Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87988
    Posts
  2. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    6
    Points
    15789
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33600
    Posts
  4. Justin

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    7044
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/07/25 in all areas

  1. இளஞ்செழியன் ஒரு நல்ல நீதியரசராக இருந்தவர். சில சிறந்த தீர்ப்புகளை வழங்கியவர், ஆனால் அழுது நடிப்பதிலும், செண்டிமண்ட் காட்சிகளில் வெளுத்து வாங்குவதிலும் நல்ல திறமையுள்ளவர். தனக்கு காவலாக வந்த சிங்கள பொலிசார் (தேவையில்லாமல் மூக்கை நுழைக்கப் போய்) கொல்லப்பட்டதன் பின் அந்த பொலிசாரின் பெற்றோறின் காலில் வீழ்ந்து அழுதது தொடக்கம், சிங்கள பெளத்த பிக்குகளை தொழுதது தொட்டு, தனக்கு பதவி உயர்வு வழங்கவில்லை என கண்ணீர் மல்க நாடகம் போட்டது வரை இவருக்கு நல்ல நடிப்பு திறமை உள்ளது எனக் காட்டியுள்ளார். அந்தந்த கால கட்ட ஆளும் கட்சிகளுக்கு விசுவாசமாக நடப்பது என்பது அரச உயர் பதவிகளில் இருக்கும் தமிழர்களின் பொதுவான குணம். இவருக்கும் அது நிறைய இருந்தது.
  2. தாயகத்திலிருந்த போது இலங்கை சுகாதார அமைச்சு, புலிகளின் சுகாதாரப் பிரிவு, டொக்ரர் முருகானந்தனின் வெளியீடுகள் என்பன பாம்புக் கடியின் போது செய்ய வேண்டிய முதலுதவிகள் பற்றி பிரசுரங்கள் வெளியிட்டிருக்கிறார்கள், கண்டிருக்கிறேன். ஆனால், மக்களைச் சென்றடைவதில் சிக்கல்கள் இருக்கின்றன. சுருக்கமாக: செய்ய வேண்டியவை: 1. பாம்பு கடித்தவர் பதற்றமடையாமல் வைத்திருக்க வேண்டும். சுற்றியிருப்போர் குய்யோ முறையோ என்று குழம்பினால் கடிக்காளானவரும் பதற்றமாவார் - நஞ்சு விரைவாக உடலில் பரவும். 2. ஓய்வு நிலையில் படுக்க வைத்திருப்பது சிறந்தது. 3. கடி காயத்தில் ஏதாவது மண், அழுக்கு இருந்தால் சுத்தமான நீரும் சவர்க்காரமும் பாவித்துக் கழுவலாம். இதில் ஒரு விடயம் கவனிக்க வேண்டும்: புடையன் (viper) பாம்பு கடித்திருந்தால், கடந்து விட்ட நேரத்தைப் பொறுத்து காயத்தில் இருந்து இரத்தம் உறையாமல் வடிய ஆரம்பித்திருக்கும். இப்படியான நிலையில், கழுவுவதை விட்டு விட்டு, ஒரு சுத்தமான துணி அல்லது gauze பாண்டேஜினால் அழுத்தம் கொடுக்கலாம். 4. பாம்பை படம் எடுத்து மருத்துவமனைக்கு செல்வோருடன் அனுப்பலாம். பாம்பை அடித்துக் கொன்று எடுத்துச் செல்லலாம், ஆனால் அதற்காக நேரம் செலவழிக்கக் கூடாது. கடி பட்டவரைக் கவனிப்பதே முக்கியம். 5. உடனடியாக மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். செய்யக் கூடாதவை: 1. கடிகாயத்திலிருந்து இதயம் நோக்கிச் செல்லும் இரத்தத்தை நிறுத்துவதற்காக இறுக்கக் கயிறு, பட்டி ஆகியவற்றால் கட்டுதல் கூடாது. இது பழைய கால நம்பிக்கை, ஆனால் இது தவறானதும் ஆபத்தானதுமான செயல். 2. கடிகாயத்தை அல்ககோல் போன்ற எரிவூட்டும் பதார்த்தங்களால் சுத்திகரிக்கக் கூடாது. 3. கடிகாயத்தை கீறுதல், வாயால் (80 களில் தமிழ் திரைப்படங்களின் கதாநாயகன் செய்வது போல😂) கடித்து உறிஞ்சுதல் என்பன செய்யக் கூடாது. 4. நாட்டு வைத்தியம், மந்திரம் என்ற பெயரில் கடி பட்டவர் மருத்து மனைக்குச் செல்வதைத் தாமதிக்கக் கூடாது. விசத்தை உறிஞ்சும் கல் என்பதெல்லாம் போலி மருத்துவங்கள். பயனற்ற நேர விரயங்கள்.
  3. எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே ---------------------------------------------- என்ன சத்தம் அது எலியாக இருக்குமோ இரவிரவாக விறாண்டியதே என்று பல வருடங்களின் பின் பரணுக்குள் ஏறினேன் எலி என்றில்லை ஏழு எட்டு டைனோசர்கள் அங்கே நின்றாலும் கண்டே பிடிக்க முடியாத ஒரு காடு அது என்று அங்கே நான் விக்கித்து நிற்க 'என்ன, மேலே எதுவும் தெரியுதோ............' என்றார் காடு வளர்த்து எலி பிடிக்க என்னை மேலே ஏற்றிய என்னுடைய கங்காணி முப்பது வருடங்களுக்கு முந்தி இருந்த வாழ்க்கையின் அடையாளம் கூட அங்கே தெரிந்தது பழைய சாமான்களாகவும் சட்டி பெட்டிகளாகவும் இந்தப் பூகம்ப தேசத்தில் தலைக்கு மேல கத்தி பரண் தான் போல மொத்தத்தையும் அள்ளி விற்றாலும் சில பணம் கூட தேறாது அள்ளுகிற கூலி நூறு அது அவ்வளவும் நட்டம் ஒரு மூலையில் கிடந்த முதலாவது சூட்கேசை இன்னும் இது இருக்குதே என்று நினைவில் உருகி மெல்லிதாக தொட இரண்டு சாம்பல் எலிகள் பாய்ந்து பறந்தன சூட்கேசின் அடுத்த பக்கத்தில் அவை போட்டு வைத்திருந்த ஓட்டையால் 'என்னப்பா, அங்கே சத்தம்............ ஏதோ ஓடுதோ.................' 'காலில் தடக்கி ஏதோ சாமான் உருளுது..................' புலியையே முறத்தால் அடித்துக் கலைத்தவர்கள் அவர்கள் நான் எலியையே ஓடவிட்டவன் ஆகக் கூடாது சிஞ்ஞோரே.
  4. சிறிலங்காவில் இனசுத்திகரிப்பு இரண்டு தான் உண்டு... ஒன்று தமிழன் சிங்களவர்களை இனசுத்திகரிப்பு செய்தது,மற்றது தமிழன் முஸ்லீம்களை இனசுத்திகரிப்பு செய்தது.... தமிழன் தான் அசுரன் ,,,,அப்படி தமிழ் சிவப்பு சிந்தனையாளர்கள் சொல்லுவினம்...😂
  5. நல்ல துணிச்சலாக, தெளிவாக கேள்வி கேட்கின்றார். பெண்களிடம் வக்கிரமாக கேள்வி கேட்பவர்களுக்கு செருப்படி இது!
  6. ஓமோம், தமிழரை தூற்றி தமிழர் சிங்களவருக்கு கீழ் தான் வாழ வேண்டும் என்ற அடிமை மனநிலையுடன் பழகினால் நன்றாகவே சிரித்துப் பழகுவார்கள். இது மேலாதிக்க குணமுடைய எல்லோருக்கும் பொருந்தும். எமது உரிமையைக் கேட்டு அதனோடு பேசினால் நன்றாக முரணோடு பேசுவார்கள். ----------------------------------------------------- 83இற்கு முந்தை தமிழரின் அறவழிப் போராட்டங்களின் போது தமிழர்களை தாக்கியவர்கள் யார்? தமிழர் எதிர்ப்பு இனவன்முறைகளில் பங்கெடுத்தவர்கள் யாவரும் யார் .... (சூலை கலவரத்தில் என்ர வீட்டுப் பாத்திரத்தை மறைத்து வைத்தவர் குஞ்சுபண்டா என்று வர வேண்டாம். களவெடுத்த கற்பழித்த பண்டாக்கள் நிறையவே உண்டு😜) வெளிநாடுகளில் தமிழர் எதிர்ப்பு போராட்டங்களில் பங்கெடுப்பவர்கள் யார்... ஒஸ்ரேலியாவில் சிறுபிள்ளையைக் கூட உதைத்தவர்கள் சிங்களவர், தமிழர் என்ற காரணத்திற்காக மே 18களில் வெற்றிக்கொண்டாட்டங்களில் ஈடுபடுபவர்கள் யார், குறிப்பாக மே 18 2009 அன்று பாற்சோறு குடுத்து மகிழ்ந்தவர்கள்... தமிழீழ-ஸிறிலங்கா எல்லையோர ஊர்களில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்தெறிந்தவர்கள் யார், குறிப்பாக ஊர்காவல்படை (சாதாரண சிங்கள பொதுமக்களைக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டது) என்னும் பேரில்? 2009 இற்கு பின்னர்............... தியாகதீபங்களில் நினைவூர்திகள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் யார்... திருமலையில் தமிழர்களுடன் மோதியவர்கள் யார்? மட்டுவில் தமிழர்களின் மாடுகளில் வாயில் வெடிவைத்து விளையாடுபவர்கள் யார்? இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம், அதற்காக பூனை கண்ணை மூடினால் இருண்டுவிட்டதாக பொருளில்லை. நீங்கள் தமிழர் விரோத-புலி எதிர்ப்பு மனநிலையில் இருப்பதால் எல்லாவற்றை அந்தக் கண்ணாடி கொண்டே பார்த்துப் பழகினதாலும் மெய்யுண்மைகள் வேறாகவே உள்ளன. உங்களோடும் நீங்களும் பழகிய சிங்களவர்கள உங்களைப் போன்றே இருப்பதால் உங்களுக்கு இனிக்கிறது, அவ்வளவே. சிங்களவரால் பாதிக்கப்பட்டவர்களினது மனநிலை வேறாக இருக்கும். தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் ஒவ்வொருவரின் குணநலன்களுக்கு ஏற்ப வேறுபடும். கூட்டிக் கொடுத்தவனுக்கு இனிக்கும், அடிவேண்டி தன்மானத்தோடு எதிர்த்தவனுக்கு ....
  7. வேனுமென்றால் இப்படியும் சொல்லலாம் ...இப்ப தானே உலகம் பல மாற்றங்களை சந்திக்கின்றது... மாற்று சிந்தனை,கட்டுடைத்தல் ..... தேவையென்றால் ஓஷோ சொல்லியிருக்கிறார் என சொல்லலாம்
  8. இப்படியான பெண்களைத் ‘திருட்டின்பப் பிரியை’ என்று கொஞ்சம் மரியாதையாக அழைக்கலாம். நானென்றால் ‘கள்**க் காரிகை’ என்று இன்னும் மரியாதையாக அழைப்பேன்!
  9. 'என்ன பிடிக்கிறாய் அந்தோனி எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே பொத்திப் பொத்திப் புடி அந்தோனி பூறிக் கொண்டோடிற்று சிஞ்ஞோரே...............' சின்ன வயதில் தெரிந்து கொண்ட இந்த நையாண்டிப் பாடல் அதன் உட்பொருள் தெரியாமலேயே மனதில் தங்கிவிட்டது. இது அந்நியருக்கு எதிரான ஒரு நையாண்டி என்று அன்று எவரும் சொல்லித்தரவில்லை................
  10. சுவிஸில் இருந்து வரும் போது, "டியூட்டி ஃபிறீயில்" வாங்கிக் கொண்டு வந்தது... இன்னும் வேலை செய்யுது போலை கிடக்கு. 😂
  11. உயர் நீதிமன்ற நீதியரசர்களக கடந்த வாரம் மூன்று தமிழர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதை விட உயர் நீதி மன்ற நீதியரசராக இருந்த தமிழர் எஸ் துரைராஜா பதில் பிரதம நீதியரசராக பதவியுயர்தப்பட்டார். எனவே இளஞ்செழியனின் குற்றச்சாட்டு தவறானது. அவரது தனிப்பட்ட பிரச்சனையை இனப் பாகுபாட்டின் காரணமாக தனக்கு பதவியுயர்வு வழங்கப்படவில்லை என்று சித்தரிக்க முயன்றுள்ளார். வழமையான தமிழ் அரசியல்வாதிகள் காலங்காலமாக செய்யும் வேலையை தானும் முயன்று பார்த்துள்ளார் என்றே எடுக்கவேண்டியுள்ளது.
  12. கள்ளத் தொடர்பு என ஏன் கொச்சைப் படுத்துகின்றீர்கள் ஐயா.. காலம் தாழ்த்தி வந்த காதல் என்று சொல்லலாமே,...😆
  13. இலங்கையில் கட்டு வரியனை கண்டங் கருவளை என்பார்கள். முத்திரைப் புடையன் , கண்ணாடி விரியன் இரண்டும் Russel's viper எனப்படும் மூர்க்கமான புடையன் பாம்பின் தமிழ் பெயர்கள். கட்டுரையில் இருக்கும் கட்டு வரியன் இந்தியாவிலும் இலங்கையிலும் இருக்கின்ற வகை (common krait - Bungarus caeruleus). இதை விட இலங்கைக்கே உரித்தான கட்டு வரியன் பாம்பினம் Ceylon krait (Bungarus ceylonicus) இலங்கையில் மட்டும் காணப்படுகிறது. பெரிதாக வித்தியாசம் சாதாரண மக்களால் இந்திய இலங்கை கட்டு விரியன்களிடையே காண முடியாது. தமிழில் இரண்டும் கண்டங் கருவளை என அழைக்கப் படும். ஆனால், சிங்களத்தில் இந்தியக் கட்டு விரியனை "தெல் கரவலா" என்றும், இலங்கையின் கட்டு விரியனை "முது கரவலா" என்றும் அழைப்பார்கள். இந்தியாவில் உற்பத்தி செய்யப் படும் இந்தியக் கட்டு வரியனுக்கெதிரான விஷ முறிப்பு மருந்து, இந்திய, இலங்கை கட்டு வரியன் பாம்புகள் இரண்டிற்கெதிராகவும் வேலை செய்யும் என்பது ஆறுதலான செய்தி!
  14. கங்காணியே மேலே ஏற்றியபடியால் அவலத்தில் நேய் நேய் என்றும் கத்த முடியாது. வீடுகள் மாறும் போதும் இதைவிட கூடுதலான புதிய புதிய பிரச்சனைகள் வரும்.
  15. இது நீண்ட காலமாக ஒவ்வொரு அரசாலும் அப்பப்ப சொல்கிறார்கள். சகல தோட்டங்களும் தனியார் வசம் இருப்பதால் இது சாத்தியப்படுமா தெரியவில்லை?
  16. மெதுவா மெதுவா தொடலாமா என் மேனியிலே கை படலாமா ...........! 😍
  17. யாழ்ப்பாணம், எஹெலியகொட, மட்டக்களப்பு, சிலாபம் மற்றும் மாத்தறை உள்ளிட்ட 10 நகரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் உகந்த திறமையான, நிலையான நகர வலையமைப்பை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறியும் தொடக்கப்பணிகளுக்காக ரூ. 2,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. திடக் கழிவுகளை முறையாக அகற்றும் மற்றும் பராமரிக்கும் வாகனங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவதற்கான திடக் கழிவு மேலாண்மை திட்டத்தை நடைமுறைப்படுத்த ரூ. 900 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மாத்தளை நகரத்தில் நெரிசலைக் குறைப்பதற்காக சாலை 4 வழித்தடங்களாக விரிவுபடுத்தப்படும். ஹட்டன் நகரத்தில் கடுமையான போக்குவரத்தை சமாளிக்க 2026 இல் நகரத் திட்டம் தயார் செய்யப்படும். இதற்காக ரூ. 500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தித் திட்டங்கள் 2026 முதல் ஆய்வுகளின் அடிப்படையில் திட்டமிடப்படும். யாழ்ப்பாணம், எஹெலியகொட, மட்டக்களப்பு, சிலாபம் மற்றும் மாத்தறை உள்ளிட்ட 10 நகரங்களில் சாத்தியக்கூறு ஆய்வுகளைத் தொடங்க ரூ. 2,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. நுகர்வோருக்கு உகந்த விலையை உறுதி செய்வதற்காக அரசாங்கம் போட்டித் திறனுடைய டெண்டர் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. ருவான்புரா அதிவேக நெடுஞ்சாலை தொடர்பான நிலம் கையகப்படுத்தலுக்காக ரூ. 1,500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. குருணாகல்–தம்புள்ளா அதிவேக நெடுஞ்சாலையின் நிலம் கையகப்படுத்தலை நிறைவு செய்ய ரூ. 1,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. முழுமையான சாலைப் பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கூடுதலாக ரூ. 1,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. சாலை அபிவிருத்திக்காக ரூ. 34,200 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பொத்துஹெராவிலிருந்து கலகேதர்வரை மத்திய அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானத்திற்காக ரூ. 10,500 மில்லியன் உட்படுகிறது. ருவான்புரா அதிவேக நெடுஞ்சாலையின் (கஹத்துடுவாவிலிருந்து இங்கிரியாவரை) பணிகளை மறுமதிப்பீடு செய்வதற்கும் நிலம் கையகப்படுத்தலுக்குமான பணிகளுக்காக ரூ. 1,500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. வெள்ள அபாயத்திற்கான குறுகியகால தீர்வுகளுக்காக ரூ. 250 மில்லியன் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக ரூ. 500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. பொத்துஹெராவிலிருந்து கலகேதர்வரை மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பொத்துஹெரா–ரம்புக்கான பகுதி 2027 முதல் காலாண்டில் முடிக்கப்பட உள்ளது. இதற்காக ரூ. 10,500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. ரம்புக்கான–கலகேதர பகுதியின் பணிகளைத் தொடங்க ரூ. 20,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை (SLTB) டிப்போக்கள் மற்றும் பணிமனைகளுக்கு புதிய கருவிகள், இயந்திரங்கள், உபகரணங்கள் வாங்க ரூ. 790 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கை ரயில்வே துறைக்கு 5 புதிய டீசல் மல்டிபிள் யூனிட்கள் (DMUs) வாங்குவதற்கான ஆரம்பப் பணிகளுக்கு ரூ. 3,300 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் SLTB பேருந்துகளில் kulaintha என்ஜின் யூனிட்களை மாற்ற ரூ. 2,062 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் நீண்ட தூர சேவைப் பேருந்துப் படையில் 600 புதிய பேருந்துகள் சேர்க்கப்படுகின்றன; இதற்காக ரூ. 3,600 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் உயிர் காப்பாற்றும் உபகரணங்களை வழங்க ரூ. 100 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. வளைச்சேனை மீன்பிடித் துறைமுக அபிவிருத்திக்காக ரூ. 350 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. கீழ் மல்வத்து ஓயா பன்முக அபிவிருத்தித் திட்டத்தை விரைவுபடுத்த ரூ. 5,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. செனாநாயக்க சமுத்திரத்தின் வாய்க்கால் (Sorowwa) புதுப்பிப்பு உள்ளிட்ட மற்ற நீர்வழி அமைப்புகளை மீட்டமைக்க ரூ. 6,500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசன மேம்பாட்டிற்காக ரூ. 91,700 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. முந்தேனி ஆறு திட்டத்தின் தொடக்கப் பணிகளை மீண்டும் தொடங்க ரூ. 50 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. Milco ஆலை புதுப்பிப்பிற்காக ரூ. 3,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மாடு மற்றும் பன்றி இனப்பெருக்கத் திட்டங்களுக்காக ரூ. 1,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த துறைமுக அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ. 500 மில்லியன், செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் மீன் பிடிப்பு பகுதிகளை அடையாளம் காணும் முறைமையை உருவாக்க ரூ. 100 மில்லியன், மேலும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையங்களை மேம்படுத்த ரூ. 100 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண தேங்காய் முக்கோணப் பகுதி அபிவிருத்திக்காக ரூ. 600 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு பால் உற்பத்தியை மேம்படுத்த ரூ. 1,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. தம்புள்ளா குளிர் சேமிப்பு நிலையத்தில் சோலார் மின்சாரம் அமைக்க ரூ. 250 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு கலாச்சாரத்தை ஊக்குவிக்க ரூ. 800 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. சீன உதவியுடன் கட்டப்படும் வீட்டு திட்டத்தின் கீழ் பத்திரிகையாளர்களுக்கு வீடுகள் வழங்கப்படும். 2030க்குள் உள்ளூர் பால் தேவையின் 75 சதவீதத்தை பூர்த்தி செய்வதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் உட்பட தொடக்கப் பணிகளுக்கு ரூ. 1,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமப்புற சாலைகளுக்கு ரூ. 24,000 மில்லியன் மற்றும் கிராமப்புற பாலங்களுக்கு ரூ. 2,500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ரூ. 2,000 மில்லியன், 2026இல் வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்த ஒதுக்கப்பட்டுள்ளது.
  18. நாங்க நம்புறோம்! எண்டாலும் இந்திய ரூபாயில் 8000 எல்லோ!
  19. ஓம் இவர், பார் சிறிதரன் எல்லாம் இங்லிஷ் மீடியத்தில தான் படிச்சவையாம்!😎
  20. நாமிருவரும் ஒரே இடம்தான் போயுள்ளோம் என நினைக்கிறேன்.
  21. வந்தோம் படம் பார்த்தோம் சொல்லாமல் சென்றோம்....😛
  22. யாராய் இருக்கும் . .......... ? 😀
  23. கண்ணைக் கவரும் கவரும் கலர் படங்களுடன் செய்தியை இணைத்த @பிழம்பு க்கு ஒரு “ஓ….” போடுங்க. 😁 😂 பிற்குறிப்பு: நடிகை ஶ்ரீமாலியின் வயிறு உப்பிக் கொண்டு நிற்குது. “ஆன்ரி” ஆக முதல் ஜிம்முக்குப் போய் வயித்தை குறைக்க வேண்டும்.
  24. இன்று ந‌ட‌ந்த‌ போட்டியில் வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ரின் ப‌ந்து வீச்சும் அருமை ம‌ட்டைய‌டியும் அருமை.................ம‌ன‌துக்கு பிடிச்ச‌ வீர‌ர் ந‌ல்லா விளையாடும் போது அது பெருத்த‌ ச‌ந்தோச‌த்தை த‌ருது ம‌ன‌துக்கு..............................
  25. Jan Gobeli · A Field Full of Red Mango Magic........!
  26. ஐந்து அடுக்கு பாதுகாப்பு. 😂
  27. கடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா .......! 😍
  28. நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் .........! 😍 இது ஒரு நல்ல பாடல் . ........கொஞ்சம் கலர் பூசி விட்டிருக்கிறார்கள் .........!
  29. தற்போதைய நிலையில் ஊழலற்ற நிர்வாகத்தை நடத்தக்கூடிய சிறந்த நிர்வாக திறமையுடன் வடக்கில் தமிழர் பலத்தை சமயோசிதமாக கட்டியெழுப்பக் கூடிய நிர்வாகி ஒருவர் முதமைச்சராக வந்தாலே தமிழ் மக்களுக்கு நல்லது. பொது வெளியுல் கண்கலங்கும், அனுதாபத்தை தேடும் இவரது சென்றி மென்ற் அரசியல் இவரது நிர்வாக திறமையை சந்தேகிக்க வைக்கிறது.
  30. 07 Nov, 2025 | 04:10 PM முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் கணவன் கோடாரியால் மனைவியை தாக்கிவிட்டு, கிணற்றில் குதித்து உயிரிழந்ததாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர். அப்பகுதியில் வசித்து வந்த 75 வயதான கணவருக்கும் 73 வயதுடைய மனைவிக்கும் இடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டிருந்தது. கணவனுக்கு அண்மைய நாட்களாக மனநிலை பாதிப்பு ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை (6) இரவு உணவருந்தி நித்திரைக்கு சென்ற கணவன், வெள்ளிக்கிழமை (7) காலை கோடாரியைக் கொண்டு மனைவியின் தலையில் தாக்கியுள்ளார். அதன் பின்னர், குறித்த கணவன் வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் குதித்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் வெளிநாட்டில் வசித்து வந்த மகன் ஒருவர் CCTV காணொளி மூலமாக நேரடியாக பார்வையிட்டதையடுத்து, உடனடியாக உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், உறவினர்கள் வீட்டிற்கு சென்று மனைவியை மீட்டு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். தலையில் ஏற்பட்ட தீவிர காயம் காரணமாக அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் இடம்பெற்ற வீட்டில் தடயவியல் பொலிஸார் விரிவான சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்த கணவரின் சடலம் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனை இடம்பெற்றுவருகிறது. உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். முல்லைத்தீவில் கோடாரியால் மனைவியை தாக்கிவிட்டு கிணற்றில் குதித்து உயிரிழந்த கணவன் உயிரிழப்பு | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.