Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொந்த இனத்தையே காட்டிக் கொடுத்துப் பிழைப்பு நடத்தும் கே.பி

Featured Replies

traitor-kp-at-jaffna.jpg

கனடாவுக்குள் ஏதிலியெனப் புகலிடம் தேடிய ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ்க்கு சமீபத்தில் ஒரு பேட்டியை விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேசத் தொடர்பாளராக இருந்த கே.பியென்கிற குமரன் பத்மநாதன் வழங்கியிருந்தார். இப் பேட்டியில் தான் தோன்றித்தனமாக தமிழீழ விடுதலை குறித்தும் அதற்காகப் போராடிய போராளிகள் குறித்தும் கே.பி. உளறி இருக்கிறார்.

[size=4]பத்திரிகையாளர் ஜெயராஜ் சில தசாப்தங்களாகவே தமிழீழ விடுதலைக்கு எதிராக பிரசாரங்களை மேற்கொண்டு வருவதுடன், சிறிலங்காவின் மறைமுக தூதுவராகவே கனடாவில் இயங்கி வருகிறார். கே.பி. கைது செய்யப்படுவதற்கு முன்னரே நல்லதொரு உறவை ஜெயராஜ் கே.பியுடன் பேணி வருகிறார்.[/size]

[size=4]தாய்லாந்தில் வசித்து வந்த கே.ரி.ராஜசிங்கம் போன்ற தமிழர்களைப் போன்றே ஜெயராஜும் தன்னால் இயன்ற அளவில் ஈழத் தமிழருக்கு எதிராகவும் சிங்களத்துக்கு ஆதரவாகவும் பிரசாரத்தைச் செய்து வருகிறார். இவர்களைப் போன்ற பல எட்டப்பர்களைப் பாவித்தே புலம்பெயர் ஈழத் தமிழர் மத்தியில் பொய்ப் பிரசாரங்களைச் செய்வதுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாசகார வேலைகளைச் செய்து வந்தது சிங்களம்.[/size]

[size=4]கே.பியை முன்னிலைப்படுத்தி பல உலக ஊடகங்கள் பேட்டி எடுத்தமைக்கு ஜெயராஜே காரணமாக இருந்தார். தமது சொந்த இனத்தையே காட்டிக் கொடுத்துப் பிழைப்பு நடத்தும் இவர்கள் போன்ற எட்டப்பர்கள் கூறும் பொய்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இது போன்ற கட்டுரைகளை எழுதுவது தேவையற்ற ஒன்றாக இருப்பினும், இவர்களின் பொய்களை வெளிக்கொண்டு வரும் வகையில் சில பதிவுகளை மேற்கொள்வதன் மூலமாக இன்னும் பல தகவல்களை அறியாமல் இருக்கும் மக்கள் அறிய உதவியாக இருக்கும் என்கிற காரணத்தினாலேயே இக்கட்டுரை வரையப்படுகிறது.[/size]

[size=4]இது போன்ற கட்டுரைகளைப் படித்தாவது கே.பி., ஜெயராஜ், ராஜசிங்கம் போன்ற எட்டப்பர்கள் திருந்துவார்களோ திருந்தமாட்டர்களோ என்பது முக்கியம் அல்ல இவற்றை வாசிக்கும் மக்கள் சிந்தித்துச் செயலாற்றுவார்கள் என்று எண்ணுகிறோம். உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கொடுத்து மக்களை மென்மேலும் முட்டாள்களாக்க முயற்சிகளைச் செய்வது பத்திரிகை தர்மம் அல்ல என்பதனைச் சிங்கள அரசின் எடுபிடிகள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.[/size]

[size=4]ஈழப் போராளிகளின் போராட்டத்தின் பின்னர் அவர்களைக் குறை சொல்லியே ஏதிலி அந்தஸ்தைப் பெற்ற ஜெயராஜ் போன்றவர்கள் உண்மைக்குப் புறம்பாகச் செயற்படுவது சிறப்பான அம்சம் அல்ல. மானிட தர்மத்துக்கே செய்யும் துரோகம்.[/size]

kp-kumaran-pathmanathan.jpg

[size=4]பதவிக்கு ஆசைப்பட்ட கே.பி.[/size]

[size=4]விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவுக்கு தானே பொறுப்பு என்று மார் தட்டிய கே.பி., பின்னர் விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என்று பிரகடனப்படுத்தினார். 2002-இல் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னரும் கூட விடுதலைப் புலிகளின் அமைப்பில் இருந்தார்.[/size]

[size=4]2003-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைமுறையில் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து தான் வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும் ஆனால் தொலைவிலிருந்து கள நிலைமைகளைப் பார்த்து வந்ததாகவும் கூறியுள்ளார் கே.பி. எதற்காக இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டார் என்கிற காரணத்தை இவர் கூறவில்லை. பத்திரிகையாளர் ஜெயராஜும் இது சம்பந்தமாகக் கேள்வி எழுப்பவில்லை.[/size]

[size=4]கே.பி. மேலும் கூறுகையில், “2008-ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் என்னுடன் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைமை தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது. அப்போது புலிகளின் தலைவர்கள், பொதுமக்களைப் பாதுகாக்க யுத்த நிறுத்தம் அவசியம் என்பதை நான் வலியுறுத்தினேன். 2008-ஆம் ஆண்டு டிசம்பரில் பிரபாகரன் என்னைச் சர்வதேசப் பொறுப்பாளராக நியமிக்க ஒப்புக்கொண்டார். யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வரவும் ஒப்புக் கொண்டார். 2008-ஆம் ஆண்டு டிசம்பரில் அப்படி ஒரு முடிவு எடுத்திருந்தாலும் யுத்த நிறுத்தத்தை நோக்கிய நகர்வுகள் புலிகள் தரப்பில் மிகவும் மெதுவாகவே இருந்தன.”[/size]

[size=4]“புத்தாண்டு பிறந்தபோது இராணுவமானது பரந்தன், கிளிநொச்சி, ஆனையிறவு ஆகியவற்றைக் கைப்பற்றியிருந்தது. அப்போதுதான் விடுதலைப் புலிகளின் தலைமை கவலைகொண்டு அதன் வெளிநாட்டுப் பிரிவுகளை என் தலைமையின் கீழ் இயங்கவும் உத்தரவிட்டது. எனக்கு ஆதரவு தரவும் சொன்னது. ஆனால் வெளிநாட்டுப் பொறுப்பாளராக இருந்த காஸ்ட்ரோ, தமது பிரதிநிதி நெடியவன் மூலமாக எனது செயற்பாடுகளைச் சீர்குலைத்தார். போதுமான பண உதவி செய்யப்படவில்லை. [/size]

[size=4]இருந்தபோதும் ஒரு யுத்த நிறுத்தத்துக்கான தீவிர முயற்சிகளை நான் மேற்கொண்டிருந்தேன். சர்வதேச சமூகத்தின் முக்கிய நபர்களுடன் இந்த விவகாரத்துக்காகத் தொடர்பு கொண்டிருந்தேன்” என்றும் கே.பி. கூறினார்.[/size]

[size=4]பதவி விலக்கப்பட்ட ஒருவரை விடுதலைப் புலிகளின் தலைவர் மீண்டும் இயக்கத்தில் இணைத்திருந்தால், அவருக்கு அதிக பொறுப்புக்களுடைய பதவியை அவர் கொடுத்திருக்க மாட்டார். கே.பியின் தகவலின்படி தன்னை விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளராக நியமிக்க தலைவர் ஒப்புக்கொண்டார் என்றே கூறியுள்ளார். இதிலிருந்து கே.பி. வலுக்கட்டாயமாகவே இப் பதவியைப் பெற்றார் என்பதனை ஊர்ஜிதப்படுத்தி உள்ளார். ஏற்கனவே விடுதலைப் புலிகளின் வலையமைப்புக்கள் அனைத்தும் சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த வேளையில் [/size][size=4]ஏதற்காக இயக்கத்தில் இருந்து விலக்கப்பட்டவருக்கு முக்கிய பதவி ஒன்றைத் தலைவர் அளித்தார் என்பது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.[/size]

[size=4]உயர் பதவி ஒன்றைத் தனதாக்கிக் கொள்ளவே நான்காம் கட்ட ஈழப் போரின் இறுதியில் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க கே.பியும் இணைந்தே செயலாற்றி இருக்கிறார் என்கிற ஐயப்பாடே தற்போது பரவலாக இருக்கிறது. இவருடைய பேட்டியும் இதனையே உறுதிப்படுத்துகிறது. பதவி ஆசையில் தமிழீழப் போராட்டத்தையே மழுங்கடித்த பெருமை கே.பியையும் சாரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.[/size]

[size=4]நோர்வேக்கு சான்றிதழ் கொடுக்கும் கே.பி.[/size]

[size=4]நோர்வேயின் பங்கு என்ன என்கிற கேள்விக்கு, கே.பியின் பதில் நோர்வேக்கு நற்சான்றிதழ் கொடுப்பதாகவே அமைந்துள்ளது. இது குறித்து கே.பி. கூறும் போது “நோர்வே யுத்த நிறுத்தம் மற்றும் அமைதி முயற்சிகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட நாடு. நோர்வே மட்டும் குறிப்பிடத்தக்க அர்த்தமுள்ள பணியை ஆற்றியிருக்காவிட்டால் போர் நீண்டு இன்னும் மிக மோசமாக இருந்திருக்கும். ஆகக் கூடுமானவரையில் உயிரிழப்புகளைத் தடுக்கவே நோர்வே விரும்பியது. மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்பினர்.”[/size]

[size=4]ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச வந்தவுடன் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை இரட்டிப்பாக்கினார். விடுதலைப் புலிகளுடன் ரணில் அரசு செய்த சமாதான ஒப்பந்தத்தை இல்லாதொழித்தார். ஸ்கண்டநேவிய நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்களை நாட்டை விட்டு வெளியேறும் படி உத்தரவிட்டார். பத்திரிகையாளர்கள், கல்விமான்கள், மனித உரிமை அமைப்புக்களின் ஊழியர்கள் எனப் பலர் கொலை செய்யப்பட்டனர். பலர் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். இக் கொடுமைகளை நிறுத்த நோர்வேயினால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது என்பதே உண்மை.[/size]

[size=4]திருகோணமலையின் முக்கிய பகுதிகளைச் சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளிடம் இருந்து கைப்பற்றினார்கள் விடுதலைப் புலிகள். உடனேயே விடுதலைப் புலிகளுக்கு எதிரான கண்டனங்கள் சர்வதேச நாடுகளிடம் இருந்தும், மத்தியஸ்த நாடான நோர்வேயிடம் இருந்தும் வந்தது. விடுதலைப் புலிகளின் தலைமை உடனேயே கைப்பற்றிய இடங்களை விட்டு தளம் திரும்புமாறு விடுதலைப் போராளிகளுக்குக் கட்டளையிட்டது. ஆக விடுதலைப் புலிகள் ஒப்பந்தத்தின் சரத்துக்களை மீறினால் குற்றம், ஆனால் சிங்களம் குறித்த சரத்துக்களை மீறினாலோ அல்லது கிழித்து எறிந்தாலோ குற்றம் இல்லை என்கிற வாதத்தையே நோர்வே அப்போது ஏற்றுக் கொண்டது.[/size]

[size=4]மத்தியஸ்தம் வகிக்க முக்கிய தகமைகள் இருக்க வேண்டும். இத் தகமைகளுக்குப் பொருத்தம் இல்லாத நாடாகவே நோர்வே செயற்பட்டது. இந்தியா போன்ற நாடுகளின் அழுத்தங்களே நோர்வேயின் குறித்த செயற்பாடுகளுக்குக் காரணமாக இருந்தது. கே.பி. சொல்வதொன்றும் தானாகக் கூறுவது என்று கூறிவிட முடியாது. இந்தியாவின் முக்கிய கொள்கை வகுப்பாளர்கள் எழுதிக் கொடுக்க அதனை ஜெயராஜ் கே.பியுடன் கலந்து ஆலோசித்த பின்னரே வெளி வந்திருக்கும் பேட்டியென்றே இதனைக் கூற வேண்டும்.[/size]

[size=4]கோலாலம்பூரில் இருக்கும் ஹில்டன் ஹோட்டலில் ஒரு கூட்டத்தை நோர்வே கூட்டியது என்று கூறும் கே.பி., யுத்த நிறுத்தம் பற்றியும் பேச்சுவார்த்தை பற்றியும் தெரிவித்ததாகக் கூறியுள்ளார். அத்துடன் பொதுமக்களின் நிலைமையைக் கண்ணீர் மல்க எடுத்துக் கூறி அவர்களைக் காப்பாற்ற எப்படியாவது யுத்த நிறுத்தம் அவசியம் என்று நோர்வேயிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன் எனக் கூறியுள்ளார் கேபி. இதற்கு அப்போது சிறிலங்காவுக்கான நோர்வே தூதர் ஹட்ரம் யுத்த களத்தின் உண்மை நிலவரத்தைத் தங்களிடம் தெரிவித்ததாக் கூறியுள்ளார்.[/size]

[size=4]அக் கூட்டத்தில் ஹட்ரம் கூறியதாக கே.பி. கூறியுள்ளதாவது, “சிறிலங்காவின் இராணுவத்தின் கைதான் ஓங்கி இருக்கிறது. சாலைப் பகுதியில் 55-ஆவது பிரிவு, விசுவமடுவில் 57-ஆவது பிரிவு, தேவிபுரத்தில் 58-ஆவது பிரிவு, முல்லைத்தீவு நகரில் 59-ஆவது பிரிவு நிலை கொண்டிருக்கிறது. சிறப்புப் படை-2 உடையார்கட்டிலும் சிறப்பு படையணி 3 அம்பகாமமிலும் சிறப்பு படை 4 ஒட்டுசுட்டானிலும் நிற்கிறது. விடுதலைப் புலிகள் ஒரு சிறிய நிலப்பரப்பில் அட்டைப் பெட்டி வடிவத்தில் சுற்றி வளைக்கப்பட்டிருக்கின்றனர்.”[/size]

[size=4]“புலிகளை அழிக்க சிறிது காலம்தான் இராணுவத்துக்குத் தேவை. அதனால் சிறிலங்காவைப் பொறுத்தவரையில் யுத்த நிறுத்தம் என்பது தேவையில்லாத ஒன்று. ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரையில் புலிகளைத் தோற்கடித்துவிடுவது உறுதி. மேலும் பொதுமக்களுக்கு விடுதலைப் புலிகள்தான் பொறுப்பு. பொதுமக்களை மனித கேடயங்களாக கட்டாயப்படுத்தி புலிகள் வைத்திருக்கின்றனர். நீங்கள் சிலவற்றை விட்டுக் கொடுத்துதான் சிலவற்றைப் பெற முடியும்” என்று நோர்வேயின் தூதுவர் கூறியதாக கே.பி. கூறியுள்ளார்.[/size]

[size=4]விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளராக கே.பி. விசுவாசமாக செயற்பட்டிருந்தால் நிச்சயமாகப் போரைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். போரைத் தடுப்பதற்குப் பதில் போரை முடிக்கவே கே.பிக்கு சர்வதேச நாடுகள் அழுத்தங்களைக் கொடுத்தது என்பதனை கே.பியே மறைமுகமாக ஏற்றுக்கொண்டு இருக்கிறார்.[/size]

[size=4]விடுதலைப் புலிகளைச் சரணடையச் செய்வதே யுத்தத்தை முடிக்க ஒரே வழி என்கிற நிலைப்பாட்டையே சர்வதேசம் வைத்திருந்தது. யாழப்பாணத்தை நோக்கி புலிகளின் படையணிகள் சென்றபோது பின்வாங்கப் பணித்தது சர்வதேசம் குறிப்பாக இந்தியாவின் அதீத பங்களிப்பு இதில் இருந்தது. கச்சிதமாக அனைவரும் இணைந்து அரங்கேற்றிய நாடகம் பல்லாயிரம் மக்களைக் காவு கொண்டதுடன் தமிழினம் இன்று சிங்களத்தின் முற்றுகைக்குள் வாழ வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது என்பதே யதார்த்தமான கள நிலவரம்.[/size]

[size=4]இதன் தொடர்ச்சி அடுத்த வாரம் தொடரும்….[/size]

[size=4]:-அனலை நிதிஸ் ச. குமாரன்[/size]

http://www.eelamview.com/2012/11/30/traitor-kp-dps/

  • Replies 82
  • Views 4.4k
  • Created
  • Last Reply

கேபி முந்தி எவ்வளவு தியாகம் செய்தவர் அவரப் பற்றி இப்பிடி சொல்லக் கூடாது அவர் என்ன தப்பு பண்ணினாலும் நாம் அவர் ஒரு முன்னாள் போராளி மூத்த போராளி என்ற வட்டத்துள் வைத்து தலையில் சுமக்கனும். அவர் விடும் பிழைகளை கண்டும் காணாமல் விடனும் நன்றி வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கட்டுரையில் ஒன்றுமே புதிதாகச் சொல்லப்படவில்லை, அவதூறுகளைத் தவிர!

கே. பி. தற்போது செய்வது சரணாகதி அரசியல் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அந்தச் சரணாகதி அரசியல் பலமாகிவிடுமோ என்ற பயம் காரணமாக, சரணாகதி அரசியல் செய்பவர்களை சரியான முறையில் அம்பலப்படுத்துவதை விடுத்து வெறும் பட்டஞ் சூட்டல்தான் இக்கட்டுரையில் நடக்கின்றது. பொய்களை உடைக்க உண்மைகளை மக்கள் மூலம் தெளிவாக வைக்கவேண்டும்.

  • தொடங்கியவர்

இந்தக் கட்டுரையில் ஒன்றுமே புதிதாகச் சொல்லப்படவில்லை, அவதூறுகளைத் தவிர!

கே. பி. தற்போது செய்வது சரணாகதி அரசியல் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அந்தச் சரணாகதி அரசியல் பலமாகிவிடுமோ என்ற பயம் காரணமாக, சரணாகதி அரசியல் செய்பவர்களை சரியான முறையில் அம்பலப்படுத்துவதை விடுத்து வெறும் பட்டஞ் சூட்டல்தான் இக்கட்டுரையில் நடக்கின்றது. பொய்களை உடைக்க உண்மைகளை மக்கள் மூலம் தெளிவாக வைக்கவேண்டும்.

[size=1]

[size=4]மாவீரர் தினத்திற்கு முன்னதாக மக்களை குழப்பும் நோக்கில் பல ஆக்கங்கள், கட்டுரைகள், கவிதைகள் சிங்களத்தால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன. இது வழமை.[/size][/size]

[size=1]

[size=4]இந்த முறை ஒரு கே.பி.யின் பேட்டியும் வந்திருந்தது, இதுவரை மூன்று பாகங்கள். யாழ் களத்திலும் இணைக்கப்பட்டு இருந்தது. [/size][/size]

[size=1]

[size=4]அந்த பேட்டிக்கு பதிலாக இந்த கட்டுரை உள்ளது. கட்டுரையாளர் மக்களுக்கு சில தெளிவுகளை ஏற்படுத்தவே இதை எழுதியுள்ளார் என தெளிவாக குறிப்பிட்டுள்ளார். [/size][/size]

  • தொடங்கியவர்

கேபி முந்தி எவ்வளவு தியாகம் செய்தவர் அவரப் பற்றி இப்பிடி சொல்லக் கூடாது அவர் என்ன தப்பு பண்ணினாலும் நாம் அவர் ஒரு முன்னாள் போராளி மூத்த போராளி என்ற வட்டத்துள் வைத்து தலையில் சுமக்கனும். அவர் விடும் பிழைகளை கண்டும் காணாமல் விடனும் நன்றி வணக்கம்

[size=1]

[size=4]இன்றுள்ள நிலையில் தேவைப்படும் போராளிகள் :[/size][/size][size=1]

[size=4]- எமது மக்கள் மத்தியில் தெளிவை ஏற்படுத்த வல்லவர்கள் [/size][/size][size=1]

[size=4]- சர்வதேச ரீதியில் எமக்கு பலம் சேர்த்து ஐ.நா. வரை எடுத்து செல்லக்கூடியவர்கள்[/size][/size][size=1]

[size=4]- தாயக மக்களுக்கு நேர்மையாக உதவக்கூடிய அமைப்புக்கள் [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=1][size=4]மாவீரர் தினத்திற்கு முன்னதாக மக்களை குழப்பும் நோக்கில் பல ஆக்கங்கள், கட்டுரைகள், கவிதைகள் சிங்களத்தால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன. இது வழமை.[/size][/size]

[size=1][size=4]இந்த முறை ஒரு கே.பி.யின் பேட்டியும் வந்திருந்தது, இதுவரை மூன்று பாகங்கள். யாழ் களத்திலும் இணைக்கப்பட்டு இருந்தது. [/size][/size]

[size=1][size=4]அந்த பேட்டிக்கு பதிலாக இந்த கட்டுரை உள்ளது. கட்டுரையாளர் மக்களுக்கு சில தெளிவுகளை ஏற்படுத்தவே இதை எழுதியுள்ளார் என தெளிவாக குறிப்பிட்டுள்ளார். [/size][/size]

வாசிக்காமல் நான் கருத்து வைப்பதில்லை!

கட்டுரையாளருக்கு உள்வீட்டு விடயங்கள் எதுவும் தெரியவில்லை. பல இடங்களில் வாசித்தவற்றை அப்படியே தனது கட்டுரையில் பாவித்துள்ளார். ஆனாலும் காட்டிக்கொடுத்தல், துரோகம், உளறல், எட்டப்பர், எடுபிடிகள், விசுவாசம் என்று உணர்ச்சிகரமான வார்த்தைகளை அள்ளித் தெளித்துள்ளார். இவற்றை விடுத்து ஆரோக்கியமான, அறிவுபூர்வமான முறையில் சரணாகதி அரசியலின் நீண்டகால விளைவுகளை விளக்கும் கட்டுரைகளை எழுதுவது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

சிலவேளை நான் நினைப்பதுண்டு

கே.பியை கைது செய்த அன்றிலிருந்து நாம் அவரை மறந்திருந்தால்............???

அவர் இந்தளவுக்கு சிங்களத்துக்கு வேண்டப்பட்டவராக வந்திருக்க முடியுமா? என. :(

http://www.lankawin.com/show-RUmqzBQUNUjo2.html

இந்த தொடுப்பில் உள்ள படங்களில் சிலதை எடுத்து கே பி யை கொல்லப்பட்ட மக்களின் படங்களுடன் ஒட்டியது போல் ஒட்ட எவ்வளவு நேரம் எடுக்கும்? உடையலங்காரங்களும் மேளதாளங்களும் என நீங்கள் செய்யும் சுய தம்பட்டங்கள் இவ்வாறு கொடுரமாகக் கொல்லப்பட்ட மக்களிடம் இருந்து எவ்வளவு அன்னியப்பட்டுள்ளது என்பதை படத்தை போட்டுத்தான் புரியவைக்கவேணும் என்றில்லை.

சிங்களத்தின் பிடிக்குள் இருப்பவன் எல்லாம் துரோகியும் அல்ல தாய்மண்ணை துறந்து தாயக மக்களை மறந்து தாயகம் அமைக்கப் போவதாகச் சொல்பவன் எல்லாம் தியாகியும் அல்ல.

இவ்வாறு கொல்லப்பட்ட படங்களை மகிந்தாவுக்கும் கோத்தாவுக்கும் எதிராக பயன்படுத்தாமல் ஒரு தமிழனுக்கு தூற்ற துரோகிப்பட்டம் கட்ட பயன்படுத்தும் மலிவான கேவலமான வேலையை செய்பனுக்கும் பேரினவதச் சிங்களவனுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.

இனிவரும் காலங்களில் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கான அரசியல் என்பது கே பி டக்ளஸ் போன்றவர்கள் அதே பாணியில் இனிமேல் உருவாகக் கூடியவர்கள் கைகளிலேயே பலம் பெறும். இதற்கெதிராக கூச்சல் போடுவதே புலம்பெயர் தேசத்து தேசீய அரசியலாக மாறும். ஆக, பிரச்சனை என்பது தமிழர்களுக்குள்ளாக சுற்றிக்கொண்டிருக்கும். எப்படி பல இயங்கங்கள் ஊக்குவிக்கப்பட்டு உள்ளுக்குள் உரசிப் பலமிழந்து போனோமோ அப்படியே போரின் முடிவுக்குப் பின்னரான அரசியல் முன்னெடுப்புக்களும் ஐக்கியப்பாடு இன்றி ஒருமுகப்படுத்தல் இன்றி சிதைந்து போகும். கடந்தகாலப் போராட்டம் முப்பது வருடம் அதன் முடிவில் தமிழர்கள் வரலாறுகாணாத சிதைவுக்கு உட்பட்டு உருக்குலைந்து போனார்கள். இப்போது உள்ள நிலை ஆகக் கூடியது பத்து பதினைந்து வருடங்கள், அதன் பின் இப்போது தமிழர்கள் இலங்கையில் இருக்கும் நிலையில் இருந்து பன்மடங்கு பெரும்பான்மையாக இஸ்லாமியத்தமிழர்கள் இருப்பார்கள். இலங்கைத் தமிழர்களுக்கான அரசியலும் பேரினவாதத்தடனான முரண்பாடும் வேறு தளத்திற்கு மாறும்.

  • தொடங்கியவர்

[size=4]

http://www.lankawin....qzBQUNUjo2.html

இந்த தொடுப்பில் உள்ள படங்களில் சிலதை எடுத்து கே பி யை கொல்லப்பட்ட மக்களின் படங்களுடன் ஒட்டியது போல் ஒட்ட எவ்வளவு நேரம் எடுக்கும்?

[/size]

எங்களுக்கு எடுக்கும் நேரத்தை விட குறைவாக எடுக்கும்.

[size=1][size=4]காரணம் அரசிடம் உள்ள பண, அரசியல் பலம். [/size][/size]

[size=5]இந்தக்கட்டுரையில், கே.பி. கூட இந்த படுகொலைகளுக்கு துணைபோனவர் என்பதைக்காட்டவே அந்தப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. [/size]

[size=4]அடுத்த மார்ச் வரை இப்படியாக கருத்துக்கள் சிங்களவர்களையும் தமிழின காட்டிக்கொடுப்பாளர்களையும் பாதுகாக்க முன்வைக்கப்படும். [/size]

[size=4]

இனிவரும் காலங்களில் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கான அரசியல் என்பது கே பி டக்ளஸ் போன்றவர்கள் அதே பாணியில் இனிமேல் உருவாகக் கூடியவர்கள் கைகளிலேயே பலம் பெறும். [/size]

[size=4]இதற்கெதிராக கூச்சல் போடுவதே புலம்பெயர் தேசத்து தேசீய அரசியலாக மாறும்.

[/size]

[size=4]இந்த தமிழின காட்டிக்கொடுப்பாளர்களை பாதுக்காக்கும் தமிழர்கள் அவர்களை விட கேவலமானவர்கள். [/size]

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

There is no possibility that any perceptible change will happen within our own lifetime. We are the dead. Our only true life is in the future. We shall take part in it as handfuls of dust and splinters of bone. But how far away that future may be, there is no knowing. It might be a thousand years. At present nothing is possible except to extend the area of sanity little by little. We cannot act collectively. We can only spread our knowledge outwards from individual to individual, generation after generation.

-- George Orwell - Nineteen eighty-four

  • தொடங்கியவர்

[size=5]“Change will not come if we wait for some other person, or if we wait for some other time. We are the ones we've been waiting for. We are the change that we seek.” [/size]

[size=5]Barack Obama[/size]

[size=5]இந்தக்கட்டுரையில், கே.பி. கூட இந்த படுகொலைகளுக்கு துணைபோனவர் என்பதைக்காட்டவே அந்தப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. [/size]

ஏன் நீங்கள் நாங்கள் துணைபோகவில்லையா?

ஆயுத ஆளணிபலம் அற்ற நிலையில் மக்களை கொலைக்களத்துக்கு இழுத்துச் சென்று மக்களை வைத்து போராட்டம் நடத்தவில்லை? மக்கள் கொல்லப்பட கொல்லப்பட படுகொலையை நிறுத்து என்று இங்கு போராடவில்லை? மேற்குலக ஜனநாயகத்தை நம்பிய எமது முட்டாள்தனம் துணைபோகவில்லை? ஒருவன் தலையில் ஒருவன் பழிபோடும் கீழ்தரமான அரசியலால் சிங்களப்பேரினவாதத்தக்கே லாபம்.

  • தொடங்கியவர்

[size=4]புதுவை எங்கே எனக்கேட்கும் மனித சிங்களவனும் உள்ளான்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=111986[/size][size=1]

[size=4]புதுவையும் ஒரு புலிப்பயங்கரவாதி தானே என கூறும் தமிழனும் உள்ளான். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

சிலவேளை நான் நினைப்பதுண்டு

கே.பியை கைது செய்த அன்றிலிருந்து நாம் அவரை மறந்திருந்தால்............???

அவர் இந்தளவுக்கு சிங்களத்துக்கு வேண்டப்பட்டவராக வந்திருக்க முடியுமா? என. :(

உண்மை... விசுகு.

கே.பி.யின் மேல் இருந்த எமது, அக்கறையே... அவரின் மலேசியா கைதைப்பற்றி எம்மைக் கவலை கொள்ள வைத்தது.

ஸ்ரீலங்காக் கைதியாக இருந்த, கே.பி.

கோத்த பாயா ராஜபக்சவை.. கட்டிப் பிட்டித்து, முத்தம் கொடுக்க முற்பட்ட போது....

அந்தச் சந்தேகம் மெல்ல... விலகி,

இவன், சங்கரி, டக்ளஸ், கருணா.. பரம்பரையில்... தமிழனுக்குச் சாபமாய்.. வந்து உதித்த காக்கை வன்னியன் என்று தெரிந்து விட்டது.

தேசியத் தலைவரின் கலியாணத்துக்கு...மாப்பிள்ளைத் தோழனாக இருந்த ****** கே.பி.

[size=1]நியானி: தணிக்கை[/size]

Edited by நியானி

  • தொடங்கியவர்

ஏன் நீங்கள் நாங்கள் துணைபோகவில்லையா?

[size=4]அங்குள்ள மக்கள் போராடினார்கள் மனித உரிமைக்காக. அது ஐ.நா. வில் உள்ள சுயநிர்ணய உரிமை.[/size][size=1]

[size=4]அகிம்சை வழியில் போராடினார்கள், ஆயுதம் ஏந்தி போராடினார்கள் - அதில் தவறே இல்லை. அந்த மக்களின் நியாத்தை நீங்களும் நாங்களும் அன்று சரியாக சர்வதேசத்திற்கு கூறத்தவறி விட்டோம். [/size][/size]

[size=4]புதுவை எங்கே எனக்கேட்கும் மனித சிங்களவனும் உள்ளான்: http://www.yarl.com/...howtopic=111986[/size]

[size=1][size=4]புதுவையும் ஒரு புலிப்பயங்கரவாதி தானே என கூறும் தமிழனும் உள்ளான். [/size][/size]

[size=4]புதுவை எங்கே எனக்கேட்கும் மனித சிங்களவனும் உள்ளான் புதுவை எங்கே என்று கேட்காத நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் உள்ளது.[/size]

  • தொடங்கியவர்

ஆயுத ஆளணிபலம் அற்ற நிலையில் மக்களை கொலைக்களத்துக்கு இழுத்துச் சென்று மக்களை வைத்து போராட்டம் நடத்தவில்லை? மக்கள் கொல்லப்பட கொல்லப்பட படுகொலையை நிறுத்து என்று இங்கு போராடவில்லை? மேற்குலக ஜனநாயகத்தை நம்பிய எமது முட்டாள்தனம் துணைபோகவில்லை?

ஒருவன் தலையில் ஒருவன் பழிபோடும் கீழ்தரமான அரசியலால் சிங்களப்பேரினவாதத்தக்கே லாபம்.

[size=4]ஒரு உண்மையை கூறியுள்ளீர்கள் : சிங்கள பேரினவாதம். அதை நீங்கள் ஏற்கமறுக்கும் அதேவேளை அதனுடன் சேர்ந்த கே.பி.யும் டக்ளசும் எவ்வாறு ஏற்கிறீர்கள்?[/size]

[size=4]

புதுவை எங்கே எனக்கேட்கும் மனித சிங்களவனும் உள்ளான் புதுவை எங்கே என்று கேட்காத நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் உள்ளது.

[/size]

[size=4]ஆம், அவர்கள் மீது குறை காணும் உங்கள் "நேர்மை" எமக்குத்தெரியும். அவர்களின் நாலாவது அமர்வும் எடுக்கப்படும் முன்னெடுப்புக்களுக்கும் நீங்கள் தரும் அங்கீகாரம் நம்பிக்கை தருவதாக உள்ளது ![/size]

  • கருத்துக்கள உறவுகள்

கேபி என்று... புலிகளின் நம்பிக்கையான, ஆளின் படம் கூடக் கிடைகாமல் கறுப்புத் தொப்பியுடன் காட்டிய கேபி. இன்று... கலர்ப் படத்துன் வலம் வருகின்றான்.

ஏனய்யா.... இந்தத் தொழிலைச் செய்கிறீர்கள்.

  • தொடங்கியவர்

[size=4]தமிழீழத்தை அடைவதற்கான ஈழத் தமிழர் தேசத்தின் வெளியுறவுக்கொள்கை. புதிதாய் உருவாகும் தமிழீழ நாட்டின் வெளியுறவுக்கொள்கை : [/size]http://www.yarl.com/forum3/index.php?showtopic=112229

[size=4]இந்த நாடு கடந்த அரசின் அணுகுமுறை பலருக்கு தலையில் பயத்தை உருவாக்கி விட்டுள்ளது [/size]

  • தொடங்கியவர்

[size=4]

வாசிக்காமல் நான் கருத்து வைப்பதில்லை!

கட்டுரையாளருக்கு உள்வீட்டு விடயங்கள் எதுவும் தெரியவில்லை. பல இடங்களில் வாசித்தவற்றை அப்படியே தனது கட்டுரையில் பாவித்துள்ளார். ஆனாலும் காட்டிக்கொடுத்தல், துரோகம், உளறல், எட்டப்பர், எடுபிடிகள், விசுவாசம் என்று உணர்ச்சிகரமான வார்த்தைகளை அள்ளித் தெளித்துள்ளார்.

[/size]

[size=4]பலவேறு விதமாக வாசகர்கள் எம்மத்தியில் உள்ளார்கள். [/size]

[size=4]

இவற்றை விடுத்து ஆரோக்கியமான, அறிவுபூர்வமான முறையில் சரணாகதி அரசியலின் நீண்டகால விளைவுகளை விளக்கும் கட்டுரைகளை எழுதுவது நல்லது.
[/size]

[size=4]அதேவேளை முஸ்லீம்கள் செய்யும் சரணாகதி அரசியல் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் நாளந்த செய்திகள் அரசியல் பாடமாக உள்ளன. [/size]

  • தொடங்கியவர்

[size=4]சண்டமாருதன்,[/size][size=1]

[size=4]நீங்கள் மேலே தாயக மக்களை சுற்றி சிங்களப்பேரினவாதம் உள்ளது என்பதை ஏற்று கொண்டீர்கள்.[/size][/size]

[size=1]

[size=4]கேள்வி #1: அப்படியானால் அந்த மக்கள் அங்கே அதற்கு எதிராக போராடுவது இயல்பான ஒன்று தானே? அந்த போராட்டத்திற்கு புலம்பெயர் அவர்கள் உறவுகள் உதவுவது எவ்வாறு தவறாகும்? [/size][/size]

[size=1]

[size=4]கேள்வி #2: அந்த சிங்கள் பேரினவாதத்துடன் இணைந்து தமது சுய இலாபத்திற்காக இனத்தை காட்டிக்கொடுக்கும் தமிழர்களை நாம் எவ்வாறு அணுகவேண்டும்? [/size][/size]

இந்த ஆய்வாளர் குருடன் யானை பார்த்த கணக்கு பல இடங்களில் கட்டுரை கட்டுரையாக எழுதி தள்ளுகின்றார்.

எதுவித அடிப்படை ஆதாரமற்ற வெற்று வசனங்கள் .

ஆசிரியர்மார் சிலரின் விடைத்தாள்களை திருத்தும் போது குறுக்காக ஒரு கோடு போட்டு அப்படியே வெட்டிவிடுவார்கள் .அந்த ரகம் தான் இந்த கட்டுரை .

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பலவேறு விதமாக வாசகர்கள் எம்மத்தியில் உள்ளார்கள். [/size]

ஆமாம். தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, நொட்டை, நொடிகள் சொல்லித்தான் அரசியலைப் புரிய வைக்கவேண்டும் என்று நினைப்பதால்தான் தொடர்ந்தும் உணர்ச்சிகரமான துரோக/தியாக அரசியல் நடாத்தப்படுகின்றது.

நயமாகவும் நாகரிகமாகவும் அரசியல் செய்தாலும் மக்களுக்கு விளங்கும்.

[size=4][size=4]அதேவேளை முஸ்லீம்கள் செய்யும் சரணாகதி அரசியல் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் நாளந்த செய்திகள் அரசியல் பாடமாக உள்ளன. [/size][/size]

தமிழர்களின் சார்பில் பலமாக நின்ற புலிகளின் அழிவு இலங்கையில் சிறுபான்மை இனங்கள் அனைத்தையும் பலவீனமான நிலைக்கு மாற்றியுள்ளது. அதற்குள் முஸ்லிம்களும் அடங்குவார்கள் என்பது உண்மையே.

எனவே உரிமைகளை பல குழுக்களாகத் தனித்து நின்று ஒருபோதும் அடையமுடியாது.

வேற்றுமைகளில் ஒற்றுமை காணாதவரை அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதில் நத்தைவேகம்தான் இருக்கும்.

  • தொடங்கியவர்

[size=4]

இந்த ஆய்வாளர் குருடன் யானை பார்த்த கணக்கு பல இடங்களில் கட்டுரை கட்டுரையாக எழுதி தள்ளுகின்றார்.[/size]

[size=4]எதுவித அடிப்படை ஆதாரமற்ற வெற்று வசனங்கள் .[/size]

[size=4]ஆசிரியர்மார் சிலரின் விடைத்தாள்களை திருத்தும் போது குறுக்காக ஒரு கோடு போட்டு அப்படியே வெட்டிவிடுவார்கள் .அந்த ரகம் தான் இந்த கட்டுரை .

[/size]

[size=1]

[size=4]அர்யுன் அண்ணா,[/size][/size][size=1]

[size=4]இருக்கலாம். பந்தி பந்தியாக அங்கம் அங்கமாக வரும் பேட்டியை பற்றியும் நீங்கள் அப்படி கூறி இருக்கவேண்டும். [/size][/size][size=1]

[size=4]நன்றிகள். [/size][/size]

இப்பொழுது கேபி சிறிலங்கா அரசின் பாதுகாப்பில் இருக்கின்ற ஒருவர். இதற்கு முன்பு அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச தொடர்பாளர்.

இவர் எந்த வகையில் தமிழர்களின் படுகொலைகளுக்கு காரணமாக முடியும்?

இங்கே இருந்து வீரம் பேசுபவர்கள் சிறிலங்கா அரசினால் கைது செய்யப்பட்டால் என்ன செய்வீர்கள்? இராணுவத்தைக் கண்டாலே "சேர்" போட்டு பேசுகிற கூட்டம் இது.

ஏதோ அந்த மனிதர் தன்னையும் காத்து மேலும் சிலரையும் காக்கின்ற வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். அவர் செய்வதை செய்யட்டும்

அவரைக் காட்டிக் கொடுத்தவர்கள் இனியாவது பேசாமல் இருக்கலாம் அல்லவா?

Edited by சபேசன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.