Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    87990
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    20018
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    33600
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    3061
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/08/24 in Posts

  1. மிக நீண்ட நாட்களாகவே கவாய் போக வேண்டும் எரிமலைகள் எப்படி எரிகின்றன என்று நேரடியாகவே பார்க்க வேண்டும் என ஒரு எண்ணம் இருந்தது.இருந்தாலும் நியூயோர்க்கில் இருந்து போவதானால் 10-11 மணிநேரம் எடுக்கும்.அதே ஒரு பெரிய தண்டனை மாதிரி.கலிபோர்ணியாவில் இருந்து போவதானால் 5-5 1/2 மணிநேரமெடுக்கும். பிள்ளைகள் 3-4 தடவை போய் வந்துவிட்டார்கள்.பல தீவுகள் இருப்பதனால் ஒவ்வொரு தீவாக போய்வருவார்கள்.இந்த தடவை எரிமலை எப்போதுமே எரிந்து கொண்டிருக்கும் பெரிய தீவுக்கு போகபோவதா சொன்னார்கள். விபரங்களைக் கேட்டு நாங்களும் போய்வர கவாய் விமான சேவையில் ரிக்கட் வாங்கினோம்.இது தான் முதல்தடவையாக கவாய் விமான நிறுவனத்தில் பிரயாணம் செய்தோம்.நானும் இங்குள்ள எனேக விமான சேவைகளைப் பயன்படுத்தியுள்ளேன்.எல்லாவற்றையும் விட கவாய் விமான நிறுவனமே எல்லாவற்றிலும் மேலாக தெரிந்தது. நாங்கள் ஓக்லண்ட் கலிபோர்ணியாவில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு காலை 9;30 போல இறங்கினோம்.அங்கு போய் இறங்கியதும் பெரிய ஆச்சரியமாக இருந்தது. விமான நிலையத்துக்கு அருகிலேயே விமானம் போய் நின்றது.படிகளில் இறங்கி போனால் ஏதோ சந்தைக்குள் போவது போல இருந்தது.ஒரு இடம் தனும் பெரிய கட்டடங்களாக இல்லை.குளிரூட்டப்பட்ட அறைகளோ தங்குமிடமோ இல்லை.எல்லாமே திறந்த கட்டடங்கள்.ஒருமாதிரியாக வெளியே போனால் பொதிகள் எடுக்குமிடம் வீதிக் கரையில் இருக்கிறது.இதுவே கலிபோர்ணியா அல்லது நியூயோர்க்காக இருந்தால் பெரிய வாகனத்தைக் கொண்டுவந்து அள்ளிப் போட்டுக் கொண்டு போய்விடுவார்கள். விமான நிலையத்தில் பொதிகள் எடுக்கும் இடம். எரிமலை வெடித்து ஒரு மைல் நீளத்திற்கு குகையாக இருக்கிறது. இந்த குகையைப் பார்க்க போக மேலே சொல்லப்பட்டவைகளைப் பின் பற்ற வேண்டும்.கட்டாயம் என்றில்லை எமது பாதுகாப்புக்காக போட்டிருக்கிறார்கள்.கீழே இறங்கி 5 யார் உள்ளே போனால் எதுவுமே தெரியாது.கும்மிருட்டாக இருக்கும். அதே மாதிரி சாதாரண சப்பாத்துடன் போனால் அடிக்கடி சறுக்கி விழலாம்.வெளிச்சம் தெரியத்தக்க ஏதாவது கொண்டு போக வேண்டும்.குகைக்குள் சில இடங்கள் உயரமாகவும் சில இடங்கள் குனிந்து போக வேண்டியும் வரும்.எகன்கொரு தடவை மண்டையில் பலமான அடி.துணியிலானான தொப்பி போட்டிருந்ததால் தப்பினேன்.அப்பவும் கண்ணெல்லாம் கலங்கிவிட்டது.என்னப்பா என்ன என்று எல்லோர் சத்தமும்.இப்போ வாயைத் திறந்தால் மண்டையில் வாங்கியதை விட பலமாக வாங்க வேண்டுமென்று பல்லைக் கடித்துக் கொண்டு ஒன்றுமில்லை ஒன்றுமில்லை.சும்மா மேலால தட்டினது என்று போய்விட்டேன். குகைக்குள் நெருப்பு தணலாக இருந்தபோதும் ஒரு கரையால் உள்ளே போய் சீமெந்து போட்ட இடத்தில் எப்படி அதில் பெயரெழுதுவார்களோ அதே மாதிரி நிறைய பேர் பெயர்களை எழுதுயுள்ளார்கள். குகைக்கு போகும் பாதை. தொடரும்.
  2. மரியானா அகழி ------------------------- அவன் அந்த ஒழுங்கையால் ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது போய் வந்து கொண்டிருந்தான். போகும் போது என்னையும் வா என்று வலியவே துணைக்கு கூட்டிக் கொண்டு போனான். அந்த ஒழுங்கையின் முடிவில் ஒரு கோயில் இருந்தது. ஆனால் இருவரும் கோயில் போய் சாமி கும்பிடுகிற ஆட்கள் இல்லை. ஏன் இந்த ஒழுங்கையில் தினமும் வருகின்றோம் என்று பல நாட்கள் நான் நச்சரித்த பின், அவன் உண்மையைச் சொன்னான். அந்த ஒழுங்கையில் இருந்த பெண் பிள்ளை ஒன்றின் பின்னால் அவன் சுத்துகின்றானாம் என்று அவன் சொன்னான். அந்தப் பிள்ளையும் எங்களின் வகுப்பு தான். அந்தப் பிள்ளையின் குடும்பம் 83ம் ஆண்டுக் கலவரத்தில் கொழும்பில் இருந்து இடம்பெயர்ந்து ஊருக்கு வந்தவர்கள். என்னை ஏன் கூட்டிக் கொண்டு போனான் என்பதற்கான காரணத்தை இலகுவாகவே ஊகித்துக் கொள்ளலாம். இப்படியான ரோமியோக்களுக்கு ஒரு நண்பன் கட்டாயமாக துணையாக வேண்டும். அங்கே தனியாக எந்த ஒழுங்கையில் போனாலும், தேமே என்று அரைக்கண் மூடி படுத்துக் கிடக்கும் நாய் கூட சந்தேகத்தில் எழும்பி வந்து கலைக்கும். எங்களின் கூட்டத்தில் ஆபத்தில்லாத, அப்பிராணியான, பெயர்கள் எதுவுமற்றவர்களில் நானும் ஒருவன் என்பது தான் என்னைத் தெரிந்தெடுத்த அந்தக் காரணம். 'முடியாது என்று சொல்லி விட்டா.......' என்று வந்து நின்றான் ஒரு நாள். 'முடியாது என்றா சொன்னா..........' என்று திருப்பிக் கேட்டேன் நான். அதற்கு முதல் நாள் நண்பன் தனியே போய், என்னைக் கூட்டிக் கொண்டு போகாமல், எங்கேயோ வைத்துக் கேட்டிருக்கின்றார். ஆளைத் தெரியாது என்று தான் சொன்னா, நீங்கள் யார் அண்ணா என்றும் அவனைக் கேட்டதாகவும் நன்றாக ஞாபகப்படுத்திச் சொன்னான் நண்பன். என்னைக் கண்டதே இல்லை என்றும் சொல்லி விட்டா என்று கண் கலங்கி நின்றான் நண்பன். நல்ல வேளை, அந்த சம்பவம் நடந்த பொழுது நான் அவனுடன் கூடச் சேர்ந்து போயிருக்கவில்லை. போயிருந்தால், 'இந்தத் தம்பி யாரு.........' என்று அவர் என்னைப் பார்த்தும் கேட்டிருப்பார். நண்பன் மினுக்கி மினுக்கி வகுப்புக்கு வந்து போனது எல்லாவற்றையும் எந்தக் கணக்கில் சேர்க்கின்றது. எவருமே இவனைப் பார்க்கவில்லையோ. பின்னர் நண்பன் ஒரு இயக்கத்தில் போய் சேர்ந்துவிட்டான். சில மாதங்களில் திரும்பி வந்தான். சில புத்தகங்களை எனக்குக் கொடுத்தான். எல்லாமே சிவப்பு பிரகடனங்கள். முன் அட்டையில் மார்க்ஸ், இங்கர்சால் என்ற பெயர்களும், பின் அட்டையில் அந்த இயக்கத்தின் ஸ்தாபகரின் பெயரும் இருந்தன. நண்பன் 'தோடுடைய செவியன்........' பொழிப்பு எழுதச் சொன்னாலே அக்கம்பக்கம் எட்டிப் பார்க்கின்றவன். முழு இலங்கையிலும் தனியார் கல்வி நிலையத்தில் சமய பாடத்திற்கே அடி வாங்கியவர்கள் வெகு சிலரே, அதில் இவனும் ஒருவன். காதல் தோல்வி அவனை எங்கேயோ கொண்டு போய் சேர்த்திருந்தது. இன்னும் பலரும் ஏக காலத்தில் அந்தப் பிள்ளையின் பின் சுற்றித் திரிந்தனர். துணிவை வரவழைத்துக் கொண்டு, அந்தப் பிள்ளையிடம் போய்க் கேட்டவர்கள் எல்லோருக்கும், 'அண்ணா, நீங்க யாரண்ணா...........' என்பதே பதிலாக வந்து கொண்டிருந்தது. மற்ற எல்லாக் கதைகளும் வெளியில் வந்தாலும், நான் கூடப் போன என் நண்பனின் கதை மட்டும் வெளியில் வரவில்லை. எத்தனையோ இயக்கங்கள் இருக்க, அந்த இயக்கத்தில் இவன் ஏன் போய்ச் சேர்ந்தான் என்பது மட்டும் தான் ஊரில் பலருக்கும் ஆச்சரியமாகவும், பேசுபொருளாகவும் இருந்தது. பின்னர் நண்பன் அந்த இயக்கத்திலிருந்து வெளியேறி, வெளிநாடு போய், எங்கள் இருவருக்கும் நன்கு தெரிந்த வேறு ஒரு பிள்ளையை கட்டிக் கொண்டு வாழ்ந்து வருகின்றான். கிட்டப் போனவர்கள் எல்லோரையும் ' அண்ணா, நீங்கள் யாரண்ணா.........' என்று கேட்டு ஓட விட்ட அந்தப் பிள்ளையும் எங்களுக்கு தெரிந்த ஒருவரைக் கட்டிக் கொண்டு இன்னொரு நாட்டில் வாழ்ந்து வருகின்றார். நீண்ட காலத்தின் பின், ஒரு ஊடகத்தில் சிறு வயது நண்பர்கள் என்று ஒரு குழுமம் உண்டாக்கி, பலரும் இணைந்து கொண்டோம். அறிமுகங்கள், கதைகள், பகிடிகள், ஞாபகங்கள் என்று எல்லோரும் பங்காற்றிக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் அந்தப் பெண்ணை நேரில் சந்திக்கும் ஒரு சந்தர்ப்பம் அமைந்தது. 'உங்களுக்கு என்னை முந்தி தெரிந்திருக்காது...........' என்று நான் ஆரம்பித்தேன். ' இல்லை, இல்லை, எனக்கு அப்பவே உங்களைத் தெரியும்........... நீங்களும், இன்னொருவரும் அடிக்கடி எங்கள் வீட்டுப் பக்கமாக சைக்கிளில் அந்த நாளில் வந்து போவீர்களே...........' என்றார் அவர். எவரெஸ்ட்டையே தாட்டு விடும் மரியான அகழி தான் உலகிலேயே ஆழமானது என்பார்கள். என்ன பெரிய ஆழம் அது.
  3. சில ஆண்டுகள் முன்பு பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரத்தின் பாடசாலைகளில் பாலியல் தொடர்பான கல்வித்திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று பெற்றோர்கள் ஆர்ப்பார்ட்டம் செய்தனர். Good touch-bad touch இல் இருந்து குழந்தை உருவாகும் முறை, ஒரு பாலுறவு (homosexuality) என்ன என்பது போன்ற விடயங்களை உள்ளடக்கிய அந்தப் பாடத்திட்டத்தை அனுமதிக்கக் கூடாதென போராட்டம் செய்த பெரும்பான்மையான பெற்றோர் குடியேறிகளாக வந்து செற்றிலான முஸ்லிம் குடும்பத்தினர்😂. இதை ஏன் சொல்கிறேன் என்றால், ஒரு சமூகத்தில் இருக்கும் எல்லோருக்கும் ஒட்டு மொத்த நன்மை தரக் கூடிய முன்னேற்றகரமான கொள்கைகளை மேற்கத்தைய நாடுகள் அமல்படுத்த, வந்து குடியேறிய பிற்போக்கு வாதிகள் அனுமதிக்காமல் போராடும் வினோத நிலை பல மேற்கு நாடுகளில் உருவாகி வருகிறது. சில நடைமுறைகள் பிடிக்கவில்லையானால், தமக்குப் பிடித்தமான நடைமுறைகள் இருக்கும் நாடுகளுக்கு வெளியேறிச் செல்வதை விடுத்து, தாராளவாத நாடுகளின் நல்ல கொள்கைகளை தடுத்த படி அங்கேயே "டோரா போட்டு" அந்த நாடுகளையும் குட்டிச் சுவராக மாற்றி விடும் வேலைகள் நடக்கின்றன. இப்படியான குடியேறிகளுக்கு கொஞ்சம் அவர்களுடைய இன /மத வெறுப்பு மருந்தின் சுவை என்ன என்று இந்த பிரிட்டன் கலவரம் காட்டியிருக்கும். ஆனால், அப்பாவிகளும் பாதிக்கப் பட்டிருப்பது சோகம்.
  4. லூசுக்கேனையள்.. ஒண்டில் வீராவசனம் பேசுவாங்கள் இல்லாட்டி இப்பிடி ஏதாவது விளங்காத வேலை செய்வாங்கள்.. இவங்கள் செய்ததில் ஒரு வெளிநாடாவது எங்களுக்கு ஏதாவது செய்ததா தீர்வை நோக்கி இத்தனை தேர்தல்களில் நின்றிருக்கிறார்கள்.. தீர்வை நோக்கி அல்லது மக்கள் வாழ்வாதார அன்றாட பிரச்சினைகள் சம்பந்தமாக ஏதாவது செய்தோம் என்று இவர்களால் ஒன்றை சொல்ல முடியுமா..? மக்களுக்கு நல்லது செய்தால் அதை பேசி மக்களிடம் ஓட்டு கேட்கலாம் அதை செய்யாததால்தான் காசுகுடுத்து ஓட்டு போடவைக்கின்றனர் தமிழ்நாட்டில்.. இவர்கள் தீர்வை பெற்றுதருவதாக பேய்க்காட்டி ஓட்டு வாங்குகின்றனர்.. கஞ்சன் ஊறுகாய் முடிந்துபோம் என்று சாப்பிடும் இடத்தில் ஒரு நூலில் ஊறுகாய்ப்பையை கட்டித்தூக்கிவிட்டு அதை பார்த்து பார்த்து ஊறும் எச்சிலில் சாப்பிட்டானாம் அதைப்போல் தீர்வை சொல்லியே வயிறுவளர்க்கும் கூட்டம் இது.. இவர்களைவிட கொலைகாரன் டக்ளசிடம் மக்களிற்கு செய்தேன் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்ல நிறைய இருக்கு.. ஆனால் இவர்கள் மக்களுக்காக ஒரு குண்டூசியைகூட தூக்கிப்போட்டதில்லை இன்றுவரை.. ஒருத்தன் கொலைகாரன் என்றால் மற்றவன் ஏமாற்றுப்பேர்வழி.. இரண்டுமே தமிழர் தேசத்துக்கு தேவையற்ற ஆணிகள்.. அர்ச்சனாபோல பல புதிய இளைஞர்கள் புதியகட்சிகள் வரவேணும்.. அவர்களின் சரிபிழைகளை அப்புறம் பேசலாம்.. ஆனால் இந்த பழைய பஞ்சாங்கங்களை அடித்து துரத்தவேணும்…
  5. அதி உத்தம ஜனாதிபதி பா. அரியநேந்திரன் நிச்சயமாக தமிழர் பிரச்சனைக்கு நீதியான தீர்வை காண்பார். இவரே முப்படைகளின் பிரதம தளபதியாகவும் எதிர்காலத்தில் இருக்க போவதால் முப்படைகளையும் உபயோகித்து அதிரடியாக சுயாட்சியுடனான அரசியல் தீர்வை காண்பார்.
  6. இது தான் தமிழரின் சாபம். எதையாவது ஒருவர் செய்ய முனைந்தால் ஆமாம் இவர் கிழிச்சுடுவார். எங்களுக்கு தெரியாததா?? என்று முளையிலேயே ......???
  7. அதுதானே இவற்ர "கொஞ்ச " பலகாரத்தை கொண்டுபோய் என்ன செய்கிறது . .....போகிற வழியிலேயே பலகாரம் காலியாகிடும் . ....... வேண்டாம் என்று சொல்லி நீங்கள் ஒரு மானஸ்தன் என்பதை நிரூபித்துள்ளீர்கள் ........! 😂
  8. அரச பயங்கரவாதிகளுடன் சேர்ந்து தமிழ் மக்களை அழித்து அவர்களின் சொத்துக்களை சூறையாடி விட்டு அனுதாபத்தையும் தேட முயற்சிக்கிறார்கள்.
  9. கொண்டாட்ட நிகழ்வுகள் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வர எனது குடும்பத்தை இருவருக்கும் அறிமுகப்படுத்தி வைக்கின்றேன்.கூடி நின்று ஒரு குடும்பத்தினர்கள் போல் படங்கள் எடுத்துக்கொள்கின்றோம். நன்றிகளுடன் விடைபெறும் நேரத்தில் சிறித்தம்பியரிடம் கொஞ்ச பலகாரம் கட்டித்தரவா என கேட்டேன். இல்லை வேண்டாம் என்றார்.😂
  10. சிறிய பொதுவான(காலநிலை,போக்குவரத்துகள்) உரையாடல்களுடன் போய்க்கொண்டிருக்க ஏதாவது குடிக்கின்றீர்களா என கேட்டேன்.தேநீர் என்றார்கள். தேடினேன் கிடைக்கவில்லை. கோப்பிதான் கிடைக்கும் என்றேன். ஆம் என்றார்கள் .....கிச்சின் பக்கம் சென்று நானே கோப்பியும் பலகார தட்டும் கொண்டு வந்து மேசையில் வைத்தேன். ஒரு நிமிட இடைவெளி வர யாழ்களத்தை பற்றி கதைக்க வெளிக்கிட்டோம். சகல உறவுகளைப்பற்றியும் கதைத்தோம். முக்கியமாக கதைகள்,கட்டுரைகள் எழுதுபவர்களை பற்றியே. அவர்களின் எழுத்து வல்லமை.வாதாடும் வல்லமை பற்றி கதைத்தோம். இத்தனைக்கும் மத்தியில் பாஞ்ச் ஐயாவை நோக்கி மண்டபத்திலிருந்த அநேகமானோர் வரத்தொடங்கி விட்டனர்.தமிழ் பாடசாலைகளை சேர்ந்தவர்கள்,தமிழ்விளையாட்டு கழகங்களை சேர்ந்தவர்கள்,பழைய நண்பர்கள் என எல்லோரும் ஆள் மாறி ஆளாக வந்து பாஞ்ச் ஐயாவை சுகம் விசாரித்து சென்றனர். அப்போதுதான் பாஞ்ச் ஐயா எவ்வளவு பிரபல்யமானவர் என்றும் அவர் சேவை பற்றியும் தெரிந்து கொண்டேன்.🌱
  11. இந்நாளில் தென் தமிழீழத்தில் மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டங்களில் ஜிகாத், முஸ்லீம் ஊர்காவல்படை , அரசபடைகளுடன் இணைந்து பணியாற்றும் முஸ்லீம் குழுக்களால் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான எம் தமிழ் மக்களையும், இஸ்லாத்தின் பெயரால் நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுவெடிப்பில் பலியான நூற்றுக்கு மேற்பட்ட எம் உறவுகளையும் நினைவு கூருகிறோம். இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு தம் உறவுகளை பலிகொடுத்து அநாதையாக நிற்கும் எம் தமிழ் உறவுகளுக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்கள்.
  12. உங்களுக்கு விளங்கவில்லை என்றால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது,....... இந்த பொது வேட்பாளர் நியமனம் மூலம் .....போர் குற்ற விசாரணை செய்கிறோம். காணமால். ஆக்கப்பட்டோரை தேடுகிறோம். பறிகொடுத்த. நிலத்தை காணி கோருகிறோம். சிறையில். 20ஆண்டுகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருப்போரை. விடுவிக்க கோருகுறோம் மாகாண சபை தேர்தலை நடத்த வலி உறுத்துகிறோம் சுயாட்சி கோருகிறோம். ஐனதிபதி பதவிக்காக தேர்தலில் போட்டி இடவில்லை
  13. stephen curryய‌ த‌விற‌ ம‌ற்ற‌ வீர‌ர்க‌ள் ச‌ரியாக‌ விளையாட‌ வில்லை நானும் ஒரு க‌ட்ட‌த்தில் நினைத்தேன் என்ன‌ ஆச்சு அமெரிக்க‌ன் வீர‌ர்க‌ளுக்கு சேர்வியாவை ஒலிம்பிக் ஆர‌ம்ப‌ சுற்றில் ஈசியா வென்ற‌வை சிமி பின‌லில் சிர‌ம‌ ப‌ட்டு தான் வென்று இருக்கின‌ம்..................................
  14. இதுக்கு நான் 100 வீத ஆதரவு...இங்குள்ள சிலர் எப்பவுமே சகுனப் பிழைகாரர்தான்...வென்று சனாதிபதி ஆகமுடியாது... என்பது உண்மை.. எம்முடைய நிலையில் சாண் போனாலென்ன முழம்போனாலென்ன..
  15. அமெரிக்கா ஒரு மாதிரி சேர்பியாவை வென்று விட்டது. 95 - 91. நாலாவது கால் பகுதி ஆரம்பிக்கும் போது சேர்பியா 13 புள்ளிகளால் முன்னுக்கு நின்றது......... அமெரிக்காவின் கதை முடிந்தது ஆக்கும் என்று நினைத்தேன், ஆனால் மீண்டு வந்து விட்டார்கள்........
  16. இப்பவும் வீதி அடையாள விளக்குகளின்சிவப்பு பச்சை பற்றி ஒன்றுமே தெரியாத முஸ்லிம் பெண்கள் இங்கிலாந்தில் நிறைய. நடைபாதைபச்சையில் இருந்து சிவப்புக்கு மாறினாலும் எந்த கவலையும் இன்றி வீதியை குறொஸ்பன்னும்கள் கூட்டமாக மொட்டாக்கு போட்டபடி . இரண்டாவது தங்கள் ஆட்களின் கடையில் தான் சொப்பிங் பன்னும்கள் . மிக முக்கியமானது லைப் கக் hack ஒவ்வொரு கவுன்சில்களிலும் உள்ள ஓட்டைகளை கண்டு பிடித்து தங்கள் பள்ளி வாசலுக்குள் மட்டுமே பகிர்ந்து கொண்டு அனுபவிப்பது. இப்படியானதுகளை பார்த்த வெள்ளைகளுக்கு வெறி வருமா வாராதா ? அவங்களில் பாய்வதை விட்டு எல்லா வெளிநாட்டு குடியேறிகள் மீதும் பாய்கிறார்கள் . அதை விட கலையில் உள்ள பிரெஞ்சு போலிஸ் இங்கிலாந்துக்கு போகும் குடி ஏறிகளுக்கு செய்யும் அப்பட்டமான உதவி பற்றிய டிக் டாக் பதிவுகள் . மேலும் பிரான்சு கலையில் காட்டு பகுதிகளில் சிறிய கொட்டில்களில் ஒரு மழைக்கு தாங்காத நாலு தடியில் உள்ள கொட்டில்களில் தங்கி இருந்தவர்கள் இங்கிலாந்து வந்தவுடன் ஐந்து நட்ச்சத்திர கோட்டல்களில் தங்க வைக்கப்டுவதை எந்த பூர்வீக வெள்ளையாவது பார்த்து ரசிப்பானா?
  17. பல கட்சிகள் ஒன்று சேர்ந்து பொது வேட்பாளரை நிறுத்தியிருக்கிறார்கள். இவ்வளவு காலமும் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களித்து என்ன பயனை தமிழர்கள் பெற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு போடும் வாக்கு வீணான வாக்குகள்தானே . இந்த முறை தமிழ்ப் பொது வேட்பாளருக்குப் போடுவதால் புதியதாக நாம் எதனையும் இழந்து விடப்போவதில்லை. ஆனால் தமிழ்மக்கள் ஒரு வாக்கை மட்டும்.பொது வேட்பாளர்களுக்கு அளிக்க வேண்டும். 2வது 3வது தெரிவைச் செய்வது பொது வேட்பாளர் நிறுத்தியதற்கு அர்த்தமில்லாமல் செய்து விடும். இதுபற்றி இன்னும் இந்த பொதுவேட்பாளரை நிறுத்திய குழுவினர் இது தொடர்பாக கள்ள மெளனம் சாதிப்பது நல்லதல்ல.
  18. 1) சிங்கள அரசியல்வாதிகளை ஆதரித்து இதுவரை என்ன பயன்? 2) அந்த சாபக்கேட்டை போக்க மட்டுமாவது இதனை பாவித்தால் என்ன குறைந்து போய் விடும்??
  19. இந்த ஒற்றை மாங்காய்க்கு இருக்கும் பாதுகாப்பு போதுமா. 😂
  20. முஸ்லீம்களால் ஒரு போதும் முஸ்லீம் அல்லாத சமூகங்களுடன் integrate ஆகி கூடி வாழமுடியாது.. அதை அவர்களின் மதப்புத்தகமும் அனுமதிக்காது.. இவர்கள் எல்லாம் எதற்கு இன்னொரு நாட்டிற்கு வருகிறார்கள் என்று புரியவில்லை அந்த நாட்டுடன் ஒன்றினைந்து வாழமுடியாது என்று நினைப்பவர்கள்.. மதத்தை எல்லாவற்றிற்கும் மேலாக முன்னுக்கு வைப்பவர்களால் சொந்த நாட்டில்கூட நிம்மதியாக வாழமுடியாது.. இருந்து பாருங்கள் 1950 இற்குள் பல மேற்கு நாடுகளின் விசாவிண்ணப்ப படிவத்தில் எந்த மதம் என்று கேட்கும் ஒரு காலம் வரும்.. அதற்கு காரணம் முஸ்லிம் மதத்தை பின்பற்றுபவர்களால் தமது நாட்டில் சமூகாமைதிக்கு குந்தகம் விளைகிறது என்று பாராளுமன்றில் சட்டம் நிறைவேற்றுவார்கள்.. அந்த விளிப்புக்கு மேற்கு நாடுகளை தள்ளுபவர்கள் அந்த நாடுகளின் தீவிர வலதுசாரிகள் அல்ல சாட்சாத் இந்த முஸ்லீம்கள்தான்..
  21. ம‌ன்னிக்க‌னும் அண்ணா ஜேர்ம‌ன் தான் கூடை ப‌ந்தில் பின‌லுக்கு போவின‌ம் என்று சொன்னேன் ஆனால் உல‌க‌ ச‌ம்பிய‌னான‌ ஜேர்ம‌னியை வீழ்த்தி பிரான்ஸ் பின‌லுக்கு போய் விட்ட‌து👍 பின‌ல் அமெரிக்கா எதிர் பிரான்ஸ்🙏........................
  22. ரசோதரன் நின்ற 5 நாட்களில் ஒரு நாள் கூட ஒரு பொலிசைப் பார்க்கவில்லை. சரி எப்படியான யூனிபோம் போட்டிருப்பார்கள் என்று போன இடமெல்லாம் தேடினேன்.ஒருத்தனும் அகப்படவில்லை. உங்களுக்கு நம்பவே கஸ்டமாக இருக்கும். இதுதான் உண்மை. கடற்கரைக்கும் போனோம்.ஆனால் கண்ணுக்க குளிர்ச்சியாக எதுவும் தென்படவில்லை.
  23. வெளிநாட்டவருக்கு எதிரான வலதுசாரி பிரிடிஷ் தமிழருக்கும் பிரெக்சிட் வேண்டும் என்று தலைகீழாக நின்ற தமிழருக்கும் விசேட சலுகை வழங்கப்படதா ? இந்த குறூப் இப்போது எந்தப் பக்கம் நிற்கிறது என்பதையும் அறிய ஆவல்.
  24. நாங்களும் நண்பர்களுக்காக காதல் கடிதங்கள் எழுதிக் குடுத்து விட்டு மேற்படி பார்ட்டிகளைக் கண்டாலும் காணாததுபோல் சென்ற நிகழ்வுகள் பல உண்டு .......! 😴
  25. என்னப்பா லண்டனில நம்மாளுங்க எல்லாரிம் சவுக்கியமா..? இதுக்குதான் ஊருக்குப்போகனும் எண்டுரது.. ஊரில அடிவாங்கினாலும் என்ர மண் எண்டு திமிரா கதைக்கலாம் ஆனால் வெளிநாட்டில் அடிவாங்கும்போது அடி வலியுடன் வந்தான் வரத்தான் என்று அவர்கள் ஏசும் வசவுச்சொற்கள் கூனிக்குறுக வைக்கும்.. நான் ஊருக்கு போகப்போறன் எண்டு சொல்ல எத்தினைபேர் நக்கல் அடிச்சவை.. அப்ப நினைக்கவில்லை இப்படி மாறும் காலநிலை என்று .. இது போல் இன்னும் ஒரு முப்பது வருசத்தில் இலங்கையில் நடந்ததுபோல் ஒரு இன அழிப்பு நடந்தால்கூட ஆச்சரியப்பட இடமில்லை.. எமது தலைமுறை பெட்டிபடுக்கையை தூக்கிகொண்டு வந்தாலும் ஆச்சரியப்பட ஒண்டுமில்லை.. காலம் விசித்திரமானது காலத்தின் கணக்குகளை யாரும் அறியமுடியாது.. இப்படி ஒரு அபிவிருத்தி அடைந்த நாட்டில் இந்தியாவில் சங்கிகள் செய்வதுபோல் கார்க்கண்ணாடியை இறக்கி வெள்ளையா கறுப்பா ஆசியனா என்று பாத்து ஊரே கூடி அடிப்பார்கள் என்று யாராவது கனவிலும் நினைத்திருப்பார்களா..? காலத்தின் முடிச்சுக்கள் விசித்திரமானது.. சொர்க்கமே என்றாலும் சொந்தநாடுதான் நரகமே என்றாலும் அதுதான் நல்லது..
  26. இந்த நீதவான் போல் எல்லோரும் இருந்து விட்டால் நாட்டில் குற்றங்கள் காணாமல் போய் விடும்.இன்னும் ஒரு விதத்தில் பார்த்தால் அனைவரும் நல்லவர்களாக இருக்க சந்தர்ப்பங்களும் இல்லை.இளஞ்செழியனின் பணி தொடரட்டும்.
  27. அப்படி அல்ல சுவி அவர்களே! மகிழுந்தை நானே ஓட்டினேன். ஓட்டும்போது சோம்பல் வராதிருக்க வாய்க்குள் எதையாவது போடுவது எனது வழக்கம், அது சிறீத்தம்பிக்கு நன்றாகத் தெரியும். பலகாரப்பை என் பக்கத்தில் இருந்தால்?? அதுதான்….🤔😂
  28. அந்த‌ நாடு சிறு முன்னேற்ற‌ம் கூட‌ அடையாது த‌மிழ் சிறி அண்ணா ஊழ‌லில் ஊரி போன‌ ஹிந்தியா.......................ஆர‌ம்ப‌த்திலே சொன்னான் தானே அவேன்ட‌ ப‌த‌க்க‌ம் க‌ம்மி என்று மூன்று ப‌த‌க்க‌ம் இதுவ‌ரை ஒரு த‌ங்க‌ ப‌த‌க்க‌ம் கூட‌ வெல்ல‌ முடிய‌ வில்லை யூடுப்பில் சில‌ சில்ல‌றைக‌ள் இந்தியா புக‌ழ் பாடும் போது கேக்க‌ வெறுப்பாய் இருக்கும் அவ‌ங்க‌ட‌ தேச‌ ப‌ற்று போலி ப‌ற்று......................இணைய‌த்தில் காட்டுவின‌ம் தேச‌ ப‌ற்று சீன‌ன் அடிக்கும் போது எங்கை போன‌து தேச‌ ப‌ற்று பாக்கிஸ்தான் இராணுவ‌ம் இந்திய‌ வீர‌ர்க‌ளை த‌லைய‌ வெட்டி கொல்லும் போது எங்கை போன‌து தேச‌ ப‌ற்று...............................காசு சீன‌ன் அதிக‌ம் கொடுத்தால் சீன‌னுக்கு சொந்த‌ நாட்டையே காட்டி கொடுங்குங்க‌ள் கூட்டியும் கொடுக்குங்க‌ள்............................. முந்த‌ நாள் க‌ன‌டா பிரான்ஸ்சிட‌ம் தோல்வி அடைந்து வெளிய‌ இன்று சேர்வியாவை சிம்பிலா அமெரிக்கா வெல்லும் கிரிக்கேட் விளையாட்டு திரிக்குள் உங்க‌ளுக்கு சொன்ன நான் தானே இந்த‌ ஒலிம்பிக்கு அமெரிக்கா ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை தெரிவு செய்து இருக்கு என்று பின‌ல் அமெரிக்கா எதிர் ஜேர்ம‌னி................
  29. எதிரில் வந்தது பொண்ணு அவள் எழிலைக் கண்டது கண்ணு . ......! 😍
  30. தமிழ்த்தேசிய பெரும்புள்ளிகளின் வாட்ஸப் குறூப்பில் அதனை இயக்கும் எனது நெருங்கிய நண்பர் சேர்த்துவிட்டிருக்கின்றார்! அரியம் ஐயாவும் இருக்கின்றார். என்ன சொல்கின்றார் என்று பார்க்கின்றேன்😀
  31. ஆஹா .......சுவாரஸ்யமாய் எழுதுகின்றீர்கள் பிரியன் ........தொடருங்கள் . .......! 😂 எங்களுக்கு பரவாயில்லை . ..... இதை வாசிக்க வாசிக்க ரசோதரனுக்கு காதாலை புகை வரவேணும் . .........! 😂
  32. நீங்களாகத் தேடியறிந்தால் ] ரஷ்ய எதிர்கட்சி தலைவர் தேனீரில் நஞ்சூட்டப்பட்டார் இறுதியில் சிறையில் கொல்லபட்டார் இது பிரபலமானவரின் நிலை சாதரணமானவர்களின் நிலை சொல்ல வேண்டியது இல்லை அங்கே. எப்படிபட்ட நாடு அது என்பதை தாங்களாகவே முன்கூட்டியே தேடியறிந்து தமக்கான சிறந்த வாழ்க்கையை ஜனநாயகம் உரிமைகள் வழங்குகின்ற சிறந்த நாடுகளில் அமைத்து கொண்டவர்கள் அவர்கள்.
  33. தொடருங்கோ அண்ணை. சுவியண்ணை கைலாசா போல இடம் தேடுறார், நல்ல தீவாகப் பார்த்து பேசி முடிச்சுக் குடுங்கோ!!
  34. உங்களது ஹவாய் பயணக் கட்டுரை, படங்களுடன் மிகவும் சிறப்பாக உள்ளது. 👍 தொடர்ந்து வாசிக்க மிகவும் ஆவலாக உள்ளோம்.
  35. இவர்களின் தமிழர்மீதான தொடர் வன்முறையின் பொறுமையிழந்த ஒரு கட்டத்தில்தான் புலிகள் எதிர் நடவடிக்கையிலீடுபட்டனர், அதற்காக பொதுமக்கள்மீதான படுகொலைகள் எத்தரப்பில் நடந்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது, ஆனால் அதை தூண்டியவர்கள் யார் என்ன காரணம் என்பதை ஒருபோதும் இவர்கள் நினைத்தே பார்ப்பதில்லை. ஆனால் மூன்று தசாப்த காலங்கள் கடந்த பின்னரும் தமிழர்கள் எம்மை கொன்றுவிட்டார்கள் என்று வன்ம வக்கிரம் கலந்த தோரணையில் நினைவேந்தல் என்ற பெயரில் பகை வளர்க்கிறார்கள். 1915 ல் சிங்களவர்கள் முஸ்லிம்களுக்கெதிராக பெரும் கலவரம் செய்தார்கள் இவர்கள் சொத்துக்களை அழித்தார்கள், கொன்றார்கள், அதை ஏன் இவர்கள் இன்றும் நினைவு கூருவதில்லை? நினைவு கூர்ந்தால் சிங்கள முஸ்லீம் பகை வளரும் தமது ஒட்டுண்ணி சுயநல வாழ்க்கை கெட்டுவிடும் என்பதால்தானே? இத்தனைக்கும் அந்த கலவரத்தில் முஸ்லீம்கள் சிங்களவர்களுக்கெதிராக எந்த தவறும் செய்யவில்லையென்றும் பெரகரா ஊர்வலம் பள்ளிவாசல் முன்னாடி போகும்போது அமைதியாக போகவேண்டுமென்று கோரிக்கை மட்டும் வைத்தார்கள் என்பதே தகவல்கள் சொல்கின்றன. ஆனால் யுத்த காலத்தில் இவர்கள் தாக்குதலுக்கு எதிர் தாக்குதலாய் நடந்த காத்தான்குடி சம்பவத்தை காலா காலத்துக்கும் தொடர்கிறார்கள் என்றால் வெறும் தமிழர் விரோத போக்கு என்பதை தவிர வேறொன்றும் இல்லை. ஆனால் நம்மில் ஒரு சிலர் முஸ்லீம்களுக்கெதிராக இழைக்கப்பட்ட தவறுகளை சுட்டிக்காட்டுகிறோம் அனுதாபம் கொள்கிறோம், ஆனால் அது தவறென்றில்லை மனிதர்களுக்கெதிராக இழைக்கப்பட்டவை அநீதிகள் என்றால் அதை தட்டிகேட்கலாம் , அந்த வகையில் நாம் மேன்மையான இனம்தான் ஆனால் தமிழர்களுக்கெதிராக இழைக்கப்பட்டவை அநீதிகள் என்று சொன்ன சிங்களவர்கள் ஒரு சிலரை காண்பிக்கலாம் ஆனால் ஒரு முஸ்லீமை எவருமே காண்பிக்க முடியாது. எம்ம்மீது சக இனங்கள் மேற்கொண்ட படுகொலைகள் வன்முறைக்கு ஒவ்வொரு பொழுது விடியும்போதும் தினமும் நாம் நினைவேந்தல் செய்யவேண்டும், அது போர்கால வடுக்கள் என்று வேறு புரிந்து வலிகளை மட்டும் மனசில் சுமந்து கடந்து செல்கிறோம். போர்யுகத்தில் ஆறிய காயங்களும் உண்டு ஆறாத காயங்களும் உண்டு, வினைக்கு எதிர்வினையாற்றிய சம்பவங்கள் போர்க்கால சம்பவங்களென்றே கடந்து போகவேண்டும் வேறு வழியில்லை, முஸ்லீம்கள் செய்வது ஆறிய காயங்களை மீண்டும் மீண்டும் பிராண்டி இனபகையை வளர்க்கும் ஒரு கொடூர செயலன்றி வேறில்லை, அப்படியென்றால் 83 கலவரத்தை நாம் ஏன் நினைவுகூருகிறோம் என்று யாரும் கேள்வி எழுப்பலாம் , 58/77/83 களில் சிங்கள மக்களுக்கு எதிராக தமிழர்கள் எந்த வன்முறைகளிலும் ஈடுபடாமல் இருந்தபோதே தமிழர்கள் தேடி தேடி ஒருபக்கம் சார்ந்து வேட்டையாடப்பட்டார்கள். 83 கலவரத்துக்கு புலிகள் 13 ராணுவத்தை கொன்றதுதான் கலவரத்துக்கு காரணம் என்றால் அன்று இலங்கை அரசு தேடி தேடி வேட்டையாடியிருக்கவேண்டியது புலிகளைத்தான் 100% அவர்கள் கட்டுப்பாட்டில் வாழ்ந்த தமிழர்களையல்ல. அன்றைய தமிழர்கள் இலங்கை அரசின் ஆட்சிமுறையின்கீழ் ஜனநாயக முறையில் வாக்களித்து இலங்கை அரசின் பாராளுமன்றில் எதிர்கட்சியாக கூட இருந்தார்கள். மேலே முதல் பதிவிடும்போது முஸ்லீம்கள் தமிழர்களுக்கு செய்த கொடுமைகள் தொடர்பான தகவல்களை எப்போதெல்லாம் இஸ்லாமியர்கள் எமக்கெதிரான நினைவுகூரல்கள் அறிக்கைகள் விடுகிறார்களோ அவர்கள் செய்தி இணைப்புக்கள் மற்றும் தளங்களின் நன்னி சோழன் பகிரவேண்டுமென்று ஒரு வரி சேர்க்கலாமென்று நினைத்திருந்தேன் பின்னர் அது என் கருத்துக்கு குழு சேர்க்கும் ஒரு நடவடிக்கைபோல் பார்க்கப்பட்டுவிடுமென்று தவிர்த்தேன், இப்போ நன்னியே பதிவிட்டதால் இதை சொன்னேன், நன்னி, எம் கால பதிவுகளை சேகரிக்கும் உங்கள் ஆற்றலும் பணியும் அளப்பரியது. இணையவெளியில் எங்கெல்லாம் ஒருபக்க சார்பாக எமது இனத்துக்கெதிராக பதிவுகளிடப்படுகிரதோ அங்கெல்லாம் உங்கள் பதிவுகளை இணைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் நன்றி.
  36. ம்..க்ம்....😎 வேலைக்கு ஆக்களை வைச்சிட்டு பிறகு நான் தான் 24மணிநேரமும் கண்ணுக்கை எண்ணை விட்டுக்கொண்டு திரியோணும் 😂
  37. இவையள் ஓ பத்து போடுறேல்லை. ஓ டலன் டலன் போடுற கோஸ்டி இது! ஓ டலன் டலன் ஆர் யு கிளப் கிளப்பை தூக்கி மேல போட்டால் செட்டியார் வீட்டு நண்டு நண்டத் தூக்கி மேல போட்டால் நாகரிகப் பாம்பு பாம்பத் தூக்கி மேல போட்டால் பஞ்சவர்ணக் கிளி கிளியத் தூக்கி மேல போட்டால் கீ! கீ! கீ!
  38. ஊரிலை பெரிய உத்தியோகத்தில இருக்கிற பலருக்கு அரசாங்க வாகன வசதிகள் இருக்கு. அவையள்.... சந்தைக்கு சாமான் சக்கட்டையள் வாங்கப்போறதும் அதிலைதான். தங்கட பிள்ளையளை பள்ளிக்கூடம் கொண்டுபோய் விடுறதும் அதிலை தான் அப்பப்ப கோயில் விசேசங்களுக்கும் அதிலை தான்... எல்லாத்தையும் விட கொடுமை என்னவெண்டால் அந்த வாகன றைவர் அரசாங்கத்தாலை நியமிக்கப்பட்டவர்தான்.இருந்தாலும் அந்த பெரிய கவுண்மேந்து உத்தியோகத்தர் வீட்டுக்கு அவர் ஒரு குட்டி வீட்டுவேலைகாரர் மாதிரி இருப்பார். 😁
  39. எனது அப்பா ஒரு அரச ஊழியர். குருணாகல் / கொழும்பு மாநகர சபையின் மூத்த கணக்காளராக இருந்தவர் (CA). அரச / மக்கள் வளத்தை எப்படி தனக்காக / குடும்பத்திற்காக பயன்படுத்த முடியும் என்பதில் PhD முடித்தவர். நான் படித்து முடிந்த பின், தன் செல்வாக்கை கொண்டு நல்ல அரச வேலை ஒன்று எடுத்து தருகின்றேன் என்று விடாப்பிடியாக நின்றவர். கனடா கனவில் இருந்ததால் நான் சம்மதிக்கவில்லை அரச வளங்களை சொந்த தேவைக்காக பயன்படுத்துவது என்பது ஒரு மேதாவித்தனமான கலாச்சாரம் அங்கு. ஒரு போதும் திருந்த மாட்டார்கள். அது தவறென்று கூட நம்பமாட்டார்கள். அதே போல் தமக்கு கீழ் இருக்கும் சிற்றூழியர்களை மதிக்கவே மாட்டார்கள்.
  40. கூடைப்பந்தாட்டப் போட்டிகளில் கடும் போட்டி இருக்கும் என்ற எதிர்பார்ப்பிற்கு மாறாக, அமெரிக்க அணி இலகுவாக முன்னேறிக் கொண்டிருக்கின்றது. வாலிபால் விளையாட்டில் கடுமையான போட்டிகள் போய்க் கொண்டிருக்கின்றன.
  41. இன்றைய பதக்க வரிசை: Rank Country Gold Silver Bronze Total 1 United States 24 31 31 86 2 China 22 22 16 60 3 France 13 16 19 48 4 Great Britain 12 15 19 46 5 Australia 14 12 10 36 6 Japan 11 6 12 29 7 Republic of Korea 11 8 7 26 8 Italy 9 10 7 26 9 Netherlands 9 5 6 20 10 Canada 6 4 8 18 11 Germany 8 5 4 17 12 Brazil 2 5 6 13 13 Spain 2 3 5 10 14 New Zealand 3 5 1 9 15 Hungary 3 3 2 8 15 Sweden 3 3 2 8 17 Ireland 4 0 3 7 18 Romania 3 3 1 7 19 Ukraine 2 2 3 7 20 Switzerland 1 2 4 7 21 Greece 1 1 5 7 22 Israel 1 4 1 6 23 Poland 1 1 4 6 24 Croatia 2 1 2 5 25 Belgium 2 0 3 5 26 Kazakhstan 1 1 3 5 27 Chinese Taipei 1 0 4 5 28 DPR Korea 0 2 3 5 29 Hong Kong 2 0 2 4 30 Georgia 1 2 1 4 31 Kenya 1 1 2 4 31 South Africa 1 1 2 4 33 Jamaica 0 3 1 4 34 Philippines 2 0 1 3 35 Denmark 1 2 0 3 36 Uzbekistan 1 0 2 3 37 Mexico 0 2 1 3 38 Turkey 0 1 2 3 39 India 0 0 3 3 39 Tajikistan 0 0 3 3 41 Azerbaijan 2 0 0 2 41 Serbia 2 0 0 2 43 Chile 1 1 0 2 43 Ecuador 1 1 0 2 43 Saint Lucia 1 1 0 2 43 Uganda 1 1 0 2 47 Cuba 1 0 1 2 47 Czech Republic 1 0 1 2 47 Guatemala 1 0 1 2 47 Norway 1 0 1 2 51 Ethiopia 0 2 0 2 52 Kosovo 0 1 1 2 52 Kyrgyzstan 0 1 1 2 52 Thailand 0 1 1 2 55 Dominican Republic 0 0 2 2 55 Lithuania 0 0 2 2 55 Malaysia 0 0 2 2 55 Moldova 0 0 2 2 59 Algeria 1 0 0 1 59 Argentina 1 0 0 1 59 Bahrain 1 0 0 1 59 Dominica 1 0 0 1 59 Slovenia 1 0 0 1 64 Armenia 0 1 0 1 64 Colombia 0 1 0 1 64 Fiji 0 1 0 1 64 Mongolia 0 1 0 1 64 Tunisia 0 1 0 1 69 Austria 0 0 1 1 69 Cape Verde 0 0 1 1 69 Egypt 0 0 1 1 69 Grenada 0 0 1 1 69 Indonesia 0 0 1 1 69 Iran 0 0 1 1 69 Portugal 0 0 1 1 69 Slovakia 0 0 1 1
  42. அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களை அழித்த முஸ்லிம் ஜிகாதிகள் தடயமின்றி அழிவது எப்போது? எப்போது அடுத்த இன அழிப்பு ஒட்டுமொத்த முஸ்லிம்களின் மீதும் திரும்பும்? அதுவரை பொறுத்திருக்கலாமா ? சொந்த முஸ்லிம்களையே சுனி சியா எனப் பிரித்துக் கழுத்தறுக்கும்போது வராத அக்கறை, சிரிய அகதிகளை,?பெண்களை பாலியல் அடிமைகளாக, மிருகங்களுக்குச் சமானமாக நடாத்தும்போது வராத அக்கறை, இலங்கையில் அகதி வாழ்க்கைக்காக கண்ணீர் விடும் கோழைத்தனத்தை என்ன சொல்வது? மனிதாபிமானம் என்று வரும்போது பலஸ்தீனியர்களின் வேதனையை புரிந்துகொண்டாலும், இவர்கள் எல்லோரும் மதம் என்று வரும்போது எல்லா முஸ்லிம்கலும் ஒரே குட்டை ஒரே மட்டையே. எனவே,...... உந்த முஸ்லிம்களுக்கு சியோனிச இஸ்ரேலும், UKயும் US உம்தான் பொருத்தமானவர்கள். 🙏 முஸ்லிம்களிடம் அமைதியை ஏற்படுத்தலாமென்பது கானல்நீர்.
  43. எதனை வைத்து இவ்வாறு அனுமானிக்கின்றீர்கள் எனத் தெரியவில்லை. ஹசீனா வங்க தேசத்தின் தந்தையான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகள் இவர். ஷேக் முஜிபுர் ரஹ்மான் இன் குடும்பத்தில் ஹசீனாவையும், அவர் சகோதரியையும் தவிர மிச்ச எல்லாரையும் இராணுவப் புரட்சி ஒன்றில் வாங்காள தேசத்தின் இராணுவம் கொன்றழித்து விட்டது. அதன் பின் வெளி நாட்டில் வாழ்ந்து வந்த ஹசீனா பின்னர் 6 ஆண்டுகள் இந்தியாவில் இருந்து கொண்டு தான் வங்காளத்தின் சனநாயகத்துக்காக போராடி, பின் தன் தேசம் சென்று தேர்தலில் வென்று முதல் முறையாக ஆட்சி அமைத்தார். அவர் ஒரு இந்திய அனுதாபி. வங்காளத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளான ஐ.எஸ் இயக்கத்தின் செல்வாக்கு அதிகரித்து கொண்டு சென்றாலும் அது இந்தியாவை ஆபத்தில் தள்ளும் நிலை வரை எட்டாது அடக்கியவர். சும்மா இருக்காமல் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்துக்கு வேலை வாய்ப்புகளில் 30 சத வீதம் இட ஒதுக்கீடு கொடுக்கப் போய் இந்த நிலைக்கு ஆளாகியுள்ளார் (உயர் நீதிமன்றம் அதை 5 வீதமாக பின்னர் குறைத்தது). சுதந்திரப் போராட்ட தியாகிகளில் அனேகமானோர் இவரது கட்சி ஆட்கள் தான் என்பதால், இவரது முயற்சியை மாணவர்கள் எதிர்த்தனர். இனி ஆட்சிக்கு வரப் போகின்றவர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்களாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இதனால் பாதிக்கப்படப் போவது இந்தியாதான். //இலங்கையில் இந்திய சார்பு அரசை எப்படி அமெரிக்கா ஓடவைத்ததோ// கோத்தாவின் அரசு இந்திய அரசு சார்பானதாக இருக்கவேயில்லை. அது சீன சார்பு அரசு. மகிந்தவின் அரசும் சீன சார்பு அரசாகவே இருந்தது. இதனால் தான் கொவிட் காலத்தில் சீனா தான் தயாரித்த தடுப்பூசியை இலங்கைக்கு இலவசமாக கொடுக்க முன்வந்தது. மகிந்த / கோத்தா காலத்தில் சீனாவின் பிடிக்குள் இலங்கை முற்றாக சிக்கிக் கொண்டு இருந்தது (இன்று இந்தியா இந்த நிலையை கூடியளவுக்கு மாற்றி விட்டது) அரகலய வின் அனுசரனையாளர்களாக அமெரிக்காவும் சில முஸ்லிம் நாடுகளும் தான் இருந்தன. அமெரிக்க தூதுவர் நேரடியாகவே அரகலயவுக்கு ஆதரவை கொடுத்தும் இருந்தார். பைடன் காலத்தில் இந்திய அமெரிக்க உறவு நன்றாகத்தான் உள்ளது. தென்னாசியாவில் இந்தியாவின் நலன்களுக்கு எதிராக அமெரிக்கா இன்றைய நிலையில் இயங்காது, அது இந்தியாவின் மீது எதிர்ப்புணர்வு உள்ள ட்றம் அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் கூட இந்த நிலை மாறாது. இந்தியா ரஷ்யா சார்பான நிலைப்பாடில் இருப்பினும் கூட, அமெரிக்க தன் வர்த்தக நலன்களுக்கு எதிராகவும், சீன எதிர்ப்பிற்காகவும் இந்தியாவின் நலனுடன் முரண்படாது.
  44. கிழக்கு மாகாணத்தில்... தமிழனுக்கு கிடைக்க வேண்டிய முதலமைச்சர் பதவியை, சம்பந்தன் முஸ்லீம்களுக்கு தாரை வாரத்துக் கொடுத்ததன் மூலம், கிழக்கு மாகாண தமிழ் மக்கள், அரசியலில் பல பின்னடைவுகளை சந்தித்த போதும்... முஸ்லீம் சமூகம் சம்பந்தன் மேல் நன்றிக் கடன் இல்லாமல் இருக்குது என்றால்... சம்பந்தன் தன் வாழ்நாளில்... செய்த இராஜதந்திரம் அற்ற செயலால் எவரிடமும் நன்மதிப்பை சம்பாதிக்காமல், வீணாய் அரசியலில் இருந்து ஒருவருக்கும் பிரயோசனம் இல்லாமால்... செத்துப் போனதுதான் மிச்சம். சம்பந்தன், தோல்வியுற்ற தலைவர் என்பதை... மீண்டும், மீண்டும் பல இடங்களில் நிரூபித்த வண்ணம் உள்ளார். 🙂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.