Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    22
    Points
    88786
    Posts
  2. செம்பாட்டான்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    1420
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    19638
    Posts
  4. Thumpalayan

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    1517
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/08/25 in all areas

  1. இதை எழுதுவதால் பல விமர்சனங்கள் வரும், ஆனாலும் அந்த சமயம் நடந்த விடயங்கள் எனது கண் முன்னாலேயே நடந்ததால் எழுதுகிறேன் 2002 O/L படித்துக்கொண்டிருந்தேன். யுத்த நிறுத்தம் ஆரம்பித்து புலிகளின் அரசியல் துறை நெல்லியடியில், மகாவித்தியாலய வீதியில் அலுவலகம் அமைத்திருந்தார்கள். நான் உயர்தரம் படிக்கத்த தொடங்கிய காலத்திலேயே (2003) தனியார் கல்வி நிலையங்களுக்கு இளம்பரிதி, பாப்பா, அமிதாப், லோரன்ஸ் போன்றவர்கள் வந்து கூட்டம் வைப்பார்கள். "இந்த சமாதானம் சர்வதேசத்துக்கு நாங்கள் காட்டும் போக்கு. எங்களைப் பலப்படுத்தவே இந்த நேரத்தை நாங்கள் பாவிக்கிறோம். இதன் பின்னர் இறுதிச்சண்டை வரப்போகுது அதுக்கு நீங்கள் வந்து எங்களுடன் இணையுங்கோ, அதுக்கு முதல் எரிமலைக்கு வந்து மக்கள் பயிற்சி எடுத்து ஆயத்தமாக இருக்க வேணும்" என்ற தொனியிலேயே அந்தக் கூட்டங்கள் இருந்தது. வன்னியிலோ நிலைமை வேறாக இருந்தது. இயக்க உயர் தளபதிகளின் குடும்பங்களுக்கு எப்போதுமே இருந்திராத சந்தர்ப்பங்கள் வாய்த்திருந்தன. பலருக்கு வாகனங்கள் வழங்கப்பட்டன, தொலைபேசி, மின்சாரம், தொலைக்காட்சி போன்ற வசதிகள் கிடைத்தது. புலம்பெயர் நாடுகளில் இருந்து வருபவர்களால் பல பரிசுகளும் கிடைத்தது. மிக நீண்ட வருடங்கள் கடுமையான யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர்களுக்கு மூச்சு விட சந்தர்ப்பம் கிடைத்தது. தலைவர் வைக்கும் கிழமை கூட்டங்களும் கொஞ்சம் கொஞ்சமாக நின்று போனது. தலைவருக்கும், வரும் புலம்பெயர் முக்கியஸ்தர்களுடனும் வெளிநாட்டு பிரதிநிதிகளுடனும் செலவிடவே நேரம் போதவில்லை. இந்த கால கட்டத்தில் தான் KP இடம் இருந்து வெளிநாட்டு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு காஸ்ட்ரோவிடம் கொடுக்கப்பட்டது. அவர்களால் ஒரு கிரேனைட் ஐக்கூட வன்னிக்குள் கொண்டு சென்று இறக்க முடியவில்லை. கப்பல் கப்பலாக ஆயுதங்கள் வந்தும் எல்லாமே மூழ்கடிக்கப்பட்டன. பலர் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளின் வலையில் சிக்கினார்கள். வெளிநாடுகளை வெட்டி ஓடிக்கொண்டிருந்த அன்டன் பாலசிங்கத்துக்கு இது எப்படி போகப்போகிறது என தெரிந்திருந்தது. ஒரு கட்ட சமாதானப் பேச்சு வார்த்தையில் அவர் சமஸ்டிக்கு ஓம் என்று போட்டு வந்த பின்னரே அவருக்கு கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டது. தமிழ்ச்செல்வனால் பாலசிங்கத்தார் போல செயற்பட முடியவில்லை. இதே காலத்தில் கருணாவின் பிரிவும் தொடங்கி இயக்கத்தை கூறு போட்டது. பல சண்டைகளில் துணிந்து முன்னேறி அடித்து நொறுக்கும் ஜெயந்தன் படையணி பல பாகங்களாக உடைந்தது. பால்றாஜ் அண்ணையையும் புற்றுநோய் கொண்டு போனது. யாழ்மாவட்டத்தில் இருந்த போராளிகளும் கொஞ்சம் கொஞ்சமாக இராணுவத்தை இலக்கு வைக்கத் தொடங்கினார்கள். கிளைமோர், கிரேனைட், பிஸ்டல் என பல விடயங்களை உயர்தர மாணவர்களை கொண்டே செய்வித்தார்கள். ஹாட்லி காம்ப் கூட இப்படியான விதத்திலே அடித்து உடைக்கப்பட்டது. தேவையே இல்லாத ஆணியான மாவிலாறை மூடி அவர்களுக்கு கொஞ்சமும் வசதியற்ற தொப்பிகல காட்டிலே சண்டையை ஆரம்பித்து ஆரம்பத்திலேயே பின்வாங்கத் தொடங்கினார்கள். மாவிலாறில் தொடங்கி முள்ளி வாய்க்காலில் முடியுமட்டும் இது நிக்கவில்லை. பல அரசியல் கொலைகள், தெற்குப் பகுதி தற்கொலைத் தாக்குதல்கள் குறிப்பாக 2006 இல் கதிர்காமரின் சினைப்பர் சூடு போன்றவை சர்வதேசத்திடம் இருந்து வந்திருக்க கூடிய கொஞ்ச நஞ்ச ஆதரவையும் இல்லாமல் ஆகிவிட்டிருந்தது. இயக்கமோ, சர்வதேசம் உதவும், ஏதாவது ஒரு நாடு தலையிடும் என நம்பியிருந்தார்கள். ஆனால் கிடைத்த சந்தர்ப்பங்களில் உறுதியான சர்தேச உறவுகளை வளர்க்க தவறி விட்டார்கள். ஆயுத ரீதியில் தங்களை கட்டமைத்தது போல அரசியல் ரீதியில் வளர்க்கவே இல்லை. இருபது வயது இளைஜன் பத்து வயசு பிள்ளையின் உள வளர்ச்சியுடன் இருப்பது போன்ற நிலை. 9/11 பின்னர் மாறி விட்ட பூகோள அரசியல் ஆயுத நிலைமைகளை தலைவர் சரியாக எடை போட்டிருக்கவில்லை. தொழில் நுட்ப ரீதியில் அவர்களின் வளர்ச்சி இலங்கை அரசின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இறுதிக் காலங்களில் கட்டாய ஆட் சேர்ப்பு, வரிகள் போன்ற காரணங்களால் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு போனார்கள். மகிந்தவிடம் மிகப்பெரும் தொகை பணத்தை வாங்கி ரணிலை புறக்கணித்தார்கள். ரணில் வெண்டிருந்தால் இயக்கம் இப்பவும் இருக்கும்.
  2. Century அடிக்கிறம். நின்று விளையாடுறம். நானும் என்பங்கிற்கு கொட்டிய குப்பைகளின் எண்ணிக்கை 600க்குக் கிட்ட வந்திட்டுது. 😁 (இதெல்லாம் ஒரு பிழைப்பு என்று சொல்லிக்கொண்டு என்ற உளமனம் கேக்குது) அட 100வது பக்கத்தைத் திறந்து வைத்ததும் நான்தான். 😁🤣
  3. ஐபிஎல் 2025இன் இன்று தர்மசாலாவில் நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸுக்குமான 58வது போட்டி முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி மிகவேகமாக 10.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 122 ஓட்டங்கள் எடுத்த நிலையில் நிறுத்தப்பட்டது. பிரியன்ஷ் ஆர்யா 70 ஓட்டங்களை 34 பந்துகளில் அடித்து ஆட்டமிழந்தார். ப்ராப்சிம்ரன் சிங் 50 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தொழில்நுட்பக் காரணங்களுக்காக போட்டி நிறுத்தப்பட்டது எனக் கூறப்பட்டாலும், இந்திய-பாகிஸ்தான் போர் அபாயம் காரணமாகவே நிறுத்தப்பட்டதாக அறியமுடிகின்றது. முடிவு: முடிவில்லை. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும் தலா ஒரு புள்ளி கிடைக்கின்றது. யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றம் இல்லை):
  4. இன்றைய போட்டி தர்மசலாவில் திட்டமிட்டபடி நடைபெறும். எனினும் சிலவேளை மழை வந்து இப் போட்டியை குழப்பலாம் . ஆனால் மும்பாய்க்கு எதிரான போட்டி அகமதாபாத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது. யாழ்கள ஐபிஎல் 2025 பதிவு 100 வது பக்கத்தினை தாண்டவுள்ளது.
  5. GMT நேரப்படி நாளை வெள்ளி 09 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 59) வெள்ளி 09 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் LSG எதிர் RCB 06 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் 17 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் சுவி கந்தப்பு அகஸ்தியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வசீ வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் வாதவூரான் ஏராளன் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே இப்போட்டியில் (நடந்தால்) யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  6. ஏராளன்.... எங்களிடம் இனி இழக்க எதுவும் இல்லை. நாங்கள் இந்தியனுக்கு நல்லெண்ணம் காண்பித்தாலும், அவன் எம்மை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ஆதலால், கிடைக்கும் சந்தர்ப்பங்களில்.... இந்தியனை துகில் உரிந்து விட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும்.
  7. நிறையப் பேருக்கு உள்ளூராட்சி தேர்தலுக்கும்நாடாளுமன்றத்தேர்தலுக்கும் வித்தியாசம் தெரியேலை. உள்ளூராட்சித்தேர்தலில் அந்த வட்டாரத்தில் செல்வாக்கான ஒருவரை எந்தக்கட்சிநிறுத்தினாலும் வெல்லுவார். உதாரணம் எங்கள் ஊரில் காலம் காலமாக தமிழரசுக்கட்சி , தமிழ்த்தேசியக்கூட்டமைப்புதான் வெல்லும் (அவர்களும் செல்வாக்கான ஆளைத்தான்நிறுத்துவார்கள்). ஆனால் இந்த முறை சங்கு தான் வென்றது ஏனென்றால் தமிழரசுக்கட்சி சார்பில் செல்வாக்கான ஒருவரைநிறுத்தவில்லை (காலம் காலமாக தமிழரசுக் கட்சிக்கு போடுபவர்களே போடவில்லை). ஆனால்நாடாளுமன்றத்தேர்தலில் இந்த வாக்குகள் சங்குக்கு கிடைக்காது.
  8. கட்டுரையாளருக்கு சுமந்திரன் நல்லவர், வல்லவர், எதிர்கால அரசியல் தலைவர் என்று எழுத ஆசை ஆனா அது எடுபடாதென்று தெரியும். ஆகவே கஜேந்திரகுமார் எதிர்கால அரசியல் தலைவர் இல்லை என நிறுவ முற்படுகிறாரோ?
  9. மகிந்த சகோதர்கள் போல ரணிலால் முப்படைகளையும் கட்டுப்படுத்த முடியாது. ரணில் மகிந்த கம்பனி போல விடாமல் யுத்தத்தை நடத்தி முடிக்கும் திறன் அற்றவர். ரணில் தந்திரமான ராஜ தந்திரி, கனவான் அரசியல் வாதி. ஆனால் மகிந்த குடும்பம் போன்ற சண்டியன் இல்லை. சில இராஜ தந்திர நகர்வுகள் மூலம் ஆளை மடக்கியிருக்கலாம். அத்துடன் ரணில் தெற்கின் ஆதரவு அற்றவர் அதனால் தான் தமிழர்களின் வாக்கு இல்லாமல் தோற்றார். யுத்தம் ஆரம்பிப்பதை அந்த நேரத்தில் புலிகளும் விரும்பினார்கள். அவர்களது பலம் பற்றி அவர்களுக்குள்ளேயே ஒரு பெரிய விம்பம் ஏற்றப்படுத்தப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தை என்ன விலை கொடுத்தும் உடனடியாக பிடிப்பதே அவர்களது திட்டம். முகமாலைப் பகுதிகளில் பல ஆயிரம் மாவீரர்களை இதனால் இழந்தார்கள். பல முனைகளில் ஒரே நேரத்தில் சண்டை தொடங்கும் என அவர்கள் நினைத்தேயிருக்கவில்லை. மன்னாரிலே முன் லைனிலே விடக்கூட போராளிகள் இருக்கவில்லை. ஆமி ஒரு ரவை கூட சுடாமல் சில இடங்களில் முன்னேறியது.
  10. உங்களின் "லாம் " விடைகள் யார் நீலன் என்பதை என்னை மட்டுமில்லை என்போன்றவர்களின் இமையை உயர்த்த வைத்தது. நீலனை சிறிலங்கா அரசு 100 வீதம் பயன்படுத்திக் கொண்டது என்பதைமட்டும் உறுதியாக நம்புகிறேன். அவரின் கொலையை எப்போதும் நியாயப்படுத்தவில்லை.
  11. ஜேர்மனியில் நான் பார்த்த அளவில் சொத்துக்கள் வைத்திருப்பவர்களை விட சொத்துக்கள் இல்லாத நடுத்தர மக்கள் மிக சந்தோசமாக வாழ்கின்றார்கள்.
  12. இந்தியா சொன்ன மாதிரி பாகிஸ்தானை தாக்கிவிட்டது. பாகிஸ்தான் அணுகுண்டு எல்லாம் தங்களிடம் உள்ளது, அவற்றால் திருப்பி தாக்குவோம் என்ற மாதிரி சொன்ன கதையை எப்போது செய்து காட்டப் போகின்றார்கள்?
  13. ரபேல் விமானங்களை இலகுவாக வீழ்த்த முடியாது. தரையிலிருந்து விமான ஏவுகளை ஏவப்பட்டால் அதனை உடனே கண்டுகொண்டு எதிர் நடவடிக்கையை மேற்கொள்ளும். அதுவும் 3 ரபேல் விமானங்கள் என்பது ஆச்சரியம். இச் செய்தி உண்மையாக இருந்தால் சீனாவின் அதியுயர் தொழில்நுட்பம் பாகிஸ்தானுக்குள் நன்றாக ஊடுருவி உள்ளதாக அனுமானிக்கலாம். இந்திய விமானங்கள் வரும் என்று காத்திருந்து தாக்கியுள்ளனர். ஒரு சிறு தாக்குதலுக்கு இந்தியா பெரிய விலை கொடுத்தது அவமானம். தாக்குதல்கள் மாறிமாறித் தொடருமாக இருந்தால் முதலில் பாதிக்கப்படுவது பாகிஸ்தான்தான். இந்தியா போன்று பொருளாதார உறுதி அதனிடம் இல்லை. ஏற்கனவே விளிம்பில் உள்ள அதன் பொருளாதார வீழ்ச்சி மேலும் பலவீனம் அடையும்.
  14. இந்த செல்வாக்கு இன்னும் பல்கி பெருக வேண்டும். ஒரு காலத்தில் அது இன்னுமொரு தடவை இந்தியாவை செங்குத்தாக பிளக்க வேண்டும்.
  15. @ரசோதரன் குரு எங்கை நான் இதுக்கை இருந்து போன‌தில் இருந்து உங்க‌ளை காண‌ வில்லை உற‌வுக‌ள் எழுதின‌தை மேல் ஓட்ட‌மாய் வாசித்தேன் உங்க‌ட‌ ப‌திவுக‌ளை பெரிசா காண‌ வில்லை.................இந்த‌ முறை கைய‌ முறிச்சிட்டிங்க‌ளோ😁.......................
  16. கிட்ட‌ த‌ட்ட‌போட்டி தொட‌ங்கின‌தில் இருந்து 10 நாள் வ‌ரை 4புள்ளியோட‌ நின்றேன் இப்போது 50 புள்ளி கைவ‌ச‌ம் கூட‌ 10புள்ளி இருப்ப‌தால் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ அவ‌மான‌ தோல்வியில் இருந்து த‌ப்பியாச்சு அண்ணா................... நேற்று சென்னை கே கே ஆர‌ வென்று கே கே ஆரையும் வெளி ஏற்றி விட்ட‌து , நான் தெரிவு செய்த‌ முத‌ல் நாங்கு இட‌ங்க‌ளை பிடிக்கும் அணிக‌ள் கீழ‌ நிக்கின‌ம் மும்பைய‌ த‌விர்த்து இந்த‌ ஜ‌பிஎல் எதிர் பார்த்த‌ மாதிரி அமைய‌ வில்லை😁..............................
  17. அப்ப நாம கொட்டிய குப்பை எல்லாம் வீணா கோபால் வீணா.
  18. உவர் @தமிழ் சிறியர் வேலையால வந்து தனது கொதியுக்கு எதையாவது எழுதிவிட்டு போய்விடுவார். வாருங்கோ நாங்களாவது அமத்தி வாசிப்பம் @ஏராளன் இல்லாவிட்டால் நாளைக்கு இந்திய தூதரகத்துகாரர் உள்ளுக்க போக வீசா தரமாட்டம் என்று சொன்னாங்கள் என்றால் எப்படி மனுசி, பிள்ளைகளோட போய் தாஜ்மகால் பார்க்கிறது. ஊட்டிக்கு போறது. கோயில் தரிசனம் எல்லாம் செய்யிறது. பாவங்களை அங்கபோய்த்தானே கழுவியிட்டு வர வேணும். அவங்கள் இன்றைக்கு சண்டை பிடிப்பாங்கள். நாளைக்கு ஒன்றாக கிரிக்கெட் மச் விளையாடுவாங்கள். ஆனால் எங்களுக்கு உள்ளது ஒரு பாஸ்போர்ட் தானே. நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்.
  19. @vasee மும்பை இந்திய‌ன் அணிக்காக‌ விளையாடும் Tilak Varma இவ‌ரும் வ‌ய‌தை குறைச்சு கொடுத்த‌தாய் 2020ம் ஆண்டு விம‌ர்ச‌ன‌ம் எழுந்த‌து 19வ‌ய‌துக்கான‌ உல‌க‌ கோப்பையின் போது................. நான் நினைக்க‌ வில்லை Vaibhav வ‌ய‌து குறைச்சு கொடுத்து இருப்பார் என்று...................... இந்த‌ சிறுவ‌ன் 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ ஆசிய‌ கோப்பையில் போன‌ வ‌ருட‌ம் 13சிக்ஸ் அடிச்ச‌வ‌ர் ஒரு போட்டியில் ம‌ட்டும் ,இந்த‌ சிறுவ‌னை ப‌ற்றி மூன்று மாத‌த்துக்கு முத‌ல் யாழில் ஏராள‌ன் அண்ணாவும் நானும் விவாதிச்சு இருக்கிறோம்........................ அந்த‌ விளையாட்டோட‌ தான் ஜ‌பிஎல்லுக்கை வ‌ந்த‌வ‌ர் , ஆனால் ஆர‌ம்ப‌த்தில் விளையாடும் வாய்ப்பு ம‌றுக்க‌ப் ப‌ட்ட‌து , இப்போது கிரிக்கேட் ர‌சிக‌ர்க‌ளுக்கு இந்த‌ சிறுவ‌ன் என்றால் எல்லாருக்கும் தெரியும்...................நான் பார்த்த‌ ம‌ட்டில் அவ‌ச‌ர‌ப் ப‌டுகிறார் நிதான‌மும் தேவை வ‌ய‌து கூட‌ கூட‌ கிரிக்கேட் உல‌கில் சூப்ப‌ர் கீரோவா வ‌ல‌ம் வ‌ருவார்............................... டென்மார்க்கில் அண்ணா👍............................
  20. ஆகா பையனைக் கண்டது சந்தோசம். ஊருக்கு வந்தாச்சா? இன்னும் இந்தியாவா?
  21. என்னதான் வெளில திட்டினாலும் இந்தியா இந்தப்போரில் வெல்லவேணும் எண்டு எட்டி எட்டி நியூஸ் எல்லாம் பாத்துக்கொண்டிருக்கிறன்.. தானாடாவிட்டாலும் தன் தசை ஆடுமாம்… பாகிஸ்தனுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்.. ஆனா இந்தியா.. அதுவும் தமிழ்நாடு எங்கள் வாழ்வோடு பிரிக்கமுடியாதது.. மற்றது அடிப்படைவாத சோனி உலகத்தில் எந்த மூலையிலும் வெல்லக்கூடாது.. உலக அமைதிக்கே கேடு அவர்கள்.. அதுவும் ஒரு பைத்தியக்கார மதவெறியர்களிடம் அணுகுண்டு இருப்பது மனிதகுலத்துக்கே ஆபத்தானது.. மேற்குலக நாடுகள் மட்டும் பலமானதாக இல்லை என்றால் இந்த சோனி நாடுகள் முஸ்லீம் அல்லாத நம்மை எல்லாம் காபீர்கள் என்று எப்பவோ கொன்று புதைத்து அங்கு புல்பூண்டு முளைத்திருக்கும்.. புலிகள் இதில் கெட்டிக்காரர்கள்.. ஜெய்கிந்..😆
  22. Robert Prevost - எனும் அமெரிக்க கார்தினெலே பாப்பரசராக தெரிவாகியுள்ளார். இவர் பதின்நான்காம் லியோ என அறியப்படுவார்.
  23. போர் ப‌த‌ட்ட‌ம் கார‌ண‌மாய் விளையாட்டு நிறுத்த‌ப் ப‌ட்டு இருக்கு என்று த‌க‌வ‌ல்க‌ள் வ‌ருது பாக்கிஸ்தான் இந்தியாவின் மானில‌மான‌ ராஜ‌ஸ்தான் மீது ஏவுக‌னை தாக்குத‌ல‌ ந‌ட‌த்தி இருக்கு பாக்கிஸ்தானின் மூன்று போர் விமான‌ம் இந்தியாவில் வைத்து சுட்டு வீழ்த்த‌ ப‌ட்டு இருக்கு...................போட்டி ந‌ட‌ப்ப‌து ப‌ஞ்சாப் மானில‌த்தில் வீர‌ர்க‌ளின் பாதுகாப்புக்காக‌ விளையாட்டை நிறுத்தி இருக்கின‌ம் பாக்கிஸ்தான் எல்லையில் இருப்ப‌து தான் பஞ்சாப் மானில‌ம்............................
  24. அட... இஞ்ச பார்றா.... யாருக்கு, யார் எச்சரிக்கை விடுக்கிறது. இவங்களின் காமெடி தாங்க முடியவில்லை.
  25. கோடைகாலம் தொடங்கிவிடடால் கோவிற் திருவிழாக்களுக்கு ஆடம்பரம் காட்டுவதற்கும் குளிரில் உழைத்த காசை கோடையில் கொட்டிச் செலவழிப்பதற்கும் (கடன்பட்டாவது ) ஆரம்பித்து விடுவார்கள். கடவுள் ஆடம்பரத்தைக் கேட்டாரா ? அமைதியில் இறைவனைக் காணுங்கள். ஏழைக் குழந்தைக்கு கல்வி கொடுங்கள். உணவு கொடுங்கள் உழைக்க வழிவகை செய்யுங்கள். உங்களால் ஒரு குடும்பம் வளரும் வாழும் ..
  26. வடக்கன் செத்துக்கிடக்கிற காட்சி: (இந்த மாதிரி முல்லாக்களையும் பாக்கனும்)
  27. நாங்கள் எளிய தமிழ் பிள்ளைகள். இவை எல்லாம் மீம்ஸிலும் வட்ஸ்சபிலும் ரீல்ஸிலும் வந்தால் மட்டுமே நம்புவோம். 😂
  28. வானில் விமானப்படை, தரையில் இராணுவம் – இந்தியாவின் இருமுனை தாக்குதல்! ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ஒரு பெரிய இராணுவ நடவடிக்கையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா ஒரு தீர்க்கமான தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல் இரு முனைகளைக் கொண்டது. இதில் வானத்தில் விமானப்படை மற்றும் தரையில் இராணுவம் ஈடுபட்டதாக அரசாங்க உயர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய விமானப்படை (IAF) ஆகாயத்திலிருந்து தரைக்கு ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய அதே வேளையில், இந்திய இராணுவம் ஒரே நேரத்தில் தரையிலிருந்து தரைக்கு ஏவுகணைகளை ஏவியதாக பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கொள்ளிட்டு இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜெய்ஷ்-இ-மொஹமட், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய பயங்கரவாத உள்கட்டமைப்புகளை குறிவைத்து துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இரவு முழுவதும் நடந்த இந்த நடவடிக்கையில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த பன்முக தாக்குதல், பயங்கரவாத இயந்திரங்களை ஆதரிப்பதை நிறுத்துமாறு பாகிஸ்தானுக்கு ஒரு எச்சரிக்கையாகும், இது பாகிஸ்தானின் பயங்கரவாத இயந்திரத்தை முடக்கும் என்று இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிப்பதை நிறுத்துமாறு இஸ்லாமாபாத்திற்கு தெளிவான செய்தியை அனுப்புவதே இதன் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதல்கள் தொடங்கப்படுவதற்கு முன்பு, புது டெல்லி முக்கிய உலக சக்திகளிடமிருந்து இராஜதந்திர ஆதரவைப் பெற்றதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கு வெளிப்படையான ஆதரவு கிடைத்தது, சீனாவின் பதில் நடுநிலையானது என்று விவரிக்கப்பட்டாலும், வளைகுடா நாடுகள் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதைக் காண முடிந்தது. இதனால் பாகிஸ்தான் இராஜதந்திர முன்னணியில் பெரும்பாலும் தனிமைப்படுத்தப்பட்டது. துருக்கியைத் தவிர, வேறு எந்த நாடும் இஸ்லாமாபாத்தை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இது இந்தியாவுக்கு கிடைத்த குறிப்பிடத்தக்க இராஜதந்திர வெற்றி என்று கூறியது. தாக்குதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த நடவடிக்கையை “அப்பட்டமான போர் நடவடிக்கை” என்று கூறி, பொதுமக்கள் உயிரிழப்புகளைக் கூறினார். பாகிஸ்தான் “அதன் விருப்பப்படி சரியான நேரத்தில் மற்றும் இடத்தில்” பதிலடி கொடுக்கும் என்று அச்சுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் பதிலடி கொடுத்தால் இந்தியா கடுமையாக பதிலளிக்கத் தயாராக உள்ளது என்று இந்தியா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்தார். எவ்வாறெனினும், இந்தியாவின் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டதில் அசாரின் உறவினர்கள் பத்து பேர் அடங்குவர் என்று பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் ஒரு விளையாட்டு மைதானத்தில் அவரது இறுதிச் சடங்கிற்காக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து. “அல்லாஹ் அக்பர்” அல்லது கடவுள் பெரியவர் என்று கோஷமிட்டனர். மேலும் பிற மத கோஷங்களையும் எழுப்பினர். “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கொடூரம் அனைத்து விதிமுறைகளையும் மீறியுள்ளது” என்று அந்தக் குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “துக்கமும் அதிர்ச்சியும் விவரிக்க முடியாதவை”. கொல்லப்பட்டவர்களில் ஐந்து பேர் குழந்தைகள் என்றும், மற்றவர்களில் அசாரின் சகோதரி மற்றும் அவரது கணவர் அடங்குவதாகவும் அது கூறியது. பல ஆண்டுகளாகக் காணப்படாத அசார் மற்றும் அவரது சகோதரர், குழுவின் துணைத் தலைவரான அப்துல் ரவூப் அஸ்கர் ஆகியோர் இறுதிச் சடங்கு பிரார்த்தனைகளில் கலந்து கொண்டதாகத் தெரியவில்லை. தாக்குதலுக்குப் பின்னர் அந்த இடத்திற்குச் செல்லும் சாலை முற்றுகையிடப்பட்டது. மேலும் வடக்கே, நள்ளிரவுக்குப் பிறகு சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு, நான்கு இந்திய ஏவுகணைகள் முரிட்கேயில் உள்ள ஒரு பரந்த வளாகத்தை ஆறு நிமிடங்களுக்குள் தாக்கியதாக உள்ளூர் அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தத் தாக்குதல் ஒரு மசூதியையும் அருகிலுள்ள நிர்வாகக் கட்டிடத்தையும் இடித்து, மூன்று பேரை இடிபாடுகளுக்குள் புதைத்தது. https://athavannews.com/2025/1431218 ################### ################## ################### 😂 🤣
  29. எல்லையில் பதற்றம் – ஐ.பி.எல் போட்டிகளில் மாற்றம்? ஓப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது . இந்த நிலையில், ஐ.பி.எல் போட்டி மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது . நாளை டெல்லி-பஞ்சாப் இடையே தர்மசாலாவில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டி மும்பைக்கு மாற்றப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. போட்டியை மாற்றுவது தொடர்பாக பி.சி.சி.ஐ ஆலோசனை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1431182 😂
  30. நேற்றிரவு மட்டும் மொத்தம் 8 வண்டுகளை (பல வகை) பாக்கிகள் வீழ்த்தியுள்ளார்கள்: படங்கள் வெளியாகியுள்ளன : ஒரே இரவில்: 5 தாரை வானூர்திகள் 8 வண்டுகள் ... அம்மாடியோவ் ... இந்தியருக்கு மொங்கிற்றாங்கள் 🤣
  31. இந்தியா இஸ்ரேலும் அல்ல. பாகிஸ்தான் லெபனானும் அல்ல. விரைவில் நிலமை அமைதி அடையும் என ஊகிக்கின்றேன்.
  32. முச பிடிக்கிற நாய் தனது தொகுதியில் எப்படி தோற்றார் என்ற கேள்விக்கு பதில் என்ன? திரும்பவும் அரசியலுக்குள் வர இன்னொருவரின் தலை உறுள வேண்டும் என்பது எத்ததைய வெ ட்க கேடாக உங்களுக்கு தெரிக்கிறது? தற்போதைய நிலையில் கார்ணி தான் சரியான தேர்வு. பொருளாராதாரத்துக்கு பின் எதுவும். நீங்களும் மனைவியும் பியர் பொலிவியர்ருக்கு வாக்களித்ததால் மொத்த கனடாவும் அவர்களுக்கு வாக்களித்து வெல்ல வேண்டும் என்பது இ;ல்லை தானே. மக்கள் உங்களை விட கெட்டிக்காரர்களாக இருக்க வாய்ப்புண்டு.
  33. தரமான செய்தி... அதிலையும் அந்த 3 ejection தான் அதிசிறப்பு செய்தி 🤣🤣
  34. உள்ளூராட்சி தேர்தல் முடிந்தது. இனியாவது தெருவில் இருக்கும் குப்பைகளும் சமூக ஊடக குப்பைகளும் குறையும் என்று பார்த்தால் அலப்பறை கொஞ்சமும் குறைந்த பாடில்லை. எப்படி நாங்கள் ஜெயித்தோம் அல்லது ஏன் எதிராளி கட்சி தோற்றார் என்பதற்கு படங்கள் போட்டு ஆராய்ச்சிகள் விளக்கங்கள் வேறு. தேர்தல் முடிவுகள் தமிழினம் தனித்துவமானது என்று காட்டுவதாக பெருமை வேறு. அதிலும் உள்ளூர் மக்களை விட வெளிநாட்டில் நிரந்தரமாக வசிப்பவர்கள் போடும் பதிவுகள் ஈழம் கிடைத்து விட்டதா என்று என்ன வைக்கிறது. தையிட்டி விகாரையை அகற்றுவதற்கு உள்ளூராட்சி முடிவுகளை தான் எதிர்பார்த்து இருந்ததாக ஏமாற்றும் அறிக்கைகள் பல. வரைபடம் போட்டு வடக்கு கிழக்கு இணைந்து விட்டதாக சிலரின் அறிக்கை. வடக்கு கிழக்கில் இந்த தேர்தலில் வென்றவர்கள் பலர் கடந்த காலத்தில் ஈழப் போராட்டத்தை கொச்சை படுத்தியவர்கள் என்பதும் இந்திய மற்றும் உளவுத்துறைகளின் முகவர்களாக செயல்பட்டவர்கள் என்பதும் பலருக்கு மறந்து போய்விட்டது. ஒருபுறம் ஆட்சி அமைப்பதற்கு சிங்கள கட்சிகளுடன் பேரம் பேசிக் கொண்டு மறுபுறம் இந்த வீரமான போலி அறிக்கைகள் தமிழீழம் கோரி தமது உயிரை தியாகம் செய்த போராளிகளின் ஆன்மாக்கள் எந்த பிரயோசனமும் அற்ற இந்த தேர்தல் முடிவு அலப்பறைகளை பார்த்தால் என்ன செய்திருப்பார்கள் என்று எண்ணி பார்த்தேன். உதாரணமாக பருத்தித்துறை பிரதேச சபை கடந்த காலத்திலும் இந்த தேர்தலிலும் தமிழ் தேசிய கட்சிகளின் கையிலேயே இருக்கிறது. கடந்த காலத்தில் குப்பை கழிவுகள் அகற்றாமல் தரிசு நிலங்களுக்கும் வீடுகளுக்கும் வரிகளை அதிகரித்தார்கள். இந்த தேர்தலின் பின்னர் மறுபடியும் மக்களுக்கு எதுவும் செய்யாமல் இன்னும் வரிகளை அதிகரித்து தேர்தலில் செலவழித்த பணத்தை மக்களிடம் இருந்து வசூலிக்க பார்ப்பார்கள். இதற்கு பொதுமக்களாகிய நாங்கள் பெருமைப் படவேண்டுமா? எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே! நன்றி Dr முரளி வல்லிபுரநாதன் 7.5.2025 வாட்ஸப்பில் கண்டது..
  35. எல்லாம் உங்களால தான். போதை ஏறினா என்ன நடக்கும் என்று நேர பார்க்கிறீர்கள். முடிவு பண்ணீட்டனென்றால் என் பேச்ச நானே கேக்கமாட்டன்.😆 இது எப்பிடியிருக்கு
  36. எல்லா சென்னை பக்தாலும் இன்று ஒரு மார்க்கத்தோடதான் இருக்கிறியல் இதுக்காக என்டாலும் சென்னை வெல்லவேணும்😄
  37. சென்னை பாத்துது. தாங்கள் எப்பிடியும் வெளியில தானே. இப்பிடி ஏதேன் ஏடா கூடமா செய்து பார்ப்போம். வந்தா மலை வராட்டி..... ஆனா, நம்மளப் பத்தி நினைச்சுப் பார்த்தாங்களா. அவங்களத் தெரிவு செய்து போட்டு தேமே என்று பார்த்துக் கொண்டிருக்கிறம்.
  38. வணக்கம், அண்மைக் காலமாக செய்திகளில் (ஊர்புதினம், தமிழக, இந்திய மற்றும் உலகச் செய்திகளில்) சகட்டு மேனிக்கு பலவகையான மீம்ஸ்கள் ஒட்டப்பட்டு வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. இவற்றில் பல செய்திளின் தரத்தை, அதன் நம்பகத்தன்மைகளை பாதிக்கும் வண்ணம் அமைந்திருப்பதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது. இன்னும் சில, அரசியல் காழ்ப்புணர்வுகளை வெளிப்படுத்தும் வண்ணமாக அமைந்துள்ளதையும் உணர முடிகின்றது. இனி வரும் காலங்களில் செய்திகளில் இவ்வாறான மீம்ஸ் கள் ஒட்டப்படுவதை கூடிய வரைக்கும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். அதே நேரம் மீம்ஸ்களை விட தரமான செய்தித்தளங்களில் இருந்து கார்ட்டூன்கள் / கருத்துப்படங்கள் பகிரப்படுவதை வரவேற்கின்றோம். நன்றி
  39. கஸ்டம் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. அந்த நாட்களில் புலம்பெயர்வு என்பது போரின் பின்னணியில்தான் இருந்தது. இன்று போல இலவச தொலைத்தொடர்பு வசதிகள், சமூக ஊடகங்கள் எதுவும் இல்லை. ஊரில் ஏதாவது நிகழ்ந்தால், வேலை முடிந்தவுடன் பதற்றத்தோடன் ஓடி வந்து தொலைபேசியில் ஊருக்குப் பேசினாலே, அந்த மாத சம்பளத்தில் பாதி போய்விடும். அவசரத் தேவை என்று அவர்கள் கேட்டு பணம் அனுப்பினால், “எங்கடை வீட்டுக்கு அவசரத் தேவை ஒன்றும் கிடையாதுதானே” என்ற முணுமுணுப்பு இங்கே வந்துவிடும். முதல் புலம் பெயர்ந்தவர்கள், எப்போதும் நாட்டில் உறவுகளுடன் ஒட்டியே இருந்தார்கள். ஊரில் இருந்த உறவுகளின் வாழ்வாதாரத்தை இவர்களே பார்த்துக் கொண்டார்கள். இங்கே பிள்ளைகள், குடும்பம், அங்கே உறவுகள் எல்லாவற்றுக்குமாக முழு நேரம், பகுதி நேரம் என வேலைகள் செய்தார்கள். ஓய்வில்லை, பொழுது போக்குகள், விளையாட்டுக்கள் எதுவுமேயில்லை. வாழும் நாட்டவர்களோடு பழக முடியவில்லை. வாழும் நாட்டின் பழக்க வழக்கங்களுடன் ஒன்றிப் போக முடியவில்லை. தன் வரம்புக்கு மீறிய சுமைகள். அதைச் சுமந்து நடந்த கால்கள், இன்று தள்ளாட வைக்கிறது. அநேகருக்கு முழங்கால் முக்கிய பிரச்சினையாகிப் போனது. இலங்கையரின் பாரம்பரிய நீரழிவு நோயும் சேர்ந்து கொண்டிருக்கிறது. உடல் உழைப்பும், மன அழுத்தமும் சேர்ந்து இன்று அவர்களுடைய உடல்நலத்தை பாதித்திருக்கிறது. மூட்டுவலி, நீரழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்றவை (முதல் புலம் பெயர்ந்தவர்கள்) பலருக்கு இன்று சாதாரண நிலையாகவே போய்விட்டன. மகனோ? மகளோ? ‘இனி உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்’ என இவர்களால் ஒதுங்கிப் போக முடியவில்லை. ஏனென்றால் இன்னமும் இவர்கள் தங்களது வடிவத்தை விட்டுக் கொடுக்காமல் பாரம்பரியம், பண்பாடு பேணுகிறார்கள். அதனால், முகநூலில் அவர் குறிப்பிட்டது போல் பிள்ளைகளும் தங்களது தேவைகளுக்கு இவர்களை இலகுவாகப் பயன்படுத்த முடிகிறது. நீங்கள் குறிப்ப்பிட்ட பணப் பிரச்சினை எல்லா இடத்திலும் இருக்கிறது. யேர்மனியில் ஓய்வூதியம் பெற வேண்டுமாயின் 67 வயதுவரை உழைக்க வேண்டும் 45 வருடங்கள் வேலை செய்திருந்தால் மட்டுமே வெட்டுக்கள் கொத்துக்கள் இல்லாமல் முழுமையான பென்சன் கிடைக்கும். வாழ்வாதாரத்துக்கு வரும் பென்சன் காணாது என்று சமூகநல உதவி கேட்டால் சொத்துக்களை காட்டு என்பார்கள். கடந்த பத்து வருடங்களில் சொத்துக்கள் விற்கப்படனவா? அல்லது மாற்றப்பட்டனவா? என்பதைச் சொல்லவும் வேண்டும். 80களில் வந்தவர்களில் ஓரளவு வயதில் முதிர்ச்சியாக இருந்தவர்களால் நல்ல பென்சன் எடுக்க வாய்ப்பில்லை. நான் யேர்மனிக்கு வந்த போது யாருமே எனக்கு முன்னர் அறிந்தவர்களாக இருக்கவில்லை. வழிகாட்ட யாரும் இருக்கவில்லை. பின்னாட்களில் வந்தவர்களுக்கு அந்த நிலை இல்லை. சொல்லித் தரவும் உதவிகள் செய்யவும் யாராவது இருக்கிறார்கள். எங்கள் வாழ்க்கையை மிக அடிமட்டத்தில் இருந்தே கட்ட எழுப்ப வேண்டி இருந்தது. இந்த நிலை அடுத்த சந்ததிக்கு இல்லை. அவர்களுக்கு ஏதும் தேவையென்றால் உடனே கண்ணுக்குத் தெரிபவர்கள் பெற்றோர்கள்தான். ஆக தொல்லைகளும், சுமைகளும் தொடரத்தான் செய்கின்றன. கோசன் சார் மொழி தெரியாது எழுந்து நின்று முழித்த கதையொன்றை போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகிறேன். அப்பொழுதெல்லாம் அகதியாகப் போன தமிழர்களுக்கு நல்ல வாழ்க்கை சுவிஸ் நாட்டில் இருந்தது. யேர்மனியில் இருந்த தமிழர்களில் சிலர் அங்கு போவதற்கு களவாக ரயிலில் பயணிப்பார்கள். இரவு இரயிலில் பயணிகளின் சீட்டுக்கு அடியில் படுத்துக் கொண்டால் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஒரு தடவை நம்மவர் ஒருவர் சீட்டுக்கு அடியிலே படுத்திருந்தார். அவர் படுத்திருந்த பெட்டிக்குள் வந்த ரிக்கெற் பரிசோதகர், “மோர்கன்” எனச் சொல்லிக் கொண்டு அங்கிருந்தவர்களின் ரிக்கெற்றை பரிசோதித்துக் கொண்டு வந்தார். திடேரென பயணிகளின் கால்களை விளக்கிக் கொண்டு நம்மவர் வெளியே வந்து எழுந்து நின்றார். பயணிகளும், பரிசோதகரும் திகைத்து நின்றிருந்தார்கள். (Guten) Morgen என்றால் காலை வணக்கம். ஆனால் கீழே படுத்திருந்த நம்மவருக்கு, எப்படி என் பெயர் ரிக்கெற் பரிசோதகருக்குத் தெரிந்தது? யாரோ போட்டுக் கொடுத்து விட்டார்கள். அது யாரா இருக்கும்? என்ற கேள்வி. அவரின் பெயர் மோகன்.
  40. இந்தியா முழுக்க பாக்கிஸ்தான் செல்வாக்கு இருக்கு எண்டதை மோடி அரசு அறியாமல் இருக்குமா என்ன? 😎
  41. எனக்கும்.... ரண்டு பக்கமும் குத்து வாங்கோனும்... இந்தியன் கொஞ்சம் கூட வாங்கினால் நல்லம்
  42. இந்தியா 9 இடங்களை தாக்கியது என்கிறது பிபிசி. விழுந்தது பாக்கின் F16 என்கிறன இந்திய கணக்குகள். ஜம்மு அருகில் விழுந்துள்ளதாம். பிகு இரெண்டு ரபேல், ஒரு F16 விழுந்தாலும் எனக்கு ஓக்கேதான்🤣
  43. தோட்டத்தில் கடினமான வேலை செய்யும் விவசாயி . .......... ! 💪

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.