Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் மன்னார் ஆயருக்கும் வித்தியாசம் கிடையாது! இலங்கை அரசாங்கம்

Featured Replies

Bishop_LTTELearder.jpg

வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக மன்னார் பேராயர் வணக்கத்திற்குரிய ராயப்பு யோசேப்பு தெரிவித்த கருத்துக்களுக்கு இலங்கை அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

மேலும் http://tamilworldtoday.com/?p=17941

இருவரும் மக்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்படுவதை தடுக்க முனைந்தவர்கள் - இதில் வித்தியாசம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வாயைத் திறந்தாலே ஜனநாயக விரோதச் செயலாம்.. :blink:

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு பிரபாகரனையும் பிடிக்கவில்லை

பாதரையும் பிடிக்கவில்லை என்றால் வெறி  பிடித்தவர் எவர் என்பதை எல்லோராலும  புரிந்து கொள்ளமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தான் சிறீலங்கா அரசாங்கம் குமுதம் வாசிக்க வெளிக்கிட்டிருக்குது. ஆறு வித்தியாசப் பக்கமும் போயிருக்காங்க..! :)

உண்மை சிறிலங்கா சொல்வது உண்மை ....................உண்மையை பேசுபவர்களை ஒரே பார்வையில் பார்ப்பது உண்மை ............................புலிக்கொடியும் சிலுவையும் ஒன்றே என்று சிலுவையை தெரிந்த இந்த தமிழன் சொல்வதும் உண்மை ................

  • கருத்துக்கள உறவுகள்

Monk%2Bin%2BPolice%2BVan.jpg

 

மன்னார் ஆயர், தனது மக்களுக்காக கருத்தை தெரிவிப்பது வாழ்த்த வேண்டிய விடயம்.
ஸ்ரீலங்கா தலதா மாளிகை மகாநாயக்க‌ புத்த‌ பிக்குக‌ள், செய்யாத, சொல்லாத‌ அர‌சிய‌லையா ம‌ன்னார் ஆய‌ர் செய்து விட்டார்.
இந்த‌ப் பிக்குக‌ள் தான்... ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள் என்று, உண்மையை.. ம‌றைக்கும், ஸ்ரீலங்காவின் போலி வேடம், மறையும் நாள் வெகு தூரத்தில்லில்லை.
ஸ்ரீலங்கா அரசு, மன்னார் ஆயரைப் பற்றித் தெரிவித்த கருத்தை, வத்திக்கான் பாப்பரசரிடமும் தெரிவிக்க வேண்டியது எமது கடமை.
 

Monk%2Bin%2BPolice%2BVan.jpg

 

மன்னார் ஆயர், தனது மக்களுக்காக கருத்தை தெரிவிப்பது வாழ்த்த வேண்டிய விடயம்.

ஸ்ரீலங்கா தலதா மாளிகை மகாநாயக்க‌ புத்த‌ பிக்குக‌ள், செய்யாத, சொல்லாத‌ அர‌சிய‌லையா ம‌ன்னார் ஆய‌ர் செய்து விட்டார்.

இந்த‌ப் பிக்குக‌ள் தான்... ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள் என்று, உண்மையை.. ம‌றைக்கும், ஸ்ரீலங்காவின் போலி வேடம், மறையும் நாள் வெகு தூரத்தில்லில்லை.

ஸ்ரீலங்கா அரசு, மன்னார் ஆயரைப் பற்றித் தெரிவித்த கருத்தை, வத்திக்கான் பாப்பரசரிடமும் தெரிவிக்க வேண்டியது எமது கடமை.

 

சிறி அண்ணா நான் ஒரு கத்தோலிக்கன் என்றாலும் எனக்கு உந்த வத்திக்கான் எதிலும் நம்பிக்கை இல்லை .............ஏனனில்  எமது [மனித மாண்பு] விடயத்தில் எந்த குரலும் ,நடவடிக்கையும் கொடுக்கவில்லை ,எடுக்கவில்லை .....................நான் அறிந்த ,என் மனதில் உள்ள உண்மையை  [கிறிஸ்துவை  ] இவர்கள் விட்டு விலகி பல காலமாச்சு ..........அதனால் உண்மையை யார் பேசினாலும் ,செய்தாலும் அவர்களில் நான் வணங்கும் அந்த கடவுளை பார்க்கிறேன் ......................

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணா நான் ஒரு கத்தோலிக்கன் என்றாலும் எனக்கு உந்த வத்திக்கான் எதிலும் நம்பிக்கை இல்லை .............ஏனனில்  எமது [மனித மாண்பு] விடயத்தில் எந்த குரலும் ,நடவடிக்கையும் கொடுக்கவில்லை ,எடுக்கவில்லை .....................நான் அறிந்த ,என் மனதில் உள்ள உண்மையை  [கிறிஸ்துவை  ] இவர்கள் விட்டு விலகி பல காலமாச்சு ..........அதனால் உண்மையை யார் பேசினாலும் ,செய்தாலும் அவர்களில் நான் வணங்கும் அந்த கடவுளை பார்க்கிறேன் ......................

 

தமிழ்ச்சூரியன், மன்னார் ஆயர் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தற்கு...

சிங்களம் தனது வழக்கமான பாணியில்... துள்ளிக் குதித்ததை,

அந்தத் தலைமையும்... விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதற்காகவே... வத்திக்கானை குறிப்பிட்டேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருவரும் தன்மானத்தமிழர்கள்  - பெரும் ஒற்றுமைதான்  

  • கருத்துக்கள உறவுகள்

"பிரபாகரன் ஓர் போராளி நான் ஓர் ஆன்மீகவாதி" கெஹலியவின் கருத்துக்களுக்கு மன்னார் பேராயர் கண்டனம்

22 ஜூன் 2013

mannar%20bishop_CI.jpg

 

ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் கருத்துக்களுக்கு மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை கண்டனம் வெளியிட்டுள்ளார்.

வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மன்னார் ஆயரின் நடவடிக்கைகளை அமைச்சர் கெஹலிய கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

மன்னார் பேராயரை அமைச்சர் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஒப்பீடு செய்திருந்தார்.

எனினும், இவ்வாறான கருத்துக்கள் கண்டிக்கப்பட வேண்டியவை என பேராயர் இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார்.

நபர்களின் கருத்து நிலைப்பாடுகள் குறித்து ஊடகங்களில் தகவல் வெளியிடும் போது மிகவும் நிதானமாக செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

காணி காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படாவிட்டால் வட மாகாணசபைத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கக் கூடாது என தாம் ஒருபோதும் கோரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் தம்மிடம் விபரங்களை கேட்டறிந்து அதன் பின்னரே கருத்து வெளியிட்டிருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தகவல்களை எங்கிருந்து பெற்றுகொண்டார் என்பதனை ஊடக அமைச்சர் அம்லப்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிரபாகரன் ஓர் போராளி எனவும், தாம் ஓர் ஆன்மீகவாதி என்வும் அதனை ஊடக அமைச்சர் நினைவில் நிறுத்தி ஒப்பீடுகளை செய்ய வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமாதானம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே தமது நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தம்மை நேரடியாக தொடர்பு கொள்ள முடியாவிட்டால் பேராயர் சம்மேளனத்தின் ஊடாக தொடர்பு கொண்டு கருத்துக்களை வெளியிட்டிருக்க வேண்டுமென பேராயர் ஜோசப் இராயப்பு ஆண்டகை தெரிவித்துள்ளார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/93194/language/ta-IN/article.aspx

ஆயர் அசல் பயங்கரவாதிதான்.

 

வெளிநாடுகளில் சம்பந்தருக்கு தன்னுடைய அரசியல் பலத்தை வைத்து ஏலாத அளவுக்கு ஆயர் தன்னுடைய தனிமனித தொடர்புகளை வைத்து இலங்கையின் பலத்தை கறையான் அரிப்பது மாதிரி அரித்து எடுத்துவிட்டார். 

 

உலகத்தின் மிக மோசமான ஏவல் பேயாக நடந்து கொள்ளும் பதியுதினை ஆயர் மீது ஏவிவிட்டார்கள். பயங்கரவாத சட்டத்தின் கீழ் LLRC யின் முன் பயங்கரவாதமாக 150,000 இறந்தார்கள் என்று கூறினர் என்று வழக்குப்போட்டர்கள். ஆனாலும் வெளிநாடுகள் ஆயரைத்தான் நம்புகின்றன. 

 

இதில் ரம்புக்க தனது தலைமை "Three Stooges" முகத்தைத்தான் காட்டினார். வெளிநாடுகள் அவரை யார் என்பதை இப்போது சரியாக தெரிந்து வைத்திருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
மேற்கு நாடுகள் ஆயர் சொல்வதை தான் நம்புவார்கள். ஹெகலிய பற்றி அதிகம் அலட்டிக் கொள்ள தேவை இல்லை.
 
  • கருத்துக்கள உறவுகள்

 

மேற்கு நாடுகள் ஆயர் சொல்வதை தான் நம்புவார்கள். ஹெகலிய பற்றி அதிகம் அலட்டிக் கொள்ள தேவை இல்லை.

 

 

 

அப்படிச்சொல்லமுடியாது நுணா

முதலில் அவரும் தமிழன் 

அடுத்துத்தான் மற்றதெல்லாம்............. :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.