Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிறுக்கு கிழவி!

Featured Replies

கிறுக்கு கிழவி!

சென்ற ஆண்டு வந்த ஆண்டுடன்........

அஞ்சலோட்டம் புரிந்தது........

கூடி ஓடின காலம்.......

பார்த்துப்பார்த்து எனை வளர்த்தவள்.......

இப்போ படமாய் என்னெதிரே!

முட்டிய வயிறுடன் நானிருந்த போதும்..

இன்னும் ஒருவாய் ஊட்டிவிட ஏங்கியிருந்தவள்.......

அம்மா அடியிலிருந்து என்னை .....

காத்த காவலரண்!

அடி வயிற்றில் சுமக்காவிடிலும்...

பிரசவிக்காமாலே ......

பிரசவ வேதனை கொண்ட கடவுள் அவள்!

தடக்கி தடக்கி நான் நடந்த நாளில்

இன்னுமொரு தாயானவள்......

தடியூன்றி அவள் நடந்த நாளில் ......

என் சேயானவள்.........

சொல்லாமல் ஓடிட்டாள் சுயநலகாரி!

அழுக்கு படிந்த தாவணி .....

முடிச்சு அவிழ்ப்பாள்- ரகசியமாய்

தெருவோரம் - மணி சத்தம் கேட்டால்......

ஐஸ்பழத்துக்காய் -வாரக்கணக்காய்.....

தான் சேர்த்ததை .....

வாரியே இறைப்பாள்!

சிதறியது சில்லறை என்று .....

அப்போ நினைத்திருந்தேன்........

கல்லறைக்கு அவள் போன பின் தானே

புரியுது..........

கடவுளாய் அவளுக்கு நானிருந்தேன்......

காணிக்கை பெற்றேனென்று!

என்ன சொல்ல- கிறுக்கு கிழவி ......

என்னை போய்.............!

கவிதை நல்லாயிருக்கு வர்ணன் அண்ணா

யாரந்த கிறுக்கு கிழவி உங்கட அம்மம்மாவா அப்பம்மாவா இல்லை அயலவரா

எனக்கு இப்ப கூட எனது அம்மம்மா தான் பெஸ்ட் ப்ரண்ட் பெற்றவர்களை விட தாத்தா பாட்டியின் அன்பு என்பது எப்பவும் தனிதான் இல்லையா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்வர்ணன்

பலருக்குக் கிடைக்காத (குறிப்பாகப் புலம்பெயர் தேசங்களிலே) பாசத்தைப் பெறுவதற்கு நீங்கள் கொடுத்து வைத்தவர்.

மணிவாசகன்

பாசம் பேசும் உங்கள் கவி அருமை வர்ணன். வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கிறுக்குக்கிழவி உங்களைத் தன்னந்தனியாக விட்டுப்போய்விட்டாள்

என்று கவலைப்படத்தேவையில்லை

ஏனென்றால் ஒரு கிறுக்கைக் கடவுள் உங்களிடம் இருந்து

பறிக்கும்போது

இன்னொரு கிறுக்கை உங்களுக்குக் காட்டியிருப்பார்

ஞாபகப்படுத்திப் பாருங்கள்

:P :P :P :P :P :P

வாழ்த்துக்களோடு வல்வை சகாறா.

தெருவோரம் - மணி சத்தம் கேட்டால்......

ஐஸ்பழத்துக்காய் -வாரக்கணக்காய்.....

தான் சேர்த்ததை .....

வாரியே இறைப்பாள்!

நல்லவரிகள் நன்றி வர்ணன்

வர்ணன் வார்த்தைகள் இல்லை. இந்த கிழவிகளே இப்படித்தான். பாசம் மேல் பாசத்தை வைத்து விட்டு சொல்லிக் கொள்ளமால் போய்விடுவார்கள். அவர்களின் பிரிவை தாங்க முடியமால் தவிப்பது நாம் தானே.

அழகான வரிகள். வாழ்த்துக்கள்

¿øÄ ¸Å¢¨¾

¦¿í¨º °¼ÚìÌõ Åâ¸û...

À¡¾¢ì¸ôÀ¼¡Áø

Áɾ¢ø þì¸üÀ¨É §¾¡ýÚÅÐ

ºó§¾¸§Á......!

À¡Ã¡ðÎì¸û....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாசத்தின் வாசத்தைப் பேச வார்த்தைகள் கிடையாது.

தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் தொடுத்த கவிதை தொடுகின்றது இதயத்தை.

வாழ்த்துக்கள்!

நெஞ்சத்தில் படம் போட்டுக் காட்டும் வரிகள்..வாழ்த்துக்கள் வர்ணன் அருமையான கவி தொடருங்கள் :arrow:

  • தொடங்கியவர்

நித்திலா எழுதியது:

யாரந்த கிறுக்கு கிழவி உங்கட அம்மம்மாவா அப்பம்மாவா இல்லை அயலவரா

சகோதரம் - என்னோட அம்மம்மாதான் !

அவ மறைந்த தினம்- இந்த கவிதை எழுதிய நாள்!

  • தொடங்கியவர்

நன்றிகள் - நிறைய .....

கீதா - மணிவாசகன் -ரசிகை - வல்வை-புறா- ரமா-முருகா -ஆசிரியர் - கெளரிபாலன்! 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் நல்லதொரு கவிதையை கொடுத்திருக்கிறீர்கள். யாரும் போகும் போது போய் விடுவார்கள். அவர்களுக்காக மற்றவர்கள் வேதனைப்படுவது அவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது. வாழ்த்துக்கள் உங்கள் உணர்வுக்கவிக்கு.

நல்லா இருக்கு கவிதை :P

முட்டிய வயிறுடன் நானிருந்த போதும்..

இன்னும் ஒருவாய் ஊட்டிவிட ஏங்கியிருந்தவள்.......

அம்மா அடியிலிருந்து என்னை .....

காத்த காவலரண்!

ம்ம்...சில பேருக்கு இப்படியெல்லாம் அம்மம்மா கூட இருந்து அவாட கையால சாப்பிட்டு அவா தரும் முத்ததங்களை வாங்க குடுத்து வச்சிருக்கும்... சில பேருக்கு குடுத்து வைக்காது ...! :lol:

ம்ம் அம்மம்மா பற்றிய கவி ரொம்ப நல்லாயிருக்கு வர்ணன்...! வாழ்த்துக்கள்..! :)

எனது அம்மம்மாவை தவிர மற்றய மூவரும் இப்போது உயிருடன் இல்லை. என்னுடைய அம்மப்பா நான் அண்மையில் யாழ் சென்றிருந்த போது தான் காலமானார். வர்ணனின் வரிகள் நான் சிறு வயதில் அவர்களின் கழித்த நேரங்களை நினைவூட்டியது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.