Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம்: யார்? யாருக்கு எதிராகப் போராடுவது? - தமிழக மக்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் ஒரு கடிதம்! மீராபாரதி

Featured Replies

ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனவாத தாக்குதல்களும் அழிப்புகளும் சிறிலங்கா அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட நாளிலிருந்தேm-p.png இன்று நடைபெறுகின்ற தமிழக மாணவர்களின் எழுச்சி  போன்று பல போராட்டங்கள்  தமிழகத்தில் நடைபெற்றிருக்கின்றன. இவ்வாறு ஈழத் தமிழர்களின் விடுதலையிலும் அதன் சோகங்களிலும் தூக்கங்களிலும் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக தமிழக மனிதர்கள் பங்கு கொண்டும் பல்வேறு  தளங்களிலும் வழிகளிலும் பங்களித்தும் வந்திருக்கின்றார்கள். சிலர் ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக தீக்குளித்து தம் உயிர்களையும் நீத்திருக்கின்றார்கள். இது தவறான பாதையாக இருந்தபோதும், அவர்களது அக்கறையும் அர்ப்பணிப்பு உணர்வும் புறக்கணிக்க கூடியதல்ல. இவ்வாறு பங்களித்தவர்களுக்கும் தொடர்ந்தும் பங்களிப்பவர்களுக்கும் ஈழத் தமிழர்கள் என்றும் நினைவு கூறுவதுடன் நன்றியுடையவர்களாகவும் இருப்போம்… இருப்பார்கள் என நம்புகின்றேன்.

 

இதேபோல் இன்று ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக தமிழகத்தில் நடைபெறுகின்ற மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டங்களை நாம் மதிக்கின்றோம். தமிழக மாணவர்களின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் மதிப்பதுடன் புரிந்துகொள்ளவும் முயற்சிக்கின்றோம்.  இவர்களின் இந்த செயற்பாடுகள் எந்தவகையிலும் நகைப்புக்கும் எள்ளலுக்கும் உள்ளாக்கப்பட வேண்டியதல்ல. அவ்வாறு பார்க்கப்பட வேண்டியதும் அல்ல. ஆனால் இந்தப் போராட்டம்,  இதற்குப் பின்னாலுள்ள அரசியல் மற்றும் இவற்றின் விளைவாக ஈழத் தமிழர்களின் விடுதலையில், வாழ்க்கையில் ஏற்படப்போகின்ற நன்மைகள் மற்றும் பாதிப்புகள் என்பன நிச்சயமாக ஆராயப்பட  வேண்டியவை. இதை அடிப்படையாகக் கொண்டே சில குறிப்புகளை இக் கட்டுரை முன்வைக்கின்றது.

 

0000000

 

m-h-1024x197.jpg

 

தமிழகத்தில் மாணவர்கள் நடாத்தும் போராட்டத்தினால் ஈழத் தமிழ் தேசத்திலிருந்து சிறிலங்கா இராணுவம் வெளியேறுவதுடன், அரசியல் கைதிகளின் விடுதலை செய்யப்பட்டும், ஈழத் தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆளுவதற்கான உரிமையும் சுயநிர்ணைய உரிமையும் கிடைக்குமானால் அது விரும்பத்தக்கதே. இதற்குமாறாக இந்தப் போராட்டத்தின் விளைவுகளால் ஈழத் தமிழ் தேசம் மேலும் மேலும் ஒடுக்குமுறையை சந்தித்து தனது விடுதலையை முன்னெடுப்பதற்கான சகல வழிகளும் மூடப்படுமாயின் இப் போராட்டம் தொடர்பாக நாம் மீள் பரிசீலனை செய்யவேண்டும்.

 

 

 

s-3.jpgஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறுகின்ற மனித உரிமைக் கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கத்திற்க்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் ஒன்றை சமர்ப்பிக்க முயற்சிக்கின்றது.  அமெரிக்காவின் இந்த தீர்மானத்திற்கு எதிராக மாணவர்களின் மேற்குறிப்பிட்ட போராட்டங்கள் பரவலாகவும் தீவிரமாகவும் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன. இத் தீர்மானத்திற்கு மாறாக இவர்கள் பின்வரும் கோரிக்கைகள் பிரதானமாக முன்வைக்கின்றனர். முதலாவது சிறிலங்கா அரசாங்கத்தால் நடாத்தப்பட்ட போர்க் குற்றங்களுக்கான விசாரணையை நடாத்தி அவர்களுக்கான தண்டனையை வழங்கு. இரண்டவாது தமிழ் ஈழத்திற்கான வாக்கெடுப்பை நடாத்து என்பன ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்டன. இப்பொழுது இலங்கைக்கு எதிரான பொருளாதார தடையை அமுல்படுத்து என்ற கோரிக்கை உட்பட பத்துக் கோரிக்கைகளாக அவை அதிகரித்துள்ளன.

 

 

 

இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் அமெரிக்காவின் தீர்மானத்தை வரவேற்கின்றார். இவரது கட்சி அரசியலுடன் உடன்பாடு இல்லாவிட்டாலும் இக் கட்சித் தலைவர்களே இன்று ஈழத் தமிழர்களின் தேசிய தலைவர்கள். ஆனால் தமிழக போராட்ட சக்திகள் இதற்கு மாறாக அமெரிக்க தீர்மானத்தை நிராகரிக்கின்றார்கள். முரண்பாடு இங்குதான் ஆரம்பிக்கின்றது. இதற்கிடையில் ஐ. நாவின் நடைபெறும் செயற்பாடுகள் தொடர்பாக ஏற்கனவே நிலாந்தன் அவர்கள் தனது கட்டுரைகளில் தெளிவாக கூறியுள்ளார். இந்தத் தீர்மானம் எந்த வகையிலும் தமிழர்களின் நலன்களின் அக்கறை கொண்டதல்ல என. ஏனெனில் இந்த அரசுகள் தமது நலன்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவதற்கான ஒரு துடுப்பே இந்தத் தீர்மானம். ஆகவே ஒவ்வொருவரும் அவரவர் நலன்களுக்கு ஏற்ப இந்த தீர்மானத்தை திசை திருப்புகின்றனர். இறுதியில் அனைத்து அரசுகளினதும் நலன்களையும் கருத்தில் கொண்ட பொதுவான “உப்புச் சப்பற்ற” ஒரு தீர்மானம் முன்வைக்கப்படும். இதில் ஈழத் தமிழர்கள் நலன்கள் பலியிடப்பட்டு இவர்கள் மீண்டும் சர்வதேசத்தால் கைவிடப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே இங்கு நாம் கவனிக்க வேண்டியதும் ஆராய வேண்டியதும் யார் யாருடைய நலன்களை முன்வைத்து செயற்படுகின்றார்கள் என்பதே?

 

 

 

ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பிரதானப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியவர்கள் ஈழத் தமிழர்களே. அந்தவகையில் இன்று தமிழகத்தில் நடைபெறுவதுபோன்ற இவ்வாறான உண்ணாவிரதப் போராட்டத்தை ஈழத்தில் இருக்கின்ற (ஆனந்த சங்கரி, சம்பந்தன், சேனாதிராசா, பிரேமச்சந்திரன், கஜேந்திரன், சித்தார்த்தன், சிவாஜிலிங்கம் …. போன்ற அனைத்து) தமிழ் தலைவர்களும் மற்றும் புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளிலிருந்து தீவிரமாக செயற்படுகின்ற பல ஈழத் தமிழ் அமைப்புகளின் அரசியல் தலைவர்களும் செயற்பாட்டாளர்களும் (உருத்திரகுமாரன், நெடியவன், நீதன் சண் … போன்ற) முன்னெடுத்திருக்க வேண்டும். தமிழக மாணவர்கள் போல் இவர்கள் உண்ணாவிரம் இருந்திருக்கவேண்டும். இதுவே சர்வதேச கவனத்தை ஒரளவு என்றாலும் திரும்பிம்பிப் பார்க்க வைத்திருக்கும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.

 

 

 

ஈழத் தமிழ் தலைவர்களால் இவ்வாறான ஒரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு அதற்கு தமிழக மாணவர்களதும் செயற்பாட்டாளர்களதும் ஆதரவு இருந்திருக்குமாயின் அது ஆரோக்கியமானதாக இருந்திருக்கும். அதில் சந்தேகம் இருக்க வாய்ப்பில்லாமல் இருக்கலாம். ஆகவேதான் இவ்வாறான ஒரு போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக ஒரு முன்மொழிதலை வைத்திருந்தேன்.  ஆனால் அதை யாரும் கணக்கில் எடுக்காது எந்த அக்கறையும் இல்லாது இருந்தனர். மாறாக அடக்கப்படுகின்ற மக்கள் வாழ்வின் மீது ஏறி அனைவரும் அரசியல் நாடகம் ஆடிக்கொண்டு வியாபாரம் செய்கின்றனர். மீண்டும் மீண்டும் தோற்றுப் போன அரசியல் வழிமுறைகளையும் கோசங்களையுமே முன்வைக்கின்றார்கள். இதனால் ஈழத் தமிழர்களின் விடுதலைக்கு ஏதுவும் பயனுள்ளதா என்றால் அது சந்தேகமே.

 

 

 

ஈழத் தமிழர்கள் தாம் இதுவரை முன்னெடுத்த போராட்டத்தில் பல்வேறு காரணங்களால் தோற்றுப் போய் இருக்கின்றார்கள். இது இன்றைய யதார்த்தம் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் இன்று ஈழத் தமிழர்கள் தாம் கடந்து வந்த போரின் வடுக்களிலிருந்து தம்மைத் தாமே சிறிது ஆற்றுபடுத்த ஆரம்பித்திருக்கின்றார்கள். இவர்கள் மீள எழுவதற்கு சிறிது காலம் தேவைப்படலாம். அதேவேளை இவர்கள் இதுவரை தாம் கடந்து வந்த பாதையை மீள்பார்வைக்கு உட்படுத்தவும் வேண்டும். அப்பொழுதுதான் ஈழத் தமிழ் தேசத்தின் விடுதலைப் போராட்டத்தை மீளவும் அவர்கள் ஆரோக்கியமான வழிகளில் தொடர முடியும். அல்லது இவ்வாறான போராட்டங்கள் ஈழத்தில் எழுச்சி கொள்ளும் பொழுது வழிநடாத்த முடியும். ஈழத் தமிழ் தேசம்  தன் விடுதலைக்கான போராட்டத்தை (தவறான வழிகளிலோ கொள்கைகளின் அடிப்படையிலோ) மீண்டும் எப்பொழுது முன்னெடுக்கின்றதோ, அப்பொழுது கடந்த காலங்களில்  பங்களித்ததுபோல்,  தமிழக மக்கள் பங்களிக்கலாம். இதுவே  பொருத்தமானதும் சரியான அணுகுமுறையுமாகும். ஆனால் அதுவரை பொறுத்திருக்காமல் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை தமிழக செயற்பாட்டாளர்களும் மாணவர்களும் தம் கையில் எடுத்து செல்கின்றார்கள். இது ஆரோக்கியமானதல்ல. இவர்கள் நேர்மையுடனும் உண்மையுடனும் இந்தப் போராட்டங்களில் பங்குபற்றலாம். ஆனால் இந்த செயற்பாடுகள் இவர்கள் மீது இல்லாவிட்டாலும் இதன் பின்னால் உள்ள அரசியல் மீது சந்தேகம் கொள்ள வைக்கின்றது. ஆகவேதான் கேள்வி கேட்க வேண்டியிருக்கின்றது. இதற்கான காரணங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 

 

 

ஒரு புறம் தென்னாசியப் பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டி தான் ஒரு வல்லரசாக வருவதற்கு இந்திய அரசு முயற்சிக்கின்றது. s-2.jpgமறுபுறம் தமிழ் தேச விடுதலைப் போராட்டத்தை சிதைத்ததில் இந்திய அரசு, தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகள், இயக்கங்கள், குழுக்கள் அனைவருக்கும் பொறுப்பும் பங்கும் இருக்கின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது. இது கடந்த கால வரலாறு. இப்பொழுது என்னவென்றால் ஈழத் தமிழர்களின் போராட்டத்தையே நீங்கள் முன்னெடுக்கின்றீர்கள். இது எந்தவகையில் நியாயமானது? ஈழத் தமிழர்களின் மீது தமிழக மக்களுக்கு இருக்கின்ற அன்புக்கும் அக்கறைக்கு அப்பால், இவ்வாறு செயற்படுவது நாம் அனைவரும் ஒரு மொழி பேசுகின்றோம் என்கின்ற தமிழ் மொழியின் பெயரால் இன்னுமொரு மேலாதிக்கமா? நாம் ஒரு மொழி பேசிய போதும் இரு வேறு தேசங்களை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல. வேறு வேறு நாட்டினரும் கூட. ஆகவே சில சந்தர்ப்பங்களில் ஒரு நாட்டின் தேசத்தின் விடுதலைக்கான செயற்பாட்டில் இன்னுமொரு நாட்டின் தேசத்தின் பங்கு வரையறை என்ன என்பதில் நாம் கவனமாக இருக்கவேண்டும். ஆனால் அது பற்றிய அக்கறை தமிழக செயற்பாட்டாளர்களுக்கு இல்லை என்பது துர்ப்பாக்கியமானது. ஆகவேதான் இவர்களும் இந்திய மற்றும் தமிழக அரசுகள் செயற்படுவதுபோல் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் செயற்படுகின்றார்களா என சந்தேகிக்க வேண்டியிருக்கின்றது.

 

 

 

என்.சண்முகதாசன் அவர்கள் தனது நூலில் சிங்கள மக்களின் ஆழ்மனங்களில் இருக்கின்ற பின்வரும் சந்தேகங்களையும் பயத்தையும் குறிப்பிடுகின்றார். முதலாவது கடந்த காலங்களில் நடைபெற்ற தென்னிந்திய படையெடுப்புக்கள். இரண்டாவது பிரிந்தானிய ஆதிக்கத்திலிருந்த நேரம் தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட இன்றைய மலையக மக்கள். இன்றும் இவர்களை இந்திய விஸ்தரிப்பு வாத்தின் ஒரு பகுதியாகவே சிங்கள இனவாத சக்திகள் பரப்புரை செய்கின்றன. ஆனால் இந்திய அரசுக்கும் இவர்கள் வருகைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பது கவனிக்கப்படுவதில்லை என எங்கோ வாசித்த ஞாபகம். மூன்றாவது மிசனரிகளினால் வடபகுதியில் உருவாக்கப்பட்ட கல்வி வசதிகளும் அதனால் அதிகமான அரச தொழிலில் தமிழர்கள் இருந்தமையும். நான்காவதாக இலங்கையில் வாழ்கின்ற தமிழர்கள் சிறுபான்மையாக இருந்தபோதும் தாம் பெரும்பான்மை என எண்ணுவதற்கு ஆதாரமாக இருக்கின்ற தமிழகம். இதனால் இலங்கையில் தாம் பெரும்பான்மையாக இருந்தபோதும் பிராந்தியளவில் சிறுபான்மை என உணர்கின்ற சிங்கள தேசம். இது தொடர்பாக அண்மையில் நிலாந்தனும் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். ஐந்தாவது தமிழ் மொழியின் பழைமை காரணமாக சிங்களவர்களுக்கு இருக்கின்ற தாழ்வுச் சிக்கல் (131). இவ்வாறன சிங்கள மக்களின் மனங்களிலிருக்கின்ற பயத்தையும் சந்தேகத்தையும் சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வருகின்றனர். இது சிங்கள தேசத்தின் பிரச்சனையாக இருப்பினும் தமிழ் தேசத்தின் விடுதலைக்கான பயணத்தை தீர்மானிக்கின்றவையாகவும் இருக்கின்றன. அதேவேளை தமிழகத் தமிழ் தேசிய உணர்வாளர்களது செயற்பாடுகள் சிங்கள மக்களின் பயத்தையும் சந்தேகத்தையும் அவர்களுக்கு மேலும் உறுதியாக நம்பச் செய்வதாகவே இருக்கின்றது என்றால் மிகையல்ல. ஆகவே தான் இவை எங்களின் கவனித்திற்கு உரியவையாகின்றன.

 

 

 

என்.சண்முகதாசன் அவர்கள் இருபது வருடங்களுக்கு முன்பே மேற்குறிப்பிட்டவாறு இவ்வளவு தெளிவாக தனது கருத்துக்களை முன்வைத்தபோதும் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டமானது இதனைக் கருத்தில் எடுத்து தனது தந்திரோபாயங்களை வகிக்காமை தூர்ப்பாக்கியமானது. இந்தடிப்படையில் இன்றும் கூட தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக தமிழக சக்திகள் முன்னெடுக்கின்ற போராட்டங்கள் எதிர்மறைவான விளைவுகளையே ஈழத் தமிழர்களுக்கு ஏற்படுத்தும் என்பதை தமிழக செயற்பாட்டாளர்கள் கவனிக்க தவறுகின்றார்கள். இருப்பினும் ஈழத் தமிழர்களின் மீதும் தமிழ் மொழியின் மீதும் தமிழக மக்களிற்கும் செயற்பாட்டாளர்களுக்கும் மாணவர்களிற்கும் இருக்கின்ற பற்று மற்றும் அக்கறையின் காரணமாக இவ்வாறான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால் இப் போராட்டங்கள் எவ்வாறான அடிப்படைகளிலும் வழிகளிலும் அனைவருக்கும் பயன்தரும் வகையிலும் ஆரோக்கியமாக முன்னெடுக்கலாம் எனச் சிந்திக்கவேண்டிய ஒரு கட்டத்தில் இருக்கின்றோம்.

 

000000

 

முதலாவது ஈழத் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை நோக்கமே தன் தேசத்தின் சுயநிர்ணைய உரிமையையே என்றால் மிகையல்ல. இந்த உரிமைக்குள் பல உரிமைகள் அடங்கியுள்ளன. இந்த உரிமை கிடைப்பதனுடாக அடக்கப்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட தேசங்கள் அதன் பின் பிரிந்து வாழ்வதா, இணைந்து வாழ்வதா, கூட்டமைப்பாக வாழ்வதா என முடிவெடுப்பது குறிப்பிட்ட தேசங்களைப் பொறுத்த விடயம். இதேவேளை ஈழத் தமிழ் தேசத்தின் சுயநிர்ணைய உரிமைக்கான கோரிக்கையை வென்றெடுப்பது என்பது இந்தியாவிலிருக்கின்ற தேசங்களைப் பொறுத்தவரையும் முக்கியமானது. இது இந்திய தேசங்களின் விடுதலைக்கும் வழிவகுக்கலாம். ஆகவே ஈழ தமிழ் தேசிய விடுதலை தொடர்பாக தமிழகத்தில் நடைபெறுகின்ற மாணவர் போராட்டத்தில் இதுவே பிரதானமான கோரிக்கையாக முன்நிலைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதுவே சரியான அரசியல் கோரிக்கையுமாகும்.

 

 

 

இரண்டாவது நாடு கடந்த அரசு(?) அரசாங்கத்தின் (?) தலைவர் உருத்திரகுமாரன் அவர்கள் தனது பொங்கல் செய்தியில் கூறுவதுபோல் ஈழத் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டமானது வெறுமனே தமிழ் மொழிக்கான, அதன் பழைமையின் பெருமையைப் பாதுகாப்பதற்கும் பேசுவதற்குமான, அதன் வரலாற்று முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்கான போராட்டமல்ல…  அதேவேளை ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்துடன் தமிழ் மொழியின் முக்கியத்துவம் பின்னிப்பிணைந்திருக்கின்றமையை மறுக்கவில்லை. இது சிறிலங்கா அரசினால் தமிழ் மொழிக்கான சம உரிமை மறுக்கப்பட்டமைக்கு எதிராக சமவுரிமையைக் கேட்பதனுடாகப் முன்வைக்கப்படுகின்றது. ஆனால் இக் கோரிக்கையே போராட்டத்தின் பிரதான அம்சம் அல்ல.  அதாவது தமிழ் மொழியின் பழமையைக்காகவும் அதன் உயர்ந்த நிலைக்காவும் ஈழ தேசம் போராடவில்லை.. ஆனால் உருத்திரகுமாரன் அவர்கள் மேற்குறிப்பிட்டவாறு போராட்டத்தில் தமிழ் மொழியின் பங்கு தொடர்பான உண்மைக்கு மாறான கருத்துக்களை முன்வைப்பது ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு எதிரானதாகவே செயற்பட்டுவிடலாம். ஏனெனில்  ஈழத் தமிழர்களின் பிரதானமான போராட்டமானது தம் தேசத்தின் மீதான சிறிலங்கா அரசின் அடக்குமுறைக்கும் ஆக்கிரமிப்புக்கும் பௌத்த பேரினவாத செயற்பாடுகளுக்கும் எதிரான போராட்டமே என்பது வெளிப்படையானது. ஆகவே நாம் யாருக்கு எதிராக? எதற்காகப் போராடுகின்றோம்? என்பதில் தெளிவாக இருப்பது அவசியமற்ற சந்தேகங்களை இல்லாது செய்துவிடும்.

 

 

 

உருத்திரகுமாரன் அவர்கள் குறிப்பிடுகின்ற கருத்துக்களின் அடிப்படையிலான தமிழ் மொழிக்கான  போராட்டமானது தமிழகத்திற்கே உரியது… அவர்களே தமிழ் மொழியின் பழமையை நிலைநாட்டுவதற்கும் அதனைப் பாதுகாப்பதற்கும் போராட வேண்டியவர்கள். இது தமிழகத்திற்கான சுயநிர்ணைய உரிமை கிடைப்பதன் மூலமே சாத்தியமானதாகும். இதன் மூலம் தமிழகத்தில் தமிழை வளர்ப்பதற்கும் பாதுகாப்பதற்குமான முயற்சிகளை எடுக்கலாம். இவ்வாறான ஒரு போராட்டத்திற்கு ஈழத் தமிழர்கள் ஆதரவும் பங்களிப்பும் செய்யலாம்.

 

 

 

s-1.jpgமூன்றாவது தமிழகத்தில் போராடும் மாணவர்களது கோரிக்கைகளில் இன்னுமொன்று இலங்கைக்கு எதிரான பொருளாதார தடை. எந்த ஒரு நாட்டிற்கும் எதிரான பொருளாதார தடை விதிப்பது அடிப்படையில் தவறானதாகும். ஏனெனில் இதனால் பாதிக்கப்படப் போவது அரசும் ஆட்சியளர்களும் அல்ல. மாறாக சாதாரண மக்களே. அந்தவகையில் இலங்கைக்கு எதிரான பொருளாதார தடை விதிக்கப்படுமாயின் பாதிக்கப்படப்போவது சிங்கள மக்கள் மட்டுமல்ல. 30 ஆண்டு கால போர் மற்றும் வன்முறைக்குள் மற்றும் சிறிலங்கா அரசின் பொருளாத தடைக்குள் வாழ்ந்த ஈழத் தமிழ் மக்களே. இது இவர்கள் மீண்டும் துன்பம் அனுபவிக்க செய்வதாகும். ஆகவேதான் இது ஒரு தூரநோக்கமற்ற ஆழமாக சிந்திக்காத உணர்ச்சிகரமான கோரிக்கை என்றால் தவறல்ல.

 

நான்காவது இலங்கையைப் பொருத்தவரை ஈழத் தமிழர்களின் போராட்டமானது சதாரண சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல. மாறாக ஈழத் தமிழ் தேசத்தை அடக்கி ஒடுக்கி ஆக்கிரமித்திருக்கின்ற சிங்கள பெளத்த பேரினவாத அரசுக்கு எதிரான போராட்டமே. ஆனால் ஈழத் தமிழ் தேசியவாத சக்திகளுக்குள் இருந்த குறுந்தேசியவாதத்தினாலும் மற்றும் இந்திய ஊடுறுவல்களாலும் சிங்கள மக்களுக்கு எதிரான தாக்குதல்களும் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டன. ஆனால் இவ்வாறான செயற்பாடுகள் எந்தவகையிலும் நியாயமற்றது  தூரநோக்கற்றதுமாகும். இது ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தையே கேள்விற்குட்படுத்துகின்றது

 

இதன் தொடர்ச்சியாக இன்றும் தமிழகத்திற்கு பல்வேறு தனிப்பட்ட காரணங்களுக்கான விஜயம் செய்கின்ற சதாரண சிங்கள மனிதர்களை தடுத்தும் அடித்தும் தண்டித்தும் துன்புறுத்துகின்றார்கள் தமிழக தமிழ் தேசிய உணர்வாளர்கள். இதற்கு ஈழத்த தமிழர்களுக்கு  எதிராக சிறிலங்கா அரசும் அதன் இராணுவமும் இனவாத சண்டியர்களும் செய்த கொடுமைகளையும் கொலைகளையும் காரணமாக இவர்கள் கூறுகின்றனர். இதற்கான தமது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காகவே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதாக கூறுகின்றனர். உண்மையிலையே இது மட்டுமா காரணம்? கடந்த கால வரலாற்றில் தமிழ் நாட்டில் ஆட்சி செய்தவர்களின் இலங்கை மீதான ஆக்கிரமிப்பும் மற்றும் பௌத்த மதத்திற்கு எதிரான செயற்பாடுகளும் இன்றும் தமிழக மக்களின் ஆழ்மனங்களில் இருக்கின்றதா என்பதும் ஆய்வுக்குரியது.. அதேவேளை  இவை சிங்கள மக்களுக்கு ஏற்கனவே இந்தியா மற்றும் தமிழகம் தொடர்பாக இருக்கின்ற பயத்தையும் சந்தேகங்களை மீள மீள உறுதி செய்கின்றன.

 

சிறிலங்கா பேரினவாத அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் இந்திய அரசாலும் அடக்கப்படுகின்ற தமிழகத் தமிழர்கள் தங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது தமது சமூகத்திலிருக்கின்ற சிறுபான்மை இனங்களை எவ்வாறு நடாத்துகின்றார்கள் என்பது முக்கியமானது. ஏனெனில் இந்த சமூகங்களுக்குள் வாழ்கின்ற சிறுபான்மை இனங்களின் உரிமையையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதும் அவர்களது தனித்துவங்களையும் அடிப்படை மனித உரிமைகளையும் மதித்து செயற்படுவதுமே சிறந்த முன்னுதாரணமாக இருக்க முடியும். இதுவே ஈழத் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான நியாயத்தை வழங்கும். ஆனால் நாம் இதில் தொடர்ந்தும் தவறிழைக்கின்றோம். இந்தடிப்படையில் தமிழகத்திற்கு வருகின்ற சதாரண சிங்கள மக்களின் உரிமைகளை மறுப்பது எந்தவகையிலும் ஏற்கமுடியாது.

 

தமிழகம் வருகின்ற சதாரண சிங்கள மக்களை  அடிப்பதும், தடுப்பதும், மறுப்பதும், கொடுமைப்படுத்துவதும் சரியான ஒரு செயற்பாடு என ஒரு எடுகோளாகக் கொள்வோம். இதற்கான காரணம் இந்த சிங்கள மக்கள் ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனவாதக் கருத்தியலைக் கொண்டிருக்கின்றார்கள் என்பதும் தமிழின அழிப்பை மேற்கொண்ட சிறிலங்கா அரசுக்கு ஆதரவானர்கள்  என்பதுமாகும். இந்தடிப்படைகளில் இது சரியானதொரு செயற்பாடு எனின் மறுபக்கத்தின் நிலைமை என்ன?

 

 

 

உதாரணத்திற்கு முழு இந்தியாவைக் கூட கருத்தில் எடுக்கத்தேவையில்லை. ஆகக் குறைந்தது தமிழகத்தைக் கவனத்தில் கொள்வோம். இங்கு எத்தனையோ பிரச்சனைகள் அடக்குமுறைகள் சுரண்டல்கள் நடைபெறுகின்றன. ஆனால் இவற்றைப் பற்றியெல்லாம் எந்த அக்கறையும் இல்லாதவர்களாக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படுகின்ற தமிழக தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் இருப்பது எப்படி? ஏனெனில் சிங்கள மக்களைப் போல, தமிழகத்திலும் அடி வாங்க வேண்டியர்களும், தடுக்கப்பட வேண்டிய,  துன்புறுத்தப்பட வேண்டிய, சாதி வெறியர்களும் பணக்காரர்களும் இருக்கன்றார்களே. இதில் சிலர் அரசியல் தலைவர்களாகவும் இருக்கின்றார்களே. இவர்கள் எல்லாம் தமிழக மற்றும் இந்திய அரசுகளுடன் இணைந்து செய்கின்ற அடக்குமுறை சுரண்டல் கொடுமைகள் என்பவற்றைவிடவா தமிழகத்திற்கு வருகின்ற சதாரண சிங்கள மக்கள் செய்து விட்டார்கள்?

 

 

 

இந்திய அரசும் தமிழக அரசும் கொழுத்த பணக்காரர்களும் உயர் சாதி திமிர் பிடித்தவர்களும் தமிழக மக்களை மிக மோசமாக அடக்கி ஒடுக்கி சுரண்டவில்லையா… ஒவ்வொரு மேலாதிக்க சாதியும் மோசமான சாதிய ஒடுக்குமுறையை மேற்கொள்ளவில்லையா…? பெரும்பாலான ஆண்கள்  தம் சமூகப் பெண்களை அடக்கி ஒடுக்கி சுரண்டிக் கொடுமைப்படுத்தவில்லையா…? குழந்தைகளுக்கு தேவையான கல்வியையும் வசதிகளையும் வழங்காது அவர்களை  குழந்தைத் தொழிலாளர்களாக மாற்றி கொடுமைப்படுத்தி சுரண்டவில்லையா….? இந்த செயற்பாடுகள் எந்தவகையில் சிறிலங்கா பேரினவாத அரசின் ஒடுக்குமுறைக்கு குறைவானது….? ஆனால் மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளை முன்னெடுகின்ற தமிழகத்தில் இருக்கின்ற பலரும் அரசியல் தலைவர்களாகவும் அதிகாரம் மிக்க மனிதர்களாகவும் தமிழகத்தில் எந்தப் பயமுமின்றி எப்படி வலம் வருகின்றார்கள்….? இவ்வாறு நடைபெறுகின்றன என்பதற்கு பல உதாரணங்கள் வெளிப்படையாகவே இருக்கின்றன. தெரிகின்றன. நிலமை இவ்வாறு இருக்கும் பொழுது தமிழக தமிழ் தேசிய உணர்வாளர்கள் முதலில் அடிக்க வேண்டியது இவர்களை என்றால் தவறல்ல. ஆனால் இவர்களுக்கு எதிரான எந்தவிதமான செயற்பாடுகளையும்  இந்த தமிழின உணர்வாளர்களும் உணர்ச்சியாளர்களும் மேற்கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் என்ன…? ஏனெனில் இவர்களிடமிருக்கின்ற குறுந் தமிழ் தேசிய உணர்வு மட்டுமே காரணம் என்றால் மிகையல்ல. ஆகவேதான் இவர்கள் கண்களுக்கு இவை தெரிவதில்லை.

 

 

 

தமிழக தமிழ் தேசிய உணர்வாளர்களதும் மாணவர்களதும் போராட்டம் தமிழக அரசுக்கும் அங்கு அதிகாரத்திலிருக்கின்ற பிழைப்புவாத அரசியல் வாதிகளுகக்கும் மற்றும் இந்திய அரசுக்கும் எதிரானதாக இருந்தாலே  பல மாற்றங்கள் இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் நடைபெறலாம். இதற்கு இந்திய பிராந்திய வல்லரசு என்ற மேலாதிக்க நோக்கம் இல்லாத  ஒரு முற்போக்கான இந்திய அரசை நீங்கள் உருவாக்க செயற்படவேண்டியது முன்நிபந்தனையாகும். இந்திய அரசில் இவ்வாறன மாற்றங்கள் ஏற்படாது எந்த அரசாங்கம் இந்தியாவில் வந்தால என்ன? எந்த தலைவர்கள் ஆண்டால்? என்ன உங்களுக்கும் பிரச்சனைதான் எங்களுக்கும் பிரச்சனை தான். ஏன் சிங்கள ,முஸ்லிம்  மக்களுக்கும் கூட இது பிரச்சனை தான். ஆகவே நமது செயற்பாடுகள் இன்றைய நிகழ்வுகளுக்கான எதிர்வினைகளாக மட்டும் அல்லாது நீண்டகால நோக்கிலான செயற்பாடுகளாகவும் அமைய வேண்டும். தமிழ் தேசிய விடுதலைப் போராட்டமும் சிங்கள மக்களின் புரட்சிகர நடவடிக்கைகளும் இந்தியாவின் புரட்சிகர சக்திகளும் மற்றும் இடதுசாரிக் கட்சிகளும் தொடர்ச்சியாக கடந்த காலங்களிலிருந்த விட்ட விடுகின்ற தவறுகளை இப்பொழுதும் தொடர்ந்து விடாது சிந்தித்து செயற்படுவோமா?

 

 

 

இன்று தமிழகத்தில் செயற்படுகின்ற எந்தக் கட்சியும் இயக்கங்களும் அடக்கப்பட்ட மக்களின் நலன்களைப் பிரதிபலிப்பவையல்ல. பெரும்பாலானவை சாதிய அடிப்படையிலான பிழைப்புவாதம் நடாத்துகின்ற கட்சிகளே. சிலவற்றிடம்   இனவாதமும் குறுகிய தேசியவாத கண்ணோட்டங்களுமே  காணப்படுகின்றன. ஆகவே இவற்றுக்கு மாற்றாக புதிய கட்சி ஒன்றி தேவை தமிழகத்தைப் பொறுத்தவரை நிறையவே  இருக்கின்றது. இன்று நீங்கள் செய்யவேண்டியது ஆகக் குறைந்தது தமிழகத்தில் அடக்கப்பட்டு சுரண்டப்பட்டு பல்வேறு வர்க்க சாதிய கொடுமைகளுக்கும் இந்திய இந்தி மொழியரசின் மேலாதிக்கத்திற்கும் முகம் கொடுக்கின்ற பரந்து பட்டு வாழ்கின்ற தமிழக மனிதர்களின் விடுதலைக்கான கட்சி ஒன்றை உருவாக்குவதே.  இக் கட்சி தமிழ் நாட்டிற்கான சுயநிர்ணைய போராட்டத்தையும் அதன் அக அடக்குமுறைகளுக்கும் சுரண்டல்களுக்கும் எதிரான போராட்டத்தையும் முன்னெடுக்க வேண்டும். இதுவே ஈழத் தமிழர்களினது விடுதலைக்கு மட்டுமல்ல சுரண்டப்படுகின்ற சிங்கள மக்களினதும் விடுதலைக்கும் வழிவகுக்கும். சேகுவேரா இவ்வாறன பரந்து பட்ட மக்களின் விடுதலைக்காகவே போராடினார். ஆனால் சேகுவேராவின் படங்களை தம் நெஞ்சில் சுமந்து அவருக்கு எதிரான அரசியலையே பலர் முன்னெடுக்கின்றார்கள் என்பது வேதனையானது.

 

 

 

குறிப்பிட்ட ஒரு காலத்தில் ஒரு போராட்டம் எழுச்சி பெருகின்றது எனின் பரந்துபட்ட மனிதர்களின் எண்ணங்களில் அவை கொதித்துக் கொண்டிருக்கின்றன என்பதே காரணமாகும். ஆனால் இவ்வாறு எழுச்சி பெருகின்ற போராட்டங்கள் எல்லாம் சரியான திசைவழிகளில் செல்கின்றனவா என்றால் அது கேள்விக்குறியானது என்பதே வரலாறு நமக்கு கற்றுத் தருகின்ற பாடமாகும். அண்மைய உதாரணங்கள் ஜே.வி.பி மற்றும் விடுதலைப் புலிகளின் கிளர்ச்சிகள். இவை மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்தவை என்றால் தவறல்ல. ஆனால் சரியான வழிகளில் பயணித்தனவா என்றால் அது கேள்விக்குறியானது. ஏனெனில் இவை ஆரம்பித்த காலங்களில் அவர்களது தவறான அரசியலுக்கு எதிரான உறுதியான செயற்பாடுகளை யாரும் முன்னெடுக்கவில்லை. அதன் விளைவுகளையெ இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். இந்தடிப்படைகளில்தான் இன்றைய தமிழக மாணவர்களின் எழுச்சியை பார்க்கவேண்டி உள்ளது. இவர்களது உணர்வுகள் நியாயமானவையாக இருக்கலாம். ஆனால் அவை எதன் அடிப்படைகளில் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன என்பதும் எந்த அரசியல் அடிப்படைகளில் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதும் முக்கியமான பரிசிலனைக்கு உரியவை. இதைக் கவனத்தில் கொள்ளாமல் விடுவது மீண்டும் ஒரு வரலாற்று தவறு நடைபெறுவதற்கு காரணமாகி விடலாம். இதற்கான பொறுப்பை எடுத்து செயற்பட வேண்டியவர்கள் இன்றைய முற்போக்கு (இடதுசாரிக் கட்சிகள் அல்ல) சக்திகளே.

 

00000

 

18.03.2013

http://eathuvarai.net/?p=3183

புலத்தில  நெடியவன் என்ன செய்தார் என்று ஒருமுறை கட்டுரையாளர் விளக்குவாரா?

சில ---- யாழில் இணைந்ததுவே பாலியல் கல்வி என்ற பேரில் போராளி பெண்களை கொடுமைப்படுத்துவதை நியாப்படுத்தவென்று. பாரிய சுத்தி வளைப்பில் இறங்கி அது எங்கும் போகாதது கண்டு, யாழில் கிழம்பிய எதிர்ப்பால் யாழுக்கு இனி வரவில்லை என்றும் அவர்கள் ஓட்டம் எடுத்த கதைகள் உண்டு.

 

சிலர் இவ்வளவு நாளும் யாழில் ஒரு இடத்தில் தன்னும் காடுகரம்பைக்குள் கஸ்டப்டும் தமிழர் பற்றி எதுவும் எழுதாதவர்கள். ஒரு உருப்படியான கட்டுரை பிரசுரிக்கவில்லை. மாணவர் எதிர்ப்புக்காக  அரசு தூண்டிவிட தன் தன் கட்டுரைகளுடன் வந்து இறங்கிறார்கள்.

 

அப்படி உப்பு சப்பில்லாத ஒன்றுதான் இதுவும்.

 

மாணவர் அமெரிக்க பிரேரணையை(அமெரிக்காவை அல்ல) எதிர்ப்பது அது கடினம் இல்லாதது என்பதாலேயே. அவர்கள் கேட்பது ஐ.நா வில் பிரேரணை வைக்ககூடாது என்பதல்ல. அமெரிக்க பிரேரணை போன்ற நீர்த்தவையால் அரசு நேரம் பெற்று வடக்கு கிழக்கு குடியேற்றத்தை முடித்துவிடும் என்பதாலேயே. இவர் முழந்தாளுக்கும் மொட்டந் தலைக்கும் முடிச்சு போடுகிறார்.

 

மாணவர் எதிர்ப்பது இந்திய மத்திய அரசை. அதுதான் பிரேணையை திரும்பவும் நீர்த்துப் போக செய்தது.

 

சம்பந்தர் பிரேரணையை வரவேற்கிறார் மட்டுமே. அதுதான் தீர்வு என்று எங்குமே கூறவில்லை. அதில் தீர்வு இருக்கு என்றும் கூறவில்லை. அது தமிழருக்கு நீதி தீர்த்துவிடும் என்று கூறவில்லை. அவர் தை ராஜதந்திர போராடத்திற்கு ஒரு கதவு என்று மட்டும்தான் பார்க்கிறார். இந்த பிரேரணையுலும் தமிழருக்கு எதுவும் இல்லை என்று தெரிந்தும், நம்மில் பலர் அதை அதில் இருக்கும் வசனங்களை பற்றிக் கவலைப்படாமல் அதை ஆதரிப்பது அது ஒரு ஆரம்பமாக இருந்துவிடலாம் என்ற எதிர்பார்ப்பாலேயே. இவர் திரும்பவும் முழந்தாளுக்கும் மொட்டந் தலைக்கும் முடிச்சு போடுகிறார்.

 

ஈழப் போராட்டம் இப்போது உள்நாட்டு அகிம்சை போராட்டமோ அல்லது ஆயுத போராட்டமோ இல்லை. அது இலங்கைக்கு வெளியில் மட்டும் நடத்தப்படுகிறது. எனவே இதில் ஈழத்து தமிழர் வெளிநாட்டு உதவிகளை பெற்று மட்டும்தான் போராட போகிறார்கள். பிரதானமாக இலங்கைக்கு ஆயுதம் கொடுத்த இந்தியா, அமெரிக்கா , சீனா போன்ற நாடுகளை இலங்கைக்கு எதிராக திருப்புவதால் தாம் அவர்கள் அதை அடைய முயல்கிறார்கள். இதில் அமெரிக்க இப்போது இலங்கையுடன் பழைய உறவில் இல்லை. இந்தியாவில் தமிழ் நாட்டிலிருந்து உதவிய கருணாந்தி போய்விட்டார். மத்திய அரசில் காங்கிரசை  போகவைப்பதுதான் மாணவர் போராட்டம். பாதுகாப்பு சபையில் சீனா தமிழர் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டுமாயின் அதை பேசி எடுக்க வேண்டியது அமெரிக்காவால் மட்டும்தான் முடியும். காங்கிரஸ் போனவுடன் ரூசியாவை சாதானப்படுத்த தமிழ் நாடு உதவும்.

 

இவர்களில் பலர் புத்தீசல்கள் போல் வெளிவருவதன் கருத்து குளம் வற்றுகிறதென்பதே. போன வருடம் 75 படித்த படியாத குத்திகள் ,  பல உபநடிகைக் குட்டிகளுடன் வந்து கூத்தாட பணம் வாரி இறைக்கபட்டது. இந்த முறை அந்த பணம் வரவில்லை. போனமுறை பிரேரணை இலங்கையை போர்க்குற்றத்திலிருந்து காப்பாறியிருந்திருக்கும். ஆனால் இந்த அட்டைகள் அரசை உசுப்பி தாம் ஜெனீவா வந்து கூத்தாட எதிர்ப்பு நாடகம் நடித்தார்கள். இந்த முறை பிரேரணை சற்று இலகுவல்லாதது. ஆனால் இந்த அட்டைகள் எதிர்ப்பு நாட்கம் போட குளம் வற்றியிருப்பதால் பணம் வரவில்லை. எனவே இந்த அட்டைகள் இப்போது கொக்குகளாக மாறி பறந்து போக வேண்டிய தேவை வரப்போகிறது. இதனால்தான் இவர்கள் புது புது கட்டுரைகளுடன் யாழில் புத்தீசல்கள் போல வந்து குவிகிறார்கள்.

Edited by நிழலி
நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விளம்பரப்பிரியர்களின் 3 வருட மௌனங்கள், எந்த விதத்திலும் கடந்த காலங்களில் மக்கள் கொல்லப்படுவதையோ, அல்லது அவர்கள் துன்புறுத்தப்படுவதில் இருந்தோ எவ்விதத்திலும் பாதுகாப்பு அளிக்கவில்லை. ஆனால் அச் செய்திகள் வெளியில் வராமல் தடுத்துக் கொண்ட அயோக்கியத்தனம் இவர்களுடையது. தமிழக மக்களுக்குப் பதிவு எழுவுதை விட, தவறவிடப்பட்ட மக்கள் பற்றிப் பதிவு எழுதுவதே நன்று. இல்லாவிடின் பண்பாகச் சொல்வதானால் மூடிக் கொண்டு இருக்கவும்.

தவிர, தமிழக மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு நீங்கள் யார் மீராபாரதி. உங்களுக்கு அது பற்றிக் கதைக்க என்ன தகுதி இருக்கின்றது? நீங்கள் குறைந்தபட்சம் கொல்லப்பட்ட எம் உறவுகள் பற்றி ஏதுமு் நடவடிக்கை எடுத்தீர்களா என்றால் அதைக் கூட உங்களால் செய்யமுடியவில்லை. தமிழகத்தில் உள்ள மாணவர்கள் தமிழ்நாட்டுப் பிரச்சனையைப் பற்றிக் கதைக்காமல் சிங்கள தேசத்துக்கு எதிராகப் போராடுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?

பொருளாதாரத் தடை பற்றி இப்போது கண்ணீர் விடுகின்றீர்கள். ஆனால் முள்ளிவாய்க்காலில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் விழுந்து மடிந்த மக்கள் பற்றி கவலைப்படவில்லை. அக்காலச் செய்திகள் இப்போதும் இணையங்களில் இருக்கின்றன. கிட்டத்தட்ட மார்ச் மாதத்தில் இருந்து உணவுப்பொருட்களை 3 லட்சம் மக்களுக்கு அனுப்புவதைச் சிங்கள அரசு தடை செய்தது. அங்கே 5000 ரூபாவுக்கு இளநீர் வாங்கிக் குடித்த பரிதாபத்தையும் அன்று மக்கள் சந்தித்தார்கள். அப்போது எல்லாம் என்ன பு...கிக் கொண்டிருந்தீர்கள். ஏதோ இப்போது தான் பொருளாதாரத்தடையை நாங்கள் சந்திப்பது போலப் பூச்சாண்டி.... 95ம் ஆண்டில் இருந்து சிங்கள அரசு வடக்கிலும் கிழக்கிலும் பொருளாதாரத் தடை விதித்தது. ஒட்டுமொத்த சிறிலங்கா என்றவுடன் கண்ணீர் வருகின்றதா?

தமிழக மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் என முடிவெடுக்க நீங்கள் தேவையில்லை... வேண்டுமானால் ஏதும் சினிமாக்காரியைப் பற்றி எழுதி உங்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்ளுங்கள்....

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். சின்ன ஆர்ப்பாட்டம் செய்தாலோ, தமிழீழத்தைப் பற்றிக் கதை்ததாலோ புனர்வாழ்வு என்ற பெயரில் மாணவர்களோ, மக்களோ சிங்கள அரசபடைகளா்ல கைது செய்து கொண்டு செல்லப்படும் நிலையில், ஈழத்தில் இருந்து மக்கள் போராடத் தயாரக இருப்பார்கள். நீங்கள் அது வரை காத்துக் கொண்டிருங்கள் என்கின்றார் மீராபாரதி.  எங்கிருந்து தான் இந்த ---- புறப்படுகின்றார்களோ தெரியவில்லை....

Edited by நிழலி
தணிக்கை

வணக்கம் மீரா ,கட்டுரை எதுவரையிலேயே வாசித்துவிட்டேன் .

இப்படி எல்லாம் சிந்திக்கும் மனோநிலையில் இருந்து எம்மவர் விடுபட்டு பலவருடங்களாகிவிட்டது.இப்போ எம்மவர் விரும்புவது அதிரடி அரசியல் .அது விஜெஜ் படம் மாதிரி இருக்கவேண்டும் .

கடந்த இருபது வருடங்களா ஈழதமிழனை நாங்கள் ஒரு வல்லரசையும் ஆட்டிப்படைக்கும் சக்தி என்பதுபோலோரு பிரமையை ஏற்படுத்திவிட்டார்கள் அதன் தாக்கத்தில் இருந்து பலர் இன்னமும் வெளிவரவில்லை .

வருடத்தில் இரண்டு மூன்று தடவைகள் ஜெனிவா நிகழ்வுகள் போல் எதுவும் நடக்கும் போது கொடியுடன் படையெடுத்து உழுது பிரண்டு விட்டு களைத்துப்போய் வந்து படுத்துவிடுவார்கள்.இதுதான் இன்றைய புலம் பெயர் அரசியல் இம்முறை ஒரு சிறு மாற்றம் இவர்களுடன் தமிழ்நாட்டு மாணவர்களும் இணைந்திருக்கின்றார்கள் .

வெற்றி களிப்பில் மிதக்கும் சிங்கள இராஜபக்சா அரசிற்கு ஒரு சின்ன குட்டு போடக்கூட முடியாத நிலையில் தான் இன்று  தமிழர்கள் இருக்கின்றார்கள் .இந்தியா இன்றும் வேடிக்கை பார்க்கின்றது ஒருமாதிரி ஜெனிவா காட்சியில்  அமேரிக்கா வந்து ராஜபக்சா அரசை  ஒரு தட்டு தட்டி இப்படியே நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு  தொடர்ந்தும் ஆட முடியாது  என சொல்லபோகின்றது .

இந்த இடைவெளிக்குள் தான் தமிழ் நாட்டு மாணவர்கள் கிளர்ந்து குட்டு ,தட்டு எல்லாம் சரிவராது ராஜபக்சாவை கட்டி போடு இல்லாவிடில் நாங்கள் கட்டிபோடுவோம் என்கின்றார்கள் .

இத்தனை பேர்கள் இறங்கி விளையாடும் இந்த ஆட்டத்தில் கோல் அடிக்க போவது ஜெயலலிதா என்றுதான் நான் நம்புகின்றேன் .

ஈழதமிழனுக்கான தீர்வோ விடுதலையோ பற்றி கதைக்க இப்ப தமிழ் நாட்டுதமிழன் தான் பொறுப்பு எடுத்துவிட்டான்  போலிருக்கு .

இன்னமும் வருடங்கள் வரும் நாங்களும் கொடியுடன் போய் உருண்டு பிரண்டுவிட்டு வருவம் .

இவ்வளவிற்கும் இடையில் சந்தொசமான செய்தியும் இருக்கு.அது நாட்டில் இருக்கும் மக்களும் சம்பந்தனும் தெளிவாக இருப்பதுதான் .

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள்! :D :D :D :D :D :D :D :D :D :D

அது மீராவிற்கான பதில்.

உங்களுக்கு என்ன நடக்கும் என தெரிந்திருந்தால் ஏன் முதலில் எழுதவில்லை என கேட்பவர்களுக்குமான சாட்சி .

அரிச்சுன் தான் பின்னால் விடப்பட்டு விட்டதை நினைத்து கவலைப்படுகிரார்.  இளநீர் குடித்த கொக்குகள் பறந்து போக தயார் படுத்துகின்றன. கோம்பை நக்கியவர்கள், மாடு செத்தாலும் கழராத உண்ணியாக இருக்க வேண்டி வருமா என்று தடுமாறுகிறார்.

 

 

புலம் பெயர் மக்கள் விட்டுக்கொடுக்காமால் ஒவ்வொரு ஆறுமாதகாலம் ஜெனிவாவில் போராடினார்கள் என்றதை ஒத்துகொள்கிறார். இப்போது  தமிழ்நாட்டு மாணவர்கள் வந்து இணைந்திருக்கிறார்கள் என்று எழுதுகிறார். (இது சபேசன் சுண்டலுக்கு விட்ட சவாலான   "இன்னும் இரண்டு கிழமைகளில் இந்த மாணவர் போராட்டமெல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்" என்றதில் இருந்து மாறுபட்டது)

 

இது வரை இலங்கையை யாரும் குட்ட முடியவில்லை என்கிறார். ஆனால் தொடர்ந்த புலம் பெயர் போராட்டங்களால் அமெரிக்கவின் நடத்தையில் மாற்றம் வந்து குட்ட ஆரம்பித்து விட்டது  என்றதை ஒத்துக்கொள்கிறார்.

 

ஒன்றை மட்டும் வேண்டுமென்றே மாற்றி எழுதி குழப்புகிறார். எல்லொரும்  இலங்கைதான் தான் மூன்றாம் வல்லரசாக நடந்து கொள்வதாக எழுதினார்கள். இந்தியா அமெரிக்கா எல்லவற்றையுமே எடுத்து எறிந்துதான் நடந்து கொள்கிறது. அவரும் அதை படித்துத்தான் வைத்திருந்தார். இன்று அது அவர் புலிகள் தான்  அப்படி நடந்து கொள்வதாக மாற்றி எழுதி வைத்திருக்கிறார். எல்லாம் நகைச்சுவைதான்.

 

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Pls share this....IIT students protest and their demands.......

REJECT ANYTHING LESS THAN A NUREMBURG LIKE WAR CRIME TRIAL IN TAMIL EALAM POGRAM!

PROTEST BY STUDENTS IIT MADRAS ON 17.03.2013

Followed by the release of videos by Channel 4 on the Tamil Ealam pogrom and the forthcoming resolutions going to be passed by America in Geneva, recently there is a welcoming student uprising throughout Tamil Nadu. What is regrettable here is, the demands putforth by the students are mere reflections of the electoral parties’. On one hand we are behind the TESO resolution - demanding India to support America’s “Lessons Learned and Reconcilation Committee” resolution in Geneva to investigate the 2009 war crimes committed by Rajapakshe’s of his own. On the other, we are behind those who are insisting India to come up with an independent resolution in UN against Sri Lanka’s war-crimes. In putting forth such demands, we - students are being deceived ourselves by an illusion.
The Geneva resolution going to be passed by America has no other motive rather than pressurising Rajapakshe Govt. and thus bringing Sri Lanka under its feet. Through this resolution America somehow wants to be a political, economical and stratagical beneficiary in the south asian province with or without the consent of India. When Mullivaiykkal Pogrom was committed by Sri Lanka in 2009, America was an active participant. The outcry of worldwide Tamil communities for the intervention of International communities against that pogrom (then covered widely by international media) never reached its ears. Meanwhile American intelligence received the support of Sri Lankan government for its illegal abduction of its enemies around the world and even for Afgan invasion. America is a superhegemony which always use ‘human rights’ as a trump card to enslave other soverign countries. It is the same which foster the totaliterians around the world to violate human rights and then in the name of the same human rights, it invades those countries. We have the examples like Iraq, Afgan, Libiya and so on. Now America is moving this coin deliberately. Now the question before us is, whether we are going to be that coin in the hands of America or not.
Mullivaiykkal Pogrom was planned, directed and led by Indian Government. Not only Rajapakshe, even the Indian government is a war criminal in this massacre. Since 1987 (When it sent IPKF to Sri Lanka), Indian government is consistently in the forefront in supporting Singala Rascists to massacre Tamils. Indian Government gave training for the Sri Lankan army in India and rendered technical supports like detecting the aircrafts of LTTE with radars and even arms. India’s role on Mullivaiykal Pogrom came to light when some from the Indian Force were among those killed during the war. In the words of Rajapakshe, “actually, it’s a war committed for India by Sri lanka”. India’s war crimes are not only against Eala Tamils. In Kashmir, North East, Central India, Koodaunkulam, whereever people protest for their livelihood, Indian government is waging destructive war against its own people. It’s the urge for India to bring the South Asian Province under its arm pits based on its expansion policy. It is controversial as well as ridiculous in asking for justice and compelling to pass a resolution to such a perpetrator like Indian government. So we-the students have to raise the slogan portraying India as a war criminal.
All the National political parties are against the Eala Tamils. The regional parties like DMK and ADMK etc.. are utilising Eala Tamils as a token to cultivate votes in the forthcoming election. There is not any question of accepting the resolution going to be passed by America. For us, the war criminal Rajapakshe should be punished by a trial court like the Post-World war II Nuremberg trial. Not only Rajapakshe, we should demand to punish even those Indian officials and Politicaians who are responsible for this pogrom. These demands can’t be executed merely by giving petitions to Indian Government. No other demands less than this, even it may be practical cant achieve justice. As the citizens of India, we the students have the responsbility to fight against our government’s expansion policy and its que st for regional monopoly. People of every nation has their own right to fight against their totaletarian rulers. No other countries can intervene on those people’s right. By establishing that the Indian Government responsible for its war crimes, we have to build a mass movement. That mass movement lead by the student community only can make the Indian Government to bow down.
DELHI, UN AND US ARE ACCOMPLICES OF RAJAPAKSA!
DON’T SEEK JUSTICE FROM WAR CRIMINALS!
REJECT ANYTHING LESS THAN A NURENBURG LIKE WAR CRIME TRIAL!
STRIVE AND RELY UPON A PEOPLES RESURGENCE IN TAMILNADU!
No short cuts
o To punish Rajapaksa for genocide
o To resist ethnic cleansing, sinhala settlements and military occupation
o To assert right to self determination
Ignite the revolt of the 80s in the streets of tamilnadu

Do not allow the issue of genocide to become a pawn in the hands of parliamenary parties!
They turned the mullivaikkal tears into votes during 2009 parliamentary elections. Now it is geneva resolution for 2014 elections

The "turncoats" have finally discovered the indian hand in genocide!
Yet they cannot help but pleading with the indian war criminals for justice!
Shame on you!

Ridiculous to legitimise u.s and its imperialist allies as international community and seek justice from them!

Those who conceal the killing of prabakaran by sinhala army,
Are not preserving the image of prabakaran!
They conceal the war crime and preserve Rajapaksa!

Rajapaksa is the criminal and Rajapaksa is the prosecutor – that is llrc,
Manmohan govt is the criminal that led the genocide,
And manmohan is beseeched to bring the resolution in geneva
What is the difference between the un hypocracy and our "parliamentary conspiracy"

All national parties, from cong, bjp to cpi and cpm,
Are always against right to self determination of eelam tamils

 

 Loyolahungerstrike - Facebook

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு மாணவர்கள் பிடிப்பது புலிக்கொடி தாங்குவது தலைவர் படத்தை அதனால் பொறாமை கொண்ட இந்த மாற்று கருத்து கும்பல் பந்தி பந்தியை எழுதி கதைகள் பரப்பினாலும் மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப IIT மாணவர்களும் எங்களுடன் சேர்ந்து மக்கு ஆகிவிட்டார்களாம்..! :D அதாவது 90 வீதமான தமிழர்கள் மக்குகள்..! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

(இது சபேசன் சுண்டலுக்கு விட்ட சவாலான   "இன்னும் இரண்டு கிழமைகளில் இந்த
மாணவர் போராட்டமெல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்" என்றதில்
இருந்து மாறுபட்டது)///

அப்படியா சபேசன் சொன்னார். ஏன் அவரின் தலைவர் கலைஞர் உண்ணாவிரதம் இருந்த 2 மணிநேரம் தான் இப்போராட்டம் இருக்கும் என்று சொல்லவில்லை? மாணவரின் போராட்டம் விடுவோம். இவரின் போராட்டம் எப்படி என அறிந்து கொள்ள வேண்டும்.

ஏதோ கலைஞரை நாம் வால்பிடித்துக் கொண்டிருந்தார் அவர் பின்னால் நிற்கும் 10 இலட்சம் பேரும் தமிழீழத்துக்காகப் போராடிக் கிழிப்பார்கள் என்று தானே சபேசன் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் மாணவர்கள் இலட்சத்தைத் தாண்டி நின்று போராடும்போது அவரால் பொறுக்க முடியவில்லை.

நாம் தான் போராட வேண்டும் என்பது சரி. ஆனால் நாம் மட்டுமே போராட வேண்டும் என்பது அயோக்கியத்தனம்...

இவர்களது உணர்வுகள் நியாயமானவையாக இருக்கலாம். ஆனால் அவை எதன் அடிப்படைகளில் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன என்பதும் எந்த அரசியல் அடிப்படைகளில் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதும் முக்கியமான பரிசிலனைக்கு உரியவை. இதைக் கவனத்தில் கொள்ளாமல் விடுவது மீண்டும் ஒரு வரலாற்று தவறு நடைபெறுவதற்கு காரணமாகி விடலாம்.

 

தமிழக மாணவர்களுக்கும் இந்திய மைய அரசுக்குமிடையிலான உறவை புரிந்துகொள்ள இது ஒரு சந்தர்ப்பமாக இருக்கின்றது. எத்தனையோ தியாகங்கள் தீக்குளிப்புகள் அரசியல் நாடகங்கள் போராட்டங்கள் அர்ப்பணிப்புகள் அனைத்தும் இந்திய மைய அரசால் இந்தியத்தேசீயத்தால் நிராகரிக்கப்பட்டுவருகின்றது. தமிழகம் புறக்கணிக்கப்படுகின்றது. அது தமிழக மீனவர் பிரச்சனையாகட்டும் நதிநீர்பிரச்சனையாகட்டும் விவசாயிகள் தற்கொலை கூடங்குளம் ஈழத்தமிழர் பிரச்சனை என அனைத்திலும் தமிழக மக்கள் உணர்வுகள் புறக்கணிக்கப்படுகி்ன்றது. அலட்சியப்படுத்தப்படுகின்றது. இன்றைய மாணவர் எழுச்சி ஈழத்தமிழருக்கு விடிவு வருகின்றதோ இல்லையோ அவர்களுக்கும் இந்திய தேசீயத்துக்கும் இந்திய நடுவண் அரசுக்குமான நம்பிக்கை மற்றும் உறவு நிலையை புரிந்துகொள்ள ஒரு சந்தரப்பமாகும். இன்றய மாணவர்களிடம் ஏற்படும் புரிந்துணர்வானது நாளைய ஒட்டுமொத்த தலைமுறையின் கருத்தாக மாறும். அந்தவகையில் இது ஒரு முக்கியமான நிகழ்வு.  இதற்குள் ஈழத்தமிழர் என்றவகையில்  கேள்விகள் விமர்சனங்களுக்கு இடமில்லை. எந்த வகையில் ஆதரவை வழங்க முடியுமோ அந்தவகையில் அவரவர் ஆதரிக்கவேண்டியதுதான். இதற்குள் ஆய்வுகள் அரசியல் அணுகுமுறைகளை போதிப்பதற்கு எதுவும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம் போராடினாலும் ஏசுகின்றோம்

சும்மா இருந்தாலும் ஏசுகின்றோம்

 

வேண்டாப்பெண்டாட்டி கதை தான் ஞாபகம் வருகிறது

இதன்படி பார்த்தால் நமக்கு நம் விடுதலை வேண்டாப்பெண்டாட்டி போன்றதா???

 

முகங்கள் தெரியும் காலம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை நோக்கம் எமது தேசத்தின் சுயநிர்ணைய உரிமையை அடைவதேயாகும். ஆனாலும் அரசியல் போராட்டம், ஆயுதப் போராட்டம் இரண்டிலும் தோல்வியடைந்து ஒரு வக்கற்ற, நாதியற்ற இனமாக தமிழர்கள் மாறியுள்ளனர். தமிழர்களை வென்ற இறுமாப்பில் சிங்கள் இனம் வெற்றிக் களிப்பில் இருந்து இன்னமும் கீழே இறங்கி வரவில்லை.

 

இத்தகைய பின்புலத்தில் ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் தமிழர்கள் இனவொழிப்பு செய்யப்பட்டார்கள் என்பதைக் முன்வைக்காமல் வெறுமனவே இலங்கையரசால் தோற்றுவிக்கப்பட்ட LRRC ஆணைகுழுவின் பரிந்துரைகளைச் செயற்படுத்துமாறு கேட்பது மிகவும் குறைந்த பட்ச கோரிக்கையாகும். அதனைக் கூட இலங்கையரசு நிறைவேற்றத் துணியாது என்பது வேறு விடயம். அதனை ஆளுமையற்ற தற்போதைய தாயகத் தமிழ்த் தலைமைகள் ஆதரிப்பதில் ஆச்சரியம் இல்லை.

 

அத்தோடு இறுக்கமான இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இக்கட்சிகளை அரசியல் ரீதியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பயனற்றது. சிங்கள அரசு பேதம் பார்க்காமல் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை வெலிக்கந்தவிற்கு புனர்வாழ்விற்கு அனுப்பிவைக்கும் ஜனநாயகம்தானே இலங்கையில் தற்போது நிலவுகின்றது. அதை நினைவுகொண்டால் தமிழ்க் கட்சிகளைப் போராட்டத்தை முன்னெடுக்குமாறும் தமிழக மக்களை ஆதரவுத் தளத்தில் நிற்குமாறும் சொல்ல வராது.

 

தமது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள புலம்பெயர் நாடுகளில் குத்துவெட்டுக்களிலும் குழிபறிப்புக்களிலும் ஈடுபடுகின்றவர்களை அரசியல் போராட்டங்களை முன்னெடுக்குமாறு கேட்பதும் பயனற்றது. வழமைபோன்று தமது ஆதாய அரசியலுக்காக அடையாள நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்கள். தூரநோக்க சிந்தனையும் செயற்பாடும் உள்ள புலம்பெயர் அமைப்புக்கள் என்று சொல்லிக்கொள்ளுமளவிற்கு எவையும் இல்லை. எல்லாமே காற்றின் திசைக்கு இழுபடும் அரசியல் செயற்பாடுகளில்தான் இருக்கின்றார்கள்.

 

இப்படியான காலகட்டத்தில்தான் தமிழக மாணவர்களின் கொந்தளிப்பானது பாலச்சந்திரனது உயிருள்ள படத்தையும் அதன் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் உள்ள படத்தையும் பார்த்த பின்னர் உருவானது. இது ஒரு உடனடிக் காரணம் என்று சொன்னாலும் தமிழக மாணவர்கள் அரசியல் தெரியாதவர்கள் அல்லர். இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்பட்டபோது தமிழகத்தில் உருவான கொந்தளிப்பை அப்போது ஆட்சியில் இருந்த கருணாநிதி வஞ்சகமாக அடக்கினார். ஆனால் தற்போது முதலமைச்சர் ஜெயலலிதா சிறிது விட்டுப் பிடித்தபோது போராட்டம் கட்டுக்குள் அடங்காமல் பரவிவிட்டது. இந்த மாணவர்களின் எழுச்சி தமிழர்களுக்கு விடிவைத் தருமா இல்லையா என்பதற்கு அப்பால் தமிழக இந்திய அரசியலில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும். நாதியற்ற ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு கொடுக்க தாய்த் தமிழகம் இருக்கின்றது என்ற செய்தியை மகிந்த ராஜபச்சவிற்குச் சொல்லும். இந்திய மத்திய அரசாட்சியைக் கைப்பற்ற முனையும் கட்சிகள் தமிழக மாணவர்களினதும், மக்களினதும் உணர்வுகளை இலகுவில் புறந்தள்ள முடியாது இலங்கை அரசிற்கு அழுத்தத்தைக் கொடுக்க முனையலாம். எனவே தமிழக மாணவர்களின் எழுச்சியை எமக்கு உந்துசக்தியாகப் பாவிக்க முனையவேண்டும். இல்லாவிட்டால் இன்னும் சில தசாப்தங்களில் இலங்கையில் உள்ள எல்லா மாவட்டங்களிலும்சிங்களவர்கள்தான் பெரும்பான்மையாக இருப்பார்கள்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
 இந்த கட்டுரை பற்றி இதை எழுதிய மீராபாரதியிடம் நிறைய கேள்விகள் இருக்கின்றன..ஒவ்வொன்றாக கேட்கலாம் என்றிருக்கிறேன்..
 


 
    தமிழகத்தில் மாணவர்கள் நடாத்தும் போராட்டத்தினால் ஈழத் தமிழ் தேசத்திலிருந்து சிறிலங்கா இராணுவம் வெளியேறுவதுடன், அரசியல் கைதிகளின் விடுதலை செய்யப்பட்டும், ஈழத் தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆளுவதற்கான உரிமையும் சுயநிர்ணைய உரிமையும் கிடைக்குமானால் அது விரும்பத்தக்கதே. இதற்குமாறாக இந்தப் போராட்டத்தின் விளைவுகளால் ஈழத் தமிழ் தேசம் மேலும் மேலும் ஒடுக்குமுறையை சந்தித்து தனது விடுதலையை முன்னெடுப்பதற்கான சகல வழிகளும் மூடப்படுமாயின் இப் போராட்டம் தொடர்பாக நாம் மீள் பரிசீலனை செய்யவேண்டும்.
 

 

 
தமிழீழத்தில் மக்கள் ஒடுக்கப்படுவார்கள் என்ற நிலைமை போராளிகள் போராடிக்கொண்டிருந்த போதும் இருந்ததுதான்..அதற்காக போராளிகள் போராட்டத்தை நிறுத்திவைக்கவுமில்லை,மக்கள் போராட்டத்தில் இருந்து விலகி ஓடவுமில்லை..உங்களுடைய ஆலோசனையானது பேரினவாதம் தன் அடக்குமுறை ஆயுதம் மூலம் மக்களை அச்சுறுத்தி சாதிக்க நினைப்பதை சுற்றிவளைத்து மென்முறையில் மக்கள்மேல் அக்கறைப்படுவதுபோல் காட்டி அடையவைக்கிறது..அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடுவதுதான் போராட்டமே அன்றி அடக்குமுறையாளர்கள் மேலும் அடக்குவார்கள் என்று அஞ்சி நனைந்த கோழிகள் போல் ஒடுங்கி இருப்பதல்ல..விடுதலை வேண்டும் எந்த இனமும் போராடத்தான் துடிக்கும்..சும்மாபோகும் புழுவை அடித்தால்கூட அது துடித்து தன் எதிர்ப்பை காட்டும்..ஈழத்தில் இருக்கும் மக்கள் ஆகக்குறைந்தது ஒரு புழுவைப்போலக்கூட பதிலாற்ற லயக்கற்றவர்கள் என்பதுதான் உங்கள் தற்துணிபா..?எம்மக்களுக்கு எப்பொழுதுமே வழிகாட்ட அல்லது தூண்டிவிட ஒருத்தங்கள் வேண்டும்..அதுவரை உள்ளே குமைந்து கொண்டிருப்பவர்கள் அவர்கள்..பிரபாகரன் என்ற ஒரு தலைவன் வந்து ஒரு உந்துசக்தி கொடுக்காதவரை தூங்கித்தான் கிடந்தார்கள்..யார்கண்டார்..எம்மக்களின் எழுச்சி தென் திசையில் தேன்மதுரத்தமிழரசாண்ட தமிழ்நாட்டில் இருந்துதான் புறப்படவேண்டும் என்று வரலாறு எழுதி வைத்திருந்தால்..அது நிகழ்ந்தாகட்டும்..சும்மயிருந்து சுதந்திரத்துக்காக சுழன்றுகொண்டிருக்கும் மக்களை ஜட்பண்ணுவதை விடுவோமே...
 

 
    இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் அமெரிக்காவின் தீர்மானத்தை வரவேற்கின்றார். இவரது கட்சி அரசியலுடன் உடன்பாடு இல்லாவிட்டாலும் இக் கட்சித் தலைவர்களே இன்று ஈழத் தமிழர்களின் தேசிய தலைவர்கள். ஆனால் தமிழக போராட்ட சக்திகள் இதற்கு மாறாக அமெரிக்க தீர்மானத்தை நிராகரிக்கின்றார்கள். முரண்பாடு இங்குதான் ஆரம்பிக்கின்றது. இதற்கிடையில் ஐ. நாவின் நடைபெறும் செயற்பாடுகள் தொடர்பாக ஏற்கனவே நிலாந்தன் அவர்கள் தனது கட்டுரைகளில் தெளிவாக கூறியுள்ளார். இந்தத் தீர்மானம் எந்த வகையிலும் தமிழர்களின் நலன்களின் அக்கறை கொண்டதல்ல என. ஏனெனில் இந்த அரசுகள் தமது நலன்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவதற்கான ஒரு துடுப்பே இந்தத் தீர்மானம். ஆகவே ஒவ்வொருவரும் அவரவர் நலன்களுக்கு ஏற்ப இந்த தீர்மானத்தை திசை திருப்புகின்றனர். இறுதியில் அனைத்து அரசுகளினதும் நலன்களையும் கருத்தில் கொண்ட பொதுவான “உப்புச் சப்பற்ற” ஒரு தீர்மானம் முன்வைக்கப்படும். இதில் ஈழத் தமிழர்கள் நலன்கள் பலியிடப்பட்டு இவர்கள் மீண்டும் சர்வதேசத்தால் கைவிடப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே இங்கு நாம் கவனிக்க வேண்டியதும் ஆராய வேண்டியதும் யார் யாருடைய நலன்களை முன்வைத்து செயற்படுகின்றார்கள் என்பதே?
 ...

 

 
சம்பந்தன்கூட்டம் தமிழர்களின் தேசியத்தலைவர் என்பது உங்களின் தற்துணிபு...இவர்கள் பெற்றுக்கொண்ட ஓட்டுக்கள் மக்கள் நீதியானதும் நேர்மையானதுமான தமிழ் அரசியல் தலைமைகள் இல்லாத நிலமையில் கொலைகாரர்களிடமிருந்து தப்புவதற்காக கொள்ளைக்காரர்களிடம் சரணடைந்ததுபோல் ஈ.பி டி பி போன்ற கொலைகாரக்கும்பலகள் ஆட்சிபீடம் ஏறாமல் இருக்க தற்காலிக ஆறுதலாக இவர்களை தெரிவு செய்திருந்தனரே அன்றி அதில் தவிச்ச முயலடித்த கூட்டமைப்பினர்கூட உண்மை நிலை தெரிந்து தம்மை தமிழ்மக்களின் தேசியத்தலைமை என்று எவ்விடத்திலும் சொல்லிக்கொள்ளா நிலமையில் நீங்கள் அவர்களை தமிழ்மக்களின் தேசியதலைகளாக வலிந்து திணிப்பதை பார்க்க முன்னைய சிங்கள அரசுகள் கதிர்காமர்,டக்லஸ் ஆனந்த சங்கரி போன்றவர்களை தமது பிரச்சாரங்களுக்கு தமிழர்களின் பிரதிநிதிகள் என்று உலகுக்கு அறிமுகப்படுத்தி திரிந்ததுதான் நினைவுக்கு வருகிறது...சம்பந்தன் கூட்டமைப்பினர் செய்வதெல்லாம் தமிழ்மக்களின் விருப்பு ஆகாது..தமிழக மக்கள் தம் தொப்புள்கொடிகளுக்காக செய்வதெல்லாம் ஈழத்தமிழர்களின் விருப்பு அல்ல என்றுமாகாது..இந்தக்கட்டுரையின் மூலம் நீங்கள் சம்பந்தன் கூட்டத்தை காட்டி மிக தந்திரமாக் ஈழத்தமிழர்களுக்காக போராடும் தமிழகதமிழர்களின் போராட்டத்தை ஈழதமிழர்களின் விருப்புக்குமாறாக நிகழ்வதாக திசைதிருப்ப பார்க்கிறீர்கள்..இக்கட்டுரையினூடு ஈழதமிழர்களுக்காக கண்னீர்வடிப்பதாக காட்டிகொண்டே தமிழக தமிழர்களின் போராட்டத்தை வலுவற்றதாக்கும் விசமத்தனமான உத்தி மறைந்திருப்பதை நுட்பமாக அவதானிப்பவர்கள் கண்டுகொள்ளலாம்.. 
 
 
 

ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பிரதானப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியவர்கள் ஈழத் தமிழர்களே. அந்தவகையில் இன்று தமிழகத்தில் நடைபெறுவதுபோன்ற இவ்வாறான உண்ணாவிரதப் போராட்டத்தை ஈழத்தில் இருக்கின்ற (ஆனந்த சங்கரி, சம்பந்தன், சேனாதிராசா, பிரேமச்சந்திரன், கஜேந்திரன், சித்தார்த்தன், சிவாஜிலிங்கம் …. போன்ற அனைத்து) தமிழ் தலைவர்களும் மற்றும் புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளிலிருந்து தீவிரமாக செயற்படுகின்ற பல ஈழத் தமிழ் அமைப்புகளின் அரசியல் தலைவர்களும் செயற்பாட்டாளர்களும் (உருத்திரகுமாரன், நெடியவன், நீதன் சண் … போன்ற) முன்னெடுத்திருக்க வேண்டும். தமிழக மாணவர்கள் போல் இவர்கள் உண்ணாவிரம் இருந்திருக்கவேண்டும். இதுவே சர்வதேச கவனத்தை ஒரளவு என்றாலும் திரும்பிம்பிப் பார்க்க வைத்திருக்கும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.
ஈழத் தமிழ் தலைவர்களால் இவ்வாறான ஒரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு அதற்கு தமிழக மாணவர்களதும் செயற்பாட்டாளர்களதும் ஆதரவு இருந்திருக்குமாயின் அது ஆரோக்கியமானதாக இருந்திருக்கும். அதில் சந்தேகம் இருக்க வாய்ப்பில்லாமல் இருக்கலாம். ஆகவேதான் இவ்வாறான ஒரு போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக ஒரு முன்மொழிதலை வைத்திருந்தேன்.  ஆனால் அதை யாரும் கணக்கில் எடுக்காது எந்த அக்கறையும் இல்லாது இருந்தனர். மாறாக அடக்கப்படுகின்ற மக்கள் வாழ்வின் மீது ஏறி அனைவரும் அரசியல் நாடகம் ஆடிக்கொண்டு வியாபாரம் செய்கின்றனர். மீண்டும் மீண்டும் தோற்றுப் போன அரசியல் வழிமுறைகளையும் கோசங்களையுமே முன்வைக்கின்றார்கள். இதனால் ஈழத் தமிழர்களின் விடுதலைக்கு ஏதுவும் பயனுள்ளதா என்றால் அது சந்தேகமே.
 

 

மேலே நீங்கள் சொன்ன தலைவர்கள் எவரும் செய்யாத நிலையில் தமிழக மக்கள் தமது தொப்பிள்கொடிகளுக்காக வீதியில் இறங்கி இருக்கிறார்கள்..இந்தப்போராட்டங்களை இன்னார்தான் செய்யவேண்டும் என்று வீட்டில் இருந்து கொன்டு நீங்கள் வரையறுக்கிறீர்கள்..அதுவே முதலாவது தவறு..இதன்மூலம் நீங்கள் சொல்லவருவது என்னவென்றால் தனது சகோதரர்களுக்காக தமிழகத்தமிழனுக்கு வீதியில் இறங்கி போராடக்கூட உரிமை இல்லை என்பதே..அவன் கம்மென்று இருக்கவேண்டும் ஈழத்தில் இருப்பவர்கள் வாய் திறந்தால் மட்டுமே அவன் வாயைதிறக்கலாம் என்பதும் ஈழத்தமிழர்களுக்காக வேறுயாரையும் பேசவிடாமல் அப்படி பேசுபவர்களின் வாயையும் மூடச்செய்யும் தந்திரமே இதில் தொக்கி நிக்கிறது..அந்தமக்கள்மீதான உணமையான நேசிப்பல்ல..சிங்கள அரசும் விரும்புவது இதையே..ஏனெனில் உள்ளுரில் இருக்கும் எம்மக்களை ஆயுதத்தைகொண்டு அடக்கிவிடலாம்..உலகமெங்கும் இருக்கும் தமிழர்களை எதைக்கொண்டு அடக்குவது..? அதற்கு இப்படியான தாயகத்தில் இருக்கும் மக்களை காட்டி அவர்களின் நல்வாழ்வுக்காக கண்ணீர்விடுவதாக எழுதும் எழுத்துக்களே உலகமெல்லாம் போராடும் தமிழனின் வாயை மூடவைக்க உதவக்கூடியது...மக்கள் தன்னெழுச்சியாக வீதியில் இறங்கி நிற்பதை அரசியல் நாடகமென்கிறீர்கள்..தன்னெழுச்சியான மாணவர்போராட்டத்துக்கு இந்திய அரசியல்வாதிகல் பூசமுயலும் அரசியல்முலாமைவிட உங்கள் அரசியல் முலாம் அதிகமாக தெரிகிறது...
 
 
 

ஈழத் தமிழர்கள் தாம் இதுவரை முன்னெடுத்த போராட்டத்தில் பல்வேறு காரணங்களால் தோற்றுப் போய் இருக்கின்றார்கள். இது இன்றைய யதார்த்தம் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் இன்று ஈழத் தமிழர்கள் தாம் கடந்து வந்த போரின் வடுக்களிலிருந்து தம்மைத் தாமே சிறிது ஆற்றுபடுத்த ஆரம்பித்திருக்கின்றார்கள். இவர்கள் மீள எழுவதற்கு சிறிது காலம் தேவைப்படலாம். அதேவேளை இவர்கள் இதுவரை தாம் கடந்து வந்த பாதையை மீள்பார்வைக்கு உட்படுத்தவும் வேண்டும். அப்பொழுதுதான் ஈழத் தமிழ் தேசத்தின் விடுதலைப் போராட்டத்தை மீளவும் அவர்கள் ஆரோக்கியமான வழிகளில் தொடர முடியும். அல்லது இவ்வாறான போராட்டங்கள் ஈழத்தில் எழுச்சி கொள்ளும் பொழுது வழிநடாத்த முடியும். ஈழத் தமிழ் தேசம்  தன் விடுதலைக்கான போராட்டத்தை (தவறான வழிகளிலோ கொள்கைகளின் அடிப்படையிலோ) மீண்டும் எப்பொழுது முன்னெடுக்கின்றதோ, அப்பொழுது கடந்த காலங்களில்  பங்களித்ததுபோல்,  தமிழக மக்கள் பங்களிக்கலாம். இதுவே  பொருத்தமானதும் சரியான அணுகுமுறையுமாகும். ஆனால் அதுவரை பொறுத்திருக்காமல் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை தமிழக செயற்பாட்டாளர்களும் மாணவர்களும் தம் கையில் எடுத்து செல்கின்றார்கள். இது ஆரோக்கியமானதல்ல. இவர்கள் நேர்மையுடனும் உண்மையுடனும் இந்தப் போராட்டங்களில் பங்குபற்றலாம். ஆனால் இந்த செயற்பாடுகள் இவர்கள் மீது இல்லாவிட்டாலும் இதன் பின்னால் உள்ள அரசியல் மீது சந்தேகம் கொள்ள வைக்கின்றது. ஆகவேதான் கேள்வி கேட்க வேண்டியிருக்கின்றது. இதற்கான காரணங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 

 
 
அப்பட்டமான மலினத்தனமான மக்கள் எழுச்சியை முடக்கவைக்கும் போலித்தனமான எழுத்து ராஜதந்திரம் இது...மக்கள் எழுச்சிகொள்ளவோ அல்லது போரின் வடுக்களில் இருந்து மீளவோ கால அவகாசம் கேட்கும் நீங்கள் அந்த அவகாசத்தை சிங்கள அரசு அந்த மக்களுக்கு வழங்கி இருக்கா என்பதை சொல்லவில்லை..அடக்குமுறையை சிங்கள அரசாங்கம் தளர்த்தவில்லை..அதே அடிமை வாழ்வையே தொடர்ச்சொல்லி நிற்கிறது..இதற்குள் இருந்துகொண்டு அந்தமக்கள் எந்த ஜென்மத்திலும் மீள எழும்ப முடியாது..அதற்குரிய சந்தர்ப்பத்தை சிங்கள அரசு வழங்கப்போவதும் இல்லை..அந்தமக்களின் குரலாக ஒலிக்கவேண்டியவர்கள் இப்பொழுது நாங்களே..துப்பாக்கிமுனையில் அந்த மக்களை வைத்துக்கொண்டு அந்த எஜமானர்களின் குரலாக நீங்கள் பேசுகிறீர்கள் அந்த மக்கள் போராடும்போது தமிழக தமிழர்களை போராடும்படி..என்ன ஒரு தந்திரம்..இப்படி எதிர்பார்த்திருந்தால் இன்னும் பலதலைமுறைக்கு நாம் போராடவே முடியாது..மெளனமாக சிங்கள எஜமானர்கள் தரும் அடிமை வாழ்வை எம்மக்கள் வாழவேன்டியதுதான்...உங்களைப்போன்றவர்கள் புலிகளின் போராட்டத்தின் சரிதவறுகளை இன்னும் பலதலைமுறைகளுக்கு பின்னும் ஆராய்ந்துகொன்டிருப்பீர்கள்..ஆனால் போராடுவதற்க்கு மட்டும் யாரும் இருக்கமாட்டார்கள்...

 

 
ஒரு புறம் தென்னாசியப் பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டி தான் ஒரு வல்லரசாக வருவதற்கு இந்திய அரசு முயற்சிக்கின்றது. மறுபுறம் தமிழ் தேச விடுதலைப் போராட்டத்தை சிதைத்ததில் இந்திய அரசு, தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகள், இயக்கங்கள், குழுக்கள் அனைவருக்கும் பொறுப்பும் பங்கும் இருக்கின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது. இது கடந்த கால வரலாறு. இப்பொழுது என்னவென்றால் ஈழத் தமிழர்களின் போராட்டத்தையே நீங்கள் முன்னெடுக்கின்றீர்கள். இது எந்தவகையில் நியாயமானது? ஈழத் தமிழர்களின் மீது தமிழக மக்களுக்கு இருக்கின்ற அன்புக்கும் அக்கறைக்கு அப்பால், இவ்வாறு செயற்படுவது நாம் அனைவரும் ஒரு மொழி பேசுகின்றோம் என்கின்ற தமிழ் மொழியின் பெயரால் இன்னுமொரு மேலாதிக்கமா? நாம் ஒரு மொழி பேசிய போதும் இரு வேறு தேசங்களை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல. வேறு வேறு நாட்டினரும் கூட. ஆகவே சில சந்தர்ப்பங்களில் ஒரு நாட்டின் தேசத்தின் விடுதலைக்கான செயற்பாட்டில் இன்னுமொரு நாட்டின் தேசத்தின் பங்கு வரையறை என்ன என்பதில் நாம் கவனமாக இருக்கவேண்டும். ஆனால் அது பற்றிய அக்கறை தமிழக செயற்பாட்டாளர்களுக்கு இல்லை என்பது துர்ப்பாக்கியமானது. ஆகவேதான் இவர்களும் இந்திய மற்றும் தமிழக அரசுகள் செயற்படுவதுபோல் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் செயற்படுகின்றார்களா என சந்தேகிக்க வேண்டியிருக்கின்றது.
 
 
மீண்டும் எம் உறவுகளை பிரிக்கும் தந்திரம் உங்கள் எழுத்துக்களில் நுட்பமாக...எமது போராட்டத்தை அவர்கள் முன்னெடுப்பதாக நீங்கள் அவதிப்படுவதை பார்க்க உங்கள் எழுத்துக்களில் புதைந்திருக்கும் மிக நுட்மான வன்மம் அல்லது எமை பிரிக்கும் தந்திரம் கண்டு மிகுந்த ஆத்திரமாக இருக்கிறது...என்ன ஒரு நுட்பமாக இந்த எழுத்துக்களில் இருந்து நீலிக்கண்ணீர் வடிகிறது...எனக்கு புரியவில்லை எமது போராட்டத்தை அவர்கள் முன்னெடுப்பதாக நீங்கள் சொல்வது..எமக்கான ஆதரவாக அவர்கள் இறங்கி இருக்கிறார்கள்..எப்பொழுதும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்..தனது நட்பு நாடுகளுக்காக போர்புரியும் யூரோப்பிய நாடுகளை பார்த்திருக்கிறோம்..தனது ரத்த சொந்தங்களுக்காக குரல்கொடுப்பவர்களை பார்த்து நீ எமக்காக போராடதே என்று சொல்லுபவர்களை இந்தப்பந்தி எழுத்தில்தான் தரிசிக்கிறேன்...அவர்கள் ஏதோ ஆயுதத்தை தூக்கிகொண்டு போராட தமிழீழத்துக்கே வந்துவிட்டதுபோல் உங்கள் பந்தி எழுத்து கூச்சல் போடுகிறது...ஒரு பாலஸ்தீனனுக்காவே குரல்கொடுக்கிறோம் உலகின் எங்கோ ஒருமூலையில் இருந்துகொண்டு..தன் சொந்த சகோதரனுக்காக் குரல் கொடுப்பவனை பார்த்து நீ எமக்காக குரல் கொடுக்காதே இது என் உள்வீட்டு விவகாரம் என்று சொல்லி எமக்காக போராட வருபவர்களை எல்லாம் தந்திரமாக் தலையில் அடித்து அமர்த்தும் யுக்தி உங்கள் எழுத்தில்..
 
 
 
 
மிகுதி தொடரும்....

Edited by சுபேஸ்

தொடர்ந்து எழுதுங்கள் சபேஷ் .நானும் இதில் எழுத பல விடயங்கள் இருக்கு ஆறுதலாக எழுதுகின்றேன் .

எமது ஆயுத போரட்டம் வெற்றியில் முடிந்தது என்று யாரும்  கருதுவீர்கள் ஆனால் எது நடந்தாலும் அது வெற்றியில் தான் முடிந்தது என எழுத போகின்றீர்கள் .

தமிழக மாணவர்களை அவர்களின் அறிவுபூர்ந்த அகிம்சை போராட்டத்தை, விமர்சிக்க யாருக்கு தகுதி உள்ளது?

 

போருக்கும், அந்த குற்றங்களுக்கும் முகம்கொடுத்தும், அங்கே நான்கு வருடங்கள் களியும் வேளையிலும் தொடரும் இனவழிப்பை நாளும் எதிர்கொள்ளும் தாயக மக்களுக்கே, அவர்களுக்கு மட்டுமே உள்ளது. அங்கிருந்து வரும் செய்திகளின் படி, அவர்கள் மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாகவே உள்ளனர்.

 

இந்த நான்கு வருடங்களில் புலம்பெயர் மக்களால் பெரிதாக எதையும் சாதித்து விட முடியவில்லை. காரணம் - இந்தியா. எனவே அங்கே மாறுதலை கொண்டுவர வேண்டும். மாணவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்து, முடிந்தால் உங்கள் (பண ரீதியாக அவர்கள் உதவிகளை வேண்டாம் என கேட்டுள்ளார்கள்) பரப்புரை ஆதரவை தந்து நில்லுங்கள்.

 

 

இல்லை இன்னும் சற்று காலம் பொறுமையாக இருந்து ஆதரவு தாருங்கள்.

தமிழனினத்தில் முளைத்த விஷ செடிகள். கடித எழுதி கிழிக்கிறனென்று போராடும் தமிழக மாணவர்களை கொஞ்சைப்படுத்த வேண்டாம். தானும் செய்யான் செய்கின்றவனையும் விடான். நீங்களெல்லாம் ஏவறைவிடும் நேரத்தில் பொழுதுபோகமல் எழுதும் குப்பைகள் இவை. அதை ஆதரிக்கவென ஒரு தத்துபித்து கூட்டம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனினத்தில் முளைத்த விஷ செடிகள். கடித எழுதி கிழிக்கிறனென்று போராடும் தமிழக மாணவர்களை கொஞ்சைப்படுத்த வேண்டாம். தானும் செய்யான் செய்கின்றவனையும் விடான். நீங்களெல்லாம் ஏவறைவிடும் நேரத்தில் பொழுதுபோகமல் எழுதும் குப்பைகள் இவை. அதை ஆதரிக்கவென ஒரு தத்துபித்து கூட்டம்

சரியான பதில்...

கையிலே

துப்பாக்கி இல்லை

கழுத்திலே

சயனை குப்பியில்லை

 

நெஞ்சிலே

பிரபாகரன் இருக்கிறான்

 

வாங்கடா !

 

- முகநூல்

602813_606031786077647_1165483582_n.jpg

நேற்று (28 NOV 2012)  மௌனம் 

 

28_11_2012_Jaffna_Univ_06_101161_445.jpg

 

 

இன்று ஆய்வு  :wub:

 இந்த கட்டுரை பற்றி இதை எழுதிய மீராபாரதியிடம் நிறைய கேள்விகள் இருக்கின்றன..ஒவ்வொன்றாக கேட்கலாம் என்றிருக்கிறேன்..
 

 

மிகுதி தொடரும்....

 

நன்றி சுபேஸ். உங்களை மாதிரித்தான் என் மனத்திலும் வந்த கேள்விகளை எல்லாவற்றையும் எழுத வேண்டும் போலத்தான் தோன்றியது. ஆனால் அதிக மாணவர் செய்திகள் தொடந்து வெளிவந்ததால் விரிவாக எழுத முடியவில்லை.

 

எங்களிடம் டொனமூர் வந்ததிலிருந்து சரித்திரம் இருக்கு. இவர்கள் பிழைப்புக்கு எழுதி எம்மை ஏம்மாற்ற நாம் அரிவரிக் குழந்தைகள் அல்ல என்பதை சொல்லிவிடுங்கள்.

 

 இப் போராட்டம் தொடர்பாக நாம் மீள் பரிசீலனை செய்யவேண்டும்.

என்று மிரட்டும் போது புலம் பெயர் தமிழர் வெளிக்கிட்டு உயிரை கொடுத்து தமிழ் நாட்டு மாணவரை அடக்காவிட்டால் தாயகத்தில் என்ன செய்வோம் தெரியுமா என்றுதான் மிரட்டப்பார்க்கிறார் போலிருக்கு.

எமக்கென்ன பங்கிருக்கு, எமக்கென்ன அதிகாரம் இருக்கு, அதை மீளாயவு செய்ய என்பதை விளங்காத அரசியல் பண்டிதரா இந்த மீராபாய்?

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.