Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    87990
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33600
    Posts
  3. alvayan

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    5417
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    19122
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/08/25 in all areas

  1. தாயகத்திலிருந்த போது இலங்கை சுகாதார அமைச்சு, புலிகளின் சுகாதாரப் பிரிவு, டொக்ரர் முருகானந்தனின் வெளியீடுகள் என்பன பாம்புக் கடியின் போது செய்ய வேண்டிய முதலுதவிகள் பற்றி பிரசுரங்கள் வெளியிட்டிருக்கிறார்கள், கண்டிருக்கிறேன். ஆனால், மக்களைச் சென்றடைவதில் சிக்கல்கள் இருக்கின்றன. சுருக்கமாக: செய்ய வேண்டியவை: 1. பாம்பு கடித்தவர் பதற்றமடையாமல் வைத்திருக்க வேண்டும். சுற்றியிருப்போர் குய்யோ முறையோ என்று குழம்பினால் கடிக்காளானவரும் பதற்றமாவார் - நஞ்சு விரைவாக உடலில் பரவும். 2. ஓய்வு நிலையில் படுக்க வைத்திருப்பது சிறந்தது. 3. கடி காயத்தில் ஏதாவது மண், அழுக்கு இருந்தால் சுத்தமான நீரும் சவர்க்காரமும் பாவித்துக் கழுவலாம். இதில் ஒரு விடயம் கவனிக்க வேண்டும்: புடையன் (viper) பாம்பு கடித்திருந்தால், கடந்து விட்ட நேரத்தைப் பொறுத்து காயத்தில் இருந்து இரத்தம் உறையாமல் வடிய ஆரம்பித்திருக்கும். இப்படியான நிலையில், கழுவுவதை விட்டு விட்டு, ஒரு சுத்தமான துணி அல்லது gauze பாண்டேஜினால் அழுத்தம் கொடுக்கலாம். 4. பாம்பை படம் எடுத்து மருத்துவமனைக்கு செல்வோருடன் அனுப்பலாம். பாம்பை அடித்துக் கொன்று எடுத்துச் செல்லலாம், ஆனால் அதற்காக நேரம் செலவழிக்கக் கூடாது. கடி பட்டவரைக் கவனிப்பதே முக்கியம். 5. உடனடியாக மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். செய்யக் கூடாதவை: 1. கடிகாயத்திலிருந்து இதயம் நோக்கிச் செல்லும் இரத்தத்தை நிறுத்துவதற்காக இறுக்கக் கயிறு, பட்டி ஆகியவற்றால் கட்டுதல் கூடாது. இது பழைய கால நம்பிக்கை, ஆனால் இது தவறானதும் ஆபத்தானதுமான செயல். 2. கடிகாயத்தை அல்ககோல் போன்ற எரிவூட்டும் பதார்த்தங்களால் சுத்திகரிக்கக் கூடாது. 3. கடிகாயத்தை கீறுதல், வாயால் (80 களில் தமிழ் திரைப்படங்களின் கதாநாயகன் செய்வது போல😂) கடித்து உறிஞ்சுதல் என்பன செய்யக் கூடாது. 4. நாட்டு வைத்தியம், மந்திரம் என்ற பெயரில் கடி பட்டவர் மருத்து மனைக்குச் செல்வதைத் தாமதிக்கக் கூடாது. விசத்தை உறிஞ்சும் கல் என்பதெல்லாம் போலி மருத்துவங்கள். பயனற்ற நேர விரயங்கள்.
  2. "அம்மாவை விட அதிகம் கணிக்கும் அல்காரிதம்கள்" - வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவின் பங்கு பட மூலாதாரம், Laura G. De Rivera படக்குறிப்பு, நாம் உணராத அளவிற்கு அல்காரிதம்கள் நமது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்று லாரா ஜி. டி ரிவேரா கூறுகிறார். கட்டுரை தகவல் கிறிஸ்டினா ஜே. ஆர்காஸ் பிபிசி முண்டோ 51 நிமிடங்களுக்கு முன்னர் நீங்கள் இரவு உணவு சாப்பிட வெளியே செல்ல முடிவு செய்கிறீர்கள். நீங்கள் என்ன சாப்பிட விரும்புகிறீர்கள் என்று உங்கள் துணையால் தெரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம், ஆனால் செயற்கை நுண்ணறிவுக்கு அது தெரியும்: மாலையில் நீங்கள் 'டாக்கோஸ்' (Tacos) பற்றிய வீடியோக்களை பார்ப்பதைக் கண்டது, அதனால் இப்போது நீங்கள் அதைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியாது என்பதை அது தெளிவாக உணர்ந்துள்ளது. "நாம் முடிவுகளை எடுக்காவிட்டால், மற்றவர்கள் நமக்காக அதைச் செய்வார்கள்," என்று ஸ்பானிய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான லாரா ஜி. டி ரிவேரா, பல ஆண்டுக்கால ஆராய்ச்சியின் விளைவாக வெளிவந்த தனது "அல்காரிதம்களின் அடிமைகள்: செயற்கை நுண்ணறிவு யுகத்தில் எதிர்ப்புக்கான கையேடு"("Slaves of the Algorithm: A Manual of Resistance in the Age of Artificial Intelligence,") என்ற புத்தகத்தில் எழுதுகிறார். "மனிதர்கள் மிகவும் கணிக்கப்படக் கூடியவர்கள் என்பதால் நாம் வெளியிலிருந்து திணிக்கப்பட்ட எண்ணங்கள், விருப்பங்கள் மற்றும் உணர்வுகளில் மூழ்கி வாழ்கிறோம். நமது கடந்த கால செயல்களில் புள்ளிவிவரங்களைப் பயன்படுத்துவது போதுமானது, அது யாரோ ஒருவர் நம் மனதைப் படித்தது போலாகிவிடும்," என்று அவர் மேலும் கூறுகிறார். நமது தேவைகள் அல்லது விருப்பங்களைக் கணிப்பதில் துல்லியம் மிக அதிகமாக உள்ளது. நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட அல்காரிதத்திற்கு போதுமான டிஜிட்டல் தரவுகள் அளிக்கப்பட்டால் நீங்கள் விரும்புவதையோ அல்லது விரும்பும் விஷயங்களையோ உங்கள் தாயைவிட மிகச் சிறப்பாக அதனால் கணிக்க முடியும் என்று ஸ்டான்ட்ஃபோர்ட் பல்கலைக்கழக உளவியலாளர் மற்றும் பேராசிரியர் மைக்கேல் கோசின்ஸ்கி தனது சோதனைகளில் நிரூபித்தார். செயற்கை நுண்ணறிவால் ஒருவரின் ஆர்வங்களை மிகத் துல்லியமாகக் கணிக்க முடியும் என்பது கொள்கையளவில், நல்லதாகத் தோன்றுகிறது. ஆனால் அதற்கு ஒரு விலை உண்டு, அது மிக அதிகம் என்று டி ரிவேரா கூறுகிறார்: "சுதந்திரத்தை இழக்கிறோம், நாம் நாமாக இருக்கும் திறனை இழக்கிறோம், கற்பனையை இழக்கிறோம்." "சமூக வலையமைப்பு (Social Network) இருக்கவும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கவும் நாமெல்லாம் நம் புகைப்படங்களைப் பதிவேற்றுவதன் மூலம் இன்ஸ்டாகிராமுக்கு இலவசமாக வேலை செய்கிறோம். விழிப்புடன் இருந்து, அபாயங்கள் உங்களைப் பாதிக்காமல் பார்த்துக் கொண்டு தளங்களின் நன்மைகளைப் பயன்படுத்துவது அவசியம்," என்று அவர் கூறுகிறார். பெரு நாட்டின் அரெகுய்பா நகரில் நவம்பர் 6 முதல் 9 வரை நடைபெறவுள்ள 15 நாடுகளில் இருந்து 130 பங்கேற்பாளர்களை ஒன்றிணைக்கும் ஹே விழாவின் (Hay Festival) பின்புலத்தில் டி ரிவேராவுடன் நாங்கள் பேசினோம். பட மூலாதாரம், Penguin Random House படக்குறிப்பு, "தகவல்தான் அதிகாரம். அதைப் பெறுவதற்கான போட்டி கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறது," என்று புத்தக ஆசிரியர் எழுதுகிறார். அல்காரிதத்திற்கு அடிமையாகாமல் இருப்பது எப்படி? என்ன தீர்வு? நான் காணும் தீர்வு மிகவும் எளிமையானது, யாருக்கும் சாத்தியமானது, இலவசமானது மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாதது. அதுதான் சிந்திப்பது. அதாவது, நமது மூளையைப் பயன்படுத்துவது. இது பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்ட ஒரு மனிதத் திறன். நாம் வேலை செய்யாத அல்லது மக்களுடன் இல்லாத ஒவ்வொரு தருணத்திலும், நாம் தொலைபேசியை எடுத்துத் திரையில் கவனம் செலுத்தி நம்மை திசை திருப்புகிறோம். இப்போது மருத்துவரின் காத்திருப்பு அறையிலோ அல்லது வீட்டில் சலிப்படையும்போதோ நாம் சிந்திப்பதில்லை. நாம் சிந்திக்க வைத்திருந்த அந்த இடங்கள் இப்போது தொடர்ச்சியான திசை திருப்பலால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. நமது ஸ்மார்ட்ஃபோன் மூலம், நம்மால் சிந்திக்க முடியாத அளவுக்குத் தொடர்ந்து தூண்டுதல்களைப் பெறுகிறோம். நாம் செய்யக்கூடிய வேறு சில விஷயங்களும் உள்ளன, ஆனால் இதுதான் மிக அடிப்படையானதாகவும் எளிதானதாகவும் நான் கருதுகிறேன். அல்காரிதத்தின் கட்டுப்பாடு மற்றும் மூன்றாம் தரப்பினரின் விருப்பத்திற்கு எதிராக விமர்சனப் பார்வையால் மட்டுமே தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாக்க முடியும். நீங்கள் ஒரு தளத்தில் பதிவு செய்யும்போது உங்கள் தரவை வழங்காமல் இருப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ஒரு சேவையின் அனைத்து நுணுக்கமான விஷயங்களையும் படிப்பது அல்லது ஒவ்வொரு முறை ஒரு வலைதளத்திற்குள் நுழையும்போதும் "குக்கீகளை" (cookies) நிராகரிப்பது இன்னும் சிக்கலானது. நாம் என்ன சோம்பேறிகளாகிவிட்டோமா? நாம் கொஞ்சம் சோம்பேறிகளாகவும், கொஞ்சம் கைப்பாவைகளாகவும் இருக்கிறோம், ஆனால் நமக்குத் தகவல் இல்லாமலும் இருக்கிறோம். டிக் டோக் தளத்தில் பல மணிநேரம் செலவிடும்போது, அந்தத் தளத்திற்கு இலவசமாக வேலை செய்கிறோம் என்பதைப் பலர் புரிந்து கொள்வதில்லை. தங்கள் ஆன்லைன் நடத்தையைப் பற்றிய எல்லா தகவல்களையும் அவர்கள் கொடுக்கிறார்கள், மேலும் அந்தத் தகவலுக்கு மதிப்பு இருக்கிறது. அதனால்தான் கல்வி முக்கியமானது, இந்தப் பெரிய தளங்களின் வணிக மாதிரி எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்குவதே அது. நமக்கு கூகுள் இலவசமாக சேவை செய்கிறது என்றால், உலகின் பணக்கார நிறுவனங்களில் ஒன்றாக அது இருப்பது எப்படிச் சாத்தியம்? இதைப் பற்றிச் சிந்திப்பது மிகவும் முக்கியம், அப்போதுதான் தங்களைப் பற்றி அளிக்கக்கூடிய அனைத்துத் தகவல்களும் எவ்வளவு மதிப்பு மிக்கவை என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, "முடிவெடுப்பது நமக்கு பயத்தை தருகிறது, மேலும் ரோபோக்களை போல் இருந்துகொண்டு, என்ன செய்ய வேண்டுமென்று மற்றவர்கள் சொல்ல வேண்டுமென நாம் விரும்புகிறோம்," என்று பத்திரிகையாளர் கூறுகிறார். செயற்கை நுண்ணறிவின் ஆபத்து என்ன? உண்மையான ஆபத்து மனிதர்களின் மடமைதான். ஏனென்றால் செயற்கை நுண்ணறிவு உங்களுக்குத் தீங்கு செய்ய வேண்டியதில்லை, அவை பூஜ்ஜியங்களும் ஒன்றுகளும் (zeros and ones) மட்டுமே. ஆனால், நம்முடைய சோம்பல் மிக அதிகமாக இருப்பதால், விஷயங்கள் நமக்குச் செய்து முடிக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டால், அது மிகவும் நல்லது என ஏற்றுக்கொள்கிறோம். இதெல்லாம் நாம் இன்னும் அதிக அளவில் கையாளப்படக் கூடிய சூழ்நிலையில் நம்மை வைக்கிறது. நாம் மன விருப்பம் மரத்துப் போய்விட்ட நிலையில் வாழ்கிறோம். சுகாதார அமைப்பின் டிஜிட்டல்மயமாக்கல், பாரிய கண்காணிப்பு மற்றும் நமது குழந்தைகளின் ஆன்லைன் கல்வி ஆகியவற்றை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்கிறோம். அநீதிகள், துஷ்பிரயோகங்கள் மற்றும் அறியாமையை நாம் தவிர்க்க முடியாத விஷயங்களாக ஏற்றுக் கொள்கிறோம், நாம் மிகவும் சோம்பலாக இருப்பதால் அவற்றுக்கு எதிராக நம்மால் கிளர்ச்சி செய்ய முடியாது. ஒரு அல்காரிதம் அமைப்பில் தன்னியக்கத்தின் பேரில் செயற்கை நுண்ணறிவு மேற்கொள்ளும் கணிப்புகளை முழுமையாக நம்புவதால் ஏற்படும் விளைவுகள் என்னவாக இருக்கும்? நமது கருத்து வேறாக இருந்தாலும்கூட, ஒரு கணினி சொன்னால், அது உண்மையாக இருக்கும் என்று மனிதர்கள் நம்பத் தலைப்படுகிறார்கள் என ஆய்வுகள் காட்டுகின்றன. அதனால், வாழ்வா, சாவா முடிவுகள் உள்பட முக்கியமான முடிவுகளை நாம் பிறரிடம் ஒப்படைக்கும்போது அபாயம் மிக அதிகமாக உள்ளது. அப்படியானால், யார் முடிவெடுக்க நீங்கள் அனுமதிக்கப் போகிறீர்கள்? உங்கள் அம்மா, உங்கள் ஆசிரியர், உங்கள் முதலாளி, அல்லது செயற்கை நுண்ணறிவு? இது மனிதர்களுக்கு மிகவும் பழமையான ஒரு பிரச்னை. மேலும் உளவியலாளர், சமூகவியலாளர் மற்றும் பிராங்பேர்ட் பள்ளியின் உறுப்பினரான எரிக் ஃப்ரோமின் "சுதந்திரத்தைப் பற்றிய பயம்" (fear of freedom) என்ற புத்தகத்தை நான் மிகவும் விரும்புகிறேன். இந்தப் புத்தகம் இதற்காகவே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் நமக்குச் சொல்வதையே மனிதர்கள் விரும்புகிறார்கள் என்று ஃப்ரோம் வாதிடுகிறார். ஏனென்றால் அது நம்மைச் சார்ந்தது என்று நினைப்பது நமக்குப் பயங்கரமான பீதியைக் கொடுக்கிறது. முடிவெடுப்பது நமக்கு மிகவும் பயமாக இருக்கிறது, மேலும் ரோபோக்களை போல் இருந்து என்ன செய்ய வேண்டுமென மற்றவர்கள் சொல்ல வேண்டுமென்று நாம் விரும்புகிறோம். இதை ஃப்ரோம் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, செயற்கை நுண்ணறிவுக்காக மிகப்பெரிய தரவு மையங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் தேவைப்படுகின்றன நமது தரவை ஆன்லைனில் கொடுக்காமல் இருக்க ஏதேனும் வழி இருக்கிறதா? நிச்சயமாக இருக்கிறது. உங்கள் தரவை வழங்காமல் இருக்க வழிகள் உள்ளன. தேவையானதை மட்டும் கொடுக்க வழிகள் உள்ளன. ஆனால் முக்கியமானது, தளங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிவதுதான். அப்போதுதான் நீங்கள் நடவடிக்கைகளை எடுக்க முடியும். உங்கள் வாழ்க்கையையும் தரவையும் வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு அதைச் சற்றுக் கடினமாக்குவதற்காக மட்டுமே என்றாலும்கூட ஒரு பக்கத்திற்குள் நுழையும்போது குக்கீகளை நிராகரிப்பது போன்ற சிறிய செயல்களுக்கு நீங்கள் பழகிக் கொள்ளலாம். வேறு என்ன செய்ய முடியும்? நம்மைப் பாதுகாக்க ஓர் ஒழுங்குமுறை தேவைப்படுவதைப் பற்றிப் பேசலாம். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் நெறிமுறைகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் பேசலாம். விசில்ப்ளோயர்கள் (Whistleblowers – கூகுள் அல்லது மெட்டா போன்ற நிறுவனங்களுக்குள் பணிபுரியும் மற்றும் அமைப்பு பற்றித் தெரிந்தவர்கள்) கூறும் விஷயங்களைக் கேட்பது எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றிப் பேசலாம். அவர்கள் பேச முடிவு செய்யும்போது அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும் என்பதுடன் அவர்களைப் பாதுகாப்பதும் முக்கியம். அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளால் பயன்படுத்தப்படும் கண்காணிப்பு அமைப்புகளை வெளிப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடனின் வழக்கைக் குறிப்பிடுகிறீர்களா? ஆம், ஸ்னோடன் எனக்கு இந்த நூற்றாண்டின் ஹீரோக்களில் ஒருவர். ஆனால் மேலும் பலர் இருக்கிறார்கள். அவருடையதுதான் மிகவும் அறியப்பட்ட வழக்கு. சோஃபி ஜாங் (Sophie Zhang) என்ற ஃபேஸ்புக்கின் தரவு விஞ்ஞானியும் உள்ளார். பொதுக் கருத்தைத் திரட்டுவதற்காகவும் வெறுப்பைத் தூண்டுவதற்காகவும் அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகளால் போலிக் கணக்குகள் மற்றும் போட்களை (bots) திட்டமிட்டுப் பயன்படுத்தப்படுவது குறித்து அவர் நிறுவனத்திற்கு உள்ளேயே எச்சரித்த பின்னர் பணிநீக்கம் செய்யப்பட்டார். லத்தீன் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பாவின் சில இடங்கள் உள்பட உலகின் பல பகுதிகளில், அரசியல்வாதிகள் போலிக் கணக்குகளைப் பயன்படுத்துகிறார்கள். நிஜத்தில் இல்லாத பின்தொடர்பவர்கள்(Followers), நிறுத்த முடியாத விருப்பங்கள் மற்றும் மறுபதிவுகளைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் உண்மையான ஆதரவும் மக்கள் ஏற்பும் இல்லாதபோதுகூட தங்களிடம் அது இருப்பதாக நம்ப வைக்கிறார்கள் என்பதை ஜாங் உணர்ந்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நமது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய சிக்கலான தகவல்களின் முழுத் தொகுப்பும் பெரிய தரவு மையங்களில் சேமிக்கப்படுகின்றன. பிரச்னை குறித்துத் தனது உயரதிகாரிகளுக்குத் தெரிவித்தபோது, யாரும் அதைச் சரிசெய்ய விரும்பவில்லை என்பதைக் கண்டு அவர் ஆச்சரியப்பட்டார். உதாரணமாக, ஹோண்டுராஸின் அப்போதைய அதிபர் ஜுவான் ஆர்லாண்டோ ஹெர்னாண்டஸின் போலியான பின்தொடர்பவர்கள் வலையமைப்பை நீக்க ஒரு வருடம் பிடித்தது. இவர் அமெரிக்காவுக்கு கொகைன் இறக்குமதி செய்வதற்கான சதியில் ஈடுபட்டது மற்றும் இயந்திரத் துப்பாக்கிகளை வைத்திருந்ததற்காக நியூயார்க்கில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். உங்கள் புத்தகத்தில், கூகுளின் செயற்கை நுண்ணறிவு நெறிமுறைக் குழுவின் இணை இயக்குநராக இருந்த கணினிப் பொறியாளர் டிம்னிட் கெப்ருவின் (Timnit Gebru) வழக்கையும் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். அவரும் பணிநீக்கம் செய்யப்பட்டார். ஆம், அல்காரிதம்கள் இனம் மற்றும் பாலின பாகுபாட்டிற்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியதற்காக (பணி நீக்கம் செய்யப்பட்டார்). பெரிய மொழி மாதிரிகள் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், மக்கள் அவற்றை மனிதர்கள் என்று நம்பக்கூடும் என்றும், அவற்றால் பிறரைக் கையாள முடியும் என்றும் அவர் எச்சரித்தார். அவருடைய பணிநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நிறுவனத்தின் 1,400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கையெழுத்திட்ட கடிதம் இருந்தபோதிலும், அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். யூட்யூப்பின் முன்னாள் ஊழியரான கியோம் சாஸ்லோட் (Guillaume Chaslot) மற்றொரு "விசில்ப்ளோயிங் ஹீரோ". பரிந்துரை அல்காரிதம் பயனர்களைப் பரபரப்பான, சதிக் கோட்பாடு மற்றும் பிளவுபடுத்தும் உள்ளடக்கங்களை நோக்கித் தள்ளுவதை அவர் கண்டுபிடித்தார். நமக்கு எஞ்சியிருக்கும் நம்பிக்கை என்ன? உறுதியாக நமக்குத் தெரிந்த ஒரு விஷயம் என்னவென்றால், ஒரு மென்பொருள் நிரல் (Software Program) என்ன செய்தாலும், அது புதிய விருப்பங்களைக் கண்டுபிடிப்பதற்கான மிகச் சிறிய அளவிலான படைப்பாற்றலைக்கூட அளிக்க முடியாது, அதாவது கடந்த கால தரவுகளின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இல்லாத படைப்பாற்றலை அதனால் கொடுக்க முடியாது. அதனால் மற்றவரின் நிலையில் தன்னை வைத்துப் பார்க்கும் பச்சாதாபத்தின் (empathy) அடிப்படையிலான தீர்வுகளையும் அளிக்க முடியாது, அல்லது மற்றவர்களின் மகிழ்ச்சியில் தனது சொந்த மகிழ்ச்சியைத் தேடும் ஒற்றுமையின் (solidarity) அடிப்படையிலான தீர்வுகளையும் அளிக்க முடியாது. இந்த மூன்று குணங்களும் வரையறையின்படி மனிதர்களுக்கு மட்டுமே உரித்தானவை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c6290v66d8lo
  3. கொலையுண்ட பெண் எப்படி? எதற்காக ?கொலையெய்யப்பட்டார் என்பது விசாரணையின் பின்னரே தெரியவரும் . செய்தி நிறுவனங்கள் எப்படி வேண்டுமென்றாலும் எழுதும் வக்கிர மனப்பாண்மை கொண்டவை என்பதில் மறுப்பு இல்லை தங்கள் வியாபாரத்திலேயே கண்ணாக இருக்கும் அதற்காக கண்ணும் காதும் மூக்கும் வைத்து எழுதும் கொலையுண்டவருக்கு இரண்டு சிறு குழந்தைகள் உள்ளன . அவரது கணவன் ஒரு சராசரி கூலித் தொழிலாளி அவர்களுடைய நிலைமை இங்கே யாருக்கும் தெரியாது அந்தக் குழந்தைகள் தாய் இல்லாமல் எப்படி வாழ போகின்றார்கள் கொலையுண்டவரின் கணவரால் அந்தக் குழந்தைகளைத் தனியனாக நின்று காப்பாற்ற முடியுமா என்ற சிந்தனைகள் இல்லாமல்...... உயிருடன் இல்லாத கொலையுண்ட விசாரணையே இன்னும் நீதி மன்றத்திற்கு வராத நிலையில் தனி நபருடைய தனிப்பட்ட விடயங்களுக்கு முன்னுரிமை அளித்து அப்படி இப்படி நடந்தது என மிகுந்த மலிந்த ரசனையுடன் கருத்துக்களை எப்படி யாழ் களம் அனுமதிக்கின்றது
  4. புத்தரே ....போர்க்கால சூழலில் 2,40,000 தமிழர்கள் கொல்லப்பட்டது ...இனவழிப்பல்ல....அதுவும் இறுதிக்கட்டத்தில் குஞ்சு குருமன் உட்பட...200 000 பேர் ....இதனை எங்கட தமிழ் அரசியல் வாதிகள் ... சிங்களவர் , முசுலிம் யாருமே...எம்மினம் துடிக்கப் பதைக்க கொன்றதை இனவழிப்பு என்று இன்றுவரை சொன்னதும் கிடையாது...ஏற்றுக் கொண்டதும் கிடையாது ....ஆனால் 76,000 முசுலிம் பாதுகாப்பு காரணம்காட்டி இடப்பெயர வைத்து ,பின்னர் மீண்டும் கூப்பிட்டு வாழவைத்தது அவர்களுக்கு எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை ..... இதுஇனவழிப்பாம் ...இதை தமிழர் , சிங்களவர் ,முசுலிம் இன்றுவரை தூக்கிப் பிடித்து ...கொடியசைக்கினம் ...அதுவும் ...முசுலிம் தரப்பில் ... தூண்டிக்கொண்டே இருக்கினம் ...அதுவும் புதுப்புது கரடிவிட்டபடி ...இதனை யாழிலும் ஆதரித்து கொடிபிடிப்பதில் சந்தோசம் ... அவர்களிடம் ஒரு தயவான வேண்டுகோள்... சரி ..பிழை என்பதற்கப்பால் ...முசுலிம்களை நியாயப் படுத்துவதை செய்யும் நீங்கள் ... அவர்கள் பகுதியில் இருந்து ஒரு நியாயவாதி ஒருவரின் கருத்தை இங்கு பதிவிடமுடியுமா ...முடியாது ஏனெனில்...அவர்களிடமிருந்து ...அந்த வரிகள் கிடைக்காது ...ஆனால் நம்பக்கம் இருந்து புதிது புதிதாக சாட்ட்சியங்ககள் ..இணைக்கப்படும் ...இது நம் இனத்தின் சாபக்கேடு
  5. எப்ப ஊருக்கு கிளம்புறியள்? மானஸ்தனனுக்கு இன்னொரு இனத்தின் ஊரில் என்ன மினக்கெடு?😂
  6. யானை · "பசிக்குது தோழா, நாலு இட்லி வாங்கிட்டு வாங்க, சாப்பிட்டுட்டுப் போவோம்" என்கிறார் ஜீவா "இங்கயே கேண்டீன் இருக்கு, சாப்பிட்டிருக்கலாமே தோழர்..." "சரிதான், எங்கிட்ட காசில்லைல்ல" தோழர் போய் இட்லி வாங்கிக் கொண்டு வர, அதை சாப்பிட்டுவிட்டு தான் கொண்டு வந்த மூட்டையை எடுத்துக் கொண்டு ஜீவா கிளம்புகிறார்... "கொடுங்க தோழர், அதை நான் கொண்டாறேன்" என்று ஜீவாவின் கையிலிருந்த மூட்டையை வாங்குகிறார் தோழர்... அப்போதுதான் அது நோட்டுகளும், சில்லறைக் காசுகளும் அடங்கிய பணமூட்டையென்பது தோழருக்குத் தெரிகிறது "இது என்னங்க" "மதுரை பொதுக்கூட்டத்துல தோழர்களும், பொதுமக்களும் கட்சிக்காக நிதி திரட்டிக் கொடுத்திருக்காங்க" என்கிறார் ஜீவா "மூட்டை நெறையா பணத்தை வச்சுக்கிட்டா பசியோட இருந்தீங்க.. இதுலருந்து எடுத்து சாப்பிட்டிருக்கலாமே"... "அதெப்படி தோழர் கட்சிக்குக் கொடுத்த நன்கொடைல நான் இட்லி வாங்கித் திங்க முடியும், அது தப்பில்லையா?" என்றார் ஜீவா.. தோழர் ஜீவா ❤ வீராசாமி Voir la traduction இப்படியெல்லாம் கூட வாழ்ந்திருந்திருக்கிறார்கள் ............! 🙂
  7. இப்போதைய எகிப்து இன் முறையான உரித்தாளர் கொப்ட்ஸ் (Copts), இப்பொது சிறுபான்மை இனம், அரேபியரின் கைப்பற்றுதல் மற்றும் குடியேற்றத்தின் பின். ஏனெனில் Copts இன் சந்ததி தோற்றம், வழிவந்தது pharaoh (என்ற அரச வம்ச) குழுமத்தில் இருந்து (என்பது நம்பிக்கையும், வரலாறு சான்றுகளும் இருக்கிறது) Tutankhamun ஒரு pharaoh (அரசன், அரசவம்சத்தின் தலைவன்).
  8. அந்த வைத்தியரிடம் நானும் பாம்பு கடித்தவரை அழைத்து சென்றுள்ளேன் ....... அவர் சில மருந்துகளும் குடுத்து பின் கடிவாயில் கோழிகளின் பின்பக்கத்தை வைத்து அழுத்தி பிடிப்பினம் ......விஷமேறி அதுகள் ஒவ்வொன்றாய் இறக்கும் ........பின் கோழி சாகாதபோது நிறுத்துவார்கள் . ....... உறங்க விட மாட்டார்கள் ........ உங்களுக்கும் அப்படி நடந்ததா . .......! மன்னார் விடத்தல்தீவில் எனது உறவினர் ஒருவர் பிரபலமான பாம்புக்கடி வைத்தியராக இருந்தவர் . ........ இப்போது அவர் காலமாகி விட்டார் ......... அவரெல்லாம் மிகவும் ஆச்சாரமாக பக்திசிரத்தையாக வாழ்ந்து வந்தவர் . ......... ஒருவர் வீட்டுக்குள் வருவதைக் கொண்டு நேரகாலமெல்லாம் கணித்தே பாம்பு கடித்தவர் இருக்கிறாரா மோசம்போய் விட்டாரா என்பதை சொல்லி விடுவார் ........ இவர் பெரும்பாலும் இலவச வைத்தியம்தான் செய்வது வழமை ........ இன்றைய காலத்தில் பலர் இவற்றை நம்பப் போவதில்லை ஆயினும் எனக்குத் தெரிந்ததை சொல்கிறேன் . .........!
  9. நாம் வாழும் உலகில் விசித்திரங்களுக்குப் பஞ்சமே கிடையாது .........! 😀
  10. தலைவா…..வா! தளபதி விஜை அரசியலுக்கு வந்ததால் சினிமாவில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப நீதான் சரியான ஆள் தலைவா… பிகு கறுப்பன் குசும்பன் முதலமைச்சர் பதவிக்கு ரூட்டு போடுறான்😂
  11. நீங்கள் குறுகிய வட்டத்திற்குள் நிற்கின்றீகள் என நினைக்கின்றேன். நீங்கள் கூறும் கருத்தின் படி பார்த்தால் வட கிழக்கு பகுதிகளில் எந்தவொரு சிங்கள கட்சிகளும் இருக்க வாய்ப்பில்லை அல்லவா? இலங்கையின் இன்றைய அரசியல் நிலமையை பார்த்துமா இன்னும் உங்களுக்கு விளங்கவில்லை? அன்று தொடக்கம் இன்று வரைக்கும் நாம் இனவாத கட்சிகள் என சொல்லிக்கொண்டிருக்கும் கட்சிகளில் இருந்து தமிழர்கள் வெற்றி பெறவில்லையா? இனவாத கட்சிகள் சார்பாக தமிழ் எம்பிக்கள் பாராளுமன்றம் செல்லவில்லையா? இதே போல் சிங்கள பிரதேசங்களிலிருந்து சிங்களவர்கள் ஒரு தமிழ் எம்பியை பாராளுமன்றம் அனுப்பியிருக்கின்றார்களா?
  12. நீங்கள் இந்த கொலையை நியாயப்படுத்துகின்றீர்கள்? ஒவ்வொருவருவருக்கும் என தனிமனித சுதந்திரங்கள் உண்டு என்பதை இங்கே பல திரிகளில் பலர் எழுத வாசித்துள்ளேன். அதெல்லாம் பொய்யா?
  13. ஓமோம், தமிழரை தூற்றி தமிழர் சிங்களவருக்கு கீழ் தான் வாழ வேண்டும் என்ற அடிமை மனநிலையுடன் பழகினால் நன்றாகவே சிரித்துப் பழகுவார்கள். இது மேலாதிக்க குணமுடைய எல்லோருக்கும் பொருந்தும். எமது உரிமையைக் கேட்டு அதனோடு பேசினால் நன்றாக முரணோடு பேசுவார்கள். ----------------------------------------------------- 83இற்கு முந்தை தமிழரின் அறவழிப் போராட்டங்களின் போது தமிழர்களை தாக்கியவர்கள் யார்? தமிழர் எதிர்ப்பு இனவன்முறைகளில் பங்கெடுத்தவர்கள் யாவரும் யார் .... (சூலை கலவரத்தில் என்ர வீட்டுப் பாத்திரத்தை மறைத்து வைத்தவர் குஞ்சுபண்டா என்று வர வேண்டாம். களவெடுத்த கற்பழித்த பண்டாக்கள் நிறையவே உண்டு😜) வெளிநாடுகளில் தமிழர் எதிர்ப்பு போராட்டங்களில் பங்கெடுப்பவர்கள் யார்... ஒஸ்ரேலியாவில் சிறுபிள்ளையைக் கூட உதைத்தவர்கள் சிங்களவர், தமிழர் என்ற காரணத்திற்காக மே 18களில் வெற்றிக்கொண்டாட்டங்களில் ஈடுபடுபவர்கள் யார், குறிப்பாக மே 18 2009 அன்று பாற்சோறு குடுத்து மகிழ்ந்தவர்கள்... தமிழீழ-ஸிறிலங்கா எல்லையோர ஊர்களில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்தெறிந்தவர்கள் யார், குறிப்பாக ஊர்காவல்படை (சாதாரண சிங்கள பொதுமக்களைக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டது) என்னும் பேரில்? 2009 இற்கு பின்னர்............... தியாகதீபங்களில் நினைவூர்திகள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் யார்... திருமலையில் தமிழர்களுடன் மோதியவர்கள் யார்? மட்டுவில் தமிழர்களின் மாடுகளில் வாயில் வெடிவைத்து விளையாடுபவர்கள் யார்? இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம், அதற்காக பூனை கண்ணை மூடினால் இருண்டுவிட்டதாக பொருளில்லை. நீங்கள் தமிழர் விரோத-புலி எதிர்ப்பு மனநிலையில் இருப்பதால் எல்லாவற்றை அந்தக் கண்ணாடி கொண்டே பார்த்துப் பழகினதாலும் மெய்யுண்மைகள் வேறாகவே உள்ளன. உங்களோடும் நீங்களும் பழகிய சிங்களவர்கள உங்களைப் போன்றே இருப்பதால் உங்களுக்கு இனிக்கிறது, அவ்வளவே. சிங்களவரால் பாதிக்கப்பட்டவர்களினது மனநிலை வேறாக இருக்கும். தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் ஒவ்வொருவரின் குணநலன்களுக்கு ஏற்ப வேறுபடும். கூட்டிக் கொடுத்தவனுக்கு இனிக்கும், அடிவேண்டி தன்மானத்தோடு எதிர்த்தவனுக்கு ....
  14. யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்கள் சிறந்த கலைஞர்களாகவும் இருக்கிறார்கள். பாராட்டுக்கள். நேரமிருக்கும் போது பார்த்து உற்சாகப்படுத்துங்கள்.
  15. இலங்கையின் மருமகன் சரத்குமார்... 😂 ஸ்ரீலங்காவை பாராட்டுவது மகிழ்ச்சியாக உள்ளது. 😜 ஈழத்தின் மருமக்கள்... விஜய், சரத்குமார் என்று பட்டியல் நீள்கிறது. 🤣
  16. கள்ளத் தொடர்பு என ஏன் கொச்சைப் படுத்துகின்றீர்கள் ஐயா.. காலம் தாழ்த்தி வந்த காதல் என்று சொல்லலாமே,...😆
  17. அப்படி என்ன பேசினாராம்? சில யாழ் கள உறுப்பினர் முன்பு எழுதியது போல் புல் இங்கிலிசோ?😂
  18. அததெரண கருத்துப்படம்.
  19. ஐந்து அடுக்கு பாதுகாப்பு. 😂
  20. 34)இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி எது? இந்தியா 8 போட்டியாளர்கள் சரியாக கணித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 75 புள்ளிகள் 2) ஏராளன் - 70 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 70 புள்ளிகள் 4) சுவி - 70 புள்ளிகள் 5) செம்பாட்டன் - 70 புள்ளிகள் 6) வாதவூரான் - 66 புள்ளிகள் 7) வீரப்பையன் - 65 புள்ளிகள் 8) கிருபன் - 64 புள்ளிகள் 9) புலவர் - 61 புள்ளிகள் 10) ரசோதரன் - 61 புள்ளிகள் 11) நியூபலன்ஸ் - 60 புள்ளிகள் 12) கறுப்பி - 56 புள்ளிகள் 13) வசி - 55 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 53 புள்ளிகள் 15) வாத்தியார் - 52 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 42, 44 - 47 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 98).
  21. கட்டாயத்தின் பேரில் ஓய்வு பெற நேர்ந்தது - இளஞ்செழியன் Monday, November 03, 2025 செய்திகள் தான் 61வது வயதை நிறைவு செய்வதற்குள் பதவி உயர்வு வழங்கப்படாததால், விரும்பாத நிலையிலும் கட்டாயத்தின் பேரில் ஓய்வு பெற நேர்ந்ததாக முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டார். கடந்த ஜனவரி 12ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நான்கு நீதியரசர்களுக்கான வெற்றிடம் ஏற்பட்டபோது, மேல் நீதிமன்ற நீதிபதிகளில் தான் முதலாவது இடத்தில் இருந்தபோதிலும், தனக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தனக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்தால் மேன்முறையீடு மற்றும் உயர் நீதிமன்றங்களில் தலா இரண்டு ஆண்டுகள் என இன்னும் நான்கு ஆண்டுகள் சேவை செய்திருக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத் தலைவராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்ட தான் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவைச் சந்தித்தபோது, தனது ஓய்வு குறித்து நினைவூட்டியதாகவும் இருந்த போதிலும், தனது ஓய்வுக்குரிய ஜனவரி 20ஆம் திகதிக்கு வெறும் எட்டு நாட்கள் மட்டுமே இருந்த நிலையில், ஜனாதிபதி வெளிநாடு சென்றதாகவும் அவர் கூறினார். ஜனவரி 18ஆம் திகதி ஜனாதிபதி நாடு திரும்பியதால், தனக்குரிய பதவி உயர்வுக்கான சட்டம் பின்பற்றப்படவில்லை என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்தார். இந்த அநீதி தொடர்பாக "நான் விரும்பி ஓய்வு பெறவில்லை; கட்டாயப்படுத்தி ஓய்வு பெறப்பட்டேன்" என்று தான் எழுதிய நான்கு கடிதங்களுக்கும் பதில் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், "நீதித்துறை புனிதமானது, யாரையும் குறை சொல்லும் இடத்தில் நான் இல்லை" என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், தாம் நீதி, நியாயம், சட்டம், நீதிமன்றம் ஆகிய நான்கை தவிர, வேறு எதற்கு முன்னாலும் தலைகுனிந்ததில்லை என்றும் முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
  22. 10 நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த தாதி - ஜேர்மனியில் சம்பவம்! 08 Nov, 2025 | 02:08 PM ஜேர்மனியின் வூர்ஸ்பர்க் (Würzburg) நகரில் உள்ள வைத்தியசாலையில் இரவு நேரக் கடமையின் மன அழுத்தத்தைக் குறைக்கத் தனது பராமரிப்பில் இருந்த 10 நோயாளிகளுக்குத் தூக்க மாத்திரைகளை ஊசி மூலம் செலுத்தி கொலை செய்த ஆண் தாதிக்கு ஜேர்மனி நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் வூர்ஸ்பர்க் நகரில் உள்ள வைத்தியசாலையில் கடமைபுரியும் குறித்த தாதி, தனது பராமரிப்பில் இருந்த வயதான மற்றும் தீவிர நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் இவ்வாறு கொலை செய்துள்ளார். இரவுப் பணியின் போது ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கவே அவர் இந்தச் செயலைச் செய்ததாகக் கூறப்படுகிறது. நோயாளிகளுக்குத் தேவையற்ற அதிகப்படியான தூக்க மாத்திரைகளை ஊசி மூலம் செலுத்தி அவர் இந்தக் கொடூரச் செயலைச் செய்துள்ளார். டிசம்பர் 2023 முதல் மே 2024 வரை இந்த இறப்புகள் பதிவாகி உள்ளன. விசாரணையில், அவர் 10 நோயாளிகளைக் கொலை செய்ததுடன், மேலும் 27 நோயாளிகளை அதே முறையில் கொல்ல முயன்றார் என்றும் தெரியவந்தது. குற்றம் சாட்டப்பட்ட ஆண் தாதியின் பெயர் வெளியிடப்படாத நிலையில், வழக்கு விசாரணையின் இறுதியில், குற்றத்தை உறுதிசெய்த நீதிமன்றம், அந்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. இருப்பினும், அவர் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் தாதியர்களால் அரங்கேற்றப்படும் தொடர் கொலைச் சம்பவங்கள் இது முதல் முறையல்ல. வடக்கு ஜேர்மனியில் 1999 முதல் 2005 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், நீல்ஸ் ஹோஜெல் (Niels Högel) என்ற ஆண் தாதி இரண்டு வைத்தியசாலைகளில் வேலை செய்தபோது, 85 நோயாளிகளைக் கொலை செய்தார் என்பது 2019 ஆம் ஆண்டில் வெளிச்சத்துக்கு வந்தது. இவர் ஜேர்மனியின் நவீன வரலாற்றில் மிகவும் கொடூரமான தொடர் கொலைகாரராகக் கருதப்படுகிறார். தற்போது அதே பாணியில், இரவுப்பணி அழுத்தத்தைக் காரணம் காட்டி மற்றொரு தாதியர் நிகழ்த்திய கொடூரக் கொலைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளமை, ஜேர்மன் சுகாதாரத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/229845
  23. Water for injection (WFI) வேறு மருந்துகளுடன் பாவிப்பதற்காக தயாரிக்கப்படுவது, இதனை தனியாக உடலில் செலுத்தினால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என கருதுகிறேன்(சரியாக தெரியவில்லை).
  24. யாழ்ப்பாணம் 6 மணி நேரம் முன் யாழில். ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்ற தாய் உயிரிழப்பு! கடந்த 20 ஆண்டுகளின் பின்னர் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வடமராட்சி வதிரி பகுதியைச் சேர்ந்த 46வயதுடைய யோகராஜா மயூரதி என்ற தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யாழ். போதனா மருத்துவமனையில் கடந்த மாதம் 07 திகதி ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை பெற்ற நிலையில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் அவர் நேற்றைய தினம் மாலை 02மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது மூன்று குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்து 20 ஆண்டுகளாக குழந்தை இன்றி பெரும் துன்பங்களை எதிர்கொண்ட தாய், தனது மூன்று குழந்தைகளையும் பார்க்காமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.