Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'தமிழ் ஈழம்' கண்ட பிறகு தான் உயிர் விடுவேன்-கருணாநிதி ஆவேசம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருவாரூர்: "இலங்கையில் தனித் தமிழ் ஈழம் அமைவதை கண்டு விட்டு உயிர் விட, நான் தயாராக இருக்கிறேன். அப்போது தான் எனக்கு நிம்மதி. தமிழ் ஈழம் பிறக்க, காண்பதற்காக உயிர் விட வேண்டுமென்றாலும் அதற்கும் நான் தயார்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.

திருவாரூரில் நேற்றிரவு நடந்த தன் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது:

தேர்தல் பருவ காலத்தில் சூறாவளி வீசும். தேர்தலில் தோல்வியடைந்தாலும் இந்த இயக்கம் தோற்று விட்டதாக அர்த்தம் அல்ல. தி.மு.க.,வுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பது மன உறுதி, சுயமரியாதை, தன்மான உணர்வு இருக்கும் வரை, அரசியல் ரீதியாக பெறும் வெற்றிகள் பெரிதல்ல. தோற்றாலும், வென்றாலும் உங்களுடன் தான் இருப்போம். அமைச்சராக இருந்தாலும், உங்களால் அடிமைகளாக ஆக்கப்பட்டாலும், சிறையிலே அடைத்தாலும் பயந்து கொண்டு எங்கள் கொள்கைகளை மாற்றிக்கொள்ள மாட்டோம். இந்தி எதிர்ப்பு போராட்டத்தை என்றைக்கோ நடத்தியது என்று அல்ல. தமிழ் உணர்வை வளர்க்க, தமிழர்களுக்கு தனி உரிமை சுயமரியாதை ஏற்பட, இன்று வரை பணியாற்றும் இயக்கம்; சிரஞ்சீவி இயக்கம். சிரஞ்சீவி இயக்கம் என்றால், சாவு கிடையாது; அழிவு கிடையாது. எனக்கு அடுத்த ஜென்மத்தில் நம்பிக்கை இல்லை. ஆளுகிறவருக்கு நம்பிக்கை உண்டு. அடுத்த ஜென்மத்தில் அவர்களுக்கு கூலி கிடைக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

ஒருவர் குண்டா இருந்தால் போதும், அவர் மீது குண்டர் சட்டம் பாய்கிறது. எதிர்காலத்தில் எத்தனை பேர் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும்? நான் யாரையும் கேலி செய்யவில்லை. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீர்கள். ஜனநாயகத்தில் எல்லாரையும் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். சட்டசபையில் என் சக்கரவண்டி செல்ல இடமில்லாத சூழ்நிலையை ஆட்சியாளர் ஏற்படுத்தியதால், நான் வெளியே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அரசியல் நாகரிகம் இன்று இல்லை.

இலங்கைத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க, இந்திய அரசை வற்புறுத்துவோம்; நெருக்கடி கொடுத்து வலியுறுத்துவோம். உலகக் கவனத்தை திருப்பும் முயற்சிகளின் அடையாளமாக, விழுப்புரத்தில் ஆகஸ்ட் 5ம் தேதி, "டெசோ' மாநாடு நடக்கிறது. ஈழத்தமிழர்களின் உரிமைகள் வென்றெடுக்க, உத்தரவாதம் கிடைக்க மாநாடு நடத்த உள்ளோம். சில ஆண்டுகளுக்கு முன், ஈழத்தமிழர் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட, "டெசோ' இயக்கம் இடையே நின்று போனது. அது ஏன்? என்று விவாதிக்க விரும்பவில்லை. குசோவா, தெற்கு சூடான், கிழக்கு தைமூர் தனி நாடாக பிரகடனப்படுத்த ஐ.நா., வாக்கெடுப்பு காரணமாக அமைந்தது. அதை பயன்படுத்தி இலங்கையில் தனித் தமிழ் ஈழம் பிறக்க, வாக்கெடுப்பு நடத்த உருவாக்கக்கூடிய வழியை இந்த மாநாடு மூலம் வலியுறுத்துவோம்.

இலங்கையில் வாக்கெடுப்பு நடக்கும்போது, அதில் பங்கேற்று ஓட்டளிக்க வெளிநாடு தமிழர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற தீர்மானம், அந்த மாநாட்டில் நிறைவேற்றப்படும். இலங்கைத் தமிழர்கள் கண்ட, நீண்ட கால கனவு நிறைவேற, தமிழ் ஈழம் உருவாக வேண்டும். அதை நாம் காண வேண்டும். அதை கண்டு விட்டு உயிர்விட நான் தயாராக இருக்கிறேன். அப்போது தான் எனக்கு நிம்மதி. தமிழ் ஈழம் பிறக்க, காண்பதற்காக உயிர் விட வேண்டுமென்றாலும் அதற்கும் நான் தயார். :lol:

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

http://www.dinamalar...l.asp?Id=485920

  • கருத்துக்கள உறவுகள்
:( :( :(
  • கருத்துக்கள உறவுகள்

இவர் இன்னும் இருந்து கிடைக்கின்றதையும் இல்லாமல் செய்யப்போகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க, இந்திய அரசை வற்புறுத்துவோம்; நெருக்கடி கொடுத்து வலியுறுத்துவோம். உலகக் கவனத்தை திருப்பும் முயற்சிகளின் அடையாளமாக, விழுப்புரத்தில் ஆகஸ்ட் 5ம் தேதி, "டெசோ' மாநாடு நடக்கிறது. ஈழத்தமிழர்களின் உரிமைகள் வென்றெடுக்க, உத்தரவாதம் கிடைக்க மாநாடு நடத்த உள்ளோம்.

Tamil eelam "sappattu" Association..

மனத்தோடு போராடி போனவர்கள் போய்ட்டார்கள் .. இதுங்க மானங்கெட்டு அவங்க ரத்தத்தில் சாப்பிட அலையுதுகள்.. இவன் 93 வயது வரைக்கும் உயிரோட இருப்பானாம்..

டிஸ்கி:

தானை தலைவர் சொன்னது .. "விடுதலைக்கு கால நிர்யணம் செய்ய முடியாது.." தலைவருக்கு ஏன் இப்படி ஒரு சிந்தனை தோன்றி இருக்க வேண்டும் என்றால்...

இந்த மாறி தறுதலையை பார்த்துத்தான்.. :o :o

மரண பயம் வந்து விட்டது கிளட்டுக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவன் தமிழ் ஈழத்திற்கு மட்டும் அல்ல, தமிழ் இனத்திற்கே கோடாரி காம்பு, இது செத்து ஒழிந்து இருந்தாலே தமிழீழம் கிடைத்து இருக்கும். இன்றளவும் இந்த தரித்திரம் நம்மை விட்டு ஒழிவதாய் இல்லை.

சனியன்,சகடை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.