Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவுக்கு சரஸ்வதி சிலையை வழங்கிய இந்தோனேசியா!

Featured Replies

 

 

Saraswathy.jpgஇந்தோனேசியா நல்லெண்ண அடிப்படையில் அமெரிக்காவுக்கு 15 அடி உயரமுள்ள சரஸ்வதி தேவி சிலையை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. பாலி கலை நுணுக்குத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சரஸ்வதி தேவி சிலை வெண்ணிறத்தில் தங்க முலாம் பூசப்பட்டு எழிலுற காணப்படுகிறது. ஒரு கையில் ஜெப மாலையுடன் தாமரைப் பூவின் மீது அமர்ந்து சரஸ்வதி வீணை வாசிப்பது போல் தோன்றும் இந்த சிலை இரும்பினால் செய்யப்பட்டது.

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இருந்து சுமார் 2 கி.மீட்டர் தூரத்தில் மகாத்மா காந்தியின் சிலைக்கு அருகே சரஸ்வதி தேவியின் இந்த சிலையும் வைக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக இந்த சிலை இன்னும் திறந்து வைக்கப்படவில்லை.எனினும், இப்போதே ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சரஸ்வதி தேவியின் சிலையை கண்டு வியக்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

 

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=101171

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 

ஒரு கையில் ஜெப மாலையுடன் தாமரைப் பூவின் மீது அமர்ந்து சரஸ்வதி வீணை வாசிப்பது போல் தோன்றும் இந்த சிலை இரும்பினால் செய்யப்பட்டது.

 

 

ஐயகோ சரஸ்வதிக்கே புத்தி பேதலித்து ஜெபம் சொல்லுகிறாவா?  

ஐயகோ சரஸ்வதிக்கே புத்தி பேதலித்து ஜெபம் சொல்லுகிறாவா?  

 

மாத்துகருத்தா? தடுமாத்த கருத்தா?

http://www.google.com/search?q=%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF&source=lnms&tbm=isch&sa=X&ei=UwK2UdnmJ_f64AOanYDQDg&ved=0CAcQ_AUoAQ&biw=1440&bih=756

  • கருத்துக்கள உறவுகள்

 

அமெரிக்கர்களின் அறிவு கம்மியாக இருப்பதால் சரஸ்வதியை அனுப்பியிருக்கிறார்கள்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

 

அமெரிக்கர்களின் அறிவு கம்மியாக இருப்பதால் சரஸ்வதியை அனுப்பியிருக்கிறார்கள்..! :D

 

 

சரஸ்வதிக்கும் இனி பல மொழிகளும் தெரியவேண்டும் என்று நினைத்தாவோ என்னவோ...

படிக்கப்போக இப்படி விசா எடுத்திருப்பார்.. :icon_idea: 

  • கருத்துக்கள உறவுகள்

கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு !

அந்தக் கல்விக்கே தெய்வமான கலைவாணி அவள் !!

வெள்ளைத் தாமரைப் பூவில்  இருப்பவளை

அவள் பெருமை உணர்ந்தவர்

வெள்ளை மாளிகைக்கு அருகே வைத்திருப்பதில்

என்ன வியப்பு !! :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்லெண்ண அடிப்படையில் சரஸ்வதியின் சிலை கொடுத்த

இந்தோனேசியர்களுக்கு விஜயதசமி நாளன்று பொங்கலும் அவலும் கிடைக்குமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

நீங்கள் கன விடயம் கூகிள் இல்தான் படிக்கிறீர்கள்..நல்ல முன்னேற்றம், ஜெபம், ஜெபமாலை, ஜெபிக்கிறது என்பன பொதுவாக கிறிஸ்தவர் மதத்தவர் பாவிக்கிற சொற்கள்.

நீங்கள் கன விடயம் கூகிள் இல்தான் படிக்கிறீர்கள்..நல்ல முன்னேற்றம், ஜெபம், ஜெபமாலை, ஜெபிக்கிறது என்பன பொதுவாக கிறிஸ்தவர் மதத்தவர் பாவிக்கிற சொற்கள்.

அதிலையும் கூட படிக்க மறுக்கிறீர்கள்.

 

வித்தை என்ற சொல்லு வடமொழிக்கு வித்யா-வாக சென்று, வேத-வாகி மாறி தமிழுக்கு வேதமாகி வந்து கிறிஸ்தவர்களை வேதக்காரர் என்றும் சொல்வார்கள். அது அவர்கள் பைபிளை வேதம் என்று அழைப்பதால் வந்தது.

 

இந்துக்கள் ஜெபத்தை பாவிக்கும் அதே பொருளில்தான் கிறிஸ்தவர்கள் பாவிக்கிறார்கள். ஊரில் எல்லாக் கீறிதவர்களும் ஜெபமாலை பாவிப்பார்கள். ஆனால் இந்துகள் சிலர் மட்டும்தான் ஜெபமாலையை பாவிப்பார்கள்.

 

இதில் ஏதும் PhD பாடம் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு !

அந்தக் கல்விக்கே தெய்வமான கலைவாணி அவள் !!

வெள்ளைத் தாமரைப் பூவில்  இருப்பவளை

அவள் பெருமை உணர்ந்தவர்

வெள்ளை மாளிகைக்கு அருகே வைத்திருப்பதில்

என்ன வியப்பு !! :D

 

சரஸ்வதி தேவிக்கு, இப்படியெல்லாம்... லிங்க் கொடுப்பீர்கள் என்று, கனவிலும் நினைக்கவில்லை சுவி. :D  :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சொல்லுவான் இது எல்லாம் இந்த மட்டுவில் சரஸ்வதி செய்த வேலை என்று. அடுத்தமுறையும் ஒரு மட்டுவில் சரஸ்வதி வித்தியாலைய பழைய மாணவருக்கு கொடுக்காமல் தங்கடை ஆக்களுக்கு கொடுப்பம் என்று யோசிக்கிறான் போல. -யாழ்பாணம் இந்துக்கலூரியிலும் ஒரு சரஸ்வதி சிலை இருக்குதானே..எல்லாம் நம்ம பேராசியர் ஒரு விருதை வாங்கிப்போட்டு எல்லாத்தையும் சொல்லிப்போட்டார் போல கிடக்குது :icon_idea:

 

946418_488394834574839_1475166588_n.jpg

நான் சொல்லுவான் இது எல்லாம் இந்த மட்டுவில் சரஸ்வதி செய்த வேலை என்று. அடுத்தமுறையும் ஒரு மட்டுவில் சரஸ்வதி வித்தியாலைய பழைய மாணவருக்கு கொடுக்காமல் தங்கடை ஆக்களுக்கு கொடுப்பம் என்று யோசிக்கிறான் போல. -யாழ்பாணம் இந்துக்கலூரியிலும் ஒரு சரஸ்வதி சிலை இருக்குதானே..எல்லாம் நம்ம பேராசியர் ஒரு விருதை வாங்கிப்போட்டு எல்லாத்தையும் சொல்லிப்போட்டார் போல கிடக்குது :icon_idea:

 

இதென்ன ஒரே தடுமாத்தம். பேராசியர் சிவநாதனுக்கு பரிசு கிடைத்தது அவரின் மாத்துக் கருத்துக்கு. அவர் மாத்தத்தை கொண்டுவந்தாராம். இதுக்கை எதறகு Saras Vaadee என்று அவவவையும் அழைப்பான்?  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதென்ன ஒரே தடுமாத்தம். பேராசியர் சிவநாதனுக்கு பரிசு கிடைத்தது அவரின் மாத்துக் கருத்துக்கு. அவர் மாத்தத்தை கொண்டுவந்தாராம். இதுக்கை எதறகு Saras Vaadee என்று அவவவையும் அழைப்பான்?  

 

நான் சொன்னது பிழைதான். நீங்க சரிதான். இனி இப்படி செய்ய மாட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நூலகத்திலும் ஒரு சரஸ்வதி  சிலை உள்ளது !

 

நூலகத்தைப் புடம் போட்ட பின்னும் புது மேகம் போல் மிளிர்கின்றது !!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரஸ்வதி சிலையோ படமோ அன்பளிப்பாக கொடுக்கக்கூடாது என மூதாதையர்கள் சொல்வார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.