Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கற்றாழை (Aloe vera)

Featured Replies

kattralai.jpg

(Aloe vera)

கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது. இயற்கையான மருத்துவப்பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும். கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எ...த்தனை மருத்துவக் குணங்கள்.

கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு.

இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.

கற்றாழை உலகம் பூராவும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறு கற்றாழை மட்டிலும் மருத்துவத்திற்கும், காஸ்மெட்டிக் பொருள் தயாரிப்பதிலும் முதலிடம் பெறுகிறது. சிறு கற்றாழை சோற்றுக் கற்றாழ என வழங்கப்படுகிறது.

சோற்றுக் கற்றாழ மடல்களப் பிளந்து நுங்குச் சுளை போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் 7- 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்தவேண்டும். கற்றாழையக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் வெறுட்டல் குணமும், கசப்பும் குறைந்துவிடும்.

தாம்பத்திய உறவு மேம்பட

சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும்.

கூந்தல் வளர

சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.

கண்களில் அடிபட்டால்

கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும்.

கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செயது; எடுத்துக்கொண்டு, இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும்.

குளிர்ச்சி தரும் குளியலுக்கு

மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரக்கிலோ தயாரித் ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனையக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும் ஆயில் ஆகும்.

முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.

ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் ‘உடனடி டாக்டர்’ கற்றாழைச் சாறுதான்.

இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.

தோலோடு கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து கை கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்து குளித்தால் உடல்பளபளப்பாகும். தோல் நோய் வராது. கற்றாழை கழியைத் தலை முடியில் தடவி சீவினால் மடி கலையாது. தலையின் சூடும் குறையும். உடல் குளிர்ந்து காணப்படும்.

பிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம். சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது. முகத்தின் சுருக்கங்களைப் போக்கி புத்துணர்ச்சியையும் இளமைப் பொலிவையும் தக்க வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக வடுக்கள் இருந்த சுவடு தெரியாமல் மறையும்.

கண்நோய் கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம்.

விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.

கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது.

தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.

நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு.

சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.

இந்த எண்ணெய் பெண்களின் மாதாந்திர ருதுவை ஒழுங்குபடுத்தும். கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்.

via fb

[size=4]உலகிலே அழகுசாதன பொருட்கள் உய்பத்தியில் முடிசூடா நாடாக இருக்கும் பிரான்ஸ் இந்த கற்றாழையை வைத்து பல பொருட்களை செய்கின்றது. பிரேசில் நாடில் பல பில்லியன்கள் டாலரை முதலீடு செய்துள்ளது.[/size]

[size=4]இந்தியாவில் கூட இதை வைத்து பல தொழில்வாய்ப்புக்களை உருவாக்குகின்றார்கள்: http://www.franchiseindia.com/business-opportunities/Health-Care-Fitness/Aloe-Verma/[/size]

[size=4]தாயக மக்களும் பயன்படுத்தலாம்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில நாங்கள் இருந்த இட‌த்திற்கு அங்கால ஒரு பெரிய வளவுக்குள் கற்றாழை செடிகள் இருந்தது ஆனால் நாங்கள் பாம்பு இருக்கும் என்பதால் கிட்டவும் போறதில்லை முதலே தெரிஞ்சிருந்தால் நான் உப்ப உலக அழகியாய் இருந்திருப்பன் :lol::D:rolleyes:

பகிர்வுக்கு நன்றி அபராஜிதன் அண்ணா. :)

வெளிநாடுகளில் aloe vera ஐ பயன்படுத்தி செய்யப்படும் facewash, bodywash, soap, facial cleansing wet tissue போன்றவற்றுக்கு தட்டுப்பாடில்லை. :)

ஊரில நாங்கள் இருந்த இட‌த்திற்கு அங்கால ஒரு பெரிய வளவுக்குள் கற்றாழை செடிகள் இருந்தது ஆனால் நாங்கள் பாம்பு இருக்கும் என்பதால் கிட்டவும் போறதில்லை முதலே தெரிஞ்சிருந்தால் நான் உப்ப உலக அழகியாய் இருந்திருப்பன் :lol::D

:lol: :lol:

ஆக்கள் இயற்கையில் வெள்ளையா இருந்து வெயிலுக்கு கறுத்திருந்தால் இதுகளை பூசி வெள்ளையா வரலாம். உலக அழகியும் ஆகலாம். :D அப்பிடி இல்லாட்டால் என்ன தான் பண்ணினாலும் நிறம் மாறாது. :lol: ஆனாலும் முகம் கொஞ்சம் shining ஆ வரலாம். :D

ரதி அக்கா இயற்கையில் வெள்ளையோ கறுப்போ தெரியேல்லை. :rolleyes:

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில நாங்கள் இருந்த இட‌த்திற்கு அங்கால ஒரு பெரிய வளவுக்குள் கற்றாழை செடிகள் இருந்தது ஆனால் நாங்கள் பாம்பு இருக்கும் என்பதால் கிட்டவும் போறதில்லை முதலே தெரிஞ்சிருந்தால் நான் உப்ப உலக அழகியாய் இருந்திருப்பன் :lol::D:rolleyes:

மிஸ் பண்ணியிட்டோம் :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி அபராஜிதன் அண்ணா.

வெளிநாடுகளில் aloe vera ஐ பயன்படுத்தி செய்யப்படும் facewash, bodywash, soap, facial cleansing wet tissue போன்றவற்றுக்கு தட்டுப்பாடில்லை. :)

ஆக்கள் இயற்கையில் வெள்ளையா இருந்து வெயிலுக்கு கறுத்திருந்தால் இதுகளை பூசி வெள்ளையா வரலாம். உலக அழகியும் ஆகலாம். :D அப்பிடி இல்லாட்டால் என்ன தான் பண்ணினாலும் நிறம் மாறாது. :lol: ஆனாலும் முகம் கொஞ்சம் shining ஆ வரலாம். :D

ரதி அக்கா இயற்கையில் வெள்ளையோ கறுப்போ தெரியேல்லை. :rolleyes:

தெரிஞ்சு என்ன பண்ணப் போறீங்கள் :D நீங்கள் என்ன பெடியனா இல்லைத் தானே :lol::icon_idea:

தெரிஞ்சு என்ன பண்ணப் போறீங்கள் :D நீங்கள் என்ன பெடியனா இல்லைத் தானே :lol::icon_idea:

தெரிஞ்சு நான் என்ன செய்யப்போறன்? பெடியனா இருந்தாலாவது சைட் அடிக்கலாம் :D ( (நீங்களும் பெண்ணா இருந்தால்). அது நான் தெரிந்து கொள்வதற்காக கேட்கவில்லை. :D (அது கேள்வியல்ல)

அப்படி நான் சொல்லாவிட்டால் "நான் இயற்கையில் வெள்ளை இல்லை என்று உங்களுக்கு யார் சொன்னது?" என்று என்னோட சண்டை பிடிக்க வந்து விடுவீங்கள். :lol: :lol: அது தான் முன் எச்சரிக்கை. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தாம்பத்திய உறவு மேம்பட

சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும்.

விசுகு, கவனமாக... நோட் பண்ணி வைக்கவும். :icon_idea::D

Edited by தமிழ் சிறி

விசுகு, கவனமாக... நோட் பண்ணி வைக்கவும். :icon_idea::D

அவர் குறைப்பதற்கு வழி தேடியதாக நினைவு! <_<

ஊரில நாங்கள் இருந்த இட‌த்திற்கு அங்கால ஒரு பெரிய வளவுக்குள் கற்றாழை செடிகள் இருந்தது ஆனால் நாங்கள் பாம்பு இருக்கும் என்பதால் கிட்டவும் போறதில்லை முதலே தெரிஞ்சிருந்தால் நான் உப்ப உலக அழகியாய் இருந்திருப்பன் :lol::D:rolleyes:

அப்பாடா , தப்பினோம். இப்பவே அலட்டல் தாங்க முடியல! :lol: .

(சும்மா பகிடிக்குத்தான் ரதி!)

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, கவனமாக... நோட் பண்ணி வைக்கவும். :icon_idea::D

அவருக்கு ஏற்கனவே 3 பிள்ளைகள் இருக்கிறார்கள் போதாதா :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்களில் அடிபட்டால்

கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும்.

கற்றாளை தோட்டம் வைக்கத்தான் இருக்கு :( நன்றி அபார்ஜிதன்!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு. நான் கற்றாளை துண்டுகள் விழுங்கியுள்ளேன் ஊரில், அத்துடன் கற்றாளை பூவை சிறு துண்டுகளாக வெட்டி சின்ன இறால்களுடன் சேர்ந்து வறுத்து அம்மா தருவா, நல்ல சுவை, சுவை & மருத்துவ குணங்களால் இங்கும் வளர்த்து வருகிறேன்,

இதுவரை நான்கு (கடந்த சனி ஒன்று) பூக்கள் வெட்டி வறுத்து சாப்பிட்டுள்ளேன்

பிகு; மனைவி & பிள்ளைகள் என்னை ஒரு வித ஐந்து மாதிரி பார்க்கின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன வயதில் சிறாம்பு விரலில் ஏறி எடுப்பது கஷ்டமாகிப் போய்விட்டது.. ஏற்கனவே ஒருமுறை அப்படியே விட்டு அது வீங்கி வில்லங்கமாகிப்போன அனுபவம் இருந்ததால், பெரியவர்களின் ஆலோசனைப்படி கற்றாழையின் உதவியை நாடினேன்.. :blink:

அதன் சதையை எடுத்து சிறாம்பு இருந்த இடத்திற்கு மேல் வைத்து துணியால் கட்டிவிட்டேன்.. இரண்டு நாட்களில் மேல் தோல் வெள்ளையாக சிறாம்புக்கு உட்பக்கமாக புதிய தோல் இருந்தது. :rolleyes: வலி எதுவும் வரவில்லை. மேல் தோலை எடுத்தபோது சிறாம்பு விழுந்துவிட்டது.. :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.