Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம் 05

Featured Replies

பூரி

IMG_2479.JPG

நான் 2010ல் இந்தியாவில் நிற்கும்பொழுது எனது மச்சினிச்சி சொல்லித் தந்தது . உண்மையில் இது எமது பாரம்பரிய சமையல் இல்லை . ஆனாலும் எனக்கு இது வித்தியாசமாக இருந்தது .

தேவையான சாமான்கள் :

கோதுமை மா 2 சுண்டு ************* .

ஆட்டா மா 1 சுண்டு .

ரவை கால் சுண்டு .

உப்பு ( தேவையான அளவு ) .

வெண்ணை அல்லது மாஜரின் 100 கிறாம் .

எண்ணை 1 லீற்ரர் .

பக்குவம் :

கோதுமை மா , ஆட்டாமா , ரவை , உப்பு , வெண்ணை ஆகியவற்றை தண்ணி விட்டு இறுக்கமாக கையில் ஒட்டாதவாறு பிசைஞ்சு சிறிய உருண்டைகளாக உருட்டி வையுங்கள் . உருட்டிய உருண்டைகளை தட்டையாகத் தட்டி பூரிக்கட்டையால் வட்டமாகவோ , சதுரமாகவோ விரும்பிய வடிவங்களில் உருட்டி வையுங்கள் . தாச்சியில் எண்ணையை விட்டு நன்றாக எண்ணை கொதித்ததும் , உருட்டிய பூரியை இரண்டு பக்கமும் பொரியுங்கள் . ( அப்பளம் பொரிப்பது போல ) அப்பொழுது பூரி பொங்கி வந்ததும் பூரியை இறக்குங்கள் .

படிமானம் :

உருளைக்கிழங்குப் பிரட்டல் , பருப்பு , சம்பல் , இதில் ஏதாவது ஒன்றுடன் சாப்பிடுங்கோ . சொல்லி வேலையில்லை .

******** சுண்டு = ரின்பால்பேணி .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

ர‌வையை பச்சையாகப் போடுவார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

பூரி, உருளைக்கிழங்கு மசாலா

சுவையான பூரி, உருளைக்கிழங்கு மசாலா செய்வதற்கான எளிய குறிப்பு.

Poori-300x220.jpg

தேவையான பொருட்கள்

  • கோதுமை மாவு – 2 கப்
  • தண்ணீர் – 1/4 – 1 /2 கப்
  • உப்பு – 1 /2 தேக்கரண்டி
  • எண்ணெய்

மசாலா தயாரிக்க

  • உருளைக்கிழங்கு – 3
  • பெரிய வெங்காயம் – 1
  • பச்சை மிளகாய் – 4
  • இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
  • கடுகு – 1 /2 தேக்கரண்டி
  • கருவேப்பிலை – சிறிது
  • உப்பு

பூரி செய்முறை

  • கோதுமை மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் 2 தேக்கரண்டி எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  • பின் தண்ணீர் சேர்த்து கெட்டியாக நன்கு பிசைந்து கொள்ளவும். சப்பாத்தி மாவு பதத்தை விட கெட்டியாக இருக்க வேண்டும்.
  • பிசைந்தவுடன் உடனடியாக பூரி செய்ய வேண்டும். அதிக எண்ணெய் இல்லாமல் பூரி செய்ய வேண்டும் எனில், மாவு பிசைந்தவுடன் பூரி போட வேண்டும்.
  • சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பூரி கட்டையை பயன்படுத்தி தட்டையாக, சிறிது தடிமனாக தேய்த்துக் கொள்ளவும்.
  • பூரி சிறிது தடிமனாக இருக்க வேண்டும். மெல்லிசாக இருக்கக் கூடாது.
  • பூரி பொரிப்பதற்கு தேவையான எண்ணையை கடாயில் ஊற்றி சூடு செய்யவும்.எண்ணெய் சூடானதும், பூரியை போடவும்.
  • பூரி அடியில் இருந்து மேலே வரும் போது, பூரியை கரண்டியால் எண்ணைக்குள் அமிழ்த்தினால் பூரி உருண்டையாக வரும்.
  • பூரியை மறுபுறம் திருப்பி லேசாக பொன்னிறமானதும் எடுத்து விடவும்.

மசாலா செய்முறை

  • உருளைக்கிழங்கு தோலை சீவி விட்டு, 3 அல்லது 4 துண்டுகளாக நறுக்கி குக்கரில் போட்டு 3 விசில்கள் வரை வேக விடவும்.
  • வேக வைத்த உருளைகிழங்கை லேசாக மசித்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளிக்கவும். கடுகு வெடித்ததும் கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பின் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு,மஞ்சள்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து மூடி போட்டு இரண்டு நிமிடங்கள் வேக வைக்கவும்.

குறிப்பு

அதிக மசால் வேண்டும் எனில் கடலை மாவை தண்ணீரில் கரைத்து மசாலில் ஊற்றி கொதிக்க விடவும் அல்லது பொட்டுக்கடலையை அரைத்து, மசாலில் ஊற்றி கொதிக்க விடவும்.

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

வாவ்..கீல வெடக்னா செப்....மிக்க நன்றிகள்...இப்பிடி எங்களை மாதிரி தனி ஆக்களுக்கு உதவுற மாதிரி தொடர்ந்து சமையல் குறிப்புக்களா எழுதிக் குவியுங்கோ அண்ணை..அப்புறம் கலியாணம் கட்டிட்டு விதம்விதமா சமைத்துக் காட்டி வாறவள்கிட்ட நல்லபேர் வாங்கவேணும்.. :D விபரமா இணைச்ச தமிழரசு அண்ணாவுக்கும் நன்றிகள்...

  • கருத்துக்கள உறவுகள்

..அப்புறம் கலியாணம் கட்டிட்டு விதம்விதமா சமைத்துக் காட்டி வாறவள்கிட்ட நல்லபேர் வாங்கவேணும்.. :D

எப்படி இருந்தனாங்கள்

இப்படி ஆகிட்டமே......??? :lol::D :D

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி இருந்தனாங்கள்

இப்படி ஆகிட்டமே......??? :lol::D :D

வீட்டிலை பொறுப்புகளிலை ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை இருக்கணும் என்பது என் கொள்கை அண்ணா.. :) பெண்களை அடுப்படிக்குள் முடக்கிவிடும் மடமையை கொழுத்துவதை எங்கள் வீட்டுகளில் இருந்தே ஆரம்பிப்போம்..

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு படங்களிலும் இருக்கும் பூரியில் எந்தப்பூரி சரியானது? :)

இணைப்பிற்கு நன்றி கோமகன் , தமிழரசு

பூரி ஊரில் இருக்கும் பொது இரண்டு முறை தான் சாப்பிட்டுள்ளேன். அதுக்கும் எனது பள்ளி நண்பன் ஒருவனது வீட்டில். எனது வீட்டில் ஒருமுறையும் செய்ததில்லை. அதனால் எனக்கு செய்முறை தெரிந்திருக்கவில்லை.

கோமகனின் கரட் சட்னியை செய்துபோட்டு அதற்கு தோதாக என்ன செய்யலாம் என யோசித்து போட்டு Quick & Easy vegetarian recipes from around the world for western kitchens எனும் சமையல் குறிப்பு புத்தகத்தில் பூரி செய்முறை தட்டுப்பட்டது. சரி செய்து தான் பார்ப்போமே என்று முதல் முறையாக செய்தது தான் இது.

puri.jpg

எமது ஊர் சமையல் குறிப்புக்கள் யார் சமையல் குறிப்பை சொல்கிறார்கள் என்பதுக்கேற்ப மாறுபடும். அந்தவகையில் இது மேலே சொன்ன இரண்டு குறிப்புகளிலும் வேறுபட்டிருந்தாலும் இறுதியில் கிடைத்தது சுவையான பூரி :) .

தேவையான பொருட்கள்

சாதாரண கோதுமை மா அல்லது ஆட்டா மா - 250 கிராம் / 2 கப் (1 கப் என்பது 250 மில்லி லிட்டர் கொள்ளளவு உள்ள அளவு கரண்டி)

நீர் - 8 மேசை கரண்டி

எண்ணை - பொரிக்க மற்றும் மா குழைக்க

உப்பு - சுவைக்கு ஏற்றப

செய்முறை.

1 மாவை உப்பு, 2 மேசைக்கரண்டி எண்ணை, நீர் சேர்த்து நன்கு பிசையவும்.

2 பிசைந்த மாவை உருண்டையாக்கி, ஈரத்துணியால் 5 - 10 நிமிடம் மூடி வைக்கவும்.

3 சிறிய (25 சத குத்தியின் விட்டமுடைய) உருண்டைகளை செய்து உருட்டு கட்டையால் மிக மெல்லியதாக உருட்டவும் (3 இஞ்சி விட்டம்)

4 எண்ணையை கொதிக்கவைத்து ஒவ்வொன்றாக பொன்னிறமாக வரும்வரை பொரித்து எடுக்கவும். (பொங்கி வருவதற்கு பூரியை எண்ணையில் சிறிது நேரம் அமுக்கி வைத்திருக்க வேண்டும்.)

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி குளக்கோட்டான்

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன்,இது எல்லாம் உங்கள் கண்டு பிடிப்பா?

நன்றி கோமகன் அண்ணா ,

இரண்டு தடவை செய்துள்ளேன் , தனிய கோதுமை மாவிலே , வேறு மாவை கலக்க வில்லை . பூரி போல இல்லாமல் ரொட்டி போல இருந்தது. குளிர் தண்ணியிலா , இளம் சூடான தண்ணியிலா குழைக்க வேணும் .

ரப்பர் போல கடினமா இருக்கிறதுக்கு என்ன காரணம் .

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் செஃf பட்டத்தை யாரிடம் பெற்றீர்கள். அந்த, பட்டயத்தை இணைக்க... முடியுமா?

நன்றி கோமகன் அண்ணா ,

இரண்டு தடவை செய்துள்ளேன் , தனிய கோதுமை மாவிலே , வேறு மாவை கலக்க வில்லை . பூரி போல இல்லாமல் ரொட்டி போல இருந்தது. குளிர் தண்ணியிலா , இளம் சூடான தண்ணியிலா குழைக்க வேணும் .

ரப்பர் போல கடினமா இருக்கிறதுக்கு என்ன காரணம் .

நான் தனியே கோதுமை மாவிலேயே செய்தேன். நன்றாக பொங்கி வந்தது. மா வுக்கு நீர் சேர்க்கும் பொது அது சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். அறை வெப்பநிலையில் உள்ள நீரிலேயே மா குழைத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி குளக்கோட்டான்

என்னது கோட்டானா? :rolleyes: செட்டை இருக்குமா இவருக்கு??!! :D

  • கருத்துக்கள உறவுகள்

என்னது கோட்டானா? :rolleyes: செட்டை இருக்குமா இவருக்கு??!! :D

அதன் குளம்பு ருசியாக இருக்கும் :lol::D :D

நான் தனியே கோதுமை மாவிலேயே செய்தேன். நன்றாக பொங்கி வந்தது. மா வுக்கு நீர் சேர்க்கும் பொது அது சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். அறை வெப்பநிலையில் உள்ள நீரிலேயே மா குழைத்தேன்.

நன்றி குளக்கோட்டன் ,

3 இஞ்சி விட்டம் என்றால் அப்பளம் போல சின்னனா இருக்கும் ?

நன்றி குளக்கோட்டன் ,

3 இஞ்சி விட்டம் என்றால் அப்பளம் போல சின்னனா இருக்கும் ?

ஏன் உங்களிடம் ஒரு அடி மட்டம் அல்லது அளவு நாடவும் இல்லையா :D

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி குளக்கோட்டான்

மன்னிக்க வேண்டும் குளக்காட்டான் உங்கள் பெயரைப் பிழையாக எழுதியதற்கு

என்னது கோட்டானா? :rolleyes: செட்டை இருக்குமா இவருக்கு??!! :D

இசைக்கு வரவர சேட்டை கூடிப் போச்சு :lol:

  • தொடங்கியவர்

ர‌வையை பச்சையாகப் போடுவார்களா?

பச்சையாகத்தான் ரவையைப் போட வேண்டும் ரதி .

பூரி, உருளைக்கிழங்கு மசாலா

சுவையான பூரி, உருளைக்கிழங்கு மசாலா செய்வதற்கான எளிய குறிப்பு.

Poori-300x220.jpg

தேவையான பொருட்கள்

  • கோதுமை மாவு – 2 கப்
  • தண்ணீர் – 1/4 – 1 /2 கப்
  • உப்பு – 1 /2 தேக்கரண்டி
  • எண்ணெய்

மசாலா தயாரிக்க

  • உருளைக்கிழங்கு – 3
  • பெரிய வெங்காயம் – 1
  • பச்சை மிளகாய் – 4
  • இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
  • கடுகு – 1 /2 தேக்கரண்டி
  • கருவேப்பிலை – சிறிது
  • உப்பு

பூரி செய்முறை

  • கோதுமை மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் 2 தேக்கரண்டி எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  • பின் தண்ணீர் சேர்த்து கெட்டியாக நன்கு பிசைந்து கொள்ளவும். சப்பாத்தி மாவு பதத்தை விட கெட்டியாக இருக்க வேண்டும்.
  • பிசைந்தவுடன் உடனடியாக பூரி செய்ய வேண்டும். அதிக எண்ணெய் இல்லாமல் பூரி செய்ய வேண்டும் எனில், மாவு பிசைந்தவுடன் பூரி போட வேண்டும்.
  • சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பூரி கட்டையை பயன்படுத்தி தட்டையாக, சிறிது தடிமனாக தேய்த்துக் கொள்ளவும்.
  • பூரி சிறிது தடிமனாக இருக்க வேண்டும். மெல்லிசாக இருக்கக் கூடாது.
  • பூரி பொரிப்பதற்கு தேவையான எண்ணையை கடாயில் ஊற்றி சூடு செய்யவும்.எண்ணெய் சூடானதும், பூரியை போடவும்.
  • பூரி அடியில் இருந்து மேலே வரும் போது, பூரியை கரண்டியால் எண்ணைக்குள் அமிழ்த்தினால் பூரி உருண்டையாக வரும்.
  • பூரியை மறுபுறம் திருப்பி லேசாக பொன்னிறமானதும் எடுத்து விடவும்.

மசாலா செய்முறை

  • உருளைக்கிழங்கு தோலை சீவி விட்டு, 3 அல்லது 4 துண்டுகளாக நறுக்கி குக்கரில் போட்டு 3 விசில்கள் வரை வேக விடவும்.
  • வேக வைத்த உருளைகிழங்கை லேசாக மசித்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளிக்கவும். கடுகு வெடித்ததும் கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பின் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு,மஞ்சள்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து மூடி போட்டு இரண்டு நிமிடங்கள் வேக வைக்கவும்.

குறிப்பு

அதிக மசால் வேண்டும் எனில் கடலை மாவை தண்ணீரில் கரைத்து மசாலில் ஊற்றி கொதிக்க விடவும் அல்லது பொட்டுக்கடலையை அரைத்து, மசாலில் ஊற்றி கொதிக்க விடவும்.

எனது பதிவை மேலும் மெருகுபடுத்தியதிற்கு மிக்க நன்றிகள் தமிழரசு .

நான் தனியே கோதுமை மாவிலேயே செய்தேன். நன்றாக பொங்கி வந்தது. மா வுக்கு நீர் சேர்க்கும் பொது அது சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். அறை வெப்பநிலையில் உள்ள நீரிலேயே மா குழைத்தேன்.

மிக்க நன்றிகள் குளக்காட்டான் விளக்கத்திற்கு .

கருத்துக்கள் இட்ட இசை , சுடலைமாடன் , விசுகர் , மற்றும் தமிழ்சிறிக்கும் மிக்கநன்றிகள் .

  • கருத்துக்கள உறவுகள்

எனது பதிவை மேலும் மெருகுபடுத்தியதிற்கு மிக்க நன்றிகள் தமிழரசு .

நன்றி சகோதரா

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டிலை பொறுப்புகளிலை ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை இருக்கணும் என்பது என் கொள்கை அண்ணா.. :) பெண்களை அடுப்படிக்குள் முடக்கிவிடும் மடமையை கொழுத்துவதை எங்கள் வீட்டுகளில் இருந்தே ஆரம்பிப்போம்..

நீங்கள் இப்பதான் ஆரம்பிக்க போறீங்களா :rolleyes: அவர்கள் ஆரம்பித்து கன காலம் ஆகிவிட்டது :D

  • கருத்துக்கள உறவுகள்

பச்சையாகத்தான் ரவையைப் போட வேண்டும் ரதி .

எனது பதிவை மேலும் மெருகுபடுத்தியதிற்கு மிக்க நன்றிகள் தமிழரசு .

மிக்க நன்றிகள் குளக்காட்டான் விளக்கத்திற்கு .

கருத்துக்கள் இட்ட இசை , சுடலைமாடன் , விசுகர் , மற்றும் தமிழ்சிறிக்கும் மிக்கநன்றிகள் .

நன்றி கோமகன் நேரம் கிடைக்கும் போது செய்து பார்க்கிறேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.