Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்கக்கொடி விவகாரம்; மாவை பகிரங்க மன்னிப்பு! தவபாலனுக்கு கீதாஞ்சலி சுடர் ஏற்றல்! – சுதந்திர ஊடகக் குரல் ஏற்பாடு! (படங்கள்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mavai-100x100.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேதினத்தில் சிங்கக்கொடி ஏந்தியமைக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கோருகின்றேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா இன்று தெரிவித்துள்ளார்.சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் சுதந்திர ஊடகக் குரல் என்ற அமைப்பு முன்னெடுத்த மூத்த ஊடகவியலாளர் கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேதினத்தில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுமென்று சிங்கக் கொடியினை கையில் ஏந்தவில்லை, அவரது கையில் சிங்கக்கொடி திட்டமிட்டுத் திணிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்திற்காக நான் பகிரங்கமாக மன்னிப்புக்கோருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வின் போது புலிகளின்குரல் வானொலியின் செய்திப் பொறுப்பாசிரியர் இறைவன் (தி.தவபாலன்) மற்றும் போரின் போது கொல்லப்பட்ட ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தி உட்பட்டவர்களது உருவப்படங்கள் வைக்கப்பட்டு அவற்றுக்கு சுடர்கள் ஏற்றப்பட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டன. நிகழ்வில் முக்கிய விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் உட்பட்டவர்கள் சுடர்களை ஏற்றி மாலைகளை அணிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூத்த ஊடகவியலாளரும் இலக்கியவாதியுமான கோபாலரட்ணம், உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் கானமயில்நாதன், தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தில்லைநாதன், வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பிரபாகன், உதயன், சுடரொளி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் வித்தியாதரன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

DSC08968-1024x679.jpgDSC08970-1024x719.jpgDSC08966-1024x677.jpgDSC09004-1024x661.jpgDSCF4893.jpgDSCF49011.jpg

http://www.saritham.com/?p=58702

  • கருத்துக்கள உறவுகள்

இக்கூட்டத்தில் சிங்கள உளவுப்படை புலிக்கொடிகளை காட்டியதாகவும் ஐ.தே.க வுக்கு தெற்கில் களங்கத்தை ஏற்படுத்த திட்டமிட்டு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.சிங்கள உளவுப்படையின் ஐவர் ஒரே நிற உடையை அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: முகநூல்

தவபாலன் , சத்தியமூர்த்தி ஆகிய ஊடகவியாலளர்களுக்கும் அஞ்சலி செலுத்தியமை நல்ல விடயம். போர்க்காலத்தில் இவர்களின் அர்ப்பணிப்பு நிறைந்த ஊடக சேவை என்றுமே போற்றுதலிற்குரியன

சம்பந்தரை அறிக்கை விட சொல்லுங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பில் உள்ள ஒவ்வருவரும் மகா நடிகன்கள் இன்றொன்று சொல்லுவாங்கள் அதற்காக நாளை என்னுமொருவர் மன்னிப்பு கோருவார் இடையிடையே சில வேளையில் காமடி விடுவார்கள் மொத்தத்தில் பல வில்லனுகள் இருக்கின்றாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கூத்தமைப்பை கலைத்து போட்டு வேற நல்ல அமைப்பை உருவாக்க வேணும்..!

  • கருத்துக்கள உறவுகள்

கூத்தமைப்பை கலைத்து போட்டு வேற நல்ல அமைப்பை  உருவாக்க வேணும்..!

கூட்டமைப்பிற்குள் களையெடுப்பது அவசியம்.எப்படி எப்போது என்பதற்குக் காலம் பதில் சொல்லும்

  • கருத்துக்கள உறவுகள்

தன் கையில் என்ன கொடி இருக்கிறதுஅல்லது திணிக்கப்பட்டருக்கிறது(அவர்கள் சொல்வது போல) எனபதே தெரியாத ஒரு அறளை பேந்த அப்பாவிக் கிழவனைத் தலைவராக வைத்திருப்பதால் தமிழருக்கு எந்த விமோசனமும் கிடைக்கப் போவதில்லை. இது அவர்கள் விரும்பிய தீர்வை அவர்களால் திணிக்க முடியும் என்பதற்கு உதாரணம்.சம்பந்தர் உண்மையான நேர்மையான தலைவராக இருந்தால் நடந்த சம்பவத்திற்குப் பொறுப்பேற்று பதவி விலகுவதுடன் அரசியலை விட்டே ஒதுங்க வேண்டும்.மற்றைய அரசியல்வாதிகள் அவரைக் காப்பாற்றுவதற்காக போலியான காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது.தமிழர்களின் கோட்டைக்குள்ளே வந்து பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் முன் சிங்கக் கொடியை சம்பந்தர் தூக்கி பிடித்து ஆட்ட வைத்திருப்பதன் மூலம் ஐதேக தான் இழந்த ஆதரவை சிங்கள மக்கள் மத்தியில் பெருக்கிக் கொண்டுள்ளது.இந்த மேதினத்தை ஐதேக உடன் சேர்ந்து நடத்தியதே ஒர் தீர்க்கதரிசனமில்லாத செயலாகும்.அதை நடத்தி அதனால்வந்த விளைவுகளுக்கு சப்பைக் காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது.அது மட்டுமல்ல தன் வழைமையான பல்லவியான ஓன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்றும் பேசியிருக்கிறார்.இதே போல்தான் ஜெனிவாவுக்குக் போகாதற்கும் பொருத்தமற்ற காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

...எம் பிணங்களின் மீதேறி சிங்கக்கொடியுடன் சம்பந்தர் ...

sampanthan.png

... காடு வா வா, வீடு போ போ என்றழைக்கும் வயதையும் தாண்டி விட்ட எம் தலைவராம் சம்பந்தருக்கு ... கொடியை கொடுக்க தெரியாமல் பிடித்து விட்டேன்? நரி வேலை செய்து விட்டான் ரணில்? ... என்பவைகள் அல்ல கதை, தலைவர் சம்பந்தர் ஐயாவிற்கு அறளை பெயர்ந்து விட்டது!!!!!!!!!!!!!! ......... இனி அரசியலில் இருந்து ஒதுங்குவதுதான் சிறப்பு ... ஒதுங்காவிடின் தெருநாயை அடித்து துரத்துவது போல் துரத்த வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

இனி, கொழும்புக்கு சம்பந்தன் போனால்.... யாழ்ப்பாணத்தில் சிங்கக் கொடி பிடித்தனிங்கள், இங்கும் பிடியுங்கோ என்று மகிந்தவும் சொல்வார். சம்பந்தனும் பிடித்துக் கொண்டு நிற்கட்டும். அரசியல் செய்ய இயலாவிடில், மற்றவனை இக்கட்டில் மாட்டும் வேலை பார்க்காமல்..... ஒதுங்குவதே சம்பந்தனுக்கு சிறப்பு.

ஸ்ரேசன் மாஸ்டர் கொடி காட்டுவது போல் உள்ளது.

இந்த மக்கு மண்டைகளை நம்பி எங்கட தேசியத்தலைவர் விட்டிட்டு போகலை .

புலிகளின் அருமை தெரியாதவர்கள் இப்ப அறியலாம் இந்த கேவலம் கெட்ட

பழசுகளை . பார்ப்பம் எத்தனை நாளுக்குத்தான் காமெடி பண்ணுறாங்கள் என்று

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=102109

இவரைத் தேசித்தலைவர் என்ற சொன்ன வழதியும் சரவணபவனும் எங்கே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.