Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்கா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி 132 கிறிஸ்தவ குருமார் ஐ.நாவுக்குக் கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Bishop-Mannar.jpg

அனைத்துலக சட்டமீறல்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று கோரியும், சிறிலங்காவின் மனிதஉரிமை மீறல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் மன்னார் ஆயர் மற்றும் வடக்கு,கிழக்கை சேர்ந்த 132 கிறிஸ்தவ குருமார் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்று, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

“அரசியல்தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற் போனவர்கள் குறித்த விவகாரங்களைக் கையாளும் ஆணையாளரை நியமித்தல், சிறிலங்கா இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவித்தல், ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகள், இறந்தவர்கள், காணாமற்போனவர்களை நினைவுகூருதல் என்பன உள்ளிட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் முக்கியமான பரிந்துரைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதுடன், மீறப்படுகின்றன என்பதற்கு நாமும் சாட்சிகளாக இருக்கிறோம். 

கடந்த ஆண்டில், அமைதியான வழியில் சிறிலங்கா அரசாங்கத்தை விமர்சித்தவர்கள் அல்லது சவால் விடுத்தவர்கள், ஐ.நாவுடன் தொடர்புகளை வைத்திருந்தவர்கள் கூட, சிறிலங்கா அமைச்சர்கள், அதிகாரிகள், இராணுவத்தினர், காவல்துறையினரால் தாக்கப்பட்டுள்ளனர், விசாரிக்கப்பட்டுள்ளனர், கைது செய்யப்பட்டுள்ளனர், அச்சுறுத்தப்பட்டுள்ளனர். 

இவ்வாறு பாதிக்கப்பட்ட எம்மில் சிலரான மதகுருமார், தாம் பழிவாங்கப்படுவோம் என்பதால் இந்தக் கடிதத்தில் கையெழுத்திடவில்லை. 

பத்தாயிரக்கணக்கான தமிழ்மக்கள் கொல்லப்பட்டும், காணாமற்போயும் உள்ள நிலையில், தமிழ்மக்களின் சமூக, கலாசார, மத, மொழி, நிலஉரிமைகள் - ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் போருக்கு முன்னரும், போரின் போதும், போருக்குப் பின்னரும், அடக்கப்படுவதை நாம் உணர்கிறோம். 

இது எம்மை பகுதியாகவோ முழுமையாகவோ அழிக்கும் நோக்குடனான முயற்சியாகவே தோன்றுகிறது. 

எனவே, அனைத்துலக சமூகம் மோசமான இந்த இறுதிக்கட்டத்திலேனும் பதிலளிக்க வேண்டியது கட்டாயம். 

போருக்கு பின்னர், வேகப்படுத்தப்பட்டுள்ள இந்த அடக்குமுறைகள் எங்கள் மக்களின் அடையாளத்தை எதிர்காலத்தில் அழிந்து விடும் என்று நாம் அஞ்சுகிறோம். 

னவே தமிழ் மக்களுக்கு உள்ளக சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு அரசியல்தீர்வு அளிக்கப்பட வேண்டியது ஒரு அவசர தேவை உள்ளது. 

நாம் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை, குறிப்பாக வடக்கு, கிழக்கை மையப்படுத்தியுள்ள நிலையில், ஒட்டுமொத்த சிறிலங்காவில் அதிகரித்து வரும் சர்வாதிகாரத்தனம் குறித்தும் நாம் கவலை கொண்டுள்ளோம். 

முஸ்லிம்களுக்கு எதிரான சமீபத்திய தாக்குதல்கள், கடந்த நவம்பர் மாதம் 27 சிங்கள கைதிகள் கொல்லப்பட்டது, மாத்தளையில் சித்திரவதை செய்து கொல்லப்பட்டவர்களினது என்று சந்தேகிக்கப்படும் எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது, அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள், மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், மாணவர் தலைவர்கள், மதகுருமார் மீதான அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் குறித்தும் கரிசனை கொண்டுள்ளோம். 

எனவே, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கமைய நிலைமைகளில் முன்னேற்றம் ஏதும் ஏற்படாததைச் சுட்டிக்காட்டும் வகையிலும், 

போரின்போது எல்லாத் தரப்பினராலும் இழைக்கப்பட்ட அனைத்துலக சட்டமீறல்கள் குறித்து விசாரிக்க சுதந்திரமான அனைத்துலக விசாரணைக் குழுவை உருவாக்கும் வகையிலும், 

கடந்தகால, தற்போதைய மனிதஉரிமை மீறல்களுக்கு பரந்தளவிலான பதிலளிக்கும் கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கும், நல்லிணக்க முயற்சிகளுக்கு சிறிலங்கா அரசுக்கு உதவவும், ஆலோசனை வழங்கவும் சிறப்பு பிரதிநிதி ஒருவரை நியமிக்கவும், 

போரின் இறுதிக்கட்டத்தில் ஐ.நாவின் கடப்பாடுகளை நடைமுறைப்படுத்தத் தவறிய அதிகாரிகள் குறித்து பொறுப்புக்கூறும் பொறிமுறையை உருவாக்கவும்,

கடுமையான நடவடிக்கை எடுக்கும் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர கோருகிறோம்.” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இந்தக் கடிதத்தில், கத்தோலிக்கத் திருச்சபை, அங்கிலிக்கன் திருச்சபை, மெதடிஸ்த திருச்சபை உள்ளிட்ட கிறிஸ்தவ குருமார் 132 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

 

http://www.puthinappalakai.com/view.php?20130219107806

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  செய்தி

 

இந்த  கிறிஸ்தவ குருமார் பலரும் எம்மோடு கடினமான காலகட்டங்களில்  நின்றமை  நிற்கின்றமை போற்றுதற்குரியது.

வரலாறு இதை பதிவு செய்யும்

நாளை மகிந்தவிற்கு மல்கம் இரஞ்சித் போன்றவர்கர்கள் ஆதரவாக அறிக்கை விடலாம் :icon_idea:

 

இந்தக் கடிதத்தில், கத்தோலிக்கத் திருச்சபை, அங்கிலிக்கன் திருச்சபை, மெதடிஸ்த திருச்சபை உள்ளிட்ட கிறிஸ்தவ குருமார் 132 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

 

அனைவருக்கும் நன்றிகள்!

 

இவ்வாறு பாதிக்கப்பட்ட எம்மில் சிலரான மதகுருமார், தாம் பழிவாங்கப்படுவோம் என்பதால் இந்தக் கடிதத்தில் கையெழுத்திடவில்லை.

 

இதுவே அங்கு அரச பயங்கரவாதம் உள்ளது என்பதற்கு சான்று!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி..வர வேற்க்க வேண்டிய விசயம்... இப்படி எல்லாரும் துனிந்து செயல் பட வேனும்

  • கருத்துக்கள உறவுகள்

அந்த கிறிஸ்தவ மதகுருமாருக்கு, சிரம் தாழ்ந்த நன்றிகள்.
இந்து, முஸ்லீம் மதகுருமாருக்கு... கடிதம் எழுதத் தெரியாதா?

அந்த கிறிஸ்தவ மதகுருமாருக்கு, சிரம் தாழ்ந்த நன்றிகள்.

இந்து, முஸ்லீம் மதகுருமாருக்கு... கடிதம் எழுதத் தெரியாதா?

 

பெரும்பாலான தற்கால இந்து மதகுருமார் (ஐயர்கள்) கோவிலிலுள்ள உண்டியலிலும் அர்ச்சனைத்தட்டிலும் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.

ராமகிருஷ்ண மிசன் போன்ற அமைப்புக்களில் பிழைப்பு நடத்தும் ஏனைய பெரும்பாலான இந்து மதகுருமார் (காவிச் சாமியார்கள்) பெரும்பாலும் இந்தியர்களாக இருப்பதால் இந்தியக் காட்டுமிராண்டிகளின் கைக்கூலிகளாகவே செயற்படுகின்றனர். இவர்கள் சிங்கள அரச பயங்கரவாதிகளிடம் வெகுமதிகளைப் பெற்று தமிழினப் படுகொலைக்கு துணை போகும் இந்திய ராஜதந்திரிக் காடையர்களுக்கு முகவர்களாகவும் செயற்படுகின்றனர்.

சிங்களப் பயங்கரவாதி மல்கம் ரஞ்சித் போன்ற ஒருசில கறுப்பாடுகள் (Black Sheeps) சிங்கள அரச பயங்கரவாதிகளை கையில் போட்டு மதம்மாற்றும் காடைத்தனங்களில் ஈடுபடலாம் என நினைக்கின்றனர் 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த கிறிஸ்தவ மதகுருமாருக்கு, சிரம் தாழ்ந்த நன்றிகள்.

இந்து, முஸ்லீம் மதகுருமாருக்கு... கடிதம் எழுதத் தெரியாதா?

 

 
கிறிஸ்தவ குருமாருக்கு மாதச்சம்பளம் வத்திக்கானிலையிருந்து ஒழுங்காய்ப்போகுது.....
 
எங்கடை ஐயர்மார் நாள்க்கூலிகள்  :lol:

அவையள் மகிந்தருக்குப் பொட்டு வைச்சு சால்வை போத்தித் தேங்காய்ப் பாதி குடுக்கத் தான் லாயக்கு

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்தவ மதகுருமாரின் மனிதாபிமான... முயற்சிக்கு பாராட்டுக்கள்.

 

 

1326-4.jpg

 

president5.jpg

 

 

president1.jpg

 

Nainativu_5.jpg

 

இவை கொலைகாரங்களுக்கு ஆசி வழங்கினம்...!

Edited by nedukkalapoovan

பூசாரிகள் ஒருத்தரும் மதகுருக்கள் இல்லை.

 

இலங்கையில் பிரேமதாச காலத்தில் ஆமத்துரு முதலிடம் கொடுத்த பொது தமிழ் மக்கள் புறக்கணிக்கப் படவில்லை எந்தை காட்டுவதற்காக ஓரிரு பூசாரிமாரை மேடைக்கு அழைத்தார்கள் அதுவே பின்னர் வழமையைப் போய்விட்டது.

 

இந்துமதத்தில் மதகுருக்கள் என்று யாரும் இல்லை இருந்தாலும் அவ்விடத்துக்கு ச்ந்திதான்களும் ஆதீனங்களும் பீடாதிபதிகளும் இருக்கலாமே ஒளியே பூசாரிகளும் புரோகிதர்களும் சமூகத்தை வழிநடத்தும் குறுக்கலா ஏற்கமுடியாது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட பூசாரிமாரைப் பற்றிச் சிம்பிளாச் சொல்லுறது எண்டால்,

 

எங்கட தெய்வங்களுக்குத் தமிழ் விளங்காது! :wub:

 

எங்கட பிரார்த்தனையை, அவர் மொழிபெயர்த்துக் கடவுளின் பாசையில் கடவுளுக்குச் சொல்லுறது தான், அவர் வேலை!

 

அதுக்கு உடன, COD  இல எங்களிட்டைச் சம்பளத்தையும் வாங்கிப் போடுவார்.

 

பின்னர், எங்களைப் பற்றி அவர்களும் கவலைப்படுவதில்லை, கடவுளும் கவலைப்படுவதில்லை! :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கட பூசாரிமாரைப் பற்றிச் சிம்பிளாச் சொல்லுறது எண்டால்,

 

எங்கட தெய்வங்களுக்குத் தமிழ் விளங்காது! :wub:

 

எங்கட பிரார்த்தனையை, அவர் மொழிபெயர்த்துக் கடவுளின் பாசையில் கடவுளுக்குச் சொல்லுறது தான், அவர் வேலை!

 

அதுக்கு உடன, COD  இல எங்களிட்டைச் சம்பளத்தையும் வாங்கிப் போடுவார்.

 

பின்னர், எங்களைப் பற்றி அவர்களும் கவலைப்படுவதில்லை, கடவுளும் கவலைப்படுவதில்லை! :o

ஓ...அப்ப...அவையள் சைவ ஆக்களுக்கும் சிவன்பமிலிக்கும் இடையிலை இருக்கிற டொல்மேச்சர். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  செய்தி

 

இந்த  கிறிஸ்தவ குருமார் பலரும் எம்மோடு கடினமான காலகட்டங்களில்  நின்றமை  நிற்கின்றமை போற்றுதற்குரியது.

வரலாறு இதை பதிவு செய்யும்

 

உண்மை.வண பிதா சிங்கராயரில் இருந்து மேற்கூறியவர்கள் வரை பலர் பல காலகட்டங்களில் தமது குரலை கொடுத்துள்ளார்கள்.நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.