Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    3054
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87990
    Posts
  3. புங்கையூரன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    13683
    Posts
  4. alvayan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    5417
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/17/25 in Posts

  1. இறுக்கமான இதயத்தில் இதமாகப் பூத்தவளே ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இறுக்கமான இதயத்தில் இதமாகப் பூத்தவளே கிறுக்கனாக்கி என்னைக் கிறுங்கச் செய்தவளே சறுக்கியே விழுந்தேனே சண்டாளி உன்நினைப்பில் பொறுக்கியாகி உன்மீது பித்தனாகிப் போனேண்டி! வண்டுகள் மொய்க்கின்ற வண்ண மலரடிநீ வான்மீது மிளிர்கின்ற விண்மீனின் ஒளியடிநீ பல்லவன் வடித்தநல் பருவமங்கைச் சிற்பம்நீ பாவையெந்தன் மனதிற்குள் பாட்டிசைக்கும் சுரங்கள்நீ! தோகை மயிலெனத் தோன்றுதடி உன்னுருவம் வாலைக் குமரியெந்தன் வழித்தடத்தில் நகருகின்றாய் சேலைக்கு அழகான சித்திரப் பெண்ணழகே தூயஎன் காதலாலே துடிக்கின்றேன் உன்னாலே! நெற்றிப் பிறையினிலே நீள்புருவம் கொண்டவளே வேல்விழியால் கணைதொடுத்து வித்தைகள் காட்டுகிறாய் கொவ்வை இதலழகி குண்டுமல்லிச் சிரிப்பழகி ஒளவை மொழியினிலே அருள்வாக்குத் தாவேண்டி! கன்னக் குழியழகும் கலைமமான் விழியழகும் சின்ன இடையழகும் செவ்வந்தி நிறத்தழகும் காதோரம் கதைபேசும் கருங்கூந்தல் குழலழகும் நீயருகே வருகையிலே நெஞ்சை இழுக்குதடி! பெண்ணினத்தின் பெருமைகளைப் பேணுகின்ற பெட்டகமே பண்ணிசைத்துப் பாடவல்ல பாக்களின் கவிவடிவே எண்ணங்கள் பரிமாற ஏங்கித் தவிக்கின்றேன் தண்ணீரில் தாமைரையிலையெனத் தவிக்கவெனை விடலாமோ
  2. நான் அவுஸ் வந்த காலத்தில் ஒரு இந்தியரும் வந்தார். தங்கள் நாட்டில் தபால் சேவை அவுஸை விடவும் எவ்வளவோ திறம் எண்டார். பிறகு கொஞ்ச நாள் போக தகப்பனுக்கு ஒரு rayban sunglass வாங்கி அனுப்பினார். இரண்டு கிழமையாகியும் அது தகப்பனுக்குப் போய்ச் சேரவில்லை. ஏன் உங்கள் தபால் சேவை திறம் எண்டு சொன்னீங்கள் என்று கேட்டேன். தபால் காறன் Ray ban புதுசாப் போட்டுக் கொண்டு திரியிறான் எண்டு தகப்பன் சொன்னதாகச் சொன்னார். இப்பிடித் தான் இந்தியன் பெருமைகள் அனேகமாக முடியும்…!
  3. ஒரு காரின் கடைசி வாக்குமூலம் ---------------------------------------------------- 'இதோ உங்களின் பேபி................' என்று சொல்லியே புத்தம் புதிதாக என்னை வாங்கியவரிடம் கொடுத்தார்கள் வாங்கியவருடன் ஒரு பெரிய பேபியும், இரண்டு சின்ன பேபிகளும் வந்திருந்தனர் நல்லதொரு குடும்பம் என்று நானும் சந்தோசப்பட்டேன் சின்னப் பெண் ஒரு வருடத்திற்கு இருக்கைக்கு மேல் ஒரு இருக்கை போட்டு இருந்தார் பெரிய பையன் தெனாவெட்டாக பின்னுக்கு போய் மூன்றாவது வரிசையில் தனியே இருப்பான் சில மாத கவனிப்புகளின் பின் ஆரம்பித்தார்கள் அவர்களின் வேலைகளை அவர்கள் சாப்பிடுவதில் கொஞ்சம் கொட்டி அப்படியே விட்டார்கள் ஏதோ நானும் சாப்பிடுவது போல அது நாறி நான் மூச்செடுக்க முடியாமல் தவித்தேன் சீப்பு பவுடர் பேனை பென்சில் இன்னும் என்ன என்னவோ எல்லாம் நாலு கதவுகளுக்குள்ளும் வைத்தார்கள் எதை வைத்தாலும் எடுக்க மாட்டார்கள் இன்னும் புதிதாகவும் கொண்டு வந்து வைப்பார்கள் பின்னர் தேடி சண்டை போடுவார்கள் அவர்கள் ஒழுங்காக குளித்தார்கள் எனக்கு எதுவும் கிடையாது மழையும் இல்லாத ஊர் இது காடு மலை வனாந்தரம் எல்லாம் ஓடினேன் நூறாயிரம் மைல்கள் கடந்தேன் அப்பப்ப ஓயில் மட்டும் மாற்றினார்கள் மற்றது எதுவும் செய்யவில்லை நான் உள்ளுக்குள் உருகி ஒரு நோயாளியாகி கொண்டிருந்தேன் யாரு சாமி இந்த இளையராசா................. தினமும் அவர் இசை தான் இதுக்கு மேலும் முடியாது என்று மக்கர் பண்ண ஆரம்பித்தேன் என்னைத் திருந்தாமல் இன்னொரு புதுசைக் கொண்டு வந்தார்கள் நான் இப்ப அடிமாடாக ஆகினேன் இந்தப் பயல் ஒரு விளையாட்டுப் பைத்தியம் விளையாடுவது விளையாடதது என்று எல்லாக் குப்பைகளாலும் என்னை நிறைத்தார்கள் இப்ப இந்தப் பயலைத் தவிர வேறு எவரும் எனக்குள் வருவதேயில்லை எஞ்சின் லைட்டை எரித்துக் காட்டினேன் அவனில் ஒரு அசைவும் இல்லை உறுமிப் பார்த்தேன் பாட்டுச் சத்தத்தை பலமாக்கி கேட்கின்றான் இப்ப இந்தக் கணத்தில் இந்த நடுரோட்டில் என் மூச்சை நிறுத்தப் போகின்றேன் என்னில் எந்த தப்புமே கிடையாது எல்லாமே இந்தப் பயலின் கவலையீனம் தான்.
  4. பையன்.. இங்கை இவை குத்தி முறிய, அங்கே இரண்டாம் இடத்துக்கு முன்னேறிவிட்டார் 😁
  5. இந்த விடையத்தில் யேர்மானியரைப் போற்றவேண்டும். ஒருமுறை நான்வந்த புதுதில் என் பெயரிட்டு யேர்மனி என்ற முகவரிமட்டும் இட்ட என் நண்பர் ஒருவரின் கடிதம் என்னை வந்தடைந்தது.😁
  6. இந்தியாவில் வடக்கில் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சினையும், இலங்கையில் தெற்கில் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சினையும் இருக்கின்றது. சிங்களவர்கள் தங்களை ஆரியர்கள் என்று கூறுகிறார்கள், அதனால் வட இந்தியருக்கு உள்ள அதே பிரச்சினை சிங்களவர்களுக்கும் இருக்கிறதோ தெரியவில்லை. இந்தியாவில் ஒரு நண்பர் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது, எந்த இடம் என கேட்டார் வைத்தியசாலை ஊழியர், அதற்கு இலங்கை என கூற, இலங்கை கிரிக்கட் அணியினர் போல அனைத்து இலங்கையர்களும் அரக்கர்கள் போல் இருப்பார்கள் என நினைத்தேன் என கூறினார் (இது நடந்தது 90 களின் பிற்பகுதி) இந்தியர்களுக்கு இதிகாச புராணங்கள், இலங்கையர்களுக்கு மகாவம்சம், நிறைய ஒற்றுமைகள் இருக்கு.😁 ஆனால் இந்த வெளிநாட்டு பயணங்கள் இந்திய, இலங்கையில் இருந்த அடிமட்ட மக்களின் சமூக வாழ்க்கை தரத்தினை உயர்த்தியுள்ளது, இது சமூக ரீதியான நல்ல மாற்றம்.
  7. விஜய்க்கு வை பிரிவு பாதுகாப்பு தான் கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஷாருக், சல்மான், கங்கணா இவர்களுக்கு வை பிளஸ் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் அவர்களுக்கு இந்தியா முழுவதும் இது கொடுக்கப்பட்டிருக்கின்றது. விஜய்க்கு இந்தப் பாதுகாப்பு தமிழ்நாட்டில் மட்டுமே. ஷாருக்குக்கு அடுத்ததாக ஒழுங்காக வரி கட்டும் பிரபலம் விஜய், அவருக்கும் ஒரு வை பிளஸ் கொடுத்திருக்கலாம் தானே............. தமிழ்நாடு என்றால் ஒன்றிய அரசுக்கு ஒரு இளக்கம் தான்....................🤣. சீமானிடம் இந்த வை பிரிவுப் பாதுகாப்பைப் பற்றிக் கேட்டார்கள். அதற்கு அவர் சொன்னார்: எனக்கு எதற்கு பாதுகாப்பு...................... நான் தான் இந்த நாட்டிற்கு பாதுகாப்பு..................😜. விடிந்தால் பொழுது சாயும் வரை உலகம் முழுக்க தனித்தனியே சிரிக்க வைக்கின்றனர் பலர்.....
  8. எனது அயல் நண்பர் ஒருவர் ஊருக்கு போய் விட்டு சென்றகிழமை திரும்பி வந்தார். அவரிடம் என்ன ஊர்ப்புதினம் என விசாரித்தேன். பெரிதாக ஒன்றுமில்லை என சொல்லிவிட்டு..... இங்கிருந்து தன் பாவனைக்காக கொண்டு சென்ற கைத்தொலைபேசியை வெளியில் எடுக்கவே தனக்கு வெட்கமாக இருந்தது என கூறினார். அவ்வளவுக்கு அங்கை வேற லவல்.😎
  9. ம்ம்.,,சந்திராயன், மங்களாயன் போலத் தான் இதுவும் இருக்கும், வசி….!
  10. ஒரு பதாகையில் "சாராய யாவாரியை துரத்துவோம்" என்று இருக்கிறது. தமிழ்வின் "யாவாரி" யைக் காப்பாற்ற சுமந்திரன், சாணக்கியன் மீது செய்தியைத் திருப்பி விட்டிருக்கிறது. தமிழ்வின் வாய்க்கால் வெட்ட ரண்டு பேர் "மம்பட்டியோட" றெடியா நிப்பீனம் யாழில்😎!
  11. காற்றாடி - அத்தியாயம் ஒன்று ---------------------------------------------- மழை இன்னும் விட்டுவிடவில்லை, ஆனால் முன்பிருந்ததை விட நன்றாகக் குறைந்து விட்டது போன்று தோன்றியது. மழையின் சத்தம் கொஞ்சம் ஓய்ந்திருந்தது. கூரையில் இருக்கும் ஓட்டைகளினூடாக வீட்டுக்குள் விழுந்து ஓடும் மழை நீர் முற்று முழுதாக அவனைச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தது. அவன் படுத்திருக்கும் இடத்திற்கு சரி மேலாக கூரையில் எந்த ஓட்டைகளும் இல்லாதபடியால், மழைநீர் அவன் மேல் இன்றும் விழுந்திருக்கவில்லை. வீட்டிலிருந்த ஒரு அகலமான மா பலகையை தரையின் மேல் போட்டு அதன் நடுவிலேயே அவன் படுத்திருந்தான். தரையில் விழுந்து தெறிக்கும் சில மழை ஒழுக்குகள் தன்னில் விழுவதை தவிர்க்க, ஒரு பக்கமாக சாய்ந்து படுத்தபடி, இரண்டு கைகளையும் இரண்டு கால்களுக்கும் இடையில் வைத்து, கால்களை வயிறு நோக்கி இழுத்து, முழு உடலையுமே குறுக்கி வைத்திருந்தான். சில மழைக் காலங்களை இதே வீட்டில் இப்படியே கடந்து வந்து விட்டபடியால், ஒழுகும் மழையை ஏமாற்றி எப்படி இரவில் தூங்குவது என்று அவன் நன்றாகவே கற்றுக் கொண்டிருந்தான். இப்படி ஏராளமான விசயங்களில் அவனுக்கு சமயோசிதமும், அறிவும் இருந்தாலும், அவனுக்கு கழுத்தில் கத்தி வைத்தாலும் வரவே வராது என்று சில விசயங்களும் இருக்கின்றன. எல்லோருக்கும் எல்லாம் வந்து விடுமா என்ன, எந்த மனிதருக்கும் சிலது வரும், சிலது வராது, சிலது வரவே வராது. அவனுக்கு வரவே வராது என்ற வரிசையில் முதலாவதாக வராமல் இருப்பது கணிதபாடம். சாதாரணமான இரண்டு தெரியாக் கணியங்களும், இரண்டு சமன்பாடுகளும் இருக்கும் கணிதம் கூட அவனுக்கு தலைச்சுற்றலைக் கொடுக்கும். அவன் போன வருடம் சாதாரணதரப் பரீட்சை எழுதியிருந்தான். எட்டுப் பாடங்களில் ஏழு பாடங்களில் சித்தி பெற்றிருந்தான். கணிதத்தில் படுதோல்வி. விஞ்ஞானத்தில் சிறப்புச் சித்தி பெற்றிருந்தான். ஆங்கிலத்தில் சாதாரண சித்தி, ஆனால் கணிதத்தில் எஃப் வந்திருந்தது. கணிதமோ அல்லது எந்தப் பாடங்களுமோ என்றுமே அவன் வீட்டில் படித்ததேயில்லை. ஊரில் இருக்கும் பாடசாலைக்கு போவான், பின்னர் வீட்டுக்கு வருவான், அவ்வளவு தான் அவனுடைய கல்வியின் எல்லையும் தேடலும். வீட்டில் எதையும் படிப்பதோ அல்லது தனியார் கல்வி நிலையங்களுக்கு போவதோ கிடையாது. மற்ற நேரங்களில் ஊர் விதானையார் போல ஊரை சுற்றிக்கொண்டு திரிவான். அவன் ஏழு பாடங்களில் நல்ல சித்திகள் பெற்றிருந்தபடியால், அவன் வீட்டில் அவனை அடுத்ததாக இன்னும் மேலே படிக்கச் சொன்னார்கள். இதுவரை அவர்களின் குடும்பங்களில், அவனின் அம்மா மற்றும் அப்பாவின் குடும்பங்கள், முதலாவதாக உயர்தர வகுப்புகளுக்கு போகும் ஆள் என்ற பெருமை எவருக்கும் கொடுக்கப்படாமல் அவனுக்காகவே காத்துக்கொண்டு கிடந்தது. கணித பாடத்தில் தவறி இருந்தபடியால், பாடசாலையில் கலை அல்லது வர்த்தகப் பிரிவுக்கு அவனைப் போகச் சொன்னார்கள். அதுவும் கூட அடுத்து நடக்கும் சாதாரண பரீட்சையில் கணித பாடத்தில் சாதாரண சித்தியையாவது அவன் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனையுடன். அரைக்காற்சட்டையில் இருந்து அப்போது தான் முழுக்காற்சட்டைக்கு மாறியிருந்தான். வெள்ளை நிற முழுக்காற்சட்டை. அதை தைக்கும் தையல் கடைக்காரர் அவனின் அப்பாவிற்கு மிகவும் தெரிந்தவரே. பாடசாலைக்கு தேவையானது போலவும் இல்லாமல், அன்றைய நாயகர்களின் அகன்ற கால்கள் உடையது போலவும் இல்லாமல், இரண்டுக்கும் மத்தியில் ஒன்றை தைத்துக் கொடுத்திருந்தார் அந்த தையல்காரர். அவனின் ஆலோசனை தான் அது. அந்த முழுக்காற்சட்டையுடன் முதன்முதலாக பாடசாலை போயிருந்த போது, அப்பொழுது தான் கணிதபாடத்தில் சித்தி அடையவே வேண்டும் என்று பாடசாலை அதிபர் சொன்னதற்கு, உடனேயே தலையை ஆட்டியிருந்தான். உயர்தர வகுப்பில் படிக்கின்றோம் என்பதே அவனுக்கு ஒரு நிமிர்வைக் கொடுத்திருந்தது. ஒன்று அல்லது இரண்டு அப்பியாசக் கொப்பிகள் மட்டும், அதையும் சைக்கிளின் பின் பக்கத்தில் வைத்துக் கொண்டு, ஏதோ சில மணிநேரங்கள் பாடசாலைக்கு போய் வருவது நல்ல ஒரு அனுபவமாகவே அவனுக்கு இருந்தது. அப்படியே அருகிலேயே இருக்கும் தனியார் கல்வி நிலையத்திலும் சேர்ந்திருந்தான். பாடசாலை விட்டு வந்தவுடன் தனியார் கல்வி நிலையத்திற்கு போய்விடுவான். அங்கே போய் அதை நடத்திக் கொண்டிருப்பவருக்கு ஒத்தாசையாகவும் நின்றுகொள்வான். தனியார் கல்வி நிலையத்திற்கு என்று வெள்ளையில் இல்லாத இன்னொரு முழுக்காற்சட்டை, 'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் கமல் போட்டு வருவதைப் போன்ற ஒன்று, வைத்திருந்தான். அவனுடைய சித்தப்பா ஒருவர் பெறாமகன் பெரிய படிப்புகள் படிக்கின்றானே, தான் எதையாவது செய்தே ஆகவேண்டும் என்று, இந்த இரண்டாவது முழுக்காற்சட்டைக்கான செலவைப் பொறுப்பேற்றிருந்தார். அதுவே சித்தப்பா முறை என்றபடியால் அவன் வீட்டில் ஒத்துக் கொண்டிருந்தார்கள். இதையே ஒரு மாமன் முறை உள்ளவர் செய்யக் கேட்டிருந்தால், அவன் வீட்டில் ஒத்துக் கொண்டிருக்கவேமாட்டார்கள். இதுவே ஒரு கடமையாகி, அது எங்கே போய் முடியுமோ என்ற பலமான ஒரு காரணம் இதன் பின்னால் இருந்தது. அவனுக்கு சொந்தத்தில் ஏழு எட்டு மச்சாள்மார்கள் இருந்தனர். இன்று இப்பொழுது விடியப் போகும் காலையில் சாதாரணதர கணிதபாட பரீட்சை. மழை தொடர்ந்து மூன்று நாட்களாக பெய்து கொண்டிருந்தது. போன தடவை அவன் கணிதபாட பரீட்சை எடுத்ததிற்கும், இன்றைக்கும் ஏதாவது வித்தியாசங்கள் இருக்கின்றதா என்ற யோசனை அவன் மனதில் ஓடியது. போன தடவை மழை பெய்யவில்லை என்பதைத் தவிர வேறு எதுவும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை. இந்த காலப்பகுதியில் அவன் ஒரு நாள் கூட கணிதம் படித்திருக்கவில்லை. போன தடவை வந்த அதே பரீட்சை முடிவு தான் இந்த தடவையும் வரப் போகின்றது என்பது தெளிவாகவே அவனுக்கு தெரிந்தது. இப்பொழுது என்ன செய்யலாம் என்று நினைத்தபடியே நிமிர்ந்துபடுத்தான். நிலத்தில் விழுந்த மழை ஒழுக்கு ஒன்று தெறித்து அவன் முகத்தில் வந்து விழுந்தது. அது விழுந்த இடம் சில்லென்று குளிர்ந்தது. (தொடரும்....................)
  12. சுதந்திரதினம் நாளையாம்…. தம்பி எத்தனைபேர் நாளைக்கு கொழும்பு போறியள்.. போனும் புதிசாய் வாங்கியிருப்பியள் போதாக்குறைக்கு பேசிலும் காசு நிரம்பி வழியும்.. கால்பேசுத் திடலில் கையில் போன் தக தகவென்று படம் பிடிக்க வாய் என்னவோ வர்ணஜாலம் செய்யும்.. இதுக்கென்ன உங்கடை காசா போகுது.. வருந்தி உழைக்க அண்ணன் வெளிநாட்டில்… வட்டியா குட்டியா.. வாயிலை வந்ததை சொல்லி சுதந்திர தினத்தை வாழ்த்து.. வசனங்கள்.. போட்டு வருகைதரும் பார்வையாளர் தொகை கூட்ட வார்த்தையை கவனமாகப் பாவி… வல்வெட்டித்துறைக்கு அனுரவந்ததை அடித்துத் துரத்திய இடத்தில் அனுரவந்து வெற்றி முழக்கம்…. தலைப்பு அருமைதம்பி…இங்கு தலை குனிந்தது..தமிழினம்தான்.. உன்னுடைய யூடுயூபின்பெயரோ ஈழம் ஸ் ரீட் வு லக் நிச்சயம் உனக்கு சுதந்திரம் விளையாடு… வார்த்தைக்கு வார்த்தை அனுர புகழ்பாடும் தம்பி.. மகிந்தவின் வீடு கிழப்பலுக்கு வார்த்தையாலம்தான் செய்வார் மகிந்தவுக்கு வடிவாக கடிதம் எழுத மாட்டார் ஏன் தெரியுமா தம்பி…. தென்பகுதி அரசியல்வேறு.. வடபகுதி அரசியல் வேறு… வார்த்தை ஜாலத்தால் வெட்டிவிழுத்தலாம் வடபகுதியை. ஏனெனில் எழுத்து மூலத்தில் எதையும் நீங்கள் கேட்கமாட்டியள் தலைவர்கள் முதல் தம்பிவரை பூம் பூம் மாடுகள்…இதுதான் அவருடைய சுதந்திரம் படம் கிளியர் இல்லை உடனடியாக போனுக்கு காசனுப்பு அண்ணன் உயிருக்கு பயந்தோ உழைப்புக்காகவோ வெளிநாட்டில் அசைலம் அடிக்க உதவினதும் ஈழப்போராட்டம்தான் தம்பி அந்த நன்றிக் கடனாவது உனக்கிருந்தால் உப்பிடியெல்லாம் தலைப்புப்போட்டு உசுப்பேத்த மாட்டாய் தம்பி உனக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது தம்பி.. அனுபவி ராசா அனுபவி.. பிரியாணிக்கடை பரோட்டக்கடை போயே மில்லியனில் உழைப்பவன் காசு வாங்கிவிட்டு கடை திறக்க வந்தவரை… கோயில் கட்டி கும்பிடாத குறையாக முன்னாலும் பின்னாலும் வழிந்து திரிந்தியளே அப்பவே அவன் நினைத்திருப்பான் இவங்களா ஈழத்துக்கு போராடின சனம்.. இந்த ஜன்மங்களா அவ்வளவுக்கு வழிகின்றீர்களே உங்கடை சுதந்திரதாகம் ஓசிப் பிரியாணிக்கும் ஓடி ஒடி படப்பிடிப்புக்கும்தான் சரி அவன் முன்னொரு தடவை சொன்னது சரியென நினைத்திருப்பான்... போதும்..போதும் போன் கிடைத்தால் போறடமெல்லாம் போகஸ் பண்ணி படமெடுத்து போடுவது உங்கள் சுதந்திரம் தம்பி இப்பவும் போரில் தொலைத்தவர்களை தேடும் உறவுகளை யோசியுங்கள் நிலமிழந்து அலைபவரை பாருங்கள் உறவினரை இழந்த அனாதைகளை யோசியுங்கள் அப்ப தெரியும் உங்கள் சுதந்திரத்தின் வலி அனுபவியுங்கள்...உங்கள் சுதந்திர தினத்தை
  13. 🤣............... நூறு நாட்கள் வேலை திட்டத்தில் வேலையும் கொடுக்கின்றார்கள் இல்லை, இதுவரை செய்த வேலைகளுக்கு சம்பளமும் கொடுக்கவில்லை என்று போன வாரமும் தமிழ்நாட்டில் ஒரு போராட்டம் நடந்தது.................... அங்கு, வசீ சொல்லியிருப்பது போலவே, மேட்டுக்குடி மக்களுக்கும், அடித்தட்டு மக்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளி மிக அதிகம்.................
  14. றோ.. ஓணாண்டி றோ. சீமான் றோ.. கபொஇத்தன் றோ.. உங்கட வீட்ட புள்ளகுட்டியையும் றோ எண்டுவியள் இன்னும் கொஞ்சநாள் போக.. 🤣🤣 இந்தாளுக்கு றோ விசர் புடிச்சிருக்கு..🤣🤣 இரவும் பகலும் கம்பியூட்டர்ல இதையே எழுதிக்கொண்டிருந்தா அடுத்தது வீட்டில மனுசியயும் நீ றோ ஆள்தான எண்டு கேக்குற நாள் கனதூரம் இல்ல..🤣🤣 புல்லா மேல்வளம் தட்டப்போகுது துலைவார் றோவால..🤣🤣
  15. அவ‌ர் பெரிய‌ விஸ்னேஸ் ஆளை இருந்தால் ஊதிய‌ம் வேறு மாதிரி கூட‌ இருக்க‌லாம் சாதார‌ன‌ கூலி தொழில் செய்ப‌வ‌ர்க‌ளுக்கு பென்ச‌ன் காசு மிக‌ குறைவு அண்ணா............... பெரிய‌ ஜ‌பிஎஸ் மார் கூட‌ 3000 அவுஸ் டொல‌ர் எடுக்க‌ மாட்டின‌ம் பென்ச‌ன் போன‌ பிற‌க்கு................. இந்தியாவில் ப‌ண‌க்கார‌ர்க‌ளை விட‌ பிச்சை கார‌ர்க‌ள் தான் அதிக‌ம் டென்மார்க்கில் இள‌ம் பென்ச‌ன் ஆட்க‌ளுக்கு 3024 அவுஸ் டொட‌லர்..............சில‌ருக்கு 4000 அவுஸ் டொல‌ரும் கொடுக்கின‌ம் 66வ‌ய‌துக்கு பிற‌க்கு இந்த‌ நாட்டு பென்ச‌ன் காசு மிக‌ மிக‌ குறைவு......................
  16. உண்மை அண்ணா இவ‌ரின் க‌ட‌ந்த‌ கால‌ க‌ணிப்புக‌ள் பிழைச்ச‌து கிடையாது................ந‌ல்ல‌தே ந‌ட‌க்க‌ட்டும்🙏🥰👍.....................................
  17. அன்றிலிருந்து இன்று வரை என்னுடைய அணி இந்திய அணியே.............😜. 80ம் ஆண்டுகளில் கிரிக்கெட்டை மிக அதிகமாக பின்பற்றியிருக்கின்றேன் (ஆனால் கிரிக்கெட் விளையாடினது மிகக் குறைவு, உதைபந்தாட்டம் தான் அப்போது எப்போதும் விளையாடுவது....). இந்திய வீரர்களைத் தான் பிடிக்கும். பின்னர் கிரிக்கெட்டுடன் எந்த தொடர்புமே இருந்ததில்லை............... கடந்த டி - 20 உலகக் கோப்பை களப் போட்டி வரை. இந்திய அணி மீது இன்னமும் அதே அபிமானம் இருக்கின்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெல்லக் கூடும் என்ற ஒரு நினைப்பிலும் (எந்த விதமான ஆராய்வுகளும் இல்லாமலேயே), களப் போட்டி கலகலப்பாக இருக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் பக்கம் சாய்ந்து இருக்கின்றேன். அதிலும் என்னுடைய தெரிவு இந்தியா - பாகிஸ்தான் ஃபைனல்................🤣.
  18. பிச்சைக்காரனுக்கு பிச்சை எடுப்பதற்க்கு புண் தேவைதான். அம்மண்ணின் மக்களிடம் கேட்டு பாருங்கள், அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு வட்டுவாகல் பாலம் எவ்வளவு முக்கியமானது என்று.
  19. விஜயலட்சுமி : `வழக்கை சாதாரணமாக முடித்து விட முடியாது' - சீமான் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் RANI KARTHIC2 Min Read இந்த வழக்கில் 12 வாரங்களுக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் காவல்துறைக்கும் நீதிபதி உத்தரவிட்டார். Published:Today at 2 PMUpdated:Today at 2 PM சீமான் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். சீமான் அதில், கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை 2012ஆம் ஆண்டிலேயே திரும்பப் பெற்துக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும், போலீஸார் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி இருந்தார். சீமான் தாக்கல் செய்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், `ஏற்கனவே 2011 -ம் ஆண்டு அளித்த புகாரை விஜயலட்சுமி திரும்ப பெற்றுக் கொண்டதாகவும், பின்னர் 2023 ஆம் ஆண்டு கொடுத்த புகாரையும் அவர் திரும்ப பெற்றுக் கொண்டதாகவும்’ தெரிவித்தார்.தூண்டுதலின் பேரில் கொடுக்கபட்ட புகார் அடிப்படையில் பதியப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2008 ஆம் ஆண்டு மதுரையில் உள்ள கோவிலில் இருவரும் மாலை மாற்றிக்கொண்டதாக தெரிவித்தார். மேலும், 2008 ஆம் ஆண்டு முதல் பல முறை கட்டாயப்படுத்தி விஜயலட்சுமியுடன் சீமான் உறவு வைத்திருந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி கொடுத்ததாலேயே 2 முறை சீமானுக்கு எதிரான புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார் என்பதால், இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது என்றும் அரசுத்தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, விஜயலட்சுமி, சீமானின் முதல் மனைவியா? என கேள்வி எழுப்பினார். சென்னை உயர் நீதிமன்றம் மேலும், இந்த வழக்கை சாதாரணமாக முடித்து விட முடியாது என தெரிவித்த நீதிபதி, விஜயலட்சுமி புகாரை திரும்ப பெற்றாலும் பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் காவல்துறை சீமானுக்கு எதிரான புகாரை விசாரிக்க வேண்டும் எனக் கூறி, சீமானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் 12 வாரங்களுக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் காவல்துறைக்கும் நீதிபதி உத்தரவிட்டார். https://www.vikatan.com/government-and-politics/judiciary/vijayalakshmi-case-seeman-case-dismissed?pfrom=home-main-row 12 வாரம் டைம் இருக்கு, தன் காவாலிகளை விட்டு விஜி அண்ணியை தாஜா பண்ண🤣. ஆனால் நீதிபதி விடுவாரா? வழக்கை அமித்ஷா வேறு நீதிபதிக்கு மாற்றி கொடுப்பாரா? அல்லது நள்ளிரவில் உதை நிதிக்கு போன் போட்டு காலில் விழுந்து வழக்கை அணைக்கப் பாப்பாரா? அடுத்த மூன்று மாதம் அண்ணன் சுடுதண்ணி குடிச்ச குதிரை போல ஓடி திரியப்போறார்.
  20. அதிகாலைப் பொழுது ஆழ்ந்துநான் உறங்கையிலே தூக்கத்தில் மனத்திரையில் எழுந்தது காட்சியொன்று! பசும்புல் நிறங்கொண்ட பச்சைச் சேலையுடன் பல்லவன் சிற்பமொன்று என்னருகில் நின்றதுபார்! ஆசையுடன் கையிரண்டில் அள்ளி நானெடுத்தேன் வஞ்சிக் குமரியவள் வளையல்க் கையிரண்டும் மாலையாய் எந்தோளில் விழுந்தது போலுணர்ந்தேன்! அல்லிப்பூ இதழின் அழகுக் கோலத்தால் ஆசையாய் முத்தமொன்று அவளிடம் கேட்டுவிட்டேன்! துள்ளிக் குதித்திறங்கித் தூக்கத்தைக் கலைத்துவிட்டாள் கையில் மிதக்கும் கனவேயது என்றுணர்ந்தேன்!
  21. டிஸ்கி மேற்கு நாடுகளில் கூட பாலியல் வல்லுறவு வழக்குகள் தண்டணையில் முடிவது மிக குறைவான சதவீதமே. அப்படி இருக்க - ரோவின் ஏஜெண்டான, மோடிக்கு இஸ்டமான (அவரே சொன்னது) சீமான் அதிமுக, திமுக இரு அரசுகளோடும் டீல் பேசி வழக்கை இரு தடவை ஒன்றும் இல்லாமல் ஆக்க முயன்றுள்ளார். விஜயலட்சுமிக்கு மனதளம்பல் இருக்கலாம். அதனால் மட்டுமே அவர் சொல்வது பொய் என்றாகாது. தூசண திருமுருகன், பாக்கியராசன் போன்ற புரோக்கர்களிடம் பேசி, அண்ணன் இனியும் உங்களை திருமணம் செய்வார், மாதாந்த ஜீவனாம்சம் தருவார் என்ற பொய்களை நம்பாமல் - வழக்கை தைரியமாக நடத்தி, சட்டப்படி தகுந்த நட்ட ஈட்டை பெற முயல வேண்டும் விஜி அண்ணி. அண்ணன் நீலாங்கரையில் எட்டு கோடிக்கு வீடு கட்டுகிறார். அதில் பாதி பெறுமதியை விஜி அண்ணி கேட்கலாம். இங்கே நான் பலதடவை இதை எழுதிய போதும் தம்பிகள் இதை கடைசிவரை விளங்கிகொள்ளவே இல்லை. அதுசரி சீமான் மேனியாவில் - சிறுமிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையை கூட, இருவர் மனமொத்த உறவு என முட்டு கொடுக்க தயாரான ஜெண்டில்மேன்களும், குஞ்சுமோன்களும், இதையயா ஏற்றுகொள்ளப்போகிறார்கள்.
  22. எல்லாம் இந்த kamala harris ஆல் வந்த வினை .😀
  23. இப்படி அனுபவம் எனக்கு அடிக்கடி நிகழும். 1987 க்கு முன் நான் இந்திய ரசிகன். அப்போ சின்ன பிள்ளை. 1987-2009 வரை இலங்கை ஆதரவு. என்னை சுற்றி அநேகர் இலங்கை எதிர்ப்பு. அதுவும் 1995/96 வரை இலங்கை போகும் இட்மெல்லாம் தோற்கும். என்னை வச்சு செய்வார்கள். 2009 க்கு பின் ஆப்கானிஸ்தான் ஆதரவு. இப்பவும் வச்சு செய்வாகள். ஆனால் வேண்டும் எண்டு செய்வதில்லை. உங்கள் நண்பி ஒவர் சென்சிடிவ் என நினைக்கிறேன். அண்ணை…அடிப்பது பேஸ்போல் மட்டையால்…..🤣 #இப்பவே கண்ணை கட்டுதே🤣
  24. நாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்களுடன் அமிர்தசரஸில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்! சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்களைக் கொண்ட மூன்றாவது குழுவை ஏற்றிச் சென்ற அமெரிக்க இரணுவ விமானம் ஞாயிற்றுக்கிழமை (16) இரவு அமிர்தசரஸில் தரையிறங்கியது. அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான C-17 Globemaster விமானம் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் அமிர்தசரஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த 10 நாட்களில் இதுபோன்ற மூன்றாவது வருகை இதுவாகும். நாடு கடத்தப்பட்ட 112 பேரில் 44 பேர் ஹரியானா, 33 பேர் குஜராத், 31 பேர் பஞ்சாப், 2 பேர் உத்தரபிரதேசம் மற்றும் தலா ஒருவர் உத்தரகாண்ட் மற்றும் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர்கள். சட்டவிரோதமாக குடியேறிய சிலரின் குடும்பத்தினர் அவர்களை வரவேற்பதற்காக அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜீ சர்வதேச விமான நிலையத்திற்கு இதன்போது வருகை தந்திருந்தனர். குடியேற்றம், சரிபார்ப்பு மற்றும் பின்னணி சோதனைகள் உட்பட அனைத்து சட்ட நடவடிக்கைகளும் முடித்த பின்னர், நாடு கடத்தப்பட்டவர்களை அவர்களுக்கு சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருந்தது. சனிக்கிழமை இரவு, 116 சட்டவிரோத இந்தியக் குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற இரண்டாவது அமெரிக்க இராணுவ விமானம், அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது இந்த 116 நாடுகடத்தப்பட்டவர்களில், 65 பேர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள், 33 பேர் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள், 8 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள், தலா 2 பேர் உத்தரப் பிரதேசம், கோவா, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள். மேலும் இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் இருந்து தலா ஒருவரும் அடங்குவர். மூன்று விமானங்களிலும் இதுவரை மொத்தம் 332 சட்டவிரோத இந்திய குடியேறிகளை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. Athavan Newsநாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்களுடன் அமிர்தசரஸில் தரையிறங்...சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்களைக் கொண்ட மூன்றாவது குழுவை ஏற்றிச் சென்ற அமெரிக்க இரணுவ விமானம் ஞாயிற்றுக்கிழமை (16) இரவு அமிர்தசரஸில் தரையிறங்கிய...
  25. நல்லாயிருக்குது அல்வாயன்...............❤️. இப்படி ஒன்றை எழுதி என் வீட்டில் காட்டினால், நம்பப் போவதில்லை............ 'காலையில் கூட மனுஷன் நல்லாத்தானே இருந்தது............' என்று குழம்பிப் போவதற்கு சாத்தியம் அதிகம் இருக்கின்றது.........🤣.
  26. தகவல்களுக்கு நன்றி. தேசம் நெற் ஜெயபாலன், நிஷா ஆகியோர் சொல்வதன் படி: கைது செய்தது யாரெனத் தெரியாது கைது செய்த போது அடையாளப் படுத்தல் நிகழவில்லை "கைது செய்கிறோம், இவை உங்கள் உரிமைகள்" என்று சொல்லப் பட்டதாகவும் தெரியவில்லை. 48 மணி நேரங்கள் யாருக்கும் கைது பற்றி அறிவிக்கவில்லை. இவை யாவும் உண்மையாக இருந்தால் (இவை உண்மை என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது) இது சட்ட விரோத தடுத்து வைப்புத் தான். தீர்வு? Habeas corpus எனப்படும் ஆட் கொணர்வு மனு. சுவிஸ் அரசியமைப்பிலேயே இது உள்ளடக்கப் பட்டிருக்கிறது. ஐரோப்பிய மனித உரிமைகள் சாசனத்திலும் (EHRC) இது இருக்கிறது. தடுத்து வைக்கப் படும் ஒருவருக்கு நீதிபதி முன் தோன்றி, அநீதியான கைதானால் விடுதலை பெறும் உரிமை இது. தேவையானவை எவை? சுவிசில் பணியாற்றும் அனுமதியுடைய ஒரு சட்டத் தரணி, அவருக்கான , கொடுப்பனவு, சமர்ப்பிக்க ஒரு நீதி மன்றம். என் கேள்விகள்: ஒரு மாதத்திற்குத் தடுத்து வைக்க பொலிசால் மட்டும் முடியாது. எனவே ஏற்கனவே ஒரு நீதிபதி முன் கொண்டு சென்றிருப்பார்கள். அந்த நேரம் பொஸ்கோவிற்காக யாராவது சட்டத்தரணிகள் கூட இருந்தார்களா அல்லது public defender அரசே வழங்கியதா? ஏன் கைது செய்தார்கள் என்று வெளியே இருப்போருக்குத் தெரியாது. பொஸ்கோவிற்கும் இது வரை தெரியாதா? அப்படி இருக்க வாய்ப்புகள் வெகு குறைவு. "தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்" என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் தான் இவ்வாறு சந்தேக நபருக்கே காரணம் சொல்லாமல் தடுத்து வைக்கும் ஏற்பாடுகள் இருக்கின்றன. இவர் அப்படி இருக்க வாய்ப்பில்லை. எனவே, அவருக்குக் குடும்பம் இல்லா விட்டாலும், அவரது நண்பர்கள் "எங்களுக்கு ஒன்றுமே புரியல" என்று கையைப் பிசைவதை விட்டு, அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டிய நேரமிது. பி.கு: உங்களதும், ஓணாண்டியாரதும் கருத்துகளுக்கு கோசான் தடித்த எழுத்தில் பதிலாகத் தந்திருப்பவை தான் எனது கருத்தும். எம்மவரான பொஸ்கொ - அவரது அரசியல் நிலைப்பாடு எதுவாக இருந்தாலும் - மனித உரிமைச் செயல்பாடுகளால் இந்தக் கஷ்டங்களை எதிர் கொள்கிறார். இதில் இருந்து அவரைக் காக்க இங்கே கருத்துரைப்பது பெரிய பலனைத் தரும் விடயமாக இருக்காது. ஆனால், நீங்கள் இருவரும் பொஸ்கோவின் அனுசரணையில் ஒரு தமிழக சாக்கடை அரசியல் வாதியை தேசிய ஆர்வலராகக் காட்டவும், உங்களை "நாங்கள் எவ்வளவு உசத்தி தெரியுமா?" என்று காட்டவும் முயற்சி செய்வது தான் "ஆட்டுக்காக ஓநாய் அழும்" சீனாக எனக்குத் தெரிகிறது.
  27. நல்ல படிப்பினைக் கதை அண்ணை, பொதுவா சீனர்களிடையில் எதையும் மலிவா வாங்கினாத் தான் பெருமை, ஆனா அந்த அழகி வேற மாதிரிப் போல😁.
  28. எமது ஊரிலும் பலர் செல்வ செழிப்பாக வாழ்கிறார்கள். பெரிய பெரிய கோட்டல்களில் போய் சாப்பிடுகிறார்கள். வாகனங்கள் மோட்டார் சைக்கிள்கள் வைத்து ஓடுகிறார்கள். அவர்களோடு ஒப்பிடும் போது நாமெல்லாம் பூச்சியம் என தோன்றும்.
  29. அண்ணன் மைன்ட்வாய்ஸ்: அவனுக்கு சுவிஸ் பாங்க் கணக்குத்தான் இருக்கு. நான் ஒரு லெட்டர் குடுத்தா சுவிஸ் அரசே வீசா கொடுக்கும் தெரியுமா🤣
  30. பிடித்து அனுப்பி விட்டார்களோ?
  31. 25 பேருக்கு மேல் எனது ஷீற் தாங்காது! ஒருவர் வந்தால் பிரச்சினையில்லை! இந்தப் சம்பியன்ஷிப்பில் அதிக மட்சுகள் இல்லாததால் புள்ளிகள் கடைசிநாள் அன்றுதான் அதிகம் மாறும். யாழ்களப் போட்டியில் இதுவரை கலந்துகொண்டோர் 1 ஈழப்பிரியன் 2 ஏராளன் 3 வீரப் பையன்26 4 சுவி 5 அல்வாயன் 6 தமிழ் சிறி 7 நிலாமதி 8 ரசோதரன் 9 நுணாவிலான் 10 வசீ 11 வாத்தியார் 12 நந்தன் 13 செம்பாட்டான் 14 குமாரசாமி 15 நியாயம் 16 வாதவூரான் 17 சுவைப்பிரியன் 18 எப்போதும் தமிழன் 19 புலவர் 20 கோஷான் சே 21 நீர்வேலியான் 22 கந்தப்பு 23 பிரபா 24 கிருபன்
  32. @புலவர் புல‌வ‌ர் அண்ணா த‌ய‌வு செய்து ர‌சோத‌ர‌ன் அண்ணாவின் க‌ருத்துக்கு சிவ‌ப்பு புள்ளி குத்தின‌த‌ , நீக்கி விடுங்கோ................யாழில் ந‌ட‌ந்த‌ அனைத்து போட்டிக‌ளிலும் ஒரு சிவ‌ப்பு புள்ளி கூட‌ இருந்த‌தில்லை...............இந்த‌ திரியிம் க‌ட‌ந்த‌ கால‌ திரிக‌ள் போல் ஜாலியா ப‌ம்ப‌லா இருப்ப‌தையே உற‌வுக‌ள் விரும்புவின‌ம் நானும் அதையே விரும்புகிறேன், நீங்க‌ளும் அதையே விரும்பிவிங்க‌ள் என‌ ந‌ம்புகிறேன் அண்ணா🙏🥰....................................
  33. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நுணா.
  34. எனது வாழ்த்துக்களும் நுணா…!
  35. காலக் கிரமத்தில் எல்லாம் சரி வரும் என்று நம்பிறன்..பனிப்பொழிவால் குழம்பிப் போய் இருக்கும் கனடா போல் இருக்கிறது தற்போதைய யாழ்.🤔
  36. சைனா காரரிடம் சொல்லி வைத்தால் "திருடர்களுக்கு" நல்ல படம் படிப்பிப்பார்கள்.
  37. பிறந்தநாள் வாழ்த்துக்கள் நுணாவிலான் அண்ணை, வளத்துடன் வாழ்க.
  38. சுமந்திரனை.... போற, வாற இடம் எல்லாம், மக்கள் விரட்டி அடித்துக் கொண்டு திரிகிறார்கள். 😂 மற்றவர்கள் என்றால்... தூக்கில் தொங்கி இருப்பார்கள். 🤣
  39. போட்டி விதிகளின் படி, இப்படி எல்லாம் மகிழ்ச்சி அடையக் கூடாது. வேறு அணிகள் வெல்லும் போது மகிழ்ச்சி அடைந்தால், மைனஸ் புள்ளி..............😜. நீங்கள் தெரிவு செய்த அணி வெற்றி பெற்றால், உபிசி (உருண்டு பிரண்டு சிரிக்கவேண்டும். தாங்க்ஸ் செம்பாட்டான்......) நீங்கள் தெரிவு செய்த அணி தோற்றால், உபிஅ (உருண்டு பிரண்டு அழவேண்டும்............)
  40. 1987 இல் கொஞ்சப் பேருக்கு பிரபாகரன் இருக்கிறரோ என்ற சந்தேகம். ஏன் இப்பவும் பிரபாகரன் அல்ல அது போலி என்று நம்பிறவை இருக்கினம். அந்தளவுக்கு தமிழின எதிரிகளும் கிந்திய உளவு அமைப்புக்களும் ஒட்டுக்குழுக்களும் போடுற விச விடய விதைகள் உளவியல் போருக்கான ஆணிவேராகும். சீமான் குறித்த சர்ச்சைகள் கட்டுமரம் கருணாநிதி வாரிசுகள் சீமானின் அரசியலை கொள்கை ரீதியாக எதிர்கொள்ள முடியாமைக்கு காட்டும் எதிர்வினை நச்சு விதைகள். மக்கள் தான் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். கேவலம்.. நம்மவர்களே.. அந்த நச்சு விதைகளை விருட்சமாக்கி காட்டுவது தான். வைகோ வன்னி சென்று தலைவரை சந்தித்த போதும் அப்போதும் இதையே தான் விதைத்தார்கள். இப்பவும் அதுதான். காரணம் பிரபாகரன் என்பது வெறும் பெயரல்ல.. தமிழர்களின் பலம் என்று எதிரிகள் நினைக்கிறார்கள். அவ்வளவும் தான். அதே எதிரிகள் எடுபிடிகள் இங்கும் உள்ளனர். எங்கும் உள்ளனர்.
  41. எல்லாருக்கும் இப்படி ஒரு அனுபவம் வந்து தான் போகும் போல, உடையார்? நீங்களும் கன்னி ராசிக்காரன் போல…!😔
  42. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி NZ 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி SA 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் IND 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS 8 ) குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் ENG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் IND 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? IND NZ 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #A1 - IND #A2 - NZ 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? AUS SA 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #B1 - AUS #B2 - SA 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? AFG 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? IND 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? AUS 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? IND 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? SA 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? AFG 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? Rohit Sharma 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? IND 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? RavindraJadeja 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? IND 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? Rohit Sharma 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? SA 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? RavindraJadeja 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? SA 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? RavindraJadeja 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? IND
  43. வாழும்வரை போராடு . .......... 04. காலங்கள் எதற்காகவும் காத்திருப்பதில்லை. அவை தன் பாட்டுக்கு நகர்ந்துகொண்டே இருக்கின்றன. இந்த இரு வருடங்களில் இராகவன் சந்துரு வாழ்க்கையிலும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து விட்டிருந்தன.....ஒரே இடத்தில் வசித்தும் வேலைப்பளுவால் அவர்கள் சந்திப்பதும் அரிதாகவே போய்விட்டிருந்தது. இராகவன் ஸ்ரீ காந்துடன் சேர்ந்து ஜவுளி வியாபாரமும் அதனூடே சிறிதாகவும் பெரிதாகவும் கடத்தல்களும் செய்து பெரும் முதலாளியாக வந்திருந்தான். யாழ்ப்பாணம் பெரியகடை வீதியில் ஒரு பெரிய ஜவுளிக்கடையும் வாங்கி விட்டிருந்தான் . அத்துடன் இரண்டு புதிய இசுசு லொறிகளும் யாழ்ப்பாணம்--- கொழும்பு என்று ஓடுகின்றன. சராசரி பதினைந்துபேர்கள் அவன் கடையிலும் லொறியிலுமாக வேலை செய்கின்றார்கள். அவனும் ஸ்ரீகாந்தும் தங்களது ஒரு ஜீப்பிலோ காரிலோ திரிந்து திரிந்து இடையில் வரும் தடைகளை விலக்கி சுழன்று சுழன்று வேலை செய்கின்றார்கள். சந்துருவும் இந்த இரு வருடங்களில் மாணிக்கம் ஜூவலரியில் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்து நகைத்தொழிலையும் அதன் நுணுக்கங்களையும் நன்றாகக் கற்றுக் கொண்டு வருகின்றான். மாணிக்கத்தின் இரு மகன்களுடனும் சேர்ந்து அவர்களுக்கு உதவியாக கடையில் வியாபாரம் செய்வதும், அன்றன்றைய வரவு செலவுகளைக் கணக்கெடுத்து வங்கிகளில் பணம் வைப்பிடுவது என்று மிகவும் நேர்மையாக அவர்களுக்கு உதவியாக இருந்தான். மற்ற நேரங்களில் கடையின் உள்ளே பட்டறையில் மோதிரம், காதணிகள்,வளையல்கள், சங்கிலிகள் என்று எல்லாம் துப்பரவாகவும் அழகாகவும் செய்யக் கற்றிருந்தான். கல்யாண நாட்களில் தாலிக்கொடி பின்னும் வேலைகள் அதிகம் வருவதால் அவர்களின் அனுமதியுடன் கடையில் இருந்து தங்கக் கம்பிகளை வீட்டிற்கு எடுத்துச் சென்று தனது தந்தை தம்பிகளுக்கும் அதை இழுத்துப் பின்னுவதற்கு பழக்கி விட்டிருந்தான். பாய், பெட்டி இழைப்பதில் வரும் வருமானத்தைவிட இதில் அதிக வருமானம் வருவதால் அவர்களும் இதை ஆர்வமுடன் பழகிச் செய்துகொண்டு வருகின்றார்கள் . அதனால் மாணிக்கம் ஜுவல்லரியில் வாடிக்கையாளர்கள் குடுக்கும் வேலைகள் தாமதம் இல்லாமல் அவர்களுக்கு கிடைத்துக் கொண்டிருந்தன.வியாபாரமும் அமோகமாய் நடந்து கொண்டிருந்தது. வீட்டிலும் அவர்களது வாழ்வும் மேம்பட்டிருந்தது. சென்ற சில மாதங்களுக்கு முன் மாணிக்கம் மூப்பின் காரணமாய் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார்.அதனால் அவர் தனது இரு மகன்களையும் குடும்பத்துடன் வீட்டிற்கு அழைத்திருந்தார். அவர்களோடு அவர்களது குடும்ப வக்கீலும் வந்திருந்தார். அவரது மூத்த மகன் கொழும்பில் பெரிய ஷோரூமுடன் கூடிய நகைக்கடை வைத்திருக்கின்றார். அவருடைய கடைக்கும் இங்கிருந்தே நகைகள் எல்லாம் போய் வந்து கொண்டிருக்கின்றன. இப்போது பெரும்பாலும் சந்துருவே கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் அவர்களுடைய ஒரு வானில் பொருட்களை ஏற்றி இறக்கிக் கொண்டு வருகின்றான். மாணிக்கத்தின் இளையமகன் தந்தையுடன் இருந்து இந்தக் கடையை நடத்தி வருகின்றான். மேலும் கடையில் ஆரம்பகாலத்தில் இருந்து அவருடன் கூடவே வேலைசெய்து வந்த தொழிலாளர்களும் அங்கு வந்திருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் மாணிக்கம் அவ்வப்போது யாழ்பாணத்திலேயே ஆங்காங்கே வீடுகள் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அவர்களுடைய வீட்டு வைபவங்கள் மற்றும் பெரிய செலவுகள் யாவையும் மாணிக்கமே மனங்கோணாது செய்துகொண்டு வந்திருந்தார் . அதனால் அவர்கள் எல்லோருடைய கணக்குகள் எல்லாம் அதிக சிரமமின்றி முடித்து தேவையான பணம் எல்லாம் குடுத்து அவர்களை ஓய்வெடுக்க அனுப்பி வைத்தார்கள். இக்காலகட்டத்தில் மாணிக்கத்தின் கடையில் அவரது சகோதர சகோதரிகளின் பிள்ளைகள் என்று பலர் வந்து வேலை செய்கிறார்கள். அதனால் உறவினர்களுக்குள்ளே சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வருவது வாடிக்கையாகி இருந்தது. அது சிலசமயங்களில் சந்துருவையும் பாதித்து வருகின்றது. அதனால் அவனும் இப்பொழுது ஒரு முடிவெடுக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறான். வாருங்கள் போராடலாம் . ........ 🐐 🐐 🐐 🐐.
  44. வாழும்வரை போராடு . ........ 03. பின்பு நாகலிங்கம் மகனைப் பார்த்து என்ன தம்பி நேற்றிரவு வீட்டுக்கு வர நேரமாயிட்டுது போல. ஓமப்பா நேற்று மாலை நானும் இராகவனும் முனியப்பர் கோயிலடியில் இருந்து, படிப்பும் முடிந்து போட்டுது இனி நாங்கள் என்ன செய்யலாம் என்று கதைத்துக் கொண்டிருந்தனாங்கள் அதுதான் நேரம் போட்டுது. --- அப்ப நீ மேற்கொண்டு படிக்கேல்லையோ.பெரியப்பா கேட்க, இல்லையப்பா, அதுக்கு நிறைய பணம் செலவாகும். இப்ப எங்களிடம் அவ்வளவு வசதி இல்லையென்று எனக்குத் தெரியுமப்பா. தம்பியும் இரண்டு வருடங்களில் கல்லூரிப் படிப்பை முடித்து விடுவான்.... ஒரு விரக்தியில் சிரிக்கிறான். --- ஏனப்பு ஒரு மாதிரிச் சிரிக்கிறாய். தந்தை வினவ சந்துரு சொல்கிறான் அதில்லையப்பா மேலே படிக்க என்னிடம் மார்க்ஸ் இருக்கு மணி இல்லை......இராகவ்விடம் மணி இருக்கு ஆனால் மார்க்ஸ் இல்லை. அதுதான் என்னையுமறியாமல் சிரிப்பு வந்து விட்டது. --- அப்ப என்ன செய்யப் போகிறாய். --- அவன் ஜவுளி வியாபாரம் செய்யப் போகிறானாம். அதற்காக அவன் பெற்றோர்களும் அவனுக்கு மூன்று லட்சம் ரூபாய் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். என்னையும் விரும்பினால் கூட்டு சேரும்படி சொன்னான். இராகவனுக்கும் எங்கள் நிலைமை தெரியும்தானே. அதனால் என்னால் முடிந்தளவு பணம் போடு வரும் லாபத்தைப் பார்த்துப் பிரித்துக் கொள்ளலாம் என்று. என்ன செய்வது அவனுக்கும் மனம் கேட்கவில்லை. சிறுவயது முதல் இன்றுவரை நாமிருவரும் ஒன்றாய் இருந்து விட்டோம். இனியும் என்னைத் தனியே விடாமல் வியாபாரத்திலும் சேர்ந்து இருக்கலாம் என்று நினைக்கிறான். --- அப்ப நல்லதாய்ப் போச்சு நீயும் அவனுடன் சேர்ந்து வியாபாரம் செய்யலாம். பணத்துக்கு அதிகம் யோசிக்காதை, நானும் கொஞ்சம் பணம் தருகிறேன். மனிசியின் நகைகளும் இருக்கு என்று பெரியப்பா சொல்கிறார். நீங்கள் என்னப்பா சொல்கிறீர்கள். சந்துரு கேட்கிறான். ஆனால் நாகலிங்கம் ஏதோ யோசனையில் இருந்து விட்டு சொல்கிறார். எனக்கென்னமோ இது அவ்வளவு நல்லதாய்ப் படேல்ல என்று சொல்லும்போது மேலே இருந்து பல்லியும் உச்சுக் கொட்டிவிட்டு போகிறது. --- நான் அதுக்கு சொல்லவில்லை அண்ணா, பங்கு வியாபாரம் ஒருநாள் இல்லை ஒருநாள் பிரச்சினையில் கொண்டுவந்து விடும். "நட்போடு ஊடாடிய உறவு பொருளோடு உறவாடக் கெடும்" என்று ஆகிவிடக் கூடாது. இவன் எங்கட பிள்ளைதான் ஆனால் தனித்து ஒரு கைத்தொழிலும் தெரியாது. இந்தப் பிள்ளைகளின் நட்பும் இரு குடும்பங்களின் அந்நியோன்னியமும் என்றும் நிலைத்திருக்க வேண்டும். இராகவன் தந்தையுடன் இருப்பதால் வியாபார அனுபவம் கொஞ்சமாவது இருக்கும். ஒருவேளை நட்டமேற்பட்டாலும் அவர்களால் சமாளித்துவர முடியும். ஆனால் இருக்கும் கொஞ்ச விதைநெல்லையும் இழந்தபின் நம்மால் மீளவே முடியாது போகலாம் இல்லையா. தந்தையின் பேச்சை சந்துரு உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருக்கிறான். --- அப்ப அவன் என்ன செய்யலாம் என்று சொல்கிறாய், அதை முதல்ல சொல்லு.பெரியப்பா கேட்கிறார். --- ம்....முதலில் இவன் ஓரிரு வருடங்கள் ஒரு தொழிலைப் பழகட்டும். அதில் நல்ல அனுபவம் பெறட்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம்.....அதுவரை நாங்கள் இப்ப வழமைபோல் செய்கிற பாய் பெட்டி இழைத்து விக்கிற வேலையை செய்து கொண்டிருப்போம் என்று முடிவாகச் சொல்கிறார். அன்று மாலை அவர்கள் வீட்டில் எடுத்த முடிவை இராகவ்விடம் சொல்வதற்காக சந்துரு இராகவ் வீட்டிற்கு செல்கிறான். வழியில் சிறு தோப்பு உண்டு. அதனூடாக சந்துரு செல்லும்போது எதிரில் இராகவனின் தந்தை தாமோதரம் நடைப்பயிற்சி மேற்கொண்டு நடந்து வருகின்றார்.அவரைக் கண்டதும் மிகவும் பணிவாக வணக்கம் சொல்கின்றான் சந்துரு. --- அவரும் இயல்பாக என்ன சந்துரு நலமா ........ எங்கே இராகவனைப் பார்க்க வீட்டுக்குப் போகின்றாயா என்று விசாரிக்கின்றார். --- ஓம் ஐயா. அத்துடன் உங்களையும் ஒருக்கால் பார்த்து விட்டு வரலாம் என்றுதான் வருகின்றேன். --- என்ன விஷயமென்றாலும் சொல்லு, உங்களின் வியாபாரம் சம்பந்தமாகவா...... --- ஓம் ஐயா..... --- இதோ பார் சந்துரு, நீயும் என் பிள்ளை போலத்தான்.எதுவாயினும் என்னிடம் தயக்கமின்றிக் கேட்கலாம். மகன் சொன்னவன் உனக்கும் மேற்கொண்டு படிப்பதற்கு வசதி இல்லையென்று சொன்னதாக. நீ விரும்பினால் நான் அதற்கும் உதவி செய்கின்றேன். அல்லது அவனோ வியாபாரம் செய்வதென்று பிடிவாதமாய் இருக்கிறான். அப்படியென்றால் கூட உனக்கு நான் கொஞ்சம் பணமும் தருகின்றேன். --- உங்களின் அன்புக்கு மிக்க நன்றி ஐயா. ஆனால் நான் அவற்றுக்காக உங்களைக் காண வரவில்லை என்று சொல்லியபின் அன்று மதியம் அவர்கள் வீட்டில் நடந்த விவாதங்களை சொல்கின்றான். --- அதைக் கேட்டதும் அவரும் உன் தந்தை சரியாகத்தான் சொல்லியிருக்கின்றார். இதையேதான் நாங்கள் சிறுவயதில் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது என் தந்தையும் எனக்கு சொன்னவர். இராகவ்வும் அவன் தாயாரும் கஷ்ட நஷ்டம் தெரியாமல் வளர்ந்தவர்கள். அதனால் பிடிவாதம் கொஞ்சம் அதிகம். சரி.....நீ இப்போது அவன்கூட சேர்ந்து வியாபாரம் செய்யப் போவதில்லை என்றால் என்னிடம் என்ன மாதிரியான உதவி எதிர்பார்கிறாய். --- நீங்கள் சொல்வது சரி ஐயா..... நான் இப்போது உங்களிடம் கேட்பது, எனக்கு ஒரு தொழில் கற்றுக் கொள்வதுபோல் ஒரு வேலை வேண்டும். --- இது நல்ல யோசனை......நீ நல்லா வருவாய்..... இப்போது நான் உனக்கு எனது கடையில் கூட வேலை தரலாம்.....கொஞ்சம் யோசித்து ஆனால் அது சரிவராது. பின்னாளில் சிறு சிறு பிரச்சினைகள் வரலாம். பின்னும் கண்களை மூடி யோசிக்கிறார். சந்துருவும் அவர் அருகே பவ்யமாக நிக்கிறான். சற்று நேரத்தின் பின், ம்....அதுதான் சரி என்று தெளிந்து, சந்துரு எதற்கும் நீ நாளை காலை ஏழு மணிக்கு மாணிக்கம் ஜுவல்லரிக்கு வந்துவிடு. நானும் அங்கு வந்து விடுகின்றேன் எனச் சொல்லிவிட்டு தனது நடைபயிற்சியைத் தொடருகின்றார்.....! சந்துருவும் அவரது வீடு நோக்கிப் போகின்றான்...........! வாருங்கள் போராடலாம் ............ 🐇 🐇 🐇.
  45. கன நாட்கள் எழுதாமல் மண்டைக்குள்ள நிறையத் தேங்கி விட்டது😂! இந்த முறை வெவ்வேறு ஏரியாக்களில், ஒவ்வொன்றாக பல கட்டுரைகள் தர வேண்டும்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.