Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைதிகளின் விடுதலை, காணாமல் போனவர்களின் வருகைக்காக 1008 தேங்காய் உடைத்து பிரார்த்தனை: த.தே.கூ.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=2]suresh60(9).gif[/size]

(ஜெ.டானியல், நவரத்தினம்)

[size=2][size=4]தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டியும் காணாமல் போனவர்களை பாதுகாப்பாக மீட்டுத்தர வேண்டியும் 1008 தேங்காய் உடைத்து காளியிடம் சிறப்புப் பிரார்த்தனை செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

சர்வதேச கைதிகள் தினமான செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் காணாமல் போனவர்கள் வீடு திரும்புவதற்கும் வவுனியா, குருமன்காட்டில் உள்ள காளிகோவிலில் காலை 10 மணிக்கு 1008 சிதறு தேங்காய் உடைத்துச் சிறப்புப் பிரார்த்தனை செய்யப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'யுத்தம் முடிவுற்று மூன்று ஆண்டுகள் ஆகியும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாமல் இருப்பது எமக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கின்றது. எனினும் அவர்களின் விடுதலை தொடர்பாக நாம் மேற்கொண்ட பல முயற்சிகளும் பலனற்றுப் போயுள்ளன.

இதுமட்டுமன்றி சிறைக்கூடங்கள் கூட தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பாதுகாப்பான இடமாகத் தோன்றவில்லை. அதற்கு சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் நிமலரூபன், தில்ருக்ஷன் ஆகியோர் மரணமடைந்தனர். சதீஸ்குமார் நினைவிழந்த நிலையில் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றார்.

தமிழ் அரசியல் கைதிகளின் உயிரையும் உரிமைகளையும் காப்பாற்ற வேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புகள், மனித உரிமைகளில் ஆர்வம் உள்ளோர், சமூக சேவகர்கள், சமுதாய நலனில் அக்கறை உள்ளோர் ஆகிய அனைவரதும் கடமையாகும். சிறைகளிலும் வதைமுகாம்களிலும் மற்றும் பிற இடங்களிலும் வாடுகின்ற அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

சர்வதேச சமூகம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கின்ற வகையில், சர்வதேச கைதிகள் தினத்தன்று இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் தமிழ் மக்களின் நலன்களில் அக்கறைகொண்டுள்ள ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய சோஷலிசக் கட்சி உள்ளிட்ட தென்னிலங்கை ஜனநாயக முற்போக்குச் சக்திகளும் கலந்துகொள்ள உள்ளனர். இவர்களுடன் சிறைக்கூடங்கள், தடுப்பு முகாம்கள் மற்றும் பிற இடங்களில் உள்ளவர்களின் உறவினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். அவர்களுடன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்' என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. [/size][/size]

[size=2][size=4]http://www.tamilmirr...120--1008-.html[/size][/size]

அன்னதானம் போட்டு பிராத்தனை செய்ய முடியாதா...??? ஏன் காசை கரியாகிறீங்கப்பா...??

  • கருத்துக்கள உறவுகள்

கோழி

முட்டைக்கதைதான் போலுள்ளது

நா.க. அரசு

கூட்டமைப்பு. :( :( :(

சரியான போட்டி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் கைதிகளின்

தலையை, கையை, காலை

தறித்தவன் தலைக்காக

தந்தோம் காளி

சிதறு தேங்காய் 1008

வாளேந்திய சிங்கமா -உன்

வாகன சிங்கமா

ஒருகை

பார்த்துவிடுவோம் .....

  • கருத்துக்கள உறவுகள்

தலையில அடிசுக்கொள்ள வேண்டியதுதான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே தமிழ் ஈழத்தையும் பெற்று தரும்படி வேண்டுதல் ஒன்றைவைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள உறுப்பினர்கள் தூக்கு காவடி எடுக்கலாமே ......

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே தமிழ் ஈழத்தையும் பெற்று தரும்படி வேண்டுதல் ஒன்றைவைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள உறுப்பினர்கள் தூக்கு காவடி எடுக்கலாமே ......

:icon_idea:

அப்படியே தமிழ் ஈழத்தையும் பெற்று தரும்படி வேண்டுதல் ஒன்றைவைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள உறுப்பினர்கள் தூக்கு காவடி எடுக்கலாமே ......

:D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே தமிழ் ஈழத்தையும் பெற்று தரும்படி வேண்டுதல் ஒன்றைவைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள உறுப்பினர்கள் தூக்கு காவடி எடுக்கலாமே ......

:D

  • கருத்துக்கள உறவுகள்

அன்றும் ,இன்றும்,என்றும் கடவுளின்பெயரை சொன்னால்தான் சனம் ஒன்று கூடும் .அது புலமாக இருந்தால் என்ன, தாயகமாக இருந்தால் என்ன ...சனத்தை வரப்பண்ணுவதற்க்கு இது ஒரு நல்ல முயற்சி..

சர்வதேச சிறைச்சாலை தினத்திற்க்கு வாங்கோ என்று அழைப்பு விடுத்திருந்தால் ஒரு சனமும் வராது.

தேங்காய் உடைக்கும் பொழுதே தெரியும் காளியின் கடைக்கண் பார்வை தமிழ்கைதிகளுக்கு கிடைக்கப் போவதில்லை என்று.இருந்தாலும் இவ்வளவு மக்கள் கலந்துகொண்டார்கள் என ஊடகம் மூலம் தெரியவரும்...

  • கருத்துக்கள உறவுகள்

அந்த 1008 தேங்காய்களையும் வறுமைக்கோட்டின் கீழ் இருக்கும் மக்களுக்கு இலவசமாகக் கொடுத்து இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

ஒன்றையும் உருப்படியாக செய்யாத கூட்டமைப்பு இதையாவது உருப்படியாக செய்யட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுமை சம்பந்தா.கடைசியில் கூட்டமைப்பின் ராஜதந்திரம் தேங்காயில் வந்து நிற்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன கொடுமை சம்பந்தா.கடைசியில் கூட்டமைப்பின் ராஜதந்திரம் தேங்காயில் வந்து நிற்கிறது.

:D :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.