Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்ககொடியும் சீலனும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருமலை தந்த சீலனே

திரும்பி பார்க்க மறந்தனர்

புல தமிழன்

புலிகளின் மூத்த தாக்குதல் தளபதி நீ

உன் முதல் இலக்கு சிங்க கொடி

உயிர் குடிக்கும் ஆயுததாரிகளின் முன்னே

தனித்து நின்று தீக்கிரையாக்கினாய் அக்கொடியை

தந்தையும் தனயனும் நெஞ்சில்

சுமந்தனர் அக்கொடியினை புலத்தில்

சுமந்தாய் நீ தமிழை நெஞ்சில்

விளையாட்டு வேறு அரசியல் வேறு

விளக்கம் கொடுத்தனர் கனவான்கள்

விளையாட்டு பருவத்தையே துறந்தாய்

விடுதலைக்காக,மறந்தனர் புல தமிழர்

படைத்தான் தலைவன் உன் பெயரில்

படையணி உன் உறவுகள்

தொடர்ந்த்னர் உன் பணியினை

தகர்ந்தன சிங்க கொடி இராணுவ தளங்கள் கொடி

காவி விமானங்கள்,நிலையங்கள்

காவுகின்றனர் கொடியினை கையில் புல தமிழர்கள்

விளக்கம் கொடுக்கின்றனர் நடுநிலையாம்

விவாதிக்கின்றனர் தூக்குவது சரியாம்

விளையாட்டு பருவத்தில் புரிந்தது உனக்கு

விடை பெறும் பருவத்திலும் புரியவில்லை இவர்களுக்கு

மன்னிக்கலாம் எதிரியினை

மன்னிக்காத மேடையில்

புலி புராணமும் மைதானத்தில்

சிங்கள புராணம் பாடும் இவர்களை

ஜெயசூரியா நாயகன் இவர்களுக்கு இன்று

ஜெயதேவன் நாயகன் இவர்களுக்கு நாளை

இராவணனும் சிந்திக்கிறான் மீண்டும்

அவதாரம் எடுத்து உன் படையணியில் சேர

வணக்கம் புத்தன்,

அசினையும் நயன்தராவையும் பற்றித் தகவல் தேடிக்கொண்டிருக்கின்ற நாங்கள் எங்கள் வரலாற்றினை மாற்றியெழுதத்துணிந்த சீலன் போன்றவாகளைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் இருப்பது வேதனை.

தக்க நேரத்தில் தந்த அருமையான கவிதைக்கு நன்றி

ஜெயசூரியா நாயகன் இவர்களுக்கு இன்று

இதைப் பற்றிக் கதைத்தால் விளையாட்டு வேறு அரசியல் வேறு என்று புத்தி சொல்கிறார்கள். ஆனால் தமிழன் மட்டும் என்ற காரணத்திற்காக (அதுவும் பெயரில் மட்டும் தான்) உதவித் தலைவர் பதவியைக் கூடப் பெறமுடியாமல் கறிவேப்பிலை ஒன்று வாடுவது அரசியலில்லையா என்று எனக்குத் தெரியவில்லை.

புத்தன், அருமை..

புரியுமா எம் புலத் தமிழர்களுக்கு??

மேற்கோள்:

விளக்கம் கொடுக்கின்றனர் நடுநிலையாம்

விவாதிக்கின்றனர் தூக்குவது சரியாம்

விளையாட்டு பருவத்தில் புரிந்தது உனக்கு

விடை பெறும் பருவத்திலும் புரியவில்லை இவர்களுக்கு

எவ்ளோ அர்த்தம்.........!!

என்ன சொல்ல ..........??

உங்க எழுத்து முழுக்க கோவம்.......!!

புரியல்ல ....... என்ன செய்யன்னு.........

எமக்கு எதிராய் போறவங்களை ...... அப்பிடியே போக விடவா..... இல்ல.......... நாங்க ஒதுங்கி போகவான்னு...!!

போக நினைச்சாலும் - கோவமூட்டுவாங்களே - அதுதான்!

நிறைய கோவம் - நியாயத்தோட ........

நலலாயிருக்குன்னு சொல்ல விரும்பல்ல..........

புத்தன் .

கடமையை செய்திருக்கிங்க - !

அங்கையும் இங்கையும் தாவி - இன அழிவில கூட - எழுத்து என்னு சொல்லி புகழ் தேட நினைக்கும் - டுபாக்கூர் - பார்ட்டிகளுக்கு- முகத்தில அறைஞ்சு!

8) 8)

புத்தனின் கோபம் கவிதயாக. நல்ல ஆழமான கருத்துக்கள் வாழ்த்துக்கள்

கவிதை அருமை புத்தன்,இங்கே சிங்கக்கொடியேற்றி மகிழுபவர்கள் தாங்கள் யார் என்ற உண்மையை மீண்டும் காட்டியுள்ளார்கள்.

திருமலை நகரில் ஏற்றப்பட்ட சிங்கக்கொடியினை அறுத்தெறிய ஏறிய தமிழர் ஒருவரும் முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டார். இது நடந்தது பல வருடங்களுக்கு முன்னர். அவரது பெயர் மறந்துவிட்டது. தெரிந்தவர்கள் இங்கு குறிப்பிடுங்கள்.

சீலனின் நினைவை மீட்டிய கவிதை சுப்பர்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கவிதை பாராட்டுக்கள் புத்தா உறைக்குமா இவர்களிற்கு ??????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அருமை புத்தன்,இங்கே சிங்கக்கொடியேற்றி மகிழுபவர்கள் தாங்கள் யார் என்ற உண்மையை மீண்டும் காட்டியுள்ளார்கள்.

திருமலை நகரில் ஏற்றப்பட்ட சிங்கக்கொடியினை அறுத்தெறிய ஏறிய தமிழர் ஒருவரும் முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டார். இது நடந்தது பல வருடங்களுக்கு முன்னர். அவரது பெயர் மறந்துவிட்டது. தெரிந்தவர்கள் இங்கு குறிப்பிடுங்கள்.

இந்த கேள்வி நானும் கேட்க நினைத்தனான்,எனக்கும் பெயர் சரியாக தெரியவில்லை.அநேகமாக தமிழரசு கட்சியின் ஆரம்ப கட்ட உறுப்பினராக இருக்க வேண்டும்.திருமலை நகர சபையில் நடந்தது என்று நினக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மணிவாசகன்,தூயா,வர்ணன்,இலக்கி

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆதங்கத்தை கவிதையாக வடித்து இருக்கிறிங்கள் .பாராட்டுக்கள் புத்தன்

ஆஹா.. புத்தன் கவிதை அருமை தொடர்ந்து தாருங்கள் :wink:

புத்தனின் கோபத்தை கவியாக வடித்துள்ளீர்கள். அருமை தொடரட்டும் உங்கள் கவிப்பயணம். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சகிவன், கெளரிபாலன்,ரசிகை நன்றிகள்..

  • கருத்துக்கள உறவுகள்

உலக துடுப்பாட்ட விளையாட்டில் பங்குபற்றும் நாடுகளான தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பிரித்தானியாவில் வாழும் தமிழர்களினை விட அவுச்திரெலியாத்தமிழர்கள்(கு

கோபங்களை கவியாக்கி வடித்த கவிதை நன்று.

உங்களுக்கு பாராட்டு சொல்வதோடு புரியவேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.

சிங்கக்கொடியுடன் நிக்கும் தமிழர்கள். எனது புகைப்படக்கருவியினால் எடுத்த படம்

p1220333ok3.jpg

இலங்கை அணித்தலைவர் மார்வன் அட்டப்பட்டு அணிந்திருக்கும் உடையினைத் தமிழர்கள் அணிந்து செல்வார்கள்.

p1220318hs0.jpg

பெரும்பாலன தமிழர்கள் அணிந்து செல்லும் உடை -ஜெயசூரியா அணிந்துள்ள உடை

p1220331jw7.jpg

எனது புகைப்படக்கருவியினால் எடுக்கப்பட்ட மேலதிகப்படங்கள்

p1220322fq2.jpg

p1220325jf2.jpg

p1220324fq7.jpg

p1220327ea8.jpg

அவுஸ்திரெலியா நாடு பலருக்கு புகழ் இடம் வழங்கிப் பிரஜைகளாக ஏற்றுக்கொண்டது. ஆனால் இலங்கை நாடு இருக்கிற தமிழர்களின் உரிமையினைப் பறிக்கிறது. ஆனால் அவுஸ்திரெலியாத்தமிழர்கள் ஏன் உணர்வற்றிருக்கிறார்கள்?. எந்தக்கொடி ஏந்துகிறார்கள்?

பாராட்டுக்கள் புத்தன். ரமா சொல்வது போல புரியவேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நானும் ஆசைப்படுகின்றேன்.

கவிதை அருமை புத்தன்,இங்கே சிங்கக்கொடியேற்றி மகிழுபவர்கள் தாங்கள் யார் என்ற உண்மையை மீண்டும் காட்டியுள்ளார்கள்.

திருமலை நகரில் ஏற்றப்பட்ட சிங்கக்கொடியினை அறுத்தெறிய ஏறிய தமிழர் ஒருவரும் முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டார். இது நடந்தது பல வருடங்களுக்கு முன்னர். அவரது பெயர் மறந்துவிட்டது. தெரிந்தவர்கள் இங்கு குறிப்பிடுங்கள்.

04.02.1957ல் திருமலையில் சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக்கொடி கட்ட முயன்றபோது காடையரால் சுடப்பட்டவர் தியாகி திருமலை நடராஜன். 1957ம் ஆண்டே இது எங்கள் கொடி அல்ல என்று அதற்காகவே அவர் அன்று சாவடைந்தார். ஆனால் இன்னமும் எம்மவர்களில் சிலர் விழிப்படையாது இருப்பதை நினைத்து கவலைப்படுவதைத்தவிர வேறு என்னத்தை செய்ய. :lol:

ஈழப் போராட்டத்தின் ஆரம்பகால வீரன் சீலனைப் பற்றிய கவிதைக்கு வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.