Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

6398_238890979576377_1820510126_n.jpg

எல்லைக்கு வெளியேதான்

இவனின் உறைவிடம்

அதுவே மறைவிடமும்கூட

 

எத்தனை எழுதினும்

எழுத்திலோ பேச்சிலோ

அடக்கிட முடியா

உன்னத மனிதன் இவன்.

கற்பனை என்றொரு

வார்ததை உண்டு தமிழில்.

அத்தனை கற்பனையும்

கடந்த வீரம் இவனது.

 

இவன் காற்றின் வீச்சில்

கனல் எடுக்க தெரிந்த

கந்தக வித்தை தெரிந்தவன்.

எத்தனை காலம் இவன்.

 

மூச்சை அடக்கி கொண்டே

பேரினவாத மூளைக்குள்.

துளையிட்டு போய் அமர்ந்திருந்தவன்.

 

321073_238889882909820_119082854_n.jpg

மன்னார் மாவட்டம் பள்ளமடுப்பகுதியில் சிறிலங்கா படைகளின் ஆழஊடுருவும் படைப்பிரிவு நடாத்திய கிளைமோர்த் தாக்குதலில் கேணல் சாள்ஸ் அவர்களுடன் லெப்டினன்ட் வீரமாறன் லெப்டினன்ட் காவலன் ஆகியோரும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம். கேணல் சாள்ஸ் தொடர்பாக விடுதலைப் புலிகளின் புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் பொட்டு அவர் தெரிவித்தவை: புலனாய்வுத்துறையின் தாங்கும் சக்தியாக ஒரு மாவீரனாக கேணல் சாள்சைப் பார்க்கின்றேன்.

போர்க் களங்களில் தன்னை ஆகுதியாக்க கேணல் சாள்ஸ் பல தடவை முன்னின்றுள்ளான்.ஆனால் போர் களத்தின் வெளியே நின்று போர்க் களத்தின் அழுத்தத்தின் சக்தியாக நின்றுஇ உழைத்து அந்த உழைப்பின் சக்தியாக நின்ற சாள்சை நினைவு கூரவேண்டும்.சில நடவடிக்கைகள் கடினமான சூழலில் கால நிர்பந்த நிலையில் அந்த நடவடிக்கையின் இயங்கு சக்தியாக கேணல் சாள்ஸ் இருந்தான்.

 

பிறேமதாச காலத்தில் எமது போராட்டம் அடுத்த சவாலை எதிர்கொண்ட போது தேசியத் தலைவருக்கு ஓரு புலனாய்வு அறிக்கை கிடைத்தது. அது அன்றைய பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரட்ணா சனாதிபதி பிறேமதாச படைத்தளதிகளால் திட்டம் தீட்டப்பட்டது.எமது தேசியத் தலைவரை கொன்று தாக்குதல்களைத் தொடுத்து தேசிய விடுதலைப் போராட்டத்தை இல்லாது அழிப்பதே அத்திட்டம்.

 

இந்த நிலையிலேயே அவர்களின் தலைநகரிலேயே அவர்களைச் செயற்பட முடியாதென்று நாம் அப்போது கற்பித்தோம். அதைச் செய்து காட்டியவன் சாள்ஸ்.

 

சாள்சின் ஆளுமை என்பது வரலாற்றில் அதீத தன்னம்பிக்கை வரலாற்றில் பெரும் வெற்றியாக அமைந்த கட்டுநாயக்கா விமான நிலையத் தாக்குதல். அங்கு நம்மால் செய்ய முடியாத வெற்றிகளை எமது போராளிகள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று இதை விட பெரியது இருக்கு அதை நம்பிக்கையுடன் செய்வோம் என்று சாள்ஸ் சொன்னான்.

 

Col%20Charles2013.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரனே... உனக்கு, வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம் 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம்.

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
 
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரனே... உனக்கு, வீரவணக்கங்கள்.

உன் காலத்தில் வாழ்ந்த பெருமை எனக்கு.
 

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னால் முடியாத சரித்திரமாக… “என்னால் முடியும்” கேணல் சார்ள்ஸ்

ச.பொட்டு (பொட்டு அம்மான் )

 

நினைவுப் பதிவு பலதடவைகள் இணைக்கப்பட்டுள்ளது.

பார்க்க:

http://www.yarl.com/...showtopic=37433

http://www.yarl.com/...showtopic=64513

http://www.yarl.com/...showtopic=73706

http://www.yarl.com/...showtopic=79943

 

 


கேணல் சாள்ஸ் வீரவணக்க உரை ச.பொட்டு

 

http://youtu.be/GgvnZdeCidk

 

05.01.2008 அன்று சிறிலங்கா படையினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (அருள்வேந்தன்) உட்பட்ட மூன்று மாவீரர்களின் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். மன்னார் மாவட்டம் பள்ளமடுப்பகுதியில் சிறிலங்கா படைகளின் ஆழஊடுருவும் படைப்பிரிவு நடாத்திய கிளைமோர்த் தாக்குதலில் கேணல் சாள்ஸ் அவர்களுடன் லெப்டினன்ட் வீரமாறன், லெப்டினன்ட் காவலன் ஆகியோரும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மா வீரர்களை இன்றைய நாளில் நினைவு கூறுகின்றோம்.
அத்துடன் இன்றையாய நாளில் வீர காவியமான அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

 


கேணல் சாள்ஸ் நினைவூட்டல்

 

http://youtu.be/racf-3AZNog

 

 

நியானி: திருத்தம் செய்யப்பட்டுள்ளது

Edited by நியானி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவீரர்களுக்கு என் வணக்கங்கள்.

மாவீரர்களுக்கு என் வணக்கங்கள்...!!!

இந்த மாவீரர்களுக்கு என் வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.