Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எழுவோம் அகிலம் வியக்கும் வகை நிமிர்வோம்.

Featured Replies

வேண்டாம் அம்மா வேண்டாம் !!!

 

ஆண்டுகள் எட்டு ஆகித்தான் போனபோதும்
ஆற்றுவார் இன்றி தவிக்கின்றோம் நாம்
ஆழிப் பேரலை கொண்டு வந்து - எம்
அன்புச் சொந்தங்களைகடல் காவு கொண்டு
ஆண்டுகள் எட்டு ஆகித்தான் போனபோதும்
ஆற்றுவார் இன்றி தவிக்கின்றோம் நாம்

 

பட்ட காலிலே படும் என்பது பழமொழி – அது
பலதரம் ஈழத் தமிழர் வாழ்வினில் நிகழ்வதேனோ?
மணிக்கொருதரம் மரணித்தோர் தொகை
மலைபோல உயர உயர – எம்
மனம் பட்ட பாடு யார் அறிவார்

 

இயற்கை அன்னையே ஈழத்தமிழன் மீது
உனக்கும் என்னம்மா கோபம்
சக்திக்கு மீறிய விலை கொடுத்து விட்டு
சற்று சமாதானக் காற்றைச் சுவாசிக்க
எத்தணித்த வேளையிலே
இரண்டு தசாப்தமாய் எதிரியால் முடியாததை
இரண்டு நொடிக்குள் அலை கொண்டு வந்து
அள்ளிச் சென்றது ஏனம்மா?

 

பாலகன் யேசு பிறந்த மறுநாள்
பாலகர் பலரை கடலே – நீ
காவு கொண்டது ஏனம்மா?
எத்தனை கனவுகளுடன் அந்த
இளம் பிஞ்சுகள் ஓடி விளையாடியிருப்பார்கள்
அலை வந்து தம்மை
அடித்துச் செல்லப் போகின்றது என்பதே தெரியாமல்

 

காலை உணவை சமைத்து விட்டு
களையாறி உண்ண அமர்ந்த எத்தனை பேர்
கடலுக்குச் சென்ற தன் உறவின்
வரவை நோக்கிக் காத்திருந்த எத்தனை பேர்
இப்படி ஒன்று நிகழுமென்று
கனவில் கூட நினைத்திராமல்
கண்ணயர்ந்திருந்தோர் எத்தனை பேர்
அத்தனை பேரையும் சில நொடிக்குள்
கொடிய அலை கொண்டு வந்து
கொன்று தள்ளியது ஏனம்மா?

 

உலகமே ஒரு முறை உற்றுத்தான் நோக்கியது
ஆயினும் என்ன பயன்
வந்த உதவிகள் யாவும்
தெற்கிற்கே திசை திருப்பப்பட்டன
எங்கள் தேசம் தேற்றுவார் இன்றித்தவித்தது
அலை கொன்ற எங்கள் உறவுகளின் உடலம்
அழுகி நாறிட முன்னர் ஆவன செய்திட
அண்ணன் ஆணையிட்டான்
அண்ணனின் சேனைகள் அனைத்துமே களமிறங்கின
ஓர் இரு தினங்களில் மீட்புப் பணிகள்
முழுமையாய் நிறைவு கண்டன

 

புலம் பெயர்ந்த தமிழினமும்
புலத்தில் உதித்த இளந் தமிழினமும்
கொட்டும் பனி வேளையிலும்
குளிருக்கு மத்தியில் நின்று
சிறுகச் சிறுகச் சேர்த்த தொகை
பெருந்தொகையாய் சென்று
மீள் கட்டுமானப் பணிகளும் முடுக்கி விடப்பட்ன

 

உலக நாடுகளின் பிரதிநிதிகள் - எம்
ஊரின் நிலை பார்க்க முனைந்த போது
சிங்களம் தடை விதித்தது
சுனாமியின் பின்
மீள்கட்டுமானப் பணிக்கென போடப்பட்ட
முகாமைத்துவக் கட்டமைப்பும்
முகவரி அற்றுப் போனது.

 

இருந்த போதும் எம் தேசம் மீண்டெழுந்தது !
ஆயினும் என்ன பயன் இன்று
அனைத்துமே பறிபோய்
அகதியாய் அகிலமெங்கும்
ஆதரவற்று அலைந்து கிடக்கின்றோம்.
விழ விழ எழுவது எமக்கொன்றும் புதிதல்ல
எழுவோம் அகிலம் வியக்கும் வகை நிமிர்வோம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழிப்பேரலையை நினைவுகூர்ந்து அழகிய கவி வடித்த உங்களை ஊக்குவிக்க ஒரு பச்சை அழகான தரமான உங்கள் படைப்புகளால் யாழ் களம் சிறக்கட்டும்

 

விழ விழ எழுவது எமக்கொன்றும் புதிதல்ல
எழுவோம் அகிலம் வியக்கும் வகை நிமிர்வோம்.

 

கவிதை என்பது ஒரு சமூக சமுதாய நலனும் நம்பிக்கையும் ஊக்கம் தருவதாகவும் இருப்பதே அழகு.

நன்றிகள்.

  • தொடங்கியவர்
ஆழிப்பேரலையை நினைவுகூர்ந்து அழகிய கவி வடித்த உங்களை ஊக்குவிக்க ஒரு பச்சை அழகான தரமான உங்கள் படைப்புகளால் யாழ் களம் சிறக்கட்டும்

 

நன்றி சுண்டல் தங்களில் மேலான ஊக்குவிப்புக்கு

  • தொடங்கியவர்
கவிதை என்பது ஒரு சமூக சமுதாய நலனும் நம்பிக்கையும் ஊக்கம் தருவதாகவும் இருப்பதே அழகு.

நன்றிகள்.

 

தங்களில் கருத்துக்களுக்கும் ஊக்குவிப்புக்கும்  நன்றி.

எவ்வளவு வீரியமாக ஒரு பந்தை சுவற்றின் மீது எறிகிரமோ அதே வீரியத்துடன் திரும்ப தாக்கும். அந்த அறிவியல் சமன்பாடுதான் மனித குலத்துக்கும். அடக்கப்பட்ட ஒவ்வொரு இனமும் அதே வீரியத்துடன் திரும்ப எழுந்திருக்கிறது. வரலாறும் அதைத்தான் சொல்கிறது. விழுவது குற்றமல்ல மீண்டும் எழ நினைக்காமல் இருப்பதுதான் குற்றம். மீண்டும் எழுவோம் என்ற உயிர்ப்புடன் வாழ்வோம்.

 

கவிதைக்கு நன்றி.  

  • கருத்துக்கள உறவுகள்

எமது வேதனைகளைத் தானே, யாழ் என்னும் வடிகால் மூலம் தினமும் வடித்துக் கொண்டிருக்கிறோம்!

 

அதுவும் ஒரு சுனாமியாக மாறும் காலம் விரைவில் வரட்டும்!

 

நல்ல ஒரு நினைவுக் கவிதைக்கு நன்றிகள், மயூரன்!

 

 

  • தொடங்கியவர்

"

"

 



ஆதித்ய இளம்பிறையன்,புங்கையூரன். நன்றி  தங்களின் கருத்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும்.

 

Edited by Mayuran

பாட்டுத்திறத்தால் இவ்வையத்தை பாலித்திடவேண்டும் என்பதற்கேற்ப‌ மீண்டும் நிமிர்வதற்கு உற்சாகமூட்டும் பாடல்வரிகள். பணி தொடர்க!
நல்வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி, நல்ல ஒரு நினைவுக் கவிதை

ஒருவித மனழுத்தத்திலும் , விரக்தியின் உச்சியில் இருப்பவர்களுக்கு நம்பிக்கையூட்டும் உங்கள் கவிவரிகள் தொடர்ந்து இந்தப்பகுதியில் ஒலிக்கவேண்டும் . படைப்பிற்கு வாழ்த்துக்கள் :) :) .

  • தொடங்கியவர்

கருத்தோடு வந்து ஊக்கமளித்து உற்சாகம்தந்த மகம், உடையார், கோமகன் ஆகியோருக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.