Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழருக்கான குரல் ஒன்று ஓய்ந்து போனது

Featured Replies

மணிவண்ணன் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டடாராம் செய்தி கேட்ட கணம் எங்கள் குடும்ப உறவொன்றை இழந்த உணர்வு.
Manivannan.JPG
 
இயக்குனராக வில்லனாக சிறந்த குணச்சித்திர நடிகராக நகைச்சுவை நடிகராக இன உணர்வாளராக ஈழத்தழிழருக்கான குரலாக உலகத்தமிழர் முன் அறிமுகமான அற்புதமான கலைஞன் ,  மனிதநேயம்மிக்க மனிதன்.

2001ம் ஆண்டு ஐபீசி வானொலியும் ரீரீஎன் தொலைக்காடசியும் இணைந்து சுவிற்சர்லாந்தில் நடாத்தியபுத்தாண்டே வருக என்ற அந்த நிகழ்வுக்காய் திரு. மணிவண்ணன் அவர்கள் வந்திருந்தார். அப்போது ஐபிசி தமிழின் சுவிஸ் செய்திப்பிரிவில் நான் பணியாற்றி வந்ததால் அவரது வரவு பற்றிய செய்தியை ஐபிசி தமிழ் ஊடாக எடுத்து வரவேண்டிய பணி எனது பணியாக இருந்தது. திரைத்துறை சார்ந்த ஒரு கலைஞரின் வரவை புகழ்ந்து சொல்லக்கூடிய மனநிலையில் நான் இருக்கவில்லை. அப்போது என்னோடு தொடர்பு கொண்ட அன்றைய ஐபிசியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் ஒருவரான பரா பிரபா அண்ணா மணிவண்ணன் அவர்களின் தழிழுணர்வு பற்றியும் ஈழத்தமிழர்பால் அவர்கொண்ட அன்பு ஆதரவுபற்றியும் விளக்கிக் கூறினார். அன்றுதான் அவரை அவர் திரைத்துறையையும் கடந்து ஒரு மனிதநேயம்மிக்க தமிழின உணர்வாளனாகக் கண்டேன்.

புத்தாண்டு நிகழ்வுக்காய் சுவிஸ் வந்த அவரை நிகழ்வுநாளன்று கவனிக்கின்ற பொறுப்பு எனக்கு இடப்பட்டிருந்தது. முழுநாளும் அவரோடு இருக்கக்கூடிய வாய்பு தமிழ் தமிழினம் திரையுலகம் என பல விடயங்கள் பற்றி நீண்டநேரம் உரையாடக்கூடிய வாய்ப்பு. மிகவும் அன்பான மனிதர். மனிதநேயம் மிக்க மனிதர். நிகழ்வு நாளன்று அவரது உடல்நிலை சரியில்லை ஆனபோதும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இசைவாக பல மணிநேரம் மேடையில் கழித்ததோடு மட்டுமல்லாமல் இளையதலைமுறை ரசிகர்களின் விருப்புக்கிசைவாக அவர்களோடு இணைந்து நடனமொன்றினையும் வழங்கியிருந்தார். திரையுலகிலிருந்து வரும் பலரும் நிகழ்வு நேரம் வரை எமக்கு மண்டபத்திற்கு அருகே நாம் ஓய்வெடுப்பதற்கு கண்டிப்பாக நட்சத்திரவிடுதில் அறை ஒதுக்க வேண்டும் என்று அடம்பிடிப்பவர்கள் மத்தியில் இவர் எங்களில் ஒருவராய் அந்த நிகழ்வுநாளில் ஒருங்கிணைந்திருந்தார்.

அநேகமாக அந்த நிகழ்வுக்குப் பின்னர்தான் அவரின் தமிழ் இன உணர்வும அறியப்பட்டு ஈழத்தமிழரின் அன்புக்குரியவராகவும் மாறிப்போனார். இராமேஸ்வரம் திரைப்படத்தில் ஈழத்தமிழனாகவே மாறிப்போனார்.

புத்தாண்டு நிகழ்வினைத் தொடர்ந்து மறுநாள் சுவிற்சர்லாந்து வாழ் கலைஞர்களுடனான சந்திப்பு ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. சுவிற்சர்லாந்து வாழ் ஈழத்தமிழர் பலரும் திரைத்துறையில் கால் பதிக்கும் நோக்கோடு குறும்படங்களை எடுக்கத் தொடங்கியிருந்த காலம். பல குறும்பட இயக்குனர்கள் பல நடிகர்கள் என பலரும் அந்த ஒன்றுகூடலில் பங்கேற்றிருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களின் கருத்து நாங்கள் எடுக்கிற படங்களை மக்கள் விரும்பிப் பாக்கினம் இல்லை என்ற குற்றச்சாட்டை மக்கள் மீது வைத்திருந்தார்கள். அவர்களுக்கு தெளிவான விளக்கங்களை வழங்கியிருந்தார். மக்கறைக் குறை சொல்ல வேண்டாம் மக்கள் எதை விரும்புகின்றார்கள் என்பதை நாடி பிடித்துப் பார்த்து அவர்களுக்கு தேவையானதை கொடுப்பதுதான் கலைஞர்களான எமது கடமை என தெளிவுபடுத்தினார். நிச்சயமாக அவர் போன்றோரின் வழி காட்டல்களும் இன்றைய புலம்பெயர் ஈழத்தமிழரின் வெற்றிப்பாதை நோக்கிய திரைத்துறை முயற்சிகளுக்கு சான்றாக நிற்கின்றது.

ஒரு அற்புதக்கலைஞனை இனஉணர்வாளனை மனிதநேயம் மிக்க மனிதனை எங்கள் உறவை இழந்து நிற்கின்றோம். அவர் ஆத்மா அமைதியாய் உறங்க எமை ஆளும் சக்தியும் இயற்கையும் துணை நிற்கட்டும்.

 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மணிவண்ணன் ஐயாவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

மறைந்த தோழர் மணிவண்ணணை 1983 ல் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் மறைந்த தோழர் விடியல் சிவா.மணிவண்ணனை ஒரு இயக்குனராக நடிகராக கதாசிரியராகவே பலரும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.ஆரம்பகாலத்தில் அவர் புரட்சிகர பொதுவுடமை இயக்கத்தின் செயற்பாட்டாளராக இருந்தவர் என்பது பலருக்கு தெரியாது.
சினிமாவுக்கு சென்று பெயரும் புகழும் பெற்றும் கூட அவர் எழிமையான மனிதராகவே இருந்தார்.ஒரு சமூக செயற்பாட்டாளனுக்கு இருக்கக் கூடிய போர் குணம் என்பது அவரிடம் இருந்தது.1985க்கும் 1990 க்கும் இடைப்பட்ட காலத்தில் ஈழப் போராளிகளுக்கு இயக்க வேறுபாடின்றி விளம்பரமின்றி தன்னாலான உதவிகளை அவர் செய்திருக்கிறார்.அவருடைய உதவி கிடைத்திருக்காவிட்டால் பல்வேறு மாற்று இயக்க தலைமைகளாலும் நடுத் தெருவில் விடப்பட்ட நூற்றுக் கணக்கான போராளிகள் பட்டிணி கிடந்து செத்திருப்பார்கள்.அல்லது தெருவில் பிச்சை எடுத்திப்பார்கள்.
2004ம் ஆண்டு அவர் வன்னிக்கு வந்த போது கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு அழைத்துச் சென்று காண்பிக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைந்திருந்தார்கள்.
நாங்கள்அங்கு சென்ற போது அந்த துயிலும் இல்ல வாசலிலேயே செருப்பை கழற்றி வைத்துவிட்டார்.
நாங்கள் பரவாயில்லை செருப்போடு வாருங்கள் என்று கூறியபோது 'இது வீரத்தின் விளைநிலம்.தியாகத்தால் புனிதப்பட்ட மண்.அதற்கு நான் செலுத்தம் மரியாதை இது' என்று கூறிவிட்டார்

'பயிர் முளைத்த வயலுக்குள் யாராவது செருப்பு போட்டுக்கொண்டு நடப்பார்களா? இது விடுதலைப்பயிர் முளைத்திருக்கும் புனித மண்.அதை செருப்புக் காலால் மிதிக்க கூடாது என்றும் கோவிலுக்குள் போகும் போது ஏன் செருப்பை வாசலில் கழற்றி வைத்து விட்டுச் செல்கிறோமே அது போல் தான் இதுவும்' என்று கூறிவிட்டார்.
பகட்டும் ஆட்பரமும் சுயவிளம்பரங்களும் நிறைந்த மாய உலகம் என்றும் கனவுத் தொழிற்சாலை என்றும் வர்ணிக்கப்படும் சினிமா துறையில் இனமான உணர்வோடு பயணித்த தோழர் மணிவண்ணனின் இழப்பு உண்மையில் ஈழத்தமிழர்களான எமக்கு பேரிழப்பாகும்.
தோழர் மணிவண்ணனுக்கு எனது வீர வணக்கங்கள் உரித்தாகட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி   மயூரன்

 

அவர் வாழ்ந்த வாழ்க்கையை  அவரது இறுதி  அஞ்சலியில் வரலாற்றுப்பதிவாக பதியக்கண்டோம்

  • கருத்துக்கள உறவுகள்

மணிவண்ணனின் இறப்புச் செய்தி, குடும்ப உறவை இழந்த உணர்வையே... ஏற்படுத்துகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!!!!

அனுபவங்களை பகிர்ந்துகொண்ட மயூரன் அண்ணா மற்றும் நவம் அண்ணாவுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மயூரன் , நவம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.