Leaderboard
-
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்11Points3125Posts -
இசைக்கலைஞன்
கருத்துக்கள உறவுகள்10Points22135Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்9Points33807Posts -
ரஞ்சித்
கருத்துக்கள உறவுகள்8Points8975Posts
Popular Content
Showing content with the highest reputation on 02/08/25 in all areas
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
4 pointsஇடைத்தேர்தல் அளவுகோல் அல்ல என்றாலும், பெற்ற வாக்குகள் வியப்பைத் தருகிறது. 2026 தேர்தலில் 20%+ வாக்குகளும் சில இடங்களும் உறுதி !4 points
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
3 pointsதமிழ்நாடு தேர்தல் களம் விசித்திரமானது. பணம் இல்லாமல் நூறு வாக்குகள் வாங்குதல் கடினம். உதாரணம் திருமுருகன் காந்தி மற்றும் தமிழா தமிழா பாண்டியன்! திருமுருகன் காந்தி பரப்புரை செய்த வெண்ணிலாவுக்கு 222 வாக்குகள் தமிழா தமிழா பாண்டியன்: 129 வாக்குகள் இதையெல்லாம் தாண்டித்தான் வரவேண்டி இருக்கிறது. பொதுத்தேர்தல் என வரும்போது, எதிர்க்கட்சிகளின் வாக்கு அதிகரிக்கும். காரணம் பணக்காரக் கட்சிகளால் அனைத்துத் தொகுதிகளிலும் ஆயிரம் கோடிகளில் செலவு செய்ய முடியாது!3 points
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
3 pointsவேறு எந்த முக்கிய எதிர்க்கட்சிகளும் போட்டியிடாமல், வெறுமனே இரண்டு கட்சிகள் மட்டும் போட்டியிட்ட ஒரு இடைத்தேர்தலில் கட்டுப்பணத்தைக் கூட பெற முடியாமல் போனது உங்களுக்கு வியப்பைத் தருகிறதா இசை? இதில் அதிமுக, பா.ஜ.க போட்டியிட்டு இருந்தால் நாதக எத்தனை சதவீதம் எடுத்து இருக்கும்? திமுக ஆட்சிக்கு எதிரான மன நிலை உள்ளவர்களில் கணிசமானோர் கூட சீமானுக்கு ஆதரவு கொடுக்கத் தயாரில்லை என்பது தான் யதார்த்தம்.3 points
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
3 pointsஈரோடு தேர்தலில் நாதக டெபாஸிடை இழந்த போதும் தனக்குரிய தனிப்பட்ட payment போதியளவு கிடைத்த மகிழ்சசியில் சீமான்.3 points
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
நேற்று இவரது காணொளி ஒன்று பார்த்தேன். இலங்கையில் தமிழர்களுக்கு சிங்களவர்களுடன் சேர்த்து 1948 இல் சுதந்திரம் கிடைத்துவிட்டதாகவும் இன்று இலங்கையின் சுதந்திர தினத்திற்குக் கறுப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்துபவர்கள் பைத்தியங்கள் என்றும், அரசியல் நோக்கத்திற்காகச் செய்வதாகவும் கூறியிருந்தார். ஆக, தமிழர்கள் முற்றான சுதந்திரத்தைச் சிங்களவர்கள் போன்றே அனுபவித்து வருவதாகக் கூறுகிறார்.அவரது அறிவு அவ்வளவுதான் போலும். இவர் எப்படிப் படித்து, வைத்தியராகப் பட்டம் பெற்றார் என்று எண்ணுகிறேன். இவருக்கு உதவவென்று புலம்பெயர் நாட்டில் பலர் இருக்கிறார்கள். இவரால் குறிப்பிடப்பட்ட பல வங்கிக் கணக்குகளுக்கு இவர்களால் பணம் அனுப்பப்பட்டே வருகிறது. இவரைத் தலையில்த் தூக்கிக் கொண்டாடிய தமிழடியான் என்பவரின் ஆரம்ப காலக் காணொளிகளைப் பார்த்திருக்கிறேன். பின்னர் அவர் அநுர விசுவாசியாக மாறிப்போனதால் அவரது காணொளிகளைப் பார்ப்பது இல்லை. தற்போது அருச்சுணா பற்றி என்ன பேசுகிறார் என்று தெரியவில்லை.3 points
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
2 pointsஈவெரா மீதான விமர்சனங்கள் மேலும் தொடரும். இதன்மூலம் பாஜக வாக்குகளை பலவீனப் படுத்துகிறார் செந்தமிழன் சீமான் அவர்கள். இந்தத் தேர்தலில் பாஜக, அதிமுக வாக்குகளை நாம் தமிழர் பெற்றார்கள் என விமர்சனம் வைக்கின்றார்கள். இதை தவிர்க்கவே ஒரு மூலோபாயத்தை கடைப்பிடித்தோம்! 1) திப்பு சுல்தான், தடா ரகீம், காயிதே மில்லத் என கொண்டுவந்து வாக்கு கேட்கப்பட்டது. பாஜக அகரன் இஸ்லாமிய பெயர்களை கேட்டாலே போடமாட்டான்! அவ்வாறு பாஐக வாக்குகள் தவிர்க்கப்பட்டன. அவர்கள் திமுகவுக்கும், நோட்டாவிக்கும் போட்டார்கள். 🤣 அதேபோல அதிமுக மீதும் விமர்சனங்களை நாம் தமிழர் வைத்தது. கொடநாடு கொலைவழக்கு, தூத்துக்குடி கொலைகள் என அதிமுகவையும் குறிவைத்தார் சீமான். இதனால், அடிப்படை அதிமுக வாக்குகள் விழவில்லை. கிடைத்த 15% வாக்குகளும், சீமானுக்காகவும், கொள்கைகளுக்காகவும் மட்டுமே கிடைத்தவை. எப்பிடி super தானே விசுகு அண்ணா?! 🤩2 points
-
கனடா மீதான வரி விதிப்பு நிறுத்தி வைப்பு: டிரம்பின் இந்த திடீர் மன மாற்றத்துக்கு என்ன காரணம்?
2 pointsஇது சொந்த செலவில் வைக்கும் சூனியம் என்று தலீவருக்கு யாரோ வடிவாக எடுத்து கூறி இருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன். ட்ரம்பை பொறுத்தவரை அவருடைய ஆதரவாளர்களுக்கு வெற்றி மேல் வெற்றி பெற்றுக்கொண்டு இருக்கிறோம் என்று ஒரு மாய தோற்றத்தை பொய்யை கூறி வந்தாலே போதும் அதைத்தான் அவர் செய்து வருகிறார் Lumber பலகை 70-75 வீதம் கனடாவில் இருந்தே வருகிறது ஏற்கனவே வீட்டு விலை ம்உச்சியில் இருக்கிறது எண்ணையும் அதே போலவே எண்ணெய் விலை ஏறினால் தலைவர் முக்காடு போட்டு கொண்டுதான் திரிய வேண்டு 25 வீதம் பலகைக்கு எண்ணெய்க்கும் வரி விதித்தால் அதன் தாக்கம் எல்லா பொருடங்களிலும் இருக்கும் (Transport + storage ) மெக்ஸிகோ நிலைமை அதைவிட மோசம் அடிப்படை உணவு அங்கிருந்துதான் வருகிறது அதைவிட பல தொழில்நுட்ப பொருட்கள் ( Technology Hardwares + Cars Parts) வாகன உரிதிகள் இரண்டு மூன்று முறை எல்லையால் வந்து வந்து போகிறது. காருக்கான என்ஜின் இங்கே செய்யப்படுகிறது இறுதி அசெம்ப்ளி மெக்சிகோவில் நடக்கிறது மெக்சிகோவும் 25 வீதம் வரி விதித்தால் அண்ணளவாக 50 வீதம் வரி ஏறும். இப்போது 50 ஆயிரத்துக்கு வாங்க கூடிய காரின் விலை 75 ஆயிரம் ஆகும் நடைமுறை சாத்தியமில்லாத விடயம் இதுவும் இன்னொரு Mexico pay for the Wall தான் ஆனால் மற்ற நாடுகள் நேரடியாக முகம் முறித்து சீன போல மாறினால் அன்று அமெரிக்க உற்பத்தியை தவிர்ப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஏனெனில் 65-70 வீதமான அமெரிக்க ஏற்றுமதி என்பது பொருட்களே அல்ல தொழிநுட்பம் வங்கி வர்த்தகம் சோஃவார் ( Tecnology, Finacial; trading, software) ஆகும். நீங்கள் விசா மாஸ்டர் கார்ட் பவித்தாலே ஒரு குறிப்பிடட வீதம் இங்கே வருகிறது Medicine + Pharma products2 points
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
2 pointsபாரீஸ் நகரில்...ரயில் நிலையம் அருகில் ஒருமுறை ஒரு பயங்கர வெடிகுண்டு சம்பவம் நடந்த்து..... தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவரும் தப்பித்தனர்.... ஆனால் அவர்களுடன்....இந்த செயலுக்கு மிகவும் உறுதுணையாக இருந்த ஒரு பயிற்சி...நாய் மட்டும் போலீசார் வசம் சிக்கி கொண்டது... ஆனால் அந்த நாயை வைத்துக்கொண்டு போலீசாரால் துப்புத்துலக்க முடியவில்லை.... காரணம் அது எந்த முறையில்....எந்த மொழியில் பயிற்சி கொடுக்கப்பட்டது என்ற விபரம் அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை.....! (உதாரணத்திற்க்கு..... தமிழ் வீட்டில் வளரும் நாய் உட்கார் என்றால் உட்கார்ந்து கொள்ளுமாம்....இதைப்போல...) எப்படியாவது இந்த நாயை வைத்தே குற்றவாளிகளின் இருப்பிடத்தை கண்டறிந்து...அவர்களை கைது செய்ய முடிவெடுத்தனர் எல்லாரும் முயற்சி செய்து ஒரு வழியாக...ஒரு பன்மொழி கலைஞரை அழைத்தனர்.....அவருக்கு...60மொழிகள் வரை அத்துப்படி...... அவர் ஒரு புரஃபெஸரும் கூட... . அவரும் வந்து.... வித விதமான மொழிகளை பேசி முயற்சி செய்தும் பயன் இல்லை...அந்த நாயிக்கும் ஒன்றும் புரியவே இல்லை.... கடைசியில்.... பழம்பெரும் மொழிகளில் ஒன்றான ஹிப்ரு என்ற மொழியில்...அவர் பயிற்சியை துவக்கியதும் ...நாய்க்கு புரிய ஆரம்பித்தது.....உடன் அதை வைத்து குற்றவாளிகளின் இருப்பிடம் கண்டு....உடன் கைது செய்தது பாரீஸ் போலீஸ்...... அந்த புரஃபெஸருக்கு பாராட்டுக்கள் குவிந்தது..... அவருக்கு பாரீஸ் அரசாங்கம் ஏகப்பட்ட விருதுகளை அள்ளித்தர முடிவு செய்தது... பெரிய விருந்து ஒன்றையும் ஏற்பாடு செய்தது விருந்தில் அவரிடம் கேட்க்கப்பட்டது உங்களால் பாரீஸ் பெருமை அடைந்தது... ... உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள் வழங்கபடும் என்றனர்.... பணம் வேண்டுமா.....? விலை கூடிய கார்கள் வேண்டுமா..? மாளிகை வேண்டுமா....? அரசாங்க பணிகள் வேண்டுமா...? என்று... அவர் மறுத்துவிட்டார்... எனக்கு உதவியாக இருந்த அந்த...நாயை மட்டும் தயவு செய்து எனக்கு வழங்கிவிடுங்கள்...என்றார்... அதை கேட்டு அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சர்யம்.... சிலர் இவருக்கு பைத்தியம் என்றனர்.... ஒரு அதிகாரி கேட்டார்..... ஏன் அந்த நாயை வைத்து நீங்கள் என்ன செய்ய முடியும்..... என்று ஆச்சரியத்துடன் கேட்டார். ... அதற்க்கு அவர்...சொன்னார்.... இந்த நாயை என் வீட்டிற்க்கு கொண்டு போய்....என் மனைவி முன் நிறுத்தவேண்டும்..... ஏன் என்றால் நான் கஷ்டப்பட்டு இந்த பல மொழிகள் படிக்க முயலும்போதெல்லாம்.... அவள் சொல்வாள்... . ""எந்த நாய் கேட்க்க போகுதுன்னு... இதையெல்லாம் படிக்கிறீங்கன்னு..".".. அதுக்காக தான் இதை கொண்டுபோகணும்னுசொன்னவுடன் அரங்கம் சிரிப்பொலியில் நிறைந்தது..2 points
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
சில நண்பர்கள் படித்த பாடசாலைக்கு பணம் கேட்டாலே கொடுக்க மாட்டார்கள் அதுவும் வருடத்தில் ஒருக்கா....நாங்கள் தனிப்பட்ட வகையில் தாயக மக்களுக்கு பல தொண்டுகள் செய்கிறோம் என புருடா விடுவார்கள்2 points
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
தட்டச்சில் ஓணான் என்று வரவில்லை என்ற மட்டில் ஆசுவாசம் அடைகிறேன்🤣.2 points
-
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
🤣................. ஏதோ அந்த ஊர் வீதியை இப்பவாவது திருத்துகின்றார்களே............. அங்கே தெருவில் ஒரு நாய் கலைத்தால் கூட, நாயையும் பார்த்து, வீதியில் இருக்கும் பள்ளங்களையும் பார்த்து ஓட வேண்டிய நிலை.....2 points
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
2 points
-
வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
1 pointவாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம். வாழும்வரை போராடு....... 01. யாழ்ப்பாணம் முற்றவெளியில் இருக்கும் அந்தப் பிரமாண்டமான கோட்டை போத்துக்கேயரால் முற்றிலும் மனித வலுவைப் பயன்படுத்திக் கட்டப்பட்டது. அது பகலில் மிகவும் அழகாகவும் இரவில் மிக மிகப் பயங்கரமாகவும் தோற்றம் தரும். அந்த மாலை நேரத்தில் சூரியன் தன் பொற் கதிர்களைத் தெறிக்கவிட்டு மறைவதையும், அதே நேரத்தில் வெண்ணிலவு மேலெழும்புவதையும் சில காலங்களில் தரிசிக்க முடியும். அன்றும் அதுபோன்றதொரு நாள் அருகில் இருக்கும் முனியப்பர் கோவிலின் மாலைப் பூசையின் மணியோசை அந்த அமைதியை ஊடறுத்துக் கொண்டு கேட்கின்றது. அந்தக் கோட்டை மதிலின் கட்டில் இராகவன் அமர்ந்திருக்கிறான். கீழே புற்தரையில் சந்துரு சப்பாணி கட்டி சக்கப்பனிய உட்கார்ந்திருக்கிறான். இருவரின் கைகளும் அனிச்சயாய் கோவிலை நோக்கிக் கும்புடுகின்றன. கீழுள்ள அகழியின் கரையோடு ஒரு காதல் ஜோடி கைகளால் இடைதழுவியபடி தனிமை நாடித் தனியிடம் தேடி நடக்கின்றது. அப் பெண்ணின் இடையழகும் கூடவே அசையும் பேரழகுகளும் பார்க்க ரசனையாக இருக்கின்றன . இராகவன் அவர்களைப் பார்த்தபடி சந்துருவிடம், என்னடா சந்துரு இனி என்ன செய்வதாய் உத்தேசம் என்று வினவுகிறான். --- அதுதாண்டா இராகவ் நானும் யோசிக்கிறேன். நாமிருவரும் சிறுவயதில் இருந்தே ஒரே பாடசாலையிலும் ஒரே வகுப்பிலுமாகப் படித்து பின் கல்லூரியிலும் சேர்ந்து படித்து அதுவும் சென்ற வாரத்துடன் முடிந்து விட்டது. --- ஓமடா சந்துரு, நாங்கள் கடந்து வந்த காலத்தை நினைத்தால் இனிமையாகவும் மலைப்பாகவும் இருக்குதடா. எங்களைப்போல் இவ்வளவு வகுப்புகள் சேர்ந்து படித்த பள்ளித் தோழர்கள் குறைவு என்னடா. --- உண்மைதான் இராகவ், இனி மேற்கொண்டு படிப்பதாய் இருந்தாலும் உனக்கு வசதியிருக்கு. உன் அப்பா தாமோதரம் கஸ்தூரியார் வீதியில் பெரிய நகைக்கடை வைத்திருக்கிறார். இனி நீ அந்தக் கடையைக் கூட உங்க அப்பாவுக்கு உதவியாய் பார்த்துக் கொள்ளலாம். நான் இனித்தான் என்ன செய்வதென்று யோசிக்க வேண்டும். சந்துரு நீ சொல்வது உண்மையென்றாலும் கூட, எனக்கு அப்பாவின் கடையைப் பார்த்துக் கொண்டு வேலை செய்வதில் கொஞ்சமும் ஈடுபாடில்லை. மேற்கொண்டு படிப்பதென்றாலும் உன்னளவுக்கு எனக்கு படிப்பு வராது என்றும் எனக்குத் தெரியும். ஆனாலும் நான் முடிவு செய்து விட்டேன், நான் ஜவுளி வியாபாரம் செய்வதென்று. நீ விரும்பினால் நாமிருவரும் சேர்ந்துகூட இந்த வியாபாரம் செய்யலாம். இப்ப நான் உனக்கு ஒரு விஷயம் சொல்கிறேன் கேள். --- என்னடா இராகவ் புதிர் போடுகின்றாய். என்னவென்று சொல்லடா.........! வாருங்கள் போராடலாம் ......... 💪 .1 point
-
காற்றாடி
1 pointகாற்றாடி - அத்தியாயம் ஒன்று ---------------------------------------------- மழை இன்னும் விட்டுவிடவில்லை, ஆனால் முன்பிருந்ததை விட நன்றாகக் குறைந்து விட்டது போன்று தோன்றியது. மழையின் சத்தம் கொஞ்சம் ஓய்ந்திருந்தது. கூரையில் இருக்கும் ஓட்டைகளினூடாக வீட்டுக்குள் விழுந்து ஓடும் மழை நீர் முற்று முழுதாக அவனைச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தது. அவன் படுத்திருக்கும் இடத்திற்கு சரி மேலாக கூரையில் எந்த ஓட்டைகளும் இல்லாதபடியால், மழைநீர் அவன் மேல் இன்றும் விழுந்திருக்கவில்லை. வீட்டிலிருந்த ஒரு அகலமான மா பலகையை தரையின் மேல் போட்டு அதன் நடுவிலேயே அவன் படுத்திருந்தான். தரையில் விழுந்து தெறிக்கும் சில மழை ஒழுக்குகள் தன்னில் விழுவதை தவிர்க்க, ஒரு பக்கமாக சாய்ந்து படுத்தபடி, இரண்டு கைகளையும் இரண்டு கால்களுக்கும் இடையில் வைத்து, கால்களை வயிறு நோக்கி இழுத்து, முழு உடலையுமே குறுக்கி வைத்திருந்தான். சில மழைக் காலங்களை இதே வீட்டில் இப்படியே கடந்து வந்து விட்டபடியால், ஒழுகும் மழையை ஏமாற்றி எப்படி இரவில் தூங்குவது என்று அவன் நன்றாகவே கற்றுக் கொண்டிருந்தான். இப்படி ஏராளமான விசயங்களில் அவனுக்கு சமயோசிதமும், அறிவும் இருந்தாலும், அவனுக்கு கழுத்தில் கத்தி வைத்தாலும் வரவே வராது என்று சில விசயங்களும் இருக்கின்றன. எல்லோருக்கும் எல்லாம் வந்து விடுமா என்ன, எந்த மனிதருக்கும் சிலது வரும், சிலது வராது, சிலது வரவே வராது. அவனுக்கு வரவே வராது என்ற வரிசையில் முதலாவதாக வராமல் இருப்பது கணிதபாடம். சாதாரணமான இரண்டு தெரியாக் கணியங்களும், இரண்டு சமன்பாடுகளும் இருக்கும் கணிதம் கூட அவனுக்கு தலைச்சுற்றலைக் கொடுக்கும். அவன் போன வருடம் சாதாரணதரப் பரீட்சை எழுதியிருந்தான். எட்டுப் பாடங்களில் ஏழு பாடங்களில் சித்தி பெற்றிருந்தான். கணிதத்தில் படுதோல்வி. விஞ்ஞானத்தில் சிறப்புச் சித்தி பெற்றிருந்தான். ஆங்கிலத்தில் சாதாரண சித்தி, ஆனால் கணிதத்தில் எஃப் வந்திருந்தது. கணிதமோ அல்லது எந்தப் பாடங்களுமோ என்றுமே அவன் வீட்டில் படித்ததேயில்லை. ஊரில் இருக்கும் பாடசாலைக்கு போவான், பின்னர் வீட்டுக்கு வருவான், அவ்வளவு தான் அவனுடைய கல்வியின் எல்லையும் தேடலும். வீட்டில் எதையும் படிப்பதோ அல்லது தனியார் கல்வி நிலையங்களுக்கு போவதோ கிடையாது. மற்ற நேரங்களில் ஊர் விதானையார் போல ஊரை சுற்றிக்கொண்டு திரிவான். அவன் ஏழு பாடங்களில் நல்ல சித்திகள் பெற்றிருந்தபடியால், அவன் வீட்டில் அவனை அடுத்ததாக இன்னும் மேலே படிக்கச் சொன்னார்கள். இதுவரை அவர்களின் குடும்பங்களில், அவனின் அம்மா மற்றும் அப்பாவின் குடும்பங்கள், முதலாவதாக உயர்தர வகுப்புகளுக்கு போகும் ஆள் என்ற பெருமை எவருக்கும் கொடுக்கப்படாமல் அவனுக்காகவே காத்துக்கொண்டு கிடந்தது. கணித பாடத்தில் தவறி இருந்தபடியால், பாடசாலையில் கலை அல்லது வர்த்தகப் பிரிவுக்கு அவனைப் போகச் சொன்னார்கள். அதுவும் கூட அடுத்து நடக்கும் சாதாரண பரீட்சையில் கணித பாடத்தில் சாதாரண சித்தியையாவது அவன் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனையுடன். அரைக்காற்சட்டையில் இருந்து அப்போது தான் முழுக்காற்சட்டைக்கு மாறியிருந்தான். வெள்ளை நிற முழுக்காற்சட்டை. அதை தைக்கும் தையல் கடைக்காரர் அவனின் அப்பாவிற்கு மிகவும் தெரிந்தவரே. பாடசாலைக்கு தேவையானது போலவும் இல்லாமல், அன்றைய நாயகர்களின் அகன்ற கால்கள் உடையது போலவும் இல்லாமல், இரண்டுக்கும் மத்தியில் ஒன்றை தைத்துக் கொடுத்திருந்தார் அந்த தையல்காரர். அவனின் ஆலோசனை தான் அது. அந்த முழுக்காற்சட்டையுடன் முதன்முதலாக பாடசாலை போயிருந்த போது, அப்பொழுது தான் கணிதபாடத்தில் சித்தி அடையவே வேண்டும் என்று பாடசாலை அதிபர் சொன்னதற்கு, உடனேயே தலையை ஆட்டியிருந்தான். உயர்தர வகுப்பில் படிக்கின்றோம் என்பதே அவனுக்கு ஒரு நிமிர்வைக் கொடுத்திருந்தது. ஒன்று அல்லது இரண்டு அப்பியாசக் கொப்பிகள் மட்டும், அதையும் சைக்கிளின் பின் பக்கத்தில் வைத்துக் கொண்டு, ஏதோ சில மணிநேரங்கள் பாடசாலைக்கு போய் வருவது நல்ல ஒரு அனுபவமாகவே அவனுக்கு இருந்தது. அப்படியே அருகிலேயே இருக்கும் தனியார் கல்வி நிலையத்திலும் சேர்ந்திருந்தான். பாடசாலை விட்டு வந்தவுடன் தனியார் கல்வி நிலையத்திற்கு போய்விடுவான். அங்கே போய் அதை நடத்திக் கொண்டிருப்பவருக்கு ஒத்தாசையாகவும் நின்றுகொள்வான். தனியார் கல்வி நிலையத்திற்கு என்று வெள்ளையில் இல்லாத இன்னொரு முழுக்காற்சட்டை, 'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் கமல் போட்டு வருவதைப் போன்ற ஒன்று, வைத்திருந்தான். அவனுடைய சித்தப்பா ஒருவர் பெறாமகன் பெரிய படிப்புகள் படிக்கின்றானே, தான் எதையாவது செய்தே ஆகவேண்டும் என்று, இந்த இரண்டாவது முழுக்காற்சட்டைக்கான செலவைப் பொறுப்பேற்றிருந்தார். அதுவே சித்தப்பா முறை என்றபடியால் அவன் வீட்டில் ஒத்துக் கொண்டிருந்தார்கள். இதையே ஒரு மாமன் முறை உள்ளவர் செய்யக் கேட்டிருந்தால், அவன் வீட்டில் ஒத்துக் கொண்டிருக்கவேமாட்டார்கள். இதுவே ஒரு கடமையாகி, அது எங்கே போய் முடியுமோ என்ற பலமான ஒரு காரணம் இதன் பின்னால் இருந்தது. அவனுக்கு சொந்தத்தில் ஏழு எட்டு மச்சாள்மார்கள் இருந்தனர். இன்று இப்பொழுது விடியப் போகும் காலையில் சாதாரணதர கணிதபாட பரீட்சை. மழை தொடர்ந்து மூன்று நாட்களாக பெய்து கொண்டிருந்தது. போன தடவை அவன் கணிதபாட பரீட்சை எடுத்ததிற்கும், இன்றைக்கும் ஏதாவது வித்தியாசங்கள் இருக்கின்றதா என்ற யோசனை அவன் மனதில் ஓடியது. போன தடவை மழை பெய்யவில்லை என்பதைத் தவிர வேறு எதுவும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை. இந்த காலப்பகுதியில் அவன் ஒரு நாள் கூட கணிதம் படித்திருக்கவில்லை. போன தடவை வந்த அதே பரீட்சை முடிவு தான் இந்த தடவையும் வரப் போகின்றது என்பது தெளிவாகவே அவனுக்கு தெரிந்தது. இப்பொழுது என்ன செய்யலாம் என்று நினைத்தபடியே நிமிர்ந்துபடுத்தான். நிலத்தில் விழுந்த மழை ஒழுக்கு ஒன்று தெறித்து அவன் முகத்தில் வந்து விழுந்தது. அது விழுந்த இடம் சில்லென்று குளிர்ந்தது. (தொடரும்....................)1 point
-
"மனமே கலங்காதே!" & "இயற்கையின் இன்ப அழகில்"
"மனமே கலங்காதே!" & "இயற்கையின் இன்ப அழகில்" "மனமே கலங்காதே!" "மனமே கலங்காதே உறுதியாக இருந்திடு தினமும் நடப்பதை விழிப்புடன் கவனித்திடு! ஈனப் பிறவிகளென யாரும் இல்லை இனம் சார்ந்த நடவடிக்கைகள் ஒழியட்டும்!" "குணம் நாடிக் குற்றமும் ஆராய்ந்து மணம் வீசும் செயல்கள் தொடரட்டும்! எண்ணம் எல்லாம் மனிதம் வளர்க்க பண்பாடு நிலைத்து மனது மலரட்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ..................................................................... "இயற்கையின் இன்ப அழகில்" "இயற்கையின் இன்ப அழகில் மலர்ந்தவளே மயக்கத்தின் பிடியில் உலகை மறந்தவளே தயக்கம் கொண்டு வெட்கப் படுபவளே அயலவர் உள்ளங்களில் அன்பு விதைத்தவளே வியக்க வைக்கும் விழிகள் கொண்டவளே பயம் வேண்டாம் மனம் கலங்காதே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
1 pointஅதிமுக கடந்த முறை பெற்;ற வாக்குகள் 46000 அதில் வாக்களிக்காத 15000+5000 நோட்டா அனைத்த்தும் அதிமுகவாக்குகள் என்று வைத்துக்கொண்டாலும் மிகுதி 26000 வாக்குகளில் 14000 வாக்குகள் நாதக வுக்கு விழுந்தது என்று எடுத்துக் கொண்டாலும் மிகுதி 12000 வாக்குகள் எங்கே. குறிப்பு இங்கே பிஜேபிக்கு விழுந்த வாக்குகள் செர்க்கப்பட வில்லை. அந்த வாக்குகளும் எங்கே எல்லாம் திமுகவுக்குத்தானே விழுந்திருக்கிறது.1 point
-
பள்ளியறை எங்கும் பாலியல் கறைகள்; வேடிக்கை பார்க்கும் தி.மு.க. அரசு – சீமான் கண்டனம்
மனிதன் தன்னை செழுமைப்படுத்திக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் விலங்குகளிடம் உள்ள ஒழுக்கமாவது இருக்கவேண்டும்!1 point
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
1 pointநாதக பெற்ற வாக்குகளில் கணிசமான பாஜகவின் வாக்குகள் இருக்கிறது, அதே போல் திமுக பெற்ற வாக்குகளில் கணிசமான அதிமுக வாக்குகள் உள்ளன. இடைத் தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் பொது தேர்தலில் எதிரொலிக்காது. எனக்குள்ள ஒரே சோகம், ஏமாற்றம், ஆதங்கம், கவலை, வருத்தம் எல்லாமே, 2 பேர் போட்டியிட்டப்பக்கூட அண்ணனால் கட்டுத்தொகை பெறமுடியவில்லையே. நாதியற்றா போனார் சங்கி சைமன்?1 point
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
1 point👍.............. அதிமுக போட்டியிட்டு இருக்கவேண்டும். இடைத் தேர்தலை வெல்ல முடியாது, ஆனால் திமுகவிற்கு எதிராக இருக்கும் ஒரேயொரு மாற்று நாங்களே என்று அது தமிழ்நாடு முழுவதற்கும் சொல்லும் ஒரு செய்தியாக அமைந்திருக்கும். ஏற்கனவே தேய்ந்து தேய்ந்து போய்க் கொண்டிருக்கும் ஒரு கட்சி இப்பொழுது இன்னும் சிதறிப் போய்விட்டது. இதில் விஜய் வேறு அடுத்த தேர்தலில் புதிதாக உள்ளே வருகின்றார்..............1 point
-
கனடா மீதான வரி விதிப்பு நிறுத்தி வைப்பு: டிரம்பின் இந்த திடீர் மன மாற்றத்துக்கு என்ன காரணம்?
1 pointஇனி வரும் வாரத்தில் இருந்து கனடாவோ, மெக்சிக்கோவோ அல்லது உலகில் எந்த நாடுமோ அமெரிக்காவிற்கு ஒரு முக்கிய பிரச்சனை இல்லை. அமெரிக்காவின் அவசரப் பிரச்சனை இனி உள்நாட்டில் தான். எட்டு மாத சம்பளம் கொடுக்கின்றோம், வேலையை விட்டுப் போங்கள் என்று சொன்ன பின்னும், 40000 பேரே மத்திய அரசின் வேலையிலிருந்து விலகியிருக்கின்றார்கள். அவர்கள் ஏற்கனவே இந்த வருடம் ஓய்வடையும் நிலையில் இருந்தவர்கள் தான் என்கின்றனர். அவர்கள் போகும் போது போனஸுடன் போகின்றார்கள். ட்ரம்பும் எலானும் கொடுத்த கெடு முடிந்துவிட்டது. ஆனால், ட்ரம்பும் எலானும் எதிர்பார்த்த 200000 பேர்கள் வேலையை விட்டுப் போகவில்லை. வழக்குகள் தான் போட்டிருக்கின்றார்கள். நீதிபதிகளும் அரசின் நடவடிக்கைகளுக்கு தடை உத்தரவுகளை போட ஆரம்பித்திருக்கின்றார்கள். வேறு சில விடயங்களிலும் இப்படி நீதித்துறையும், அரசும் முரண்டுபட்டுக்கொண்டு நிற்கின்றது. நான் என்ன வழக்கு போடலாம் என்று எனக்கே ஒரு யோசனை வருகுது என்றால் பாருங்களேன்................🤣.1 point
-
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
அப்படி நீங்கள் பலடி அடிக்காது வாழ்ந்தால்தான் அதிசயம். இங்கிலீஸ் காரன் அதை ஒரு மொழியாகத்தான் பார்க்கிறான் அரைகுறைகள்தான் அதை அறிவாக பார்க்கிறார்கள். இந்த திரி முழுதுமே நீங்கள் செய்தது தனிமனித தாக்குதலதான் ஒரு உருப்படியான கருத்துகூட இல்லை. இந்த லட்ஷணத்தில்தான் தகுதி அறிவு பற்றியெல்லாம் பேசி இருக்கிறீர்கள்.1 point
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
1 pointஇதே தொகுதியில் நடந்த கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில்: நாதக 14000 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கின்றது திமுக 5000 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கின்றது நோட்டா 6000 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கின்றது கடந்த தேர்தலில் வாக்களித்த ஏறக்குறைய 16000 பேர் இந்த தடவை வாக்களிக்கவில்லை. இது மொத்தமாக 41000 என்று வருகின்றது. கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு கிடைத்த வாக்குகள் 44000. அதிமுக தான் கவலைப்பட வேண்டும். மற்ற எல்லாம் இருந்த இடத்திலேயே இருக்கின்றது.1 point
-
வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான மாதம் ‘ஜனவரி’
கந்தையா57 அவர்களே! நீங்கள் கிருபன் அவர்களின் பதிவைப் பார்கவில்லையா?1 point
-
மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
அய்யகோ நான் என் செய்வேன், எனது வாக்கு பொய்த்து போனதே!!!1 point
-
காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
கேட்டுத் தொலைக்க வேண்டியிருக்கிறது. sudumanalNovember 4, 2023 அமெரிக்க ஜனநாயகத்தின் இழிநிலைகளில் ஒன்று இப்போ காஸா குறித்து ட்றம்ப் முன்மொழிகிற திட்டம். ஒருவரது பூர்வீக நாட்டை போரினாலும் ஆக்கிரமிப்பினாலும் திட்டமிட்ட குடியேற்றத்தாலும் தமதாக்கிக் கொள்ளலாம் என்ற காலனிய அதிகார மமதைதான் அது. அது ஒன்றும் புதிதல்ல. அமெரிக்கா என்ற நாடே அப்படித்தான் உருவாகியது. கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து என வேறும் முன்னுதாரணங்கள் இருக்கின்றன. காஸாவின் இடத்தில் அதன் பூர்வீக மக்களை துடைத்தழித்து இஸ்ரேலை அகலக் கால்பதிக்க வைப்பதும் அதே காலனிய முறைமைச் சிந்தனைதான். இன்னும் ஒருபடி போய் காஸாவின் கடல்சார் பகுதியை அண்டி அதை உல்லாசப்பிரயாண நிலமாக (மத்திய கிழக்கின் rivera வாக) ட்றம்பின் றியல் எஸ்ரேற் மருமகன் (யறெட் குஸ்னர்) இன் திட்டத்துக்கான நிலமாக மாற்ற முயற்சிக்கிற இழிநிலை அது. இது பல்கட்சி ஆட்சிமுறை ஜனநாயகத்தை செழிக்கப் பண்ணும் என்ற விதியை கேலிசெய்வதாக அமைகிறது. காஸா மனிதர்கள் உயிர்வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நிலமாம். வாழத் தகுதியில்லாத நிலமாம். துயர நிலமாம். அழிவுகளின் கூடாரமாம். அமெரிக்கக் குண்டுகளினால் இடிபாடாக்கப்பட்ட நிலத்தைப் பார்த்து அமெரிக்க சனாதிபதி இப்படியெல்லாம் சொல்கிறார். குண்டுகள் தானாக அமெரிக்க களஞ்சியத்திலிருந்து பறந்து வந்துதானே மக்களைக் கொன்றது! இவளவு இஸ்ரேலியக் குண்டுவீச்சுக்குள்ளும் மனிதவதைகளினுள்ளும் உணவு, நீர், மின்சாரம் என எல்லாவற்றையும் கட்டுப்படுத்தி வதைத்தும், கூட்டமாக ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு காஸாவுக்குள் துரத்தி அலையவிட்டும்கூட இன்னமும் அந்த மண்ணில் மக்கள் வாழ்கிறார்கள். வாழ்வை மீண்டும் கட்டியமைக்க அவர்கள் கட்டியமைக்கும் நம்பிக்கையோடு இடப்பெயர்வுகளிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இது எமது நிலம். இங்கிருந்து போக மாட்டோம் என்கிறார்கள். அது வாழத் தகுந்த நிலமா இல்லையா என்பதை அவர்கள் இரத்த சாட்சியாக உலகத்தின் முன் நிரூபித்திருக்கிறார்கள். அதை அமெரிக்காவோ இஸ்ரேலோ தீர்மானிப்பது ஜனநாயகமா என்ன. ஐநா உட்பட உலகின் பெரும்பான்மை நாடுகளும் சமூகப் புத்திஜீவிகளும் இந்த பழைய காலனிய ஒழுங்கின் மீள்வரவை எதிர்த்து கருத்துச் சொல்லியபடி இருக்கிறார்கள். ஜேர்டானும் எகிப்தும் இந்த 2 மில்லியன் பலஸ்தீன மக்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ட்றம் கட்டளையிடுகிறார். அந் நாடுகள் மறுத்திருக்கின்றன. நெத்தன்யாகுவோ சவூதி அரேபியாவிடம் பெரும் தரிசு நிலங்கள் இருப்பதாகவும் அங்கு பலஸ்தீன நாட்டை அமைத்துக் கொள்ளலாம் என இன்னொரு கோமளித்தனத்தை முன்வைக்கிறார். இவ்வாறு ட்றம்ப் இன் அறிவித்தல்கள் வெளிவந்தபடி இருக்கின்றன. அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி தன்னும் இதற்கு எதிராக மூச்சு விடவில்லை. இது ஏன்?. பல்கட்சி ஆட்சிமுறை என்பது ஜனநாயகக் கட்டமைப்பில் அவசியமான ஒரு முறைமைதான். அது deep state நிலவுகிற அமெரிக்கா போன்ற நாடுகளில் எதையும் பிடுங்காது. ஏனெனில் அந்த deep state தான் வெளிநாட்டுக் கொள்கையை மாறாமல் வைத்திருக்கவோ அதன்வழியில் இற்றைப்படுத்தவோ செய்கிறது. அரசாங்கங்கள் அல்ல. அது பலம்படைத்த உளவு நிறுவனங்கள், பெரும் பணக்காரர்கள், சியோனிச லொபிகள், இலுமினாட்டிகள், இனமேலாதிக்க புத்திசீவிகள் போன்றவர்களால் state என்பது deep state வடிவம் எடுக்கிறது. அமெரிக்கா உலகம் பூராக நடத்திய போர்கள் இரு கட்சிகளாலும் நடத்தப்பட்டன. பல கட்சி ஆட்சிமுறையின் பன்மைத்துவம் என்பதை அந்த அரசு வடிவம் பொய்மையாக்கிவிடுகிறது. சுவிஸ் போன்ற நாடுகளில் பல்கட்சி ஆட்சிமுறை மேன்மைப்பட்ட நிலையில் இருப்பதற்குக் காரணம் இந்த deep state அற்ற தன்மைதான். 7 பேர் கொண்ட உயர் சபைதான் சுவிஸை ஆள்கிறது. அதுவும் ஒவ்வொரு வருடம் ஒவ்வொரு தலைவராக தேர்வு அடிப்படையில் வருகிறார்கள். மக்களுக்கான நேரடி ஜனநாயகம் கொண்டதாகவும் இருக்கிறது. சில விமர்சனங்கள் இருக்கிறபோதும் அந்த முறைமை பயனளிக்கும் வகையிலேயே செயற்படுகிறது. இந்த deep state முறைமைதான் இருபெரும் வல்லரசாக இருந்த அமெரிக்கா சோவியத் யூனியனுக்கு இடையில் சமாதானம் என்பதை நிலைநாட்டிய கெனடியைக் கொன்றொழித்தது. 1962 இல் சோவியத் யூனியனின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் துருக்கியில் அமெரிக்கா நிறுவிய (அணுவாயுதம் உட்பட்ட) தளத்துக்கு எதிர்வினையாக சோவியத் யூனியன் கியூபாவில் அணுவாயுத்தை நிறுவியது. அப்போது அதற்கெதிராக நடவடிக்கை எடுக்க சிஐஏ கெனடியை வற்புறுத்தியோது அதை அவர் மறுத்தார். சமாதான முயற்சியை முன்வைத்தார். அவரும் குருச்சேவ் உம் பேசித் தீர்த்துக் கொண்டார்கள். துருக்கியிலிருந்தும் கியூபாவிலிருந்தும் அணுவாயுதங்கள் திரும்பப் பெறப்பட்டன. அது அமெரிக்க deep state இனை மீறிய செயலாக அமைந்ததால் அவர் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. உலகம் முழுவதுமான ஆட்சிக் கவிழ்ப்புகள், போர்கள், தலைவர்களை கொலை செய்தல் என இயங்குகிற deep state இன் முக்கிய தூண்கள் சிஐஏ உம் எப்.பி.ஐ உம் ஆகும். இப்பே ட்றம்பின் வருகைக்குப் பின் ஒரு சுவாரசியமான முரண் எழுந்துள்ளது. ட்றம் deep state க்கு எதிரானவராக இருக்கிறார். state என்ற வடிவத்தை அவர் பேண விரும்புகிறார். அதேநேரம் ஜனாதிபதிக்கான அதிகாரத்தை முழு அளவில் தனது கையில் மட்டுமே வைத்திருக்க விரும்புகிறார். சிஐஏ இலிருந்து பலரை வேலைநீக்கம் செய்திருக்கிறார். அந்த கட்டமைப்பினுள் ஊழல் நிலவுவதாகவும் பெருமளவு நிதியை அது விழுங்குகிறது என்றும் வெளிப்படையாக குற்றம் சுமத்துகிறார். தனது முதலாவது ஆட்சிக் காலத்தின்போது தன்னை சுயாதீனமாக இயங்க விடாமல் செய்தது என்கிறார். இருந்தபோதும் அதையும் மீறி இந்த deep state வடிவத்துக்கு எதிராக அவரது முதல் ஆட்சிக்காலத்திலும் இருந்திருக்கிறார். அதனால் அவர் போர் எதையும் செய்யவில்லை. புட்டினோடு உறவாக இருந்தார். வடகொரியாவுக்கு விஜயம் செய்தார். இம்முறை ட்றம் கையில் எடுத்திருப்பது பொருளாதாரப் போரைத்தான். சீனாவினதும் ப்ரிக்ஸ் அமைப்பினதும் வளர்ச்சி அமெரிக்க பொருளாதாரத்தை சாய்த்துவிடலாம் என்ற அச்சம் அது. மீண்டும் அமெரிக்காவை மேல்நிலையில் நிறுத்துவேன் என்று சபதம் எடுத்திருக்கிறார். இந்தப் பொருளாதாரப் போர் அரசியல் போர்களில்தான் முடியும் என பொருளாதார நிபுணரும் அரசியல் விஞ்ஞானியுமான ஜெப்ரி சக்ஸ் கூறுகிறார். சீனாவின் பொருளாதாரத்தை வீழ்த்த ட்றம்ப் தாய்வானை இன்னொரு உக்ரைனாக மாற்றும் நிலைக்கு கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது. deep state இனை மறுத்து, அதற்கு பதிலீடாக தனிப்பெரும் தலைவராக தன்னிச்சையாக முடிவுகள் எடுத்து ட்றம்ப் செயற்படுவதும்கூட ஒன்றும் ஜனநாயகப் பெறுமதியைத் தரப்போவதில்லை. எல்லாம் ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள்தான். பொருளாதாரப் போர் அரசியல் போராக பரிணமிக்கும நிலைக்கு சாத்தியம் இருப்பதால், deep state முறைமைக்கும் ட்றம்ப் க்குமுள்ள முரண்பாடுகள் புஸ்வாணமாகியும் போகலாம். கனடா, மெக்சிக்கோ, சீனா என தொடங்கும் மோசமான வரிவிதிப்பு ஐரோப்பிய ஒன்றியத்தையும் வந்தடையலாம் என ஏற்கனவே தயார்ப்படுத்தல்கள் ஆரம்பமாகிவிட்டன. டென்மார்க்கின் கிர்ின்லாண்ட் இனை வாங்க அல்லது அழுத்தம் கொடுத்து தனதாக்க ட்றம் புற்பட்டிருக்கிறார். பனாமாக் கால்வாயை மீள எடுக்கப் போகிறோம் என்கிறார். யமேய்க்கா BRICS இல் சேர தடைவிதிக்கிறார். தென்னாபிரிக்காவில் காணிச் சீர்திருத்த சட்டத்தை பயங்கரமானது என வர்ணித்து அந்த அரசுக்கு எச்சரிக்கை விடுகிறார். ட்றம்பின் வலதுகையும் தென்னாபிரிக்காவில் பிறந்தவருமான எலான் மஸ்க் இந்தச் சட்டத்தை இனவெறிச்சட்டம் என கேலிக்குரிய வியாக்கியானம் கொடுத்திருக்கிறார். 7.7 வீத வெள்ளையர்கள் தென் ஆபிரிக்காவின் 78 வீதமான விவசாய நிலங்களை சொந்தமாகக் கொண்டிருக்கின்றனர். நெல்சன் மண்டேலா சாதித்த அரசியல் விடுதலை காலத்திலிருந்து இன்றுவரை காணி மீள் பகிர்தல் என்பதை எந்த தென்னாபிரிக்க அரசும் சாத்தியமாக்க முடியாமல் திண்டாடுகிறது. அந்தளவுக்கு வெள்ளையின அதிகாரம் தென்னாபிரிக்க அரசுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்நிலையில் இப்போ தென்னாபிரிக்க அரசு கொண்டுவந்திருக்கிற காணிச் சீர்திருத்தச் சட்டத்தை இனவெறிச் சட்டம் என்று மஸ்க் சொல்வதையெல்லாம் கேட்டுத் தொலைக்க வேண்டியிருக்கிறது. https://sudumanal.com/2025/02/07/கேட்டுத்-தொலைக்க-வேண்டிய/1 point
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வேண்டாம் . ........ நானும் கலந்து கொள்வேன் .......இப்போ சிறிது களைப்பாக இருக்கிறது .....இரண்டொரு நாளில் சந்திக்கலாம் . ........! 😁1 point
-
கருத்து படங்கள்
1 point1 point
- அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
இந்த தமிழ் அடியான் ஆரம்பத்தில் புலி/தமிழ்தேசிய ஆதர்வு வீடியோக்கள் போட்டவர் ..பின்னர் அர்ஜுனா ,,,லண்டனில் வாழ்ந்து கொண்டு 24 மணித்தியாலமும் யூ டியுப் பைத்தியமாக இருந்தால் எப்படி வருமானம் வரும்...சிங்கள புலம்பெயர்கள் இவருக்கும் அர்ஜூனாவுக்கும் பணம் கொடுக்கினமோ?1 point- 1/12/2003 இலிருந்து 8/09/2004 வரையான காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற முக்கிய அரசியல் நிகழ்வுகள் குறித்த குறிப்புக்கள் - த.சபாரட்ணம்
பேச்சுவார்த்தைகளைத் தடம்புரளச் செய்ய பாராளுமன்றத் தேர்தல்களைக் கோரும் மக்கள் விடுதலை முன்னணியும், புலிகள் பலம்பெற்று விடுவார்கள் என்பதனால் தேர்தல்களை எதிர்க்கும் இந்தியாவும் தை 12, 2004 இலங்கையில் இருந்துவரும் பிரச்சினையின் உண்மை முகத்தினை தமது இரகசிய காய்நகர்த்தல்கள் மூலம் சர்வதேசத்திடம் இதுவரை எடுத்துக் காட்டிவந்த புலிகள் தற்போது வெளிப்படையாகவே அதனை வெளிக்கொணரும் செயற்பாடுகளில் இறங்கியிருக்கின்றனர். இலண்டனில் தங்கியிருக்கும் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தைச் சந்திக்கச் சென்ற மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், அமைச்சருமான சந்திரசேகரனிடம் பாலசிங்கம் பேசும்போது, தமிழர்களின் உரிமைகளை அவர்களுக்கு வழங்குவதில்லை என்பதில் சிங்கள இனவாதக் கட்சிகளுக்கு இடையே இருக்கும் போட்டியே தமிழர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்டது என்பதை தற்போது புலிகள் சர்வதேச நாடுகளிடமும், இலங்கையின் இனப்பிரச்சினையில் அக்கறை கொண்ட சர்வதேச அமைப்புக்களிடமும் தாம் வெளிப்படையாகத் தெரிவித்து வருவதாகக் கூறியிருந்தார். சந்திரசேகரனிடம் பேசிய பாலசிங்கம், சர்வதேச நாடுகளிடம் புலிகள் நான்கு விடயங்கள் குறித்து பேசிவருவதாகக் குறிப்பிட்டார். முதலாவது, அரசாங்கம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை மீறினாலும், தாம் தொடர்ந்தும் அதனைக் கடைப்பிடிக்க விரும்புகிறார்கள் என்பது. இரண்டாவது, தாம் சமாதானப் பேச்சுக்களை மீளவும் ஆரம்பிக்க ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்பது. மூன்றாவது பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்படும் முடிவுகளை நடைமுறைப்படுத்தவும், சிக்கலான விடயங்கள் தொடர்பாக அழுத்தமின்றி தீர்மானங்களை எடுக்கவும் வல்லமை கொண்ட சிங்களத் தலைவருடன் மட்டுமே தம்மால் பேசமுடியும் என்பது. நான்காவது, சர்வதேசத்துடன் தாம் நெருங்கிச் செயற்பட ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது. மேலும், தமிழர்களின் பிரச்சினையினை தேசியப் பிரச்சினையாகக் கருதி, தமது அரசியல்ப் போட்டிகளைக் கைவிட்டு, பிரச்சினைக்கான தீர்வினை இதய சுத்தியுடன் வழங்க முன்வருமாறு சிங்களத் தலைமைமீது சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று புலிகள் கேட்டிருந்தார்கள். சிங்களவர்களின் நலன்களைப் பேணுவதில் மற்றைய கட்சியைக் காட்டிலும் தாமே சிறந்தவர்கள் என்பதைக் காட்டுவதிலேயே சிங்களத் தலைமைகள் ஆர்வம் காட்டுவதாகவும், இதனாலேயே தமிழர்களின் பிரச்சினையினைத் தீர்ப்பதற்காக சமாதான வழிகளில் இதுவரை எடுக்கப்பட்டுவந்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்திருப்பதாகவும் புலிகள் சர்வதேசத்திடம் சுட்டிக் காட்டியிருக்கின்றார்கள். புலிகளின் அரசியல்த்துறையின் பொறுப்பாளர் புலித்தேவன், கடந்த சனிக்கிழமை முதல் கொழும்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்து, கிளிநொச்சியில் தமிழ்ச்செல்வனுடன் வருகிற வார இறுதியில் நடைபெறவிருக்கும் கலந்துரையாடல்களில் கலந்துகொள்வதற்கான அழைப்பிதழ்களைக் கொடுத்து வருகிறார். "இதுவரை சாதகமான பதில்களே எமக்குக் கிடைக்கப்பெற்றிருக்கின்றன" என்று புலித்தேவன் கொழும்பு ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். "நாம் பேரம்பேசல்களினூடாக நிரந்தர சமாதானத்தையே விரும்புகிறோம். எமது தாயகத்தில் ஏற்பட்டிருக்கும் அழிவுகளில் இருந்து எமது மக்களை மீட்டெடுப்பதற்கான புணருத்தாபன மற்றும் மீள்கட்டுமான பணிகளை ஆரம்பிப்பதற்கு எமது கைகளில் இடைக்கால நிர்வாக சபை எனும் அமைப்பு இருப்பது ஏன் அவசியமானது என்பதையும் அவர்களிடம் எடுத்துரைத்து வருகிறோம்" என்றும் புலித்தேவன் கூறினார். ஆனால் சிங்களத் தலைமைகளோ நாட்டின் இனப்பிரச்சினையினைத் தீர்ப்பதற்குக் கைகோர்ப்பதாகத் தெரியவில்லை. அவர்களுக்கிடையிலான பலப்போட்டி மேலும் மேலும் அதிகரித்தே செல்கிறது. இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினரின் முக்கிய கோரிக்கையான பாராளுமன்றத் தேர்தல்கள் குறித்தே சந்திரிக்காவும் ரணிலும் தற்போது சிந்தித்து வருகின்றனர். மக்கள் விடுதலை முன்னணியினரின் பிரச்சரச் செயலாளர் விமல் வீரவன்ச கொழும்பில் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது சமாதான முயற்சிகளுக்கெதிரான நிலைப்பாடு சிங்கள மக்களிடையே அதிகரித்து வருவதாகவும், ஆகவே தொடர்ந்தும் பேச்சுக்கள் இடம்பெறவேண்டுமா - இல்லையா என்பதனை அறிந்துகொள்வதற்கான மக்கள் ஆணையாக பாராளுமன்றத் தேர்தல்கள் அமையும் என்றும் கூறினார். தற்போது பாராளுமன்றத்தில் வெறும் 16 உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருக்கும் இவ்வினவாதக் கட்சியினர் வருகின்ற தேர்தல்கள் ஊடாக அவ்வெண்ணிக்கையினை 35 ஆக உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கின்றனர். இதனூடாக பாராளுமன்றத்தில் அரசியல்த் தீர்மானங்களில் தாம் கணிசமான தாக்கத்தினைச் செலுத்தமுடியும் என்றும் நம்புகின்றனர். பாராளுமன்றத் தேர்தல்களை தற்போது நடத்துவதனால் நாடு கடந்த வருடம் அடைந்திருக்கும் பொருளாதார வளர்ச்சி கடுமையான சரிவைச் சந்திக்கும் என்று வர்த்தக அமைப்புக்களின் தலைவர்கள் அரசை எச்சரித்து வருகின்றனர். நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் அமைதியான சூழ்நிலைகளாலும், வர்த்தக முதல்லிடுகளில் காட்டப்பட்ட உற்சாகத்தினாலும் நாட்டின் பொருளாதாரம் 5.6 வீதத்தினால் கடந்த ஆண்டு வளர்ச்சி கண்டிருந்தது. ஆனால் இது அனைத்துமே தெற்கில் ஏற்பட்டிருக்கும் அரசியல்ப் போட்டியினால் கடுமையான தாக்கத்தினைச் சந்தித்திருக்கின்றன. பாராளுமன்றத் தேர்தல் ஒன்று தற்போது நடைபெறும் பட்சத்தில் மக்கள் விடுதலை முன்னணியினரின் கை ஓங்கும் என்றும், இதனால் இலங்கையில் எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் சர்வதேச முதலீடுகள் குறைவடையலாம் என்றும் கணிக்கப்படுகின்றது. பாராளுமன்றத் தேர்தல்கள் நடத்தப்படுவதை இந்தியாவும் விரும்பவில்லை என்றே தெரிகிறது. புலிகளால் ஆதரவளிக்கப்படும் இணைந்த தமிழ்க் கட்சிகளின் கூட்டணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தேர்தல்களில் அதிக ஆசனங்களைப் பெறுவதை இந்தியா விரும்பவில்லை என்றே தெரிகிறது. இந்திய உளவு அமைப்பான ரோவின் தகவல்களின்படி சுமார் 35 முதல் 40 வரையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இத்தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. இதனூடாக புலிகளின் கை ஓங்குவதோடு, தனித்தனியாக இருக்கும் தமிழ்கட்சிகளின் ஊடாக தனது அழுத்தத்தினை இலங்கையில் செலுத்தமுடியும் என்கிற இந்தியாவின் எதிர்பார்ப்பும் இதனால் அழிந்துபோகும் வாய்ப்பிருக்கிறது. இஸ்லாமாபாத்தில் ஜனாதிபதி சந்திரிக்காவைச் சந்தித்த இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இலங்கையில் தற்போது பாராளுமன்றத் தேர்தல்கள் நடப்பதனை இந்தியா விரும்பவில்லை என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார். வருகிற 19 ஆம் திகதி கொழும்பு வரும் ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசி, சந்திரிக்கா, ரணில் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோருடன் பேச்சுக்களில் ஈடுபடவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் 23 ஆம் திகதி இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்திலும் அவர் பங்கெடுக்கிறார். சிங்களத் தலைமைகள் மீது சர்வதேசம் அழுத்தம் கொடுக்கும் ஒரு சந்தர்ப்பமாகவும் இது பயன்படுத்தப்பட வாய்ப்புக்கள் இருக்கின்றன.1 point- இன்னொரு சக்கரவர்த்தி
1 point- வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
1 pointகீழுள்ள அகழியின் கரையோடு ஒரு காதல் ஜோடி கைகளால் இடைதழுவியபடி தனிமை நாடித் தனியிடம் தேடி நடக்கின்றது. கவலைப் படாதீங்க...இதைப் பார்க்கத்தன் விடாப்பிடியாகத் தொடருகின்றோம்☺️1 point- காற்றாடி
1 pointஇவர்கள் எல்லோரும் எனக்கும் தெரிந்தவர்களே.............! ஆனால், கணேசலிங்கம் மாஸ்டரிடம் மட்டுமே படித்தேன். மற்றவர்களிடம் ஏன் போகவில்லை என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு என்று நினைக்கின்றேன் - ஒரு நோக்கமோ அல்லது வழிகாட்டலோ இருக்கவில்லை. அதைவிட முக்கியமாக பந்தடி மேல் இருந்த விருப்பம். அதிகாலையில் தீருவில் மைதானத்தில் பந்தடிப்பார்கள். அந்த நேரத்தில் தான் இந்த ஆசிரியர்களின் வகுப்புகளுக்கு நண்பர்கள் போய் வந்தார்கள். பூவா தலையா போட்டுப் பார்க்காமலேயே, நான் பந்தடி என்று முடிவு செய்துகொண்டேன். என் அதிர்ஷ்டம் எனக்குத் தெரிந்த கேள்விகளே பரீட்சைகளில் வந்தன.................. 'Slumdog Millionaire' படத்தை பார்த்த போது இது நல்லாவே விளங்கியது................🤣. 'நூறு டாலர் நோட்டில் யார் இருக்கின்றார்கள் என்ற கேள்வியைக் கேட்காமல், வேறு ஏதாவது ஒரு நோட்டில் யார் இருக்கின்றார்கள் என்று கேட்டிருந்தீர்கள் என்றால், எனக்கு அதற்கு பதிலே தெரியாது...............' என்பது போல ஒரு காட்சி அந்தப் படத்தில் வரும். நம்ம வாழ்க்கை இது என்று தோன்றியது...............🤣.1 point- கனடா மீதான வரி விதிப்பு நிறுத்தி வைப்பு: டிரம்பின் இந்த திடீர் மன மாற்றத்துக்கு என்ன காரணம்?
1 pointஅப்ப நைக்கி,போலோ போன்ற பெயர்பெற்ற உடுப்புகள் போட முடியாதா? தனியே கிப்ஸ்சோடு நிற்க வேண்டியது தான்.1 point- மாவையின் வீட்டில் பொலிஸார் விசாரணை!
இல்லை இல்லை அவர் phd. பனியன் ஒவ் த ஹையஸ்ட் டிகிரி. Paniyan of the highest degree🤣.1 point- காற்றாடி
1 pointஓஎல் காலம்தான்...பிரக்ரிக்கலுக்கு லாப் போகவேணும்..இரசாயன வாத்தியார்..படிச்சு படிச்சு பொசுபரசு பற்றி விளங்கப் படுத்திவிட்டுத்தான் ..லாப் போக விட்டவர்..அங்கு பொசுபரசு தண்ணீரில் இருந்தால் எரியாது...வெளியில் இருந்தால் தீப்பற்றும் ..என்று உதாரணங்களுடன் விளங்கப் படுத்தியும் ...பிரக்டிக்கல் முடிய இரண்டுபாவிகள்...முடிந்தபொசுபரசை அமத்திப் போட்டங்கள்... அடுத்தபாடம் வகுப்பில்...உயிரியல்பாடம் வாத்தியார் படங்கீறி விளக்க..ஒருதனின் புத்தகத்துகீழை புசு புசு என்று நெருப்பு...பக்கத்து மேசை நான்.. நெருப்பை கண்ட மற்றவன் ..தீயணைப்பு படைவீரன் மாதிரி..பாய்ந்து சீ.ஆர் கொப்பியால் அடிக்க ..பறந்த பொசுபரசு..வலது புறங்கையில் ஆழமாக எரித்துவிட்டது...அதிபரின் காரில் காரில் ஆசுப்பத்திரிபோய் ..இரண்டுநாள் வாசம்...ஒழித்தவனும் இப்ப கனடாவில்...சூடு பட்டவனும் இப்ப கனடாவில்தான் இருக்கிறம்..இப்படி கனக்க..1 point- காற்றாடி
1 pointஉங்கள் நட்பு பறவா இல்லை..போன வருசம் ஒரு மருத்துவனைக்கு தன்னார்வத் தொண்டுப் பணிக்கு போயிருந்தேன்.கிட்டத் தட்ட நான்கு மாதங்கள் ஒரு டச்சு பெண்மணியின் மேற் பார்வையில் பணியாற்ற வேணும்.மருத்துவமனையின் அத்தியாவசிய தொலைபேசிகளை இணைக்கும் இலக்கங்களை பாடாமக்கிக் கொண்டு போய் செய்ய வேணும்.பாடமாக்கிக் கொண்டு போவேன் அவாவைக் கண்டதும் எல்லாம் மறந்துடும்.சின்னப் பிழை என்றாலும் இது சரிப்பட்டு வராது..மண்டைக்குள் உனக்கு ஏதாவது இருக்குதா என்று எல்லாம் கேட்பா..காலப் போக்கில் அங்கு போகும் நாள் இரவு வந்தாலே நித்திரை வராது.இப்போ தனியாக செய்ய தொடங்கி விட்டேன் கடந்த வருடம் கிட்டத் தட்ட நான்கு மாதங்கள் மொழி பெயர்ப்பு வேலை ஒன்றும் வராமலிருந்த காரணத்தினால் தன்னார்வத் தொண்டுப் பணியாவது செய்வோம் என்று இணைந்து தேடிக் கொண்டது.இப்போ நான் இரண்டு வேலை செய்கிறேன்.அது வேறு விடையம்.தற்சமயம் இரத்த அழுத்த மாத்திரை எடுக்க வேணும் என்று வைத்தியரால் பரிந்துரைகப்பட்டுள்ளேன்.அந்த பெண் ஆரம்ப காலத்தில் எங்கள் நாட்டில் தேயிலை உற்பத்தியை அறிமுகப்படுத்திய ஆங்கிலேய பரம்பரைச் சேர்ந்தவர்.எங்கள் நாட்டு நடப்புக்கள் எல்லாம் தெரியும் விளங்கும்.1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point- அதிகரிக்கும் சீன - அமெரிக்க வர்த்தகப் போர்; வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை
நல்ல அறிகுறி எமது வேலை வாய்ப்புகளுக்கு 🤣😂1 point- அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
சாவகச்சேரியில் நடந்த முதலாவது இவரது குரலில் இருந்தே சில சந்தேகங்களும் கேள்விகளும் எனக்கு இவர் மேல் உள்ளன. இவரது தொடர்ச்சியான செயற்பாடுகள் அவற்றை மேலும் மேலும் வலுவூட்டுகின்றனவே தவிர....? ஆனால் அந்த மக்களை குறைசொல்ல முடியாது. தலைவர்கள் இல்லாத மக்கள் இவ்வாறு தான் குழிகளுக்குள் விழுவார்கள்1 point- அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
ஊழல்வாதிகளை விட ஊழலை புடுங்குவோம் என வெளிக்கிடுபவர்கள் மீது மிக அவதானமாக இருக்க வேண்டும். அன்னா ஹசாரே மூலம் நான் கற்ற பாடம் இது. பெரிசு ஊழலை எதிர்க்குது எண்டு நானும் சப்போர்ட் பண்ணினா, சைக்கிளை அப்படியே கொண்டு போய் மோடி வீட்டு போர்ட்டிகோவில் நிப்பாட்டி விட்டார் 🤣. இதே போலத்தான் இன்னொருவர் தமிழ்நாட்டில், 18 வயதில் தன் முகசாயலில் ஒரு புதிய மகனை அறிமுகம் செய்தார். அவரும் ஊழல் எதிர்ப்பாளர் என தொடங்கியவர்தான். இப்போ இவர்.1 point- காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
இங்கு அவருடைய ஆதரவாளர்களாக இருக்கும் நம்மவர்களின் வாதங்கள், பூனை ஒன்று ஒரே இரவில் ஒரு சிங்கமாக மாறியது போல இருக்கின்றது. ஜனநாயக் கட்சியினர் எல்லோரையும் நாட்டுக்குள் விடுகின்றனர், நாட்டின் பொருளாதாரம், தொழில்துறை முன்னேறவே இல்லை, குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதில்லை,............ இப்படியான பலதைச் சொல்கின்றனர். நாங்களும் இங்கு ஓடித்தான் வந்தோம். படித்து விட்டு, மேற்படிப்பிற்கு என்று, முறையாக வந்தோம் என்பது இதற்கான ஒரு நியாயமே கிடையாது. படித்து முடித்தவுடன் அங்கிருந்து தப்பவே இங்கு வந்தோம். படித்திருக்காவிட்டால், ஏதோ ஒரு நாட்டுக்கு எப்படியோ போய்த்தான் இருப்போம். அதுதானே மிகப் பெரும்பாலானோர் முன்னிருந்த ஒரே ஒரு தெரிவு. அதையே தான் வேறு நாட்டவர்களும் செய்கின்றனர். எனக்கு எல்லாமே கிடைத்து விட்டது, ஆகவே இனி அவர்கள் இங்கு வரவே கூடாதா................. ஒரே ஒரு சின்ன மாற்றம்................. நாங்கள் படித்து முடித்து, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு மேல் படிப்பிற்காக விண்ணப்பிக்கும் போது, இதே ட்ரம்ப் அவர்கள் அன்று அமெரிக்காவின் அதிபராக இருந்து இருந்தால், நாங்கள் எவருமே அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்தே இருக்கமாட்டம். நாங்கள் எல்லோருமே ட்ரம்பைத் திட்டிக் கொட்டிவிட்டு, ஐரோப்பா, அவுஸ்திரேலியா அல்லது கனடா தான் போய் இருப்போம். ஆனால், இன்று அதே கூட்டத்தில் ஒரு பகுதி அவர் தான் சரி என்கின்றது............🫣.1 point- உணவு செய்முறையை ரசிப்போம் !
1 point- அமெரிக்கா: சட்டவிரோத குடியேறிகளை இந்தியா கொண்டு வரும் ராணுவ விமானம் - நிலவரம் என்ன?
தமிழ்நாட்டு மீனவனை சிங்களவன் சுட்டு கொன்ற போது ரத்தம் கொதிக்கல... இப்ப குஜராத்திக்காக... இரத்தம் கொதிக்குதாம். குகன் அருமைநாட்டார்1 point- வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
1 pointவாழும்வரை போராடு . ........ 02. --- உனக்கு எங்கட நண்பன் ஸ்ரீ காந்தை நினைவிருக்கா. --- யார் அவன், சென்ற வருடம் கணக்கு ஆசிரியருடன் பிணக்குப் பட்டு பாடசாலை வருவதையும் விட்டு விட்டானே அவனா. --- ஓமடா சந்துரு அவனேதான்.... அவனை சிலநாட்களுக்கு முன்பு லிங்கம் கூல்பாரில் சந்தித்திருந்தேன். இப்ப அவன் நல்ல நிலைமையில் மிகவும் வசதியாய் வாழுறானடா. இந்த இரு வருடங்களில் இரண்டு புதிய லொறிகள், அவனது ஊரில் அழகான பெரிய வீடு, கார், ஹோண்டா மோட்டார் சைக்கிள் எல்லாம் அவனிடம் இருக்குடா. --- அப்படியா எனக்குத் தெரியாதே, அப்படி என்ன வேலை செய்கிறானாம். --- எல்லாம் ஜவுளி வியாபாரம்தான் என்று கண்ணடித்துக் கொண்டே சொல்கிறான் இராகவ்.....ம்....நாங்களும் அவன்கூட சேர்ந்து செய்யலாமடா. --- என்னது கள்ளக் கடத்தலா ...... இது உனது அப்பாவுக்குத் தெரியுமா. --- தெரியாது.....ஆனால் நான் நேற்றிரவு வீட்டில் அப்பா அம்மாவுடன் கதைத்திருந்தேன்..இவையெதையும் சொல்லவில்லை. பொதுவாக வியாபாரம் செய்யப்போகிறேன் அதற்கு எனக்கு கொஞ்சம் பணம் வேண்டும் என்று மட்டும் சொன்னேன். அப்பா முதலில் சம்மதிக்கவில்லை. நிறைய புத்திமதி எல்லாம் சொன்னார். ஒரே போர்.... வியாபாரத்தில் பலப்பல நுணுக்கங்கள், தந்திரங்கள் எல்லாம் உண்டு.இப்ப ஏமாற்றும் பேர்வழிகள் அதிகமாகி விட்டார்கள். நீ ஓரிரு வருடங்கள் எங்கள் கடையில் வேலை செய். கொஞ்சமாவது வியாபாரத்தைக் கற்றுக்கொள், பின் தனியாக வியாபாரம் செய்யலாம் என்று. அதைக் கேட்டு கேட்டு எனக்கு ஒரே சலிப்பாகி விட்டது. பின்பு அம்மாதான் எனக்காக அப்பாவுடன் வாதாடி அவரை இறங்கி வரப் பண்ணிவிட்டா. --- அட இவ்வளவும் நடந்திருக்கா. நல்லா இருக்கு. பிறகு என்னடா நடந்தது சொல்லடா இராகவ். --- பிறகென்ன அப்பா சமாதானமாகி எனக்கு வியாபாரம் செய்ய இரண்டு இலட்சம் ரூபா தருவதாக சொல்லி இருக்கிறார். அம்மாவும் என்னைத் தனியாகக் கூட்டிக்கொண்டு போய் அப்பாவுக்குத் தெரியாமல் தானும் ஒரு இலட்சம் ரூபா தருவதாக சொல்லியிருக்கிறா. --- அட.... பரவாயில்லையே, நீ கெட்டிகாரனடா இராகவ். --- அதுதாண்டா சந்துரு நானும் சொல்கிறேன், நீ ஒரு இலட்சம் ரூபா போட்டால் கூடப் போதும், போட்ட பணத்துக்கு தகுந்த மாதிரி இலாபத்தைப் பிரித்துக் கொள்ளலாம். --- எனக்கு உடனடியாய் என்ன சொல்வதென்று தெரியவில்லை. எதற்கும் வீட்டில் கதைத்துப் பார்த்துவிட்டு சொல்கிறேன், ஒரு வாரம் அவகாசம் தா என்கிறான். இருவரும் இராகவனின் மோட்டார் சைக்கிளில் கிளம்பிச் செல்கிறார்கள். அடுத்தநாள் மதியம் கடந்து இரண்டு மணியிருக்கும் சந்துருவின் தந்தை நாகலிங்கம் வீட்டின் பின்னால் கொட்டிலில் கட்டியிருந்த பசுமாட்டை அவிழ்த்து படலையால் தெருவில் விட்டு விட்டு சாப்பிட வீட்டுக்குள் வருகிறார். உள்ளே நிலத்தில் புற்பாய் விரித்து அதில் உணவுகளை சட்டிகளுடன் கொண்டுவந்து வைத்துவிட்டு வந்து சாப்பிடும்படி அழைக்கிறார் பெரியப்பா பழனிவேல். சந்துருவோடு அவரது மகனும் சேர்ந்து நாலைந்து வாழையிலையுடன் வந்து அமர்கின்றார்கள். நாகலிங்கமும் வந்தமர பெரியப்பாவும் அவர்களுக்குப் பரிமாறி விட்டு தனது இலையிலும் சோறும் கோழி இறைச்சிக் கறிகளையும் போட்டு விட்டு பிள்ளையள் இந்த எலும்பு ரசத்தைச் சூட்டோடு குடியுங்கோ நெஞ்சுக்கு பிலமாய் இருக்கும் என்று சொல்லி எல்லோருக்கும் கிளாசில் ஊற்றி வைக்கிறார். அவர்களும் சூடான அந்த ரசத்தை ஊதி ஊதி குடித்துக் கொண்டு எலும்புகளையும் கடித்து சுவைக்கின்றனர். அப்போது பக்கத்து வீட்டில் குஞ்சாச்சி சத்தம் போடுவதும் கந்தப்பு வேலிக் கதியாலால் இடறுபட்டுக்கொண்டு இவர்கள் வீட்டுக்கு ஓடிவரவும் சரியாய் இருக்கு. என்னனை குஞ்சியப்பு நெத்தி வீங்கிக் கிடக்கு முழங்கால் சில்லாலை இரத்தம் ஒழுகுது என்று சந்துரு கேட்க, அத விடுடா அப்பப்ப நடக்கிறதுதானே என்று சொல்கிறார்.அப்போது பெரியப்பா தனக்கு கிளாசில் ஊற்றி வைத்திருந்த ரசத்தை எடுத்து இந்தா முதல்ல இதைக் குடி என்று குடுக்கிறார்.அவர் அதைக் குடிக்கும் பொழுது தனக்குப் பக்கத்தில் அவருக்கும் ஒரு இலை போட்டு சோறும் கறிகளையும் பரிமாறி வைக்கிறார். பிறகு அண்ணை உந்த இரத்தத்தை துடையனை என்று ஒரு துண்டைக் குடுக்கிறார். அவரும் அதை வாங்கி துடைத்துக் கொண்டே அவளும் பாவம்தான், என்ன செய்யிறது நான் கலியாணம் கட்டேக்க எனக்கு இருபது வயது அவளுக்கு பதினாலு வயது இருக்கும். இப்ப எனக்கு எழுபது வயதாகுது. அம்மாவின்ர கையால சாப்பிட்டதை விட அவளின்ர கையாள சாப்பிட்ட காலம்தான் அதிகம். அவளிலும் பிழையில்லை கண்டியளோ. அவள் ஆசையாய் வளர்த்த சேவலை காலையில் இருந்து காணேல்லை என்று தேடிக் கொண்டிருக்கிறாள், அந்த நேரம் நானும் குடிச்சுட்டு வெறியில வீட்ட வந்ததும் ஏதோ நான்தான் அதை பிடித்துக் கொண்டுபோய் வித்துட்டு குடிச்சுட்டு வாறன் என்று நினைத்திட்டாள். உன்னாணை அதைநான் கண்ணிலும் காணேல்ல. --- சரி சரி உதை விடு, அது உங்கனேக்கைதான் எங்காவது மேயப் போயிருக்கும் என்று பெரியப்பா சொல்லிவிட எல்லோரும் சாப்பிடுகிறார்கள். கந்தப்பு அங்கேயே குந்தில துண்டை விரித்துப் படுத்துக் கொள்கிறார். நாகலிங்கமும் பழனியும் முற்றத்தில் கை கழுவும்போது, அண்ணை நான் மாட்டுக் கொட்டிலில கோழிச் செட்டைகளைப் பார்த்தேன், இனி இதுபோல செய்ய வேண்டாம் என்று சொல்ல பழனி தலை கவிழ்ந்து கொள்கிறார்............! வாருங்கள் போராடலாம் . ........ 🐶 🐶 .1 point- மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று " தமிழீழ தேசிய தலைவரை பூச்சியம் " ஆக்குற செயல்பாட்டை முன்னெடுத்தது சமூகவலை தளங்கள் எங்கும் தமிழீழ விடுதலை போராட்டத்தையும் , போராடிய விடுதலை புலிகளையும் கொச்சைப்படுத்தி , அதை ட்ரெண்ட் ஆக்கி கொண்டிருக்கிற செயல்பாட்டை செய்தார்கள் . தங்கள் சார்பான தொலைக்காட்சிகளில் , யூ டியூப் தளங்களில் எல்லாம் ஈழ தமிழரில் போராட்டத்துக்கு எதிராக இருந்தவர்கள் , போராட்டத்தை காட்டி கொடுத்து இலங்கை அரசோடு ஒன்றாக நின்றவர்கள் என்றெல்லாம் தேடி பிடித்து பேட்டிகள் எடுத்து பரப்புரை செய்து வந்தார்கள் எரிக் சொல்ஹைம் மை கூட்டி வந்து பேட்டி எடுத்து புலிகள் தவறானவர்கள் என்று பரப்புரை செய்தார்கள் மேலே சொல்லப்பட்டுள்ள விடயங்கள் உண்மை. "அரக்கர் கூட்டம்", "ஆயிரம் பூக்கள்", "புதியவன் டீம்", "ஒன்றாக" ... இப்படியான பல பெயர் தாங்கிய குழுக்கள் சேர்ந்து விடுதலை புலிகள் தலைவரையும், போராளிகளையும், குறிப்பாக பெண் போராளிகளை மிகவும் கொச்சையாக விமர்சித்து சில இலங்கை முஸ்லீம் தனி நபர்கள் , ஒட்டுக்குழு நபர்களையும் ஒன்றிணைத்து 2 வருடங்களாக தொடர்ந்து பரப்புரை செய்து வந்தது உண்மை.1 point- கனடா மீதான வரி விதிப்பு நிறுத்தி வைப்பு: டிரம்பின் இந்த திடீர் மன மாற்றத்துக்கு என்ன காரணம்?
1 pointகனடிய மக்கள் கண்டிப்பாக ட்றம்ப் இற்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள். ட்றம்பின் வரி விதிப்பு நடவடிக்கையை கனடிய மக்கள் தம் மீது அவர் bullying செய்கின்றார் என்ற வகையிலேயே எடுத்துக் கொண்டு உள்ளார்கள். இது உறங்கிக் கிடந்த கனடிய தேசியவாதத்தை முதுகில் படீர் என்று ஒரு போடு போட்டு எழுப்பி விட்டுள்ளது. அமெரிக்க பொருட்களை புறக்கணிக்குமாறு அரசியல் தலைவர்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு மக்கள் முழுமையாக செவி சாய்க்கத் தொடங்கியுள்ளனர். சமூகவலைத்தளங்களில் தீவிரமாக இது பற்றிய விளக்கங்களும், அமெரிக்க பொருட்களுக்கு நிகரான கனடிய பொருட்களின் பட்டியல்களும் வெளியாகிக் கொண்டு இருக்கின்றனர். சாதாரண பலசரக்கு கடைகளில் இருந்து, Costco போன்ற பிரமாண்டமான பல்பொருள் அங்காடிகளில் கூட அமெரிக்க பொருட்களின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சியை நான் நேற்று அவதானித்தேன். நான் நேற்றுடன் நெட்பிளிக்ஸ் கான என் எக்கவுண்டை கான்சல் செய்து விட்டேன். ஆயிரக்கணக்கானோர் என்னைப் போன்றே நெட்பிளிக்ஸ் இல் இருந்து விலகியுள்ளனர். அமேசன் கனடாவில் பெருமளவு முதலிட்டுள்ளதாலும் ஆயிரக்கணக்கான கனடியர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளதாலும் அதை தொடர்கின்றேன். கனடாவின் அதிரடியான பதில் நடவடிக்கைகள் தான் ட்றம்ப் இற்கு அழுத்தம் தந்து, ஒரு மாதத்துக்கு வரி விதிப்பை நிறுத்தி வைக்கும் அவசியத்தை கொடுத்தது. இந்த ஒரு மாதம் என்பது கூட ஒரு வகையான black mail தான். வரி விதிப்பை முற்றாக கைவிட்டால் கூட, கனடா வர்த்தகத்தில் அமெரிக்காவில் தங்கி இருக்கும் இன்றைய நிலையில் இருந்து முற்றாக விடுபட்டு, ஐரோப்பா, சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தகளை உருவாக்க வேண்டும் என்ற குரல் கனதியாக வெளிப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. ஒன்று மட்டும் நிச்சயம். அமெரிக்காவை நம்பினார் கைவிடப் படுவார்!1 point- மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
அனைத்துலகச் செயலகம், தலைமைச் செயலகம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு போன்ற புலம்பெயர் அமைப்புக்கள் வாய் மூடி மெளனிகளாக இருப்பதனால் நாம் தமிழருக்கும் திமுகவும் இடையேயான உள்ளூர் அரசியலுக்கு தலைவர் பிரபாகரனையும் பெரியாரையும் மோதவிட்டுள்ளனர். இந்த புலம்பெயர் அமைப்புக்கள் அறிக்கைகளை வெளியிட்டு தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தாமையால்தான் சீமானின் அடிப்பொடிகள் தமக்கேற்றவாறு சமூக ஊடகங்களில் பதிவுகளையும், வீடியோக்களையும் பகிர்கின்றார்கள். பதிலுக்கு திமுக, பெரியார் சார்பானவர்கள் தலைவரையும், புலிகளையும் இழிவுபடுத்துகின்றனர். இந்த நிலைக்கு கொண்டுவந்த நாம் தமிழர் கட்சியையும், சீமானையும் இன்னமும் ஆதரிக்கும் ஈழத்தமிழர்கள் உண்மையில் முழு மூடர்கள் அல்லது புலிகளின் சித்தாந்தத்தைக் கடத்துகின்றோம் என்று நம்பி அதனை அழிக்க துணைபோகின்றவர்கள். நாடு கடந்த தமிழீழ அரசு பெரிதாக எதனையும் கிழிக்கவில்லை என்றாலும், தமிழ்நாட்டு அரசியலில் புலிகளையும், தலைவர் பிரபாகரனையும் சம்பந்தப்படுத்தவேண்டாம் என்று அறிக்கை விட்டது நல்ல விடயம்தான்.1 point- குட்டிக் கதைகள்.
1 pointகணவனின் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுக்கலாமென்று சிட்டியிலுள்ள டான்ஸ் பாருக்கு அவரை கூட்டிகிட்டு போறாங்க மனைவி... திடீரென்று வந்த ஷாக்கில் அவரால் கழன்று கொள்ள முடியவில்லை. எது நடந்தாலும் பார்த்துப்போமேன்னு நினைத்து மனைவியுடன் பாருக்குப் போனார். பிறகு நடந்தவை... “குட் ஈவினிங் குமார் சார்” - இது கேட்கீப்பர். உள்ளே வந்த மனைவி “அவனுக்கு எப்படி உங்களைத் தெரியும்?” குமார் “சண்டேஸ்ல அவன் என்கூட டென்னிஸ் ஆட வருவான் அதனால பழக்கம்.” பாருக்கு சென்றவுடன் பார்டெண்டர் “ரெகுலர் ஐட்டத்தை எடுக்கவா சார்?”... குமார் சார் மனைவியிடம்.. “வேண்டாம் அப்படிப் பார்க்காதே. நானே சொல்லிடறேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் அவன் எங்க கிளப்புக்கு வந்தபோது ஒண்ணா சேர்ந்து ஒரு பெக் அடிச்சோம். அப்படிப் பழக்கம்….” அடுத்து டான்ஸ் ஆரம்பமானது. முன் வரிசையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த அவர்களிடம் வந்த ஆட்டக்காரி “என்ன குமார் சார். இன்னைக்கு என்னோட ஸ்பெஷல் டான்ஸ் ஆட வரலியா?” . ரௌத்திர தாண்டவமாடிய மனைவி குமார் ஸாரை வெளியே இழுத்துக் கொண்டு வந்தாங்க…. டாக்சியில் ஏறும்போது டிரைவர் சொன்னது “என்ன ஸாரே, இன்னைக்கு மொக்க ஃபிகரோட வரீங்க…. வேற யாரும் கிடைக்கலையா?... 😳😳😳😳 பின்குறிப்பு: குமார் ஸாரின் இறுதிச் சடங்கு நாளை காலை 10 மணிக்கு.... 😂 🤣 Paranji Sankar1 point- 1/12/2003 இலிருந்து 8/09/2004 வரையான காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற முக்கிய அரசியல் நிகழ்வுகள் குறித்த குறிப்புக்கள் - த.சபாரட்ணம்
இந்தியாவுடன் நட்புப் பாராட்ட முயன்ற புலிகளும், வடக்குக் கிழக்கைப் பிரிப்பதற்கு இந்தியாவின் உதவியை நாடிய ஜே.வி.பி யினரும் மார்கழி 15, 2003 தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேசிய தமிழ்ச்செல்வன், இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்த புலிகள் விரும்புவதாகவும் இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் லண்டன் மாவீரர் தின உரையில் அன்டன் பாலசிங்கம் இந்தியாவிற்கு வழங்கிய வாக்குறுதிகளை நினைவுபடுத்திய தமிழ்ச்செல்வன், அதன்படி கூட்டமைப்பு உறுப்பினர்கள் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தனது மாவீரர் தின உரையில் பேசிய பாலசிங்கம், "இந்தியாவின் பூகோள அரசியல், மூலோபாய பொருளாதார நலன்களைப் பலவீனப்படுத்தும் எந்த நடவடிக்கைகளிலும் நாம் ஈடுபடப்போவதில்லை. இந்திய அரசாங்கத்துடன் சிநேகபூர்வமான உறவுகளை வளர்த்துக்கொள்ளவே நாம் விரும்புகிறோம். அவ்வாறே இந்தியாவும் ஈழத்தமிழர் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மாற்றிக் கொள்ளவேண்டும்" என்று கேட்டிருந்தார். தனது உரையில் இந்தியாவிற்கும் புலிகளுக்கும் இடையே சிநேகபூர்வமான உறவுகளை ஏற்படுத்துவதற்கான அடித்தளம் குறித்து பாலசிங்கம் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். அவர் தொடர்ந்தும் பேசும்போது, "நாம் இரு பகுதியினருமே முன்னைய காலங்களில் சில தவறுகளைப் புரிந்திருக்கிறோம். ஆகவே பழயனவற்றை மறந்து, முன்னோகிச் செல்ல நாம் முயல வேண்டும். எமது அமைப்புடன் நட்புரீதியான உறவுகளை உருவாக்குவதற்கு இந்தியா நவீன வழிமுறைகளையும் முயற்சிகளையும் கைக்கொள்ளவேண்டும் என்று நாம் இந்தியாவை வேண்டிக்கொள்கிறோம்" என்றும் கூறினார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயலாளர் சம்பந்தன் பேசும்போது, "இந்தியாவுடன் நட்புரீதியான உறவுகளை நாம் மேற்கொள்வது அவசியம் என்று நான் கருதுகிறேன். தமிழர்களையும் இந்தியாவையும் எதிரிகளாக்கும் உத்தியுடன் செயற்பட்டுவரும் சிங்களப்பேரினவாதிகளின் முயற்சிகளை நாம் தடுத்து நிறுத்துவது அவசியமானது. அதன் ஒருபடியாக இந்திய தூதுவர் நிருபன் சென் அவர்களை கொழும்பில் நாம் சந்திக்கவிருக்கிறோம்" என்று அவர் கூறினார். சிங்களப் பேரினவாதிகள் இந்தியாவிற்கும் தமிழர்களுக்கும் இடையே பகைமையினை உருவாக்கும் கைங்கரியங்களில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் விடுதலை முன்னணியினரின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய தேசபக்தி அமைப்பு எனும் தீவிர சிங்கள இனவாதக் குழு கொழும்பில் இருக்கும் இந்தியத் தூதரகத்தில் தூதுவர் நிருபன் சென்னைச் சந்தித்து கையளித்த மனுவில் வடக்குக் கிழக்கு மாகாணங்களைப் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் கொடுப்பதானது இந்தியாவின் நலன்களுக்கு மிகவும் விரோதமானது என்று குறிப்பிட்டிருந்தது. ஆகவே வடக்கையும் கிழக்கையும் பிரிப்பதற்கு இந்தியா தமக்கு உதவ வேண்டும் என்றும் அது இந்தியாவைக் கேட்டிருந்தது. ஆகவே, உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்கள், இந்தியா ஈழத் தமிழர்களை நசுக்கி, முற்றாக அழிப்பதற்கு உந்தித்தள்ளும் சிங்கள பேரினவாதிகளின் முயற்சிகளை முறியடிப்பது அவசியம். தமிழ் ஈழத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பு வெளியிட்டுள்ள கோரிக்கையில் தமிழர்களின் நீதியான அபிலாசைகளை அடைவதற்கு இந்தியா சிநேகபூர்வமான நிலைப்பாட்டினையெடுத்து தமிழர்களுக்கு உதவிட வேண்டும் என்று கேட்டிருந்தது. மேலும், ஈழத்தமிழர்களால் இந்தியாவின் பூகோள ஸ்த்திரத் தன்மைக்கோ, பாதுகாப்பிற்கோ அல்லது இறையாண்மைக்கொ ஒருபோது அச்சுருத்தல் ஏற்படாது என்றும் அவ்வறிக்கை மேலும் கூறியிருந்தது. தமிழர்களின் கல்வியினை முன்கொண்டு செல்லும் சம்மேளனம் எனும் அமைப்பு இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், "தமிழர்கள் கெளரவத்துடனும், அமைதியாகவும் தமது சாதாரணமான வாழ்வினை வாழ்வதற்கான சூழ்நிலையினை ஏற்படுத்த இந்தியா சாதகமான நிலைப்பாட்டுடன் செயற்பட வேண்டும்" என்று கேட்டிருந்தது.1 point- 1/12/2003 இலிருந்து 8/09/2004 வரையான காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற முக்கிய அரசியல் நிகழ்வுகள் குறித்த குறிப்புக்கள் - த.சபாரட்ணம்
இலங்கையின் பாதுகாப்பு, பூகோள ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியவற்றைப் பேணிக்கொண்டே தமிழர்களின் தீர்வு வழங்கப்படவேண்டும், கடற்புலிகளுக்கான அந்தஸ்த்தினை வழங்குவதை இந்தியா கடுமையாக எதிர்க்கும் - இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் ராஸ்கோத்ரா 8 மார்கழி, 2003 ரணில் விக்கிரமசிங்கவுடன் இணக்கப்பாட்டிற்கு வந்து, சமாதானப் பேச்சுக்களை மீளவும் ஆரம்பிப்பதற்கான சூழ்நிலையினை உருவாக்க வேண்டும் என்கிற கடுமையான அழுத்தம் சந்திரிக்காவின்மீது சர்வதேசத்தால் போடப்பட்டு வருகிறது. கொழும்பிலிருக்கும் ஐந்து சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகள் சந்திரிக்காவை கடந்தவாரம் சந்தித்து கொழும்பில் ஏற்பட்டிருக்கும் அரசியலமைப்புச் சிக்கலினை உடனடியாகத் தீர்த்துவைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகளே இச்சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் ஆவர். இச்சந்திப்பில் கலந்துகொண்ட ஜப்பானியத் தூதுவர் பேசும்போது, டோக்கியோ மாநாட்டில் வழங்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்ட உதவித்தொகையினை சமாதானப் பேச்சுக்கள் மீள ஆரம்பிக்கப்பட்டால் ஒழிய வழங்கமுடியாது என்று கூறினார். இந்தியத் தூதுவர் பேசும்போது இந்தியாவின் பாதுகாப்பிற்கு இலங்கை அரசியலில் ஸ்த்திரத்தன்மை பேணப்படுவது அவசியம் என்று வலியுறுத்தினார். ஆகவே ரணிலுடன் இணைந்து பணியாற்றி ஸ்த்திரத்தன்மையினை ஏற்படுத்துமாறும், சமாதானப் பேச்சுக்களை மீள ஆரம்பிக்குமாறும் சந்திரிக்காவிடம் அழுத்தம் கொடுத்தார். இந்தியாவை மைய்யமாகக் கொண்டியங்கும் மூலோபாயக் கற்கைகளுக்கான மையம் எனப்படும் அமைப்பினால் கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்பட்ட "இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள்" எனும் கருப்பொருளிலான கருத்தரங்கில் கலந்துகொள்ள இந்தியாவிலிருது வருகை தந்திருந்த இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் எம்.கே.ராஸ்கோத்ரா பேசும்போது, இலங்கையில் ஏற்படுத்தப்பட்டும் எந்தவொரு தீர்வும் இலங்கையின் ஒருமித்த நாட்டுக் கொள்கை, பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை, பாதுகாப்பு என்பன உறுதிசெய்யப்பட்டதுமான தீர்வுக்குள்ளேயே தமிழர்களுக்கான தீர்வு அமைதல் அவசியம் என்று வலியுறுத்தினார். கடற்புலிகளுக்கான அந்தஸ்த்தினை இலங்கை வழங்குமானால் இந்தியா அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று உறுதிபட அவர் கூறினார். அக்கருத்தரங்கில் கலந்துகொண்ட இந்தியாவின் முன்னாள் கிழக்குப் பிராந்தியக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் தாஸும் இதே கருத்தினை வலியுறுத்திப் பேசினார். சமரவிக்கிரம - தித்தவல ஆணைக்குழு வருகிற திங்கட்கிழமையில் இருந்து புதன்கிழமை வரை மேற்கொள்ளவிருக்கும் சந்திப்புக்களின்போது ரணிலும், சந்திரிக்காவும் இணைந்து பணியாற்றக்கூடிய தீர்வினை உருவாக்கவும், அதனூடாக சமாதான முயற்சிகளை இணைந்தே முன்னெடுக்கும் சூழ்நிலையினை உருவாக்கத் தேவையான ஆலோசனைகள் பற்றியும், அரசியலமைப்பில் செய்யப்படவேண்டிய திருத்தங்கள் குறித்தும் கலந்துரையாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரணிலுக்கும் சந்திரிக்காவுக்கும் இடையிலான பேச்சுக்கள் வெற்றியளிக்கும் என்கிற எதிர்பார்ப்பு பலரிடமும் இருக்கிறது. அவ்வாறு வெற்றியளிக்கும் பட்சத்தில் மீளவும் பேச்சுவார்த்தையினை ஆரம்பிக்கும் பொருட்டு தை மாதத்தில் நோர்வே மத்தியஸ்த்தம் வகிக்க அழைக்கப்படாலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ரணிலுக்கும் சந்திரிக்காவுக்கும் இடையிலான பேச்சுக்கள் தோற்கும் பட்சத்தில் நாடு இன்னொரு தேர்தலுக்குப் போவதைத் தடுக்க முடியாதிருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் ரணிலும், சந்திரிக்காவும் தேர்தல்களை எதிர்நோக்கியே செயற்பட்டு வருவதாகத் தெரிகிறது. மாவட்ட ரீதியிலான பேரணிகளை ரணில் ஏற்கனவே ஆரம்பித்து விட்டார். மக்கள் விடுதலை முன்னணியுடன் கூட்டணி அமைப்பது பற்றிய பேச்சுக்களில் சந்திரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இன்னும் பல தடைகளைத் தாண்டவேண்டியிருக்கிறது. தம்முடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டவுடன் சந்திரிக்கா உடனடியாகப் பொதுத்தேர்தலினை நடத்தவேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி நிபந்தனை விதித்து வருகிறது. ஆனால் மக்கள் விடுதலை முன்னணியினருடனான தனது கூட்டணியின் பலத்தைப் பரீட்சித்துப் பார்ப்பதற்காக மாசியில் நடக்கவிருக்கும் மாகாணசபைத் தேர்தலினைப் பயன்படுத்த சந்திரிக்கா விரும்புகிறார். அதேவேளை சந்திரிக்காவின் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் ஏழு கட்சிகளில் இரு கட்சிகள் கூட்டணியினரிடையே ஏற்படுத்தப்பட்டிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இதுவரையில் கைச்சாத்திடவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. லங்கா சம சமாஜக் கட்சியும், கம்மியூனிஸ்ட் கட்சியும் தமக்குக் கால அவகாசம் தேவை என்று சந்திரிக்காவிடம் கோரியிருக்கின்றன. ஆனந்தசங்கரி - சம்பந்தன் நாடகம் ஆக, இம்மாதிரியான தீவிர அரசியல் நகர்வுகள் தேசிய மட்டத்தில் நடந்துவருகையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒருபக்கம் தமது நாடகத்தினை நடத்தி வருகின்றனர். கட்சியின் மத்திய குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடி கட்சியின் தலைவர் வி.ஆனந்தசங்கரிக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றினை நிறைவேற்றியிருக்கும் நிலையில், அதுகுறித்த கடுமையான வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. "நாம் நம்பிக்கையில்லாப் பிரேரணையினை நிறைவேற்றிவிட்டோம்" என்று கட்சியின் செயலாளர் சம்பந்தன் கூறிவரும் அதேவேளை, "இல்லை, நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்படுமுன்னரே நான் கூட்டத்தைக் கலைத்துவிட்டேன், ஆகவே பிரேரணை செல்லுபடியாகாது" என்று கட்சியின் தலைவர் ஆனந்தசங்கரி கூறிவருகிறார். அதுமட்டுமல்லாமல், இதுகுறித்து தான் நீதிமன்றத்தின் உதவியினை நாடவிருப்பதாகவும் அவர் எச்சரித்திருக்கிறார். ஆனால் சம்பந்தன் தலைமையிலான குழுவினர் கட்சியின் அரசியல்யாப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதன்படி ஒழுக்கவியல் குழுவினை அமைப்பதுகுறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி ஒழுக்கவியல் குழு மார்கழி 13 ஆம் திகது கூடி ஆனந்தசங்கரியின் அரசியல் எதிர்காலம் குறித்த முடிவினை எடுக்கவிருக்கிறது.1 point - அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
Important Information
By using this site, you agree to our Terms of Use.