Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூதூர் சமர்... தமிழக செய்திகள்- சொல்வது...!

Featured Replies

புலிகள் பலமுனை தாக்குதலில் திணறும் இலங்கை படைகள் இந்திய உதவி கோரிக்கை?

ஆகஸ்ட் 03, 2006

கொழும்பு:

திரிகோணமலை பகுதியில் இலங்கை ராணுவத்தினரும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது ஆர்ட்டிலரி, மார்ட்டர் குண்டுகள் தாக்குதலை ராணுவம் தொடர்ந்து நடத்தி வருகிறது.

அதே நேரத்தில் ராணுவத்தினரை பல முனைகளிலும் இருந்து தாக்கி அவர்களை புலிகள் நிலைகுலைய வைத்து வருகின்றனர். திரிகோணமலையில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ராணுவம் ஊடுருவ முயன்று வரும் நிலையில் ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ஊடுருவி புலிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனால் படைகளை பல இடங்களுக்கும் பிரித்து அனுப்ப வேண்டிய நிலைக்கு ராணுவம் தள்ளப்பட்டுள்ளது.

புலிகளின் பதிலடியை ராணுவத்தால் சமாளிக்க முடியவில்லை என பெரும்பாலான நாட்டு தூதர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது. தேவையில்லாமல் அவர்களது பகுதிக்குள் ராணுவம் நுழைந்துவிட்டு அல்லாடி வருவதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். புலிகளின் எதிர் தாக்குதல் எதிர்பார்த்ததை விட மிகத் தீவிரமாக இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ராணுவத்தின் தரப்பில் ஏராளமான உயிர்ச் சேதம் ஏற்பட்டு வருகிறது. ஆனால், சாவு எண்ணிக்கையை இலங்கை அரசு குறைத்தே வெளியில் சொல்லி வருகிறது. திரிகோணமலை கடற்படை முகாம் மீது விடுதலைப் புலிகள் பீரங்கித் தாக்குதல் நடத்தியதோடு, அதே வேகத்தில் பீரங்கிகளை மறைவான இடத்துக்கும் கொண்டு சென்றுவிட்டனர். இந்த பீரங்கிகளை கடந்த காலத்தில் இலங்கை ராணுவத்தோடு நடத்திய போர்களில் புலிகள் கைப்பற்றியவை என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் முட்டூர் பகுதியை ராணுவம் புலிகளிடம் இழந்து வருவதாகத் தெரிவதாக ராய்ட்டர்ஸ் கூறுகிறது.

அரபிக் கல்லூரி மீது விழுந்த குண்டு10 பேர் பலி:

முட்டூரில் ராணுவத்தினர் மீது புலிகள் வீசிய ஆர்ட்டிலரி குறி தவறி குண்டு அரபிக் கல்லூரியைத் தாக்கியதில் அங்கிருந்த 10 பேர் பலியாயினர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் பொது மக்களாவர்.

இந்திய உதவி கோரும் இலங்கை?:

இதற்கிடையே விடுதலைப் புலிகள் தாக்குதலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தப்ப முயலும் இலங்கை ராணுவத்திற்கு இந்திய அரசு உதவக் கூடாது என்று தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திரிகோண மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக தமிழருக்கு எதிரான இனப் படுகொலை நடத்தப்பட்டு வருகிறது.

இதில் பல நூறு தமிழர்களைக் கொன்று குவித்தும், தமிழர் சொத்துகளை சூறையாடியும், ஆயிரக்கணக்கான தமிழர்களை அகதிகளாக தமிழ்நாட்டிற்கு துரத்தியடித்தும் வருகின்றனர்.

இப்படி அட்டூழியம் புரிந்து வரும் இலங்கை ராணுவத்தினர், விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கப்பலில் ஏறித் தப்பியோட முயன்ற போது புலிகள் முற்றுகைக்கு ஆளாகித் தவிக்கின்றனர்.

கப்பலையும் அதிலுள்ள இலங்கை ராணுவத்தினரையும் காப்பாற்ற உதவுமாறு இந்திய அரசுக்கு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த செய்தி உண்மையாயின் கொலை வெறியர்களான இலங்கை ராணுவத்திற்கு உதவி புரிவது மேலும் தமிழர்களைக் கொன்று குவிக்க ஊக்கமளிப்பதாகிவிடும்.

அவ்வாறு இந்தியா உதவுமானால் ஒட்டுமொத்த தமிழருக்கு எதிரான நடவடிக்கையாக கருத நேரிடும் என எச்சரிக்க விருப்புகிறேன் என அவர் கூறியுள்ளார்.

நார்வே தூதர் வருகை:

இந் நிலையில் நார்வே அமைதித் துõதர் எரிக் சோல்ஹைம் இன்று இலங்கை வருகிறார். இலங்கை அரசுடனும், விடுதலைப் புலிகளுடனும் அவர் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார்.

கோவைஇலங்கை போலீசுக்கு பயிற்சி தொடக்கம்:

இந் நிலையில் இலங்கை ஆயுதப் படை போலீசாருக்கு கோவை மத்திய ஆயுதப்படை மையத்தில் பயிற்சி தொடங்கியுள்ளது.

கோவை அருகே உள்ள குருடம்பாளையத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) பயிற்சிக் கல்லூரி உள்ளது. தமிழ்நாட்டில் கோவை மற்றும் மத்திய பிரதேசம், மராட்டிய மாநிலம் ஆகிய 3 மாநிலங்களில் இந்த பயிற்சி மையங்கள் உள்ளன.

சப்இன்ஸ்பெக்டர்கள் முதல் துணை கண்காணிப்பாளர் வரை உள்ளவர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. வெடிகுண்டுகளை கண்டறியந்து செயல் இழக்கச் செய்வது, கண்ணி வெடிகளை அகற்றுதல், ராக்கெட் லாஞ்சர்களை இயக்குவது, நவீன துப்பாக்கிகளை கையாள்வது உள்பட நவீன பயிற்சிகள் இங்கு மத்திய ஆயுதப்படை போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இங்குள்ள பயிற்சி மையத்தில் தற்போது இலங்ககை ஆயுதப் படையை சேர்ந்த 43 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கலவரத்தை அடக்குவது, கலவரம் ஏற்படாமல் தடுப்பது, குண்டு வெடித்தால் அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்வது உள்பட நவீன பயிற்சிகள் இங்கு அவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

இவர்களுக்கு 4 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிகிறது. இது குறித்து சிஆர்பிஎப் அதிகாரிகளிடம் கேட்டபோது, பயிற்சி அளிக்கப்படுவது உண்மை தான். ஆனால் இது பற்றிய விவரங்களை வெளியிட முடியாது என்றனர்

http://thatstamil.oneindia.in/news/2006/08...8/03/lanka.html

புலிகள் ஏவுகணைத்தாக்குதல் மேற்கொண்டதாக சன் டீவியில் சொன்னார்களே அது எந்தளவு உண்மை?

நிதர்சனம்.கொம் இலும் போட்டிருக்கினம்..கேள்விக் குறியோட..! பாருங்கோ...!

http://www.nitharsanam.com/

புலிகள் ஏவுகணைத்தாக்குதல் மேற்கொண்டதாக சன் டீவியில் சொன்னார்களே அது எந்தளவு உண்மை?

புலிகளிடம் ஏவுகணைகள் உள்ளன அதற்கான படை அணியும் உண்டு.இதற்கெல்லாம் கேள்விக்குறி தேவையில்லை. நேற்றைய சண்டையில் இது பாவிக்கப்பட்டதா இல்லாயா என்று இன்னும் உறுதி செய்யப் படவில்லை.

களம் இப்போது தான் ஆரம்பம் ஆகி உள்ளது போகப் போக பல புதிய ஆயுதங்களையும் படை அணிகளையும் புலிகள் களமிறக்குவார்கள்.

அது கள நிலவரம், கள நகர்வுகள், தந்திரோபாயம், திட்டமிடல் இவற்றிற்கு ஏற்ப நிகழும்.

சன் டிவியில் எறிகணையையே எவுகணை எனச் சொல்லியிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சன் டிவியில் எறிகணையையே எவுகணை எனச் சொல்லியிருப்பார்கள்.

:lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

சன் டிவியில் எறிகணையையே எவுகணை எனச் சொல்லியிருப்பார்கள்.

:oops: :oops: :oops:

இல்லை இதில் ஒருவகை சிக்கல் மொழி பெயர்ப்பில் இருக்கிறது.அனேகமாக மோட்டார்களைத் தான் எறிகணை என்போம்.இதில் ஆட்டிலரிகளையும் எறிகணை என்றால் அதாவது எறிகின்ற கணை என்றால் ஆட்டிலறி ரொக்கற்றுக்களை எவ்வாறு அழைப்பது.ஏவு கணை என்றா எறி கணை என்றா?

ஏவப் படுவது ஏவு கணை என்றால் ஆட்டிலறி ரொக்கற்றுக்களும் ஏவுகணைகள் தான்.ஏனெனில் அவை எறியப் படுவதில்லை,தம்முள்ளே உள்ள ரொக்கற் மோட்டார்களினால் தான் உந்தப் படுகின்றன.

புலிகளிடம் குறுந்தூர ஏவுகணைகள் உள்ளன என்று நம்பப் படுகிறது.விமான எதிர் ஏவுகணைகளும் உள்ளதாக நம்பப் படுகிறது.திருகோணமலை துறை முகத்தை அவர்கள் இந்த குறுந்தூர ஏவுகனைகளால் தாக்கி இருக்கலாம்.

அப்ப ஏவுகணை இல்ல உந்துகணை என்றீங்களோ...! சின்னப்பிள்ளைக்கும் தெரியும்..ரொக்கெட் எல்லாம்..உந்து விசையிலதான் தொழிற்படுகுது என்பது..!

சும்மா படம் காட்டாம..அதென்ன சோட் ரேஜ் மிசைல்ஸ் இருக்கலாம்...இப்படி ஊகங்களைக் கிளப்பாம..உண்மையான தகவல் இருந்தால் வெளியிட முயலுங்கள்..! இதைத்தான் சொல்லுறது..மக்களை சிந்தனையற்ற மந்தைகள் ஆக்க முயலாதீர்கள் என்று...!

ஏதோ புலிகள் இதற்கு முதல் விமான எதிர்ப்பு ஏவுகணையே பாவிக்காதது போல..விமான எதிர்ப்பு ஏவுகணையும் இருக்கலாம்..என்று..ஒரு ஊகமாம்..! கடவுளே..இதெல்லாம்..மக்களுக்கா

புலிகளோ நாங்களோ அவை பற்றித் தெரிந்திருந்தாலும் புலிகளிடம் இருக்கும் ஆயுதங்கள் பற்றிய உண்மயான தகவல்களை என்றுமே வெளியிடப் போவதில்லை. சண்டை ஓய்ந்த பின் அவற்றை வரலாறாக புலிகள் விலாவாரியாக எழுதுவார்கள்.அதுவரை நாங்கள் இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம் எண்டு தான் எழுதுவம்.உமக்குக் குழப்பம் எண்டா சந்தோசம் அதுக்குத் தான் அப்படி எழுதினது.புலிகளின் விமான ஓடுபாதையில நீரும் உமது மதியரும் சிரிலங்கா விமானப் படையும் எப்படி சித்தப் பிரமை பிடிச்ச மாதிரி குழம்பினியளோ அப்படித் தான் குழம்ப வேணும். :lol::lol::lol::lol:

செந்தில் விபரமான செய்திகள் பின்னர் வெளியால வரும் அதுவரை பொறுதிருங்கள், அது வரை இப்படித் தான்.

அப்ப ஏவுகணை இல்ல உந்துகணை என்றீங்களோ...! சின்னப்பிள்ளைக்கும் தெரியும்..ரொக்கெட் எல்லாம்..உந்து விசையிலதான் தொழிற்படுகுது என்பது..!

சும்மா படம் காட்டாம..அதென்ன சோட் ரேஜ் மிசைல்ஸ் இருக்கலாம்...இப்படி ஊகங்களைக் கிளப்பாம..உண்மையான தகவல் இருந்தால் வெளியிட முயலுங்கள்..! இதைத்தான் சொல்லுறது..மக்களை சிந்தனையற்ற மந்தைகள் ஆக்க முயலாதீர்கள் என்று...!

ஏதோ புலிகள் இதற்கு முதல் விமான எதிர்ப்பு ஏவுகணையே பாவிக்காதது போல..விமான எதிர்ப்பு ஏவுகணையும் இருக்கலாம்..என்று..ஒரு ஊகமாம்..! கடவுளே..இதெல்லாம்..மக்களுக்கா

  • தொடங்கியவர்

அப்ப ஏவுகணை இல்ல உந்துகணை என்றீங்களோ...! சின்னப்பிள்ளைக்கும் தெரியும்..ரொக்கெட் எல்லாம்..உந்து விசையிலதான் தொழிற்படுகுது என்பது..! :idea:

குழந்தைக்கு தெரிவது இருக்கட்டும் குருவிகளுக்கு தெரியுமா..??? உந்துகணை வேறு, ஏவினால் இலக்கை தேடிச்செண்று அளிக்கும் ஏவுகணை வேறு எண்று...???

தாங்கிகளை அளிக்க உந்துகணைகளும் இருக்கின்றன ஏவுகணைகளும் இருகின்றன...! இது சிறு தகவல்தான்..!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கஸ்டமாக இருந்தால் ஆங்கிலச் சொற்களையே பாவிக்கலாமே, குழப்பங்கள் குறையும். :idea:

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் ஏவுகணைத்தாக்குதல் மேற்கொண்டதாக சன் டீவியில் சொன்னார்களே அது எந்தளவு உண்மை?

உந்தத்தொலைக்காட்சியினைப்பா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.