Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    87990
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    14
    Points
    46783
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts
  4. satan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    10100
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/03/25 in Posts

  1. கனடாவில்(Canada) வங்கிக் கொள்ளையில் ஈடுபட முயற்சித்த திருடனின் சைக்கிள் களவாடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் கனடாவின் ஹமில்டன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மொன்றியல் வங்கியின் கிளையொன்றில் புகுந்த நபர் ஒருவர் வங்கிப் பணியாளரை அச்சுறுத்தி பணம் கொள்ளையிட முயற்சித்துள்ளார். கொள்ளை சம்பவம் இதன்போது, துப்பாக்கி இருப்பதாகக் கூறி வங்கிப் பணியாளரை கொள்ளையர் அச்சுறுத்தியுள்ளார். இந்நிலையில், சக வங்கிப் பணியாளர்கள் குறித்த கொள்ளையரை தடுக்க முயற்சித்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது கொள்ளையரினால் பணம் கொள்ளையிட முடியவில்லை எனவும் வெறும் கையுடன் வங்கியை விட்டு தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், சைக்கிள் ஒன்றில் வங்கியில் கொள்ளையிட சென்றிருந்த குறித்த நபர், வெளியே நிறுத்தியிருந்த சைக்கிளை தேடியுள்ளார். எனினும், சைக்கிளை வேறு ஒருவர் களவாடிச் செல்லப்பட்ட நிலையில் வங்கிக் கொள்ளையர் சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார். மேலும், வங்கிக் கொள்ளையில் ஈடுபட முயற்சித்த நபர் மற்றும் சைக்கிளை கொள்ளையிட்ட நபர் ஆகியோரை அந்நாட்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர். https://ibctamil.com/article/thief-s-bicycle-stolen-in-canada-1735891615#google_vignette
  2. உண்மையையும் நியாயத்தையும் நீண்ட காலம் வாழ விட மாட்டார்கள். பொய்யர்களுக்கு மத்தியில் ஒரு உண்மை நிலைத்து நிற்க முடியாது.இதுதான் இன்றைய உலக நடப்பு.
  3. மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவர்களிடமே உண்டு ...மேலும் வடக்கு கிழக்கிலிருந்து ஐந்தாறு அரசு ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் உண்டு ...தமிழர் அபிலாசைகள் இந்த அரசாங்கம் நிறை வேற்றிய நிர்ப்பந்தம் இல்லை ....அதற்கான காலம் நீங்கள் பா.உ வாக இருந்த பொழுது இருந்தது ,ஆனால் நீங்கள் முயற்சி எடுக்கவில்லை ..இப்பொழுது அறிக்கை போர் நடத்துகின்றீர்கள்...உங்கள் இருப்பை தக்க வைத்துக்கொள்ள .... தமிழருக்கு பிர்ச்சனை உண்டு என சிங்கள ஆட்சியாளர்களும்,தமிழ் பா. உ சொன்ன காலம் இருந்தது .. இப்ப தமிழ் பா.உ.(ஜெ,வி.பி டமிழ்ஸ்).,சொல்லினம் பொருளாதார பிரச்சனை மட்டுமே உள்ளது எண்டு..
  4. satan சில நேரங்களில் உங்களின் அறிவு கொழுந்து விட்டு எரியுது .....அது எனக்குப் பிடித்திருக்கு . .....! 😂
  5. எனக்கென்னமோ யாழ் களத்தில் கூட DMK தனது IT wing (retired) ஆட்களை வேலைக்கு அமர்த்தியிருப்பதாகத் தோன்றுகிறது. 🤣
  6. சும்மா சிவனே என்று இருந்த பெண்ணுக்கு தேவையில்லாமல் அவவின் நண்பர்களை அறிமுகம் செய்துவிட்டு இப்ப குத்துதே குடையுதே என்றால் என்ன சொல்வது . ........! 😂
  7. பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 01: முகவுரை "நெஞ்சு பொறுக்கு திலையே-இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால், அஞ்சி யஞ்சிச் சாவார்-இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே; வஞ்சனைப் பேய்கள் என்பார்-இந்த மரத்தில் என்பார்;அந்தக் குளத்தில் என்பார்; துஞ்சுவது முகட்டில் என்பார்-மிகத் துயர்ப்படு வார் எண்ணிப் பயப்படுவார்." [மகாகவி பாரதியார்-] ஒரு மனிதன் தனது வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ,ஒவ்வொரு நாள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ,முடிவற்ற பல நம்பிக்கைகளுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் உட்படுத்தப்பட்டு அதனால் ஆளப்படுகிறான். நம்பிக்கை (belief) என்பது ஒரு உளவியல் சார்ந்த விடயமாகும். ஒருவர் அல்லது ஓரமைப்பு, ஒன்றின் மீது அல்லது ஒருவரின் மீது வைக்கும் மிகுந்தப் பற்று அல்லது கூடிய விருப்பு போன்றவற்றின் அடிப்படையில் அதனை உண்மை என நம்பும் நிலையிலேயே நம்பிக்கை மனித மனங்களில் ஏற்படுகின்றது. அது சரியானதாகவோ தவறானதாகவோ இருக்கலாம். உண்மையானதாகவோ உண்மையற்றதாகவோ கூட இருக்கலாம்.அது அறிவியலின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மையாக இல்லாத இடத்து மூடநம்பிக்கை(Superstition)யாகிறது. "யானையின் பலம் தும்பிக்கையிலே மனிதனின் பலம் நம்பிக்கையிலே" என்ற பழமொழியை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.மனித வாழ்க்கையே நம்பிக்கைகளின் அடிப்படையில்தானே இயங்குகிறது? நம்பிக்கைகள் தாமே மனிதனை இயக்குகின்றன? இதை எவராலும் மறுக்க முடியாது?இயற்கையின் புதிரான செயல்களை உணர இயலாத நிலையிலும்,திடீர் நிகழ்வுகளுக்குச் காரணம் அறியாத நிலையிலும், மனிதமனம் தன்போக்கில் பதிவுசெய்து கொண்ட காரண காரியங்களே நம்பிக்கைகள்’ ஆகும். நம்பிக்கைகளின் நம்பகத் தன்மை, செயல்பாடு இவற்றின் அடிப்படையில் நம்பிக்கைகளை நம்பிக்கை(Belief) , திட நம்பிக்கை (Faith), மூட நம்பிக்கை(Superstition) என்று வகைப்படுத்தலாம் காரண காரியத் தொடர்புகளுக்கு உட்பட்டுச் சான்றுகளின் வாயிலாக நிறுவ முடிவதை நம்பிக்கை (Belief) என்றும், நிச்சயம் பலன் உண்டு என்ற உறுதியான நம்பகத் தன்மையைக் கொடுப்பதைத் திட நம்பிக்கை (Faith) என்றும் (நான் நன்றாகத் தேர்வு எழுதியுள்ளேன். எனக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் கிடைக்கும் என்று உறுதியாக நம்புவது), காரண காரியம் அறியப் படாத நிலையில் உள்ளதை மூட நம்பிக்கை (Superstition) என்றும் குறிப்பிடுவதுண்டு. பெரும்பாலும் மூடநம்பிக்கைகளின் பூர்வீகம் ஏதேனும் ஒரு அறிவுரை சொல்வதற்காக ஆரம்பிக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், சில அந்த வகைகளில் அடங்காது என்பதும் கண்கூடு. சொல்லப்பட்ட சமூக, கலாச்சார, நிகழ்வுப் பின்னணியில் சொல்லப்பட்டவற்றைப் பார்க்காமல் அதற்கு ஒரு பிரபஞ்ச அங்கீகாரம் கொடுக்கும்போது மூட நம்பிக்கைகள் விஷ விதைகளாகி விடுகின்றன. வெவ்வேறு கலாச்சாரம்[பண்பாடு ] வழிவழி வந்த மாறுபட்ட மூட நம்பிக்கைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. உதாரணமாக, ரோம,கிரேக்க நாகரீக மக்கள்,இயற்கை நிகழ்வுகள் கடவுளின் செயலே என நம்பினர்.அதனால் ஏற்பட்ட கடவுள் மேல் உள்ள பயமே[deisidaimonia:in a good sense reverencing god or the gods, pious, religious in a bad sense superstitious religious or The fear of supernatural powers ] ,ரோமர்கள் மூட நம்பிக்கை என கருதியது. மேற்குலக சில நம்பிக்கைகள் உண்மையிலே பெரும் அழிவை ஏற்படுத்தயுள்ளது.இங்கிலாந்தில் பூனை ஒரு சூனியகாரியாக கருதியது[cats were witches] ,அதனால் பூனைகளை சாக்கொண்டது /அழித்தது ,எலி தனது தொகையை பெரும் அளவு அபிவிருத்தி செய்ய உதவியது.இதனால் 1665-1666இல் கொள்ளை நோய்[Plague/பிளேக்நோய்.] வந்து 100,000 மக்களை பலி கொண்டது எல்லோருக்கும் இன்னும் நினவு இருக்கலாம்?மேலும் மேற்குலகில் முதலிடம் வகுப்பது இலக்கம் 13 ஆகும்,அதனுடன் வெள்ளி கிழமை சேர்ந்தால் அது மேலும் மோசமாகிறது.அப்படியே விரலை குறுக்கே வைப்பதும்["crossing fingers"], சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் ஏணியின் கீழாக நடப்பதும் ஆகும். பொதுவாக பல மூட நம்பிக்கைகள் சமயத்துடன் தொடர்புடையவை .உதாரணமாக தாயத்து[Talisman/மந்திரக்காப்பு] கட்டுதல் போன்றவையாகும் .இந்தியாவிலும் மற்றும் தமிழர்களுக்கிடையில் நிலவும் பொதுவான மூட நம்பிக்கைகளை நாம் சங்க பாடல்களில் காணக்கூடியதாகவும் உள்ளது. ஒரு மனிதனுக்கு நீரழிவு நோய் இருப்பதை அறிய[screening diabetes] எப்படி இரத்த பரிசோதனை செய்கிறோமோ அப்படியே ஒரு தமிழ் குடும்பத்தில்,கல்யாண பொருத்தம்,இருவரினதும் சாதகம் பரிசோதனை[horoscope matching] மூலம் அறியப்படுகிறது. இந்த சோதிடம்[astrology] பிள்ளைக்கு பெயர் வைப்பதில் இருந்தே ஆரம்பிக்கப்படுகிறது. முன்னோர்கள் காலத்தின் தேவை கருதி சில பழக்க வழக்கங்களை கடைப்பிடித்திருக்கிறார்கள். உதாரணமாக இரவில் வீட்டை கூட்டுதல் நல்லதல்ல என்பதால். காரணம் வெளிச்சம் குறைவான படியால் பெறுமதியான சிறிய பொருட்களையும் தெரியாமல் எறிந்து விட சந்தர்ப்பம் அதிகம் என்பதால்.அது போல, இரவில் நகம் வெட்டக் கூடாதும் ஆகும். “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும்.தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும் போலும்? . இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர்தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள்.நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!எப்படியாயினும் சங்க காலத்திலேயே தமிழன் இதை,இப்படியான மூட நம்பிக்கைகளை நம்ப தொடங்கி விட்டான். ஒருவர் எந்த நட்சத்திரத்தின் கீழ்ப் பிறந்தாரோ அதைக் கொண்டு அவருக்கு ஜாதகம் கணிக்கும் வழக்கம் பழந்தமிழகத்திலும் இருந்தது; புறம் 24-ம் பாடலில் பிறந்த நாள் நட்சத்திரம் பற்றிய குறிப்பு உள்ளது.இடைக்காட்டுச்சித்தர் தன் ஆடுகளுக்கு எக்காலத்திலும் கிடைக்கக் கூடிய எருக்கிலை போன்றவற்றை தின்பதற்குப் பழக்கியதாக ஒரு வரலாறு உண்டு. இவர், "6௦" ஆண்டுகளின் பலன்களையும் பா வடிவில் தந்துள்ளார்.பெண்பால் சோதிடர்கள் கழங்கு என்னும் காய்களைக் கொண்டு வருங்காலம் உரைத்தனர் என்று சங்க பாடல் கூறுகிறது .மழைக்கும் வெள்ளி கிரகத்திற்கும் உள்ள தொடர்பைச் சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர். வெள்ளி எனப்படும் சுக்கிரன் தெற்குத் திசைக்குச் சென்றால் பஞ்சமும் வறட்சியும் ஏற்படும் என்று பழந்தமிழர்கள் நம்பினர் . "வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்கேகினும் தற்பாடிய தளியுணவிற் புட்டேம்பப் புயன்மாறி"-- பட்டினப்பாலை. இப்படியாக இன்னும் கண்களை மூடியபடி எல்லாவிதமான அசட்டுநம்பிக்கைகளுடனும் மனிதன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறான். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 02 தொடரும் [முகவுரை தொடர்கிறது]
  8. 100% ✅ சில இழப்புக்கள் எங்களுடன் முடிந்தால் அதைச் செரித்துக் கொள்ளலாம். இழப்புகள் எங்களுடன் சேர்த்து பிள்ளைகளையும் தாக்கும்போது நாங்கள் கட்டிக்காக்கும் விழுமியங்கள் உண்மையில் எங்கள் இழப்புக்களுடன் ஒப்பிடுகையில் பெறுமதியானவைதானா என எண்ணத் தோன்றுகிறது. ஆனாலும் ஒரு அந்தச் செருக்கு இருக்கிறதே,..❤️
  9. இல்லை கபிதன், அதிகாரமும் செல்வாக்கும் தான் எங்களின் செயல்களை தீர்மானிக்கும் என்றில்லை. கூட்டத்துக்குள் சிக்காமல் நாங்கள் நாங்களாகவே வாழலாம். ஆனால் தனிப்பட்ட ரீதியில் சில இழப்புகள் இதனால் ஏற்படும். ஆனாலும், அப்படி வாழும் போது உள்ளுக்குள் இருக்குமே ஒரு செருக்கு........... பாரதியார் கவிதைகள் புனையும் போது, அவர் நிமிர்ந்து, அவரது கண்கள் ஆகாயத்தில் குத்தி சிவந்து இருக்கும் என்பார்கள்.............. அற்ப மாயைகளாகவே அவருக்கு சுற்றி இருந்தவர்கள் தெரிந்தார்கள்........
  10. பாலாஜியின் மரணத்தை தற்கொலை என்கிறது காவற்றுறை. இல்லை, அது கொலை என்கிறார் பாலாஜியின் தாயார். அவரது மரணம் நிச்சயம் தற்கொலையாக இருக்க முடியாது என்று சுயமாகச் சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொரு மனிதனும் நம்புகிறார்கள். பாலாஜிக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறீர்களா? whistle blowers க்கு மேற்குலகில் வழங்கப்படும் தண்டனைகளைப் பார்க்கும்போது ரஸ்யாவையும் சீனாவையும் குறை சொல்ல இங்கே யாருக்கும் அருகதை இல்லை. அதிகார வர்க்கம் எப்போதும் ஒரே விதமாகத்தான் செயற்படும். அது சீனாவாக இருக்கலாம், ரஸ்யாவாக இருக்கலாம் அல்லது USA யாக இருக்கலாம். எல்லோருக்கும் ஒரே முகம்தான்.
  11. வடிவேலு திரைப்பட காமடியெல்லாம் நிஜத்திலும் நடக்கிறது போல…
  12. சில நாடுகளின் கொடியில் "வாள்" தான் சின்னம் ...அந்த நாடுகளின் பிரஜைகள் சொல்வார்கள் தமது மதம் வாள் கொண்டு பரவியதாக...நிச்சமாக அந்த வாள் கேக் வெட்ட உபயோகப்படுத்தவில்லை....மனித் தலைகளை வெட்ட பயன்படுத்த பட்டுள்ளது... அன்று வாள் இன்று துப்பாக்கி ,வெடிகுண்டு என ....அந்த இறைவனின் பெயரை சொல்லிக்கொண்டே தாகுதல் செய்கின்றனர் இலங்கை தாக்குதல் எச்சரிக்கை அவர்கள்(அமெரிக்கா) நலன்சார்ந்து அவர்களே திட்டமிட்டது ...எனவே தான் முன்னெச்சரிக்கை...இதை(இலங்கையில்) உண்மையாகவே ஒர் தீவிரவாத அமைப்பு செய்ய நினைத்திருந்தால் செய்திருப்பார்கள் ...
  13. இதை ஒரு செய்தியாகவே அறிந்திருந்தேன், அண்ணா. இதை ஒரு கொலை என்னும் கோணத்தில் முதலில் நினைத்திருக்கவில்லை. ஆனால், இது ஒரு கொலையாக இருப்பதற்கும் சாத்தியங்கள் இருக்கின்றன. சில மாதங்களின் முன், எழுத்தாளர் ஜெயமோகன் எல்லா செயற்கை நுண்ணறிவு தகவல் திரட்டிகளையும் திருட்டுத் தகவல் திரட்டிகள் என்று குறிப்பிட்டிருந்தார். பாலாஜியின் மரணத்தின் முன்னரேயே, பாலாஜியுடன் ஒரு தொடர்பும் இல்லாமலேயே அவர் இதைக் குறிப்பிட்டிருந்தார். ஜெயமோகன் ஒரு படைப்பாளியாக அவருக்கு காப்புரிமை உள்ள அவரது படைப்புகள் எவ்வாறு இந்த தகவல் திரட்டிகளால் திரட்டப்பட்டு, உருமாற்றப்பட்டோ அல்லது உருமாற்றப்படாமலேயோ பகிரப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை வைத்து இப்படி ஒரு முடிவிற்கு வந்திருந்தார். யுவன் சங்கர் ராஜாவும் பின்னர் இதைப்பற்றி, தன் அனுபவத்தை ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். இதையே தான் காப்புரிமைகளை வைத்திருக்கும் எந்த படைப்பாளியும் சொல்வார்கள் என்று தான் நானும் நினைக்கின்றேன். எழுத்தோ, ஓவியமோ, இசையோ, மென்பொருள் நிரல்களோ........... எதுவென்றாலும் இன்று திருட்டுப் போவது தடுக்கப்பட முடியாததாக இருக்கின்றது. சட்டதிட்டங்கள் மிகவும் மேம்போக்காக, பழைய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற வகையிலேயே உள்ளது. புதிதாக மிகவும் கறாரான ஒழுங்குமுறைகள் உருவாக்கப்படவேண்டும். இது முதலில் அமெரிக்காவிலேயே நடைமுறைப்படுத்தப்படவேண்டும். பாலாஜி இதையே தான் சொல்லியிருந்தார். அவரின் வேலை அனுபவத்தில் இருந்து மிக உறுதியான ஆதாரங்களை காட்டியிருக்கின்றார். ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும், சில முக்கியஸ்தர்கள் மற்றும் பேராசிரியர்களும் பாலாஜியின் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. பொதுவான, 'உலகம் முன்னுக்குப் போகின்றது.............. நீ முட்டுக்கட்டை போடாதே...........' என்பது போன்ற அடிப்படையுடன், அவர்களின் புத்திக்கூர்மையையும் சேர்த்து திருட்டு என்று சொல்லப்படுவதை அது திருட்டே இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். எலான் மஸ்க்கும் பாலாஜியின் மரணம் தான் கொலை போன்று தெரிகின்றது என்று சொல்லியிருக்கின்றாரே தவிர, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தையும், அதில் இருக்கும் குறைபாடுகளையும் பற்றிக் கதைக்கவில்லை. அவரே இதில் மிகப்பெரிய ஒரு நிறுவனம் வைத்துள்ளார். எந்த எல்லைவரை போயும் இவர்கள் பணம் சேர்ப்பார்கள். மிக மிகத் திறமையான ஒரு இளைஞன் இழக்கப்பட்டது மிகவும் வருத்தமான ஒரு நிகழ்வு. அச்சு அசலாக இங்கிருக்கும் பல பிள்ளைகள் போன்றே கள்ளம் கபடமற்ற, உள்ளுக்குள் நிகழ்ச்சிநிரல்கள் வைத்துக் கொள்ளாமல், சரியென்று தோன்றுவதை சரியென்றும், பிழையென்று தோன்றுவதை பிழையென்றும் சொல்லும் அறம் தெரிந்த பிள்ளை................🙏.
  14. கிடைக்கிற ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டியது தான்.
  15. அம்மா 38 வருடங்களாக தனிமையாக வாழ்ந்துள்ளார். எவ்வளவு கொடுமை? இந்த பிள்ளைகள் ஏன் இவ்வளவு சுயந‌லமாய் நடந்து கொள்கின்றார்கள்? இந்த வயது போன காலத்திலும் ஒரு companionship தேவைதானே?
  16. எந்த மதத்திலும் உயிர்களை கொல்லுமாறு கூறுவதில்லை, இந்த முட்டாள்கள் செய்யும் செயலுக்கு மதத்தினை காரணம் காட்டி மதத்தினை ஒரு பயங்கரவாத மதமாகவே மாற்ற முயற்சிக்கிறார்கள் இந்த முட்டாள்கள். எதிர்காலத்தில் நாடுகள் இந்த மதத்தினை தடை செய்யும் நிலை கூட வரலாம் இந்த முட்டாள்களால், அமெரிக்க அரசின் படுகொலைகளுக்கு எவ்வாறு அப்பாவி மக்கள் உடந்தையாவார்கள், அமெரிக்க அரசின் அப்பாவி மக்கள் படுகொலைகளை நியாயப்படுத்துபவர்கள் போலவே அப்பாவி மக்கள் இறப்பதனை விரும்பும் இவர்களும் மனநோயாளிகள்தான். பல ஆயிரம் மைல்களுக்கப்பால் இருக்கும் இலங்கையில் நடக்க இருந்த தீவிர தாக்குதலை அறிந்தவர்களால் தம் நாட்டிற்குள்ளே நிகழும் தீவிர வாத தாக்குதல் பற்றி தெரிந்திருக்கவில்லை என்பது நம்புவதாக இல்லை! இதில் அனைத்து தரப்பினது குறியும் அப்பாவி பொதுமக்கள்தான்.
  17. India 185, Australia 1/9 சிட்னி ஆடுகளம் பச்சை பசேலன காணப்படுகிறது, இந்தியர்கள் அவுஸ்ரேலியா தட்டையான சீமெந்து தரையினை அவுஸ்ரேலியா வழங்கும் என குறை கூறிய நிலையில் இவ்வாறான ஒரு ஆடுகளத்தினை யாரும் எதிர்பார்க்கவில்லை. நாணய சுழற்சியில் வென்ற இந்தியணி முதலில் துடுப்பெடுத்தாடும் முடிவினை எடுத்தது, இன்று மேக மூட்டத்துடன் மிதமான வெப்பத்துடன் புற்கள் நிறைந்த ஆடுகளம் வேக பந்து வீச்சிற்கு சாதகமாக இருந்தது, எதிர் வரும் 3 நாதள் வெப்பம் அதிகரிக்கும் ஆடுகளத்தில் ஈரப்பதன் காணப்படுவது போல இருப்பதாக எனக்கு தோன்றுகிறது (தவறாக இருக்கலாம்) எதிர் வரும் நாள்களில் பந்து எதிர் பாராத வண்ணம் ஏற்ற இறக்கத்துடன் பந்து மேலெழும் நிலை உருவாகலாம். இது வழமையான சிட்னி ஆடுகளம் போல தட்டையாக இல்லை, வழமையாக 2, 3 ஆம் நாள்களில் துடுப்பாட்டத்திற்கு வசததியாக இருக்கும் ஆனால் இந்த ஆடுகளம் நாள்கள் செல்ல செல்ல மோசமாகலம் என கருதுகிறேன் (எனது தனிப்பட்ட கருத்து) ஆனாலும் பிட்ச் காயும் போது துடுப்பாட்டத்திற்கு வாய்ப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. சிட்னி ஆடுகலம் மெல்பேர்ன் ஆடுகளம் போல Drop pitch இல்லை, அதனால் பிட்ச் உடையும் போது சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக காணப்படும், இவற்றினை பார்க்கும் போது அதிகளவில் இந்தியணிக்கு சாதகமாக நிலை உள்ளது, அதனால் அவுஸ்ரேலியா தனது முதல் இனிங்க்ஸில் அதிக ஒட்டங்களை பெற்றாக வேண்டும் 300 ஒட்டங்களையாவது அவுஸ்ரேலியா எடுக்க வேண்டும்.
  18. 🎧 ஐயப்பா,சபரிசா! ஐயப்பா,சபரிசா! சந்தனம் மணக்கும் ஐயப்ப அணையாத தீபமாய் அருளும் சபரிசா! பந்தளம் மன்னனின் புகழும் நீயே, பார்வதி பரமனின் பொன்னவன் நீயே! தங்க கோலமே தரிசனம் நல்கி, தவமுடன் வாழ்த்திடும் தெய்வமே ஐயா!
  19. குடிப்பழக்கமும் அப்படித்தான் சுவியர். வற்புறுத்தி அறிமுகப்படுத்துவர், பிறகு குடிகாரன் என்பர்.
  20. ஆயிரம் ஆண்டுகளாக சாதி பாதிப்பால் இருக்கிறவன் அடையாள கட்சி வைத்திருந்தால்..... எதிரியும் தனக்கென ஒரு அடையாள கட்சி வைத்திருப்பான். முதலில் நான் திருந்த/ என் அடையாளத்தை அழிக்க வேண்டும். அதன் பின் எதிரியை எதிர்க்க வேண்டும்.
  21. இவ்வளா காலமும் தமிழ்நாட்டு அரசியல் செய்திகளைதான் பார்ப்பம்.. இப்பதான் இலங்கை அரசியலை பார்க்க பிடிக்கிறது.. இவ்வளவுகாலமும் தமிழ் அரசியல்வாதிகள் அதே பழையகதை தீர்வுத்திட்டம் பற்றித்தான் கதைப்பாங்கள்.. மக்கள் பிரச்சினையை எவனும் கதைப்பதில்லை.. அதை பாக்கிறத விட பேசாம கண்ணமூடி நித்திரை கொள்ளலாம்.. டொக்ரர் ராமநாதன் அர்ச்சுனாவின் வருகையின் பின் இலங்கை தமிழ் அரசியலில் பொறிபறக்குது.. எங்களுக்கும் எம்பி இருக்கெண்டு ஞாபகம் வருது..👏👏
  22. அரசியலில் நிலைக்க வேண்டுமாயின்; மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். போற்றல் தூற்றல்களை கடந்து அமைதியாக. இறுதியில் யார் தூற்றினாலும், அவர் மனது சொல்லும்; என்னால் இயன்றதை, நன்றே செய்தேன் என்று மனது அமைதியடையும். இதுவே உண்மையான சேவை. மக்கள் பணி, மகேசன் பணி. ஒன்று, யாராவது ஒரு நல்லது செய்தால்; அதை பொறுக்காதவர்கள் சேறடிப்பார்கள் அல்லது அவரை தொடர்ந்து தாமும் ஏதும் செய்யவேண்டுமென்று செய்வார்கள். மணி, நல்ல துடிப்புள்ள இளையவர். மக்களுக்கு இன்று நிறைய சட்ட உதவிகள் தேவை, ஊழலை அடாவடியை அகற்ற. ஆகவே இவர் நல்ல மனதோடு மக்களுக்கு சேவை செய்ய முன்வருவாரானால் இணைந்து செய்யலாம். நாளடைவில், தமிழரசுக்கட்சியை சிதைக்க, சொந்தமாக்க நினைப்பவர்கள் வீட்டில் இருந்து கனவு காணவேண்டியது.
  23. ரசோதரன், உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்வேன், வேறொருவருக்கும் சொல்லிபோடாதேங்கோ. முக்கியமாக கோசானுக்கு சொல்லிபோடாதேங்கோ. அனுரா மாத்தையாவுக்கு மட்டும் எந்த ஒரு கரைச்சலும் குடைச்சலும் வரக்கூடாது! பிரார்த்தனையும் செய்யிறேன். மனுஷன் ரொம்ப சாதுவாய், வாயில்லாப் பூச்சியாய் இருந்திருப்பார். அதனாலேயே சாதிக்க முடிந்திருக்கு. ஆனால் எங்கட சுமந்துக்கு வாய்தான் அதிகம். அதிலும் உளறுவாய், நாறல் வாய்.
  24. சாதிகள் இல்லையென்றால் தலித் கட்சிகள் எதற்கு? எல்லாவற்றையும் கலைத்து விட்டு தமிழர் என்ற ஒரு நிலைக்கு வரலாமே?
  25. இப்படியான தெருக்கள் .தாக்குதல் நடத்திய நபர்களின் மததில் பாவச்செயல் (ஹராம் )என சொல்லப்பட்டுள்ளது...ஆகவே தான் இவர்கள் தாக்குதல் செய்யும் சகல இடங்களும் இசை நிகழ்ச்சி சம்ப்ந்தப்பட்டதாக இருக்கும்....
  26. அர்ச்சுனாவுக்கு நிதானம், பொறுமை அவசியம். குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம், சாட்சி போன்றவற்றை சேகரித்து நிதானமாக, முறையாக விசாரணையின் பின் குற்றங்களை நிரூபித்து குற்றவாளிகளை வெளியேற்ற வேண்டும். அதோடு அவர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு படித்த, துடிப்புள்ள இளையவரை பயிற்ற வேண்டும். இதுவே உண்மையான, நேர்மையான ,தமிழ் மக்களுடைய ஆசையும் கூட உங்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் தெரிவிக்கிறேன்.
  27. இறுதியில் இவர்களால் எல்லா அழிவையும் சந்திக்க போவதும் அமெரிக்காதான். எங்கெங்கு எதையெதை விதைத்தார்களோ, எல்லாம் ஒன்றுசேர்ந்து திருப்பி தாக்கும் நேரம் வரும். ஏன், நெருங்கி விட்டது என்றே சொல்லலாம்.
  28. 90ஸ்-கிட்ஸ் :: தமிழீழ தாயகத்தில் எடுத்த சினிமா ரிக்கற்களை நீங்கள் சேகரித்து வைத்துள்ளீர்களா ..?
  29. இவரது செயற்பாடு, கேள்வி கேட்க்கும் தன்மை, பலரின் வயிற்றில் புளியை கரைக்கிறது. ஊழல், லஞ்சம், பந்தா, அதிகாரம் என்று ராஜ போக வாழ்க்கை வாழ்ந்தவர்கள், அது பாதிக்கப்படப்போகிறது என்பதால் அவரை பைத்தியம் என்று விமர்ச்சித்தார்கள், இவரை யார் உள்ளே விட்டது என்று கேள்விகேட்டார்கள். வழக்கம்போல் வந்து கூடி, உண்டு, கதை பேசி போக முடியவில்லையே எனும் ஆதங்கத்தால். இவர்களை யாரும் இதுவரையில் யாரும் கேள்வி கேட்கவில்லை, அதற்கு இவர்கள் விட்டதுமில்லை. இப்படி ஒரு நிலை தங்களுக்கு வருமென்று இவர்கள் நினைத்ததுமில்லை. அரசியல் வாதிகள் கூட்டங்களில் போய் ஆசுவாதமாய் இருந்து, கண்ணை மூடி அயர்ந்துவிட்டு கூட்டம் முடிய பத்திரிகை கூட்டங்களை நடத்திவிட்டு பெரிய சாதனை நடத்தியவர்கள்போல் ராஜ நடை நடந்தவர்கள் இப்போ முழிக்கிறார்கள். ஏதாவது செய்ய வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும். விலகக அல்லது விலக்க வைக்கப்படுவார்கள். அதனால் தமது இருப்பை காக்க வெறுப்பை அவர்மேல் கக்குகிறார்கள், அவர் அனுராவுக்கு பின்னால் ஒளிகிறாராம். அவர் யார் பின்னால் ஒளிந்தால் இவர்களுக்கென்ன? அது அவருடைய பிரச்சினை. கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாவிடில் இப்படி சேறு பூசுவது வழமை. சிங்களவனிடம் போராடுகிறோம். முதலில் நாம் நம்மிடம் போராட வேண்டிப்பெற வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன. இவரை ஒழித்துக்கட்ட வேண்டிய நிலையில் பலர் உள்ளனர். அதே போல் அனுராவை பதவியில் இருந்து ஒழிக்கவும் ஒரு கூட்டம், தமிழர் பகுதியில் தங்கள் பழைய காரியங்களை தொடர்கிறார்கள். மொத்தத்தில் பாதிக்கப்படுவது ஏழை அப்பாவி தமிழர். ஆனால், பதவி வரும்போது பணிவும் வரவேண்டும் அர்ச்சுனாவுக்கு. நிதானம், பொறுமை, மற்றவர் சொல்வதை பொறுமையுடன் கேட்டு ஆராய்ந்து அவர்கள் வாயாலேயே உண்மையை வரவழைக்கலாம், அவர்களை பேச விட்டு பொறுமையுடன் கேட்டால். இல்லையென்றால் கோசம் போட்டு அவரது நிதானத்தை கலைத்து கோபமூட்டி அவரை அரசியலில் இருந்து ஓரங்கட்டுவார்கள்.
  30. எமது பழம்பெரும் தமிழ் அரசியல்வாதிகள் இதுவரை காலமாகவும் பொறுப்பாக பேசி செய்த நடவடிக்கைகள் என்று எதுவுமே இல்லை. வடிவேலு போல் துள்ளினாலும் காரியத்தில் கண்ணாக இருக்கிறார் என்பது என் கணிப்பு.
  31. நான் சீமான் செய்வதெல்லாம்,பேசுவதெல்லாம் சரியென வக்காளத்து வாங்க வரவில்லை. தமிழ்நாட்டில் ஏனைய கட்சித்தலைவர்களும்,கட்சி தொண்டர்களும் சுத்த பத்தம் என நீங்கள் நிரூபியுங்கள். அதன் பின் சீமான் அரசியலை வழித்து ஊத்துங்கள். ஏதோ எம்ஜி ஆரும்,கருநாநிதியும்,ஜெயலலிதாவும்,ஸ்டாலினும்,,உதயநியும் பெண்கள் விடயத்திலும்.ஊழல் விடயத்திலும் தப்பு தாண்டாக்கள் செய்யாத மாதிரியும் சீமான் மட்டும் அருவருப்பு அரசியல் செய்வது மாதிரி நாடகங்களை அரங்கேற்றுகின்றீர்கள். கருணாநிதியும் எம்ஜிஆரும் அவர்கள் சார்ந்தவர்களும் செய்யாத பெண் லீலைகளையா சீமான் செய்து விட்டார்? தமிழ்நாட்டு அரசியலும்,கிந்திய அரசியலும் அப்படித்தான். அதற்கேற்ப நாங்களும் கருத்துக்கள் எழுத வேணும் இல்லையா? அதை விட்டு தனி வக்கிரத்திற்காக நீங்கள் சீமான் மீதான குற்றச்சாட்டு கருத்துக்களை எழுதினால்.... நானும் பெரியார்காலத்திலிருந்து இருந்த நாற்றங்களை எழுதலாம் என நினைக்கின்றேன்.😃
  32. Kerala · Rejoindre Vijayan Nair · tprndsoeSomuufmit261thiah2g9mg2fu8c21i1994a72h11 tc501m304m5 · GoodMorning & Happy New Year
  33. நான் மருத்துவர் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனாவின் தகவல்களை பார்த்து வருகின்றேன். இப்போது தனது யூரியூப் ஊடாக காணொளிகள் பிரசுரம் செய்கின்றார். பல பொழுது போக்கு அம்சங்களுடன் நாட்டில் உள்ள பல பிரச்சனைகளையும் பற்றி உரையாடுகின்றார். அரசியல் களத்தில் பல புதிய விடயங்களை புகுத்தி வருகின்றார். இனிவரும் தேர்தல்களில் இவை அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இவரை ஓரம் கட்டுவதாக நினைத்து செய்யப்பட்ட விடயங்கள் அவரை வளர்த்துவிடுகின்றன. தொடர்ந்து அவதானிப்போம்.
  34. செந்தமிழன் சீமான் அண்ணாவின் பரம்பரையில் மன்னிப்பு கேட்கும் வழக்கம் மட்டுமல்ல பொய், பித்தலாட்டம், கப்ஸா, பெண்களை ஏமற்றுதல் எவருக்குமே இல்லை! அந்தளவுக்கு கண்ணியமான பரம்பரையில் இருந்து வந்தவர் செந்தமிழன் அண்ணா! பின்னிணைப்பு; இவர்ட பரம்பரையில மன்னிப்புக் கேட்கும் வழக்கமில்லையாம், ஆனா சாட்டை துரைமுருகனை வச்சு டீல் பேசி விஜி அண்ணிக்கு மாதாமாதம் பாங்க் எக்கவுண்டுக்கு ஒரு எமவுண்ட் போகுது அது என்னவாம். மண்டியிடாத மானம் அல்லவா இது!😂 இப்ப கொஞ்சநாள் எமவுண்ட் ஒழுங்காப் போகுது போலை அதுதான் விஜி அண்ணி பேசாம இருக்காங்க!😂 எண்டு மக்கள் பேசிக்கிறாங்க!
  35. அப்ப அவர் பைத்தியம் இல்லையா? இங்கு பலருக்கும் பைத்தியமாகவே தெரிந்தாரே?
  36. உண்மை. ஒவ்வொரு அரச அதிகாரிகளும், திணைக்களங்களும், சர்வாதிகாரிகள் போலவே நடந்து கொண்டனர் .யாரும் சட்டம் ஒழுங்கு சேவை என்று செய்யவில்லை. கேள்வி கேட்டவர்கள் தண்டிக்கப்பட்டார்கள், ஒதுக்கப்பட்டார்கள், பழிவாங்கப்பட்டார்கள். அடிதடி காரர் நிஞாயமற்ற வகையில் எல்லா சலுகைகளையும் சேவைகளையும் பெற்றுக்கொண்டார்கள், மரியாதை செலுத்தப்பட்டார்கள். போலீஸ் தனக்குரிய கடமையை செய்யாது மற்ற துறைகளில் மூக்கை நுழைத்து செயற்பட்டது. தாடியர் அவரது அமைச்சு கடற்தொழில். ஆனால் அதை விட்டு மற்ற எல்லாத்துறைகளையும் பற்றி கருத்துச்சொல்வார். இனிமேல் இவர்களுக்கெல்லாம் இருக்கு ஆப்பு. முடியா விட்டால் பணியில் இருந்து ஒதுங்கி செய்யக்கூடியவர்களிடம் கையளியுங்கள் பணியை.
  37. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
  38. பிறந்தநாள் வாழ்த்துகள், ஏராளன்
  39. எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்களும், ஏராளன்….!
  40. என்னையா நடக்குது இங்க 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.