க்க‌ம் த‌ந்தா அந்த‌ திரி ப‌க்க‌மே வ‌ர‌மாட்டிங்க‌ள்😒 ஏன் பெரிய‌வ‌ரே குழ‌ந்தை பிள்ளைக‌ள் போல் யாழில் விளையாடுறீங்க‌ள் யாழில் எழுதும் முழு சுத‌ந்திர‌ம் உங்க‌ளுக்கு உண்டு ப‌ய‌ன் உள்ள‌தாய் எழுதுங்கோ 16 , 17 வ‌ய‌தில் என‌க்கு அர‌சிய‌ல் சுத்த‌மாய் பிடிக்காது யாழில் வ‌ந்து ப‌ல‌தை தெரிந்து கொண்டேன் உங்க‌ளிட‌ம் இருந்தும் சில‌ உண்மை ச‌ம்ப‌ங்க‌ள் கேட்டு தெரிந்து கொண்டேன் ந‌ல்ல‌துக‌ளை எழுதுங்கோ தெரிந்து கொள்ள‌ ஆர்வ‌மாய் இருக்கு 🙏 ந‌ன்றி பெரிய‌வ‌ரே............................ நித‌ர்ச‌ன‌ உண்மை புத்த‌ன் மாமா........................
  30. அரசியல் தலைவர்களை,போராட்ட தலைவர்களை,பயங்கரவாத தலிவர்களை வாழ,வளர விடுவார்கள் .....உலக ஆதிக்க சக்திகள்.. எப்பொழுது இந்த தலைவர்கள் தங்களுக்கு எதிராக தங்களது சொல் கேளாமல் இயங்க தொடங்கிறார்களோ அன்று போட்டு தள்ளிவிடுவார்கள்.மார்டின் லூதர்கிங்,கென்னடி,காந்தி,ராஜீவ் காந்தி, சதாம்,கடாபி,பின்லாடன், நம்ம தலைவர்,ஈரான் ஜனாதிபதி,.....இது தொடரும்... தலைவர்களை போட்டு தள்ளினால் அவர்களால் உருவாக்கப்பட்ட கருத்தியல் சில காலங்களின் பின்பு அழிந்து போகும் என்பது கொள்கை வகுப்பாளர்களின் கொள்கை போல தெரிகிறது... தேர்தல் ஊடாக தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைவர்களை ஆட்சி கவிழ்ப்பின் ஊடாக ஓரம் கட்டுவார்கள்
  31. இது 1972ம் ஆண்டு நடந்த போட்டியில் மொத்த பதக்கங்கள் அடிப்படையில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்த நாடுகளின் வரிசை. மற்ற நாடுகள் வளர்ந்து விட்டன என்பது தான் பிரதான காரணம். அன்று ஊக்க மருந்துப் பாவனை என்று சொல்லப்பட்டதும் உண்டு. இன்றும் அதையே சொல்லலாம். Countries Gold Silver Bronze Sum Soviet Union (USSR) 48 25 22 95 United States 33 31 30 94 East Germany 20 23 23 66 West Germany 13 11 16 40 Hungary 6 13 16 35
  32. முஸலிம்கள் எங்கள் போராட்டத்திற்கு எதிராக நின்றார்கள் என்ற காரனத்திற்காக இஸ்ரேல் பாலஸ்தீனியர்கள் மீது செய்யும் கொடுரமான தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது.அப்படிப்பார்த்தால் எமது போராட்டத்திற்கெதிராக முஸ்லிம்நாடுகளை விட இஸ்ரேல் >அமெரிக்கா>இந்தியா உக்ரைன்உட்பட போன்ற நாடுகள் நேரடியாகவே பங்களித்தார்கள். எமது விடுதலை இயக்கத்திற்கு எதிரான தடைகளைப் போட்டு மேற்குலகமும் ஆதரவைக் கொடுத்தது.பாலஸ்தீனியர்களுக்கு அவர்களது மண்ணில் உரிமையுடன் வாழ மறுப்பது அநீதி.
  33. ஈரானியர்கள் பாரசீகர்கள். அரேபியர்கள் இல்லை. ஈரான் எதுவும் செய்யமுடியாது. ரஷ்யாவுடன் கூட்டுவைத்தாலும் இஸ்ரேலின் துல்லியமான தாக்குதல்கள் மூலம் முக்கியமானவர்களை தொடர்ந்தும் இழக்கத்தான் போகின்றது. போருக்கு வெளிக்கிட்டால் தெஹ்ரான் முல்லாக்கள் மூட்டைமுடிச்சோடு வெளியேறவேண்டிவரும். ஆனாலும் இஸ்ரேல் பலஸ்தீனிய பொதுமக்களை பாரிய அடக்குமுறைக்கு உள்ளாக்குவதும், பட்டினி போடுவதும், கேவலமாக நடத்துவதும் மிலேச்சத்தனமான செயல்கள். இவற்றை தடுக்கவோ, தட்டிக்கேட்கவோ ஒருவரும் இல்லை!
  34. அப்பிடியே இந்த 3 நாடுகளும் சேர்ந்து ஆரம்பித்த தாக்குதலில் இஸ்ரேல் இழந்த நிலப்பரப்பு எவ்வளவு எண்டும் ஒருக்கா எழுதி விடுங்கோ😂!
  35. எனது இனம் கொத்து கொத்தாய் மடிந்ததுக்கு யுத்தவெற்றி வாழ்த்து சொன்ன எம்மைபோன்ற பிரச்சனைகளை எதிர்கொண்ட பாலஸ்தீன மக்களுக்கு தலைமை தாங்கும் அதன் தலைமையை எந்த கூடையில் வேண்டுமென்றாலும் போடலாம் என்ற கருத்து கொண்டுள்ளேன், நீங்கள் அதே கூடைக்குள் அவர்களை போடாதிருப்பதில் மகிழ்ச்சி.
  36. 1) கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பெண்கள் தமிழ்ப் பெயர்களைக் கொண்டிருப்பதன் பின்னணி இதுதான். தமிழ் ஆண்களைக் கொன்றுவிட்டு பெண்களைத் துப்பாக்கி முனையில் மதம் மாற்றம் செய்தார்கள் 2) 100% ✅ 3) 100% ✅
  37. இஸ்ரேலும் அமெரிக்காவும் இல்லையென்றால் இஸ்லாமிய பயங்கரவாதம் உலகையே தின்று ஏப்பம் விட்டிருக்கும். குரான் வாசகங்களை சொல்ல தெரியாதவர்களை நெற்றிப்பொட்டில் சுட்டு கொன்றிருக்கும், ஏற்கனவே நைஜீரியாவில் அது பலமுறை நடந்திருக்கிறது. சஹ்ரான் சாகுமுன் வெளியிட்ட ஒரு வீடியோவில் இஸ்லாமியர்களல்லாதவர்களை அவர்கள் எமக்கு எந்த அநியாயமும் செய்யவில்லையென்றாலும் மூட்டு மூட்டாக வெட்டி கொல்லுங்கள் என்று இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொன்னான், இஸ்லாத்திற்கு வாருங்கள் இல்லையென்றால்கொல்லப்படுவீர்கள் என்ற பயத்தை ஏற்படுத்த வேண்டுமென்றும் சொன்னான். அவன் வெளிப்படையாக சொல்லிட்டான் ஆனால் மறைமுகமாக ஏறத்தாள உலகின் அனைத்து இஸ்லாமியர்களும் தமது மதம்தான் உலகையே ஆளவேண்டும் என்ற கருத்தை ,அமதுக்குள் கொண்டவர்கள் . பாலஸ்தீன பிரச்சனை அவர்கள் மண் சார்ந்த பிரச்சனை என்றாலும், மதம் என்று வந்தால் அவர்களும் உலகின் பிற முஸ்லீம்கள் போன்ற கருத்தை கொண்டவர்களே .அவர் முதல் துருக்கியிலிருந்தார் , பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு கத்தாரில் பதுங்கினார், பிறகு ,அங்கிருந்து ஈரான் வந்தபோது இஸ்ரேலினால் துல்லியமாக போட்டு தள்ளப்பட்டார். இதில் வேடிக்கை என்னவென்றால் சமூக ஊடகங்களில் இஸ்மாயில் ஹனியேயின் இழப்பை தாங்கிகொள்ள முடியாத இந்திய இலங்கை முஸ்லீம்கள், சம்பந்தமே இல்லாமல் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டது மகிழ்ச்சி என்று பதிவிடுகிறார்கள், புலிகளின் தலைவர் கமாஸ் தலைவர்கள்போல சொந்த மக்களையும் போராளிகளையும் சாகவிட்டு அந்நியநாட்டுக்கு ஓடிபோய் அங்குள்ள அரண்மனைகளிலிருந்தபடி அறிக்கைவிட்டு வெட்டி வீரம் காண்பிக்கவில்லையென்ற அடிப்படை புரிதல்கூட இல்லாமலேயே!
  38. ஆழ்ந்த அனுதாபங்கள், இஸ்ரேலிய அரச பயங்கரவாதிகளின் அழிவு நெருங்கிக்கொண்டு இருக்கிறது.
  39. குரு பார்வை -------------------- அது எங்களின் பரம்பரைப் பள்ளிக்கூடம், அங்கே தான் படிக்க வேண்டும் என்று சொல்லியே அங்கே முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்டேன். வீட்டிலிருந்து அந்தப் பாடசாலைக்கு போகும் வழியில் இன்னும் இரண்டு பாடசாலைகள் இருந்தன. ஆனாலும், அவை இரண்டையும் தாண்டிப் போய், பரம்பரையை தொடரும் கடமை எனக்கு அந்த தூரத்துப் பாடசாலையில் இருந்தது. அத்துடன் அங்கே சில ஆரம்ப வகுப்புகள் மட்டுமே இருந்தன. அந்த வகுப்புகள் முடிந்த பின்னர் என்ன செய்வதென்ற இக்கட்டான நிலை இந்தப் பரம்பரையில் இதற்கு முன்னர் ஏற்பட்டிருக்கவில்லை. அந்த நிலை எனக்கு ஏற்படும் போல இருந்தது. பின்னர், வேறு வழியில்லாமல், சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பெரிய பாடசாலைக்கு, பெரிய வகுப்புகளுக்காக அனுப்பப்பட்டேன். இந்தப் புதிய பாடசாலை வீட்டில் இருந்து ஐந்து மைல்கள் தூரம். போகும் பாடசாலைகளின் தூரம் வர வர கூடிக் கொண்டே போவது ஒரு அயர்வைக் கொடுத்தது. இலங்கையிலேயே இது மிகச் சிறந்த பாடசாலை என்று முதல் நாளே, நான் அங்கு போகும் போது, சொல்லிக் கொண்டிருந்தார்கள். முதல் நாள் அப்பா பஸ்ஸை தவற விட்டு விட்டு, அந்த வழியால் போய்க் கொண்டிருந்த ஒரு லாரியில் ஏறி புதிய பாடசாலைக்கு, கொஞ்சம் பிந்தி, போயிருந்தோம். ஆறாம் வகுப்பில் ஒரே ஆசிரியர் தான் தமிழுக்கும், சமய பாடத்திற்கும். அவரே தான் வகுப்பாசிரியரும். தமிழுக்கு எண்பது பக்க கொப்பியும், சமயத்திற்கு அறுபது பக்க கொப்பியும் வாங்கியிருந்தேன். அப்படித்தான் அந்தப் பெரிய பாடசாலையில் சொல்லியிருந்தார்கள். பிரவுன் பேப்பரில் வெளி உறை ஒன்று போட்டு, அவர்கள் சொன்னது போலவே அந்த உறையில் சுயவிபரங்களையும் எழுதி வைத்திருந்தேன். நானே ராஜா, நானே மந்திரி என்று ஊர்ப் பாடசாலையில் வாழ்ந்த வாழ்க்கை முடிந்து, கூட்டத்தில் ஒருவன் ஆகியிருந்தேன் அந்தப் பெரிய பள்ளிக்கூடத்தில். ஏழாம் வகுப்பிலும் இதே ஆசிரியர் தான், தமிழ், சமயம், மற்றும் வகுப்பு ஆசிரியர். ஆறாம் வகுப்பில் வாங்கிய எண்பது பக்க, அறுபது பக்க கொப்பிகள் இரண்டும் அப்படியே புத்தம் புதிதாகவே இருந்தன. பிரவுன் பேப்பர் உறையை மட்டும் மாற்ற வேண்டி இருந்தது. பத்தாம் வகுப்பு வரை இப்படியே தொடர்ந்தது. அந்த ஆசிரியர் எங்களை விட்டு விலகவேயில்லை, இந்த இரண்டு கொப்பிகளும் கூட விலகவில்லை. ஒரு வருடத்தில் ஒன்றோ இரண்டோ பக்கங்களில் ஏதாவது எழுதியிருப்போம். அந்தப் பக்கங்களை கிழித்து எறிந்து விட்டு, புது பிரவுன் பேப்பர் உறை போடப்பட்டு, இந்த இரண்டு கொப்பிகளும் புது வகுப்புகளுக்கு என்னுடன் சேர்ந்து அப்படியே வந்து கொண்டிருந்தன. சிறந்த பாடசாலை, சிறப்பாக படிப்பித்தார்கள் என்று எல்லோரும் வெளியில் சொல்லிக் கொள்வார்கள். விட்டுக் கொடுக்க மனம் இடம் கொடுக்காததால், நானும் அதை ஆமோதித்துக்கொண்டே இருந்தேன். ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை தினமும் பந்து அடித்ததும், வேறு ஒரே ஒரு ஆசிரியரையும் தவிர வேறு எதுவும் பாடசாலையில் கற்றதாக நினைவில் இல்லை என்றாலும். பின்னர் பல்வேறு சிறந்த பாடசாலைகள் என்று சொல்லப்பட்டவற்றில் படித்தவர்களுடன் ஒன்றாகப் படிக்கும், பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆரம்பத்தில் நாங்கள் அப்பவே அப்படி என்று தான் அவர்களும் கொஞ்சம் கெத்தாகவே இருந்தனர். பின்னர் எல்லா இடமும் ஓடிக் கொண்டிருந்தது ஒரே கதையே என்று சொல்லி ஒத்துக்கொண்டனர். முப்பது வருடங்கள் அல்லது அதற்கும் கூடிய காலத்தின் பின், பல ஆசிரியர்களை போய்ச் சந்தித்தோம். அவர்களுக்கு எங்களை ஞாபகமே இல்லை. எத்தனை வருடங்கள், எத்தனை மாணவர்கள், யாராவது உறவினர் அல்லது நண்பர்களின் பிள்ளைகளைத் தவிர வேறு எவரையும் அவர்களுக்கு ஞாபகத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது தான். ஆனால், நாங்கள் சொன்ன கதைகளை கேட்டு ஆச்சரியப்பட்டார்கள், பெருமைப்பட்டார்கள். நாங்கள் எல்லா ஆசிரியர்களிடமும் உங்களிடம் படித்தோம், அதனாலேயே வளர்ந்தோம் என்றே சொன்னோம். உண்மையில் அவர்களை மீண்டும் நேரில் பார்த்த போது, மிகப் பிரியமான ஒரு உணர்வைத் தவிர வேறு எதுவும் தோன்றவேயில்லை.
  40. நானும் அகன்ற திரையில் பார்க்கவில்லை. Netflix இல் வந்தமையால் ரீவியில் தான் பார்த்தேன். மஹாராஜா படத்தின் வெற்றி அது எடுக்கப்பட்ட விதத்திலும் இறுதி twist இலுமே இருக்கின்றது. Dark humor வகைப் படம். @பெருமாள்குறிப்பிட்டுள்ள போன்று படத்தை துண்டு துண்டாக, non linear ஆக எடுத்தமையால் நன்றாக உள்ளது ( இந்த முறையை தமிழுக்கு கொண்டு வந்தவர் மணிரத்னம் - அலைபாயுதே படத்தில்). ரயில் படம் இன்னும பார்க்கவில்லை. ஆனால் தமிழ் நாட்டு ஆண்கள் குடிகாரர்களாக, சோம்பேறிகளாக இருப்பதால் தான் வட இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன என காட்டியுள்ளனர் என விசனப்பட்டு எழுதப்பட்ட விமர்சனங்களை பார்த்தேன். இது கள யதார்த்துக்கு முரணானது என்கின்றனர்.
  41. உங்களின் 'பச்சைப்பாவாடை' அருமை........... நானும் நினைத்தேன் அது ஆசிரியரின் மகளாக்கும் என்று...... எங்களின் காலத்தில் தனியார் கல்வி நிலையங்கள் மூலைக்கு ஒன்றாக வந்து விட்டன, அதுவே பாடசாலைகளில் ஆசிரியர்களின் மெத்தனப் போக்கிற்கு ஒரு பெரிய காரணமாக அமைந்தது என்று நினைக்கின்றேன். பல ஆசிரியர்களை பற்றி, சிலர் தனியார் கல்வி நிலையங்களில் மிகவும் பெயர் பெற்றவர்கள், இப்படியான கதைகள் உண்டு. பள்ளிக்கூடங்களில் தூங்கி வழிந்து கொண்டே இருந்தார்கள். ஆனாலும், சாத்திரங்களில் சொல்லப்படும் ஒரு நல்ல 'குரு பார்வை' போல, அவர்களின் வெறும் பார்வையிலேயே நாங்கள் படித்து முடித்து விட்டோம்.......🤣.
  42. ஒவ்வொரு நாளும் கோழி இறைச்சி சாப்பிட்டால்... கால் இப்பிடி வரும். 😂
  43. இப்பிடியான ரொய்லட்டுக்கள் தான் சரி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.