Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மிருகங்களும் மனிதர்களும்

Featured Replies

அடர்ந்த காட்டு வழியே ஒரு மனிதன் நடந்து செல்கிறான். அப்போது இரை தேடி வந்த புலி ஒன்று அவனை பார்த்து விடுகிறது. உடனே அவனைத் துரத்துகிறது. பயந்து ஓட்டம் பிடித்த மனிதன், அங்கிருந்த ஒரு மரத்தின் மேல் தாவி ஏறிக்கொள்கிறான்.
 
ஆனாலும், புலி அவனை விடுவதாக தெரியவில்லை. மரத்தையே சுற்றிச்சுற்றி வருகிறது. பயம் அதிகமான மனிதன் மரத்தின் கிளையை இறுக பற்றிக்கொள்கிறான்.

அப்போதுதான் தனக்கு பக்கத்தில் ஏதோ அசைவதை உணர்ந்தவன் திரும்பி பார்க்கிறான். அங்கே ஒரு கரடி இருக்கிறது. அதை பார்த்த மாத்திரத்தில் குலை நடுங்கிபோகிறான் மனிதன்.
 
தன்னை பார்த்து மிரண்ட மனிதன் மீது கரடிக்கு இரக்கம் பிறக்கிறது. `மனிதா… என்னை பார்த்து பயபடாதே. நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன். உயிருக்கு பயந்து மரத்தின் மீது ஏறும்போது என் காலை தொட்டுவிட்டாய். இதன் முலம் என்னிடம் அடைக்கலம் புகுந்துள்ளாய். எந்த நிலையிலும் நான் உன்னை கொல்ல மாட்டேன்` என்றது கரடி.
 
அப்பாடா… தலைக்கு வந்தது தலைபாகையோடு போயிற்று என்று பெரு முச்சுவிட்ட மனிதன் கீழே பார்த்தான். அங்கே புலி இடத்தைவிட்டு அகலுவதாக தெரியவில்லை. அது கரடியிடம் நைசாக பேச்சுக் கொடுத்தது.
 
`ஏ கரடியே! நீயும் மிருகம், நானும் மிருகம். அவனோ மனிதன். நம் இருவருக்கும் எதிரி. ஒன்று… அவனை நீ சாப்பிடு. இல்லை… கீழே தள்ளிவிடு; நான் சாப்பிடுகிறேன்` என்றது புலி.

அதற்கு கரடி, `அவன் என்னிடம் அடைக்கலம் தேடி வந்துள்ளான். அவனை நான் காப்பாற்றியே தீருவேன்` என்றது. சிறிதுநேரம் கழிந்தது. மனம் தளராத புலி அடுத்ததாக மனிதனிடம் வஞ்சகமாக பேச்சுக் கொடுத்தது.
 
`மனிதா! எனக்கு பசி அதிகமாக இருக்கிறது. எனக்கு எப்படிம் இரை வேண்டும். நீ கீழே இறங்கினால் நிச்சயம் உன்னை கொன்று சாப்பிட்டு விடுவேன். ஆனால், நீ உயிர் பிழைக்க ஒரு வழி மட்டும் கூறுகிறேன்.
 
உன் அருகே உள்ள கரடி இப்போது தூங்கிக்கொண்டிருக்கிறது. அதை கீழே தள்ளி விட்டுவிடு. என் பசியும் தீரும். நீ உயிர் பிழைத்தும்விடலாம்` என்றது.

தான் மட்டும் உயிர் பிழைத்தால் போதும் என்று யோசித்த மனிதன், அருகே மரக்கிளையில் தூங்கிக்கொடிருந்த கரடியை பிடித்து கீழே தள்ளினான். ஆனால், கரடியோ அடுத்த கிளையை கெட்டியாக பிடித்துக்கொடு கீழே விழாமல் தப்பியது.
 
நடுநடுங்கிபோனான் மனிதன். அவன் கை, கால்கள் தானாக ஆட ஆரம்பித்தன. விட்டால், மரத்தில் இருந்து தானாகவே கீழே விழுந்துவிடுவான் போல் இருந்தது.

அப்போது கரடி நிதானமாகவே பேசியது. `பயப்படாதே. இப்போதுகூட உன் சுயநலத்தையும், அறியாமையையும் எண்ணி நான் பரிதாபப்படுகிறேனேத் தவிர, உன்னை பழிவாங்க நினைக்கவில்லை. நீ இப்படிச் செய்வாய் என்று நான் எண்ணினேன். அதனால், முன்னெச்சரிக்கையாகவே இருந்தேன்.
 
இபோதும்கூட நான் உன்னை கொல்ல மாட்டேன். புலியிடம் தள்ளியும் விட மாட்டேன். கவலைபடாதே…’ என்றது. `தவறு செய்துவிட்டோமே…’என்று கண்ணீர் சிந்தினான் மனிதன். மிருகங்களிடம் இருக்கும் நற்பண்புகள் மனிதர்களிடம் இல்லை என்பதற்காக சொல்லபட்ட கதை இது.

 

http://kathirvalaipoo.blogspot.fr/2012/12/2.html

நல்ல கதை

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் கோமகன் .மனிதனைவிட விலங்குகள் எவ்வளவோ மேல்

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப காட்டுக்குள்ள போய் இருக்கலாமே மிருகங்களோட குடும்பம் நடத்தலாமே சும்மா டயலாக் அடிக்க கூடா

  • தொடங்கியவர்

நல்ல கதை

 

 

வரவுக்கும் கருத்திற்கும் நன்றி அர்ஜூன் .

  • தொடங்கியவர்

உண்மைதான் கோமகன் .மனிதனைவிட விலங்குகள் எவ்வளவோ மேல்

 

 

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மொசெப்பத்தேமியா சுமேரியர்n :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

நாலு மனிதர் ஒற்றுமையா

ஒருவருக்கொருத்தர்  உதவியா இருப்பதே பெரும் போராட்டம்

இதில் கரடிக்கு கருணை..........??? :(

  • தொடங்கியவர்

நாலு மனிதர் ஒற்றுமையா

ஒருவருக்கொருத்தர்  உதவியா இருப்பதே பெரும் போராட்டம்

இதில் கரடிக்கு கருணை..........??? :(

 

 

அப்போது கரடி நிதானமாகவே பேசியது. `பயப்படாதே. இப்போதுகூட உன் சுயநலத்தையும், அறியாமையையும் எண்ணி நான் பரிதாபப்படுகிறேனேத் தவிர, உன்னை பழிவாங்க நினைக்கவில்லை. நீ இப்படிச் செய்வாய் என்று நான் எண்ணினேன். அதனால், முன்னெச்சரிக்கையாகவே இருந்தேன்.

 

அதாவது , நெஞ்சிலே விசத்தை வைத்திருக்கும் இந்தக் கேடுகெட்ட மனிதர்களை விட மிருகங்கள் மேல் என்கின்றது இந்தக்கதையின் சாரம்சம் . வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி :) :) .

உண்மைதான் கேடுகெட்ட மனிதர்கள் வாழும் உலகம் ...............இப்படிப்பட்ட உலகில் ஒவ்வொரு கேவலம் கெட்டவனும் தன்னை தானே திருத்திக்கொண்டால் சமூகம் தானாகவே திருந்தும் .............திருந்துவார்களா .............

  • கருத்துக்கள உறவுகள்

மிருகங்களின் குறிக்கோள் இரைதேடுவது, சந்ததியைப் பெருக்குவது. மனிதனும் மிருகமாக இருப்பதால் தனது முக்கிய தேவைகளுக்கு அப்புறம்தான் பிறவிடயங்களைப் பற்றி அக்கறைப்படுவான். எனவே உயிர் பிழைப்பதற்கு கரடியைத் தள்ளிவிட முயன்ற மனிதனின் நிலைப்பாடு சரி.

 

மனிதன் தள்ளிவிடக்கூடும் என்று தெரிந்திருந்த கரடி அதனை முன்கூட்டியே மனிதனுக்குச் சொல்லியிருந்தால் கரடியும், மனிதனும் கூட்டுச்சேர்ந்து புலியினை விரட்டியிருக்கலாம்.

  • தொடங்கியவர்

உண்மைதான் கேடுகெட்ட மனிதர்கள் வாழும் உலகம் ...............இப்படிப்பட்ட உலகில் ஒவ்வொரு கேவலம் கெட்டவனும் தன்னை தானே திருத்திக்கொண்டால் சமூகம் தானாகவே திருந்தும் .............திருந்துவார்களா .............

 

காலம்தான் பதில் சொல்லவேண்டும் . வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி தமிழ்சூரியன் .

  • தொடங்கியவர்

மிருகங்களின் குறிக்கோள் இரைதேடுவது, சந்ததியைப் பெருக்குவது. மனிதனும் மிருகமாக இருப்பதால் தனது முக்கிய தேவைகளுக்கு அப்புறம்தான் பிறவிடயங்களைப் பற்றி அக்கறைப்படுவான். எனவே உயிர் பிழைப்பதற்கு கரடியைத் தள்ளிவிட முயன்ற மனிதனின் நிலைப்பாடு சரி.

 

மனிதன் தள்ளிவிடக்கூடும் என்று தெரிந்திருந்த கரடி அதனை முன்கூட்டியே மனிதனுக்குச் சொல்லியிருந்தால் கரடியும், மனிதனும் கூட்டுச்சேர்ந்து புலியினை விரட்டியிருக்கலாம்.

ஏ கரடியே! நீயும் மிருகம், நானும் மிருகம். அவனோ மனிதன். நம் இருவருக்கும் எதிரி. ஒன்று… அவனை நீ சாப்பிடு. இல்லை… கீழே தள்ளிவிடு; நான் சாப்பிடுகிறேன்` என்றது புலி.

 

ஏ ........... ! நீயும் ........., நானும் ............. அவனோ .............. . நம் இருவருக்கும் எதிரி. ஒன்று… அவனை நீ .............. இல்லை… கீழே தள்ளிவிடு; நான் ............

மனிதனைவிட விலங்குகள் எவ்வளவோ மேல்

நன்றிகோமகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.