Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் வந்த புதிசிலை......

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான்(கள்) வந்த புதிசிலை அசூல் காம்பிலை வெள்ளைத்தோலுகளோடை அடிச்ச கும்மாளம்!!!!!!

-கூட இருந்து உசுப்பேத்தினவங்கள் எல்லாம் கனடாவிலையும் லண்டனிலையும் இருந்து தஸ்சுபுஸ்சு எண்டுறாங்கள்.கடைசியிலை என்ரை பரிமளம்தான் இந்த அகதிக்கு தஞ்சம்-

:wub:

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணோய்.... அப்ப, நீங்கள் எங்களைப் போல்... ஸ்ருடன்ற் விசாவிலை வரவில்லையா? :D:lol:

குமாரசாமி அண்ணோய்.... அப்ப, நீங்கள் எங்களைப் போல்... ஸ்ருடன்ற் விசாவிலை வரவில்லையா? :D:lol:

சிறி அண்ணை, அவர் முக்கியமான ஆள் பெரிசு அனுப்பி வைத்தது, ஜரோப்பாவில் கட்சிய வார்க்க சொன்னால் அந்தாள் வந்து ஜேர்மனியின் சனநாயகத்தை பார்த்து அப்பவே பெரிசுகளுக்கு எதிராக கொடிய தூக்கி போட்டார் அதால தான் அவர் விசுந்து போனார்,.

:lol::D:icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமி அண்ணோய்.... அப்ப, நீங்கள் எங்களைப் போல்... ஸ்ருடன்ற் விசாவிலை வரவில்லையா? :D:lol:

சிறித்தம்பியர்! இஞ்சைபாருங்கோ.....நான் வந்து எதையும் வெளிப்படையாக்கதைக்கிறவன் கண்டியளோ! ஸ்ருடன்ற் விசாவிலை வந்துட்டு சிற்றிசன் எடுத்த சோத்துப்பெட்டையளை உங்கை கனபேர் தேடிக்கொண்டிருக்கினம் எண்டதை என்ரை வாயாலை சொல்ல வைச்சிட்டியள் :( ........"யன்னலை திறவுங்கள் பசுமதி வாசம் வெளியே செல்லட்டும்" :lol::D

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
."யன்னலை திறவுங்கள் பசுமதி வாசம் வெளியே செல்லட்டும்" :lol: :D
:lol: :lol: :lol:

தெரிந்த ஒருவர் ஜெர்மனிக்கு எண்பதுகளில் வந்து, மொழிப்பிரச்சனையால், செல்லப்பிராணிகளின் தகரத்தில் அடைத்த உணவை சிலகாலமாக உண்டிருந்திருக்கின்றார் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தெரிந்த ஒருவர் ஜெர்மனிக்கு எண்பதுகளில் வந்து, மொழிப்பிரச்சனையால், செல்லப்பிராணிகளின் தகரத்தில் அடைத்த உணவை சிலகாலமாக உண்டிருந்திருக்கின்றார் :lol:

:lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்த ஒரு தம்பதியினருக்கு ஜரோப்பிய நாடொன்றில் தான் மொழிப் பிரச்சனையாலே அபோசன் ஆனது

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் 3 நண்பர்கள் ஒரு அறையில் இருந்தார்கள்.இருவர் வேலைக்கு போக ஒருவர் சமைப்பது.ஒவ்வொரு நாள் இரவும் பொரித்த முட்டையும் புட்டும் தான் சாப்பாடு.சமைப்பவர் நாட்டுக்கு புதிது என்பதாலும் வேலை தேடிக்கொண்டு இருந்ததாலும் மற்றைய நண்பர்களுக்கு சமைத்து கொடுப்பார்.3ம் நாளோ நாலாம் நாளோ ஞாபகத்தில் இல்லை : ஒருவருக்கு வேலையில் வயிற்றை கலக்க்கி உள்ளது.மற்றவருக்கு அன்று இரவு வயிற்றைக்கலக்கி உள்ளது.சமைத்தவருக்கு ஒன்றும் நடந்ததாக தெரியவில்லை.என்றாலும் சாப்பிட்ட சாப்பாட்டை பற்றி ஆராய்ந்தால் முட்டைப்பெட்டி, புட்டு அவித்த மா எல்லாம் ஆராயப்பட்டது.கடைசியில் பொரித்த எண்ணை எது என கேட்க கோப்பை கழுவும் சோப்பை ஊற்றி முட்டையை பொரித்துள்ளார் என தெரிய வந்தது. :icon_mrgreen:

மாணவர் 'விசா'வில் வரும்பொழுது மொழி தெரியும் சாத்தியம் உள்ளது :D

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வந்த புதிதில் எமது நகரத்தில் எல்லோரும் புதியவர்கள்.

எந்தக் கடையில் என்ன பொருட்கள் விற்கின்றார்கள் என் அறியவே ஒரு மாதம் எடுத்தது.

பெட்டிக்கடையில் சென்று கறித்தூள் கேட்ட ஆக்கள் நாங்கள்.

ஒருமாதிரி அரிசியக் கண்டுபிடிக்க இரண்டு மாதம் எடுத்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் வந்த புதிதில் எமது நகரத்தில் எல்லோரும் புதியவர்கள்.

எந்தக் கடையில் என்ன பொருட்கள் விற்கின்றார்கள் என் அறியவே ஒரு மாதம் எடுத்தது.

பெட்டிக்கடையில் சென்று கறித்தூள் கேட்ட ஆக்கள் நாங்கள்.

ஒருமாதிரி அரிசியக் கண்டுபிடிக்க இரண்டு மாதம் எடுத்தது.

ஓகே வாத்தி பழையகாய்! :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெரிந்த ஒருவர் ஜெர்மனிக்கு எண்பதுகளில் வந்து, மொழிப்பிரச்சனையால், செல்லப்பிராணிகளின் தகரத்தில் அடைத்த உணவை சிலகாலமாக உண்டிருந்திருக்கின்றார் :lol:

உண்மைதான்.... இப்பவும் நாய் பூனையளுக்கெண்டு நல்ல கிளீன்பண்ணின நெத்தலிக்கருவாடு விக்கிறாங்கள்......பச்சைமிளகாய் வெங்காயம் வெட்டிப்போட்டு சொதி வைக்க அந்தமாதிரியிருக்கும்....கெமிக்கல் கிமிக்கல் ஒண்டுமில்லாமல் சுத்தம்சுகாதாரத்தோடை விக்கிறாங்கள்....ஏனெண்டால் நாய்பூனை குருவியள்ளை இவங்களுக்கு சரியான வாரப்பாடு........ :D

உண்மைதான்.... இப்பவும் நாய் பூனையளுக்கெண்டு நல்ல கிளீன்பண்ணின நெத்தலிக்கருவாடு விக்கிறாங்கள்......பச்சைமிளகாய் வெங்காயம் வெட்டிப்போட்டு சொதி வைக்க அந்தமாதிரியிருக்கும்....கெமிக்கல் கிமிக்கல் ஒண்டுமில்லாமல் சுத்தம்சுகாதாரத்தோடை விக்கிறாங்கள்....ஏனெண்டால் நாய்பூனை குருவியள்ளை இவங்களுக்கு சரியான வாரப்பாடு........ :D

vomit.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

vomit.gif

குட்டியர்! இப்பவும் சொல்லுறன்...இவங்கள் மனிசருக்கு எண்டு விக்கிற பண்டி இறைச்சி கோழி இறைச்சியை விட.....பூனைநாயளுக்கு விக்கிற சாப்பாடு மனிசருக்கு விக்கனமொண்டுமில்லை........குருவியளுக்கு இப்பவெல்லாம் நவதானியம் விக்கிறாங்கள் :o ...உங்கடை வாழ்க்கையிலை நவதானியங்களை கண்டுருப்பியளே???ஆ......கனக்க ஓங்காளிக்காதேங்கோ...பெருங்குடல் சிறுகுடல் எல்லாம் வெளியிலை வரப்போகுது :D:lol:

குட்டியர்! இப்பவும் சொல்லுறன்...இவங்கள் மனிசருக்கு எண்டு விக்கிற பண்டி இறைச்சி கோழி இறைச்சியை விட.....பூனைநாயளுக்கு விக்கிற சாப்பாடு மனிசருக்கு விக்கனமொண்டுமில்லை........குருவியளுக்கு இப்பவெல்லாம் நவதானியம் விக்கிறாங்கள் :o ...உங்கடை வாழ்க்கையிலை நவதானியங்களை கண்டுருப்பியளே???ஆ......கனக்க ஓங்காளிக்காதேங்கோ...பெருங்குடல் சிறுகுடல் எல்லாம் வெளியிலை வரப்போகுது :D:lol:

கு.சா. அண்ணா, இங்கையும் கொஞ்சம் இருக்குதுகள்... கடையில நாய் பூனைக்குத் தான் நிறைய சாப்பாடுகள் வாங்குங்கள், தங்களுக்கு ஒன்று இரண்டு தான் எடுக்குங்கள். அதுகளில தான் கூட நாய், பூனை மனம் நாறுறது... அதுகளின்ர நாய், பூனையில Lynxமனம் அடிக்கும்... :lol::D

உண்மைதான்.... இப்பவும் நாய் பூனையளுக்கெண்டு நல்ல கிளீன்பண்ணின நெத்தலிக்கருவாடு விக்கிறாங்கள்......பச்சைமிளகாய் வெங்காயம் வெட்டிப்போட்டு சொதி வைக்க அந்தமாதிரியிருக்கும்....கெமிக்கல் கிமிக்கல் ஒண்டுமில்லாமல் சுத்தம்சுகாதாரத்தோடை விக்கிறாங்கள்....ஏனெண்டால் நாய்பூனை குருவியள்ளை இவங்களுக்கு சரியான வாரப்பாடு........ :D

பொருளாதாரம் மேலும் மேலும் நெருக்கடியில் செல்லும்பொழுது இதுவே சாதாரண நிகழ்வாய் மாறிவிடலாம் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக வந்த காலத்தில் கோழியை எப்படி அழைப்பது எனத் தெரியாமல்

கோழிமுட்டையை எடுத்துக் காட்டி "மம்மி" "டாடி" எனக் கேட்டவர்களும் இருக்கின்றார்கள் :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதிதாக வந்த காலத்தில் கோழியை எப்படி அழைப்பது எனத் தெரியாமல்

கோழிமுட்டையை எடுத்துக் காட்டி "மம்மி" "டாடி" எனக் கேட்டவர்களும் இருக்கின்றார்கள் :lol::D

வாத்தியார்!எங்கடை சனம் வந்தபுதிசிலை பட்ட கஸ்ரங்களை சொல்லுறதுக்கு புதிசாய் ஒரு திரி திறந்தாலென்ன? :rolleyes:

வாத்தியார்!எங்கடை சனம் வந்தபுதிசிலை பட்ட கஸ்ரங்களை சொல்லுறதுக்கு புதிசாய் ஒரு திரி திறந்தாலென்ன? :rolleyes:

நிச்சயம் இங்கே பிறந்து வளரும் எமது தலைமுறைக்கு கூற வேண்டும். அவர்கள் தாயக/மொழி./இன பற்றை வளர்க்க இதுவும் உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களுடன் பாட்டி வைக்க... பியர் போத்தல் வாங்க கடைக்குப் போய், வினாகிரி போத்தல்களை வாங்கி வந்து வந்தவர்களும் உள்ளார்கள்.

என்ன... கொடுமை என்றால், காசு தட்டுப்பாடான காலத்தில்... கடையின் பற்றுச்சீட்டு இருந்தால்... அந்த வினாகிரி போத்தல்களை கடையில் திருப்பிக் கொடுக்கலாம் என்றும் தெரியாமல்... மாதக் கணக்கில் வினாகிரி போத்தலைப் பார்த்து... வயிறு எரிஞ்சது தான் கொடுமை. :D

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்.... இப்பவும் நாய் பூனையளுக்கெண்டு நல்ல கிளீன்பண்ணின நெத்தலிக்கருவாடு விக்கிறாங்கள்......பச்சைமிளகாய் வெங்காயம் வெட்டிப்போட்டு சொதி வைக்க அந்தமாதிரியிருக்கும்....கெமிக்கல் கிமிக்கல் ஒண்டுமில்லாமல் சுத்தம்சுகாதாரத்தோடை விக்கிறாங்கள்....ஏனெண்டால் நாய்பூனை குருவியள்ளை இவங்களுக்கு சரியான வாரப்பாடு........ :D

எனக்குத் தெரிந்த ஜெர்மனியில் வசிக்கும் ஒருவர் தாங்கள் பேர்லின் (கிழக்கு, மேற்காக இருந்த காலத்தில் என்றார்) வந்து காம்ப்பில் இருந்தபோது முயல்படம் போட்ட ரின்னில் அடைக்கப்பட்ட இறைச்சியை முயல் இறைச்சி என்று வாங்கி அடிக்கடி சாப்பிட்டதாகவும், சில ஜேர்மன்காரர் அதைப்பற்றி ஜேர்மன் மொழியில் ஏதோ விளக்க நல்ல இறைச்சியைச் சாப்பிடவேண்டும் என்ற அர்த்தத்தில் விளங்கியதால் இன்னும் அதிகம் வாங்கிச் சமைத்ததாகவும் சொன்னார்!

மாணவர் 'விசா'வில் வரும்பொழுது மொழி தெரியும் சாத்தியம் உள்ளது :D

இப்பொழுதெல்லாம் வெளிநாடு செல்வதற்காக பெரும்பாலானோர் கள்ள சான்றிதழ் காட்டி தானே மாணவர் விசா எடுக்கினம்..... :D

அவர்களுக்கு மொழி தெரிய வாய்ப்பில்லை.... :lol::D

விமான நிலையத்தில் பிடிபட்டால் அம்போ தான்...

எனக்கு தெரிந்த ஒரு வயதான அம்மம்மா ஒருவர் 91 ஆம் ஆண்டளவில் வெளிநாடு போய் காம்பில் இருந்த போது அங்கு சலாட் கொடுப்பார்களாம்.... இதென்ன ஆடு மாடுகளுக்கு போடுற இலை குழைகளை சாப்பிட தரியினம் என்று நினைத்தவாவாம்.... :D

சாப்பாடு, இடவசதி, குளிர் போன்ற பிரச்சினையால் ஒரு வருடத்திலேயே மீண்டும் நாட்டுக்கு திரும்பி விட்டார்...

இப்பவும் சலாட் பற்றி அப்படி தான் கூறிக்கொண்டிருக்கிறார். :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ap.jpg

என்னட்டையும் மானம்போற கதையொண்டு இருக்குது.....உப்பிடித்தான் வந்தபுதிசிலை அப்பிள்யூசை அப்பிள்ளை வடிச்சசாராயமாக்கும் எண்டு நினைச்சு இரண்டு போத்திலை வாங்கிக்கொண்டு வந்து........பாதிக்கோழியை அந்தமாதிரி சமைச்சு வைச்சிட்டு.....அப்பிள்சாராயத்தை ஆறுதலாய் ரசிச்சுருசிச்சு நாக்கை நனைக்கத்தொடங்கினன்.......என்னடா சாராயம் இனிக்குது எண்டு சாடையாய் பொறிதட்டினதுதான்...இருந்தாலும் அப்பிள்ளை செய்தசாராயமெல்லே இனிக்காமல் புளிக்கவே செய்யுமெண்டு மனம் சொல்லிச்சிது........கொஞ்ச நேரத்தாலை....என்னடா ஒரு போத்தில் அடிச்சும் ஏறுதில்லை எண்டு போட்டு இரண்டாவது போத்திலையும் அடிக்க வெளிக்கிடேக்கதான்........உண்மை தெரிஞ்சுது

:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.