Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழ்ந்து கொண்டிருக்கும் உலகின் மூத்த மொழி தமிழ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்ந்து கொண்டிருக்கும் உலகின் மூத்த மொழி தமிழ்

http://a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/404161_525419214140811_1428154598_n.jpg

thanks-face book

Edited by புலவர்

549737_476537742364481_482973147_n.jpg

[size=4]இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே!

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே பரவியிருந்தது. அசோக மாமன்னன் தமிழ் மொழியிடம் கடன் பெற்றுத்தான் அவனது கல் வெட்டுக்களைப் பொறித்திருக்கிறான். தமிழனின் தொன்மையான வரலாற்றை மறைக்க சதி நடக்கிறது என்று கூறி அதிர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஒருவர். [/size]

[size=4]இரண்டாயிரத்து ஐநூறு [/size]ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே!

[size=3]

[size=4]எல்லாவற்றுக்கும்மேலாக ஒரு தாழியின் உட் பகுதியில் பழந்தமிழ் எழுத்துக்கள் இருந்தன. அதைப் பார்த்த சத்தியமூர்த்தி உடனடியாக கல்வெட்டுத்துறை இயக்குநர் எம்.டி.சம்பத்தை அழைத்து வந்து, அந்தக் கல்வெட்டை வாசிக்கச் சொன்னார். அதில் ‘கரி அரவ நாதன் என்று எழுதப்பட்டிருந்ததாக சம்பத் சொல்லியிருக்கிறார் ‘கதிரவன் மகன் ஆதன் என்று அதற்குப் பொருள். ஆதனைப் புதைத்த தாழிதான் அது. கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் போன்றோரும் அந்தத் தாழியை அபூர்வமானது, [size=5]அந்தப் பழந்தமிழ் எழுத்துக்கள் ஹரப்பா கால உருவ எழுத்துக்களைப் போல இருப்பதாக கருத்துச் சொன்னார்கள். அந்தத் தகவல்கள் கடந்த 01.07.05-ம் தேதி ஃப்ரண்ட்லைன் ஆங்கில இதழில் வெளிவந்தன.[/size]

ஆனால் அதன்பிறகு அவர்களுக்கு என்ன நெருக்கடி வந்ததோ? [size=5]தற்போது தாழியில் கல்வெட்டே இல்லை என்று சொல்கிறார்கள். [/size]‘அது அபூர்வமான தாழி என்று சொன்ன ஐராவதம் மகாதேவன், இப்போது, ‘அது ஹரப்பா கால எழுத்தல்ல என்கிறார். [size=5]தாழியைக் கண்டுபிடித்த சத்தியமூர்த்தியும், சம்பத்தும் கூட இப்போது அதுபற்றி வாய்திறக்க மறுக்கிறார்கள். [/size]அவர்கள் இருந்த பல மேடைகளில் நான் இதுபற்றிப் பேசியும் அவர்கள் பதில் சொன்னதில்லை. இதையெல்லாம் நான் எழுதிய ‘தமிழகம் அரப்பன் நாகரிக தாயகம் என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறேன்.

‘வடநாட்டில் அசோகர் கால கல்வெட்டுக்கள் தான் முதன்மையானவை, பழைமையானவை, அதன் காலம் கி.மு. 2300 ஆண்டுகள் என்பதுதான் இதுவரை சொல்லப்பட்ட வரலாறு. ஆனால், ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியிலிருந்த பழந்தமிழ் எழுத்துக்கள் கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முந்தையவை. அதாவது அசோகர் கல்வெட்டை விட 200 ஆண்டுகள் பழைமையானவை.[/size]

562729_476537142364541_882066258_n.jpg

[size=4]அப்படியானால் தமிழ்மொழியில் இருந்து கடன்பெற்றுத்தான் அசோகர் அவரது கல்வெட்டுகளைப் பொறித்திருக்கிறார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இதுவரை வடக்கிலிருந்துதான் எழுத்துக்கள் வந்தன என்கிற வாதம் இதனால் தவிடுபொடியாகிறது. ‘தமிழன் அந்தக் காலத்திலேயே கற்றறிந்தவனாக இருந்திருக்கிறான். அவன் பயன்படுத்திய தமிழ் மொழியில்தான் இந்திய மக்கள் அனைவரும் எழுதியிருக்கிறார்கள் என்பதும் உறுதியாகிறது.

இந்த வரலாற்று உண்மைகள் வெளியே வந்து தமிழனுக்குப் பெருமை சேர்ந்து விடக்கூடாது என்பதாலேயே சிலர் வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்கள். ஆய்வு முடிந்து ஆறு ஆண்டுகள் ஆன பின்னரும் ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை வெளியிடப்படாததற்கு இதுவே காரணம்.[/size]

[size=4] [/size]

[/size][size=3]

[size=5]( முகநூல் )[/size][/size]

தமிழில் பேச தயக்கப்படும் உறவுகளே , உலகில் பேசப்படும் மொழிகளில் மிகப் பழைய சிறப்பு மிக்க மொழி தமிழ்மொழி என இங்கிலாந்தில இருந்து வெளியாகிற ஒரு பத்திரிகையில போட்டிருக்காங்க. "மாடு சொன்னா கேட்க மாட்டீங்க. மணி கட்டின மாடு சொன்னா கேட்பீங்கதானே " இனியாவது தமிழனோட தமிழ்ல கதையுங்க.

இந்த Flora Paulman யை தேட ஒன்றும் காட்டவில்லை. யார் இவர்?

http://tamil.berkele...ssical-language இவருடன் சம்பந்த பட்டவவா?

இதில் என்ன முக்கியத்துவம்?

நான்கு வருடங்களுக்கு முன்னர் சில வெளிநிலைமைகளை காட்டி நான் வைத்திருந்த வாதம்.http://www.answerbag.../a_view/3501212

நாம் எழுத்தை, புத்தகத்தை வைத்து ஆண்டை நிர்ணயிக்க கூடாது. பிராமியானது கீபுறு எழுத்துக்கள் என்கிறார்கள்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்

http://ta.wikipedia.org/s/145

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இக்கட்டுரை தமிழ் மொழி பற்றியது. ஏனைய பயன்பாடுகளுக்கு தமிழ் (மாற்றுப் பயன்பாடுகள்) பக்கத்தைப் பாருங்கள்.

தமிழ் மொழி (Tamil language) தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயுனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ்[3], ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.[4]

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும்.[5] திராவிடமொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் [6] மேலும் கவனமாகப் பழைய அமைப்புகளைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் என்பது, ஒவ்வொரு தமிழனது உயிரோடு சம்பந்தப்பட்டது.

அந்தத் தமிழை இதுவரை... 35 லட்சம் என்று, ஈழதேசத்தில் வாழ்ந்த மக்களே... அழியாமல், பாதுகாத்தவர்கள்.

அவர்களுக்கும், முள்ளிவாய்க்காலில்... வாய்க்கரிசி போட்ட பின், தமிழகமே... தமிழைக் காக்க வேண்டும்.

.

.

.

.

.

.

அந்த, நம்பிக்கை, எனக்கு,இத்தூண்டு(எரப்பன்).... தான் இருக்குது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழில் பேச தயக்கப்படும் உறவுகளே , உலகில் பேசப்படும் மொழிகளில் மிகப் பழைய சிறப்பு மிக்க மொழி தமிழ்மொழி என இங்கிலாந்தில இருந்து வெளியாகிற ஒரு பத்திரிகையில போட்டிருக்காங்க. "மாடு சொன்னா கேட்க மாட்டீங்க. மணி கட்டின மாடு சொன்னா கேட்பீங்கதானே " இனியாவது தமிழனோட தமிழ்ல கதையுங்க.

நான் கொஞ்ச நாளைக்குமுதல் லண்டனுக்கு ஒரு விசயமாய் போனனான்.......அப்ப சொந்தம் எண்ட பேரிலை ஒரு படிச்சவர்(77லை வந்துட்டாராம்) எனக்குக்கிட்டவந்து இங்கிலிசிலை வெளுத்துவாங்கினார்....அப்ப நான் சொன்னன்.......ஏன் நீங்கள் தமிழிலை கதைக்கலாம்தானே எண்டன்....அதுக்கு அவர் பக்கெண்டு ஓ....உங்களுக்கு இங்கிலிஸ் தெரியாதெண்டு எனக்கு தெரியாது சொறி எண்டு நக்கலாய் சொல்லிப்போட்டு.......பிறகு சன்ரிவி தமிழிலை சரளமாய் என்னோடை கதைச்சார்......தாங்கள் வீட்டிலை தமிழே கதைக்கிறேல்லையாம்.....தன்ரை பிள்ளையளுக்கு தமிழ் எழுதவாசிக்க மாட்டினமாம்...அதைவேறை பெருமையாத்தான் சொன்னவர்.ஜேர்மனியிலை நாங்கள் தமிழாக்களை கண்டால் வணக்கம் சொல்லுவம்.லண்டனிலை வணக்கம் சொன்னால் மரியாதை கெட்டவேலை :lol:

[size=4]இலண்டனில் தற்பொழுது நடைமுறையில் உள்ள தமிழ் பரீட்சை முறையை (ஆக ஐந்து மொழிகள் மட்டுமே இருக்கும்) நீக்க உள்ளார்கள். [/size]முடிந்தவர்கள் கையொப்பம் இடலாம்:

[size=5]OCR in UK currently conduct Asset Language examinations in Tamil and other languages. They are going to stop the exams. [/size][size=5]Can you please sign this petition to support us on our fight to stop the decision[/size]

[size=5]Petition: http://www.change.org/en-GB/petitions/keep-our-languages-exams-every-language-is-an-asset[/size]

  • கருத்துக்கள உறவுகள்

நான் கொஞ்ச நாளைக்குமுதல் லண்டனுக்கு ஒரு விசயமாய் போனனான்.......அப்ப சொந்தம் எண்ட பேரிலை ஒரு படிச்சவர்(77லை வந்துட்டாராம்) எனக்குக்கிட்டவந்து இங்கிலிசிலை வெளுத்துவாங்கினார்....அப்ப நான் சொன்னன்.......ஏன் நீங்கள் தமிழிலை கதைக்கலாம்தானே எண்டன்....அதுக்கு அவர் பக்கெண்டு ஓ....உங்களுக்கு இங்கிலிஸ் தெரியாதெண்டு எனக்கு தெரியாது சொறி எண்டு நக்கலாய் சொல்லிப்போட்டு.......பிறகு சன்ரிவி தமிழிலை சரளமாய் என்னோடை கதைச்சார்......தாங்கள் வீட்டிலை தமிழே கதைக்கிறேல்லையாம்.....தன்ரை பிள்ளையளுக்கு தமிழ் எழுதவாசிக்க மாட்டினமாம்...அதைவேறை பெருமையாத்தான் சொன்னவர்.ஜேர்மனியிலை நாங்கள் தமிழாக்களை கண்டால் வணக்கம் சொல்லுவம்.லண்டனிலை வணக்கம் சொன்னால் மரியாதை கெட்டவேலை :lol:

உப்பிடியான வீடுகளுடன், தொடர்பு வைப்பது.... பாவம் குமாரசாமி அண்ணை.

உப்பிடியான வீடுகளுடன், தொடர்பு வைப்பது.... பாவம் குமாரசாமி அண்ணை.

லண்டன் சனத்துக்கு, கொழுபுக் கூட...

இன்கிலாந்தை... ஒட்டு மொத்தமாக... எடுத்துப் பார்த்தால்... வாழ்வது பிச்சைக்கார வாழ்க்கை.

நான்... வேலை விடயமாக... கார்டிஃ f போகும் போது, தெரியும்... அவர்களது வக்காலத்து.

  • கருத்துக்கள உறவுகள்

மொழியை இழந்தால் அடையாளத்தினை இழப்பீர்கள். வீட்டில் தமிழ் மொழி பேசுவதுடன் உங்கள் குழந்தைகளுக்கு தூயதமிழில் பெயர் வைக்க வேண்டும். இந்து சைவ மதங்களைப் பின்பற்றுபவர்கள் தமிழ் அல்லாத பெயர்களை எண் சோதிட மாயையினால் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுகிறார்கள். உ+ம் - சில பெண் பிள்ளைகளுக்கு பெயர் லக்சிதா - சிறிலங்கா துடுப்பாட்ட அணியில் இருக்கும் சிங்கள துடுப்பாட்ட வீரரின் பெயர். கிறிஸ்தவ மதத்தினைப் பின்பற்றுபவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கிலப் பெயர் சூட்டுகிறார்கள். இஸ்லாம் மதத்தினைப் பின்பற்றுபவர்கள் அரேபியார்களின் பெயர்களை சூட்டுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில்... சாமி கும்பிடற சாட்டில்,

சுடு சோறோ, பழஞ்சோறோ என்று... வெட்கப் படாமல், ஆவெண்டு நிக்கும்... தமிழ்ச்சனத்தை... அடையாளம் கண்டு பிடிக்க வேணும்.

செம்மனச் செல்வி, கூட... புட்டுக்கு , மண் சுமக்க முடியாமல் இருக்க, சிவ பெருமான் மண் சுமந்த பூமி, இது.

நான் கொஞ்ச நாளைக்குமுதல் லண்டனுக்கு ஒரு விசயமாய் போனனான்.......அப்ப சொந்தம் எண்ட பேரிலை ஒரு படிச்சவர்(77லை வந்துட்டாராம்) எனக்குக்கிட்டவந்து இங்கிலிசிலை வெளுத்துவாங்கினார்....அப்ப நான் சொன்னன்.......ஏன் நீங்கள் தமிழிலை கதைக்கலாம்தானே எண்டன்....அதுக்கு அவர் பக்கெண்டு ஓ....உங்களுக்கு இங்கிலிஸ் தெரியாதெண்டு எனக்கு தெரியாது சொறி எண்டு நக்கலாய் சொல்லிப்போட்டு.......பிறகு சன்ரிவி தமிழிலை சரளமாய் என்னோடை கதைச்சார்......தாங்கள் வீட்டிலை தமிழே கதைக்கிறேல்லையாம்.....தன்ரை பிள்ளையளுக்கு தமிழ் எழுதவாசிக்க மாட்டினமாம்...அதைவேறை பெருமையாத்தான் சொன்னவர்.ஜேர்மனியிலை நாங்கள் தமிழாக்களை கண்டால் வணக்கம் சொல்லுவம்.லண்டனிலை வணக்கம் சொன்னால் மரியாதை கெட்டவேலை :lol:

லண்டனில பல தரப்பட்ட தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். ஆரம்ப காலங்களில் வந்த மக்களின் பிள்ளைகள் தமிழ் அறிய மாட்டார்கள். ஆரம்ப காலத்தில் லண்டனில் 10 பேருடன் ஒரு சிறிய அறையினுள் மாவீரர் தினம் கொண்டாடப்பட்டது போல. பெருமளவில் தமிழ் மக்கள் லண்டனுக்கு புலம் பெயர்ந்த பின்னர் தான் தமிழ் பாடசாலைகளை நிறுவி தமிழ் மொழி உட்பட பல கலைகளையும் பிள்ளைகள் கற்க வசதி செய்து கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் கணிசமான அளவில் பிள்ளைகள் தமிழ் படிக்கின்றார்கள்.

தமிழ் மொழி மீது பற்றுள்ள பெற்றோர்கள் எந்த நாட்டிலிருந்தாலும் தத் தமது பிள்ளைகளுக்கு தமிழ் மொழியை புகட்டுவதற்க்கு தயங்கமாட்டார்கள்.ஒரு சில நண்பர்களை வைத்துக்கொண்டு லண்டனில் வாழும் எல்லா மக்களும் அப்படித்தான் என்று எண்ண வேண்டாம்.

யாழ்ப்பாணத்திலேயே 'ஆங்கிலத்தில்' பேசுவதை பெருமையாய் பலர் நினைக்கும் போது. லண்டனில் இருக்கிறவன் ஆங்கிலத்தில் பேசுகிறான் என்று குறை கூறுவதை எப்படி எடுத்துக்கொள்வது என்று புரியவில்லை.

யாழ்ப்பாணத்தில் இப்பொழுது சின்ன வகுப்பிலேயே ஆங்கில மொழி மூலம் பாடங்களை போதிக்கும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. தெரியுமா உங்களுக்கு? இதை நான் பெருமையாக நினைக்கவில்லை.

உப்பிடியான வீடுகளுடன், தொடர்பு வைப்பது.... பாவம் குமாரசாமி அண்ணை.

உப்பிடியான வீடுகளுடன், தொடர்பு வைப்பது.... பாவம் குமாரசாமி அண்ணை.

லண்டன் சனத்துக்கு, கொழுபுக் கூட...

இன்கிலாந்தை... ஒட்டு மொத்தமாக... எடுத்துப் பார்த்தால்... வாழ்வது பிச்சைக்கார வாழ்க்கை.

நான்... வேலை விடயமாக... கார்டிஃ f போகும் போது, தெரியும்... அவர்களது வக்காலத்து.

நீங்கள் எந்த நாட்டில் வசிக்கின்றீர்களோ யான் அறியேன். ஆனால் இந்த மாதிரியான லண்டன் வாழ் தமிழ் மக்களை பற்றிய விமர்சனங்களை ஐரோப்பாவின் பல இடங்களுக்கும் போகும் போது நான் எனது சொந்த காதுகளினால் கேட்டிருக்கின்றேன். ஏன் இப்படிப்பட்ட விமர்சனங்களை வைக்கிறார்கள் என்று தெரியவில்லை.

குமாரசாமியின் நண்பருக்கு கொழுப்பு கூட என்று எழுதினால் பரவாயில்லை. லண்டன் சனத்திற்க்கு கொழுப்பு கூட .........என்று எழுதுவது ஏன் என்று புரியவில்லை.

குமாரசாமியின் நண்பர் ஆங்கிலத்தில் பேசியதற்காக 'இங்கிலாந்து வாழ்க்கை பிச்சைக்கார வாழ்க்கை' என்று எழுதுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.

வேலை விடயமாக cardiff க்கு வருவதாக எழுதியுள்ளீர்கள். பிச்சை எடுக்கவா வருகிறீர்கள்( பிச்சைக்கார நாட்டில் வேறு என்ன வேலை கிடைக்கும்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Which is the oldest language that is still spoken?

In: Ancient History, Languages and Cultures [Edit categories]

ACCA Accounting Courseswww.LSBF.org.uk/ACCA

Professional tutors team, full ACCA Syllabus available online. Enrol!

Need Help with Assignmentwww.universityessays.org/

Top Quality Help, Support & Advice by UK based Oxbridge Experts

Ads

Answer:

The oldest language is Tamil contrary to the popular belief that it is Sanskrit.

Sanskrit is the mother of the Indo Aryan languages like Hindi and Punjabi but not to the indigenous Languages like Tamil, the mother of all other languages like Malayalm ,Telugu Kannada etc.

Many people will say that Sanskrit was used for writing religious stuff etc. but we all have to understand that the creators of Sanskrit were the Aryans who were intruders on Indian soil and they mingled with the native Dravidians ,who spoke the native language Tamil.

Then, after the Aryans fabricated Hinduism, Sanskrit became the basic language in which all religious Hindu texts were written; the birth of Sanskrit is only during 1500 BCE after the arrival of the Aryans.

The birth of Tamil Language is unknown but one of the earliest texts is even dating back to 5000 BCE, which clearly speaks for itself. Tamil is the OLDEST LANGUAGE

Read more: http://wiki.answers.com/Q/Which_is_the_oldest_language_that_is_still_spoken#ixzz24APP0kin

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடன் ஒரு பாகிஸ்தானியும் ஆங்கிலேயனும் வேலை செய்கிறார்கள். பலதும் பத்தும் கதைப்போம். அரசியல், விளையாட்டு, வரலாறு, விஞ்ஞானம், தொழில்நுட்பம் இப்படி பல. பல வேளைகளில் இஸ்லாம் மதத்தை பற்றி அவர்கள் இருவரும் வாக்கு வாதப்படுவார்கள். இதில் உண்மை என்னவென்றால் என் மதத்தை பற்றியும் மொழியை பற்றியும் எனது ஆங்கிலேய நண்பன் தெளிவாக இருக்கின்றான். அவன் பாகிஸ்தான் நண்பருக்கு சொல்லுவான் " அகஸ்தியனின் மொழியும் மதமும் தொன்மை வாய்ந்தவை, அவை இயற்கையோடு தோன்றி பின்னர் அறிஞர்களால் நெறி படுத்தப்பட்டது". தமிழ் மொழி எப்போது தோன்றினது என்று சொல்வது கடினம், இது நாகரீகம் தோன்றிய காலத்துக்கு முற்பட்டது.

குறிப்பு

இந்த ஆங்கிலேய நண்பன், எமக்காக முள்ளிவாய்க்கால் போரின் போது பிரதருக்கு, உள்ளூர் MP என பலருக்கு கடிதம் எழுதினவர். அவன் சொல்லுவான், " ஒரு இன விடுதலை போராட்டத்தை அழிப்பது கடினம், இன்று இவன் சாகலாம் ஆனால் இவன் இழப்பு பலரை உருவாக்கும். வடக்கு அயர்லாந்தில் கண்ட உண்மையும் இதுதான்."

தமிழ் என்பது, ஒவ்வொரு தமிழனது உயிரோடு சம்பந்தப்பட்டது

சில தமிழருக்கு அதன் பெருமை தெரியாது வேற வேற மொழிகளில் பேசுவதை பெருமையாக நினைக்கின்றான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டனில பல தரப்பட்ட தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். ஆரம்ப காலங்களில் வந்த மக்களின் பிள்ளைகள் தமிழ் அறிய மாட்டார்கள். ஆரம்ப காலத்தில் லண்டனில் 10 பேருடன் ஒரு சிறிய அறையினுள் மாவீரர் தினம் கொண்டாடப்பட்டது போல. பெருமளவில் தமிழ் மக்கள் லண்டனுக்கு புலம் பெயர்ந்த பின்னர் தான் தமிழ் பாடசாலைகளை நிறுவி தமிழ் மொழி உட்பட பல கலைகளையும் பிள்ளைகள் கற்க வசதி செய்து கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் கணிசமான அளவில் பிள்ளைகள் தமிழ் படிக்கின்றார்கள்.

தமிழ் மொழி மீது பற்றுள்ள பெற்றோர்கள் எந்த நாட்டிலிருந்தாலும் தத் தமது பிள்ளைகளுக்கு தமிழ் மொழியை புகட்டுவதற்க்கு தயங்கமாட்டார்கள்.ஒரு சில நண்பர்களை வைத்துக்கொண்டு லண்டனில் வாழும் எல்லா மக்களும் அப்படித்தான் என்று எண்ண வேண்டாம்.

யாழ்ப்பாணத்திலேயே 'ஆங்கிலத்தில்' பேசுவதை பெருமையாய் பலர் நினைக்கும் போது. லண்டனில் இருக்கிறவன் ஆங்கிலத்தில் பேசுகிறான் என்று குறை கூறுவதை எப்படி எடுத்துக்கொள்வது என்று புரியவில்லை.

யாழ்ப்பாணத்தில் இப்பொழுது சின்ன வகுப்பிலேயே ஆங்கில மொழி மூலம் பாடங்களை போதிக்கும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. தெரியுமா உங்களுக்கு? இதை நான் பெருமையாக நினைக்கவில்லை.

முதலில் நான் என்ன எழுதியிருக்கின்றேன் என்பதை எழுதுக்கூட்டி வாசியுங்கள் முருகா!

சிறிய கோட்டுக்குமுன் இன்னொரு பெரிய கோட்டை கீறி உண்மையான விடையங்களை மறைக்காதீர்கள்.........

முதலில் நான் என்ன எழுதியிருக்கின்றேன் என்பதை எழுதுக்கூட்டி வாசியுங்கள் முருகா!

சிறிய கோட்டுக்குமுன் இன்னொரு பெரிய கோட்டை கீறி உண்மையான விடையங்களை மறைக்காதீர்கள்.........

எது உண்மையான விடயம் என்பதை தெளிவு படுத்தினால் நல்லது.

நீங்கள் தமிழில் எழுதியுள்ளதால் எழுத்துக்கூட்டி வாசிக்க கொஞ்சம் சிரமமாக இருக்குது குமாரசாமி .

ஏனென்றால் நாங்கள் 77 இலேயே லண்டனுக்கு வந்திட்டம் பாருங்கோ.

உண்மையில் தமிழனின் வரலாற்றை தோண்டிப்பார்த்தால் அவனுடைய ஆரம்ப அடையாளம் பாகிஸ்தானுக்குள்ளதான் இருக்கும் அங்கிருந்து அடிவாங்கி அடிவாங்கி இன்று தென் இந்தியாவின் ஒரு மூலையிலும் ஈழத்தீவின் கரைகளிலும் நிற்கின்றோம். இந்நிலை காலம் காலமாக எம் இனத்துக்குள் தோன்றி வந்த சுயநல இனத்துரோகிகளினால் உருவானது. இன்றுவரையும் தமிழ் வாழ்கின்றது தமிழர்கள் வாழ்கின்றனர் என்றால் அது காலம் காலமாக எம் இனத்துக்குள் தோன்றிய மான மாவீரர்களினாலேயே.

நீங்கள் எந்த நாட்டில் வசிக்கின்றீர்களோ யான் அறியேன். ஆனால் இந்த மாதிரியான லண்டன் வாழ் தமிழ் மக்களை பற்றிய விமர்சனங்களை ஐரோப்பாவின் பல இடங்களுக்கும் போகும் போது நான் எனது சொந்த காதுகளினால் கேட்டிருக்கின்றேன். ஏன் இப்படிப்பட்ட விமர்சனங்களை வைக்கிறார்கள் என்று தெரியவில்லை.

குமாரசாமியின் நண்பருக்கு கொழுப்பு கூட என்று எழுதினால் பரவாயில்லை. லண்டன் சனத்திற்க்கு கொழுப்பு கூட .........என்று எழுதுவது ஏன் என்று புரியவில்லை.

குமாரசாமியின் நண்பர் ஆங்கிலத்தில் பேசியதற்காக 'இங்கிலாந்து வாழ்க்கை பிச்சைக்கார வாழ்க்கை' என்று எழுதுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.

வேலை விடயமாக cardiff க்கு வருவதாக எழுதியுள்ளீர்கள். பிச்சை எடுக்கவா வருகிறீர்கள்( பிச்சைக்கார நாட்டில் வேறு என்ன வேலை கிடைக்கும்)

இதே பற்று தாயகத்திலும் இருக்கும் தானே!

பற்று பிரேதசவாதமாக மாறாவிட்டால் நன்மை!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் வாழ உலகில் வீர வரலாறு எழுதிய எங்கள் தேசியத்தலைவன் பிரபாகரனின் பங்கு கணக்கிட முடியாதது இன்றும் உலகம்பூராவும் தமிழ் பரவிக்கிடக்கின்றது என்றால் அந்தப் புகழ் தலைவரையே சாரும் அந்த தலைவனின் காலத்தில் வாழ்ந்தேன் என்பதில் எனக்கும் மிகவும் பெருமை.

இதே பற்று தாயகத்திலும் இருக்கும் தானே!

பற்று பிரேதசவாதமாக மாறாவிட்டால் நன்மை!

தாயகத்தில பற்று இருந்திருந்தால் தாயகத்தை விட்டு ஓடி வந்திருப்போமா??

ஓடி வந்திருந்தாலும் புலி அடிச்சது என்று சொல்லி அகதி அந்தஸ்த்து கேட்டிருப்போமா ???

430361_10151118523803750_1564700166_n.jpg

[size=5]

:( கொலை செய்யப்படும் மூத்த மொழி :([/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எது உண்மையான விடயம் என்பதை தெளிவு படுத்தினால் நல்லது.

நீங்கள் தமிழில் எழுதியுள்ளதால் எழுத்துக்கூட்டி வாசிக்க கொஞ்சம் சிரமமாக இருக்குது குமாரசாமி .

ஏனென்றால் நாங்கள் 77 இலேயே லண்டனுக்கு வந்திட்டம் பாருங்கோ.

முதலில் ஒன்றைக்கவனியுங்கள் நான் ஒட்டுமொத்த பிரிட்டிஷ்தமிழர்களையும் சொல்லவில்லை.அத்துடன் என் சொந்தமென்றுதான் அங்கே குறிப்பிட்டேன்.இது ஏன் உங்களுக்கு முள்ளாய்குத்தியது என்று எனக்குத்தெரியவில்லை.

பிள்ளைகளை விடுங்கள்.அவர்களில் பெரும்பாலானோர் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள்.பெற்றோர்களோ அல்லது வயதுவந்தவர்களோ யாராக இருந்தாலும் கொண்டாட்டங்களிலும்,சந்திக்கும் இடங்களிலும் ஆங்கிலத்திலேயே உரையாடுகின்றனர்.ஜேர்மனியில் அப்படியல்ல.தமிழரைக்கண்டால் தமிழிலேயே கதைப்பார்கள்.பிள்ளைகளைத்தவிர்த்து......

யாழ்ப்பாணத்திலேயே 'ஆங்கிலத்தில்' பேசுவதை பெருமையாய் பலர் நினைக்கும் போது. லண்டனில் இருக்கிறவன் ஆங்கிலத்தில் பேசுகிறான் என்று குறை கூறுவதை எப்படி எடுத்துக்கொள்வது என்று புரியவில்லை.

அதுதான்......அந்த தாக்கம்தான் இனியும் வேண்டாம் என்கிறோம்.இனியாவது எந்தநாட்டில் இருக்கும் தமிழனும்......தமிழனைக்கண்டால் தமிழில் கதையுங்கள் என்கின்றோம்.

யாழ்ப்பாணத்தில் இப்பொழுது சின்ன வகுப்பிலேயே ஆங்கில மொழி மூலம் பாடங்களை போதிக்கும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. தெரியுமா உங்களுக்கு? இதை நான் பெருமையாக நினைக்கவில்லை.

தெரியும்....இதை ஏன் இங்கு எனக்கு தெரியப்படுத்துகின்றீர்கள் என விளங்கவில்லை?சிலவேளைகளில்...யாழ்ப்பாணத்திலேயே ஆங்கிலமொழி மூலம் பாடம் கற்பிக்கும் போது ....இலண்டனில் இருக்கும் நாம் ஆங்கலத்தில் உரையாடுவது தப்பில்லை என சமநிலைப்படுத்துகின்றீர்களோ தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.