Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வல்வை சகாறா

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by வல்வை சகாறா

  1. இன்னும் இலையான் கில்லருக்கு கெட்டிக்காரன் கெட்டிக்காறி அகப்படவில்லை. நல்ல பதிவு இலையான் கில்லர்.🙂
  2. களத்திற்கு ஒவ்வொரு நாளும் வந்தேனே.. ( வாசிக்க மட்டும்) எப்படி என்னை எட்டி உதைக்கலாம் ஆ? இது கூட்டுச்சதியா? அல்லது கூட்டாளிகள் சதியா?🤬
  3. இங்க பார்ரா இவ எங்கேர்ந்து வர்றா என்றெல்லாம் கேட்கப் படாது. இந்த களமாற்றங்கள் செய்த பிறகு திண்ணை இல்லையோ.... கூட்டாளிகளை குசலம் விசாரிக்க ஏலாம இருக்கு......
  4. அமானுஷ்யத் தொடரா....... அப்ப காத்திருந்து வாசிக்கலாம்.😬
  5. இயற்கை என்பது வரம். வரங்களை சாபங்கள் ஆக்கியே மானுடத்தேடல்கள் பயணப்படுகின்றன. இயற்கையை பாதுகாக்க மானுடம் தேடல்களை முடக்குமா? இயற்கையை நேசிக்கும் மானுடத்தை கவிதையில் காணமுடிகிறது. வாழ்த்துகள் பசுவூர்கோபி.
  6. வெட்டுக்கிளி ராசுக்குட்டிக்கு கதைக்கா.. பஞ்சம் நல்ல இலகுவான எழுத்து நடை. கொஞ்சம் எழுத்துப பார்த்து பொறாமையாகவும் இருக்கிறது.
  7. நம்பவே முடியவில்லை எப்போதிருந்து இந்த சாந்தி இப்படி பலவீனமாக மாறினாள் என்று புரியவில்லை. இப்போதெல்லாம் எழுத்துகளில் பழைய சாந்தியை காணவே முடியவில்லை. காலம் நிறையவே பிணிகளை தந்திருக்கிறது என்பதை எழுத்துகள் உணர்த்துகின்றன. பழைய துடிப்பான சாந்தியை மீளப்பார்க்கமாட்டோமா என்று மனம் அங்கலாய்க்கிறது. பிள்ளைகள் என்று வந்துவிட்டால் ஒரு தாய்க்கு எதுவும் தேவையில்லை என்பதை மீள மீள உணர்த்துகிறது நம்பிக்கைகளை விதைத்து நதியாக ஓடும் தாய்மையின் எழுத்து. மனவலிமை கொள் தோழி.
  8. தொலைத்த இடத்திலேயே தேடவேண்டும் ஓசோவின் தத்துவ வார்த்தைகள். தொலைத்த இடத்தில் நாங்களும் இல்லை. தொலைந்த இடத்தில் இருப்பவர்களுக்கு தேடும் சக்தியும் இல்லை. தர்மம் வெல்லும் என்ற சொல்லைக்காட்டிலும் வல்லவன் வாழ்வான் என்ற சொல்லே இக்காலத்தில் மிளிர்ச்சியாக இருக்கிறது. சுவியண்ணா.
  9. பா. உதயகுமார் அருமை மிகச் சிறப்பாக இருக்கிறது. இலகுவான வார்த்தைப்பிரயோகம் கேட்பவரை ஒரு நிலைக்குள் கட்டிப்போடுகிறது. ஒலிப்பதிவும் பிசிறின்றி அமைதியாக நகர்கிறது. இசையும் கவிதையின் ஓட்டமும் நிகழ்காலத்தை மனக்கண்முன் காட்சியாக விரிக்கிறது. உணர்வுகளுக்குள் கலக்கின்ற வரிகள் வடிவங்களை பின்னி அசைத்திருக்கிறது. சிறப்பு வாழ்த்துகள். கு.சா உங்களைப்போலத்தான் எனக்கும் சந்தேகம் 🤣 எங்கட சனியனைத்தான் சாந்தி மறைமுகமா போட்டுத்தாக்கிறாவோ?🤔
  10. இம்முறை கு.சா ஒரு முடிவோடதான் எழுத வெளிக்கிட்டிருக்கிறார்போல. அம்மாவுக்கு கு.சா எழுதும் கடிதம் நிச்சயமாக நம் எல்லோரும் அநுபவிக்கும் நன்மை தீமைகளை இயம்பும் என்பதை ஆரம்ப எழுத்துகள் புரிய வைக்கின்றன. வரவேற்பும் வாழ்த்தும் உரித்தாகட்டும். இப்பதான் விளங்குது ஏன் கு.சா இங்கின குழப்படியாகத் திரிகிறார் என்று எல்லாம் அம்மா செல்லந்தான் அதுவும் கடைக்குட்டி என்றால்..... அம்மா இருக்கும்வரை குட்டு கூட விழாது....
  11. 😡 கொலைவெறி என்று சொல்லுவாங்களே.... அது இப்ப எனக்கு வந்திருக்கு. இலையான் கில்லர் மாட்டினா அவ்வளவுதான்
  12. லொட்டோவில் அதீத பணம் கிடைத்த இருவர் வாழ்வை இன்றுவரை பார்த்துக் கொண்டிருக்கிறேன். உண்மையான அன்புக்காக ஏங்கிக்கொண்டே விரக்தியுடன் காலம் கழிக்கிறார்கள். மனம் விட்டு என்னுடன் பேசுவார்கள். கிட்டத்தட்ட நான் ஒரு கவுன்சிலிங் செய்பவர்போல . அவர்களின் கதைகளைக் கேட்கும்போது தடாலடியாக இப்படி பணம் வரக்கூடாது என்று நினைப்பேன். பணத்தைத் தவிர வேறெதுவும் அவர்களுக்கு இல்லை.
  13. அரிதாரம் போடாத எழுத்துகள் வளவன். எத்தனையோ முறை மனம் சொல்வதை எழுத முயல்வதும் பின்னர் அழிப்பதுமாக கடந்த காலங்களைக் கடந்திருக்கிறேன். நிதர்சனத்தை புரிந்து கொள்ள விரும்பாத பக்கங்களை யாழின் கருத்துக்கள நண்பர்களில் காண்பதுண்டு. சில சமயங்களில் அதுவும் நன்றே என்றும் தோன்றும். எழுத்துக்களில் அதி மேதாவித்தனம் அல்லது அடிமுட்டாள்த்தனம் அவை மட்டுமே கருத்துக்களத்தை கொண்டு நகர்த்தும் அடிப்படையாக உணர்வதுண்டு. போட்டு உடைத்து எழுதும் திராணி எப்போதும் இருந்ததில்லை. மேலே கிருமி சொன்னதைப்போல் யாழ் இணையம் இளமைதான் எழுதும் கருத்தாளர்கள் அரும்பும் முதுமையில்.... எழுத்துகளுக்கு அப்பால் நாமெல்லாம் வெறும் பூஜ்ஜியங்கள் ஆகிவிட்டோமோ என்றும் அதிகம் தோன்றுகிறது. உங்கள் மனதில் தோன்றிய எண்ணம்போல் நமக்கும் தோன்றுகிறது.
  14. ஆகா கிடைக்கிற காப்பில இந்த சிட்னி முருகனை கலாய்க்கிறதில புத்தனுக்கு தனி இன்பம். இந்தக்கதையை வாசித்த பிறகு நாங்கள் பாவம் பார்க்கவேண்டியது புத்தனுக்கா? முருகனுக்கா? கிட்டத்;தட்ட இரண்டு கெரக்டரும் ரிலாக்ஸாக இருக்க ஆசைப்படுகிறார்கள். ஆனால் பக்தை / துணைவி யின் முயற்சி இருவரையும் ஒரு நேர் கோட்டில் நிறுத்தி இப்படி இருவரையும் புலம்ப வைக்கிறதே. புத்தனிள் புலம்பலுக்கும் முருகனின் அங்கலாய்ப்பிற்கும் பாராட்டுகள்.
  15. இந்தப்பிரச்சனைக்குள் அகப்படாமல் தெளிவடைய முடியாது எங்கள் குடும்பத்தில் எனது துணைவரின் தமையனார் மொன்றியலில் வசிக்கிறார் நாங்கள் ரொரன்டோ எங்கள் வீட்டின் எனது பிள்ளைகளுக்கு அவர்களுடைய பெயர் முதற்பெயராகவும் துணைவரின் பெயர் குடும்பப் பெயராகவும் உள்ளது. அதே நேரம் மொன்றியலில் உள்ள துணைவரின் சகோதரரின் மகனுக்கு முதற்பெயராக மகனின் பெயரும் குடும்பப் பெயராக எனது துணைவரின் தந்தை பெயரும் உள்ளது அதே நேரம் அண்ணியாருக்கும் அவரின் குடும்பப் பெயராக மாமாவின் பெயரே அமைந்துள்ளது. ஆனால் எனது குடும்பப் பெயராக எனது துணைவரின் பெயர் இல்லை. பதிவுத் திருமணத்தின்போது ஒரு கேள்வி உள்ளது மணப்பெண்ணிற்கான பகுதியில் அவள் தன்னுடைய குடும்பப் பெயரை துணைவரின் குடும்பப் பெயருக்குக்கீழ் மாற்ற விரும்புகிறாரா என்பது... அதற்கு ஆம் என்று பதிலளித்திருந்தால் அது துணைவரின் தந்தை பெயரை தனது குடும்பப் பெயராக ஏற்றுத் தொடரவேண்டும் இல்லை எனது தந்தையின் பெயரையே வைத்திருக்க விருப்பம் என்று தெரிவித்தால் அவள் தனது கன்னிப்பெயரையே குடும்பப் பெயராக தொடர முடியும். உண்மையிலேயே இந்த நிலை வெளியிடங்களுக்கு செல்லும்போது சிக்கலானதாக உள்ளது நாங்கள் எல்லோரும் ஒரு குடும்பம் என்று பயண இடங்களில் நிரூபிக்க மேலதிக ஆவணங்களை கைவசம் வைத்திருக்கவேண்டியுள்ளது. கட்டுரை நன்றாக உள்ளது கிருமி. நாங்கள்தான் எப்படி தெளியப்போகிறோம் என்று தெரியவில்லை. 🤔
  16. இன்றைய நாட்களில் அநேகமாக இந்தமாதிரி சங்கு அமைப்பில்தான் சுவாசம் சீராகிறது. நிறையக்காலம் காத்திருந்து எழுதிய கவிதை மாதிரி இருக்கு கடைசியிலை நாங்களெல்லாம் கொக்குப்பார்த்த குருடன் கதைதான் கேட்டிருக்கிறோம் அம்மாடி யானை பார்த்த குருடனா?????????? கொக்கை என்றாலும் குருடன் தடவிப்பார்த்து புரிந்திருப்பான். யானையை எப்படி? பின்னால வந்து கருத்தெழுத வெளிக்கிட்ட ஆண்சிங்கங்களின் ஆர்வத்தின் வெளிப்பாட்டை நன்றாக இரசிக்கமுடிகிறது. அதிலயும் மாங்காய் பிடுங்கி திண்டதாக எழுதினவர் சுவியாரை விட ஒரு படி மேலே போய் விட்டார்...... சரி சரி வாழ்த்துக்கள் சுவி அண்ணா
  17. அன்புத்தோழி கண்மணி கதை ஆரம்பித்தபோது மனம் திக்கென்றது.... சரி எப்படி போகிறது என்று பார்ப்போம் எனறு தொடர்ந்து வாசித்தேன். ஒரு கணம் கடந்த காலத்தில் லொக்டவுனை நான் அலட்சியம் செய்திருந்தால் நிச்சயம் இப்படி ஒரு சந்தர்ப்பம் அமைந்திருக்கக்கூடும். எல்லோருடைய நலமும் பாதுகாப்பும் இந்நாட்களில் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. ஒரு கணம் நான் தவறியிருந்தால் இந்தக்கதை என்னுடையதாக இருந்திருக்கும் என்பது நிதர்சனம். லொக்டவுன் உண்மையின் தரிசனம். வாழ்த்துக்கள் தோழி
  18. நன்றி யாயினி என்னுடைய பேர்த்திக்கு "ருத்ரா" என்று பெற்றோர் பெயரிட்டுள்ளனர் யாயினி வெட்டுக்கிளிக்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்
  19. ரதி , நுணுக்கம், வெட்டுக்கிளி, பெருமாள், நிலாமதியக்கா அனைவருக்கும் நன்றி பல
  20. நன்றி கவி அருணாசலம் அண்ணா ஓவியத்திற்கும் மனம் நிறைந்த நன்றி இந்த ஓவியத்தை நிச்சயமாக என் சந்ததியே பாதுகாக்கும். புரட்சி, உடையார்,ஜெகதா, அடுப்படிப்பூனை, சுவிஸ் அண்ணா, கிருமி, நண்டு, ஈழப்பிரியன் அண்ணா மற்றும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.