Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோழர் சேரனுக்கு தயவு செய்து மாற்றி யோசியுங்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் சேரனுக்கு, உங்கள் கருத்துடன் முரண்பட நேர்ந்தமைக்கு வருந்துகிறேன். இன்று 0 மட்டத்தில் (ground zero) வீழ்துகிடக்கும் களத்தில் உள்ள எமது மக்களின் விடிவுக்காக புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புகள் சூரியனின்கீழ் அவசியமான சகல ஆட்டங்களையும் ஆடியே ஆகவேண்டும். அது எருமை ஆட்டம் மட்டுமல்ல அதற்க்குக்கீழேபோய் நாய் ஆட்டம் நாரி ஆட்டமாக இருப்பினும் நாம் ஆடியே ஆகவேண்டும் என்பது என்று வலியுறுத்துகிறேன்.

நீங்கள் எங்களுக்கு பல தெரிவுகள் இருக்கின்றது என்று கருதுகிறீர்களா? நாம் வெறென்ன செய்யலாம். செய்யவேண்டும்? நமக்கு இதைவிட வலுவான மாற்று வழிகள் இருந்தால் மட்டுமே நீங்கள் சொல்வதில் ஏதாவது உண்மை இருக்கலாம்.

நான் ஒரு சமூக விஞானியோ அறிஞனோ இல்லை. ஆனாலும் நாம் ஒரு இன்மாகத் தப்பிப் பிழைத்தல் மேம்பட்டு உய்தல் தொடர்பாக எனக்குத் தெரிந்த வரைக்கும்ம் நமக்கு இதைவிட அடுத்த தெரிவுகள் இல்லை. தெரிவை உருவாக்கக்கூடிய பலத்தை உருவாக்க பெரிதாக அரசியல் வெளியும் இல்லை.இருக்கிற இறிய அரசியல் வெளிக்குள் நுளைந்து அதைப் பெருப்பிக்க வேண்டிய அவசரத்தேவை நமக்கு உள்ளது. அந்த பணிகளின் சரியான ஆரம்பமே கூட்டமைப்பும் புலம்பெயர்ந்த தமிழர்கலது அமைப்புகளும் அமரிக்காவுக்கும், கனடாவுக்கும் மேற்க்கு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் நன்றி கூறும் நிகழ்வுகள். இது காலத்தின் அவசியமாகும்.

ஆனாலும் இதுதொடர்பாக நீங்கள் வைக்கக்கூடிய ஒரே ஒரு காத்திரமான விமர்சனம் உள்ளது. தமிழர்களே நீங்கள் பெரிய நாடுகளோடு நிறுத்திக்கொள்கிறீர்கள் அது தப்பு. அது தொடர்பாக எனக்கு விமர்சனம் இருக்கு. பெரிய நாடுகளோடு நிண்றுவிடாமல் தீர்மானத்தை ஆதரித்த அத்தனை சின்ன நாடுகளுக்கும் நன்றி கூறுங்கள். அவற்றுட் சில கொள்கைரீயாகவும் எம்மை ஆதரிக்கும் நிலைபாடு எடுத்தவை. அத்தகைய நாடுகள் எமக்கு அமரிக்கா போல முக்கியமானவையாகும்.ஆதரித்த அத்தனை நாடுகளுக்கும் நாம் நன்றிகூறவும் அவற்றுடனான தமிழர் நட்புறவுச் சங்கங்களை அமைத்துத் தொடர்ந்து செயல்படவும் கடமைப் பட்டிருக்கிறோம். தமிழர் மெச்சிக்கோ நட்புறவு சங்கம் தமிழர் இந்தியா நட்புறவுச் சங்கம், தமிழர் மொறீசியஸ் நட்புறவுச் சங்கமென புலம் பெயர்ந்த நாடுகளில் நூறு நட்ப்புறவு மலர்கள் மலரட்டும். நடுநிலை வகித்த நாடுகளில் மலேசியா முக்கியமானது. இலங்கைக்கு ஆதரவான அந்த நாட்டை மலேசிய தமிழர்களின் போராட்டங்களே அசைத்தது. மலேசிய தமிழருக்கு நாம் நன்றி சொன்னோமா என உரத்துக் கேட்க்க வேண்டி உள்ளது. தமிழர் மலேசிய நட்புறவு நடவடிக்கைகள் மிக முக்கியமானவை. இத்தகைய விமர்சனங்களுக்கே இடம் இருந்தது. அத்தகைய விமர்சனத்தையே உங்களிடம் இருந்து எதிர்பார்த்தேன்.

மேலும் நீங்கள் ஆதரித்த அல்லது நடுநிலை வகித்த நாடுகளுக்கும் நன்றி கூறுங்கள். உலக மனித உரிமை அமைப்புகள் பாசன தமிழ்நெற் வாகீசன் அமரர் மேரி கொலின் போன்ற சிங்கள தமிழ் சர்வதேச [பத்திரிகையாளர்கலையும் கவுரவியுங்கள் அது அடிப்படையில் முக்கியமானது என்பதை அழுத்திச் சொல்லியிருக்கலாம். அதனை நானும் ஆதரித்திருப்பேன்.

.

ஏனேனில் பிரபலமான ஒருசிலநாடுகளை வாழ்த்திவிட்டு முக்கியமான பல நாடுகலையும் நபர்களையும் மறந்து விடுவோம். இத்தகைய தவறுகள்தான் நாம் திரும்பத் திரும்ப இளைக்கிற தவறுகள் சிங்கள பத்தீரிகையாளர் பாசன தமிழ்வாணி வாகீசன் போன்ற உயிரைப் பணயம் வைத்து இனக்கொலை யுத்தக்குற்ற தகவல்களை சர்வதேச அரங்கிற்க்கு கடத்திவந்த நம் காலத்து நாயகர்க் நாயகிகள் பலரை நாம் ஏற்கனவே மறந்துபோனது கொடுமை. இதற்காக நம்மவரை எருமைகடா என்றால் நானும் ஆமோதிதிருப்பேன். நானும் உங்களோடு சேர்ந்து குரல் கொடுக்கவே விரும்புகிறேன் எனவே நமினத்தை இன்னும் பாதாலத்துக்குள் தள்ளிவிடக்கூடிய தங்கள் anarchistic அணுகுமுறையை விட்டு விட்டு. தோழரே தோழர் சேரனுக்கு, உங்கள் கருத்துடன் முரண்பட நேர்ந்தமைக்கு வருந்துகிறேன். இன்று 0 மட்டத்தில் (ground zero) வீழ்துகிடக்கும் களத்தில் உள்ள எமது மக்களின் விடிவுக்காக புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புகள் சூரியனின்கீழ் அவசியமான சகல ஆட்டங்களையும் ஆடியே ஆகவேண்டும். அது எருமை ஆட்டம் மட்டுமல்ல அதற்க்குக்கீழேபோய் நாய் ஆட்டம் நாரி ஆட்டமாக இருப்பினும் நாம் ஆடியே ஆகவேண்டும் என்பது என்று வலியுறுத்துகிறேன்.

நீங்கள் எங்களுக்கு பல தெரிவுகள் இருக்கின்றது என்று கருதுகிறீர்களா? நாம் வெறென்ன செய்யலாம். செய்யவேண்டும்? நமக்கு இதைவிட வலுவான மாற்று வழிகள் இருந்தால் மட்டுமே நீங்கள் சொல்வதில் ஏதாவது உண்மை இருக்கலாம்.

நான் ஒரு சமூக விஞானியோ அறிஞனோ இல்லை. ஆனாலும் நாம் ஒரு இன்மாகத் தப்பிப் பிழைத்தல் மேம்பட்டு உய்தல் தொடர்பாக எனக்குத் தெரிந்த வரைக்கும்ம் நமக்கு இதைவிட அடுத்த தெரிவுகள் இல்லை. தெரிவை உருவாக்கக்கூடிய பலத்தை உருவாக்க பெரிதாக அரசியல் வெளியும் இல்லை.இருக்கிற இறிய அரசியல் வெளிக்குள் நுளைந்து அதைப் பெருப்பிக்க வேண்டிய அவசரத்தேவை நமக்கு உள்ளது. அந்த பணிகளின் சரியான ஆரம்பமே கூட்டமைப்பும் புலம்பெயர்ந்த தமிழர்கலது அமைப்புகளும் அமரிக்காவுக்கும், கனடாவுக்கும் மேற்க்கு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் நன்றி கூறும் நிகழ்வுகள். இது காலத்தின் அவசியமாகும்.

ஆனாலும் இதுதொடர்பாக நீங்கள் வைக்கக்கூடிய ஒரே ஒரு காத்திரமான விமர்சனம் உள்ளது. தமிழர்களே நீங்கள் பெரிய நாடுகளோடு நிறுத்திக்கொள்கிறீர்கள் அது தப்பு. அது தொடர்பாக எனக்கு விமர்சனம் இருக்கு. பெரிய நாடுகளோடு நிண்றுவிடாமல் தீர்மானத்தை ஆதரித்த அத்தனை சின்ன நாடுகளுக்கும் நன்றி கூறுங்கள். அவற்றுட் சில கொள்கைரீயாகவும் எம்மை ஆதரிக்கும் நிலைபாடு எடுத்தவை. அத்தகைய நாடுகள் எமக்கு அமரிக்கா போல முக்கியமானவையாகும்.ஆதரித்த அத்தனை நாடுகளுக்கும் நாம் நன்றிகூறவும் அவற்றுடனான தமிழர் நட்புறவுச் சங்கங்களை அமைத்துத் தொடர்ந்து செயல்படவும் கடமைப் பட்டிருக்கிறோம். தமிழர் மெச்சிக்கோ நட்புறவு சங்கம் தமிழர் இந்தியா நட்புறவுச் சங்கம், தமிழர் மொறீசியஸ் நட்புறவுச் சங்கமென புலம் பெயர்ந்த நாடுகளில் நூறு நட்ப்புறவு மலர்கள் மலரட்டும். நடுநிலை வகித்த நாடுகளில் மலேசியா முக்கியமானது. இலங்கைக்கு ஆதரவான அந்த நாட்டை மலேசிய தமிழர்களின் போராட்டங்களே அசைத்தது. மலேசிய தமிழருக்கு நாம் நன்றி சொன்னோமா என உரத்துக் கேட்க்க வேண்டி உள்ளது. தமிழர் மலேசிய நட்புறவு நடவடிக்கைகள் மிக முக்கியமானவை. இத்தகைய விமர்சனங்களுக்கே இடம் இருந்தது. அத்தகைய விமர்சனத்தையே உங்களிடம் இருந்து எதிர்பார்த்தேன்.

மேலும் நீங்கள் ஆதரித்த அல்லது நடுநிலை வகித்த நாடுகளுக்கும் நன்றி கூறுங்கள். உலக மனித உரிமை அமைப்புகள் பாசன தமிழ்நெற் வாகீசன் அமரர் மேரி கொலின் போன்ற சிங்கள தமிழ் சர்வதேச [பத்திரிகையாளர்கலையும் கவுரவியுங்கள் அது அடிப்படையில் முக்கியமானது என்பதை அழுத்திச் சொல்லியிருக்கலாம். அதனை நானும் ஆதரித்திருப்பேன்.

.

ஏனேனில் பிரபலமான ஒருசிலநாடுகளை வாழ்த்திவிட்டு முக்கியமான பல நாடுகலையும் நபர்களையும் மறந்து விடுவோம். இத்தகைய தவறுகள்தான் நாம் திரும்பத் திரும்ப இளைக்கிற தவறுகள் சிங்கள பத்தீரிகையாளர் பாசன தமிழ்வாணி வாகீசன் போன்ற உயிரைப் பணயம் வைத்து இனக்கொலை யுத்தக்குற்ற தகவல்களை சர்வதேச அரங்கிற்க்கு கடத்திவந்த நம் காலத்து நாயகர்க் நாயகிகள் பலரை நாம் ஏற்கனவே மறந்துபோனது கொடுமை. இதற்காக நம்மவரை எருமைகடா என்றால் நானும் ஆமோதிதிருப்பேன். நானும் உங்களோடு சேர்ந்து குரல் கொடுக்கவே விரும்புகிறேன் எனவே நமினத்தை இன்னும் பாதாலத்துக்குள் தள்ளிவிடக்கூடிய தங்கள் anarchistic அணுகுமுறையை விட்டு விட்டு. தோழரே தயவு செய்து மாற்றி யோசியுங்கள்.

-- வ.ஐ.ச.ஜெயபாலன்

Edited by poet, Today, 12:48 PM.

Edited by poet, Today, 12:48 PM.

Edited by poet

உங்கள் எழுத்துக்கு நன்றி பொயட்.

அநாதரவாகக் கிடந்த எங்களுக்கு இதுவே பெரிய விடயம். சந்தர்ப்பத்தைப் பாவித்து நாயாட்டம் நரியாட்டம் ஆடியாவது அதி உச்சபட்சத் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் நிலையற்ற.. மக்கள் நலன் அறியாத.. செயற்படுத்தாத.. சேரன் போன்றவர்களின் கருத்துக்களுக்கு எல்லாம் செவிசாய்த்து இதனை எழுதியதாகக் கருதுவதிலும்.. சமீபத்திய... சிறீலங்கா தொடர்பான ஜெனிவா நிகழ்வுகள் தொடர்பில் கவிஞரின் கருத்தாக பரிந்துரைகளாக இதனை பார்ப்பதில் மகிழ்ச்சி. நன்றி கவிஞரே..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்துக்கள் கவிஞரே.தமிழரின் தற்போதைய நிலை ஏதாவது ஒரு துரும்பில் பிடித்து உயிர்வாழும் நிலைக்கு ஒப்பானது.நாம் துரதிஸ்டவசமாக இல் இருந்து தான் தொடங்க வேண்டியுள்ளது.தமிழில் ஒரு பழமொழி இதற்கு சாலவே பொருந்தும்."ஆடிக்கறக்க வேண்டிய மாட்டை ஆடிக்கறக்க வேண்டும் பாடிக்கறக்க வேண்டிய மாட்டை பாடிக்கறக்க வேண்டும்" என்பது.அதாவது மூன்று வருடங்களுக்கு முன் இதே சர்வதேசம் நாம் வீதியில் இறங்கி போராடும் போது பார்த்துக்கொண்டே இருந்தது.இன்று ஏதாவது செய்ய நினைக்கிறது.(அவர்களது சுயநலம் என்பதும் தெரிந்ததே) நாமும் அவர்களோடு சேர்ந்து பயணிக்க வேண்டியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

மிக, நீண்ட நாட்களின் பின்.... கவிஞர் ஜெயபாலனின் கருத்துடன் ஒத்துப் போகின்றேன் என்று நினைக்க... மகிழ்ச்சியாக உள்ளது. :)

சேரனின் பதிவுகளை / எண்ணங்களை மூன்றாக பிரித்துப்பார்க்கலாம்.

1. முள்ளிவாய்க்காலுக்கு முன்னரானது

2. முள்ளிவாய்க்கால் தொடக்கம் ஜெனீவா பிரேரணைவரையானது

3. ஜெனீவாவுக்கு பின்னரானது

முதலாவதில் புலிகளை எதிர்த்தமை.

இரண்டாவது காலகட்டத்தில் கனேடிய தேசிய ஊடகங்களில் தோன்றி மக்களுக்காக குரல்கொடுத்தமை.

இப்பொழுது ஜெனீவா தீர்மானம் ஒன்றும் பெரியதல்ல எனக்கூறுவது.

இந்த மூன்று காலகட்டத்திலும் தன்னை முன்னிறுத்துவதையே முக்கிய இலக்காக கொண்டுள்ளார், அதற்காக அவர் தேர்ந்தெடுக்கும் பாதைகள் குறுகிய இலாபம் கொண்டவை. சமூகமும் இவற்றை புரிந்துகொள்ளும்.

மொத்தத்தில் சேரன், அவரது ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என்பதை அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியல் நிலையற்ற.. மக்கள் நலன் அறியாத.. செயற்படுத்தாத.. சேரன் போன்றவர்களின் கருத்துக்களுக்கு எல்லாம் செவிசாய்த்து இதனை எழுதியதாகக் கருதுவதிலும்.. சமீபத்திய... சிறீலங்கா தொடர்பான ஜெனிவா நிகழ்வுகள் தொடர்பில் கவிஞரின் கருத்தாக பரிந்துரைகளாக இதனை பார்ப்பதில் மகிழ்ச்சி. நன்றி கவிஞரே..! :icon_idea:

நெடுக்ஸ் அண்ணாவின் கருத்தே எனதும்.

ஆழமானதும்,தேவையானதுமான கருத்து நன்றி கவிஞ்ஞரே :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, தோழ்ர்களே. நன்றி தப்பிலி நெடுக்ஸ் நுணாவிலான் தமிழிச்சி அகோதா தமிழ்சிறி ஜீவா. சர்வதேசரீதியாக நட்புறவு அமைப்புகள் உருவாக்கப் படுதை நானும் வரவேற்க்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி திரு ஜெயபாலன் அவர்களே. உங்கள் கருத்தையாவது சேரன் வாசிப்பார் என்று எண்ணுகிறேன். தொடர்ந்து எழுதுங்கள். உங்களால் எமது சமூகம் அடையவேண்டியவை ஏராளம் இருக்கிறது.

"இன்று 0 மட்டத்தில் (ground zero) வீழ்துகிடக்கும் களத்தில் உள்ள எமது மக்களின் விடிவுக்காக புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புகள் சூரியனின்கீழ் அவசியமான சகல ஆட்டங்களையும் ஆடியே ஆகவேண்டும். அது எருமை ஆட்டம் மட்டுமல்ல அதற்க்குக்கீழேபோய் நாய் ஆட்டம் நாரி ஆட்டமாக இருப்பினும் நாம் ஆடியே ஆகவேண்டும் என்பது என்று வலியுறுத்துகிறேன்."--பொயட்.

நாம் என்ன செய்கின்றோம் ஏது செய்கின்றோம் என்று எதுவும் தெரியாது இலக்கில்லாமல் நாயாட்டம் ,நரியாட்டம் எல்லாம் ஆடிக்கொண்டிருக்க முடியாது .

என்ன ஆட்டம், எங்கு ஆடுகின்றோம் எப்படி ஆடுகின்றோம் என்பதில் தான் எமது வெற்றி இருக்கின்றது.எமது சுய விருப்பிற்கும் விளம்பரத்திகு வேணுமென்றால் என்ன கூத்தும் இப்போ ஆடுவதுபோல் ஆடிவிட்டு போகலாம்.அது எந்த தீர்வையும் தமிழனுக்கு வாங்கித்தராது.

எல்லாவறையும் விட மிகமுக்கியமானது அதை யார் ஆடுகின்றார்கள் என்பதே .புதிய மொந்தையில் பழைய கள்ளாக இருந்தால் அது கட்டாயம் புளித்தே தீரும்.அது உலகிற்கு குமட்டி விடும்.

"இன்று 0 மட்டத்தில் (ground zero) வீழ்துகிடக்கும் களத்தில் உள்ள எமது மக்களின் விடிவுக்காக புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புகள் சூரியனின்கீழ் அவசியமான சகல ஆட்டங்களையும் ஆடியே ஆகவேண்டும். அது எருமை ஆட்டம் மட்டுமல்ல அதற்க்குக்கீழேபோய் நாய் ஆட்டம் நாரி ஆட்டமாக இருப்பினும் நாம் ஆடியே ஆகவேண்டும் என்பது என்று வலியுறுத்துகிறேன்."--பொயட்.

நாம் என்ன செய்கின்றோம் ஏது செய்கின்றோம் என்று எதுவும் தெரியாது இலக்கில்லாமல் நாயாட்டம் ,நரியாட்டம் எல்லாம் ஆடிக்கொண்டிருக்க முடியாது .

என்ன ஆட்டம், எங்கு ஆடுகின்றோம் எப்படி ஆடுகின்றோம் என்பதில் தான் எமது வெற்றி இருக்கின்றது.எமது சுய விருப்பிற்கும் விளம்பரத்திகு வேணுமென்றால் என்ன கூத்தும் இப்போ ஆடுவதுபோல் ஆடிவிட்டு போகலாம்.அது எந்த தீர்வையும் தமிழனுக்கு வாங்கித்தராது.

எல்லாவறையும் விட மிகமுக்கியமானது அதை யார் ஆடுகின்றார்கள் என்பதே .புதிய மொந்தையில் பழைய கள்ளாக இருந்தால் அது கட்டாயம் புளித்தே தீரும்.அது உலகிற்கு குமட்டி விடும்.

சரி அர்ச்யுன் அவர்களே எதைத்தான் செய்தால் எமக்கு விடிவு கிடைக்கும்.அல்லது ஏதாவது காத்திரமான வழிவகை ஏதாவது உங்களிடம் இருக்குதா?தற்போது தமிழர் செய்யும் அனைத்து வழிமுறைகளும் பிழை என்று நீங்கள் கூறுமுன் ஏதாவது உருப்படியான வழி உங்களிடமிருந்தால் கூறுங்கள்????????

  • கருத்துக்கள உறவுகள்

சரி அர்ச்யுன் அவர்களே எதைத்தான் செய்தால் எமக்கு விடிவு கிடைக்கும்.அல்லது ஏதாவது காத்திரமான வழிவகை ஏதாவது உங்களிடம் இருக்குதா?தற்போது தமிழர் செய்யும் அனைத்து வழிமுறைகளும் பிழை என்று நீங்கள் கூறுமுன் ஏதாவது உருப்படியான வழி உங்களிடமிருந்தால் கூறுங்கள்????????

கேட்டு எழுதி எழுதி என் கை நொந்ததுதான் மிச்சம்.

இனி நீங்கள் தொடருங்கள்

எம் போராட்டம் ஓயாது....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.