Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாராட்டிப் பழகுவோம்

Featured Replies

'பாராட்டுதல்' - என்பது மனித குணங்களில் உன்னதமானது! பாராட்டை விரும்பாத மனிதர்கள் எவரும் இல்லை. பாராட்டுபவர் - பாராட்டப்படுபவர் இருவரின் நிலையையும் பாராட்டு, உயர்த்தக் கூடியது! பாராட்டுரையைத் தலைசிறந்த 'கிரியா ஊக்கி' - என உளவியலாளர்கள் உறுதிபடச் சொல்லுவர்.

பாராட்டுதல் பலவகைப்படும். ஒரு சிறிய புன்னகை மூலம் அங்கீகரிப்பது முதுகில் தட்டிக் கொடுப்பது; கைகளைப் பிடித்துக் குலுக்குவது; வார்த்தைகள் மூலம் முகத்துக்கு நேராகப் புகழுவது - மெச்சுவது; இவை எல்லாமே பாராட்டின் பலவகைதானே!!

படிப்பதில் இடறிவிடும் மாணவன் பின் முயன்று முதலிடம் பெறுவதும், சோம்பல் கொண்ட ஊழியர் சுறுசுறுப்படைந்து பணியில் சிறப்பதும் பாராட்டின் சாதனையாகும்.

¬

வெற்றியாளர்கள் எவரை எங்கு, எப்போது பார்த்தாலும் தானாக முன்சென்று மனமுவந்து தாராளமாகப் பாராட்டுவார்கள்!

இந்தப் பாராட்டு மொழி என்பது, பல விந்தைகளைச் செய்து நம்மை வியக்க வைக்கிறது. ஆம்! சமூகத்தால் கவனிக்கப்படுகிறோம் என்பதையும், அங்கீகரிக்கப்படுகிறோம் என்ற எண்ணத்தையும் பாராட்டப்படுபவரின் மனதில் இது விதைத்து விடுகிறது. விளைவு? அவரது ஆற்றல்களும், திறமைகளும் மேன்மேலும் வளர்கிறது! தன்னம்பிக்கை தானே தழைக்கிறது!!

பாராட்டப்படாதவரின் அறிவும், ஆற்றலும் சுருங்கிப் போகிறது. மனச்சோர்வும் உண்டாகிவிடுகிறது.

பாராட்டுகளால் நட்பும், உறவும் பலப்படுகிறது. அன்பு வெளிப்படுகிறது. நல்வாய்ப்பு அதிகரிக்கிறது. பிறர் பாராட்டில் மனம் மகிழாத மனிதர் எவருமில்லை என அடித்துச் சொல்லலாம்!

சின்னச் சின்ன செயல்கள் செய்தாலும் பாராட்டுவது அவசியம். அதன்மூலம் பெரிய செயல்களைச் செய்ய ஊக்கப்படுத்திட முடியும்.

பாராட்டுவதைத் தள்ளிப் போடவோ, காலம் கடத்தவோ கூடாது. பாராட்டுவதை உடனே செய்ய வேண்டும். பாராட்டுவதில் தயக்கம் காட்டக்கூடாது.

நம்மைச் சுற்றி உள்ளவர்கள் தேர்வில் வெற்றி பெற்றாலும், தேர்தலில் வெற்றி அடைந்தாலும், வியாபாரத்தில் முன்னேற்றம் அடைந்தாலும், இசை, கவிதை, கட்டுரை, பேச்சு, ஓவியம், நடனம் என நுண்கலைகளில் சாதித்தாலும், நாம் மனமுவந்து அவர்களைப் பாராட்டி விட வேண்டும். அப்படிப் பாராட்டும் பண்பைப் பெற்றிருக்க வேண்டும். வளர்த்துக் கொள்ளவும் வேண்டும்.

குறை கூறி வளர்க்கப்படும் குழந்தை குற்ற மனப்பான்மையுடனும், தாழ்வு மனப்பான்மையுடனும் வளர்கிறது. பாராட்டி வளர்க்கப்படும் குழந்தை புத்திசாலியாகவும், தன்னம்பிக்கைப் பண்பில் சிறந்தாகவும் வளர்கிறது.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஓயாமல் திட்டிக் கொண்டும், குறை கூறிக் கொண்டும் இருந்தால், அந்தப் பிள்ளைகளின் அறிவு வளர்ச்சி மழுங்கிப் போய்விடும். சில நேரங்களில் அவர்களை விரக்தி மனம் கொண்டவர்களாக மாற்றிவிடும். மாறாகப் பிள்ளைகளைப் பெற்றோர்கள் தட்டிக் கொடுத்து, அவர்கள் திறமையைப் பாராட்டிட வேண்டும். இடை இடையே அன்பு மொழிகளால் கண்டித்து வளர்த்தால், பிள்ளைகளின் மனதில் தன்னம்பிக்கை தானே துளிர்விடும்! சாதனைகள் செய்திடத் தூண்டுகோலாய் அப்பாராட்டு அமையும். என குழந்தை மருத்துவ நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மொத்தத்தில், பாராட்டுரைகள், நம்பிக்கையை வளர்க்கும்; பாதுகாப்பு உணர்வைப் பெருக்கும்;; கற்பதைத் தூண்டும்; நல்லெண்ணத்தை மனதில் பதியமிடும்; பிறருக்கு உதவும் மனப்பாங்கை ஏற்படுத்தும்; மனித நேயத்தை ஊட்டும்; மானிட உறவுகளைத் தழைத்தோங்கச் செய்யும்!

பிறருடைய நிறைகளைப் பலர் முன்னிலையில் பாராட்ட வேண்டும். குறைகளையோ, தனிமையில் நாசுக்காகச் சுட்டிக்காட்ட வேண்டும்.

சமுதாயத்தில் பாராட்ட வேண்டியவர்களை, நாம் பாராட்டத் தவறினால், நல்லது செய்வதற்கான மனம் படைத்தவர்கள் சற்று ஒதுங்கி விடும் சூழல் ஏற்படும். எனவே, நல்ல செயல் புரிபவர்களை உடனடியாகப் பாராட்ட வேண்டியது மிக மிக அவசியமாகும்.

'பணம் செய்யாததைப் பாராட்டு செய்யும்' - என்பது புதுமொழி. பாராட்டுகளைப் பெற்றவர்கள் மீண்டும், மீண்டும் பாராட்டைப் பெற வேண்டும் என்ற உந்துதலால் தங்கள் பணிகளை மேலும் சிறப்பாக செய்வார்கள்! இது, நிர்வாக மேலாண்மைத் துறையினர் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ள அப்பட்டமான உண்மை!

நமது குடும்பத்தினர், குழந்தைகள், நண்பர்கள், உடன் பணிபுரிவோர் என அனைத்து நிலையில் உள்ளவர்களையும் நாம் பாராட்டிப் பழகுவோம். மனித உறவுகளை மாண்புற வளரும்படி செய்வோம்!

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=23867:2013-05-10-06-51-14&catid=44:general&Itemid=123

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்குப் பாராட்டுக்கள்,வந்தி! :D

பிறருடைய நிறைகளைப் பலர் முன்னிலையில் பாராட்ட வேண்டும். குறைகளையோ, தனிமையில் நாசுக்காகச் சுட்டிக்காட்ட வேண்டும்.

பதிவுக்கு நன்றிகள் .

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு

பாராட்ட என்றும் முதலாவது ஆளாக இருப்பேன்

சொந்த வாழ்விலும் சரி

யாழிலும் சரி.

ஆனால் எதை வளர்த்துவிடணும் என்பதில் கொஞ்சம் அக்கறையாக தற்பொழுது இருப்பதுண்டு

காரணம் அனுபவம்தான்...........

நல்ல பதிவுக்கு பாராட்டுக்கள் அண்ணா!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு.. குறிப்பாக குழந்தைகளின் சின்னச்சின்ன முயற்சிகளையும், ஆக்கங்களையும் மனம் திறந்து பாராட்ட வேண்டும்.. ஒரு கட்டத்தில் உங்களைக் குளிர்மைப் படுத்துவதற்காகவே அதிக முயற்சிகளை எடுப்பார்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான இணைப்பு வந்தி.
வீட்டில் பிள்ளைகளுடனோ, மனைவியிடமோ, அயலவர்களிடமோ, வேலையிடத்திலோ...
பாராட்ட வேண்டிய விடயங்களை உடனே... பாராட்டி விடுவதால், அனைவரும் என்னுடன் சுமூகமான உறவைக் கொண்டுள்ளார்கள்.
உதாரணத்துக்கு... பக்கத்து வீட்டுக் கிழவி நாய்க் குட்டியுடன் போனால்.... கிழவியை மறித்து, நாய் வடிவாக இருக்கு.. அதுக்கு, எத்தனை வயது என்று கேட்டு கதையை... ஆரம்பித்தால், அரை மணித்தியாலம் போவதே... தெரியாது. பக்கத்து வீட்டுக்காரிக்கும் சந்தோசமாக இருக்கும். :)

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான இணைப்பு வந்தி.

வீட்டில் பிள்ளைகளுடனோ, மனைவியிடமோ, அயலவர்களிடமோ, வேலையிடத்திலோ...

பாராட்ட வேண்டிய விடயங்களை உடனே... பாராட்டி விடுவதால், அனைவரும் என்னுடன் சுமூகமான உறவைக் கொண்டுள்ளார்கள்.

உதாரணத்துக்கு... பக்கத்து வீட்டுக் கிழவி நாய்க் குட்டியுடன் போனால்.... கிழவியை மறித்து,

நாய் வடிவாக இருக்கு.. அதுக்கு, எத்தனை வயது என்று கேட்டு கதையை... ஆரம்பித்தால், அரை மணித்தியாலம் போவதே... தெரியாது. பக்கத்து வீட்டுக்காரிக்கும் சந்தோசமாக இருக்கும். :)

 

நாய் வடிவு  சரி

அவா................... :D 

சிறி  மினக்கெட்டால்........

வடிவாகத்தான் இருக்கும் :D 

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி வந்தி.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவனின் வாழ்க்கையில்அவனுக்குக்  கிடைக்கும் பாராட்டுக்கள் என்பது அவனின் 

உழைப்பிற்கும் சிந்தனைக்கும் கிடைக்கும் ஊதியம்.அந்த ஊதியமே பின்னர் அவனின் 

முதலீடாக மாறி  அவனை உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்கின்றது.

வந்திக்கும் பாராட்டுக்கள் :D

இணைப்பிற்கு நன்றி வந்தி ........................உண்மையில் எனக்கு தொலைபேசியில் ,ஸ்கைப்பில் ,நீண்ட நேரம் பேசுவது பிடிக்காது .....................அதனால்தான் என்னை என் சொந்தங்கள் யாருக்கும் பிடிக்காது ..........................யதார்த்தமான ,பயனுள்ள ஒரு விடயம் பற்றி பேசுவதற்கும் , சும்மா நடிப்பிற்கு பேசுவதற்கும் இடைவெளி உள்ளது ..........எதை என் மனம் ,இதயம் ஜீரணிக்கும் என்பதை நான் அந்த சந்தர்ப்பங்களில் காட்டுவதுண்டு .......அதுதான் பிரச்னை .............................ஆனால் ஒரு மனிதனின் ஒரு சிறிய ஆக்கத்தை பாராட்ட வேண்டும் என்பது என் மன ஆதங்கம் ....................அதை செய்யாவிடின் தர்ம சங்கடம் ........................அந்த வகையில் ஒரு மனிதனின் ஆரோக்கியமான வாழ்வு அவனின் நல்ல விடயங்களை இன்னொரு மனிதன் பாராட்டி தூக்கி வைப்பதே ஆகும் ...........நன்றி  :) 

  • தொடங்கியவர்

கட்டிப்பிடி வைத்தியம் மாதிரி (எல்லோரையும் கட்டிப்பிடிக்க முடியாது :wub: ), பாராட்டுவதும் ஒரு சிறந்த முறை, இரண்டு பேரின் மனமும் ஒரு மகிழ்ச்சியை எட்டுகின்றது.

 

அனைவருக்கும் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான இணைப்பு வந்தி.

வீட்டில் பிள்ளைகளுடனோ, மனைவியிடமோ, அயலவர்களிடமோ, வேலையிடத்திலோ...

பாராட்ட வேண்டிய விடயங்களை உடனே... பாராட்டி விடுவதால், அனைவரும் என்னுடன் சுமூகமான உறவைக் கொண்டுள்ளார்கள்.

உதாரணத்துக்கு... பக்கத்து வீட்டுக் கிழவி நாய்க் குட்டியுடன் போனால்.... கிழவியை மறித்து, நாய் வடிவாக இருக்கு.. அதுக்கு, எத்தனை வயது என்று கேட்டு கதையை... ஆரம்பித்தால், அரை மணித்தியாலம் போவதே... தெரியாது. பக்கத்து வீட்டுக்காரிக்கும் சந்தோசமாக இருக்கும். :)

பிழைக்கத் தெரியாத பயலாக் கிடக்கு! :o

 

கிழவி வடிவு எண்டு சொல்லியிருந்தால், நாயும் இலவசமாக் கிடைச்சிருக்கும்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மக்களே !ஏற்கனவே பாராட்டி  பழக்கமில்லாதவர்கள் உணர்ச்சிவசப்பட்டு உடனே பாராட்டி விடாதீர்கள் .

இப்பதான் நான் இதப் படிச்சுட்டு  முதல்ல வீட்டில இருந்து ஆரம்பிப்பம் என்று  மனிசியை பாராட்ட என்னை ஒரு மாதிரிப் பாத்திட்டுப்  போறாள் . :huh:

எதுக்கும் இனி அயலிலிருந்து தொடங்குவம் !! :D

  • கருத்துக்கள உறவுகள்

மக்களே !ஏற்கனவே பாராட்டி  பழக்கமில்லாதவர்கள் உணர்ச்சிவசப்பட்டு உடனே பாராட்டி விடாதீர்கள் .

இப்பதான் நான் இதப் படிச்சுட்டு  முதல்ல வீட்டில இருந்து ஆரம்பிப்பம் என்று  மனிசியை பாராட்ட என்னை ஒரு மாதிரிப் பாத்திட்டுப்  போறாள் . :huh:

எதுக்கும் இனி அயலிலிருந்து தொடங்குவம் !! :D

 

முன் கூட்டியே  வாழ்த்துக்கள் அண்ணா

வாற மாதம் அந்தப்பக்கம் வரும்போது பலாபலனை  நேரில் தெரிந்து கொள்கின்றேன் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.