Jump to content

உலகப் பெண்களுக்காகவும் தமிழ்ப் பெண்களுக்காகவும் ஒரு பெண்கள் அமைப்பு.


Recommended Posts

உலகப் பெண்களுக்காகவும் தமிழ்ப் பெண்களுக்காகவும் ஒரு பெண்கள் அமைப்பு.

logorotate.jpg

உலகில் யுத்தமும் அது தந்த பாதிப்புக்களும் சமூகத்தின் பெரும்பான்மைப் பொறுப்புகளைச் சுமக்கும் பெண்களின் மீதே விழுந்து விடுகிறது. ஒடுக்கப்பட்ட இனங்களின் குரல்களை அடக்கும் ஆயுதமாக எல்லா இனங்களின் பெண்களையும் பெண்ணுடலையுமே அடக்குமுறையாளர்கள் பழிவாங்குதலும் பலியெடுத்தலும் நிகழ்கிறது. இந்நடைமுறையை வளர்ந்த வளர்முக நாடுகள் யாவும் பின்பற்றுவதே தினசரியாகக் காண்கிறோம்.

 

இலங்கையில் நடைபெற்ற ஈழ விடுதலைப் போரிலும் உலகின் வளமையான வக்கிரமும் பழிவாங்கலுக்கும் ஈழப்பெண்களின் மீதான வன்மமாக வன்முறையாக நிகழ்ந்து முடிந்த கதையும் தற்போது வரை பெண்கள் மீதான தாக்குதல்கள் சத்தமில்லாமல் நடைபெற்று வருகிறது. தன்மீது அடக்குமுறையாளனால் நடத்தப்படும் வன்முறையைத் தடுக்கவோ எதிர்த்துக் குரல் கொடுக்கவோ பலமில்லாத அரசியல் தளத்தைக் கொண்டிருக்கும் தமிழ்ப்பெண்களுக்கு புலம்பெயர்ந்து வாழும் பெண்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவும் அவர்களுக்கான பாதுகாப்பையும் புதுவாழ்வையும் ஏற்படுத்த வேண்டிய காலத்தின் தேவையை உணர்கிறோம்.

 

இந்தக் கடமையை நிறைவேற்ற கடந்த நான்கு வருடங்களாக புலம்பெயர் பெண்களை இணைத்த பெண்கள் அமைப்பொன்றை உருவாக்கும் முயற்சியில் பலருடனான உரையாடல்கள் பெண்கள் அமைப்பொன்றின் தேவையை பல வகையிலும் தெளிவுபடுத்த முன்றும் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தக் கூடிய ஆள்வளம் கிடைக்காது போனது.

 

அத்தகைய காலத்தில் தான் 2வருடங்கள் முதல் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு கடந்த 18வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கும் ‘தமிழ்ப்பெண்கள் அபிவிருத்தி மன்றம்’ தொடர்பு கிடைத்தது. தம்மால் முடிந்தவற்றைச் செய்து கொண்டிருக்கும் இந்த அமைப்பின் பணிகளோடு இiணைந்து நாமும் இயங்குவது மேலும் தமிழ்ப்பெண்களுக்கான மாற்றத்தைக் கொண்டு வரமுடியுமென்ற நம்பிக்கையைத் தந்தது. இந்த அமைப்பில் அங்கத்துவம் பெறும் பெண்களுடன் இணைந்து ஆனி2013 தொடக்கம் இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பினை ஏற்றுள்ளேன்.

 

இந்த முயற்சியில் அனைத்துத் தமிழ்ப் பெண்களும் இணைந்து புலத்திலும் நிலத்திலுமான பெண்களின் பிரச்சனைகள் , தேவைகள் யாவையும் புரிந்து அவர்களுக்கான ஆற்றப்படுத்தலை மேற்கொள்ள அனைத்துப் பெண்களையும் இத்தால் ஒன்றிணையுமாறு வேண்டுகிறோம்.

 

உலகில் விடுதலையடைந்த தேசங்கள் யாவற்றிலும் பெண்களின் பங்களிப்பென்பது அதிகமானது. அதுபோன்றே ஈழவிடுதலைப்போரிலும் உலகில் எங்குமே நிகழாத மாற்றத்தையும் பெண்களது எழுச்சியையும் எங்கள் தமிழ்ப் பெண்கள் மாற்றிக் காட்டினார்கள். போர்க்களம் முதல் அவர்கள் செய்த சாதனைகளும் வெற்றிகளும் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களும் 2009 மேமாதத்தோடு எல்லாம் போயிற்றென்ற நிலமையே காணப்படுகிறது.

 

ஆணுக்குச் சமனாக ஆயுதம் ஏந்தி பெண்விடுதலையோடு மண்விடுதலையையும் பெற்றுத் தரப்போன பெண்களின் நிலமை இன்று முன்னாள் போராளிகள் என்ற சொல்லில் அடக்கப்பட்டு அவர்கள் அனுபவிக்கும் துயரங்களும் கொடுமைகளும் சொல்லில் அடங்காதவை. அந்தப் பெண்களுக்காகவும் உலகில் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பெண்களுக்காகவும் தமிழ்ப்பெண்களாகிய நாங்களும் குரல் கொடுப்பதோடு நின்று விடாமல் அவர்களுக்கான புது வாழ்வை அமைக்க தமிழ்ப்பெண்கள் அமைப்போடு இணையுமாறு தமிழ்ப் பெண்களை வேண்டுகிறோம்.

 

சாந்தி ரமேஷ் வவுனியன்

ஒருங்கிணைப்பாளர் (தமிழ்ப் பெண்கள் அபிவிருத்தி மன்றம்)

 

http://twdf.org/ta/49.html

 

பெண்கள் அமைப்பின் இணையத்தள முகவரி :- http://twdf.org

 

இணையத்தளத்தில் செய்திகள் தகவல்கள் முழுமைப்படுத்தப்படவில்லை. அடுத்து வரும் நாட்களில் அனைத்து விடங்களும் முழுமையாக பதிவு செய்யப்படும்.தமிழ் , ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் இணையத்தளம் வடிவமைக்கப்படுகிறது.

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சாந்தி.

Link to comment
Share on other sites

 உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சாந்தி.

 

நீங்களும் இந்தப்பெண்கள் அமைப்பில் இணையுமாறு வேண்டுகிறேன். பலர் இணைந்தால் பல்லாயிரம் வேலைகளை எங்கள் பெண்களுக்குச் செய்ய முடியும்.

ஐயோ இதிலையெல்லாம் நான் இணையமாட்டேனெண்டு ஒதுங்காமல் ஒரு அங்கத்தவராகவேனும் இணைந்து ஆதரவு தாங்கோ அக்கா.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் பெண்கள் அமைப்புக்கள் என்று அமைத்துக்கொண்டு போனால், ஆண்கள் நிலைமை மேலும் கவலைக்கிடமாகாதா? :o

 

சும்மா பகிடிக்குச் சாந்தி! :D

 

தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள!

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் அக்கா..தொடருங்கோ.

பலரை வெளிப்படுத்தி நன்றி சொல்ல முடிவதில்லை. நன்றிகள் யாயினி.

 

எல்லாரும் பெண்கள் அமைப்புக்கள் என்று அமைத்துக்கொண்டு போனால், ஆண்கள் நிலைமை மேலும் கவலைக்கிடமாகாதா? :o

 

சும்மா பகிடிக்குச் சாந்தி! :D

 

தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள!

 

சாட்டோடை சாட்டாக புங்கை மனசில் இருந்த துயரத்தையும் பயத்தையும் பகிர்ந்திட்டீங்கள். :icon_idea:

 

இந்தப் பெண்கள் அமைப்பு போரால் பாதிப்புற்ற சமூக ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான உதவிகளையும் ஆற்றுப்படுத்தலையுமே செய்யும்.

 

நீங்கள் பயப்பிடாமல் உங்கள் மனைவியையும் எமது அமைப்பில் ஒரு அங்கத்தவராக இணைச்சு விடுங்கோ. :lol:

 

புலம்பெயர்ந்து வாழும் அனைத்து நாடுகளில் இருந்தும் இந்த அமைப்பில்  பெண்கள் இணைந்து செயற்படலாம். யாழ் களத்தில் அங்கத்துவம் பெறும் அனைத்து பெண்களையும் இவ்வமையில் இணைந்து செயற்படுமாறு வேண்டுகிறோம்.

 

Link to comment
Share on other sites

நன்றி சாந்தி,

தமிழ் முஸ்லிம் மலையக பெண்கள் மத்தியில் பணிபுரியும் உங்கள் அகன்ற அடித்தளம் ஆர்வம் தருகிறது.

 

ஈழத்தில் போரும் இனக்கொலையும் சுமத்திய எல்லாச் சுமைகளையும் தாங்கிகிறவர்களின் அடி மட்டத்தில் தமிழ் பேசும் பெண்களே உள்ளனர். இதில் விதவைகளதும் உடல் ஊனமுற்றவர்களதும் சிறைப்பட்டவர்களதும் கல்வி போசாக்கு உணவு மறுக்கப்பட்டவர்களதும் நிலமை படு மோசமடைந்து வருகிறது.

 

ஈழத்தில் நிலவும் பணச் சுருக்கம் நிலமைகலை தொடர்ந்து மோசமாக்குகிறது. இதனால் கிராமிய பெண்கள் மட்டத்தில் சிறு சேமிப்பும் சிறு முதலீடுகளும் தொடற்சியாக நான்கு தசப்தங்களாக செய்ற்படவில்லை.  இன்றும் அரசு இந்த பிரச்சினையைக் கண்டுகொள்வில்லை. அரசின் ஆசியுடன் ஏகபோகமாகச் செயல்படும்  சிங்கள தொண்டு நிறுவனங்கள் நமது மக்கலின் நமது பெண்களின் முன்னுரிமை (priority) அடிப்படையில் செயல்படவில்லை.

 

இந்நிலையில் உறவினருக்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் பண உதவி சேரும் - மேற்படி பணம்  ஒழுகிக் கீழ்மட்டங்களைச்சேரும் வாய்ப்புள்ள யாழ்பாணக் குடாநாட்டுக்கு வெளியில் நிலமை இன்னும் மோசமாக உள்ளது. வன்னியில் வாழும் மலையகத் தமிழ் பெண்களின் வாழ்நிலை அதிக கவனத்தைக் கோரி நிற்கிறது.  

 

ஈழத்தின் சமூக பொருளாதார அமைப்புக்குள் பணத்தைச் சேர்க்கும் அவசியமான முயற்ச்சியில் சில சர்வதேச தொண்டு நிறுவனங்களும் மிகச் சிறிய அளவில் ஒரு சில புலம்பெயர் அமைப்புகளும் தவிர அரசு ஆர்வம் காட்டவில்லை. அரசு சர்வதேச தொண்டு நிறுவனங்களின் பணத்தையும் சிங்கள தொண்டு நிறுவங்கள் மூலம் கையாளுவதால் நிர்வாகச் செலவின் வடிவத்தில் நிதியின் பெரும்பகுதி தென்பகுதிக்கு திரும்பிவிடுகிறது. இதைவிட சர்வதேச உதவிகள் நேரடியாகவே தென்பகுதிகளுக்கு திசை திருப்பப் படுவதாக வலுவான குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும் ஈழத்துக்கான சர்வதேச உதவிகளால் உருவாக வேண்டிய நிறுவன அமைப்பு அடிமட்ட மக்களிடை தலைமைத்துவ உருவாக்கம்   பணச்சுளற்ச்சி சேமிப்பு என்பவையும் தென்பகுதிகளுக்கு மடை மாற்றம் செய்யப்பட்டு விடுகிறது.

 

அண்மையில் கிடைக்கும் தகவல்கள் நவீன வாழ்க்கைப்போராட்டத்தில் ஈடுபட அதியாவவசியமான “பெண்களுக்கான மாதாந்தர தேவைக்கான Sanitary Napkins சே பெரும் பிரச்சினையாக உள்ளதாக தெரிகிறது. இது எந்த நாகரீகமான தமிழருக்கும் அதிற்ச்சி தரவேண்டும். இத்தகைய சூழல்கலைக் கழையும் பொறுப்பு நம்மெல்லோருக்கும் உள்ளது. இத்தகைய அடிப்படைப் பிரச்சினைகளை இனம் காண்பதிலும் தீர்பதிலுமாவது புலம்பெயர்ந்த தமிழ் பெண்களின் உதவிகளையும் அறிவையும் ஈடுபடுத்தும் முயற்சியில் நீங்கள் ஈடுபடவேண்டும். மாசம் 200000 Sanitary Napkins ஆவது புலம்பெயர் தமிழ் பெண்களின் அன்பளிப்பாக ஈழத்து வறிய பெண்களுக்குக் கிடைக்கும் காலம் உருவாக வேண்டும்.

 

இன்று நம் பெண்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினையான பணச்சுருக்கம் வருமானமும் சேமிப்புமின்மை தொடர்பாகவும் சர்வதேச நிதி வளங்களையும் புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆதரவையும் சரியாக கையாள கிராமிய வங்கி முறைமை கட்டமைக்கப் படவேண்டிய அவசியம் உள்ளது. பங்களாதேசம் போன்ற நாடுகளின் அனுபவம் இதற்க்கு உதவும். நிறுவன ரீதியில் யாழ்ப்பானத்தில் சிறப்பாக இயங்கிய 1972ல் சிங்கள அரசால் திட்டமிட்டு அழிக்கதொழிக்கப்பட்ட கூட்டுறவு சங்க அமைப்புகளின் அனுபவங்கள் உதவும். கிராமிய கூட்டுறவு வங்கிகளும் நிறுவனமும் நீண்டகால அடிப்படையில் லாபந்தரும் நிறுவனங்களாகவே வடிவமைக்கப் படலாம். இது புலம் பெய்ர் தமிழர்கலது உதவிகளை ஆர்வம்தரும் முத்லீடுகளாக்க உதவும். உதவிகளை உறவினர்களுக்கு அனுப்பும் பணம் உட்பட சகல நிதி தொடர்புகளை  நீண்டகால அடிப்படையில் லாபந்தரும்வகையில் நிறுவனமயப்படுத்தும் வழி வகைகள் தொடர்பான ஆய்வுகலில்  நமது சமூக பொருளாதார ஆய்வாளர்கள் குறிப்பாக சர்வதேச பல்கலைக் களகங்களில் பயிலும் மானவ மானவிகள் ஈடுபடவேண்டும்.

 

உங்கள் பணிகளின் எல்லா அம்சங்கலையும் நமது சர்வதேச பல்கலைக்களக மானவர்கலை அணிதிரட்டி ஈடுபடுத்த வேண்டும். மற்றும் தமிழகம் மலேசியா சிங்கபூர் புலம்பெய நாடுகலில் வாழும் தமிழர்கள் குறிப்பாக இளய தலைமுறையினரோடு இருவழித் தொடர்பில் இருங்கள். இந்நாடுகளைச் சேர்ந்த தமிழ் மனநல மருத்துவர்களின் பங்களிப்பு நமது உடனடித் தேவையாக உள்ளது.

 

 

ஈழத்து சமூகபொருளாதார கலாச்சார பிரச்சினைகள் தொடர்பாகவும் மேற்படி பின்னணியில் கணிசமான  வறிய விதவைகளையும் ஊனமுற்றோரையும் மன நல சிக்கல்களை  எதிர்கொள்வோரையும் கொண்ட நம் பெண்கள் நிலமை தொடர்பாக நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். இதன் அடிப்படையிலான உதவிகளும் மனநல சேவைகளும் கிட்டாவிடின் தற்கொலை விகிதம் அதிகரித்தல்போன்ற பேராபத்துக்கலை நாம் எதிர்கொள்ள வேண்டி ஏற்படும். 

 

சாந்தி உங்கள் முயற்ச்சி வெற்றிபெற என்னுடைய நல் வாழ்த்துக்களும் ஆதரவும்.- வ.ஐ.ச.ஜெயபாலன்

 

  

 

Link to comment
Share on other sites

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள் Poet.

நீண்ட உங்கள் கருத்தில் மிகவும் பயனுள்ள விடயங்களை பகிர்ந்துள்ளீர்கள். இப்போது அவசியமான பணியும் அவசரமான பணியாகவும் செய்ய வேண்டியது பெண்களுக்கான ஆதரவும் உதவிகளுமே. தற்போது நடைபெறுகிற இனக்கலப்புத் திருமணம் முதல் திட்டமிட்ட வகையில் பெண்கள் பழி(லி) வாங்கப்படுகிறார்கள்.

 

இந்த நிலமையானது இன்னும் ஒரு 5வருட ஓட்டத்தில் பாரிய பிரச்சனைகளையும் அடுத்த சந்ததியின் வாழ்வையும் திசைமாற்றிவிடும். இதனை கருத்தில் கொண்டு புலம்பெயர் பெண்கள் ஒன்றிணைந்த கூட்டு முயற்சிகள் மூலம் அந்தப் பெண்களின் வாழ்வை மாற்ற ஆதரவையும் ஆதாரத்தையும் வழங்க வேண்டும்.

 

இக்களத்தில் எழுதுகிற தாயகம் பற்றி சிந்திக்கிற அனைத்துப் பெண்களும் இணைந்து செயற்பட முன்வர வேண்டும். இதில் ஆளாளுக்கு உள்ள கருத்து வேறுபாடுகளை தவிர்த்து எங்கள் பெண்கள் என்ற எண்ணத்தைவலுப்படுத்தி செயலில் இறங்க வேண்டும். இந்தப் பெண்கள் அமைப்பானது உலகின் அனைத்து சமூகங்களோடும் சேர்ந்து இயங்கும் வகையிலேயே மாற்றமடைகிறது.

இப்போதுள்ள இலத்திரனியல் வசதிகள் மூலம் அவரவர் வாழும் நாடுகளில் இருந்து கொண்டே பணிகளை செய்ய முடியும்.

கள உறவுகளாக பங்காற்ற விரும்பும் பெண் உறுப்பினர்கள் அனைவரும் முன்வாருங்கள். இங்கு எனக்கு அறிமுகமான சில பெயர்களை அடையாளப்படுத்தாமல் பொதுவாகவே எல்லோரையும் வேண்கிறேன். சிலவேளை சிலரை நான் மறந்து போனாலும் அது தவறான புரிதலை தந்துவிடும். எனவே இக்களத்தில் எழுதும் அனைத்து பெண்களும் இணையுங்கள்.

 

பலர் இணைந்தால் சர்வதேச சமூகத்தின் கவனத்தை பெற்று எமது பெண்கள் குழந்தைகளுக்கான வாழ்வை மேம்படுத்த பாதுகாப்பான வாழ்வை வழங்க முடியும்.

 

உங்கள் பணிகள் சார்ந்து வேறு வேறு அமைப்புகளில் அங்கம் வகித்தாலும் இப்பெண்கள் அமைப்பில் அங்கத்துவத்தைப் பெற்று பெண்களுக்கான உதவிகளை வழங்கலாம். செயற்படலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அமைப்பில்.... வல்வை சகாறாவையும் உள் வாங்கவேண்டும் சாந்தி.

Link to comment
Share on other sites

இந்த அமைப்பில்.... வல்வை சகாறாவையும் உள் வாங்கவேண்டும் சாந்தி.

 

அனைவரையும் வரவேற்கிறோம் தமிழ் சிறி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

 

ஏற்கனவே இதைப் போன்றதொரு பணியில் ஈடுபட்டிருப்பதால் இன்னொன்றில் இணையமுடியாது. ஆனால் சாந்தியின் முயற்சிக்கு மிக ஆதரவாக இருக்கமுடியும்.

 

"United International Women Organization"  (UIWO)

இது என்போன்ற சிலரால் உருவாக்கம் பெற்று பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு அமைப்பு. அதற்கான வேலைத்திட்டங்கள் மந்தகதியில்தான் நடைபெறுகிறது. இதனைப்பற்றிய மேலதிக விபரங்களை இப்போதைக்கு இங்கு தர முடியாமைக்கு வருந்துகிறேன். பின்னர் இது பற்றிய விபரங்களைத் தருகிறேன்.

Link to comment
Share on other sites

சிறு சிறு குழுக்களாக தனித்து இயங்காமல் குறைந்த பட்சம் வேலைத்திட்ட அடிப்படையிலாவது இணைந்து செயற்படுவது கூடிய பலனை தரும். 

உங்களின் பணி வெற்றி பெற இனிய நல்வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

நன்றிகள் சகாரா. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

 

உங்கள் பணிகள் சார்ந்து வேறு வேறு அமைப்புகளில் அங்கம் வகித்தாலும் இப்பெண்கள் அமைப்பில் அங்கத்துவத்தைப் பெற்று பெண்களுக்கான உதவிகளை வழங்கலாம். செயற்படலாம்.

 

 

Link to comment
Share on other sites

சிறு சிறு குழுக்களாக தனித்து இயங்காமல் குறைந்த பட்சம் வேலைத்திட்ட அடிப்படையிலாவது இணைந்து செயற்படுவது கூடிய பலனை தரும். 

 

பெண்கள் அமைப்பொன்றின் தேவை 2009இன் பின்னர் தேவைப்பட்டது நுணாவிலான். ஆனால் ஏற்கனவே அரசியல் தளத்தில் செயற்பட்டு ஓய்வில் இருக்கும் சிலரிடமும் ஒரு பெண்கள் அமைப்பு அதாவது வேகமான செயற்பாட்டோடு தேவையென்பதனை தெரிவித்து ஆதரவு கேட்ட போது எல்லோரும் ஒதுங்கியே போனார்கள்.

TWDF அமைப்பு இவ்வருடத்தோடு 18வருடமாகிறது. புதிதாக ஒன்றை ஆரம்பிப்பதிலும் பார்க்க இருக்கிற

அமைப்பொன்றைப் புதுப்பித்து அதன் மூலம் செயல்படலாம் என அழைத்த போதும் ஆயிரம் காரணங்கள் சொல்லி பலர் ஒதுங்கினார்கள். யாரும் கைதராத நிலமையிலேயே இவ்வமைப்பின் பெண்களுடன் இணைவதென முடிவெடுத்து இணைந்துள்ளேன்.

 

நிச்சயம் இந்த அமைப்பின் மூலம் போர் விதவைகள் போரால் பாதிப்புற்ற பெண் போராளிகளுக்கான வாழ்வை கட்டியெழுப்பலாம் என்ற நம்பிக்கையுள்ளது.இந்த அமைப்பில் செயற்பாட்டாளர்களாக தமிழகத்தில் இருந்தும் நேற்று பெறுமதி மிக்க பணிகளைச் செய்து தற்போது ஒதுங்கியிருக்கும் ஒரு பெண்ணும் எம்மோடு இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து வந்து இணைந்துள்ளார். எமது நோக்கத்தை நிறைவேற்ற நிச்சயம் ஆதரவுகளைத் திரட்ட முடியும்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
    • பிற்சேர்க்கை III வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா  அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது. ————— இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம். அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்.. முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”. இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார். அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள். ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில், ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும்.  அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம். இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள். இதில் நன்மை என்னவென்றால் - இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும். எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன். இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை).  ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள்.  ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன். டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது. எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன். கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார். என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே? ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன். உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர். 40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣. கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன். அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன். கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது. ———————- ஆவலோடு காத்திருங்கள்! பிற்சேர்க்கை IV வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்
    • 1994 இல் மயிலாப்பூர் சட்டமன்றத்துக்கும் இன்னுமொரு சட்டமன்றத்துக்கும் இடைக்கால தேர்தல் நடைபெற்றது.  யாராவது MLA காலமானால் அல்லது வேறு சில காரணங்களுக்காக இடைக்கால தேர்தல் நடைபெறும். தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறாமல் ஒன்று இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதினால் முக்கிய தலைவர்களை இத்தொகுதிகளில் அடிக்கடி காணலாம். நான் அடையார் , Besant நகர் பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு. அப்பொழுது பல தலைவர்களை பார்த்திருக்கிறேன். பாட்டாளி மக்கள் தலைவர் இராமதாஸ் சென்ற வாகனத்தில் மன்சூர் அலிகானை வந்திருந்தார். ‘ பிரபாகரன் கிரேட், இராவணன் கிரேட்’ என்று அவர் உரையாற்றினார்.  வைகோவுடன் எஸ் எஸ் சந்திரன் வந்திருந்தார்.  நடிகர் எஸ் எஸ் சந்திரன் மதிமுகவில் அப்பொழுது இருந்தார் கலைஞ்சர் கருணாநிதிஐக்கண்டதும் பல ஆதரவாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட சொன்னார்கள். ஒரு பிள்ளைக்கு ‘ கனிமொழி’ என்று பெயர் சூட்டினார். இன்னுமொரு பிள்ளைக்கு ‘இளவரசன்’ என்று பெயர் சூட்ட, ‘இவர் பெண் குழந்தை’ என்று குழந்தையின் தகப்பனார் சொல்ல ‘இளவரசி’,என்று கலைஞர் பெயர் சூட்டினார்.  ‘அவர்கள் லட்டினுள் மோதிரம் வைத்து குடுக்கிறார்கள் ( அதிமுக கட்சி) . வாங்குங்கள் . ஆனால் வாக்குகளை எமக்கு அளியுங்கள்’ என்றார். பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தருகில் துவிச்சக்கரவண்டியில் வரும்போது காவல்துறையினர் என்னையும் சேர்ந்து பலரை மறித்து நிறுத்தினார்கள். சில நிமிடங்களில் ‘அதோ அந்த பறவை போல’  பாடலை Band குழு ஒன்று இசை அமைக்க வாகனம் ஒன்று வந்தது. பின்னால் வந்த இன்னுமொரு வாகனத்தில் ஜெயலலிதா அவர்கள் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு படைகளுடன் வந்து உரையாற்றினார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் வீட்டின் அருகே செல்லும் போது எப்போதும்கண்டும் காணாமல் மாதிரி செல்வார்.  ஆனால் தேர்தல் என்றதினால் கை குப்பி என்னை பார்த்து வணங்கினார். தமிழக பத்திரிகைகளில் தேர்தல் செய்திகள் வாசிப்பதுண்டு. இதனால் ஓரளவு ஆர்வம்
    • "மாற்றம்" [யாழ்ப்பாணத்து மருத்துவ மாணவனின் கதை]   துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில், இலங்கையின் வடபகுதியில், பரபரப்பான தெருக்களுக்கும், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் [கடற்காயல் அல்லது வாவி] அமைதியான கடற்கரைக்கும் நடுவே, குறளரசன் என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் வாழ்ந்து வந்தான். தீவின் வரலாற்றில் வேரூன்றிய நீண்ட பரம்பரையுடன் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த குறளரசன், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தின் எடையையும் 'மாற்றத்திற்காக' ஏங்கும் மக்களின் அபிலாஷைகளையும் [ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பையும்] தனக்குள் சுமந்தான். குறளரசன் மருத்துவம் படிக்கும் மாணவன் மட்டுமல்ல; அவன் தனது தமிழ் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அங்கீகாரத்திற்காக ஒரு தீவிர சமூக உழைப்பாளியாகவும் இருந்தான். தமிழரின் வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று கதைகளிலும் மற்றும் இன்று நடைபெறும் அரசியல் அழுத்தங்களிலும் வளர்க்கப்பட்ட அவன், ஒரு அரசியல் 'மாற்றம்' தேவை என்பதை விரும்பியது  மட்டுமல்ல, தனது மக்களின் வாழ்வு மற்றும் செழிப்புக்கு அது இன்றியமையாதது என்றும்  நம்பினான். குறளரசன் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், இலங்கை வாழ் தமிழ் இளைஞர்களின், சமூகத்தின்  நம்பிக்கையின் விளக்காக நின்றது. இங்குதான் சிங்கள வம்சாவளியைச் சேர்ந்த, அனுராதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட,  முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியான ருவனிக்காவை [Ruwanika] அவன் முதல் முதல் சந்தித்தான். அவர்களின் நட்பு இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டி ஆழமான ஒன்றாக மலர்ந்தது. ஆனால் அவர்களின் பாசத்தின் அரவணைப்பில் கூட, குறளரசனால் அவர்களது சமூகத்தை ஆட்கொண்ட ஆழமான வேரூன்றிய பிளவுகளின் நிழலை மறக்க  முடியவில்லை. அவன் அதில் உறுதியாக நின்றான்.  குறளரசன் தனது படிப்பில் ஆழமாக இருந்தாலும், தன் இலங்கை மக்களின் வரலாற்றை சரியாக அறிவதிலும் முழுமையாக தன் கவனத்தை செலுத்தினான். தமிழ் சிறுபான்மை யினருக்கும் சிங்கள பெரும்பான்மை அரசாங்கத்திற்கும் இடையிலான உறவில், அரசாங்க தலைவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும், பின் அவ்வாற்றில் முக்கியமான ஒன்றையேனும் நிறைவேற்றாமல் உடைக்கப்பட்டு கிடங்கில் போட்டத்தையும் மற்றும் ஒவ்வொரு முறையும் தமிழர்களின் சுதந்திரம், கல்வி, உரிமைகள், காணிகள், வழிபாடுகள் மேலும் மேலும் பறிக்கப்படத்தையும், மறுக்கப்படத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் தொல்லைகளையும்  சிதைந்த கனவுகளையும் பற்றி அவன் அடிக்கடி சிந்தித்தான். 1957 பண்டாரநாயக்கா - செல்வநாயகம் உடன்படிக்கையில் இருந்து தொடர்ந்து பல தசாப்தங்களில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான தோல்வியுற்ற முயற்சிகள் வரை, குறளரசன் காட்டிக்கொடுப்பு மற்றும் ஏமாற்றங்களின் தொடர்ச்சிகளைக் கண்டான்.  ஆனாலும், விரக்தியின் மத்தியில், புத்தரின் உண்மையான போதனைகளில் குறளரசன் ஆறுதல் கண்டான். ஞானம் பெற்றவர் போதித்த இரக்கம், சகிப்புத்தன்மை, புரிதல் ஆகிய கொள்கைகளை அவன் நம்பினான். இனம் மற்றும் மதத்தின் தடைகளைத் தாண்டி, இந்த விழுமியங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு சமூகத்திற்காக அவன் ஏங்கினான். நீண்ட காலமாக தனது மக்களை ஒடுக்கிய ஒரு மகாவம்சம் என்ற புராண கதையின் கனத்துடனும் போராடினான். குறிப்பாக புத்த சமயத்தை போதிக்கும் துறவிகள், உண்மையில் இலங்கையில் முறையாக பின்பற்றுகிறார்களா என்று தனக்குத் தானே கேள்வி கேட்டான்?   மகாவம்சம், பாளி மொழியில் எழுதிய, புத்தமதத்தை முன்னிலைப்படுத்திய வரலாற்றின் புராணக் கதையாகும். மகாவிஹரா துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், இலங்கையில் ஒரு சிங்கள இனம் என்று ஒன்றும் இருக்கவில்லை என்பது வரலாற்று உண்மையாகும். அதனை  முதல் வில்ஹெய்ம் கெய்கர் பாளி மொழியில் இருந்து ஜெர்மன் மொழிக்கும் பின்னர், 1912ல் ஆங்கிலத்திற்கும் மொழிப்பெயர்ப்பு செய்தனர், அதன் பின்பு தான் சிங்கள மொழிபெயர்ப்பு வந்தது, அதுவரை இலங்கையில் சிங்கள - தமிழ் வேறுபாடுகிடையாது, அதன் பின் தமிழருக்கு எதிரான கருத்துக்கள் தீவின் மீது நீண்ட நிழலைப் போட்டு இன்றைய நிலைக்கு இட்டுச் சென்றது. எனவேதான் குறளரசன் மற்றும் தமிழ் சமூகத்திற்கு, மகாவம்சம் ஒரு வரலாற்று புராண நூல் மட்டுமல்ல; அது ஒடுக்கு முறைக்கான ஒரு கருவி, ஓரங்கட்டப்படுதல் மற்றும் பாகுபாடுகளை நியாயப்படுத்த பயன்படுத்தப் பட்ட ஆயுதம் ஆக அது தென்பட்டது, அதனால் தான் பொய்யான புராண கதையில் இருந்து உண்மையான தொல்பொருள் மற்றும் வரலாறுச் சான்றுகள் கூடிய இலங்கை வரலாறு 'மாற்றம்' காணவேண்டும், உண்மையின் அடிப்படையில், இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் பேசி வாழும் இலக்கை தமிழர்களின் மேல் அரசு கொண்டு இருக்கும் நிலையில் 'மாற்றம்' வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக புத்தரின் போதனைகளை போதிப்பவர்கள், அவர் வழியில் தங்கள் வாழ்க்கையை அமைக்கும்  'மாற்றம்' தேவைப்படுகிறது. இந்த மூன்று மாற்றங்களையும் தான் குறளரசன் காணத் துடித்தான்.   சிறுவயதிலிருந்தே, மகாவம்சத்தின் உண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கும் பல வரலாற்று உண்மைகளை கற்றுக் கொண்டான், உண்மையை மறைக்கும் கட்டுக்கதைகள் மற்றும் பிரச்சாரத்தின் அடுக்குகளையும் அது முன்வைக்கும் ஆபத்தான முறையில் தவறாக வழிநடத்தும், வெறும் பக்கச்சார்பான விவரிப்புகளையும் அறிந்தான். இது சிங்கள புத்த  தலைமுறைகளின் மனதை விஷமாக்கும் பொய்கள் என்பதை அவன் உண்மையான சான்றுகளுடன் அறிந்தான். அதனால்த் தான் 'மாற்றம்' உடனடியாகத் தேவை என்கிறான்!  ஆனால் மகாவம்சத்தின் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்டது தமிழர்கள் மட்டும் அல்ல. இந்த வரலாற்று சூழ்ச்சிக்கு சிங்கள சாமானிய மக்களும் எப்படி பலியாகினர் என்பதை குறளரசன் இலங்கையின் இன்றைய நிகழ்வுகளில் நேரில் கண்டான். மற்ற சமூகங்களின் பங்களிப்புகள் மற்றும் இருப்பை அழிக்கும் அரசியல் மற்றும் மத தலைவர்களின் செயல்களில்! அது தான் 'மாற்றத்துக்காக' ஏங்குகிறான்!  புத்தர், ஞானம் பெற்றவர், இரக்கம் மற்றும் அகிம்சையின் செய்தியைப் போதித்தார், ஆனால் அவரது போதனைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்ய திரிக்கப்பட்டன. உலகளாவிய அன்பு மற்றும் புரிதல் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட ஒரு மதம், மற்றவர்களை ஒதுக்கி வைப்பதையும் ஒடுக்குவதையும் நியாயப்படுத்த எப்படி இன்று ஒத்துழைக்கப்பட்டது என்று குறளரசனால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. குறளரசனும் ருவனிக்காவும்  தங்களின் உறவின் சிக்கல்களை சிலவேளை எதிர் கொள்ளவேண்டி இருந்தது. அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள தப்பெண்ணங்கள் மற்றும் பாரபட்சங்களை அடிக்கடி எதிர்கொண்டனர். கடந்த காலத்தின் பாவங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டு, திருத்தப்பட்டு, மன்னிப்பு கேட்டு, அனைத்து சமூகங்களும் நல்லிணக்கத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை, இவ்வாறான அதி முக்கிய 'மாற்றத்தை' இருவரும் எதிர் பார்த்தனர்.  "இருஇனம் வாழும் ஒரு நாட்டில்  இருக்கையை பிடுங்கி எடுத்து தனதாக்கி இறுமாப்புடன் வரலாற்றையும் திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? "  "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி  இணக்கம் கண்டு இதயம் பரிமாறி  இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு  இனியாவது மன்னிப்பு கேள் நாடுமுன்னேறும்! " இந்த 'மாற்றம்' தான் அவன் சுருக்கமாக எதிர்பார்ப்பது. எது எப்படியானாலும்,  அவர்களின் காதல் ஒரு இணக்கமான சகவாழ்வு சாத்தியம் என்பதற்கு ஒரு சான்றாக இருந்தது, கருத்து வேறுபாடு இலங்கையில் நிலவினாலும், அவர்களின் வாழ்க்கை என்ற கடலில், நம்பிக்கை கலங்கரை விளக்காக இருந்தது. வருடாந்த ஜெனிவா தலையீடுகள் குறளரசனுக்கும் அவரது சமூகத்திற்கும் ஒரு நம்பிக்கையை அளித்தன. இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் அமைப்பு ரீதியான அநீதிகளுக்கு தீர்வு காண சர்வதேச சமூகம் இங்குதான் கூடுகிறது. குறளரசன் அர்த்த முள்ள 'மாற்றத்திற்காகவும்', தனது கடமைகளை மதிக்கும் மற்றும் அனைத்து குடிமக்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தும் ஒரு அரசாங்கத்திற்காகவும் உருக்கமாக பிரார்த்தனை செய்தான். அவனுடன் அவனின் காதலி ருவனிக்காவும்  இணைந்து கொண்டாள். என்றாலும் குறளரசனும் ருவனிக்காவும் பாவத்தில் இருந்து இலங்கையை மீட்பதற்கான பாதை தடைகள் நிறைந்தது என்பதை உணர்ந்தனர். மேலும் 'மாற்றம்' எளிதில் வராது என்பது  குறளரசக்குத் தெரியும். அறியாமை மற்றும் தப்பெண்ணத்தின் தூக்கத்திலிருந்து ஒரு நாள் முழு சமூகமும் விழித்து, கடந்த கால தவறுகளை உணர்ந்து, நல்லிணக்கம் மற்றும் நீதியை நோக்கி ஒரு புதிய பாதையை உருவாக்குமா? அல்லது அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் அங்கீகரிக்கும் அதிகாரங்களை கட்டாயப்படுத்த சர்வதேச சமூகத்தின் இடைவிடாத அழுத்தம் தேவைப்படுமா?. அவன் மனம் அலை பாய்ந்தது. இந்த கவலையிலும், மற்றும் படிப்பாலும், அவன் சிலவேளை தனிமையை விரும்பினான். இதனால் அவன் ருவனிக்காவை சந்திப்பதும் குறையத் தொடங்கியது. இது அவளுக்கு ஒரு தவிப்பைக் கொடுத்தது.  ஒரு நாள் அவள், அவனின் காதில் விழக்கூடியதாக தன் தவிப்பை ஒரு சிங்கள பாடலை முணுமுணுத்து எடுத்துக் காட்டினாள். 'සිහිනෙන් වගේ ඇවිදින් ආයෙත් සැගවී හිටියේ කොහෙදෝ? මදකින්  පෙනී නොපෙනී ගියේ මේ ආදරේ හැටිදෝ  ?' 'නෙත සනසනා නුඹගේ සිනා මා රැය පුරා එය සිහි කලා නිදි දෙවු දුවත් අද නෑ ඇවිත් ඈතින් ඉදන් සරදම් කලා.'. 'නෙතු වෙහෙසිලා  දහවල  පුරා නුඹ සොය සොයා සිත දුර ගියා  මදකින්  පෙනී නොපෙනී ගියේ මෙ ආදරේ හැටිදෝ  ?'   குறளரசன் மௌனமாக கண்ணீர் சிந்தி, அதே பாடலை தமிழில் முணுமுணுத்தான். "மீண்டும் வருவாயோ கனவில் அணைப்பாயோ? எங்கே மறைந்தாய் ? எந்தத் தொலைவில் ? திடீரெனத் தோன்றுவாய்? சடுதியாக மறைவாய்? உண்மைக் காதலா?, வெறும் நாடகமா?" "சோர்ந்த கண்களுக்கு புன்னகை தைலம் இரவின் மடியில் முகத்தைக் காண்கிறேன்  இரவுதேவதை என்னைத் தழுவ மறுக்கிறாள்?  தூர விலகி கிண்டல் செய்கிறாள்?." "பகலில் கண்கள் சோர்வு அடையுதே  இதயம் அலைந்து உன்னைத் தேடுதே!  கண்ணுக்குள் அகப்படாதா காதலா இது? கணப்பொழுதில் கடக்கும் கனவின் மகிழ்ச்சியா ?" குறளரசன் தனது மருத்துவப் பயிற்சியின் இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அவன் நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையே கிழிந்துக் கொண்டு இருந்தான். முன்னோக்கி, செல்லும் நேரிய பாதை சவால்கள் நிறைந்ததாக இருந்தது, ஆனால் அவன் ஒரு சிறந்த நாளைய கனவுகளை என்றும் கைவிட மறுத்துவிட்டான். கல்வி, சுறுசுறுப்பு மற்றும் அன்பு ஆகியவற்றின் சக்தியை அவன் நம்பினான். பிளவு மற்றும் அவநம்பிக்கையால் பிளவுபட்ட சமூகத்தின் குழப்பங்களுக்கு மத்தியில் அவர்களின் காதல் மலர்ந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முற்றங்களில் மற்றும் மாலை நேர உலாக்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளில் ஆறுதலைக் கண்டார்கள், அவர்களின் காதல் வெளியில் வீசும் புயல்களிலிருந்து ஒரு தற்காலிக அடைக்கலமாக இருந்தது.  "மாலை நேர தென்றல் என்ன பாடுதோ என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ?" "பூ விரிந்த சோலை என்ன எண்ணுதோ இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு?" ஒரு சிங்கள குடும்பத்தின் மகளான ருவனிக்காவுக்கு, குறளரசனை நேசிப்பது என்பது பிறப்பிலிருந்தே அவளிடம் சூழ்நிலை காரணமாக வேரூன்றியிருந்த தப்பெண்ணங்கள் மற்றும் பக்கசார்புககளின் தாக்கங்களை கலையத் தொடங்கியது. குறளரசனின் தமிழ் மக்கள் சமூகத்தின் விளிம்புநிலையில் நலிந்தபோது, எழுபத்தி ஆறு ஆண்டுகளாக, சலுகை மற்றும் அதிகாரத்தால் பயனடைந்த ஒரு சமூகத்தைச் தான் சேர்ந்தவர் என்ற குற்ற உணர்வுடன் அவள் சிலவேளை மல்யுத்தம் செய்தாள். ஆனால் குறளரசனிடம், அவள் ஒரு காதலியாக மட்டுமல்ல, நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஒரு பங்காளியாகவும் இருந்தாள். ஒன்றாக, காதல் இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டிய எதிர்காலத்தை கற்பனை செய்யத் துணிந்தனர், அங்கு கடந்த கால பாவங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டன. அவர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் வாசலில் நிற்கும் போது, குறளரசனும் ருவனிக்காவும் ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டனர், அவர்களின் காதல் இருள் கடலில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. ஏனென்றால், அவர்களின் கூட்டணியில், மகாவம்சத்தின் எதிரொலிகள் மௌனமாகி, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் புரிந்துணர்விற்காக அழைப்பு விடுக்கும் குரல்களின் சேர்ந்திசையால் [கோரஸால்] பதிலீடு செய்யப்பட்ட எதிர்காலம் பற்றிய வாக்குறுதி இருந்தது. யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், குழப்பமான கடந்த காலத்தின் எதிரொலிகள் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்தின் கிசுகிசுக்களின் மத்தியில், குறளரசன் தனது மக்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உயர்ந்து நின்றான். மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய அவனது அசைக்க முடியாத நம்பிக்கையில், ஒரு நாள், தமிழர்களின் குரல்கள் கேட்கப்படும், அவர்களின் கனவுகள் நனவாகும், 'மாற்றம்' கட்டாயம் நிகழும் என்ற நம்பிக்கை, மற்றும் இரவீந்தரநாத் தாகூரின் கீதாஞ்சலி பாடல் [“Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;] அவனின் போராட்டத்தைத் தொடர ஊக்கம் & கொடுத்தது.  வலிமையைக் கொடுத்தது. "இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ, குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால் வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே  உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ, வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ, விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ, அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம்  எங்கே பாழடைந்த பழக்கம் என்னும் பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ, நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும் இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ,  அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்!" [கீதாஞ்சலி / தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா] நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.