Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் யாரையும் லவ் பண்ணுறிங்களான்னு அறிய ஒரு சுய சோதனை....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் யாரையும் லவ் பண்ணுறிங்களான்னு அறிய ஒரு சுய சோதனை....

காதல்...! இதனை சொற்களால் வர்ணனை செய்வதை விட எங்களில் பலருக்கு தொட்டுணர்ந்த வல்லமையும், பட்டு நலிந்த சோகங்களும் உண்டு. சில சமயங்களில் வைரமுத்துவின் கவிவரிகள் எல்லாவற்றையும் மேவிய உணர்ச்சிகள் சிலவற்றையும் விதைத்துவிட்டு செல்லும் வல்லமை பொருந்தியவை.

நேற்று எனக்கு வந்த மின்னஞ்சலொன்று நாங்கள் யார் மீதும் காதல் வயப்பட்டுள்ளோமா என்பதை எக்ஸ்றே பிடித்துக்காட்டும் எனும் தலைப்பில் வந்தது. நானும் ஒரு தடவை சுயசோதனை செய்து பார்த்தேன். சோதனையில் வெற்றியா அல்லது தோல்வியா என்பது என்னுடனேயே இரகசியமாக இருக்க - இம்மின்னஞ்சலை வாசித்தபோது எனக்குள் ஏற்பட்ட எண்ணவோட்டங்கள், சிந்தனை மாற்றங்கள், விரிந்து கிடந்த எதிர்காலக் கனவுகள்... இவைகளும் உங்கள் மனவோட்டத்தில் திரையிடப்படும் எனும் நம்பிக்கையில் அம்மின்னஞ்சலை உங்களுடன் பகிர்கின்றேன்.

நீங்கள் யாரையும் காதலிக்கின்றீர்களா? கண்டு கொள்ள பன்னிரண்டு வழிகள்:

பன்னிரண்டாவது:

நித்திரையைத் தொலைத்த பின்னிரவுகளில் உங்கள் தொலைபேசி கரமெடுத்துக் கும்பிடாத குறையாக உங்களிடம் இறைஞ்சும். ஆனாலும், சார்ஜ் ஏற்றிக்கொண்டே அவளுடன் நீங்கள் இறைத்துக் கொண்டிருப்பீர்கள். அதிகாலை வேளையில் இரவு நித்திரைக்காக படுக்கைக்கு போகும் போதும் அவளின் நினைவுகளே உங்களை ஆக்கிரமிக்கும்.

பதினோராவது:

அவளுடன் நீங்கள் சேர்ந்து நடக்கும் போது அன்னம் கூட உங்களை வென்றுவிடும். உலகை மறந்து எதிர்காலக் கனவுகளை சுமந்த வண்ணம் அப்படியொரு ஆறுதல் நடை.

பத்தாவது:

அவள் தூர விலகி நின்றால் (ஐந்து மீற்றர் கூட அதிகம்) உங்கள் மனதில் ஏதோவொன்று குறைவது போன்ற சங்கடம் எழும்.

ஒன்பதாவது:

அவள் குரல் கேட்டால் உங்கள் வதனத்தில் புன்னகை பூக்கும்.

எட்டாவது:

அவளை காணும் போது நீங்கள் சனத்திரளின் மத்தியில் நின்றாலும் உங்களைச் சுற்றி எவருமே இல்லாதது போன்றதொரு உணர்வு எழும். உங்கள் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் அந்தத் தேவதை தான்.

ஆறாவது:

உங்கள் சிந்தனையெல்லாம் ஒன்றே ஒன்று. அந்த தேவதை பற்றியதாகவே இருக்கும்.

ஐந்தாவது:

அவளை பார்க்கும் ஒவ்வொரு தடவையும் உங்களிடமிருந்து புன்னகையொன்று வெளிப்படுவதை உணர்வீர்கள்.

நான்காவது:

அவளை பார்த்து விடவேண்டுமென்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு தயாரக இருப்பீர்கள்.

மூன்றாவது:

இதை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இக்கணங்களில் உங்கள் ஞாபகம் எல்லாம் ஒருத்தரைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருக்கும்.

இரண்டாவது:

உங்கள் எண்ணங்கள் அந்த ஜீவனைத் தழுவி வரும் வழியில் ஏழாவது வழிமுறையை நீங்கள் தவறவிட்டதை கண்டுகொள்ள மறந்திருப்பீர்கள்.

முதலாவது:

அது உண்மைதானா என்பதை சோதிக்க மேற்சென்று வரும் நீங்கள் மெளனமாக உங்களுக்குள்ளே சிரிக்கின்றீர்கள் அல்லவா...!!!

நீங்கள் மனம் விரும்பும் - இப்போது மனதில் சுமந்துள்ள அந்த ஜீவன் உங்களையும் தன்மனதில் புன்னகை சிந்த சுமக்க வேண்டுமாயின், இப்பன்னிரண்டு வழிமுறைகளினூடும் அழைத்து வாருங்கள்.

http://soorianilla.blogspot.ca/2011/11/blog-post.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சே.. நமக்கு இப்படி ஏதும் வரல்லையே?????? :rolleyes::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சே.. நமக்கு இப்படி ஏதும் வரல்லையே?????? :rolleyes::lol:

ஒன் லைன் காதலுக்கு சிலவேளை இப்படி வராதோ ?? :D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன் லைன் காதலுக்கு சிலவேளை இப்படி வராதோ ?? :D :D

:D :D

அதுக்கு முதலே அஞ்சாறு..லிஸ்ட் ல இருந்திச்சே அப்பவும் வரல்லையே? :rolleyes:

[size=2](பருத்தித்துறையிலை இருந்து அச்சுவேலி,இருபாலை,நல்லூர்,யாழ்ப்பாணம் வரைக்கும் கலைச்சம் அப்பவும் வரலை)[/size]

ம்ம்ம்... ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ஃபீலிங்ஸ்.. :D:lol: :lol: :icon_idea:

இதனை வாசிக்கும் போது முடிந்து போன என் காதலும் என் காதலனும் நினைவுக்கு வந்தான். நன்றி பகிர்வுக்கு. ஒரு ஆணுக்கு எழுதியுள்ளீர்கள். அவனும் இதேபோல் தான். :)

நாம் எவரையாவது காதலிப்பது எமக்கே தெரியாவிட்டால் ஆறு அறிவு எமக்கு இருந்து என்ன பயன்? எம்மை வேறு யாராவது காதலிக்கின்றார்களா என்று அறிவதற்கு ஏதாவது பரிசோதனை காணப்பட்டால் அது உபயோகமானது.

நாம் எவரையாவது காதலிப்பது எமக்கே தெரியாவிட்டால் ஆறு அறிவு எமக்கு இருந்து என்ன பயன்? எம்மை வேறு யாராவது காதலிக்கின்றார்களா என்று அறிவதற்கு ஏதாவது பரிசோதனை காணப்பட்டால் அது உபயோகமானது.

அண்ணா, சிலர் தாம் காதலிக்கிறோமா நட்பாக பழகிறோமா என்று தெரியாமல் இருப்பார்கள். அவர்களுக்காவது பிரயோசனப்படட்டுமே.. :D

உங்களை யாராவது காதலிக்கிறார்களா என்று அறிய உங்கள் ஆறாவது அறிவை பயன்படுத்துங்கோ. :icon_idea:

இதனை வாசிக்கும் போது முடிந்து போன என் காதலும் என் காதலனும்

[size=5]இது எப்ப நடந்தது?[/size] :(

உங்களை யாராவது காதலிக்கிறார்களா என்று அறிய உங்கள் ஆறாவது அறிவை பயன்படுத்துங்கோ. :icon_idea:

நியாயமான யோசனைதான். ஆனால், சந்தேகம் என்ன என்றால் அதை அறிவதற்கு ஆறு அறிவுகளும், ஒரு பிறப்பும் எமக்கு போதுமா என்பதே.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை யாராவது காதலிக்கிறார்களா என்று அறிய உங்கள் ஆறாவது அறிவை பயன்படுத்துங்கோ. :icon_idea:

இப்ப கட்டையில போகிற வயதாகி விட்டது. முன்பு உபயோகித்து இருக்கலாம். என்ன செய்வது நாட்டுப்பிரச்சனை.......

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிச் சொல்லிச் சொல்லி.. நம்மள உசுப்பேத்திட்டு.... நம்ம வாழ்க்கையை நாங்களே நாசம் பண்ண வைச்சிட்டு.... தாங்க சுகமா வாழ்ந்திடுவாங்க..! இதுகள நம்பவே கூடாது..! :lol::D

Edited by nedukkalapoovan

[size=5]இது எப்ப நடந்தது?[/size] :(

ஒரு வருடம் லவ் பண்ணினம். போன வருடம் பிரிந்து விட்டோம். இருவரிலும் பிழை இருக்கு. இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு தான். :) யோசிக்காதையுங்கோ. :)

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிச் சொல்லிச் சொல்லி.. நம்மள உசுப்பேத்திட்டு.... நம்ம வாழ்க்கையை நாங்களே நாசம் பண்ண வைச்சிட்டு.... தாங்க சுகமா வாழ்ந்திடுவாங்க..! இதுகள நம்பவே கூடாது..! :lol::D

இருபாலருக்கும் இது பொருந்தும் புறோ..

இந்தத்திரியை பார்க்கும்போது எனக்கு என் பழைய காதல் நினைவுகள் தான் கண்கள் முன் தோன்றுகின்றது....

ஒரு நினைவு முடிய மற்றது ,மற்றது.மற்றது.......இப்படியே தொடருகிறது ............ஒரு நினைவைக்கூட முழுமையாக நினைக்கமுடியவில்லையே என்றுதான் கவலையாய் இருக்குது................ :D :D :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த ஏழாவது வழிமுறையை மறக்காமல் வடலிகருக்குமட்டை கீறக்கீற நிறைவேற்றியவன் இவன்...இந்த குமாரசாமி :D :D

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஏழாவது வழிமுறையை மறக்காமல் வடலிகருக்குமட்டை கீறக்கீற நிறைவேற்றியவன் இவன்...இந்த குமாரசாமி :D :D

அட.... கோதாரி,

நானும்... பூந்து, பூந்து பாத்தன்.

எமக்கு பொருத்தமாய்... ஒண்ணுமில்லையேண்ணு...

அந்த, ஏழிலை... தான் சனி ஆரம்பிக்கப் போகுதூ.... போலை... :D:lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த ஏழாவது வழிமுறையை மறக்காமல் வடலிகருக்குமட்டை கீறக்கீற நிறைவேற்றியவன் இவன்...இந்த குமாரசாமி :D :D

:D:lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.