Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு பிடிக்காத எழுத்தாளர்கள்

Featured Replies

யாழை கொஞ்சம் சூடு பிடிக்க வைப்பம் என்று தான் இந்த தலைப்பு. (ஏதோ யாழுக்கு என்னாலான உதவி).

 

 

வாசக பெருமக்களே நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இனிமேலே இவருடைய எழுத்துக்களை படிப்பதில்லை. அல்லது இவரது எழுத்துக்கள் எனக்கு பிடிப்பதில்லை என்று நினைத்தால் அந்த எழுத்தாளரையும் உங்கள் விளக்கத்துக்கான காரணத்தையும் குறிப்பிட்டால் ஒரு சூடான விவாதம் ரெடி.

 

முக்கியமா யாழ் கள உறுப்பினர் பெயர்களை குறிப்பிடாதீங்கள்.

 

(தனி மனித தாக்குதல் இந்த திரியில் தடை செய்யபட்டுள்ளது)

 

 

சரி நானே தொடக்கி வைக்கிறேன். எனக்கு ரமணிச்சந்திரனின் எழுத்துக்கள் பிடிப்பதில்லை.

 

ஆரம்பத்தில் விரும்பி படித்தாலும். போக போக ஒரே மாதிரி எழுதி சலிப்படைய  வைத்துவிட்டார். என்ன சண்டையில் ஆரம்பிக்கும் எதிரும் எதிரும் புதிருமாக இருப்பார்கள் கடைசியில் சேர்ந்துவிடுவார்கள்.

 

 

ஆனால் என்னவோ எல்லா வீட்டு பெண்களும் எவ்வளவு தான் அரைச்ச மாவை அரைச்சாலும் அதையே ஆசை போங்க படிப்பது ஏன் என்று தான் எனக்கு விளங்குவதில்லை. புத்தி மந்தமோ  :lol: 

 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் ஒவ்வொரு எழுத்தளாரைப் பிடிக்கும்...எங்களுக்குப் பிடிக்காத எழுத்தளாரை இன்னுமொருவருக்கு பிடிக்க கூடும் அல்லவா

 

எனக்கு பிடிக்கவே பிடிக்காத எழுத்தாளர் என்றால் 'சாருநிவேதிதா' தான்.  இவரை ஏன் ஒரு குரூப் தூக்கிப் பிடிக்குது என்று தெரியவில்லை.

 

 

சரி நானே தொடக்கி வைக்கிறேன். எனக்கு ரமணிச்சந்திரனின் எழுத்துக்கள் பிடிப்பதில்லை.

 

ஆரம்பத்தில் விரும்பி படித்தாலும். போக போக ஒரே மாதிரி எழுதி சலிப்படைய  வைத்துவிட்டார். என்ன சண்டையில் ஆரம்பிக்கும் எதிரும் எதிரும் புதிருமாக இருப்பார்கள் கடைசியில் சேர்ந்துவிடுவார்கள்.

 

 

ஆனால் என்னவோ எல்லா வீட்டு பெண்களும் எவ்வளவு தான் அரைச்ச மாவை அரைச்சாலும் அதையே ஆசை போங்க படிப்பது ஏன் என்று தான் எனக்கு விளங்குவதில்லை. புத்தி மந்தமோ   :lol:

 

பகலவன் உங்கள் கருத்துத்தான் என் கருத்தும் தலைப்பைப்  பார்த்துவிட்டு எழுதலாம் என்று  நுழைந்தால் நீங்களே எழுதியிருக்கின்றீர்கள். 

அனேகமாக ரமணிச்சந்திரன் பற்றி பெரும்பாண்மையானவர்களின் கருத்து இதுவாகத்தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு புனைபெயர்களில் வந்து எழுதுபவர்களை பிடிக்காது.ஏன்?எதற்கு? புனைபெயர்களில் எழுதுகின்றார்கள் என்று பலதடவைகள் சிந்தித்தேன். கிடைத்த விடை......அவர்களின் எழுத்திற்கும் வாழ்க்கைக்கும் வெகுதூரம்.

 

  • தொடங்கியவர்

எனக்கு பிடிக்கவே பிடிக்காத எழுத்தாளர் என்றால் 'சாருநிவேதிதா' தான்.  இவரை ஏன் ஒரு குரூப் தூக்கிப் பிடிக்குது என்று தெரியவில்லை.

 

பொதுவாகவே எழுத்தார்களிடம் ..?? ஒரு திமிர் இருக்கும். ஆனால் இவரிடம் கொஞ்சம் அதிகமாக இருப்பதை அவதானித்து இருக்கிறேன்.

 

சரி தலைப்போடு இன்னொரு விடயத்தையும் அலசுவோம்.

 

உங்களுக்கு பிடித்த எழுத்தாளரின் பிடிக்காத நாவல் அல்லது எழுத்து எது.

அதை அவர் எழுதி இருக்கவே கூடாது என்று நினைக்கும் படைப்பு எது. அதற்கான காரணத்தையும் சொன்னால் எங்களுக்கும் ஒரு பக்கம் இருக்கும் அல்லவா விவாதிக்க..

எனக்கு புனைபெயர்களில் வந்து எழுதுபவர்களை பிடிக்காது.ஏன்?எதற்கு? புனைபெயர்களில் எழுதுகின்றார்கள் என்று பலதடவைகள் சிந்தித்தேன். கிடைத்த விடை......அவர்களின் எழுத்திற்கும் வாழ்க்கைக்கும் வெகுதூரம்.

 

உண்மை தான் குமாரசாமி அண்ணா. நான் யாழில் கூட சிலரை பார்த்து இருக்கிறேன். அவர்களது சொந்த குணத்துக்கும் வாழ்க்கை முறைக்கும் நேர்மாறாக தான் புனை பெயரில் எழுதுகிறார்கள். நான் நினைக்கிறன் அவர்களுக்கு தங்களை அப்படி காட்டுவதில் ஒரு மாயை பின்னுவதில் ஒரு திருப்தி.

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் இலகுவில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். சந்தோசங்கள் எத்தனையோ வகை. பலருக்கு பலதும் கிடைப்பதில்லை. அதனால் இப்படியானவற்றை வாசித்து தம்மைத் திருப்பதிப் படுத்திக் கொள்கின்றனர். ரமணிச் சந்திரனின் எழுத்துக்கள் உணர்வைத் தூண்டுபவைகளாக உள்ளதால் பெண்கள் வாசிக்க அலைவது இயல்புதான்.

எனக்கு விருப்பு வெறுப்பு என்று கிடையாது. எல்லாவற்றையும் வாசிப்பேன். இனி வாசிக்கும் போதுதான் கவனிக்க வேண்டும் எதில் வெறுப்பு வருகிறது என்று.

 

  • கருத்துக்கள உறவுகள்

வணிக எழுத்துக்களை அதிகம் படிப்பதில்லை. எனக்குப் பிடிக்காத எழுத்தாளர் என்று ஒருவரைக் குறிப்பிட்டுச் சொல்லமுடியாவிட்டாலும், சில புத்தகங்களை ஏன்தான் படித்து நேரத்தை வீணாக்கினோம் என்று யோசிப்பதுண்டு. ஆனாலும் காசு கொடுத்து வாங்குவதால் படித்துமுடித்து விடுவேன்.

பெண்கள் ஏன் ரமணிச்சந்திரனின் புத்தகத்தைப் படிக்கின்றார்கள் என்பதற்காக ஒரு புத்தகம் மாத்திரம் படித்தேன். சராசரி ஆசைகள் உள்ள சாமானியர்களுக்குப் பிடிக்கலாம். ஆனால் நான் தூக்கி எறிந்துவிட்டேன்!!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடிக்காத எழுத்தாளர் கலைஞர் கருணாநிதி

காரணம் அவருடைய எழுத்துக்கள் உண்மையானவை இல்லையென

அவர் வாழ்ந்துகாட்டிய முறை

 

 

எனக்கு தங்களது வசதி வாய்ப்புகளுக்காக( சோரம் போய்)  கொள்கையை மாற்றி எழுதுபவர்களை பிடிக்காது.மற்றப்படி எனக்கு ஒவ்வாத எழுத்துக்களையும் தங்கள் கொள்கையில் நின்று எழுதுபவர்களை ஏற்றுக்கொள்கிறேன் 

 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிடிக்கவே பிடிக்காத எழுத்தாளர் என்றால் 'சாருநிவேதிதா' தான்.  இவரை ஏன் ஒரு குரூப் தூக்கிப் பிடிக்குது என்று தெரியவில்லை.

 

உண்மையைச் சொல்லுங்கோ நிழலி சாருவின் எழுத்தைப் பிடிக்காதா அல்லது சாருவையே பிடிக்காதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.