Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பணத்தால் தனக்கு பயன் இல்லை என்கிறார் பில்கேட்ஸ்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Bill-Gates-2012013-150.jpg

உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவராக கருதப்படுபவர், மைக்ரோ சாப்ட் துணை நிறுவனரான பில்கேட்ஸ். சுமார் 65 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சொத்து குவித்துள்ள இவர், பணத்தால் எனக்கு பயன் இல்லை என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். லண்டனில் இருந்து வெளியாகும் டெலிகிராப் நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

  

உணவு, உடை போன்ற அடிப்படை தேவைகளை பொருத்த வரையில் நான் தன்னிறைவுடன் வாழ்கிறேன். இந்த அளவுகோலுக்கு மேல் என்னிடம் பணம் இருந்து பயன் ஏதுமில்லை. ஒரு அமைப்பை ஏற்படுத்தி இந்த பணத்தை எல்லாம் உலகில் உள்ள ஏழைகளுக்காக செலவிட விரும்புகின்றேன். போலியோவை ஒழித்தது போல், பல்வேறு நோய்களால் வாடும் ஏழை குழந்தைகளுக்கு நோய் தடுப்பூசி மற்றும் சுகாதார பணிகளில் சேவை செய்யும் பெண்களுக்காக என் செல்வத்தை செலவழிக்க முடிவு செய்துள்ளேன்.

 

1990-ம் ஆண்டில் உலகமெங்கும் 5 வயதை தாண்டாத 1 கோடியே 20 லட்சம் குழந்தைகள் நோயால் பலியாகினர். அந்த எண்ணிக்கை தற்போது 70 லட்சமாக குறைந்துள்ளது. இதேபோல் குழந்தைகளை தாக்கும் கொடிய நோய்களை ஒழிப்பதற்காக அறக்கட்டளையின் மூலம் என் பணத்தை நல்ல முறையில் செலவு செய்ய விரும்புகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

பில் (மற்றும்) மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில், உலக நாடுகளில் போலியோவை ஒழிக்க கடந்த 6 ஆண்டுகளில் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது. அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக 28 பில்லியன் அமெரிக்க டாலர்களும், உலக சுகாதார மேம்பாட்டுக்காக 8 பில்லியன் அமெரிக்க டாலர்களும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=74263&category=WorldNews&language=tamil

ஒருகாலத்தில் பண ஆசையும் பண வெறியும் கொண்டவராக கருதப்பட்டவர்.

 

தனது செல்வத்தை பல மானிட மேம்பாட்டு நடவடிக்கைகளில் செலவழித்து வரலாற்றில் ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இது பலருக்கு புரியாத உண்மை

பில்கேட் பணத்தாசை பிடித்து அலைந்தவரா தெரியாது. ஆனால் வெஸ்டேன் டெஜிடலின் "க்யுக் அண்ட் டேட்டி டொஸ்(QD DOS)" எனப்படும் மென்பொருளை வாங்கி டொஸ் ஆக மாற்றினார். இந்த பச்சை தண்ணியில் சுட்ட பலகாரத்தின் வெற்றி வெறுமனே பதிவுரிமையை  பாதுகாப்பதால் மட்டுமே வருகிறது, புதிதாக எதுவும் பிரமாதமாக செய்ய வேண்டியதில்லை என்பதை கண்டார். இதனால் பதிவுரிமையை வைத்து மட்டுமே பல சரித்திரம் காணாத திறமையான மென் பொருள்களை துவம்சம் செய்தார். Word Perfect, Lotus, Dbase, Novel, netscape Act, Warp போன்ற பொருள்கள் அன்றிருந்த தரத்தை இன்னமும் மைகுறோ சொஃப்ட் எட்டிவிட்டதாக கூற முடியாது. ஆனல் அவற்றின் பாலிலும், நெய்யிலும் வளர்ந்த குழந்தைகள் அந்த அருமையான மாடுகள் ஈவு இரக்கமின்றி கொலை செய்யப்பட்டபோது பார்த்து பார்த்து வருந்தியதுண்டு. ஆனால் பில் கேட் அதையெல்லாம் பணத்தாசையால் செய்தார் என்பதிலும் பார்க்க, போட்டி வியாபாரத்தின் முடிவுதான் அது.

 

IBM இன் Warp என்ற operating system துடன் வேலை செய்வது. கலாரசனையான குழந்தையுடன் விளையாடுவது போன்றது. அப்படி ஒரு மென்பொருளை WIndows NT என்ற கரடு முரடான அம்மிக்குழவி கல்லில் வைத்து அரைத்து முடித்த வெற்றி பில்லுக்கு பதிப்புரிமைகளை சரியாக பதியவும் பாவிக்கவும் தெரிந்தலே அல்லாமல், அவரிடமிருந்த பணத்தாசையாலோ அல்லது மென்பொருள் தாரிக்கும் ஆற்றலாலோ அல்ல. மேலும் ஒரு செய்தி கேள்விப்பட்டிருக்கிறேன்; மைகுறோசொப்ட் ஆக்கிய மில்லியனெயார் தொழிலாளிகள் போல எந்த கம்பனியும் ஆக்கவில்லையாம். பில் தனக்கு வேண்டிய தொழிலாளிகளை நன்றாக கவனித்தார்.

Edited by மல்லையூரான்

எவ்வளவுதான் பணமிருந்தாலும், ஒருவன்  மூன்று நேரந்தான் உண்ண முடியும். அதுவும் வியாதிகள் இல்லாவிட்டால்தான். ஒருவருக்கு பசியெடுப்பதெ  பெரிய வரம். ஒரு உடைதான் அணிய முடியும். 

உலகத்தின்  முதன்மை நூறு பணக்காரர்கள் மட்டுமே காணும் வறுமை போக்க - நேற்றைய செய்தி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலக வாழ்க்கையிலை வறுமை இல்லாட்டி ஒரு சுவாரசியம் இல்லையெண்டு என்னோடை வேலை செய்யுறவ அடிக்கடி சொல்லுறவ........

உலகத்தின்  முதன்மை நூறு பணக்காரர்கள் மட்டுமே காணும் வறுமை போக்க - நேற்றைய செய்தி!

 

அந்த பத்திரிகையின் செய்தி  ஒரு புள்ளிவிபரம் மட்டுமே. உதரணத்திற்கு பில்கேட்டின் 65 பில்லியன் மதிப்பான பங்கு சந்தை பொருள்களையும் ஒரு மாதத்தில் பங்கு சந்தையில் விற்க முயன்றால் அதில் 30 பில்லியனும் தேறாமல் போகும்(சரியான பங்குச் சந்தை கணக்கு அல்ல; ஒரு பேச்சுக்கு). மேலும் இது பங்குசந்தையை விழுத்தி, அதில் கணிசமான நபர்களுக்கு 30-40 பில்லியன்களுக்கு மேல் நட்டம் திட்டி கொண்டுவரும்.( உ+ம் பில்கேட் 25% மைகுறொ சொப்ட் பங்குப்பொருள்களை சந்தையில் விற்று 50% நட்டத்தை வரவளைத்தாராயின், அது மிகுதி 75% பங்குப்பொருள் உடமையாளர்களுக்கும் 50% நட்டத்தை அதே நேரம் கொண்டுவரும்). இந்த தனி நபர் நட்டங்களுக்கு மேலால் போய்,  65 பில்லியனையும் பல ஆண்டுகள் எடுத்து விற்றாலும் இது பில்கேட்டின் முதலீடுகள் தலைமையில் இருக்கும் மைக்குறோசொப்ட் போன்ற கம்பனிகளை வங்குரோத்துக்கு தள்ளும். உண்மையானது, இந்த பணக்காரர்களிடம் இருப்பது வெறும் சான்றிதள் பணமே. அதை விடுவித்து அதன் பெறுமதியை பெற்றுகொள்வது என்பது நடைமுறை சாத்தியம் இல்லாதது.

 

இப்படி பங்கு சந்தைகளில், இல்லாமல் இந்திய வீடுகளில் பதுங்கி போய் இருக்கும் தங்கத்தை வெளிக்கொண்டுவந்தால் ஒரளவு நன்மை கிடைக்கும்.  இது எந்த நல்ல ஒரு கம்பனியையும் நேரடித் தாக்கத்தால் விழுத்தாது. 

 

ஆனால் மிக்க கவனமாக கையாளப்படவேண்டும். ஆனால் எந்த கவனத்திற்கும் பிறகும் தங்கத்தின் விலைச் சரிவை கட்டுப்படுத்த முடியாது. தங்கத் தொழில் பாரிய பின்னடைவைக் காட்டும். தங்கம் பணத்துடன் நேரடியாக கட்டுப்பட்டிருப்பதால் உண்மையான பொருளாதார அறிஞ்ஞர்களாதான் அவ்வளவு ஒரு தொகையான தங்கத்தை சந்தையில் ஓரிரு வருடங்களில் எறிவதால் வரும் பணத்தாக்கத்தை பற்றி குறிப்பிட முடியும். ஆனால் தங்கமாக வீடுகளில் ஒளிந்திருக்கும் பணம், பணமாக சந்தையில் வந்து நின்றால் இந்தியா மாதிரி சின்ன பொறுளாதாரங்களால் நின்று பிடிக்க முடியாது. இது பண வீக்கத்தால் தூண்டப்பட்ட பொருளாதார பின்னடைவை கொண்டுவரும். 

 

இந்த ideaக்கள் சலசலப்பை ஏற்படுத்த பத்திரிகைகளில் எழுத மட்டும்தான் நல்லவை. நடைமுறையில் போட முடியாதவை.(நான் அதில் ஜனநாயகம் இல்லை என்பதையல்ல குறிப்பிட வருகிறேன்; எதிர்பார்க்கும் பொருளாதார தாக்கம் கணிக்க முடியாதது என்பதைதான் குறிப்பிடுகிறென்)

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு 

  • கருத்துக்கள உறவுகள்

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுன்னு எங்க பெரியவங்க பில்கேட்ஸ் ஆகாமலே சொல்லி வைச்சிட்டாங்க. நாங்க தான் கேட்க மாட்டமே..! :)

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்குப் பயனில்லை.. ஆனால் எங்களுக்கு இருக்கே.. :D

  • கருத்துக்கள உறவுகள்
இவருக்குப் பயனில்லை.. ஆனால் எங்களுக்கு இருக்கே.. :D

 

அவருக்கும் இருக்கு

ஆனால் அதன் அளவை அவர் சொல்லவில்லை.

சொல்லவேண்டும் என நாமும் எதிர்பார்க்கவில்லை.

காரணம்

அவர் சொல்லும் ஆகக்குறைந்த அளவு  கூட எமக்கு கைக்கு கிடைக்க முடியாதது. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.