Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலமைச்சர் பதவியால் சலிப்படைந்த தயாமாஸ்டர்! மக்களுக்குப் பணியாற்ற பதவி தேவையில்லை என்கிறார்!!

Featured Replies

daya_master.jpg

 

வட மாகாண சபைத் தேர்தலில் சாதாரண வேட்பாளராக போட்டியிட்டால், அந்த மாகாண சபையின் முதலமைச்சர் பதவியைத் தான் ஏற்கப்போவதில்லை என விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அந்நாள் ஊடகப் பேச்சாளராக பணியாற்றிய வேலாயுதம் தயாநிதி என்ற தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

 

மேலும், http://tamilworldtoday.com/?p=14838

 

 

Edited by Kashni

  • கருத்துக்கள உறவுகள்

இதுகளின்ரை கதையளும் ஒரு கதையென்று யாழில் போடுறியள்...

  • கருத்துக்கள உறவுகள்

இதுகளின்ரை கதையளும் ஒரு கதையென்று யாழில் போடுறியள்...

 

அப்பவும் அரசியல் செய்தவையளாம் இப்பவும் அரசியல் செய்யினமாம்.....

  • கருத்துக்கள உறவுகள்

பரமசிவன் கழுத்தில் பாம்பு. மகிந்தவின் காலில் இவர்கள். வித்தியாசம் இல்லை.

எட்டாப்பழம் புளிக்கும் என்றாரோ ?

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எப்போது புலிகளின் ஊடகப் பேச்சாளராகப் பணியாற்றினார்? :unsure:

புலியில இருந்த கொஞ்சம் படித்ததுகளே இப்படியென்றால் மிச்சம் எப்படி இருக்கும் ?

  • கருத்துக்கள உறவுகள்

புலியில இருந்த கொஞ்சம் படித்ததுகளே இப்படியென்றால் மிச்சம் எப்படி இருக்கும் ?

 

 

உங்களின் படிச்ச ஆட்களுக்கு நிகராகுமோ அண்ணை?
 
உ+ம்:1. முழு இலங்கையையும் பிடித்தல்
 
2. மாலைதீவை பிடித்தல்
 
3. ஒரே நாளில் அடித்து பிடித்தல்
 
நீங்கள் ஜீனியஸ் அண்ணை.

உதெல்லாம் முழு புலியில் இருந்த மாதிரி எங்களிலும் கொஞ்சம் இருந்ததால் வந்தது (அனேகம் பேர் அங்கிருந்து வந்தவர்கள் தான் )

  • கருத்துக்கள உறவுகள்

உதெல்லாம் முழு புலியில் இருந்த மாதிரி எங்களிலும் கொஞ்சம் இருந்ததால் வந்தது (அனேகம் பேர் அங்கிருந்து வந்தவர்கள் தான் )

 

பிறகு அவர்களை  மொக்காக்கி நீங்கள் கெட்டிக்காரர் என நிரூபிக்கிறீர்களாக்கும்.

புலியில இருந்த கொஞ்சம் படித்ததுகளே இப்படியென்றால் மிச்சம் எப்படி இருக்கும் ?

 

தயாமாஸ்டர் சேவையாற்ற பதவி தேவை இல்லை என்கிறார். அதற்கு பதிலாக "புலியில இருந்த கொஞ்சம் படித்ததுகளே இப்படியென்றால் மிச்சம் எப்படி இருக்கும் ?" என்பது வைக்கப்படுகிறது. புலிகளில் இருந்தவர் ஒருவர் சேவை ஆற்ற பதவி தேவை இல்லை என்றால் புலிகளை எதிர்ப்பவர் இப்படி ஒரு கருத்தை வைக்கிறார். அதாவது கருத்தை வைப்பவரின் மனம் அரசு உண்மையா பொய்யா? புலிகள் உண்மையா பொய்யா, தாங்கள் சேவையாற்ற இறங்கியதாக நினைதிருந்த நாள்கள் தன்னும் உண்மையா பொய்யா எனக்குழப்பமைகிறார்கள் என்பதை தான் காட்டுகிறது.

 

இது உண்மையில் குழப்பம் இல்லை; தனது மனதுக்கு தானே உண்மையை மறைக்கும் செயல். தனது மனதுக்கு உண்மை ஒழிப்பவன், மற்றவர்களில் குற்றம் கண்டதாகவும், அதனால் போட்டுக்கொடுத்தாகவும் எப்படி கூறமுடியும்.

 

முதலில் மனிதர்களில், ஒன்று இப்படி என்றால் மற்றதும்இப்படி இருக்கும் என்பது மேட்டுக்குடிப்பாணி தத்துவம் :D. (இது சித்தார்தன் எப்படியோ பழைய புளட் அங்கத்தவர்கள் எல்லோரும் அப்படியே என்ற உண்மையில் இருந்தும் கூட பொதுப்படையாக்க முடியாதது. :D ) இன்றைய மேற்கு நாடுகளில் இருப்போருக்கு இப்படி தத்துவங்களில் இருக்கும் பிழையை நன்றாக தெரியும். இவைதான் இனத்துவேச கருத்துக்களாக மேற்குநாடுகளில் கருதப்படுகின்றன. மேற்கு நாடுகளில் இருந்து கொண்டு ஒருவர் ஒரு இனத்தையோ ஒரு சமூகத்தையோ "இப்படி" என பெயர் சூட்டினால் அவருக்கு இத்தனை ஆண்டுகளாகியும் மேற்கு நாட்டு ஜனநாயக பாரம்பரிய அரசியலை விளங்கிக்கொள்ள முடியாமல் இருப்பது ஏமாற்றம் தருவது. அந்த சின்ன சுட்டு விபரம், ஏன் இவர்களின் இலங்கை சம்பந்தமான கருத்துக்களில் அரசியல் அறியாமையை தொடந்து வெளிப்படுத்துகிறார்கள் என்பதை புலப்படுகிறது. அதாவாது அவர்கள் எவ்வளவு காலம்தான் ஒரு நிலத்தில் வாழ்ந்தாலும், அந்த நிலத்து சமூக, அரசியல் தாற்பரியங்களில் தெளிவுபெற சங்கடப்படுகிறார்கள் என்பதே கருத்து.

 

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தமிழர்கள் எல்லோரும் புலிகள் என்றும், அவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் என்றும் கூறுவது, புலிகளில் ஒருவர் "இப்படி", எனவே எல்லோரும் "அப்படி" என்று கூறுவதற்கு சமமானது. இதனால் இப்படி கூறுபவர்கள் கோபத்தபயா எப்படியோ நாமும் அப்படி என்கிறார்கள்.

 

புலிகளில் அறுபதினாயிரத்துக்கும் மேலானவர்கள் இருந்தார்கள். அவர்களில் கருணா, பிள்ளையான், போன்றவர்கள்கள் தரத்தில் வந்து சேராதவர்கள். ஆனால் தயாமாஸ்டர் போன்றவர்கள் தரம் நிர்ணயிக்கப்படமுடியாதவர்கள்.  தயாமாஸ்டர் சிறையில் வைத்து அடித்து அடித்து ஆடவைக்கபட்டு சிங்களத்தால் அடிமையக்கப்பட்டிருப்பவர்களில் ஒருவர். அவர்களை வைத்து வெளியே இருந்த புலிகள் எப்படி இருந்தார்கள் என்று வரவிலங்கணம் செய்வது சுய இன்ப எழுத்து.

 

மேலும் தன்னைப் படித்தவனாகவும் புலிகளை படிக்காதவர்களாகவும் உருவகம் செய்ய முயல்வது நகைப்பிற்கிடமானது. அது சாதி, மத பேதம் பார்க்கும் மேட்டுக்குடித்தனமானது.இதைத்தான் சிலர் யாழில் "தமிழர்களின் மேட்டுக்குடித்தனம் " என்பார்கள். :D

 

இலங்கை அரசு உள்ளே இருக்கும் போராளிகளுக்கு தான் புனர்வாழ்வு அளிப்பதாக வெளிநாடுகளுக்கு காட்ட முயல்கிறது. அத்தோடு நின்றுவிடாமல் அவர்களை தனது அரசியலுக்கும் பயன் படுத்துகிறது.  இந்த நடிப்பில் சிலரைப் புனர்வாழ்வு பெற்று அரசியலில் இறங்குவதாக காட்ட முயல்கிறது. அரசு இதில் ஒன்றை விளங்கிக்கொள்கிறது. மேலே உள்ளது போன்று, "ஒருவர் எப்படி, எல்லோரும் அப்படி" என்று எதிலாவது விளக்கம் கூறினால் தான் செய்தி அனுப்ப முயல்பவர்கள் அதை சந்தேகிப்பார்கள் என்று விளங்கிக்கொள்கிறது. இதனால் தன்னால் புனர் வாழ்வு அளிக்கபட்டவர்களாக கூறிக்கொள்ளும் எல்லோரையும் SLFP  வலோற்காரமாக வைத்திருக்கிறதென்ற நினைப்பை குலைக்க சிலரை வலோற்காரமாக, சுயேட்சையாக அல்லது UNP பெயரிலும் இறக்க முயல்கிறது. (ஆனால் UNP யில் இருந்த சித்தார்த்தன், கருணா, தேவானந்தாவை SLFP அரசு வலோற்காரமாக தன் பக்கம் இழுத்துக் கட்டி வைத்திருக்கிறது. ஆனால் தன்னால் வலோற்காரமாக அரசியலுக்குள் இறக்கப்படும்  சிலரை UNPக்கு தள்ளிவிட முயல்கிறது. ) தயாமாஸ்டர், இப்படி UNPக்கு தள்ளிவிட முயற்சிக்கபட்டவர் ஒருவர்.

UNP ல் இன்றைய கால கட்டத்தில் திறமையான ஒரு நிர்வாகி இல்லை. இருந்திருந்தால் அரசு தயாமாஸ்டரை வலோற்காரமாக உள்ளே தள்ளிய போது அவரை ஏற்று வெளிநாடு ஒன்றுக்கு தனது பெயரில் அனுப்பிவைத்திருந்தால் அரசின் குட்டுகள் பலவற்றை அவிழ்த்திருக்கலாம். இன்றைய இந்த திரி இருந்திருக்காது.

 

Edited by மல்லையூரான்

பிறகு அவர்களை  மொக்காக்கி நீங்கள் கெட்டிக்காரர் என நிரூபிக்கிறீர்களாக்கும்.

உமா ,சுந்தரம் ,சந்ததியார் ,செந்தில் ,பாபுஜி ,காந்தன் (ஜான் மாஸ்டர் ) சித்தார்த்தன்  எல்லாம் புலியில் இருந்து வந்தார்கள் தான் .

இதில் பலர் கடைசிவரை திருந்தவில்லை .

உமா ,சுந்தரம் ,சந்ததியார் ,செந்தில் ,பாபுஜி ,காந்தன் (ஜான் மாஸ்டர் ) சித்தார்த்தன்  எல்லாம் புலியில் இருந்து வந்தார்கள் தான் .

இதில் பலர் கடைசிவரை திருந்தவில்லை .

 

நான் மற்றமாதிரியாக நினைத்திருந்தேன். உமா கூட்டத்தை விட்டு பிரிந்து போனவர்கள்தான் விடுதலை புலிகள்கள் என்று நினைத்தேன்.

 

"அதனால்தான் புளட்டை விட்டு விட்டு போனவர்கள் மட்டும்தான்  சரியாக இருந்தார்கள் என்று நினைதேன்" :D

 

 

Edited by மல்லையூரான்

நீங்கள் எப்பவும் மற்ற மாதிரி சிந்திப்பவர்  என்று எல்லோருக்கும் தெரியும் .

நீங்கள் எப்பவும் மற்ற மாதிரி சிந்திப்பவர்  என்று எல்லோருக்கும் தெரியும் .

 

நன்றி. இன்றாவது நான்தான் யாழில் உண்மையான மாற்றுக்கருத்து என்றதை ஒத்துக்கொண்டிருக்கிறீரகள். :D

 

நீங்கள் கூட புலியில் இருந்து திருந்தி தானே புளட்டுக்கு போனீர்கள். அது சரியா? அல்லது அதுவும் மற்ற மாதிரியா?

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி. இன்றாவது நான்தான் யாழில் உண்மையான மாற்றுக்கருத்து என்றதை ஒத்துக்கொண்டிருக்கிறீரகள். :D

 

நீங்கள் கூட புலியில் இருந்து திருந்தி தானே புளட்டுக்கு போனீர்கள். அது சரியா? அல்லது அதுவும் மற்ற மாதிரியா?

 

 

இவர் எப்பொழுதுமே ஓடுகாலி............

 

ஒரு இடத்தில் இருந்து பழக்கமில்லை

தற்பொழுது கனடாவில்.................??? :(  

இருண்டால் தடுமாறுவதுண்டு. ஆனால் இன்று ரொரொண்டோவில் மப்பு. அதானால் பகலை இருட்டிவிட்டது என்று என்று தடுமாறி....... அதனால்தான் தடுமாற்றம்.

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார், பழைய புலி உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு தேர்தலில் போட்டியிட அணி சேர்ப்பதாகவே அறிந்தேன்.

 

வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு எவருக்கும் சிந்தனை இல்லை. எப்போது பார்த்தாலும் அதிகாரத்தில் இருந்து கொண்டு மக்களை ஏய்க்கவே விரும்புகின்றனர்.

 

பதவியில் இருக்காமலேயே  மக்கள் சேவை ஆற்ற முடியும்.

 

மக்கள் எப்போதும் தெளிவாகவே இருப்பார்கள் என்று நம்புகின்றேன்.

வாத்தியார், பழைய புலி உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு தேர்தலில் போட்டியிட அணி சேர்ப்பதாகவே அறிந்தேன்.

 

வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு எவருக்கும் சிந்தனை இல்லை. எப்போது பார்த்தாலும் அதிகாரத்தில் இருந்து கொண்டு மக்களை ஏய்க்கவே விரும்புகின்றனர்.

 

பதவியில் இருக்காமலேயே  மக்கள் சேவை ஆற்ற முடியும்.

 

மக்கள் எப்போதும் தெளிவாகவே இருப்பார்கள் என்று நம்புகின்றேன்.

 

அதுவேதான் இலங்கையின் அரசியல்.

 

பழைய புலி உறுப்பினர் தங்கள் அடையாள அட்டைகளை  நேரத்திற்கே ஆமியிடம்  கையளித்திருந்திருக்காவிட்டால் வாக்களிக்க போய் அங்கு ஆமிகள் பார்த்துக்கொண்டு இருக்க வாக்களிப்பார்களாகும். பெண்போராளிகள் வாக்களிப்புக்கு போயோ போகாமலோ தப்ப முடியாது.

 

இது வாக்களிப்பன்று போராளிகளை,யார் யார் வந்தார்கள், யார யார் வரவில்லை என்று  கணக்கு வைக்க உதவும். 5,000 போரளிகள் விடுவிக்கபட்டு 15,000 வாக்குக்களை குடும்பங்களுடன் சேர்த்துக்கோண்டிருக்கிறார்களாயின், அரசுக்கு 15,000 வாக்கு கிடைக்காவிட்டால் போராளிகள் மட்டும்மல்ல, முழு குடும்பமுமே போட்டுக்கட்டுவார்கள். இது புனர்வாழ்வில்ல் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அடிப்படை பாடம்.  வாத்தியார் தொடர்புகொள்ளும் போது அது நினைவூட்டப்படும்.  அன்று பஸ் ஓடாவிட்டாலும் எல்லோரும் குடும்ப சமேதரராய் சென்று அரசுக்கு வாக்களித்தாக வேண்டியிருக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.