Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவுக்கு எதிராக வாய்திறந்தார் சோனியா

Featured Replies

சிறிலங்காவுக்கு எதிராக வாய்திறந்தார் சோனியா

[ செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013, 15:21 GMT ]

சிறிலங்காவில் தமிழர்களுக்கு சொற்களால் விபரிக்க முடியாத கொடூரங்கள் இழைக்கப்பட்டுள்ளதாக, காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

இன்று காலை, ஆளும் கூட்டணியில் இருந்து திமுக விலகுவதற்கு முன்னர், புதுடெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கொழும்பு எதிரான கடும்போக்கை முதல்முறையாக சோனியா காந்தி வெளிப்படுத்தியுள்ளதாகவும், இது வழக்கத்துக்கு மாறானது என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

“எமது இதயங்கள் சிறிலங்கா தமிழர்களுக்கு மிகவும் நெருக்கமாகவே உள்ளது.

2009இல் போரின் இறுதி நாட்களில் அப்பாவி பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட சொற்களால் விபரிக்க முடியாத கொடூரங்கள் குறித்து வெளியாகும் அறிக்கைகளால் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

அதனால் தான் சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து நம்பகமான, நடுநிலையாக விசாரணைகளை நாம் கோருகிறோம்.

தமிழர்களுக்கு சமஉரிமை, சமமான பாதுகாப்புக்கு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி காலத்தில் இருந்தே எமது ஆதரவு உள்ளது.

அவர்களுக்கு நியாயமான அரசியல் உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்படுவது வருத்தமளிக்கிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலத்தில் இந்தியாவின் உயர்மட்டத் தலைவர் ஒருவர் பகிரங்கமாக, சிறிலங்காவுக்கு எதிராக கடுமையான தொனியில் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளது இதுவே முதல் முறை என்று ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே, திமுகவின் அழுத்தங்களை அடுத்து, சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் எத்தகைய தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ளது என்ற விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

http://www.puthinappalakai.com/view.php?20130319107971

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கும் மாணவர் போராட்டம்தான் காரணமா? :unsure: அல்லது போராட்டம் என்பது வித்துவான்கள் சொன்னதுபோல பிரியோசனமற்ற வேலையா? :huh::D

  • கருத்துக்கள உறவுகள்

டங்கு இது எல்லாம் கண் துடைப்பு நாடகம் பொய் என்றால் பொறுத்து இருந்து பாருங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவின் இனப்படுகொலை பங்குதாரர்களான சோனியாவையும்.. கருணாநிதியையும்.. காங்கிசையும் தி மு கவையும்..  இன்னுமா ஆக்கள் நம்புறாங்க..! :(:rolleyes:

 

மாணவர்களின் எழுச்சியும் அதனால் எழுகின்ற அரசியல் மாற்றங்களைத் தேடுகின்ற மக்களின் மனங்கள் இனங்கண்டுள்ள மாற்றங்களையும்.. இன்னும் ஓராண்டில் வரவிருக்கும் இந்திய நாடாளுமன்ற தேர்தலை மையமாகவும் வைத்து செய்யப்படும் காய் நகர்த்தல்கள்..!

 

தமிழன் இதனை எல்லாம் கடந்து செய்ய வேண்டியது பலதிருக்குது. அந்தப் பலம் இன்று மாணவர்களின் கையில் உள்ளது. :icon_idea:



இந்த நகர்வுகள் மாணவர் எழுச்சியை சுற்றி சூழ்ச்சிகள் சூழ வழிவகுக்கலாம்..! :icon_idea:

மாணவர் போராட்டத்திற்கு இது வெற்றியல்ல. காரணம் அவர்கள் இலக்கு இது அல்ல.

 

ஆனால், இராஜதந்திர ரீதியாக வெற்றி. இது இலக்கு அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் நானும் நம்பவில்லை.. :rolleyes: ஆனால் வாயே திறக்கமாட்டோம் என்று அடம்பிடித்தவர்கள் இன்று அதைச் செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுவிட்டார்கள்.. :D

  • தொடங்கியவர்

மாணவர் போராட்டத்தால் காங்கிரஸ் ஈடாடுகிறதா அல்லது நடிக்கிறதா என்று சொல்ல மாதக்கணக்கில் தேவை.(வருசக்கணக்கில் இல்லாவிட்டால்).

 

இந்த சோழியன் குடும்பிகள் சும்மா ஆடாது.

Edited by மல்லையூரான்

இருந்தாலும் கொழுக்கட்டை வெளியால் வந்தது - ஒரு வெற்றிதான் எமக்கு, மாணவர்களுக்கு அல்ல.

 

போகவேண்டிய தூரம் இன்னும் அதிகம். இலக்கை மாணவர்கள் தெளிவாக கூறி நிற்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அங்கையெல்லாம் முடிந்துது....இப்ப ஒரு சின்னமேள  நடனம்....

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கும் மாணவர் போராட்டம்தான் காரணமா? :unsure: அல்லது போராட்டம் என்பது வித்துவான்கள் சொன்னதுபோல பிரியோசனமற்ற வேலையா? :huh::D

 

இரண்டு கிழமையால் பதில் தருவார்  நமது ஆய்வாளர் பொறுங்கோ

என்ன  அவசரம் :(

  • கருத்துக்கள உறவுகள்

வாய் திறந்து என்ன பிரயோசனம் மனசை திறந்து இதய சுத்தியுடன் தமிழர்களுக்கு எதையாவது செய்யட்டும் முதல்ல .....

அச்சுப் பத்திரிகைகளில் வரும் ஆதாரமற்ற செய்திகளைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இல்லாத செய்திகளைக் கூட நம்பி ஏமாறும் நிலையில் இன்னமும் தமிழினம் இருப்பது வேதனை!

எமது உரிமைகளை நாம் தான் பெற வேண்டும்,

மற்றவர்கள் பெற்றுத் தருவார்கள் என்று எதிர்பார்த்து இருப்பவர்கள் ஏமாந்து போவார்கள்!

  • தொடங்கியவர்

இலங்கை இது பற்றி இன்னமும் கருத்து தெரிவிக்கவில்லையா?

கிடைத்தால் தயவுசெய்து  யாராவது இணைத்துவிடவும்.

Edited by மல்லையூரான்

INDIAVAI PANIYAVAIKA AMERICA EDUTHA SOOLCHI VETTRI

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா  போர்க்குற்ற விசாரணை வேண்டாம் என ஐ.நா பிரேரணையில் தமது பலத்தை பாவித்துள்ளது. இது சோனியாவுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பே இல்லை. மற்றப்பக்கம் திரும்பி தமிழர்களை பார்த்து முதலைக்கண்ணீர் வடிக்கிறார்.

INDIAVAI PANIYAVAIKA AMERICA EDUTHA SOOLCHI VETTRI

 

இதுதான் உண்மை.  இனி மாணவர்களின் நிலைதான் பரிதாபத்திற்குரியது.

Edited by தமிழச்சி

அது என்ன  சீனா என்றாலும் பணிவாக கருத்து  சொல்லும் இந்தியா  பரம எதிரியான பாகிஸ்தானை கூட  பேச்சளவில  கொக்கரித்துவிட்டு  மற்ந்து போய்விடுவார்கள் ஆனால் இலங்கைத்தமிழர் விடையத்தில மட்டும்   இரத்ததுக்கு இரத்தம் என்றது போல் பழிவாங்கிவிட்டு போனால் போகட்டும் என்று ஒரு  அறிக்கை?

 

 

இது ஈழத்தமிழர்களை பிடிக்காமலா அல்லது? இந்திய தமிழர்கள் மீதான   வெறுப்பா?

496_595772367101459_2019801292_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.