Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குட்டி பாபர்

Featured Replies

indiavisit2012033.jpg

1976 அதிகாலை வேளை சிலிர்ப்புடன் தொடங்கியது . இலேசான மார்கழி மாதத்து குளிரும் , பிள்ளையார் கோயிலடி மணியோசையும் , அம்மாவின் அடுப்படிச் சண்டை ஒலியும் , மாட்டுக் கொட்டிலில் நந்தினியிடம் இருந்து அண்ணை பித்தளைச் செம்பில் பால்கறக்கும் சர்..... என்ற ஒலியும் படுக்கையில் கிடந்த சிறுவனான வர்ணனுக்கு இதமாகவே இருந்தன . அப்பொழுது அவனிடம் சிறு வயதுக் குழப்படியும் கற்பனைகளுமே அதிகம் . தும்பிக்கு வாலில் கயிறு கட்டி பறக்க விடுவதும் , கோயில் கேணியடியில் பேத்தை மீன்கள் பிடிப்பதும் , தரவைக்குள் மாடுகள் மேயப் புதினம் பார்ப்பதும் அவனின் முக்கிய பொழுதுபோக்காக இருந்தன . இன்று என்ன செய்யலாம் என்று கற்பனை பண்ணியவாறே மீண்டும் போர்வையைக் குளிருக்கு இதமாகப் போர்த்தியவாறே படுக்கையில் குப்பறக் கவிண்டு படுத்துக் கொண்டான் . அறைக்குள் அக்கா தும்புக் கட்டையால் கூட்டும் சத்தம் மெதுவாகக் கேட்டது . இவா வந்துட்டா இனிக் கஸ்ரம் தான் என எண்ணியவாறே கள்ளக் குணத்துடன் நித்திரை மாதிரி நடித்தான் வர்ணன் . அக்கா சொல்லி வைத்தால் போல,

" டேய் வர்ணன் எழும்படா நான் கட்டில் விரிக்கவேணும்"

எண்டு எழுப்பினா . வர்ணன் முறுகிக் கொண்டே படுத்திருந்தான் . அக்கா அம்மாவைக் கூப்பிடும் சத்தம் வடிவாகவே கேட்டது வர்ணனுக்கு . அம்மா எது சொன்னாலும் உடனடியாகவே வர்ணன் செய்வான் . ஏனெனில் அம்மாவின் கதை அப்படி . அம்மா பால் தேத்தண்ணியுடன் வந்து ,

"ராசா... வர்ணன் . என்ரை குட்டான் எல்லே எழும்படி . இண்டைக்கு பிள்ளைக்கு தலைமயிர் வெட்ட குட்டி பாபர் எல்லோ வாறார் . எழும்புங்கோ குஞ்சு .... "

வர்ணன் படக்கென்று எழுந்து தேத்தண்ணியை வாங்கியபடியே ,

"எனக்கு மயிர் வெட்டவேண்டாம் அம்மா "

என்று அழத்தொடங்கினான் . அம்மா வர்ணனின் தலையைத் தடவியவாறே ,

"ஏன் குட்டான் அழுவான் . இங்கை பாரடி என்ரை பிள்ளையின்ரை தலை , மயிராலை காடு பத்திப் போய் கிடக்கு . பேந்து பிள்ளைக்கு சிரங்கல்லே பிடிச்சுப்போடும் ".

என்று வர்ணனைச் சமாதானப் படுத்தினா . வர்ணன் அழுகையை நிப்பாட்டுற மாதிரி தெரியவில்லை . அக்கா பொறுமை இழந்து வர்ணனது குண்டியில் இரண்டு அடி வைத்து இழுத்துக் கொண்டு போய் கிணத்தடியில் உமிக்கரியால் வர்ணனுக்குப் பல்லு மினுக்கப்பண்ணினா . அவனது அழுகை மட்டும் கூடியதே ஒழியக் குறையவில்லை .

தூரத்தில் குட்டி பாபர் சைக்கிளில் வருவது வர்ணனுக்குத் தெரிந்தது . அழுது கொண்டிருந்த வர்ணனைக் கண்ட குட்டி பாபர் சைக்களை நிப்பாட்டி விட்டு ஓடி வந்து ,

"என்ரை ராசா மோனை ஏன் அழுவான் ? இங்கைபாருங்கோ பிள்ளைக்கு என்ன கொண்டு வந்தனான் ? "

எண்டு சொல்லியவாறே வர்ணன் கை நிறைய தோடம்பழ இனிப்புகளைத் திணித்தார் . தோடம்பழ இனிப்பைக் கண்ட வர்ணனின் அழுகை மெதுவாக "நாறல் மீனைக் கண்ட பூனை " போலக் குறையத தொடங்கியது .

மாமரத்துக்குக் கீழே குட்டி பாபருக்குப் பக்கத்தில் அக்கா கதிரை ஒன்றைக் கொண்டு வந்து வைத்தா . குட்டி பாபர் பக்கத்தில் நின்ற முள்முருங்கையில் தோல்வாரைக் கட்டிவிட்டு கத்தியை சரக்சரக் என்று தீட்டத் தொடங்கினார் . சூரிய ஒளியில் கத்தி பளீரென்று மினுங்கி வர்ணனைப் பயமுறுத்தியது . குட்டி பாபர் சிரிச்சு சிரிச்சு வர்ணனுடன் கதைத்தவாறே வர்ணனைத் தூக்கிக் கதிரையில் வைத்தார் . வர்ணனது தலைக்கு குட்டிபாபர் தண்ணியைத் தெளித்து ஆதரவாக அவனது தலையைத் தடவி விட்டவாறே கதையைத் தொடர்ந்தார் .

அவனுக்குப் பிடித்த மாயாவி , ரின்ரின் கதையெல்லாம் குட்டி பாபரின் வாயிலிருந்து அபிநயத்துடன் வந்தன . வர்ணன் அழுகையை மறந்து கனநேரமாகி விட்டிருந்தது . அவர் வாய் இடைவிடாது ஏதாவது ஒரு கதையை இயற்றி இயற்றிச் சொல்லிக் கொண்டிருந்தது . வர்ணன் அவரது கதைகளில் சொக்கிப்போய் ஆடாது அசையாது இருந்தான் .

சிறு பிள்ளைகளுக்கு அவர்கள் வழியில் போய் மயிர் வெட்டும் வித்தை தெரிந்தவர் குட்டிபாபர் . வர்ணனது தலையைத் தண்ணியால் தடவிய பின்பு பல்லுக் கத்திரிக்கோலால் வேகமாக வெட்டத் தொடங்கினார் . சிறிது நேரத்தில் வர்ணனது தலை அழகாகவும் நேர்தியாகவும் வந்தது . நெற்றியில் ஒரு சிறிய மயிரைக் கொத்தாக விட்டு சுறுட்டியிருந்தார் குட்டி பாபர் . இறுதியாகத் தீட்டிய சவரக்கத்தியை மீண்டும் தீட்டியவாறே வர்ணனின் தலையைக் குனிய வைத்து வெட்டிய தலையை சீர் செய்யத் தொடங்கினர் குட்டிபாபர் .

" ஐயா தம்பி தலையை ஆட்டக் கூடாது என்ன , கொஞ்சநேரம் பொறுங்கோடி ."

வர்ணனுக்கு பிடரியில் கத்தி பட ஒரே கூச்சமாக்க் கூசியது .

"ஐய்யோ கூசுது குட்டி பாபர் இது வேண்டாம் . கொஞ்சம் பொறுங்கோ ராசா " .

வர்ணனின் கூச்சத்தை உணர்ந்து விரைவாகச் சீர் செய்தார் குட்டி பாபர் . அவனது கையில் மீண்டும் தோடம்பழ இனிப்பை வைத்துவிட்டு அவனது தலையில் அம்மா காச்சிய கருவேப்பலை எண்ணையை கொஞ்சம் வைத்து சூடு பறக்கத் தேய்த்து வர்ணனின் தலையை மசாஜ் செய்யத்தொடங்கினார் குட்டிபாபர் .

குட்டிபாபரின் மசாஜ்சுக்காகவே அவரின் சலூனில் சனம் அலைமோதும் . பெரியவர்களுக்கு ஒருமாதிரியும் , சின்னப் பிள்ளைகளுக்கு ஒருமாதிரியும் மசாஜ் செய்வதில் குட்டிபாபர் விண்ணன் . தலையை மசாஜ் செய்து இறுதியில் தலையை இரண்டு பக்கமும் ஆட்டி கழுத்து நெட்டி முறிக்கும் பொழுது வாடிக்கையாளர்கள் சொக்கிப் போய்விடுவார்கள் . இது குட்டிபாபரின் தொழில் ரகசியம் . நிலத்தில் வர்ணனைச் சுற்றி தலைமயிர்கள் கொட்டிக்கிடந்தன . குட்டிபாபர் வைச்ச எண்ணையால் வர்ணனுக்கு கண்கள் எரிந்தன . அக்கா வர்ணனை கிணத்தடிக்கு தோய வாக்கக் கூட்டிக் கொண்டு போனா . குட்டிபாபர் தனது சீப்புகள் கத்திரிக்கோல்களைத் துப்பரவு செய்து தனது பெட்டிக்குள் அடுக்கிக் கொண்டிருந்தார் .

அம்மா நல்ல தடிச்ச பாலில் போட்ட தேத்தண்ணியைக் கொண்டு வந்து குட்டிபாபரிடம் கொடுத்தவாறே ,

"சின்ராசா எவ்வளவு தம்பிக்குக் காசு ? ஐய்யோ........ வேண்டாம் அம்மா , தம்பி நான் பாக்க வளர்றவர் . அவற்ரை முப்பத்தொண்டுக்கே நான் தான் மொட்டை அடிச்சனான் . அவருக்கு காசு வங்கமாட்டன் அம்மா . நீ சரி வரமாட்டாய் நில்லு வாறன் ".

என்று உள்ளே போய் கமத்தால் வந்த நெல்லு கொஞ்சம் , அதோடை நூறு ரூபாயும் கொண்டு வந்து குட்டிபாபரிடம் குடுத்தா .

"இதுகளை உன்ரை மனிசீட்டை குடு சின்ராசு . "

அம்மா ஒரு போதும் குட்டி பாபரை வித்தியாசப்படுத்திப் பார்பதில்லை . வீட்டில் ஒருவராகவே பாப்பா .

"மிச்சம் சந்தோசம் அம்மா , நீங்கள் உங்கடை அம்மா மாதிரியே இருக்கிறியள் "

என்று கண் கலங்கியவாறே வாங்கிக் கொண்டார் . உண்மையில் வீட்டில அரிசி இல்லாமல் குட்டிபாபர் சாப்பிடாதது வர்ணனின் அம்மாக்குத் தெரிய நியாயமில்லைத்தான் . வர்ணன் நன்றாகத் தோஞ்சு ரல்க்கம் பவுடரும் அப்பிக்கொண்டு வெக்கத்துடன் அம்மாவிடம் சாப்பிட ஓடிவந்தான் .

1979 வர்ணனுக்கு பதினைஞ்சு வயசாகி முறுக்கிக் கொண்டு திரிந்தான் . அவன் அடிக்கடி கண்ணாடியில் அவனைப் பாத்து அரும்பு மீசையையும் , நெற்ரியில் குட்டிபாபர் வைத்த சுருள்முடியைப் பாத்து சந்தோசப்பட்டுக் கொண்டான் . அவன் வயசு அப்படி.... அவனது தலையில் இப்பொழுது கொஞ்சம் கூடுதலாகவே மயிர் வளர்ந்திருந்தது . இன்று எப்படியாவது குட்டி பாபரிடம் போகவேண்டும் என்று முடிவு செய்து கொண்டான் . நல்ல உடுப்புகளாகத் தெரிவு செய்து போட்டுக் கொண்டு தனது றலி சைக்கிளை எடுக்கும் பொழுது அம்மாவின் குரல் தடை செயதது .

"எங்கையப்பு போறிங்கள் ? நான் குட்டி பாபரிட்டை போட்டு வாறன் அம்மா . ஏன் அப்பு போன மாசம் தானே வெட்டினிங்கள் . இல்லை அம்மா மயிர் வளந்துட்டுது உங்களுக்குத் தெரியாது . சரி இந்தாகோ காசு , வரேக்கை அம்மாக்கு வெத்திலையும் பொயிலையும் வாங்கியாங்கோ ".

என்னம்மா இதை விடமாட்டியளோ ? என்ரை கூட்டுகளெல்லாம் நக்கல் எல்லே அடிக்கினம் . அவையை விடுங்கோ நீங்கள் வாங்கியாங்கோ ".

என்று முடிவாகவே அம்மா சொன்னா . அரைமனத்துடன் காசை வாங்கிக் கொண்டான் வர்ணன் . அனது றலி சைக்கிள் கோப்பாய் சந்தியை நோக்கிப் பறந்தது . இடையில் குண்டு றாகினி வீட்டடியில் சைக்கிளால் எம்பி எட்டிப் பார்த்தான் இருக்கின்றாளா என்று . அவளின் அசுமாத்தத்தைக் காணவில்லை . சிறிது நேரத்தில் குட்டிபாபரின் சலூனை வர்ணனின் சைக்கிள் வந்தடைந்தது அவன் உள்ளே எட்டிப் பாரத்தான் அவரது அண்ணைதான் நின்றிருந்தார் . வர்ணன் குட்டி பாபரைக் கேட்டான் அவர் மணியங்கடையில் தேத்தண்ணி குடிக்கப் போய்விட்டதாகப் பதில் வந்தது .

"சரி நான் பேந்து வாறன் "

என்றான் .

"ஏன் எங்களிட்டை மயிர் வெட்ட மாட்டியளோ தம்பி ? "

"இல்லை நான் குட்டி பாபரிட்டைத்தான் வெட்டுவன்" .

வர்ணன் அம்மாவிற்கு வெத்திலை வாங்க கடைக்குப் போனான் . அவன் திரும்பிய பொழுது குட்டிபாபர் சலூனுக்கு வந்துவிட்டிருந்தார் .

" எனக்கு மயிர் வெட்டவேணும் குட்டிபாபர் . எப்பிடி தம்பி வெட்டிறது ? எனக்கு ஷக்கி கட் வெட்டி விடுங்கோ ".

குண்டு றாகிணி நேற்று தன்ரை நண்பிக்கு சொல்லிக் கொண்டு வந்தவள் தனக்கு இந்த வெட்டு ஸ்ரைல் தான் பிடிக்கும் எண்டு . எப்பிடியும் இண்டைக்கு ஆளுக்கு முன்னாலை போய் லெவல் காட்டவேணும் என்றுதான் அவன் குட்டிபாபரிடம் வந்திருக்கின்றான் . இதெல்லாம் அப்பாவி அம்மாவுக்குத் தெரியாது . குட்டி பாபர் வழக்கம் போலவே ஊர்புதினம் எல்லாம் அவனுக்கு விளப்பமாய் சொல்லி ஷக்கி கட் வெட்டி விட்டார் . அவன் குண்டு றாகினி வீட்டைக் கடக்கும் பொழுது சொல்லி வைத்தால் போல் வீட்டு வாசலில் ஆட்டுக்கு பிலா இலை ஊசியால் குத்திக் கொண்டிருந்தாள் . அவன் சைக்கிளின் வேகத்தை மெதுவாக்கி அவள் வீட்டு வாசலில் நிப்பாட்டினான் . இன்று பார்த்து குண்டு றாகினி அவனுக்கு வடிவாகத் தெரிந்தாள் . அவன் வேணுமென்று

"உங்கடை லொஜிக் நோட்ஸ்ஐ தாறியளே எழுதிப்போட்டுத் தாறன் ?"

என்றான் . அவளும் கொண்டு வந்து வெட்கத்துடன் கொடுத்தாள் . ஒருவகையில் அந்தவயதில் குண்டுறாகினியை லுக்குவதற்கு குட்டி பாபரும் விதம் விதமாக மயிர் வெட்டி அவனுக்கு உதவி செய்தார் . இதுவும் அவனிற்கு குட்டி பாபர் என்றால் உயிர் .

indiavisit2012035.jpg

2011 வர்ணன் பல வருடங்கள் வெளிநாட்டில் தன் வாழ்க்கையின் பெரும் பகுதியைத் தொலைத்து விட்டு நேற்று இரவு தான் கோப்பாய்க்குத் திரும்பியிருந்தான் . இதமான இளம் வயதுக் காலைக் காட்சிகள் அவனை நித்திரையால் எழுப்பின . இந்தமுறை அக்காவிற்குப் பதிலாகக் கடைசித் தங்கைச்சி வீட்டு ஆட்சிப் பொறுப்பை எடுத்திருந்தாள் . அவன் எழுந்து விரைவாகக் குளித்து வெளிக்கிட்டுத் தனது றலி சைக்கிளைத் தேடினான் .காலத்தின் கோலத்தால் அது கறள்கட்டிப் போய் பின் விறாந்தையில் கிடந்தது . அனுக்கு பெரிய அந்தரமாகிப் போய் விட்டது . தங்கைச்சயைப் பேசியவாறு அவளது சைக்கிளை எடுத்துக் கொண்டு கூட்டுகளைச் சந்திக்க ஆவலாக கோப்பாய் சந்திக்கு விரைந்தான் . அங்கு அவனுக்குப் பல அதிர்சிகள் வரிசை கட்டி நின்றன . சந்தி ஆலமரம் செல்விழுந்த பள்ளத்துடன் குழியாகக் கிடந்தது . வர்ணன் ஆவலுடன் கைதடிப் பக்கம் சைக்கிளைத் திருப்பி குட்டிபாபரின் சலூனைத் தேடினான் . செல்லின் அகோரத் தாக்குதலால் அங்கு இடிந்த கட்டிடமும் மண்மேடுமே கிடந்தன . குட்டி பாபருக்கு என்ன நடந்தது என யோசித்தவாறே மணியம் ரீ கடையினில் உள்ளிட்டான் . அங்கு மணியத்தார் மிகவும் வயது போய் ஒரு வாங்கில் இருந்தார் .அவரது மகன் தான் கடையை நடத்தினார் . போண்டாவையும் ரீயையும் வாங்கியவாறே குட்டி பாபரைப் பற்றிக் கேட்டான் .

"உமக்குத் தெரிய ஞாயமில்லைத்தான் இந்தியன் ஆமி அடிச்ச செல்லுகளில இந்த ஆலமரம் போச்சுது, என்ரை கடையும் சேதாரம் . அங்கால குட்டி பாபர் , சலூனிலை வேலை செய்யேக்கை செல்லுகள் விழுந்து கடை தரைமட்டம் . கடைசீல அவற்றை உடம்புகூட எடுக்கேலாமல் போச்சுது ."

வர்ணனுக்கு தலை சுற்றியது . குட்டி பாபர் உயிரோடை இல்லையா ? எதற்கும் அழாத அவன் முதன்முறையாக கண்கள் குளமாகச் சைக்கிளை வீடு நோக்கித் திருப்பினான் .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் மண்வாசனை நாசியில் நுளைந்த கதை கோமகன் கதையை இன்னமும் சிறிய பந்திகளாக பிரித்து போட்டால் படிக்க இலகுவாக இருக்கும் என நினைக்கிறேன்

  • தொடங்கியவர்

மீண்டும் மண்வாசனை நாசியில் நுளைந்த கதை கோமகன் கதையை இன்னமும் சிறிய பந்திகளாக பிரித்து போட்டால் படிக்க இலகுவாக இருக்கும் என நினைக்கிறேன்

மிக்க நன்றிகள் சாத்திரி உங்கள் ஆலோசனைகளுக்கு . பிரிச்சிருக்கின்றேன்....... பந்தியை .

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுகளை அழகாக இரைமீட்டி உள்ளீர்கள்....கடைசியில் நெஞ்சைக் கனக்க வைத்துவிட்டது...

  • கருத்துக்கள உறவுகள்

1976 அதிகாலை வேளை சிலிர்ப்புடன் தொடங்கியது . இலேசான மார்கழி மாதத்து குளிரும் , பிள்ளையார் கோயலடி மணியோசையும் , அம்மாவின் அடுப்படிச் சண்டை ஒலியும் , மாட்டுக் கொட்டிலில் நந்தினியிடம் இருந்து அண்ணை பித்தளைச் செம்பில் பால்கறக்கும் சர்..... என்ற ஒலியும் படுக்கையில் கிடந்த சிறுவனான வர்ணனுக்கு இதமாகவே இருந்தன . அப்பொழுது அவனிடம் சிறுவயதுக் குளப்படியும் கற்பனைகளுமே அதிகம் . தும்பிக்கு வாலில் கயிறு கட்டி பறக்க விடுவதும் , கோயில் கேணியடியில் பேத்தை மீன்கள் பிடிப்பதும் , தரவைக்குள் மாடுகள் மேயப் புதினம் பார்ப்பதும் அவனின் முக்கிய பொழுதுபோக்காக இருந்தன . இன்று என்ன செய்யலாம் என்று கற்பனை பண்ணியவாறே மீண்டும் போர்வையைக் குளிருக்கு இதமாகப் போர்த்தியவாறே படுக்கையில் குப்பறக் கவிண்டு படுத்துக் கொண்டான் . அறைக்குள் அக்கா தும்புக்கட்டையால் கூட்டும் சத்தம் மெதுவாகக் கேட்டது . இவா வந்துட்டா இனிக் கஸ்ரம் தான் என எண்ணியவாறே கள்ளளக் குணத்துடன் நித்திரை மாதிரி நடித்தான் வர்ணன் . அக்கா சொல்லி வைத்தால் போல டேய் வர்ணன் எழும்படா நான் கட்டில் விரிக்கவேணும் எண்டு எழுப்பினா . வர்ணன் முறுகிக் கொண்டே படுத்திருந்தான் . அக்கா அம்மாவைக் கூப்படும் சத்தம் வடிவாகவே கேட்டது . வர்ணனுக்கு . அம்மா எது சொன்னாலும் உடனடியாகவே வர்ணன் செய்வான் ஏனேனில் அம்மாவின் கதை அப்படி . அம்மா பால் தேத்தண்ணியுன் வந்து ராசா வர்ணன் என்ரை குட்டான் எல்லே எழும்படி . இண்டைக்கு பிள்ளைக்கு தலைமயிர் வெட்ட குட்டி பாபர் எல்லோ வாறார் . எழும்புங்கோ குஞ்சு . வர்ணன் படக்கன்று எழுந்து தேத்தண்ணியை வாங்கியபடியே எனக்கு மயிர் வெட்டவேண்டாம் அம்மா என்று அழத்தொடங்கினான் . அம்மா வர்ணனின் தலையைத் தடவியவாறே ஏன் குட்டான் அழுவான் . இங்கை பாரடி என்ரை பிள்ளையின்ரை தலை , மயிராலை காடு பத்திப் போய் கிடக்கு . பேந்து பிள்ளைக்கு சிரங்கல்லே பிடிச்சுப்போடும் என்று வர்ணனைச் சமாதானப் படுத்தினா . வர்ணன் அழுகையை நிப்பாட்டுற மாதிரி தெரியவில்லை . அக்கா பொறுமை இழந்து வர்ணனது குண்டியில் இரண்டு அடி வைத்து இழுத்துக் கொண்டு போய் கிணத்தடியில் உமிக்கரியால் வர்ணனுக்குப் பல்லு மினுக்கப்பண்ணினா . அவனது அழுகை மட்டும் கூடியதே ஒழியக் குறையவில்லை .

தூரத்தில் குட்டி பாபர் சைக்கிளில் வருவது வர்ணனுக்குத் தெரிந்தது . அழுது கொண்டிருந்த வர்ணனைக் கண்ட குட்டி பாபர் சைக்களை நிப்பாட்டி விட்டு ஓடி வந்து என்ரை ராசா மோனை ஏன் அழுவான் இங்கைபாருங்கோ பிள்ளைக்கு என்ன கொண்டு வந்தனான் எண்டு சொல்லியவாறே வர்ணன் கைநிறைய தோடம்பழ இனிப்புகளைத் திணித்தார் . தோடம்பழ இனிப்பைக் கண்ட வர்ணனின் அழுகை மெதுவாக நாறல் மீனைக் கண்ட பூனை போலக்குறையத தொடங்கியது . மாமரத்துக்குக் கீழே குட்டி பாபருக்குப் பக்கத்தில் அக்கா கதிரை ஒன்றைக் கொண்டு வந்து வைத்தா . குட்டி பாபர் பக்கத்தில் நின்ற முள்முருங்கையில் தோல்வாரைக் கட்டிவிட்டு கத்தியை சரக்சரக் என்று தீட்டத் தொடங்கினார் . சூரிய ஒளியில் கத்தி பளீரென்று மினுங்கி வர்ணனைப் பயமுறுத்தியது . குட்டி பாபர் சிரிச்சு சிரிச்சு வர்ணனுடன் கதைத்தவாறே வர்ணனைத் தூக்கிக் கதிரையில் வைத்தார் . வர்ணனது தலைக்கு குட்டிபாபர் தண்ணியைத் தெளித்து ஆதரவாக அவனது தலையைத் தடவி விட்டவாறே கதையைத் தொடர்ந்தார் . அவனுக்குப் பிடித்த மாயாவி , ரின்ரின் கதையெல்லாம் குட்டி பாபரின் வாயிலிருந்து அபிநயத்துடன் வந்தன . வர்ணன் அழுகையை மறந்து கனநேரமாகி விட்டிருந்தது . அவர் வாய் இடைவிடாது ஏதாவது ஒரு கதையை இயற்றி இயற்றிச் சொல்லிக் கொண்டிருந்தது . வர்ணன் அவரது கதைகளில் சொக்கிப்போய் ஆடாது அசையாது இருந்தான் . சிறுபிள்ளைகளுக்கு அவர்கள் வழியில்போய் மயிர்வெட்டும் வித்தை தெரிந்தவர் குட்டிபாபர் . வர்ணனது தலையைத் தண்ணியால் தடவிய பின்பு பல்லுக் கத்திரிக்கோலால் வேகமாக வெட்டத் தொடங்கினார் .சிறிது நேர்தில் வர்ணனது தலை அழகாகவும் நேர்த்தியாகவும் வந்தது . நெற்றியில் ஒரு சிறிய மயிரைக் கொத்தாக விட்டு சுறுட்டியிருந்தார் குட்டிபாபர் . இறுதியாகத் தீட்டிய சவரக்கத்தியை மீண்டும் தீட்டியவாறே வர்ணனின் தலையைக் குனிய வைத்து வெட்டிய தலையை சீர் செய்யத்தொடங்கினர் குட்டிபாபர் . ஐயா தம்பி தலையை ஆட்டக் கூடாது என்ன , கொஞ்சநேரம் பொறுங்கோடி . வர்ணனுக்கு பிடரியில் கத்தி பட ஒரே கூச்சமாக்க் கூசியது . ஐய்யோ கூசுது குட்டி பாபர் இது வேண்டாம் . கொஞ்சம் பொறுங்கோ ராசா வர்ணனின் கூச்சத்தை உணர்ந்து விரைவாகச் சீர் செய்தார் குட்டி பாபர் . அவனது கையில் மீண்டும் தோடம்பழ இனிப்பை வைத்துவிட்டு அவனது தலையில் அம்மா காச்சிய கருவேப்பலை எண்ணையை கொஞ்சம் வைத்து சூடு பறக்கத் தேய்த்து வர்ணனின் தலையை மசாஜ் செய்யத்தொடங்கினார் குட்டிபாபர் .

குட்டிபாபரின் மசஜ்சுக்காகவே அவரின் சலூனில் சனம் அலைமோதும் . பெரியவர்களுக்கு ஒருமாதிரியும் , சின்னப் பிள்ளைகளுக்கு ஒருமாதிரியும் மசாஜ் செய்வதில் குட்டிபாபர் விண்ணன் . தலையை மசாஜ் செய்து இறுதியில் தலையை இரண்டு பக்கமும் ஆட்டி கழுத்து நெட்டி முறிக்கும் பொழுது வாடிக்கையாளர்கள் சொக்கிப் போய்விடுவார்கள் . இது குட்டிபாபரின் தொழில் ரகசியம் . நிலத்தில் வர்ணனைச் சுற்றி தலைமயிர்கள் கொட்டிக்கிடந்தன . குட்டிபாபர் வைச்ச எண்ணையால் வர்ணனுக்கு கண்கள் எரிந்தன . அக்கா வர்ணனை கிணத்தடிக்கு தோய வாக்கக் கூட்டிக் கொண்டு போனா . குட்டிபாபர் தனது சீப்புகள் கத்திரிக்கோல்களைத் துப்பரவு செய்து தனது பெட்டிக்குள் அடுக்கிக் கொண்டிருந்தார் .

அம்மா நல்ல தடிச்ச பாலில் போட்ட தேத்தண்ணியைக் கொண்டு வந்து குட்டிபாபரிடம் கொடுத்தவாறே , சின்ராசா எவ்வளவு தம்பிக்குக் காசு ? ஐய்யோ........ வேண்டாம் அம்மா தம்பி நான் பாக்க வளர்றவர் . அவற்ரை முப்பத்தொண்டுக்கே நான் தான் மொட்டை அடிச்சனான் . அவருக்கு காசு வங்கமாட்டன் அம்மா . நீ சரிவரமாட்டாய் நில்லு வாறன் என்று உள்ளே போய் கமத்தால் வந்த நெல்லு கொஞ்சம் , அதோடை நூறு ரூபாயும் கொண்டு வந்து குட்டிபாபரிடம் குடுத்தா . இதுகளை உன்ரை மனிசீட்டை குடு சின்ராசு . அம்மா ஒருபோதும் குட்டிபாபரை வித்தியாசப்படுத்திப் பார்பதில்லை . வீட்டில் ஒருவராகவே பாப்பா . மிச்சம் சந்தோசம் அம்மா , நீங்கள் உங்கடை அம்மா மாதிரியே இருக்கிறியள் என்று கண்கலங்கியவாறே வாங்கிக் கொண்டார் . உண்மையில் வீட்டில அரிசி இல்லாமல் குட்டிபாபர் சாப்பிடாதது வர்ணனின் அம்மாக்குத் தெரிய நியாயமில்லைத்தான் . வர்ணன் நன்றாகத் தோஞ்சு ரல்க்கம் பவுடரும் அப்பிக்கொண்டு வெக்கத்துடன் அம்மாவிடம் சாப்பிட ஓடிவந்தான் .

1979 வர்ணனுக்கு பதினைஞ்சு வயசாகி முறுக்கிக் கொண்டு திரிந்தான் . அவன் அடிக்கடி கண்ணாடியில் அவனைப் பாத்து அரும்பு மீசையையும் , நெற்ரியில் குட்டிபாபர் வைத்த சுருள்முடியைப் பாத்து சந்தோசப்பட்டுக் கொண்டான் . அவன் வயசு அப்படி.... அவனது தலையில் இப்பொழுது கொஞ்சம் கூடுதலாகவே மயிர் வளர்ந்திருந்தது . இன்று எப்படியாவது குட்டி பாபரிடம் போகவேண்டும் என்று முடிவு செய்து கொண்டான் . நல்ல உடுப்புகளாகத் தெரிவு செய்து போட்டுக் கொண்டு தனது றலி சைக்கிளை எடுக்கும் பொழது அம்மாவின் குரல் தடை செயதது .எங்கையப்பு போறிங்கள் ? நான் குட்டிப்பாபரிட்டை போட்டு வாறன் அம்மா . ஏன் அப்பு போன மாசம் தானே வெட்டினிங்கள் . இல்லை அம்மா மயிர் வளந்துட்டுது உங்களுக்குத் தெரியாது சரி இந்தாகோ காசு , வரேக்கை அம்மாக்கு வெத்திலையும் பொயிலையும் வாங்கியாங்கோ . என்னம்மா இதை விடமாட்டியளோ ? என்ரை கூட்டுகளல்லாம் நக்கல் எல்லே அடக்கினம் . அவையை விடுங்கோ நீங்கள் வாங்கியாங்கோ என்று முடிவாகவே அம்மா சொன்னா . அரைமனத்துடன் காசை வாங்கிக் கொண்டான் வர்ணன் . அனது றலி சைக்கிள் கோப்பாய் சந்தியை நோக்கிப் பறந்தது . இடையில் குண்டு றாகினி வீட்டடியில் சைக்கிளால் எம்பி எட்டிப் பார்த்தான் இருக்கின்றாளா என்று . அவளின் அசுமாத்தத்தைக் காணவில்லை . சிறிது நேரத்தில் குட்டிபாபரின் சலூனை வர்ணனின் சைக்கிள் வந்தடைந்தது அவன் உள்ளே எட்டிப் பாரத்தான் அவரது அண்ணைதான் நின்றிருந்தார் . வர்ணன் குட்டி பாபரைக் கேட்டன் அவர் மணியங்கடையில் தேத்தண்ணி குடிக்கப் போய்விட்டதாகப் பதில் வந்தது .சரி நான் பேந்து வாறன் என்றான் . ஏன் எங்களிட்டை மயிர் வெட்ட மாட்டியளோ தம்பி . இல்லை நான் குட்டி பாபரிட்டைத்தான் வெட்டுவன் .வர்ணன் அம்மாவிற்கு வெத்திலை வாங்க கடைக்குப் போனான் . அவன் திரும்பிய பொழுது குட்டிபாபர் சலூனுக்கு வந்துவிட்டிருந்தார் . எனக்கு மயிர் வெட்டவேணும் குட்டிபாபர் . எப்பிடி தம்பி வெட்டிறது ? எனக்கு ஷக்கி கட் வெட்டி விடுங்கோ . குண்டு றாகிணி நேற்று தன்ரை நண்பிக்கு சொல்லிக் கொண்டு வந்தவள் தனக்கு இந்த வெட்டு ஸ்ரைல் தான் பிடிக்கும் எண்டு . எப்பிடியும் இண்டைக்கு ஆளுக்கு முன்னாலை போய் லெவல் காட்டவேணும் என்றுதான் அவன் குட்டிபாபரிடம் வந்திருக்கின்றான் . இதெல்லாம் அப்பாவி அம்மாவுக்குத் தெரியாது . குட்டி பாபர் வளக்கம் போலவே ஊர்புதினம் எல்லாம் அவனுக்கு விளப்பமாய் சொல்லி ஷக்கி கட் வெட்டி விட்டார் . அவன் குண்டு றாகினி வீட்டைக் கடக்கும் பொழுது சொல்லி வைத்தால் போல் வீட்டு வாசலில் ஆட்டுக்கு பிலா இலை ஊசியால் குத்திக் கொண்டிருந்தாள் . அவன் சைக்கிளின் வேகத்தை மெதுவாக்கி அவள் வீட்டு வாசலில் நிப்பாட்டினான் . இன்று பார்த்து குண்டு றாகினி அவனுக்கு வடிவாகத் தெரிந்தாள் . அவன் வேணுமென்று உங்கடை லொஜிக் நோட்ஸ்ஐ தாறியளே எழுதிப்போட்டுத் தாறன் . என்றான் அவளும் கொண்டு வந்து வெட்கத்துடன் கொடுத்தாள் . ஒருவகையில் அந்தவயதில் குண்டுறாகினியை லுக்குவதற்கு குட்டிபாபரும் விதம் விதமாகமயிர் வெட்டி அவனுக்கு உதவி செய்தார் .இதுவும் அவனிற்கு குட்டிபாபர் என்றால் உயிர் .

2011 வர்ணன் பல வருடங்கள் வெளிநாட்டில் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியைத் தொலைத்து விட்டு நேற்று இரவு தான் கோப்பாய்க்குத் திரும்பியிருந்தான் . இதமான இளம்வயதுக் காலைக் காட்சிகள் அவனை நித்திரையால் எழுப்பின . இந்தமுறை அக்காவிற்குப் பதிலாகக் கடைசித் தங்கைச்சி வீட்டு ஆட்ச்சிப் பொறுப்பை எடுத்திருந்தாள் . அவன் எழுந்து விரைவாகக் குளித்து வெளிக்கிட்டுத் தனது றலி சைக்கிளைத் தேடினான் .காலத்தின் கோலத்தால் அது கறள்கட்டிப் போய் பின் விறாந்தையில் கிடந்தது . அனுக்கு பெரிய அந்தரமாகிப் போய் விட்டது . தங்கைச்சயைப் பேசியவாறு அவளது சைக்கிளை எடுத்துக் கொண்டு கூட்டுகளைச் சந்திக்க ஆவலாக கோப்பாய் சந்திக்கு விரைந்தான் . அங்கு அவனுக்குப் பல அதிர்சிகள் வரிசை கட்டி நின்றன . சந்தி ஆலமரம் செல்விழுந்த பள்ளத்துடன் குழியாகக் கிடந்தது . வர்ணன் ஆவலுடன் கைதடிப் பக்கம் சைக்கிளைத் திருப்பி குட்டிபாபரின் சலூனைத் தேடினான் . செல்லின் அகோரத் தாக்குதலால் அங்கு இடிந்த கட்டிடமும் மண்மேடுமே கிடந்தன . குட்டிபாபருக்கு என்ன நடந்தது என யோசித்தவாறே மணியம் ரீக்கடையினில் உள்ளட்டான் . அங்கு மணியத்தார் மிகவும் வயது போய் ஒரு வாங்கில் இருந்தார் .அவரது மகன் தான் கடையை நடத்தனார் . போண்டாவையும் ரீயையும் வாங்கியவாறே குட்டிபாபரைப் பற்றிக் கேட்டான் . உமக்குத் தெரிய ஞாயமில்லைத்தான் இந்தியன் ஆமி அடிச்ச செல்லுகளில இந்த ஆலமரம் போச்சுது, என்ரை கடையும் சேதாரம் . அங்கால குட்டி பாபர் சலூனிலை வேலை செய்யேக்கை செல்லுகள் விழுந்து கடை தரைமட்டம் . கடைசீல அவற்றை உடம்புகூட எடுக்கேலாமல் போச்சுது .வர்ணனுக்கு தலை சுற்றியது . குட்டிபாபர் உயிரோடை இல்லையா ? எதற்கும் அழாத அவன் முதன்முறையாக கண்கள் குளமாகச் சைக்கிளை வீடு நோக்கித் திருப்பினான் .

அழகானதொரு அனுபவக்கதை

அருமையாக தொகுத்து வடிவமைத்துள்ளீர்கள்

கதையுடன் ஒன்றுபடுவதை எழுத்துப்பிழைகள் தடுக்கின்றன. கவனியுங்கள்.

அந்த ராகினி அக்காவை நான் ஒருக்கா பார்க்கணும். :lol::D :D

  • தொடங்கியவர்

நினைவுகளை அழகாக இரைமீட்டி உள்ளீர்கள்....கடைசியில் நெஞ்சைக் கனக்க வைத்துவிட்டது...

மிக்க நன்றிகள் சுபேஸ் உங்கள் கருத்துகளுக்கு .

  • தொடங்கியவர்

அழகானதொரு அனுபவக்கதை

அருமையாக தொகுத்து வடிவமைத்துள்ளீர்கள்

கதையுடன் ஒன்றுபடுவதை எழுத்துப்பிழைகள் தடுக்கின்றன. கவனியுங்கள்.

அந்த ராகினி அக்காவை நான் ஒருக்கா பார்க்கணும். :lol::D :D

இதுக்குத்தான் உங்களைப் போல ஆக்கள் வேணுமெண்டிறது . விடிய வேலைக்குப் போகமுதல் போட்டதால் தவறுகள் வந்து விட்டது . பிழைகள் திருத்தியுள்ளேன் . மேலும் , றாகிணியக்காவைப் பாக்கலாம் . ஆனால் சேதாரம் கொஞ்சம் கூடவாய் இருக்கும் பறவாயில்லையோ ?

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1976 அதிகாலை வேளை சிலிர்ப்புடன் தொடங்கியது .

."சின்ராசா எவ்வளவு தம்பிக்குக் காசு ? ஐய்யோ........ வேண்டாம் அம்மா , தம்பி நான் பாக்க வளர்றவர் . அவற்ரை முப்பத்தொண்டுக்கே நான் தான் மொட்டை அடிச்சனான் . அவருக்கு காசு வங்கமாட்டன் அம்மா . நீ சரிவரமாட்டாய் நில்லு வாறன் ".

என்று உள்ளே போய் கமத்தால் வந்த நெல்லு கொஞ்சம் , அதோடை நூறு ரூபாயும் கொண்டு வந்து குட்டிபாபரிடம் குடுத்தா.

கோமகன்;

1976 ஆண்டு தலைமர் வெட்டுவதற்கு 100 ரூபா????

பழைய அனுபங்களை தொட்டுச்சென்ற கதை. நான் இங்கே உந்த "டிக்கி டிக்கி" மெசினை பற்றி ஒரு முடிதிருத்தினரிடம் கேட்டேன். அவர் சொன்னார் தான் அறிந்த காலம் தொட்டு எலெக்ட்ரிக் கட்டர் தானாம் பாவிக்கிறது என்று. என்ன அவருக்கு அந்த கொடுப்பனை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

. மேலும் , றாகிணியக்காவைப் பாக்கலம் .

ஆனால் சேதாரம் கொஞ்சம் கூடவாய் இருக்கும் பறவாயில்லயோ ?

இதற்கு முள் குத்தம் ஏன்று ரோசாவை விடலாமா என்றுதான் எழுதணும்

ஆனால் ரோகினியின்மேல் தாங்கள் வைத்திருக்கும் பிரியம் தடுக்கிறது.

சேதாரம் என்ன சேதாரம்

முதன் முறை என்றால்தானே வலிக்கும்....??? :lol::D :D

எனக்கும் இப்பிடி ஒருத்தர் இருந்தவர்.

நான் பிறந்ததில இருந்து.... ஊரை விட்டு வெளிக்கிடும் மட்டும், அவரிட்டத்தான் என்ர தலையைக் குடுப்பன். :D

வெத்திலை பாக்கைப் போட்டுக்கொண்டு.... அந்த ஆள் வெட்டுற ஸ்டைலே தனி! :)

கதை நல்லாத்தான் இருக்கு... பழைய ஊர் ஞாபகங்களை கிளறுகின்றது.

நன்றி கோ! பாராட்டுக்கள்!:)

அதுசரி... இன்னும் உங்களுக்கு அந்த குண்டு ராகினி மேல ஒரு கண்ணு இருக்குப்போல. :wub:

பார்த்து கவனம்... ரெண்டு பக்கத்தாலயும் அடிவாங்கவேண்டி வரும்! :o:lol:

  • கருத்துக்கள உறவுகள்

பிழை கண்டு பிடித்தே பெயர் வாங்கும் புலவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள் எனவே கோமகன் எழுத்து பிழைகளை சரி பார்க்கவும். :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

விமர்சனம் என்பது நீங்கள் விரும்புவது போல் இருக்கணும் என்று எதிர்பார்க்கக்கூடாது.

அருமை அற்புதம் ............. என்று என்னாலும் எழுதமுடியும்.

  • தொடங்கியவர்

கோமகன்;

1976 ஆண்டு தலைமர் வெட்டுவதற்கு 100 ரூபா????

பழைய அனுபங்களை தொட்டுச்சென்ற கதை. நான் இங்கே உந்த "டிக்கி டிக்கி" மெசினை பற்றி ஒரு முடிதிருத்தினரிடம் கேட்டேன். அவர் சொன்னார் தான் அறிந்த காலம் தொட்டு எலெக்ட்ரிக் கட்டர் தானாம் பாவிக்கிறது என்று. என்ன அவருக்கு அந்த கொடுப்பனை இல்லை.

உங்கள் கருத்துக்களுக்கு மிக்கநன்றிகள் எரிமலை . மேலும் , எழுபத்தியாறுகளில் நூறு ரூபா பெரிய காசுதான் . நான் சிறுவனாக இருந்தபொழுது மாதச்சம்பளத்திற்கும் இப்படியான வேலைகள் நடைபெற்றதைக் கண்டுள்ளேன் . அப்பிடியான முறையிலும் வர்ணனின் அம்மாவால் குடுக்கப்பட்டிருக்கலாம் அல்லவா ?

இதற்கு முள் குத்தம் ஏன்று ரோசாவை விடலாமா என்றுதான் எழுதணும்

ஆனால் ரோகினியின்மேல் தாங்கள் வைத்திருக்கும் பிரியம் தடுக்கிறது.

சேதாரம் என்ன சேதாரம்

முதன் முறை என்றால்தானே வலிக்கும்....??? :lol::D :D

குசும்பு............

எனக்கும் இப்பிடி ஒருத்தர் இருந்தவர்.

நான் பிறந்ததில இருந்து.... ஊரை விட்டு வெளிக்கிடும் மட்டும், அவரிட்டத்தான் என்ர தலையைக் குடுப்பன். :D

வெத்திலை பாக்கைப் போட்டுக்கொண்டு.... அந்த ஆள் வெட்டுற ஸ்டைலே தனி! :)

கதை நல்லாத்தான் இருக்கு... பழைய ஊர் ஞாபகங்களை கிளறுகின்றது.

நன்றி கோ! பாராட்டுக்கள்! :)

அதுசரி... இன்னும் உங்களுக்கு அந்த குண்டு ராகினி மேல ஒரு கண்ணு இருக்குப்போல. :wub:

பார்த்து கவனம்... ரெண்டு பக்கத்தாலயும் அடிவாங்கவேண்டி வரும்! :o:lol:

மிக்க நன்றிகள் கவிதை உங்கள் கருத்துக்களுக்கு . எனக்கு போட்டுக் குடுக்கிற ஆக்கள் வெளியாலை இல்லை . எல்லாம் ....................

  • தொடங்கியவர்

பிழை கண்டு பிடித்தே பெயர் வாங்கும் புலவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள் எனவே கோமகன் எழுத்து பிழைகளை சரி பார்க்கவும். :lol: :lol:

பிழைகளைத் திருத்தியுள்ளேன் சாத்திரி .

  • கருத்துக்கள உறவுகள்

பதினாறு வயது நடக்கும் போது கன்ன உச்சி விடுவது பிடிக்காமல்

உச்சிவிடாமல் தலைசீவக்கூடிய மாதிரி ஒரு வெட்டு வெட்டிவிட்டு

வீட்டை வந்ததும் அப்பர் கையோடை திருப்பி அழைத்துச் சென்று

கிட்டத்தட்ட மொட்டை அடிக்க வைத்தது ஞாபகத்தில் வந்து போகின்றது.:D

அழகாக எழுதியிருக்கின்றீர்கள் கோமகன்.

  • கருத்துக்கள உறவுகள்

குண்டு றாகினிக்கு இப்ப எக்கச்சக்கமாய் வயசு ஏறி இருக்குமெண்டு நினைக்கிறன்... :D

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

குண்டு றாகினிக்கு இப்ப எக்கச்சக்கமாய் வயசு ஏறி இருக்குமெண்டு நினைக்கிறன்... :D

இப்பாவது மெலிஞ்சிருப்பாதானே?? :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்பாவது மெலிஞ்சிருப்பாதானே?? :lol: :lol:

இனிமேல் மெலிஞ்சென்ன... :lol:

இன்று தான் படித்தேன் கோமகன். மண்ணின் நினைவுகளோடு கதையைப் புனைந்திருக்கிறீர்கள்.

நீங்கள் தானே வர்ணன்? 15 வயதிலேயே லொஜிக் படிக்க தொடங்கிவிட்டீர்கள்போல. AL க்குத் தானே படிப்பார்கள்?

  • தொடங்கியவர்

பதினாறு வயது நடக்கும் போது கன்ன உச்சி விடுவது பிடிக்காமல்

உச்சிவிடாமல் தலைசீவக்கூடிய மாதிரி ஒரு வெட்டு வெட்டிவிட்டு

வீட்டை வந்ததும் அப்பர் கையோடை திருப்பி அழைத்துச் சென்று

கிட்டத்தட்ட மொட்டை அடிக்க வைத்தது ஞாபகத்தில் வந்து போகின்றது. :D

அழகாக எழுதியிருக்கின்றீர்கள் கோமகன்.

மிக்க நன்றிகள் வாத்தியார் உங்கள் கருத்துக்களுக்கு . ஆம்........... அப்பொழுது ஷக்கி கட் , ஸ்ரெப் கட் பிரபல்யம் . உண்மையில் சிறுவயது மயிர் வெட்டல் ஒரு திறில்லிங்கான சுகானுபவமே .

குண்டு றாகினிக்கு இப்ப எக்கச்சக்கமாய் வயசு ஏறி இருக்குமெண்டு நினைக்கிறன்... :D

உமக்கு நல்லா விளங்கிது .....................

இப்பாவது மெலிஞ்சிருப்பாதானே?? :lol: :lol:

அது பரம்பரை உடம்பு பாருங்கோ . அந்தக் குண்டுதான் அவளுக்கு பியூட்டி .

இனிமேல் மெலிஞ்சென்ன... :lol:

என்னதான் சொல்லவாறியள் மோனை .

  • கருத்துக்கள உறவுகள்

மண் மணம் மாறாத இளம் வயது ஞாபகங்கள் மீண்டும் ஊருக்கு அழைத்து செல்லுகிறது . உங்களுக்கு ஞாபக சக்தி அதிகம்...பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதை நன்றாக உள்ளது. இலங்கை தமிழ் நடையை புரிந்து கொள்வதில் சற்று சிரமமாக இருந்தாலும் கதை எனக்கு பிடித்து இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் சொல்லவாறியள் மோனை .

இனி என்னத்தை சொல்லி...என்னத்தை பேசி...குண்டுறாகினி குமராயில்லையே... :(:D:lol:

  • தொடங்கியவர்

இன்று தான் படித்தேன் கோமகன். மண்ணின் நினைவுகளோடு கதையைப் புனைந்திருக்கிறீர்கள்.

நீங்கள் தானே வர்ணன்? 15 வயதிலேயே லொஜிக் படிக்க தொடங்கிவிட்டீர்கள்போல. AL க்குத் தானே படிப்பார்கள்?

ஆரம்பக் காதல் லொஜிக்குகள் படிக்க வெளிக்கிட்டதால் வந்த குளப்பம் இது . மிக்க நன்றிகள் உங்கள் வருகைக்கு ஈஸ் .

  • தொடங்கியவர்

மண் மணம் மாறாத இளம் வயது ஞாபகங்கள் மீண்டும் ஊருக்கு அழைத்து செல்லுகிறது . உங்களுக்கு ஞாபக சக்தி அதிகம்...பாராட்டுக்கள்

கருத்துக்கள் கூறிய நிலாமதியக்காவிற்கு மிக்க நன்றிகள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.