Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏன் இப்பிடி நடக்குது ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் சுவிஸ்சில் தன்னுடைய தன்னுடைய மனைவிய கொலை செய்ததுக்காக ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்குன்றார் புலம்பெயர் வாழ்வில் இது ஒரு முதல் சம்பவம் இல்லை என்று நினைகிறன் இப்பிடியானவற்றுக்கு காரணம் என்ன? இதை தடுக்க வழிகள் என்ன?

இன்று அந்த குடும்பத்தின் குழந்தைகளுக்கு அம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை ஒரு இரண்டு நிமிட கோபத்தில் ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்க பட்டிருக்கு வாழ வந்த இடத்தில ஏன் ஏன்? எத்தினையோ வசதிகள் இருக்கும் போது இப்பிடியனவற்றில் ஈடுபட்டு தங்கள் வாழ்க்கைய இழக்கலமா?

[size=4]இதற்கு சுலபமான விடை கிடையாது. ஆனால் தமிழ்ச்சமூகம் அதனில் உள்ள, இல்லை காணாத, சில அணுகுமுறைகள் ஒரு காரணம். [/size]

[size=1]

[size=4]தமது பலம் பலவீனங்களை உணர்ந்து தமது வரு செலவுகளுக்கு அமைய தமக்கான மகிழ்ச்சியான வாழ்க்கையை வெளியார் தலையீடுகள் இல்லாமல் புரிந்துணர்வுடன் விட்டுக்கொடுப்புடன் வாழவேண்டும். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வார்த்தையில் சொல்வதானால் முக்கியமான காரணம் மன உளைச்சல்தான்..

இப்படியான சம்பவங்களை தடுக்கவேண்டுமாயின் புரிந்துணர்வுடன் கூடிய விட்டு கொடுப்பு குடும்பத்துக்குள் மிகவும் அவசியம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கட ஆக்களுக்கு இன்னும் ஒரு பிரச்னை இருக்கு கவுன்செலிங் போறதுக்கு வெக்கம்

தங்கள் நிலையறியாமல் மற்றவர்களைப் போல வாழ முயற்சிப்பது. வாழும் நாட்டின் சூழ்நிலைக்கேற்ப வாழப் பழகாமை. மூன்றாம் மனிதர்களின் தலையீடு. வாழுவதென்றால் புரிந்துணர்வுடன் ஒருவருக்குஒருவர் விட்டுக் கொடுத்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்தால், நிம்மதி இல்லாத, பிடிக்காத வாழ்க்கை நடத்துவதை விட இருவரும் பிரிவது நல்லது என்பது எனது தனிப்பட்ட கருத்து.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதேய் தப்பிலி அண்ணா வாழ்க்கை எனபதேய் கொஞ்ச காலம் தான் சோ எல்லா விதத்திலும் சேர்த்து வாழ முயற்சிப்பது பிடிக்கலியா பிரிஞ்சு போய்டணும் முதல்ல சமூகத்துக்காக வாழுறத விட்டுட்டு எங்களுக்காக வாழ பழகிக்கணும்

[size=4]அதேய் தப்பிலி அண்ணா வாழ்க்கை எனபதேய் கொஞ்ச காலம் தான் சோ எல்லா விதத்திலும் சேர்த்து வாழ முயற்சிப்பது பிடிக்கலியா பிரிஞ்சு போய்டணும் முதல்ல சமூகத்துக்காக வாழுறத விட்டுட்டு எங்களுக்காக வாழ பழகிக்கணும்[/size]

[size=4]இதையே உங்கடை அப்பா அம்மாவும் செய்ய வெளிக்கிட்டிருந்தால் ?????????????[/size]

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாட்டில் தற்கொலைகள். கொலைகள்... என

இப்படி பல நடந்து கொண்டேயிருக்கின்றன.

அளவுக்கு மிஞ்சிய ஆசைகள். வேளைபளு, மன உளைச்சல், போட்டி பொறாமைகள் என்று அடுக்குக்கொண்டே போகலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாவ் வாவ் என்ன ஒரு கேள்வி என்ன ஒரு கேள்வி அதான் தெளிவா சொல்லி இருக்கனை முடியும் வரை வாழ்த்து பாப்பது பிடிகலிய கொலை செய்றத விட்டுட்டு பிரிஞ்சுபோகலாம் தானேய் அத விட்டுட்டு டெய்லி சண்டை பிடிசுகொண்டு கொலை செய்யிற அளவுக்கு ஒரு வாழ்க்கை வாழணுமா? எங்க அம்மா அப்பாக்கு பிடிச்சிருந்திச்சு அதனால வாழ்ந்திசினம் என்னையும் பெத்திசினம் இப்பிடி அறிவுபூர்வமா சிந்திச்சு யாழ்ல எழுத :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு இன்னும் ஒரு காரணமும் இருக்கு திருமண பந்தத்தை மீறிய உறவுகள் திருமணத்துக்கு பிறக்கும் வைத்திருப்பது

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் எவ்வளவு தான் முன்னேறினாலும்

முன்னேறியவனுக்கும் முன்னேற வேண்டியவர்களுக்கும்

இடையில் பல கோடுகள் வெளியாக உள்ளன.

தமிழ்ச் சமுதாயத்தில் இப்படியான பல நிகழ்வுகள்

நாம் முன்னேற இன்னும் இடம் இருக்கின்றது என்பதைக்

காட்டி நிற்கின்றன.

வாவ் வாவ் என்ன ஒரு கேள்வி என்ன ஒரு கேள்வி அதான் தெளிவா சொல்லி இருக்கனை முடியும் வரை வாழ்த்து பாப்பது பிடிகலிய கொலை செய்றத விட்டுட்டு பிரிஞ்சுபோகலாம் தானேய் அத விட்டுட்டு டெய்லி சண்டை பிடிசுகொண்டு கொலை செய்யிற அளவுக்கு ஒரு வாழ்க்கை வாழணுமா? [size=4]எங்க அம்மா அப்பாக்கு பிடிச்சிருந்திச்சு அதனால வாழ்ந்திசினம் என்னையும் பெத்திசினம் இப்பிடி அறிவுபூர்வமா சிந்திச்சு யாழ்ல எழுத[/size] :D

[size=4]அப்ப உங்கடை அப்பா அம்மாவுக்கு இருந்த சகிப்பு தன்மை ஏன் இப்பத்தையாக்களுக்கு இல்லை ??? எடுத்ததுக்கெல்லாம் கோடுகச்சேரியெண்டால் அந்தகிரகங்கள் கலியாணம் கட்டத்தேவையில்லை . உங்கடை அப்பா அம்மா காலத்தில உண்மையான அன்பு எண்ட ஒரு சாமான் இருந்திது . அதால மற்ற பிரச்சனையள் அன்புக்கு முன்னால ரண்டாம் பட்சமாய்போச்சுது . இப்ப உங்களைப்போல ஆக்களின்ரை தத்துவங்களால எப்பிடி ஒரு ஆரோக்கியமான சமூகம் வளரும் ????????[/size]

அன்பால் அன்றி, அடக்கு முறைகளுக்கும் ஆளுகைகளுக்குள்ளும் வாழ்தல் நிம்மதி தராது. அவற்றை உடைத்துக் கொண்டு வெளியேறவே மனம் தூண்டும். வரலாறு அதனைத்தான் திரும்ப திரும்பக் கூறிச் செல்கிறது. அடக்கியவனும் நிம்மதியாக வாழ்ந்ததில்லை. அடிமையும் வாழ்ந்ததில்லை.

தொடர்புபட்ட ஆணும் பெண்ணும் பிரிந்திருந்தால், மீண்டும் சேர்ந்து வாழக் கூடிய கூடிய சந்தர்ப்பங்கள் அமைந்திருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு தான் சொல்லுறம் கோம்ஸ் அண்ணா முதல்ல ஒரு பொண்ண எங்களோட பழக விடுங்க ௨ பேர்க்கும் பிடிச்சிருக்க கல்யாணம் இல்லையா ஆல் தி பெஸ்ட் நு சொல்லிட்டு போயிட்டு போயிட்டு இருக்கணும்.

அத விட ஒரு பிரச்னை பொய் சொல்லி கல்யாணம் கட்டுறது அதாளையும் இப்ப நிறைய பிரச்சனையை வருது.... மற்றது இலங்கையில இருந்து கல்யாணம் கட்ட வெளிநாடு வார பொண்ணுங்களும் வெளி நாடு ஏன்டா ஓவர் கற்பனையில் வாறது இங்க தான் கட்டிக்க போற ஆள் நல்ல வசதியா வீடோட BMW காரும் ஓடி கொண்டு திரிவார் எண்டு இங்க வந்து உண்மை தெரிஞ்சு வார விரக்தியும் அநேகமான குடும்பம்கல்ல சண்டை வர காரணமா இருக்கு

இப்படியான சம்பவங்கள் எல்லா சமூகத்திலும் இருகின்றன. அண்மையில் பிரித்தானியாவில் ஒரு தகப்பன் தனது மூன்று பிள்ளைகளையும் தூர இடத்துக்கு கூட்டி சென்று அவர்களை சாகடித்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இது ஒரு மன உளைச்சல் காரணமாக இருக்கலாம்.

தமிழர்களுக்கும் பல நெருக்கடிகள் அதை தீர்ப்பதில்லை கடைசியில் வீபரீதமான முடிவுகள்.

அண்மையில் சுவிஸ்சில் ஒரு தமிழர் தற்கொலை செய்து கொண்டார். நல்லாக இருந்தார்,சீட்டு கட்டியோ பிடிச்சோ கடனாளி ஆகிவிட்டார் மானம், ஆய்க்கினை ,விரக்தி தற்கொலை செய்து கொண்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இதையே உங்கடை அப்பா அம்மாவும் செய்ய வெளிக்கிட்டிருந்தால் ?????????????[/size]

கோமகன் அந்தக் காலத்தில் விவாகரத்து நடைபெறவில்லை என்று சொல்ல வருகின்றீர்களா?

அல்லது அந்தக் காலத்தில் கணவன் மனைவியைக் கொல்லவில்லை

எனச் சொல்ல வருகின்றீர்களா?

எல்லாம் காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

ஆனால் புலம்பெயர்ந்தும் அது தொடர்வது தான் கவலைகுரிய விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறத்தவரை மூண்றாம் தரப்பு உள்னுளைய இடம்கொடுக்க கூடாது அது என் பக்கமோ மனைவி பக்கமோ சரி. என்ன பிரச்சனையாக இருந்தாலும் இருவரும் கதைத்தே(பேசியே) தீ்ர்க்கவேண்டும் .

அதுக்கு தான் சொல்லுறம் கோம்ஸ் அண்ணா முதல்ல ஒரு பொண்ண எங்களோட பழக விடுங்க ௨ பேர்க்கும் பிடிச்சிருக்க கல்யாணம் இல்லையா ஆல் தி பெஸ்ட் நு சொல்லிட்டு போயிட்டு போயிட்டு இருக்கணும்.

அத விட ஒரு பிரச்னை பொய் சொல்லி கல்யாணம் கட்டுறது அதாளையும் இப்ப நிறைய பிரச்சனையை வருது.... மற்றது இலங்கையில இருந்து கல்யாணம் கட்ட வெளிநாடு வார பொண்ணுங்களும் வெளி நாடு ஏன்டா ஓவர் கற்பனையில் வாறது இங்க தான் கட்டிக்க போற ஆள் நல்ல வசதியா வீடோட BMW காரும் ஓடி கொண்டு திரிவார் எண்டு இங்க வந்து உண்மை தெரிஞ்சு வார விரக்தியும் அநேகமான குடும்பம்கல்ல சண்டை வர காரணமா இருக்கு

சரி.............. உங்களை விட்டாச்சு .

கோமகன் அந்தக் காலத்தில் விவாகரத்து நடைபெறவில்லை என்று சொல்ல வருகின்றீர்களா?

அல்லது அந்தக் காலத்தில் கணவன் மனைவியைக் கொல்லவில்லை

எனச் சொல்ல வருகின்றீர்களா?

எல்லாம் காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

ஆனால் புலம்பெயர்ந்தும் அது தொடர்வது தான் கவலைகுரிய விடயம்.

அப்பொழுதும் நடந்தது......... நான் இல்லை என்று சொல்ல வரவில்லை . ஆனால் புலம் பெயர்ந்தபின் இப்பொழுது ஒப்பீட்டளவில் கூடியிருப்பது பற்றிய எனது விசனத்தைப் பதிந்தேன் . சுண்டு சொன்னமாதிரி கலியாணத்திற்கு முதல் கொடுக்கும் ஓவர் பில்டப்புகளும் முக்கிய காரணம் .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு தான் சொல்லுறம் கோம்ஸ் அண்ணா முதல்ல ஒரு பொண்ண எங்களோட பழக விடுங்க ௨ பேர்க்கும் பிடிச்சிருக்க கல்யாணம் இல்லையா ஆல் தி பெஸ்ட் நு சொல்லிட்டு போயிட்டு போயிட்டு இருக்கணும்.

அத விட ஒரு பிரச்னை பொய் சொல்லி கல்யாணம் கட்டுறது அதாளையும் இப்ப நிறைய பிரச்சனையை வருது.... மற்றது இலங்கையில இருந்து கல்யாணம் கட்ட வெளிநாடு வார பொண்ணுங்களும் வெளி நாடு ஏன்டா ஓவர் கற்பனையில் வாறது இங்க தான் கட்டிக்க போற ஆள் நல்ல வசதியா வீடோட BMW காரும் ஓடி கொண்டு திரிவார் எண்டு இங்க வந்து உண்மை தெரிஞ்சு வார விரக்தியும் அநேகமான குடும்பம்கல்ல சண்டை வர காரணமா இருக்கு

இதில் உண்மை இருந்தாலும் ஆண்களும் ஊருக்குப் போய் அவர்களது உண்மையான நிலையை சொல்லாமல் புழுகி அடிக்கிறதும் முக்கிய காரணம்

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் சுவிஸ்சில் தன்னுடைய தன்னுடைய மனைவிய கொலை செய்ததுக்காக ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்குன்றார் புலம்பெயர் வாழ்வில் இது ஒரு முதல் சம்பவம் இல்லை என்று நினைகிறன் இப்பிடியானவற்றுக்கு காரணம் என்ன? இதை தடுக்க வழிகள் என்ன?

இன்று அந்த குடும்பத்தின் குழந்தைகளுக்கு அம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை ஒரு இரண்டு நிமிட கோபத்தில் ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்க பட்டிருக்கு வாழ வந்த இடத்தில ஏன் ஏன்? எத்தினையோ வசதிகள் இருக்கும் போது இப்பிடியனவற்றில் ஈடுபட்டு தங்கள் வாழ்க்கைய இழக்கலமா?

பிரச்சனை காசு காசு காசு. எங்கும், எதுக்கும் காசு. இந்தக் காசைத் தேட மனிசன் மூண்டு நாலு வேலை, வீட்ட வரும் போது சாமம், இதால சரியான தாம்பத்திய உறவு இல்லை. அத்துடன் வரட்டுக் கௌரவங்களும், போட்டிகளும், விரலுக்கேத்த வீக்கமின்றி பொருளாதாரத்தைக் கையாள்வதும் முக்கிய காரணங்கள். மூன்றாம் நபர் தலையீடும் முக்கிய காரணி. எனது குடும்ப விடயங்களில், எனது பெற்றோருக்கோ, எனது மனிசியின் பெற்றோருக்கோ எந்த வித உரிமையும் கிடையாது. இந்தக் கொள்கையை சொல்லித்தான் கலியாணமே கட்டினேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு கருத்து தும்பலயான் சில புருஷன் மார் வீட்டில மனைவி இருக்குறதை கண்டுகுறதேய் இல்லை எப்ப பாறு வேலை

  • கருத்துக்கள உறவுகள்

சில, அடையமுடியாத இலக்குகளை, நாம் வரித்து விட வேண்டிய சூழ்நிலைக்கு, வாழ்க்கை எம்மைத் தள்ளுகின்றது! இதற்குப் பெண்ணும், ஆணும், அவர்களுடன் சேர்ந்த சகல உறவுகளும் பொறுப்பு! இதற்குப் பல காரணங்கள் உண்டு!

சீதனம், கொடுத்து மாப்பிளையை எடுக்கும், பெண்ணின் தாயும், தந்தையும் அவனை, இன்னொரு மனிதனாக ஒரு போதும் பார்ப்பதில்லை! காசு கொடுத்து வாங்கின பசு மாடு மாதிரி! தங்கள் மகளுக்கு, ஒரு வேலைக்காரன் மாதிரியே, இவரை உபயோகிப்பார்கள்!

திருமணம் முடிந்தவுடன், பெண்கள் தங்களில் கவனம் எடுப்பது குறைவு! இதற்கும் சீதனம், ஒரு காரணமாக இருக்கலாம்!விலைப்பட்ட பிறகு, எதற்குக் கவனிக்க வேண்டும்?

இந்த விடயத்தில், தும்பளையானுடன் உடன்படுகின்றேன்! மாமா, மாமிகள் தலையீடுகளால், தான் அதிக பிரச்சனைகள் தமிழ்க் குடும்பங்களில் ஏற்படுகின்றன!

அடுத்தது, சுண்டல் கூறுவது போலப், பிடிக்காவிட்டால், விலகி விடுவது நல்லது!

ஊருக்காக வாழாமல், தமக்காக வாழப் பழகுவது நல்லது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.