Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுதந்திரமும் இறைமையும் உள்ள தனித் தமிழீழ அரசே எமது நிலைப்பாடு ! பிரதமர் வி.உருத்திரகுமாரன்

Featured Replies

சுதந்திரமும் இறைமையும் உள்ள தனித் தமிழீழ அரசே எமது நிலைப்பாடு ! பிரதமர் வி.உருத்திரகுமாரன்

தாயகம் தேசிய தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசையான சுதந்திரமும் இறைமையும் உள்ள தனித் தமிழீழ அரசே எமது நிலைப்பாடு என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28-10-2012) இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் கருத்தாடற்களத்தில் இணைவழி பரிவர்த்தனையூடாக இணைந்து கொண்டு உரையாற்றும் பொழுதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இக்கருத்தினை தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்காலுக்கு பிந்திய இலங்கைத்தீவின் இன்றைய சூழலில் தமிழர்கள் தங்களின் அரசியல் அபிலாசையினை வென்றெடுப்பது யதார்த்தமில்லை என்ற கருத்துக்களை நிராகரித்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் யாதார்தங்களுக்கு ஏற்றவாறு எமது நிலைப்பாட்டினை மாற்றிக் கொள்ள முடியதென்றும் தமிழர்களின் அபிலாசையினை வென்றெடுப்பதற்கான யதார்த்த நிலையினை ஏற்படுத்துவதே எமது நிகழ்ச்சி நிரலெனவும் உறுதிபட தனதுரையில் தெரிவித்தார்.

மேலும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனதுரையில் தெரிவிக்கையில் தெற்காசிய வட்டகையினை மையப்படுத்தி மாறிவரும் சர்வதேச ஓழுங்கில் தமிழீழ அமைவதற்கான சாத்தியங்கள் நிறையவே தெரிகின்றதென மேலும் தனதுரையில் கருத்துரைத்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இந்த மாற்றங்களை நுண்ணறிந்து வாய்ப்புக்களுஊடாக எமது இலக்கினை வென்றெப்பதே எமது இன்றைய இராஜாந்திரம் எனத் தெரிவித்தார்.

சர்வதே அரங்கில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள மறைமுக அங்கீகாரமானது நாளை சர்வதேச நாடுகளது வெளிப்படையான அங்கீகாரமாக மாறும் என்ற திடமான நம்பிக்கை உள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.

பிரான்சில் இடம்பெற்றிருந்த இந்நிகழ்வரங்கில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனது உரையினை வழங்கியிருந்ததோடு மக்களின் கேள்விகளுக்கு பதில்களை வழங்கியிருந்தார்.

பிரான்சின் பல்வே பகுதிகளிலும் இவ்வாறான மக்கள் சந்திப்புக்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

மேற்கொள்ள இருப்பதோடு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் நிகழ்வரங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மக்களின் கேள்விகளுக்கு பதில் தொடர்சியாக பதில் அளிக்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நா.த.அரசாங்கத்தின் ஊடக விவகாரங்களுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாதம் ஊடகசேவை

பிரபாகரன் இடைக்கிடை இறங்கி வந்து பேச்சுவார்தைக்காவது போனார் இந்தாள் அதற்கும் தயாரில்லை போல கிடக்கு ,

பேய்காய் தான் .

தமிழீழம் என்றால் ஒருசிலருக்கு உதறல் எடுக்கும்! :D

பிரபாகரன் இடைக்கிடை இறங்கி வந்து பேச்சுவார்தைக்காவது போனார் இந்தாள் அதற்கும் தயாரில்லை போல கிடக்கு ,

பேய்காய் தான் .

எள்ளேன் காய்கிறது எண்ணையாகப்போகிறது.

நம்ம யாழின் எலிப்புளுக்கையும் படாத பாடு பட்டு பின்வளத்தை அடிகடி தூக்கியடிக்கிறது.

Edited by மல்லையூரான்

கோமணத்திற்கு வழியில்லை பட்டு வேட்டி வாங்கப்போறாராம் .

அறிக்கையுடன் மட்டும் நிற்பதென்றால் உதை வடிவா நாங்கள் விடுவம் .

  • கருத்துக்கள உறவுகள்

கோமணத்திற்கு வழியில்லை பட்டு வேட்டி வாங்கப்போறாராம் .

அறிக்கையுடன் மட்டும் நிற்பதென்றால் உதை வடிவா நாங்கள் விடுவம் .

நடைமுறையில் சாத்தியம் இல்லாத நிலைப்பாடு என்று அவருக்கு தெரியும். ஆனால் அந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசே நாடு கடந்த தமிழீழ அரசு. இவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கவும் மக்களுக்கு உரிமை இருக்கிறது என்பதையும் அந்த நிலைப்பாட்டுக்கு இடமளிக்க ஒரு அமைப்பு இருக்க வேண்டும் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

கோமணத்திற்கு வழியில்லை பட்டு வேட்டி வாங்கப்போறாராம் .

அறிக்கையுடன் மட்டும் நிற்பதென்றால் உதை வடிவா நாங்கள் விடுவம் .

அறிக்கை விட்டால் அதை நாலுபேர் கேட்கவேண்டும்.

அவர்விட்ட அறிக்கை உங்களையும் பேசவைச்சிருக்கே..

அதுதான்ய தகுதின்கிறது.

கோமணத்திற்கு வழியில்லை பட்டு வேட்டி வாங்கப்போறாராம் .

அறிக்கையுடன் மட்டும் நிற்பதென்றால் உதை வடிவா நாங்கள் விடுவம் .

கோமணம் தன்னும் கட்டாத அம்மணங்கள், கோமணம் வாங்க வழியில்லாதவர்கள் என்று யாரைத்தானும் கை காட்டி சிரிப்பதுதான் நகைப்பிற்கிடம்.

[size=1]நியானி: வசனம் ஒன்று தணிக்கை[/size]

Edited by நியானி

நடைமுறையில் சாத்தியம் இல்லாத நிலைப்பாடு என்று அவருக்கு தெரியும். ஆனால் அந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசே நாடு கடந்த தமிழீழ அரசு. இவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கவும் மக்களுக்கு உரிமை இருக்கிறது என்பதையும் அந்த நிலைப்பாட்டுக்கு இடமளிக்க ஒரு அமைப்பு இருக்க வேண்டும் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

நடைமுறைக்கு சாத்தியமில்லாத நிலைப்பாட்டை எந்த மக்கள் எடுத்தார்கள்? எங்கே எடுத்தார்கள்? மக்கள் மீது பழியை போடுவதாகவே இருக்கின்றது.

புலிகளின் பின்னால் தேசியத்துக்கான தலமைப்பொறுப்பை எடுக்க முண்டியடித்தீர்கள். அதன்படி நாடகடந்த அரசுஎன்று வெளிக்கிட்டீர்கள். ஓட்டுப்போட்டது தேர்ந்தெடுத்தது என்பதெல்லாம் ஒரு குறுகிய வட்டமே.

மக்கள் எதிர்பார்த்தது போரால் நிர்கதியான மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும், வதைமுகாமில் வாழும் மக்களுக்கு விமோசனத்துக்காக பாடுபடுவார்கள். சிறைப்பட்ட மக்களுக்கு முன்னாள் போராளிகளுக்கு ஆதரவாகக் குரல்கொடுப்பார்கள் எல்லாவற்றுக்கும் மேலாக பேர்க்குற்றம் மனித உரிமை மீறலை ஆதாரமாகக் கையில் எடுத்து அதன்பால் மக்கனை ஒன்றிணைத்து போராடுவார்கள் என்று. இது அத்தனையையும் நாசமாக்கி மகிந்தனையும் கோத்தாவையும் காப்பாற்றியதே நாடுகடந்த அரசின் அதி உச்ச செயற்பாடு. ஏகோபித்த மக்களும் இவர்களை தேர்ந்தெடுக்கவில்லை ஆனால் அப்படி ஒரு தோற்றத்தை உருவாக்கினார்கள். அறிக்கை விட்டதும் மகாருத்திர யாகம் நடத்தி பில்லி சூனியம் வைக்கிற றேஞ்சில் பாராளமன்றத்தை நடத்தியதுமா மக்களுக்கான போராட்டம்? ஒரே ஒரு ஆதராமாக இருந்து போர்க்குற்றம் மனித உரிமை மீறல் என்றதில் இருந்து மக்கள் கவனத்தை சிதறடித்தது ஒன்றுதான் நீங்கள் சாதித்தது.

சர்வதே அரங்கில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள மறைமுக அங்கீகாரமானது நாளை சர்வதேச நாடுகளது வெளிப்படையான அங்கீகாரமாக மாறும் என்ற திடமான நம்பிக்கை உள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.

[size=4]அமெரிக்கா ஒரு நேரத்தில் ஒரு ஆட்சியை தமிழர் பிரதேசத்தில் நிறுவ முயன்றால் அதற்கு நாடுகடந்த அரசு நிச்சயம் கொடுக்கும். காரணம் :[/size]

[size=4]- இவ்வாறு ஈராக்கில் தனக்கு சார்பான அரசை சதாமின் பின்னர் நிறுவியது [/size]

[size=4]- இழிபியாவில் கடாபிக்கு பின்னர் நிறுவியது[/size]

[size=4]- திறந்த பொருளாதார கொள்கை கொண்டவர்கள்[/size]

[size=4]- மேற்குலகம் சார்பான அரசியல் கொள்கை கொண்டவர்கள்[/size]

  • கருத்துக்கள உறவுகள்

நடைமுறையில் சாத்தியம் இல்லாத நிலைப்பாடு என்று அவருக்கு தெரியும். ஆனால் அந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசே நாடு கடந்த தமிழீழ அரசு. இவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கவும் மக்களுக்கு உரிமை இருக்கிறது என்பதையும் அந்த நிலைப்பாட்டுக்கு இடமளிக்க ஒரு அமைப்பு இருக்க வேண்டும் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

[size=4]இது குறைந்த பட்சம் ஐந்து அறிவாவது உள்ளவர்களுக்கு மட்டுமே புரிய கூடியது.[/size]

நடைமுறைக்கு சாத்தியமில்லாத நிலைப்பாட்டை எந்த மக்கள் எடுத்தார்கள்? எங்கே எடுத்தார்கள்? மக்கள் மீது பழியை போடுவதாகவே இருக்கின்றது.

புலிகளின் பின்னால் தேசியத்துக்கான தலமைப்பொறுப்பை எடுக்க முண்டியடித்தீர்கள். அதன்படி நாடகடந்த அரசுஎன்று வெளிக்கிட்டீர்கள். ஓட்டுப்போட்டது தேர்ந்தெடுத்தது என்பதெல்லாம் ஒரு குறுகிய வட்டமே.

மக்கள் எதிர்பார்த்தது போரால் நிர்கதியான மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும், வதைமுகாமில் வாழும் மக்களுக்கு விமோசனத்துக்காக பாடுபடுவார்கள். சிறைப்பட்ட மக்களுக்கு முன்னாள் போராளிகளுக்கு ஆதரவாகக் குரல்கொடுப்பார்கள் எல்லாவற்றுக்கும் மேலாக பேர்க்குற்றம் மனித உரிமை மீறலை ஆதாரமாகக் கையில் எடுத்து அதன்பால் மக்கனை ஒன்றிணைத்து போராடுவார்கள் என்று. இது அத்தனையையும் நாசமாக்கி மகிந்தனையும் கோத்தாவையும் காப்பாற்றியதே நாடுகடந்த அரசின் அதி உச்ச செயற்பாடு. ஏகோபித்த மக்களும் இவர்களை தேர்ந்தெடுக்கவில்லை ஆனால் அப்படி ஒரு தோற்றத்தை உருவாக்கினார்கள். அறிக்கை விட்டதும் மகாருத்திர யாகம் நடத்தி பில்லி சூனியம் வைக்கிற றேஞ்சில் பாராளமன்றத்தை நடத்தியதுமா மக்களுக்கான போராட்டம்? ஒரே ஒரு ஆதராமாக இருந்து போர்க்குற்றம் மனித உரிமை மீறல் என்றதில் இருந்து மக்கள் கவனத்தை சிதறடித்தது ஒன்றுதான் நீங்கள் சாதித்தது.

[size=4]உங்களுடைய கருத்துக்களுக்கு மிக்க நன்றி ![/size][size=1]

[size=4]போட்டு வாறோம்![/size][/size]

[size=4]இது குறைந்த பட்சம் ஐந்து அறிவாவது உள்ளவர்களுக்கு மட்டுமே புரிய கூடியது.[/size]

[size=4]உங்களுடைய கருத்துக்களுக்கு மிக்க நன்றி ![/size]

[size=1][size=4]போட்டு வாறோம்![/size][/size]

உங்களைப் புரிந்துகொள்ள முடிகின்றது.

பசி உங்களுக்கும் எனக்கும் பொதுவானது. உணவு தேடி நீங்கள் ஒரு விதமாக அலைகின்றீர்கள் நான் ஒருவிதமாக அலைகின்றேன். உழுது விதைத்து அறுவடை செய்து திங்காலம என்பது என்போக்கு ஆறறிவுடன் நீங்கள் இருப்பதால் இவைகளை தவிர்த்து வேறு ஒரு மார்க்கமாக பார்க்கலாம் என்பது உங்கள் போக்கு. தற்போதைக்கு அவரவர் பாட்டில் போகவேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பெரினவாதம் சிறிலங்காவில் இருக்கும் மட்டும் தமிழீழம் என்ற கோரிக்கை இருக்கத்தான் செய்யும்......

ஒருத்தன் ஈழம் வேணும் என்று கத்துவான்

இன்னோருவன் வேண்டாம் என்று கத்துவான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.