Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொண்டைக் கடலைச் சுண்டல்

Featured Replies

பெரும்பாலும் கடலை/ பயறு வகைகளை சமைப்பது என்றால், ஊரில் முதல் நாளே தண்ணீரில் நன்கு ஊறவைத்து அடுத்த நாள் அதனை நன்கு அவித்துத் தான் சாப்பிட்டோம்... ஆனால், இங்கே அவற்றை அவித்து பேணிகளில் அடைத்து வாங்கக் கூடியதாக இருக்கிறது. இவற்றை மிக்கக் குறுகிய நேரத்திற்குள் சமைக்கவும் முடிகிறது.

கொண்டைக் கடலைச் சுண்டல்

april_008.jpg

தேவையான பொருட்கள்:

கொண்டைக் கடலை- 500g

வெங்காயம் சிறு துண்டுகளாக வெட்டியது-1

பச்சை/ செத்தல் மிகளாய்-2

கருவேப்பிலை/ கறிவேப்பிலை-10

கொத்தமல்லி இலை நன்கு அரிந்தது- தேவைக்கேற்ப

இஞ்சி உள்ளி நன்கு அரைத்தது- 1 தேக்கரண்டி

கடுகு- 1/2 தேக்கரண்டி

சின்னச் சீரகம்- 1/2 தேக்கரண்டி

மிளகாய்த் தூள்- 1/2 தேக்கரண்டி

உப்பு- தேவைகேற்ப

தேசிக்காய்ப் புளி- தேவைகேற்ப

எண்ணெய்- 3 மேசைக் கரண்டி

செய்முறை:

1) சூடான சட்டியில், சிறிதாக வெட்டியா வெங்காயத்தை எண்ணியில் போட்டு தாழிக்கவும்.

2) அதனோடு உப்பு, கருவேப்பிலை, மிளகாய், கடுகு, சீரகம், இஞ்சி, உள்ளி இவற்றையும் கலந்தது 1 நிமிடம் குறைந்த வெப்பத்தில் விட்டு தாழிக்கவும்.

3) கொண்டைக் கடலையை கலவையுடன் சேர்த்து 2 நிமிடங்கள் மிதமான வெப்பத்தில் கலந்து இறக்கவும்.

4) இறுதியில், தேசிக்காய்ப் புளி, மல்லி இலை இவற்றைச் சேர்க்கவும்.

(ஊரில் அம்மா செய்யும் போது தேங்காய்த் துண்டுகளும் சேர்த்து செய்வதுண்டு... இங்கே தேங்காய்த் துண்டுகள் தவிர்க்கப்பட்டுள்ளது... :()

குட்டி அண்ணா இஞ்சி மணம் ஒரு மாதிரி இருக்காதா அதுவும் கடலைக்கு.. இணைப்பிற்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி,

கொண்டைக்கடலை அல்லது கொண்டல் கடலை எது சரியான பதம்?

  • தொடங்கியவர்

குட்டி அண்ணா இஞ்சி மணம் ஒரு மாதிரி இருக்காதா அதுவும் கடலைக்கு.. இணைப்பிற்கு நன்றி

பொதுவாக கடலை வகைகள் வாவுப் பதார்த்தமாக இருப்பதால், உள்ளி-இஞ்சி சேர்ப்பது வழமை. நன்கு அரைத்த பின்பு தானே சிறிதளவு போடும் படி குறிப்பிட்டு உள்ளேன், நன்றாகத்தான் இருந்தது. உள்ளி மணத்தை விட இஞ்சி மணம் பறவாய் இல்லை...

சரி, உங்களுக்கு இஞ்சி பிடிக்காவிட்டால் தவிர்த்துக் கொள்ளுங்கோ (முடிந்தால் ஜிஞ்சர் பீர் நல்லது ஒரு கிளாஸ் எடுங்கோ) :)

பொதுவாக கடலை வகைகள் வாவுப் பதார்த்தமாக இருப்பதால், உள்ளி-இஞ்சி சேர்ப்பது வழமை. நன்கு அரைத்த பின்பு தானே சிறிதளவு போடும் படி குறிப்பிட்டு உள்ளேன், நன்றாகத்தான் இருந்தது. உள்ளி மணத்தை விட இஞ்சி மணம் பறவாய் இல்லை...

சரி, உங்களுக்கு இஞ்சி பிடிக்காவிட்டால் தவிர்த்துக் கொள்ளுங்கோ (முடிந்தால் ஜிஞ்சர் பீர் நல்லது ஒரு கிளாஸ் எடுங்கோ) :)

எனக்கு இஞ்சி பிடிப்பதில்லை இஞ்சியை பார்த்ததுமே வாமிற் எடுக்கத்தொடங்கி விடுவன்.. இஞ்சி என்று எழுதியிருந்தாலே தொடவே மாட்டேன்..

  • தொடங்கியவர்

குட்டி,

கொண்டைக்கடலை அல்லது கொண்டல் கடலை எது சரியான பதம்?

அக்கா, ஊரில் கொண்டைக் கடலை என்று தான் சொல்லிக் கேள்விப் பட்டுள்ளேன்.. ஒரு வேளை இது பேச்சு வழக்காக கூட இருக்கலாம் என்று இணையத்தில் தேடினேன்..

http://ta.wikipedia....i/கொண்டைக்_கடலை

எனக்கு இஞ்சி பிடிப்பதில்லை இஞ்சியை பார்த்ததுமே வாமிற் எடுக்கத்தொடங்கி விடுவன்.. இஞ்சி என்று எழுதியிருந்தாலே தொடவே மாட்டேன்..

இஞ்சி சேர்த்துப் பாருங்க, வாமிட் வாராது சுஜி... :lol:

சரி சரி நீங்கள் இஞ்சியைத் தவிர்த்து செய்து பாருங்கள்.. :)

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கடலை விருப்பம் செய்தால் கணக்க சாப்பிட்டு விடுவேன்...கணக்க சாப்பிடுவது கூடாது என சொல்கிறார்கள்...ரின்னில் வரும் கடலையை விட ஊற போட்டு செய்யும் கடலை தான் சுவை கூட அத்தோட தேங்காய் சொட்டுப் போட்டால் அந்த மாதிரி இருக்கும் சொல்லி வேலையில்லை...கறுப்பியும் கொஞ்ச காலத்திற்கு முந்தி சுவையான செய்முறையில் கடலை செய்வது எப்படி என கேட்டதாக ஞாபகம் அதற்கு பிறகு ஆள் யாழுக்கு வாறதையே குறைச்சிட்டார் :lol:

  • தொடங்கியவர்

எனக்கு கடலை விருப்பம் செய்தால் கணக்க சாப்பிட்டு விடுவேன்...கணக்க சாப்பிடுவது கூடாது என சொல்கிறார்கள்...ரின்னில் வரும் கடலையை விட ஊற போட்டு செய்யும் கடலை தான் சுவை கூட அத்தோட தேங்காய் சொட்டுப் போட்டால் அந்த மாதிரி இருக்கும் சொல்லி வேலையில்லை...கறுப்பியும் கொஞ்ச காலத்திற்கு முந்தி சுவையான செய்முறையில் கடலை செய்வது எப்படி என கேட்டதாக ஞாபகம் அதற்கு பிறகு ஆள் யாழுக்கு வாறதையே குறைச்சிட்டார் :lol:

ரதி எதையும் அளவோடு சாப்பிட்டால் பிரச்சனை குறைவு... ^_^

நீங்கள் சொல்வது போல் தேங்காய்ச் சொட்டு சேர்த்தல் நன்றாகத் தான் இருக்கும்! :)

கடலைவகைகளை சரியாக ஊற வைக்காமல்/அவிக்காமல் சாப்பிட்டால் அதில் நச்சுத்தன்மை ஊறுமென கேள்விப் பட்டுள்ளேன்.

red kidney beans ல் நச்சுத் தன்மை அதிகம் இருப்பது என்பது உண்மை..

http://www.foodrefer...npoisoning.html

கறுப்பி இப்போ இதைவிட திறமான கடலை போடுவார்... ச்சீ!!! சாப்பிடுவார்... :D

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி குட்டி,

நான் நினைக்கின்றேன் இஞ்சி உள்ளி ஆகியவற்றை தவிர்த்து செய்யலாம்.

1636993768_7695cd3e1f.jpg

கரம் மசாலா போட்டு செய்தது இதுவும் மிகவும் சுவையாக இருக்கும். :)

  • தொடங்கியவர்

இணைப்புக்கு நன்றி குட்டி,

நான் நினைக்கின்றேன் இஞ்சி உள்ளி ஆகியவற்றை தவிர்த்து செய்யலாம்.

1636993768_7695cd3e1f.jpg

கரம் மசாலா போட்டு செய்தது இதுவும் மிகவும் சுவையாக இருக்கும். :)

கருத்துக்கு நன்றி தமிழரசு :)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இஞ்சி பிடிப்பதில்லை இஞ்சியை பார்த்ததுமே வாமிற் எடுக்கத்தொடங்கி விடுவன்.. இஞ்சி என்று எழுதியிருந்தாலே தொடவே மாட்டேன்..

இஞ்சி குரங்குக்குத்தானே பிடிக்காது??!! :unsure: உங்களுக்கு ஏன்??!! :D

இஞ்சி குரங்குக்குத்தானே பிடிக்காது??!! :unsure: உங்களுக்கு ஏன்??!! :D

நீங்களே சொல்லிவிட்டீர்கள் அண்ணா குரங்குக்குத்தான் இஞ்சி பிடிக்காது என்று அப்புறம் என்ன கேள்வி வேண்டி இருக்கு..:icon_mrgreen::icon_mrgreen:

Edited by சுஜி

குட்டி

butter beans (தமிழ் தெரியவில்லை) உம் சுண்டலுக்கு நன்றாக இருக்கும். அவித்ததை அல்லது ரின்னில் வருவதை கொட்டி உடனடியாக இறக்க வேண்டும்.

  • தொடங்கியவர்

இஞ்சி குரங்குக்குத்தானே பிடிக்காது??!! :unsure: உங்களுக்கு ஏன்??!! :D

நீங்களே சொல்லிவிட்டீர்கள் அண்ணா குரங்குக்குத்தான் இஞ்சி பிடிக்காது என்று அப்புறம் என்ன கேள்வி வேண்டி இருக்கு.. :icon_mrgreen::icon_mrgreen:

பாசப் பறவைகளின் ரவுசு தாங்க முடியலடா சாமி... :lol: :D

குட்டி

butter beans (தமிழ் தெரியவில்லை) உம் சுண்டலுக்கு நன்றாக இருக்கும். அவித்ததை அல்லது ரின்னில் வருவதை கொட்டி உடனடியாக இறக்க வேண்டும்.

இன்று வரை butter beans ல் செய்து பார்க்கவில்லை, நேரம் கிடைக்கும் போது செய்து பார்த்து சொல்லுகிறேன், உங்கள் கருத்திற்கும் நன்றி தப்பிலி! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு கடலை எண்டால் நல்ல விருப்பம்...அதுவும் புட்டும் கடலையுமெண்டால் சொல்லி வேலையில்லை.....கடலைவகையளை முதல் அவியல்தண்ணியை ஊற்றிவிட்டு இரண்டாம்தரம் புதிதாகதண்ணீர்விட்டு நன்றாக அவித்து சமைக்க வேண்டும்.பின் விளைவுகள் முன்விளைவுகள் வராது.குட்டியருக்கு கடலையெண்டால் விருப்பமோ? :D

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி,கடலை செய்முறைக்கு நன்றி.கோயில்களில் தரும் கடலையின் சுவையே தனி.

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமான வெள்ளிக்கிழமை மாலை நேரங்களில் கொண்டல் கடலை சுண்டல் வீட்டில் செய்வார்கள்.

இதுவரை... இஞ்சி, உள்ளி போட்டு செய்யவில்லை. அடுத்தமுறை அதையும் போட்டு செய்து பார்ப்போம்.

இணைப்பிற்கு நன்றி குட்டி.

  • தொடங்கியவர்

எனக்கு கடலை எண்டால் நல்ல விருப்பம்...அதுவும் புட்டும் கடலையுமெண்டால் சொல்லி வேலையில்லை.....கடலைவகையளை முதல் அவியல்தண்ணியை ஊற்றிவிட்டு இரண்டாம்தரம் புதிதாகதண்ணீர்விட்டு நன்றாக அவித்து சமைக்க வேண்டும்.பின் விளைவுகள் முன்விளைவுகள் வராது.குட்டியருக்கு கடலையெண்டால் விருப்பமோ? :D

ஊரில் இருக்கும் போது பின்னேரப் பொழுதில் தேநீரோடு அம்மா செய்வதுண்டு... ஆரம்பத்தில் தினமும் கேட்டுச் சாப்பிடுவோம் :wub: எங்கட வீட்டில attached பாத்ரூம் இருந்ததால அடிக்கடி அம்மா கடலை செய்வதை குறைச்சிட்டா... :lol::D

உங்கள் கருத்திற்கும் நன்றி கு.சா அண்ணா :)

  • தொடங்கியவர்

குட்டி,கடலை செய்முறைக்கு நன்றி.கோயில்களில் தரும் கடலையின் சுவையே தனி.

உண்மை தான் நுணா... எமது குடும்ப நண்பர்கள் நவராத்திரி 9 நாளும் அவர்கள் வீட்டில் உள்ள சிறிய கோவிலில் பூசை செய்வார்கள். பின்னேரம் இரண்டு மணியில் இருந்தே அக்கம் பக்கத்தில் இருக்கும் அன்டிமார் எல்லாரும் வந்து எல்லாவிதாமா பலகாரங்களும் செய்வார்கள் பூசை முடிய அதனைப் பகிர்ந்து எல்லார் வீட்டிற்கும் அனுப்புவார்கள்.. அதில் எனக்கு கடலையும், மோதகமும் தான் பிடிக்கும்... அதன் ருசியே தனி! :wub: ஒரு தடவை அந்த அன்டி பிள்ளையார் மோதகம் என்று ஒன்று எனக்கென்று தந்தவ.... :D உங்கள் கருத்திற்கும் நன்றி நுணா! :)

அநேகமான வெள்ளிக்கிழமை மாலை நேரங்களில் கொண்டல் கடலை சுண்டல் வீட்டில் செய்வார்கள்.

இதுவரை... இஞ்சி, உள்ளி போட்டு செய்யவில்லை. அடுத்தமுறை அதையும் போட்டு செய்து பார்ப்போம்.

இணைப்பிற்கு நன்றி குட்டி.

நானும் வேறு இடங்களில் கடலை சாப்பிடுள்ளேன், இஞ்சி உள்ளி இருந்ததாகத் தெரியவில்லை... ஆனால் இங்கட இம்சை தாங்க இல்லாமல் தான் அம்மா இஞ்சி உள்ளி சேர்த்தாவோ தெரியாது... நன்றாக அரைத்துப் போடவேண்டும், அப்போது தான் கடிபடாது...உங்கள் கருத்திற்கும் நன்றி சிறி அண்ணா! :)

Edited by குட்டி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.