Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்ட இரகசிய அறிக்கை - விபரம் வெளியிட சிறிலங்கா மறுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்ட இரகசிய அறிக்கை - விபரம் வெளியிட சிறிலங்கா மறுப்பு

[ சனிக்கிழமை, 23 பெப்ரவரி 2013, 02:14 GMT ] [ கார்வண்ணன் ]

 

சிறிலங்கா மீதான குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் இரகசிய அறிக்கை ஒன்றை, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் சிறிலங்கா அரசாங்கம் கையளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றுக்காலை இந்த அறிக்கை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம், ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்னவினால் கையளிக்கப்பட்டுள்ளது.

பாலித கொஹன்னவுடன் இணைந்து ஜப்பானிய நிரந்தர விதிவிடப் பிரதிநிதி சுனேயோ நிசிடா, பங்களாதேசின் நிரந்தரப் பிரதிநிதி அபுல் கலாம் அப்துல் முமேன், ருமேனியாவின் நிரந்தரப் பிரதிநிதி சிமோனா மிரேலா மிகுலெஸ்கு, நைஜீரியாவின் பிரதி நிரந்தரப் பிரதிநிதி உஸ்மான் சர்க்கா ஆகியோரும் ஐ.நா பொதுச்செயலருடனான இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

இந்தச் சந்திப்பில், பாக் கீ மூனுடன் ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரிகள் ஒஸ்கார் பெர்னான்டஸ் தரங்கோ, ஹிரோகி டென் ஆகியோரும் உடனிருந்தனர்.

மூடப்பட்ட அறையில் நடந்த இந்தச் சந்திப்புத் தொடர்பான விபரங்கள் ஏதும் பான் கீ மூனின் அதிகாரபூர்வ சந்திப்பு நிகழ்ச்சி நிரலில் பட்டியலிடப்பட்டிருக்கவில்லை.

சந்திப்புக்கு முன்னதாக, இன்னர்சிற்றி பிரசிடம் கருத்து வெளியிட்ட ஜப்பானியப் பிரதிநிதி சுனேயோ நிசிடா, சிறிலங்கா முக்கியமான நாடு என்றும், இன்று காலை பான் கீ மூனிடம் தமது அறிக்கையை கையளிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அதேவேளை, பான் கீ மூனிடம் சிறிலங்காவின் சார்பில் பாலித கொஹன்ன மற்றும் ஜப்பான், பங்களாதேஸ், ருமேனியா, நைஜீரியா நாடுகளின் பிரதிநிதிகள் கையளித்த அறிக்கையின் உள்ளடக்கங்கள் தொடர்பாக தகவல் எதையும் வெளியிட சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம மறுத்துள்ளார்.

அதேவேளை, சிறிலங்கா தொடர்பான அறிக்கைகளை, அந்தந்த நாட்டு அரசாங்கங்களிடம் வழங்குமாறு வெளிநாடுகளில் உள்ள சிறிலங்காவின் தூதுவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

 

http://www.puthinappalakai.com/view.php?20130223107836

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி அந்த அறிக்கையில் என்ன இருக்கும்..?

 

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் ஆதரவுடன் தான் போரை முன்னெடுத்தோம்.. இதற்கு ஐநாவின் ஆதரவும் இருந்தது. இதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது எண்டு கிடுக்கிப்பிடி போட்டிருப்பான்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

திருவாளர் பான்கீமூனாகிய தாங்களும் இந்த விடயம் தொடர்பாக எங்களைக் குற்றவாளி ஆக்கினால் அவ்விடத்தில் நீங்களும் அதற்கான தீர்வுகளை ஏற்கவேண்டும். அப்படி நீங்கள் குற்றவாளி இல்லையென்றால் நாங்களும் குற்றவாளிகள் அல்ல என்பதை ஆணித்தரமாகச் சொல்லவிரும்புகிறோம் ஆகவே உங்களுக்கான குற்றச்சாட்டை நீங்களே பரிசீலனை செய்யவும்  என்பதாக இருக்கும்

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

அதல்ல  சிக்கல்

பான்கீ மூனையும் தாண்டிவிட்டது  சாட்சியங்களும் அவலங்களும்  எதிர்ப்புகளும்.

இனி அவரே நினைத்தாலும் தடுக்கமுடியாது.

 

அப்படி தடுக்க நினைத்தால்தான் அவருக்கு இதில் இருந்த பங்கை அவரே அறிவித்ததாக இருக்கும்

அந்தளவுக்கு முட்டாளல்ல கொரியர்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

தீர்மானத்தை யாரும் தடுக்க முடியாதுதான்.. ஆனால் அந்தத் தீர்மானத்தில் என்ன இருக்கும் என்பதுதானே பிரச்சினை?? :rolleyes:

 

என்னுடைய அனுமானம்..

 

"நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்கு ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் ஈமெயில் தொடர்பு ஏற்படுத்தப்படும். " :D

  • கருத்துக்கள உறவுகள்

தீர்மானத்தை யாரும் தடுக்க முடியாதுதான்.. ஆனால் அந்தத் தீர்மானத்தில் என்ன இருக்கும் என்பதுதானே பிரச்சினை?? :rolleyes:

 

என்னுடைய அனுமானம்..

 

"நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்கு ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் ஈமெயில் தொடர்பு ஏற்படுத்தப்படும். " :D

 

 

நான் இவர்கள் எவரையும் நம்பவில்லை இசை

 

நான் காணும் மாற்றம் தமிழக கட்சிகள் சார்ந்து

மக்கள் சார்ந்து

இந்திய சில மாநிலங்கள் சார்ந்து  ஏற்பட்டிருக்கும் எழுச்சி.

இந்தியாவை தட்டி நிமிர்த்திவிட்டால்..............???

மற்றதெல்லாம் தானாக  கவுண்டு கொட்டிவிடும்

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் உண்மை விசுகு அண்ணா..

  • கருத்துக்கள உறவுகள்

அந்த அறிக்கையில்

 

இன்னும் ஆறு மாதங்கள் தவணை கேட்டிருப்பார்கள்

அதுவரை கொஞ்சம் இழுத்தடியுங்கள் எனக் கெஞ்சியிருப்பார்கள் 

கேட்ட கடன்களை உடனடியாக அமுல்படுத்தங்கள் எனப் பிச்சையும் கேட்டிருப்பார்கள்

இந்தியாவில் ஏற்படும் சாதகமான மாற்றம் மட்டுமே ஈழத்தழிழனுக்குத் தீர்வைப் பெற்றுத் தரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இவர்கள் எவரையும் நம்பவில்லை இசை

 

நான் காணும் மாற்றம் தமிழக கட்சிகள் சார்ந்து

மக்கள் சார்ந்து

இந்திய சில மாநிலங்கள் சார்ந்து  ஏற்பட்டிருக்கும் எழுச்சி.

இந்தியாவை தட்டி நிமிர்த்திவிட்டால்..............???

மற்றதெல்லாம் தானாக  கவுண்டு கொட்டிவிடும்

தமிழகத்தில உள்ள அரசியல் நிலைமை இந்தியாவில எல்லா இடத்திலையும் இல்லை.

 

இந்தியாவில் எல்லா இடத்திலையும் உள்ள அரசியல் நிலை என்றும் ஒரேமாதிரியாய் இருந்ததும் இல்லை.

 

எல்லாத்துக்கும் மேலா இன்றும் இந்தியாவுக்கு ஒரு நிரந்தர வெளிநாட்டுக் கொள்கை இல்லை.

இந்தியாவில் ஏற்படும் சாதகமான மாற்றம் மட்டுமே ஈழத்தழிழனுக்குத் தீர்வைப் பெற்றுத் தரும்.

இந்தியாவில மாற்றம் ஏற்படும் என்று திர்பார்ப்பதைவிட இலங்கையில் ஏற்படும் என்று எதிர்பார்ப்பது ஒப்பீட்டளவில் முன்னேற்றமானது. 

சரியான அழுக்குத்தான் கடிதம் எழுதி குடுத்திருக்கன்.. 

 

இனி மூன் என்ன செய்வார்? 

புலிகள் இருக்கும் போது தமிழிழம் நுனியில் வந்துவிட்டதென நினைத்தவர்கள் இப்போ தமிழ் நாட்டில் ஏற்படும் மாற்றம் என்கின்றார்கள் ,

குஷ்புவை களம் இறக்கி ஜெயலலிதாவை தோற்கடிக்க அவங்கள் பிளான் பண்ணிக்கொண்டு இருக்கின்றார்கள் ,சனங்களும் குஷ்புவின் பின்னால் போனாலும் போகும் .

அமேரிக்கா ,இந்தியா ,தமிழ்நாடு எதுவும் எமக்கு விடுதலை எடுத்து தராது நாம் தாம் அதற்கு போராடவேண்டும் . .

அமேரிக்கா ,இந்தியா ,தமிழ்நாடு எதுவும் எமக்கு விடுதலை எடுத்து தர தேவை இருக்கவில்லை. புலிகள் நாட்டை ஆண்டார்கள்.

 

 

இன்று எமக்கு தேவை சர்வதேச அங்கீகாரம்.

 

அதை தமிழ்நாடே இந்திய அங்கீகாரத்தை மட்டுமல்ல அமெரிக்க அங்கீகாரத்தையும் பெற வலிமை உள்ளது. தார்மீக கடமையும் உள்ளது.

புலிகள் இருக்கும் போது தமிழிழம் நுனியில் வந்துவிட்டதென நினைத்தவர்கள் இப்போ தமிழ் நாட்டில் ஏற்படும் மாற்றம் என்கின்றார்கள் ,

குஷ்புவை களம் இறக்கி ஜெயலலிதாவை தோற்கடிக்க அவங்கள் பிளான் பண்ணிக்கொண்டு இருக்கின்றார்கள் ,சனங்களும் குஷ்புவின் பின்னால் போனாலும் போகும் .

அமேரிக்கா ,இந்தியா ,தமிழ்நாடு எதுவும் எமக்கு விடுதலை எடுத்து தராது நாம் தாம் அதற்கு போராடவேண்டும் . .

 

இந்த மூளை ஈழத்து மாற்றுக்கருத்தாளர்களினால் தி.மு.காவிற்கு கையளிக்கப்பட்ட ஆலோசனை.

 

சர்தேச உதவியுடன் அரசு புலிகளை தோற்கடித்தால் தமிழருக்கு அரசு சுதந்திரம் கொடுக்கும் சர்வதேசத்துக்கும், இந்தியாவுக்கு ஆலோசனை வழங்கிய மாற்றுக்கருதுக்களின் பாதை இது. புலிகளுடன் இணைந்து போராடி விடுதலை வாங்காமல், குயக்கமாக சிந்தித்திது வகையாமாட்டும் புத்தியீவிகள்...

 

முன்னர் கருணாநிதியை அடக்க தி.மு.காவுக்குள், M.G.R. ஜெயலிதாவை தேடவேண்டியிருந்தது. கருணாநிதியை ஏற்றி வைத்த M.G.R. ரேதான் இறக்கிவைக்கவும் முடிந்தது. இன்று குஸ்பு அதே நிலையில்.  அவரை கட்டாயம் கருணாநிதி முன்னேற்றவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இருக்கும் போது தமிழிழம் நுனியில் வந்துவிட்டதென நினைத்தவர்கள் இப்போ தமிழ் நாட்டில் ஏற்படும் மாற்றம் என்கின்றார்கள் ,

குஷ்புவை களம் இறக்கி ஜெயலலிதாவை தோற்கடிக்க அவங்கள் பிளான் பண்ணிக்கொண்டு இருக்கின்றார்கள் ,சனங்களும் குஷ்புவின் பின்னால் போனாலும் போகும் .

அமேரிக்கா ,இந்தியா ,தமிழ்நாடு எதுவும் எமக்கு விடுதலை எடுத்து தராது நாம் தாம் அதற்கு போராடவேண்டும் . .

 

பிலேட்டை  மாத்தி  மாத்தி  போடுவதற்குத்தான் பயிற்சி  எடுத்தீர்கள் போலும்???

 

நாம் போராடினாலும் திட்டுகிறீர்கள்

அண்ணன் தம்பியை  நம்பினாலும் திட்டுகிறீர்கள்

 

நாம் ஒன்றாக திரண்டிருந்தால் இன்று இந்தநிலமை வந்திருக்குமா???

காலை   இளுத்து பிடித்து கவிட்டுவிட்டு இன்று கதை வேறு :(  :(  :(

களவு ,கொலை ,கொள்ளை இதுதான் உங்கள் போராட்டத்தின் அகராதி .

நான் அதை சொல்லவில்லை அரசியல் போராட்டத்தை சொன்னேன் .

களவு ,கொலை ,கொள்ளை இதுதான் உங்கள் போராட்டத்தின் அகராதி .

நான் அதை சொல்லவில்லை அரசியல் போராட்டத்தை சொன்னேன் .

நீங்க அழகிரி, குஸ்பு சேர்ந்து ஸ்ரனிடம்  நடத்தும் போராட்டத்தை பற்றி பேசுகிறீங்க. நமக்கெல்லாம் புரியும் விசயமா இது என்ன?

 

இருந்தாலும் நீங்க கொடுத்துதவிய அகராதிக்கு நன்றி.

 

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.