Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேலூர் சிறையிலிருந்து தப்பித்த விடுதலைப் புலிகளை நான் தான் அனுப்பிவைத்தேன் - வைகோவின் திடீர் அறிவிப்பால் தமிழகத்தில் பரபரப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வேலூர் சிறையிலிருந்து தப்பித்த விடுதலைப் புலிகளை நான் தான் அனுப்பிவைத்தேன் - வைகோவின் திடீர் அறிவிப்பால் தமிழகத்தில் பரபரப்பு!

[sunday, 2012-08-19 10:02:31]

Vaiko_UNO150KL.jpg

வேலூர் சிறையிலிருந்து, அகழி வழியாக தப்பிய இலங்கைத் தமிழ் இளைஞர்கள், 45 பேரில், மூவரை புதுக்கோட்டையிலிருந்து, கடல் வழியாக இலங்கைக்கு நான் தான் அனுப்பி வைத்தேன் என வைகோ தெரிவித்துள்ளார். கடந்த, 1995ம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தன்று, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த விடுதலைப்புலிகள், 43 பேர், அகழி வெட்டி, அதன் மூலமாக சிறையில் இருந்து தப்பிய சம்பவம் நடந்தது.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், தப்பியோடிய புலிகளில், 21 பேர் மட்டுமே, அடுத்த சில நாட்களில் இந்தியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். ஏனையவர்கள் பொலிஸில் பிடிபடவில்லை.

இந்நிலையில், நேற்று புதுக்கோட்டையில் வைகோ உரையாற்றுகையில் தெரிவித்தள்ளதாவது:

வேலூர் சிறையிலிருந்து, அகழி வழியாக தப்பிய இலங்கைத் தமிழ் இளைஞர்கள், 45 பேரில், மூவரை புதுக்கோட்டையிலிருந்து, கடல் வழியாக இலங்கைக்கு நான் தான் அனுப்பி வைத்தேன் என தெரிவித்தார்.

சிறையில் இருந்து தப்பிய புலிகளை, இலங்கைக்கு தான் அனுப்பி வைத்ததாக வைகோ ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறையில் இருந்து தப்பிய கைதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதே குற்றம் எனும் நிலையில், அவர்களை வேறு நாட்டுக்கு தப்பிச் செல்ல உதவியதும், அதை வெளிப்படையாக, வைகோ பெருமிதமாகத் தெரிவித்திருப்பது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://seithy.com/breifNews.php?newsID=65427&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

வைகோவுக்கு, இப்போது... இந்த, ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கவேண்டிய தேவை, ஏன்?

வில்லங்கத்தை.... விலை கொடுத்து வாங்கப்போகின்றார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வைகோவுக்கு, இப்போது... இந்த, ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கவேண்டிய தேவை, ஏன்?

வில்லங்கத்தை.... விலை கொடுத்து வாங்கப்போகின்றார்.

நான் நினைச்சதை அப்படியே நீங்கள் எழுதி விட்டீர்கள் அண்ணா.

இந்த வில்லங்கம் அவரை வளர்த்து விடும்

[size=4]ஈழ விடுதலையில் வை. கோ. அவர்கள் இவ்வாறும் உதவியுள்ளார் என்பது பலருக்கும் தெரிந்திருக்கவில்லை, இதுவரை. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

அவர் செய்த உதவிகள் பல அவை எல்லாம் வெளியே தெரிவதில்லை ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வில்லங்கம் அவரை வளர்த்து விடும்

எப்பொருள் யார் வாய்க் கேட்பினும்

அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு!

எப்பொருள் கருணாநிதி வாய்க் கேட்பினும் நம்பும் அறிவு

அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதரிது!

  • கருத்துக்கள உறவுகள்

[size=2]

[/size][size=3]

1.jpg

நண்பகல் நேரம். வெயில் சுள்ளென்று அடித்துக்கொண்டிருந்தது. மரத்தின் அடியில் ஒருவன் படுத்து நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். வெயில் அவன் மீது பட்டுக்கொண்டிருந்தது.

அந்த வழியாக வந்த விறகு வெட்டி ஒருவன் அவனைப் பார்த்தான். “கடுமையான உழைப்பாளியாகத்தான் இவன் இருக்கவேண்டும். உழைத்த களைப்பினால்தான் இந்த வெயிலிலும் நன்கு தூங்குகிறான்” என்று சொல்லிக்கொண்டே சென்றான்.

அடுத்ததாகத் திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான். “இரவு முழுவதும் கண் விழித்துத் திருடியிருப்பான் போல இருக்கிறது. அதனால்தான் இந்த நண்பகல் நேரத்தில் கூட அடித்துப்போட்டது போல இப்படித் தூங்குகிறான்” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அங்கே வந்தான். “காலையிலேயே இவன் நன்றாகக் குடித்துவிட்டான் போல இருக்கிறது. அதுதான் குடிமயக்கத்தில் விழுந்து கிடக்கிறான்” என்று சொல்லிச் சென்றான்.

சிறிது நேரத்தில் துறவி ஒருவர் அந்த வழியாக வந்தார். “இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும். வேறு யாரால் இத்தகைய செயலைச் செய்ய முடியும்” என்று அவனை வணங்கிவிட்டுச் சென்றார்.

[/size]

  • கருத்துக்கள உறவுகள்

அதுதுதுதுதுதுதுதுது.

நுணாவிலான்.

வை.கோ சொல்லித்தான் இந்திய உளவுத்துறை அறிந்து கொள்ளவேண்டும் என்றநிலை பரிதாபத்துக்கும் நகைப்புக்குமுரியது.

ஆயிரம் பொய்யை சொல்லியும் ஒரு கலியாணத்தை கட்டு. நல்ல வேலையை எப்படி செய்தாலும் பரவாயில்லை. தமிழ் நாட்டில் சிறைக்கு போய்தான் மேலே வரமுடியுமானால் அதை வை.கோ செய்ய வேண்டும்.

இலங்கை தமிழ் நாட்டு அரசியலில் பெரும்பாகம் வகிக்க பார்க்கிறது. இனியும் தமிழ் நாட்டு அரசியலை சும்மா பார்த்துக்கொண்டிருக்க கூடாது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வை.கோ சொல்லித்தான் இந்திய உளவுத்துறை அறிந்து கொள்ளவேண்டும் என்றநிலை பரிதாபத்துக்கும் நகைப்புக்குமுரியது.

இது எல்லாருக்கும் தெரியும் அண்ணா, ஆனால் இப்ப ஏன் இந்த ஒப்புதல் வாக்குமூலம் என்பது தான் கேள்வி..

எது எப்படியோ வைகோவையும் 3ம் தர அரசியல்வாதியாய் ஆக்காமல் விட்டால் சந்தோசம். :icon_idea:

[size=4]வை. கோ. அவர்கள் கருணாநிதி டேசொவால் பெற்ற அரசியல் இலாபத்தையும் இல்லாமல் செய்துவிட்டார். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]வை. கோ. அவர்கள் கருணாநிதி டேசொவால் பெற்ற அரசியல் இலாபத்தையும் இல்லாமல் செய்துவிட்டார். [/size]

எங்களுக்கும் அரசியல் வரும்

ஆனால் அதை நாம் செய்வதில்லை என்று நிரூபித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா ஆமா ரொம்ப சரி

எங்களுக்கும் (சாக்கடை)அரசியல் வரும்

ஆனால் அதை நாம் செய்வதில்லை என்று நிரூபித்துள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.