Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆதிவாசியின் அடர் அவை!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ஆதி மிகவும் குழப்பமா?.....

முயற்சி செய்யுங்கள்.......

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

சிப்பி

  • Replies 520
  • Views 41.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா செல்வமுத்து...

சும்மா சொல்லக்கூடாது....மனிதகுலம் போற்றும் தவக்கொழுந்து

ஆதிவாசியில் இவ்வளவு கோபமா?...

"கள்ளுண்ட குரங்கு வெறிகொண்டு கரஞ்சொறிய

தேள் கொட்ட பாம்பலவன்கவ்வ - விரைந்துபோய்

பச்சை மிளகாயைக்கடித்து அனலில் வீழ்ந்தால்

எத்தனைபேர் சேட்டைக் கிடம்."

மது அருந்திய குரங்கு போதையேறி சும்மா இருக்காது

சொறிந்து கொண்டிருக்க......

அந்த நேரம் தேள் வந்து கொட்ட.........

பாம்பு வந்து கடிக்க......

உடனடியாக ஓடிப்போய் பச்சை மிளகாயைக் கடித்து

நெருப்பில் வீழ்ந்தால்.....

எத்தனை பேரின் கிண்டல்களுக்கு இடமாகும்.

து. சிங்கம் 0009 ரொம்பத்தான் லொள்ளு......

எடுத்து விட்டாச்சு.......

இனி வாறபோற குட்டிச்சாத்தானெல்லாம் வெண்பாக் கிண்டலில்

ஆதிவாசியை அரைவாசி ஆக்கப்போகுதுகள்.......

அதுக்காக ஆதிவாசி அவையைவிட்டு ஓடமாட்டன்......

காளமேகத்தின் கலக்கலுக்கு பொருள் அறியாமல்

அவையைக் கலைக்கவும் விடமாட்டன்...

சொல்லிப் போட்டன்...

பொக்கைவாய்கள் வந்து பொருள் சொல்லாவிட்டால்

ஆதிவாசி இந்தச் சபையில் உண்ணாவிரதம் ஆரம்பிப்பார்...

ஏற்கனவே எல்லாளன் அனலில் இட்டு தோள் பொசுங்க

அலறித் திரிந்த ஆதிவாசி

நான் வார்த்தை ஜாலத்தில் வல்ல காளமேகத்தின் ரசிகன். அவரது சிலேடைப் பாடல்களால் கவரப்பட்டவன். காளமேகத்தின் சில பாடல்களைப்போல் சொற்களை முன்னுக்குப் பின்னாகவும், தலை கீழாகவும், ஒன்றை விட்டும், சேர்த்தும் பிரித்தும் செய்யாத (குரங்குச்) சேட்டைகள் எல்லாம் செய்து பார்த்தும் முடியவில்லை. அதனால்தான் இப்படி ஓர் புதிய "வெண்பாவை" எழுதினேன்.

சும்மா சொல்லப்படாது எல்லாவற்றையும் படிக்கச் சுவையாகத்தான் இருக்கிறது.

அதுசரி எப்போ எல்லாள மகாராஜாவாக உருவெடுக்கப் போகிறீர்கள்? ஓகோ! இப்போ ஆதிவாசியாக சற்று "பிசியாக" இருப்பதனால் நேரமில்லையோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்தப் பதினாறையும் சொல்லுங்கோ......

என்ன மணி உங்களுக்கு பதினாறு வரை எண்ணத் தெரியாதா. உதைப் போய் ஆதிட்ட கேக்கிறீங்க!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்தப் 16ல இரண்டு, ஆணும்,பெண்ணும்பெறுவது! :smile2:

funny20monkeyqu9.jpg

அந்தப் 16ல இரண்டு, ஆணும்,பெண்ணும்பெறுவது! :smile2:

funny20monkeyqu9.jpg

நீங்கள் ஏன் ஆதியின்ரை அல்பத்திற்குள்ளை படம் களவெடுத்தனீங்கள்

(அப்பா மாதிரி வடிவான பிள்ளைகள்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

7mn5.jpg

ஆதியும் எல்ஸும் :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சிப்பி.

  • தொடங்கியவர்

ஆதிவாசியின் அடர் அவையென்று ஆவலுடன் நுழைந்தால் புதிரைப் போட்டு அதிரவைத்துவிட்டார். பேசாமல் புதிர் அவையென்றே வைத்திருக்கலாம். :evil: உலகிலேயே பெரிய கொடுமை தன்னைப் பற்றி இன்னொருவர் சொன்ன வார்த்தை என்னவென்று அறியாமல் இருப்பதுதான். ஆரம்பத்திலேயே ஆதிவாசிக்கு இப்படி ஒரு நிலையா. :lol::lol: இதை எண்ணி என்னால் என்ன செய்ய முடியும். :(:( எனக்கு அடியும் விளங்கவில்லை நுனியும் விளங்கவில்லை. :oops: இப்படியே போனால் அவை அனுமர் வால் போல் நீள்கிறதோ இல்லையோ புதிர் மட்டும் புத்தனின் புத்திரர்களின் அக்கிரமம் போல் நீண்டு கொண்டே போகும். :arrow:

அட போப்பா சுஜிந்தன் நான் காட்டைவிட்டு வந்த நாளில் இருந்து

மனிதர்கள் நம்மை எப்படிக் கிண்டல் பண்ணுகிறார்கள் என்று

புரியாமல் இன்னும் இருக்கிறேனே.....

உமக்கு அடியும்,நுனியும் விளங்கேல்லை என்று போட்டு....

நக்கல் வேற.......

புத்தன் சோதனைக்குப் பயந்து தலைகாட்டாமல் ஒளிந்திருந்தால்

புத்திரர்கள் அக்கிரத்தை கேக்கிறது யார்?

யோவ் சிட்னி புத்தா உம்மைத்தான் கேட்டேன்.....

ஆதி அரங்கம் அமைச்சது இப்பிடி அரைபடுவதற்கா?

:x :x :x ஆட்டுக்கல்லில் அகப்பட்ட ஆதிவாசி

  • தொடங்கியவர்

கௌரி பாலன் எழுதியது,

ஹாய் ஆதி

அடியேன் புரிந்து கொண்டதை சொல்கின்றேன் தவறாயின் யாரும் திருத்திச் சொல்லவும்

நெருப்பில் வீழ்ந்த குரங்கிற்கு அதன் தோல் வெதும்பி இருக்கும்.... அந்த வலியுடன் இருக்கும் போது தேள் பாம்பு போன்றன அதில் கடிக்க அக்குரங்கு மேலும் அதிக வலி எடுக்கும்... தாங்க முடியாத குரங்கிற்கு (பேய்) பயம் பற்றிக் கொள்ள அது பரிதவிக்கும்...

கற்பனை பண்ணிப் பாருங்கள்

இஞ்சி தின்ற குரங்கு எனும் போது மனக்கண்முன் வரும் உருவம் போல் இந்தக் குரங்கினது நிலையை எண்ணிப் பாருங்கள்....

கள்ளுண்டு மதி மயங்கி இருப்பவர் பச்சை மிளகைக்கடித்து...தாங்கமுடியா

  • தொடங்கியவர்

என்ன ஆதி மிகவும் குழப்பமா?.....

முயற்சி செய்யுங்கள்.......

கொஞ்ச நஞ்சக் குழப்பமில்லை.

ஆதியை வைச்சு எல்லாரும் சூழ சுழன்று கும்மியடிச்சுக் குழப்பிறாங்க.....

ஆரம்பிச்சு வைச்சிட்டு அருகில நின்று அகக் களிப்போட பாருங்க..

நார்நாரா ஆதி கிழிஞ்சு கதறப் போறன் கைதட்டி இரசியுங்க....

:twisted: :twisted: :twisted:

ஆத்திரத்துடன் ஆதிவாசி

  • தொடங்கியவர்

செல்வமுத்து எழுதியது,

நான் வார்த்தை ஜாலத்தில் வல்ல காளமேகத்தின் ரசிகன். அவரது சிலேடைப் பாடல்களால் கவரப்பட்டவன். காளமேகத்தின் சில பாடல்களைப்போல் சொற்களை முன்னுக்குப் பின்னாகவும்இ தலை கீழாகவும்இ ஒன்றை விட்டும்இ சேர்த்தும் பிரித்தும் செய்யாத (குரங்குச்) சேட்டைகள் எல்லாம் செய்து பார்த்தும் முடியவில்லை. அதனால்தான் இப்படி ஓர் புதிய "வெண்பாவை" எழுதினேன்.

சும்மா சொல்லப்படாது எல்லாவற்றையும் படிக்கச் சுவையாகத்தான் இருக்கிறது.

அதுசரி எப்போ எல்லாள மகாராஜாவாக உருவெடுக்கப் போகிறீர்கள்? ஓகோ! இப்போ ஆதிவாசியாக சற்று "பிசியாக" இருப்பதனால் நேரமில்லையோ?

ஆ.............................................................................

இருக்கிற குழப்பம் காணாதா? 0009 து. சிங்கம்

உங்கள் சந்தேகத்தைவிட......பயங்கரமானது நீங்கள் எல்ஸைத் தேடுவது.

எங்கேயோ குறட்டைவிட்டு தூங்கும் எல்லாளன் இங்கு வந்தால்

ஆதியை என்ன பாடுபடுத்துவான் என்று தெரியாதா?

கவனம் சேட்டைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.....

பிறகு எல்லாக் குட்டிச் சாத்தான்களும் நொட்டிப்பார்க்க ஆசைப்படும்.

:x :x :x

அவஸ்தைப்படும் ஆதிவாசி

  • தொடங்கியவர்

நீங்கள் ஏன் ஆதியின்ரை அல்பத்திற்குள்ளை படம் களவெடுத்தனீங்கள்

(அப்பா மாதிரி வடிவான பிள்ளைகள்)

ஆ.........

தாங்க முடியவில்லைmort_mad.jpg

  • தொடங்கியவர்

7mn5.jpg

ஆதியும் எல்ஸும் :lol:

அக்கிரமம் பிடிச்ச அல்லிகா.......

மாடிவீட்டில் ஏதேனும் பிரச்சினையா?

என்னோட நிக்கிறது எல்ஸ் இல்லை சனியன்.

வடிவாக் கண்ணை கழுவிப்போட்டுப் பாரும்....

:twisted: :twisted: :twisted:

அக்கிரமப் பதிலுரைக்கும் ஆதிவாசி

  • தொடங்கியவர்

என்ன நடக்குது இங்கே

ஆரார் குழம்பிறது என்று விவஸ்தையே இல்லாமல் போச்சு

:roll: :roll: :roll:

விளக்கத்தெரியா ஆதிவாசி

  • தொடங்கியவர்

ஆதி உங்கள் குழப்பத்திற்கு நான் பதில் தரமாட்டேன்.....

நீங்கள் குழம்புவது எல்லோருக்கும் நன்மை

:P :P :P

சிப்பி

ரொம்பக் கொடுமை......

உங்களுக்கும் ஆதி தலையிலதான் மிளகாயா?

:evil: :evil: :evil:

அரைபடும் ஆதிவாசி

ஆதிவாசிக்கு அடுத்தடுத்து அடிகள்...

அடர் அவை இடர் அவையாகிவிட்டது...

தன்னைத் திட்டும் மனிதர்களின் திட்டம் புரியாமல்...

புத்தியைத் தீட்டியும் புதிர்கள் அவிழாமல்...

தான் கொழுத்திய திரியில் தானே எரிந்துகொண்டு...

நாட்டுவாழ்க்கை நாய்ப்பிழைப்பாய் போவதால்....

காட்டுக்குத் திரும்பிக்போகக் கடன்வசதியல்லாமல்...

கூட்டுகளும் தன்னை விட்டு ஓட்டம் எடுத்தால்...

நொந்து.. ஒடிந்து..வாலறுந்து...வாழ்விழந்

  • தொடங்கியவர்

ஆதிவாசிக்கு அடுத்தடுத்து அடிகள்...

அடர் அவை இடர் அவையாகிவிட்டது...

தன்னைத் திட்டும் மனிதர்களின் திட்டம் புரியாமல்...

புத்தியைத் தீட்டியும் புதிர்கள் அவிழாமல்...

தான் கொழுத்திய திரியில் தானே எரிந்துகொண்டு...

நாட்டுவாழ்க்கை நாய்ப்பிழைப்பாய் போவதால்....

காட்டுக்குத் திரும்பிக்போகக் கடன்வசதியல்லாமல்...

கூட்டுகளும் தன்னை விட்டு ஓட்டம் எடுத்தால்...

நொந்து.. ஒடிந்து..வாலறுந்து...வாழ்விழந்

நண்பா..

நான் பண்பாகச் சொல்வதை அன்பாகக் கேள்...

வெண்பாவுக்கும் நமக்கும் கண்காணாத தூரம்!

இருந்தும் பொருள் வேண்டும் என்று

தெம்பாக இருந்தால் வீணாகும் நேரம்.

ஆசானே குழம்பிய பின் பேசாமல் இருப்பதுதான்

சீடனுக்கு அழகு.

இருந்தும் வீம்பாக இருந்தால்.... :twisted: :twisted:

சொல்வதைச் சொல்லிப்புட்டேன்

வெல்வதை வென்றுகொள்.. இல்லை

முடிவதைக் கண்டுகொள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆதிவாசியின் அடர் அவை!

ஆதிவாசியின் புதிய அறிமுகம்......

யாழ்க்கள குசும்பர்களின் கலை அரங்கு.....

வருவோர், போவோர் விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும்

முறுவலிட்டு இரசிக்கலாம்.

புலம்பல்களுக்கு கத்தரிக்கும் யாழ்பாடி... கவனம்

இராவணனின் தசமமும் கிறுகிறுக்கும் ஆதிவாசியின் அடர் அவை...

இவ்வளவு நாளும் எட்ட நின்று நொட்டிவிட்டு ஓடியவர்களுக்கு

அவை அமைத்து பொல்லை வேறு கொடுத்துவிட்டீர்களே ஆதிவாசி......

உங்களை இங்கிருந்து காப்பாற்றிக் கொள்வது மிகவும் கடினம்

கலகலப்பு அரங்கமென்றால் கடிகளைத் தாங்கவும் வேண்டும்...

(தேள் கொட்டுவதையோ, கையைச்சுற்றியிருக்கும் பாம்பு கடிப்பதையோ சொல்லவில்லை)

வல்வை சகாறா

ஏய் ஆதி, (ஆரையாவது இப்படியும் கூப்பிட ஆசையாக் கிடந்துது. அதுதான். )

இது உமக்கே நல்லா இருக்குதா?

பாவம் அந்த மனிசன் (அதுதான் மோகன் அண்ணா) ஒவ்வொரு விசயத்திற்கும் தனித்தனியாப் பிரிச்சு இடம்விட்டிருக்கிறார்.

ஆனால் இந்த அடர் அவைக்குள்ளை வந்து பாத்தால் பொது அறிவு கிடக்குது, கவிதை கிடக்குது, நகைச்சுவை கிடக்குது, புதுமையான புகைப்படம் கிடக்குது.

எல்லாத்தையும் குளப்பிறதெண்டே திட்டத்தோடை தான் திரியிறீர் போலை கிடக்குது.

அனுமற்றை வாலுக்கு நடந்தது தெரியும் தானே....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாடிவீட்டில் ஏதேனும் பிரச்சினையா?

என்னோட நிக்கிறது எல்ஸ் இல்லை சனியன்

8aqp4.jpg

மாடி வீட்டில் குடியிருப்பதே நீர் தானே.

இப்படி "சனியனை" கட்டிப்பிடித்து பதினாறும் பெற எண்ணி

தலையில் இருக்கும் இரு மயிரையும் பிய்த்துக் கொண்டு

"வெண்பா கருத்துத் தா" என பிரச்சினை கிழப்பியதே நீர்தானே!

விழுந்து விழுந்து சிரிக்கும் :lol::D அல்லிகா

  • கருத்துக்கள உறவுகள்

இது யாரப்பா புதுசா :?: ஓகோ திருமதி.ஆ வாசியோ :roll:

  • கருத்துக்கள உறவுகள்

இது யாரப்பா புதுசா :?: ஓகோ திருமதி.ஆ வாசியோ :roll:

சும்மா சொல்ல கூடாது திருமதி ஆதிவாசி சுமாரா தான் இருக்கிறா :lol::D:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.