Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தந்தை - மகள் உறவு

Featured Replies

உலகத்தில் தந்தை,மகன் உறவு என்பது அதிகம் பேசப்பட்டு,அறியப்பட்டு இருக்கும்.ஆனால் பெரும்பாலும் தந்தை,மகன் உறவு சுமூகநிலையில் இருக்காது.

[size=4]ஆனால் அப்பா,மகள் உறவு என்பது அப்படிப்பட்டதல்ல,அது ஒரு பாசமான,நெகிழ்ச்சியான,அன்பான உறவு.ஒருவன் தன்னுடைய தாய்க்குப்பின்,தாரத்திடம் தன்னை ஒப்படைக்கிறான்.அதற்கு பிறகு வயோதிக காலத்தில் தாய் காட்டிய அன்பையும்,தாரம் செய்த பணிவிடையையும் மகள் செய்கிறாள்.ஒருவனுக்கு வயோதிக காலத்தில் தன்னுடைய சுய தேவைகளை செய்ய முடியாத நிலையில்(தான் உடுத்திருக்கும் உடை களைந்த நிலையில் இருக்கும்போது சரி செய்ய இயாலாதநிலை)மேலும் எந்த நிலையில் இருந்தாலும்(உடை இல்லாம இருந்தாலும் கூட)மகனோ,மருமகளோ பணிவிடை செய்யமாட்டார்கள்.ஆனால் மகள் தாயைபோல் கருணை உள்ளத்துடன் தந்தை எந்த நிலையில் இருந்தாலும் பணிவிடை செய்வாள்.[/size]

[size=4]மகன்,தந்தைக்கு மனப்பூர்வமாகவும்,சுயமாகவும்,மன[/size]ைவியின் அனுமதியில்லாமல்,தந்தைக்கு பொருளுதவியோ,பணஉதவியோ செய்யமுடியாது.செய்யவும் மாட்டான்.ஆனால் மகள் கணவருக்கோ,குடும்பத்தாருக்கோ தெரியாமல் தந்தைக்கு,எந்தஉதவியும் செய்யமுடியும்.செய்வாள்.

[size=4]என்னை பொருத்தவரை மகளை பெற்றவர்கள்,பாக்யசாலிகள்.

நீங்கள் எப்படி? [/size]

[size=4](முக நூல் ஊடாக) [/size]

Edited by akootha

அது முகநூலுக்கு பொருந்தும். ஆனால் யாழில் பிள்ளையை பெற்றவர்களும், பெறமுடியாதவர்களும் பாக்கியசாலிகள்.

நான் சிறுவனாக இருந்த போது எனது தந்தையாரின் கிராமத்தில் ஒரு தனவந்தர் தனது மகனை லண்டனுக்கு அனுப்பிப் படிப்பித்து லண்டன் மாப்பிள்ளையாக்கி அழகிய, வெள்ளை நிற, அருமையான குணமுடைய வசதியான வீட்டு பெண் ஒருவருக்கு மணம் முடித்து வைத்தார். அந்த கோ. கழுதை லண்டன் சென்று ஆவன செய்து அங்கே அழைப்பத்தாக கூறி இளம் மனைவிக்கு bye bye காட்டிவிட்டு சென்றுவிட்டு தனது தந்தையாருடனும் மனைவியுடனும்(தனது குடும்பங்களுடன்) தொடர்புகளை துண்டித்துகொண்டார். மருமகளை லண்டன் செல்லவென்று தன வீட்டில் அழைத்து வந்து வைத்திருந்த மாமனார் ஏமாந்து போய்விட்டார்.

தனது குடும்பத்து பணமோ அல்லது மாமனாரின் வீட்டுச்செல்வமோ அந்த பெண்ணை வாழவைக்க முடியாமல் போக அந்த அழகிய ரதி மாமனாரின் வீட்டில் விடுபட்டுப்போனார். விஷையைத்தை மெல்ல மெல்ல விளங்கிகொண்டுவிட்ட மாமனார் வாளாப்பிள்ளை தாயுக்கும் தந்தைக்கும் பாரம் என்று சொல்லி தன் மகனை மறந்து மருமளை மகளாக்கிக் கொண்டார். நான் காணும் காலங்களில் அவருக்கு 45-50 வயதிருக்கும். மாமனாருக்கு 75 வயதிருக்கும். இருவரும் தங்கள் பாரிய வீட்டில் அமைதியாக குடித்தனம் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதது.

அது பௌதிக மாயையில் மயங்காதது.

உறவும் பிரிவும் அன்புள்ள உள்ளத்தின் இயல்பான நடத்தைகள்.

சொந்தமும் பந்தமும் சொத்தை பாதுகாக்க ஆக்கிவைத்த சட்டங்கள்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

பெண் குழந்தைகள் அழகும்.. அறிவும். ஆண் குழந்தைகள் ஆய்வும்.. ஆழமும்..!!

இரண்டும் இரண்டு கண்கள் போல..! வேறு பிரிச்சுப் பார்க்கப்படாது..! :):icon_idea:

என்ன தான் சொன்னாலும்.. பெண் பிள்ளைகளின் அழகு.. அமைதி.. சுட்டித்தனம்.. இலகுவில்.. ஆண்களை கவர்ந்து விடுகின்றன..! பையன்களின் குறும்பு.. பலருக்கு எரிச்சலாக அமைகின்றன. காரணம்.. அட இவன் நம்மள மிஞ்சிடுவானோ என்ற பயம்..!

ஓய் அப்பாக்களா.. நம்மளையும் கொஞ்சம் புரிஞ்சுங்கப்பா.. உங்க Y குரோமோசோமிற்கு அடையாளமே நாங்க தாங்கப்பா..! :lol:

அம்மா மார்.. மகளுக்கும் மகனுக்கும் ஒரே குரோமசோமை தான் கொடுப்பினம். அப்பாக்களின் அடையாளமே பையங்க தான்..! அந்த வகையில் ஒரு நன்றிக்கடனுக்காகவாவது.. நம்மளையும் கொஞ்சம்.. கவனிக்க அப்பாக்களே..! :D

பசங்க நமக்கு டாடிகளில ரெம்பதான் பாசம்.. ஆனால்.. டாடிங்க தான்.. புரிஞ்சுக்கிறாங்க இல்ல..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]ஒருவனுக்கு வயோதிக காலத்தில் தன்னுடைய சுய தேவைகளை செய்ய முடியாத நிலையில்(தான் உடுத்திருக்கும் உடை களைந்த நிலையில் இருக்கும்போது சரி செய்ய இயாலாதநிலை)மேலும் எந்த நிலையில் இருந்தாலும்(உடை இல்லாம இருந்தாலும் கூட)மகனோ,மருமகளோ பணிவிடை செய்யமாட்டார்கள்.[/size]

இது அப்படியே சரியான கருத்தல்ல. எல்லாரும் இப்படியல்ல. பல அண்ணாமார்.. தாய் தந்தை இருவரையும் மனைவிக்கு அப்பால் சென்று கவனிப்பதை கண்டிருக்கிறேன். இவ்விடயத்தில்.. பெண் பிள்ளைகள் ஒதுங்கி இருப்பதையும் காண்கிறோம். பல பெண் பிள்ளைகள்.. தமது தாய் தந்தையரில் செலுத்தும் கவனத்தை.. கணவரின் தாய் தந்தையரில் செலுத்துவதில்லை. ஆனால்.. ஆண் பிள்ளைகள் மனைவியின் தாய் தந்தையரையும் தங்களது பெற்றோர் போல் கவனிப்பதை கண்டிருக்கிறேன். :icon_idea::)

அப்பாக்கும் எனக்கும் நல்ல உறவுதான் இருந்தது. . இறுதி காலத்தில் அவரை வைத்துப் பராமரிக்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. முதன் முதலாக நான் அனுப்பிய உடுப்பு, மருந்துகளைப் பார்த்து ஏதோ பொக்கிஷம் கிடைத்த மாதிரிச் சந்தோசப்பட்டாராம். அவர் நல்ல பண வசதிகளோடு வாழ்ந்தாலும், இறக்கும் வரை தொடர்ச்சியாக பணமும் அனுப்பி கடிதத் தொடர்பில் இருந்தேன்.

பெண் பிள்ளைகள் மேல் தகப்பனுக்கும், தகப்பன் மேல் பெண் பிள்ளைகளுக்கும் அதிக பாசமுண்டு. மற்றும்படி பொத்தாம் பொதுவாக ஆண்கள் தங்கள் தகப்பனை கவனிக்க மாட்டார்கள்.பெண்கள்தான் பார்ப்பார்கள் எனும் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நான் காண பல பெண்கள் தங்கள் கணவனுடன் சேர்ந்து கொண்டு தன குடும்பத்தையே, சீதனமாகத் தந்த வீட்டிலிருந்து துரத்தியுள்ளார்கள். பெற்றோரை வைத்து பராமரித்த பல ஆண்களைக் கண்டிருக்கிறேன்.

  • தொடங்கியவர்

[size=4]மல்லையூரான், நெடுக்ஸ், தப்பிலி,[/size][size=1]

[size=4]உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள். ஆனால், உங்கள் கருத்துக்கள் 'சிறுபான்மை' என எனது சிறு அனுபவம் கூறுகின்றது. பெரும்பாலான தந்தைகளை மகள்மார்கள் தான் கவனிக்கின்றார்கள். மகள் - தந்தை உறவு தந்தை - மகன் உறவை விட நீண்ட பிணைப்பை கொண்டது. தந்தை -மகள் உறவுடன் ஒப்பிடக்கூடியது, தாய் - மகன் உறவு :D[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக தாய்மார்கள் பொம்பிளை பிள்ளைகளோடு கடுமையாகவும்,கண்டிப்பாகவும் நட‌ந்து கொள்வார்கள் அதே நேர‌த்தில் தந்தைமார் ஆண்பிள்ளைகளோடு கண்டிப்பாகவும்,கடுமையாகவும் நட‌ந்து கொள்வார்கள் அதனால் எதிர்பாலில் ஈர்ப்பு ஏற்படுகிறது என்று நினைக்கிறேன் ஆனால் விதி விலக்கும் உண்டு

மூத்தது பெண் குழந்தை என்டால் தகப்பனை போல இருந்தால் குடும்பத்திற்கு நல்லது என்றும் மூத்தது ஆண் என்டால் தாயைப் போல் இருந்தால் குடும்பத்திற்கு நல்லது என்றும் சொல்வார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதிலே இருத்து மறுபடுகிறேனோ தெரியவில்லை, நான் பார்த்த மட்டில், தாய் வளத்த பொடியன்களும்- தகப்பன் வளர்த்த பெண்களும் சமூகத்தில் கலந்து பழக, சேர்த்து செயற்பட பிரச்சனையான ஆக்கள்.

பொதுவாக தந்தைகளுக்கு மகள் மேலும் தாய்களுக்கு மகன் மேலும் பாசம் அதிகம்.

ஆண்களிலும் தமது தந்தையை கவனிப்பவர்கள் உள்ளார்கள். பெண்களிலும் தமது தந்தையை கவனிப்பார்கள். ஆனால் இவ்விடயத்தில் ஆண்களை விட பெண்கள் பல மடங்கு அதிகம்.

ஓய் அப்பாக்களா.. நம்மளையும் கொஞ்சம் புரிஞ்சுங்கப்பா.. உங்க Y குரோமோசோமிற்கு அடையாளமே நாங்க தாங்கப்பா..! :lol:

அம்மா மார்.. மகளுக்கும் மகனுக்கும் ஒரே குரோமசோமை தான் கொடுப்பினம். அப்பாக்களின் அடையாளமே பையங்க தான்..! அந்த வகையில் ஒரு நன்றிக்கடனுக்காகவாவது.. நம்மளையும் கொஞ்சம்.. கவனிக்க அப்பாக்களே..! :D

அப்பாக்கள் உங்களுக்கு Y குரோமோசோமை தந்தால் அந்த நன்றிக்கடனுக்கு நீங்கள் தான் அப்பாவை கவனிக்க வேண்டும். கவனித்தால் அப்பாக்களும் இப்படி கூற மாட்டார்கள். அம்மா X குரோமோசோமை தந்தார் என்று நினைத்தா அவர் மேல் பாசம் வைக்கிறீர்கள்? இல்லை தானே? :D

என் மகள் பிறந்து 3 வருடங்கள் ஆகின்றது. இந்த 3 வருடங்கள் என்பது அனுபவம் சொல்லக் கூடியளவு காணாதது என்றாலும் என் 3 வருட அனுபவங்களில் இருந்து என்னால் இப்போதைக்கு சொல்லக் கூடியது

மகள்: இன்னொரு அம்மா. அம்மாவை விட ஆயிரம் மடங்கு அவள் உசத்தி. அன்பிலும், அப்பனை அரவணைத்து தன் பறவைச் சூட்டை தருவதற்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.