Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத்தீவில் தனிநாடு அமைவதற்கு அனைத்துலக ஆதரவு இல்லையாம் – எரிக் சொல்கிறார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

eric-100x100.jpg

இலங்கைத்தீவில் தனிநாடு அமைவதற்கு அனைத்துலக சமூகம் ஆதரவு அளிக்கப்போவதில்லை. தமிழ் மக்களின் வரலாற்று வாழ்விடங்களான வடக்குக் கிழக்கிற்கு சுயாட்சித் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதில் அனைத்துலக மட்டத்தில் பெரும் ஆதரவு நிலவுகின்றது. அதே கருத்தினையே நானும் கொண்டிருக்கின்றேன் என்று நோர்வேயின் முன்னாள் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல் ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

போர் முடிவுற்ற மூன்று ஆண்டுகளின் பின்னரான இலங்கைத்தீவு’ எனும் தலைப்பில் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நேற்று முன்னாள் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கருத்தரங்கிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவின் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுயாட்சி அதிகாரங்களை ஒத்ததான அரசியல்த் தீர்வுக்கு அனைத்துலக மட்டத்தில் பெருமளவு ஆதரவு நிலவுகின்றது. மீண்டுமொரு ஆயுதப் போர் தொடங்குமானால் அனைத்துலக ஆதரவு துளியளவிற்கும் அற்றுப் போய்விடும்.

தமிழ் மக்கள் பாரிய அழிவுக்கு முகம் கொடுத்துள்ளனர். அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் தற்போதைய ஆட்சியாளர்களே தமிழ் மக்களை நோக்கி நேசக்கரம் நீட்டவேண்டுமென்ற பரவலான கருத்து அனைத்துலக மட்டத்தில் நிலவுகின்றது.

போரின் இறுதிக்கட்ட அவலங்களுக்குரிய பொறுப்பு கொழும்பிடம் உள்ளது. பிரபாகரனும் அந்த அவலங்களைத் தவிர்ப்பதற்கு முனையவில்லை.

2000ஆம் ஆண்டில் ஆனையிறவு படைத்தள வெற்றியை அடுத்து, படைபலத்தில் விடுதலைப்புலிகள் உச்சநிலையில் இருந்த போது சமாதான முயற்சிகள் தொடங்கப்பட்டது. இப்புறநிலையில் சமாதானப் பேச்சுகளைச் சாதகமாகக் கையாண்டிருப்பின் கூட்டாட்சித் தீர்வினை எட்டியிருக்க முடியும்.

கூட்டாட்சித் தீர்வு பற்றி ஆராய்வதைத் தட்டிக் கழித்தமை, அனைத்துலக சமூகத்திடமிருந்து தம்மைத் தனிமைப்படுத்தியமை, இராணுவத் தீர்வில் நம்பிக்கை கொண்டிருந்தமை ஆகியன விடுதலைப் புலிகளின் தலைவர் இழைத்த தவறுகள் என விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது எரிக் சொல்கெய்ம் விமர்சனங்களை முன்வைத்தார்.

அதேவேளை அனைத்துலக சமூகமும் விடுதலைப் புலிகளைத் தனிமைப்படுத்தியது. அனைத்துலக சமூகம் அவர்களுடன் தொடர்புகளைப் பேணியிருக்க வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைத்தீவின் தற்போதைய சூழ்நிலையில் மாற்றங்களைக் காண்பதற்கு காலம் எடுக்கும். அனைத்துலக சமூகம் அக்கறை செலுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதல் இடங்களில் இல்லை. உலக பொருளாதார நெருக்கடியும், ஆப்கானிஸ்தான், சிரியா, லிபியா, எகிப்த் மற்றும் மத்திய கிழக்கு முரண்பாடுகளுமே அனைத்துலக சக்திகளின் அதீத கவனக்குவிப்பிற்குரிய பட்டியலில் முதலிடங்களில் உள்ளன.

தமிழர்களின் அரசியலுக்குரிய தலைமை இலங்கையைத் தளமாகக் கொண்டிருக்க வேண்டும். புலம்பெயர் தமிழர்கள் அதற்கு உறுதுணையாக இருக்க முடியுமே தவிர தலைமை தாங்க முடியாது. தற்போதைய சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக விளங்குகின்றது.

http://www.saritham.com/?p=59922

நல்ல கருத்துகள் . யாரும் திட்டி எழுதவில்லை ஏனோ

எமது பிரச்சனைகளில் நேரடியாகப் பங்கேற்றவர் என்றமுறையில் மேலும் பல உண்மைகளை அவர் அறிவார். ஒரு நடுநிலையனாக இருந்து எல்லாப்பக்க தவறுகளையும் கூறுவாரானால் எமது எதிர்கால சந்ததிக்கு பெரும் வழிகாட்டுதலாக அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்

உலக பொருளாதார நெருக்கடியும், ஆப்கானிஸ்தான், சிரியா, லிபியா, எகிப்த் மற்றும் மத்திய கிழக்கு முரண்பாடுகளுமே அனைத்துலக சக்திகளின் அதீத கவனக்குவிப்பிற்குரிய பட்டியலில் முதலிடங்களில் உள்ளன. - உண்மைதான்

தனது கையாலாகாத தனத்தால் தமிழினப் படுகொலைக்கு துணைபோன எரிக் சொல்ஹைம் முழுப் பூசணியை சோற்றில் மறைக்க முயல்வது ஒரு வஞ்சகனை நினைவு படுத்துகிறது!

காசு தான் கடவுளப்பா .... கடவுள்ளுகும் அது தெரியும் ............ :D

  • கருத்துக்கள உறவுகள்

எமது பிரச்சனைகளில் நேரடியாகப் பங்கேற்றவர் என்றமுறையில் மேலும் பல உண்மைகளை அவர் அறிவார். ஒரு நடுநிலையனாக இருந்து எல்லாப்பக்க தவறுகளையும் கூறுவாரானால் எமது எதிர்கால சந்ததிக்கு பெரும் வழிகாட்டுதலாக அமையும்.

தமிழர்களை முள்ளிவாய்க்கால் வரைக்கும் கொண்டு சென்று கொலைசெய்த

முக்கிய பங்காளி அண்ணர் சொல்கெயிம்தான்.

அவரிடம் இருந்தும் தமிழர்கள் உண்மைகளை எதிர்பார்கின்றனர்??????????

நல்ல கருத்துகள் . யாரும் திட்டி எழுதவில்லை ஏனோ

ஏங்க நம்ம கலைஞரி சர்வதேச லெவலில இல்லீங்களா...?? ஏதோ நீங்க சொல்லிறீங்க நங்க கேக்கிறம்...

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியக் கொல்லரசின் இரும்புக் கரங்களின் பிடியிலிருந்து, இவர் இன்னும் விடுபடவில்லை என்பதையே, இவரது கருத்துக்கள் காட்டுகின்றன!

இன்னுமொரு போராட்டம் வந்தால், இப்போதிருக்கும் சர்வதேச ஆதரவும் இல்லாமல் போய் விடுமாம்!

வேட்டியைக் கழட்டித் தலைப் பாகையாகக் கட்டச் சொல்லுகின்றார், இந்த ராஜ தந்திரி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியக் கொல்லரசின் இரும்புக் கரங்களின் பிடியிலிருந்து, இவர் இன்னும் விடுபடவில்லை என்பதையே, இவரது கருத்துக்கள் காட்டுகின்றன!

இன்னுமொரு போராட்டம் வந்தால், இப்போதிருக்கும் சர்வதேச ஆதரவும் இல்லாமல் போய் விடுமாம்!

வேட்டியைக் கழட்டித் தலைப் பாகையாகக் கட்டச் சொல்லுகின்றார், இந்த ராஜ தந்திரி!

அவர் ஒவ்வருமுறையும் புலிகளையும் அரசபிரதிநிதிகளையும் சந்தித்து விட்டு ஓடோடிபோய் இந்தியாவுக்கு சொல்லிப்போட்டுதானே நோர்வேக்கே போறவர் அவர் அவ்வளவு இந்திய விசுவாசம் :D :icon_mrgreen:

தமிழர்களை முள்ளிவாய்க்கால் வரைக்கும் கொண்டு சென்று கொலைசெய்த

முக்கிய பங்காளி அண்ணர் சொல்கெயிம்தான்.

அவரிடம் இருந்தும் தமிழர்கள் உண்மைகளை எதிர்பார்கின்றனர்??????????

இவரை விட்டால் இரத்தின ஸ்ரீயும் , G L பீரிசும் வந்து சொன்னால் தான் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

தெரிந்தோ, தெரியாமலோ தமிழ் மக்களின் ஓரளவு ஆதரவைக் கடந்தகாலங்களில்பெற்ற்வர் எனும் அபிப்பிராயத்தை தன்னகத்தே கொண்டுள்ளவர் எரிக் அவர்கள். மேற்குலகுக்கும் தமிழர் விரோத தேசமாம் இந்தியாவுக்கும் தமிழர்தரப்பைவிட மிகவும் வேண்டப்பட்டவர். அங்கீகரிக்கப்பட்டஒரு அரசின் பிரதிநிதி, சர்வதேச 7/24 ஊடகங்கள் இவர் சொல்வதை உடனே செய்தியாக்கும்வண்ணம் அதிகாரமுள்ளவர். இப்படிபட்டவரை வைத்தே புலம்பெயர் தமிழர்களுக்கு ஒரு குட்டு வைக்கவெண்டும் அதுவும் சரியான தருணத்தில், தமிழர்கள் உணர்வுபூர்வமாக இருக்கும்வேளையில், அதற்கான அதி உச்ச தருணம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தற்காலம், அவ்வேளையில் இதைச் சொன்னால் புலம்பெயர் தமிழருக்கு பொசுகென்று காத்து இறங்கிவிடும், பிறகு தமது திருவிளையாடல்களைச் செய்யலாம் இதுவே இவர்களது குறி, தமிழா விதி இவ்வடிவத்திலும் உனைப் பாம்பாக விழுங்கப்பார்க்கும் அயர்ச்சி அடையாதே தூ என இவரது மூஞ்சியில் காறித்துப்பிவிட்டு முன்னேறு தூரம் அதிகமில்லை.

இந்தியக் காட்டுமிராண்டிகளின் நிரந்தர கைக்கூலியாக மாறிவிட்டாரோ?

முன்பு இந்தியப் பயங்கரவாதிகள் மேற்குலகை ஏமாற்றி தமிழினப் படுகொலைகளை செய்ய துணை நின்ற முட்டாள் எரிக் சொல்ஹைம்.

புஸ்காலத்து சமாதானம் பேசிய ஐவரில் சொல்லெயும் இன்னமும் மாறமல் இலங்கை அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறார். புஸ்சே அந்த வகை சமாதானத்திலிருந்து விலகி ஓய்வெடுக்கிறார். சொல்லெயும் மட்டும் புஸ்ஸின் சமாதான முயற்சிகளை இன்னமும் தொடர்கிறார். ஆனல் நோர்வேயுக்கு நன்றி, மாற்றமுடியதவர்களை மாற்றி இளம் தலைமுறைகளுக்கு இடம் கொடுத்துவிட்டர்கள். இனிமேல் நேரம் கிடைக்கும் என்பதால் சொல்லெயும் இலங்கைச் சரித்திரத்தை வாசித்து இலங்கையுடன் சமாதானம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் ஒரு இலக்குடனேயே வந்தார்கள், முதலாவது புலிகளின் இராணுவ பலத்தை குறைத்து இராணுவ சமநிலையை பேணுவது, ஏனெனில் புலிகள் ஆனையிரவு வீழ்சியுடன் சமநிலைல் மேவி இருந்தனர், அதை கருணாவின் பிளவு, சில மேற்கு நாடுகளின் தடை, மற்றும் வெளிதெரியாத இராணுவ, உளவு தடைகள் மூலம் செய்தனர். புலிகள் இந்த சமிக்கைகளை புரிந்து கொண்டாலும் சரியான எதிர் வினையற்றவில்லை என்ற முறைப்பாடு தொடர்ந்து அவர்களால் செய்யபட்டது. சமாதான காலத்தை நாங்கள் சரியாக பயன்படுத்தமையே எங்களின் தோல்விக்கான காரணம்.

ஐக்கிய நாடுகள் சபை செயலராக சொல்ஹேம் வரும் சாத்தியம் இருப்பதால், பயன்படுத்துவோம் .....

Edited by Malaiyan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னமோ இவர்களின் பேச்சை கேட்டதால்த்தான் இன்று இந்த நிலை போல உள்ளது :rolleyes:

அறிவுரை யார் வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனால் அனுபவிப்பது எங்கள் மக்கள் தானே :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.