Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரன் தொடர்பிலான புலத்து மக்களின் நிலைப்பாட்டிற்கு ஹக்கீம் எதிர்ப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

hakeem-Sumanthiran-100x100.jpg

புலம்பெயர் தமிழ் உணர்வாளர்களுக்கு தங்களது நண்பன் யார், எதிரி யாரென்று தெரியவில்லை. விடுதலைப் புலிகளின் தோல்வியை ஒருவரின் தலையின் மீது சுமத்த ஆள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஆள் தேடும் வேட்டைக்கு நான் மட்டுமல்ல, நண்பர் சுமந்திரனும் பலியாகியுள்ளார். ஜெனிவா கூட்டத்தொடரில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்குபற்றாதது சிறந்த இராஜதந்திரமாகவே நான் பார்க்கின்றேன் என்று நீதித்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மருதமுனையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“ஜெனிவாவில் அரபு நாடுகளின் ஆதரவை மகிந்த ராஜபக்ச அரசுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு ரவூப் ஹக்கீம் முக்கிய பங்காற்றியதாக புலம்பெயர் தமிழர்கள் என் மீது மிகப்பெரிய விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

கம்பன் விழாவில் தொடக்கவுரையாற்றுவதற்கு ஏற்பாட்டாளர்கள் என்னை அழைத்த போது, தமிழர்களுக்கு எதிராக ஜெனிவாவில் செயற்பட்ட ரவூப் ஹக்கீம், கம்பன் விழாவில் உரையாற்றுவதா, அந்த விழாவைத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள்.

புலம்பெயர் தமிழ் உணர்வாளர்களுக்கு தங்களது நண்பன் யார், எதிரி யாரென்று தெரியவில்லை. விடுதலைப் புலிகளின் தோல்வியை ஒருவரின் தலையின் மீது சுமத்த ஆள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் ஆள் தேடும் வேட்டைக்கு நான் மட்டுமல்ல, நண்பர் சுமந்திரனும் பலியாகியுள்ளார். ஜெனிவா கூட்டத்தொடரில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்குபற்றாதது சிறந்த இராஜதந்திரமாகவே நான் பார்க்கின்றேன்.

சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக, அவசரப்பட்டு கொண்டு வரப்படும் தீர்மானத்தால் எதிர்பார்க்கப்படும் நோக்கத்தை அடைய முடியாது. இது சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கான தீர்வு துருவப்படுத்தப்படப் போகிறது என்று தான் ஜெனிவாவில் கூறினோம். அது தான் இன்று நடந்துள்ளது.

இரண்டு பக்கங்களிலும் தீவிரவாதப் போக்குடையவர்கள் காணப்படுகின்றார்கள். இவர்கள் தான் எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக எதிர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். உயிருடன் இருந்த பிரபாகரனால் தமிழீழத்தை பெற்றுத்தர முடியவில்லை. அவரின் வெற்றுடல் அதனை பெற்றுத்தரும் என்று புலம்பெயர் தமிழர்கள் கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஜெனீவாவில் இந்தியா, தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தது எல்லா சமூகங்களிடையேயும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.saritham.com/?p=56498

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பேரும் ஒரு கோப்பையில் சாப்பிடுகிறவர்கள்.....அதுதான் இவருக்கு மூக்கிலை கோபம் வருகிது.....இந்த ___ க்கு எங்களைப் பற்றி கதைக்க என்ன அருகதை இருக்கிறது....மற்ற ____ கள் இருந்திட்டு ஒரநால் பிரட்டுவான்கள்....இவன் தினமும் பிரட்டுகிற பயண்கர ____ இவன்

  • கருத்துக்கள உறவுகள்

கக்கீம்.. என்ன.. புலம்பெயர் மக்களின் பிரதிநிதியா. அவர் முஸ்லீம் காங்கிரஸ் என்ற இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்பின் தலைவர். அவருக்கு புலம்பெயர் மக்களைப் பார்த்து கதை சொல்லவே.. கருத்துச் சொல்லவோ எந்த அருகதையும் இல்லை..! :icon_idea:

சிறிலங்காவின் இனப் படுகொலை தொடர்பாக, ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிராக 'அல்கைடா' சார் தீவீரவாதிகள் புலம்பெயர்ந்த தமிழ் அகதிகள் மீது குற்றம் சாட்டுவது முறையல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயந்த எங்களுக்காக கருத்து கூற ஹக்கீமுக்கு அதிகாரம் வழங்கியது ?

கூட்டி கழித்து பார்த்தால் இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மடிகள்தான்.

புலம்பெயர் தமிழ் உணர்வாளர்களுக்கு தங்களது நண்பன் யார், எதிரி யாரென்று தெரியவில்லை

ஆம் எமக்கு யார் நண்பர் யார் எதிரி என்று தெரியாமல்தான் இவ்வளவு பிரச்சனையும்..................ஆனால் ஒன்று மட்டும் உண்மை தாங்கள் எமக்கு நண்பராய் என்றும் இருந்ததில்லை,இனியும் இருக்கப்போவதில்லை என்பதுமட்டும் திண்ணம்............இதுதான் புலம்பெயர் வாழ் மக்களின் பதிலும்............எமக்கு என்ன செய்யவேண்டும் என்பதை எம் தேசியத்தலமையும்,தேசியமும் கற்றுகொடுத்துள்ளது. எம்மிடம் ஏதாவது கற்கமுடியுமேன்றால் தாங்கள் கற்றுக்கொள்ள முயல்வதே அறிவாகும். எங்களுக்கு நீங்கள் கற்றுக்கொடுக்க முயல்வது அறிவீனம்..............................

ஹக்கீம் தொப்பி பிரட்டும் காலம்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களின் ஆள் தேடும் வேட்டைக்கு நான் மட்டுமல்ல, நண்பர் சுமந்திரனும் பலியாகியுள்ளார்.

நட்பின் இலக்கணம் ..! என்ன இருந்தாலும் நண்பரை விட்டு கொடுக்க இயலாது . பிசிராந்தையார மிஞ்சி போட்டார்...!! அடுத்து வடக்கிருக்க இவருக்கு சுடுகாட்டில் சோனிய்ள் என்றும் பாராமல் ஈழ மக்கள் இடம் கொடுக்க வேணும்!!

சுமந்திரன் சங்கிலியின் இழகிய மொழி. எல்லோரும் போய்வரும் போது ஒரு உதை உதைத்து பார்க்கிறார்கள் தங்கள் காலால் அதை உடைத்து அந்த பெயரை பெற்றுவிடலாமா என்று.

Edited by மல்லையூரான்

புலம்பெயந்தவர்கள் பிழை விடுகிறார்கள் ... இப்ப ஹக்கீமே சொல்லிப் போட்டார்!!!!!!!!!!!!!!!!!!! ... புலத்து தமிழர்கள், எதிர்கால சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கனவோடு இருக்கும் சுமத்திரனிடம் மன்னிப்பு கோர வேண்டும்!! :icon_mrgreen:

... முன்பு ஒரு செஞ்சிலுவைக்காரர் ... தானும் தமிழ்த்தேசியவாதி என்று எம்.பி பதவியையும் பெற்று ... றிபிள்ஜம் எல்லாம் பாய்ந்தவர் ... அப்ப ஒரு நண்பர் சொன்னான், பொறுத்திருந்து பாருங்கள், உந்த பாச்சல் எங்கு போய் லான்ட் பண்ணப்போகுதென்று ... பார்த்தால் இப்போ அவர் சிங்கள ஜனாதிபதியின் ஆலோசகராம்!!! ... இப்போ சுமந்திரனின் ரேன் ... வெகுவிரைவில் லான்ட் பண்ணுவார்!

ஈழ தமிழர்களுக்கும் இலங்கை இஸ்லாமியருக்கும் பூர்வ ஜென்ம பகையா இருக்குமோ?? எப்பிடி தான் இந்த சகோதர சண்டைய முடிவுக்கு கொண்டு வருவது?

காலம் காலமாய் தமிழ் இனத்திற்கு துரோகம் செய்து விட்டு காட்டி கொடுத்து விட்டு அப்புறம் வடக்கை விட்டு துரத்தினார்கள் கிழக்கை விட்டு துரத்தினார்கள் எண்டு ஒப்பாரி வைக்கட்டும் இப்ப அவங்க காலம் ஆடும்வரை ஆட்டம் -----------------------------

தமிழர்களுக்குள் பிரிவினையைக் கொண்டுவரும் முயற்சியின் ஒரு அங்கமிது. இவர்களைப் போன்றவர்களால்தான் தமிழர் முஸ்லிம்கள் எதிர் நிலையெடுத்துக் கொள்கிறார்கள்.

அஷ்ரப் தொடக்கிவைத்த முஸ்லிம் காங்ரஸ் தமிழரின் எதிர்நிலையில் நின்றால்தான் தாம் அரசியல் செய்யலாம் என்ற எண்ணத்திலுள்ளார்கள்.

முஸ்லிம் ஈனர்களின் கடைகளை தமிழ் மக்கள் முடிந்தளவு புறக்கணிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனை... இந்துச் சமூகத்தின் சார்பில்,

தலை முழுகி, தலைப்பை வெட்டி முஸ்லீம் இனத்தில் சேர்த்தால்... பிரச்சினை முடிஞ்சுது.

கிழக்கு முதலமைச்சர் வேட்பாளராக ஹக்கீமை நிறுத்த ஜனாதிபதி திட்டம்

http://184.107.230.1...730962209482899

... இனியென்ன மகிந்தவின் சிந்தனைக்கு அமைய சுமத்திரன் கூட்டமைப்பை ... ஹக்கீமை கிழக்கு மாகாணசபை முதல்வராக்க .... பின்புலமாக இருக்கப் போகிறார்???????

  • கருத்துக்கள உறவுகள்

... இனியென்ன மகிந்தவின் சிந்தனைக்கு அமைய சுமத்திரன் கூட்டமைப்பை ... ஹக்கீமை கிழக்கு மாகாணசபை முதல்வராக்க .... பின்புலமாக இருக்கப் போகிறார்???????

ஹ........ஹக்கீம் போன்றவர்கள் சிங்களத்துடன் அண்டிப்பிழைப்பதன்மூல தமது சொந்த வயிறு வளர்ப்பவர்கள். தமது சொந்த வயிற்றுக்காகவே சிங்களம் செய்த தமிழினவழிப்பை சரியென்று வாதிடுபவர்கள். ஆகவெ, அப்படிப்பட்டவர் சுமந்திரனை தமிழினத்திற்குத் தலமை தாங்கக்கூடியவர் என்று வக்காலத்து வாங்குகிறார் என்றால், சுமந்திரனின் தமிழர் தொடர்பான நிலை என்னவென்று புரிந்துகொள்வது அவ்வளவு கடிணமானதல்ல. சுமந்திரன் அண்மைக்காலமாக கூறிவரும் கருத்துக்கள் அவர் எந்தத் திசையில் பயணிக்கிறார் என்பதையும், ஹக்கீம் சொல்வதற்கும் உள்ள ஒற்றுமை தெளிவாகத் தெரிந்துவிடுகிறது.

சுமந்திரனின் தலமையில் தமிழினம் செய்யவிருப்பது சரணாகதி அரசியல்தானென்பதை அவரை ஆதரிக்கும் நண்பர்கள் புரிந்துகொண்டால் நல்லது.

ஹக்கீம் தன்னைப்போல் ஒருவராகவே சுமந்திரனைக் காண்கிறாரென்பதை இங்கு தெளிவாகச் சொல்லியிருக்கிறார். தான் எவ்வாறு முஸ்லீம் சமூகத்திற்குத் தலமை ஏற்பதாகக் கூறிக்கொண்டு சிங்களத்துடன் சமரசமும், சரணாகதி அரசியலும் செய்வதைப்போல, சுமந்திரனும் தமிழினத்தின் தானைத் தலைவன் என்கிற பெயரில் சிங்களப் பேரினவாதத்துடன் சமரச சரணாகதி அரசியலைச் செய்வார் என்று எதிர்பார்க்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு தமிழ் விரோதப் போக்கை கண்டிக்கும் எமது பாதையில் இன்னொரு தமிழ் விரோதப் போக்கு குறுக்கீடு செய்தால் எமது அந்தப் பாதை சரியானது என்பதை அல்லவா ஊர்ஜிதம் செய்கின்றது, கக்கீம்.

மகிந்தாவின் உடம்பில் போடப்படும் சூடுகளுக்கு வலியால் வாய் திறப்பது கக்கீம், டக்கி இவர்கள்தானே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.