Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனைவி.....

Featured Replies

3_13221922840.jpg

 

அதிகாலை அழகாக தெரிகிறது…
அவள் முகத்தில் விழிப்பதனால்!
ஒவ்வொரு நாளும் அவளோடுதான்...
ஆனந்தமாய் விடிகிறது!

 

ஒவ்வொரு நொடியும் அழகாக...

விதம்விதமாய்த் தெரிவாள்!
கழுவாத முகத்தோடும்
களையாக இருப்பாள்!
களைத்தாலும் சளைக்காமல்
அவள் வேலை முடிப்பாள்!
உழைத்தாடி வரும் தலைவன்
களைப்பெல்லாம் போக,
கனிவான வரவேற்று
அன்பாகப் பார்ப்பாள்!

 

குழந்தையாய் சிரிப்பாள்…
அவனோடு.... குழந்தையும் சுமப்பாள்!
உயிரோடு உயிராக…
உலகமே அதுவாக,
அவனுக்கும் அவளுக்குமாய்…

அவளின் சின்ன உலகத்துக்காய்...
அவள் தன் உயிரையும் கொடுப்பாள்!

ஒவ்வொரு மனைவியும்
அவள் கணவனுக்கு
இரண்டாவது தாய்தான்!!!

 

So...Guys!

  :wub:  Love your wife!  :wub:

Edited by கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி இதுதான் உதைக்குது

அவள் வேலை முடிப்பாள்! உழைத்தாடி வரும் தலைவன் களைப்பெல்லாம் போக, கனிவான வரவேற்று அன்பாகப் பார்ப்பாள்!
........புலத்தில் அவள் வேலையால் வர கணவன் அன்பாக பார்ப்பான் .....கி..கி...கவிதைக்கு நன்றி கவிதை
  • கருத்துக்கள உறவுகள்

உந்தாள் கவிதை கல்யாணம் கட்டவில்லை போல இருக்கிறது.

  • தொடங்கியவர்

எல்லாம் சரி இதுதான் உதைக்குது

 

........புலத்தில் அவள் வேலையால் வர கணவன் அன்பாக பார்ப்பான் .....கி..கி...கவிதைக்கு நன்றி கவிதை

 

 

ஓ..... அப்பிடியா...... :)    

 (தப்பா நினைக்காதீங்க புத்தா.....  எல்லாம் எங்கட கையில (இல்ல)  தான் இருக்குது ) :D:)

உந்தாள் கவிதை கல்யாணம் கட்டவில்லை போல இருக்கிறது.

 

போல.............................................................. :(   

 

(அண்ணோய்...... கட்டிப்போட்டுதான் சொல்லுறன்)

ம்ம்...... கவிதையின் கவிதைக்கு வாழ்த்துக்கள்!!

நீங்கள் இதுக்கு ஒரு disclaimer கட்டாயம் போடவேண்டும்  .

 
" இது ஒரு கற்பனை. இதை நம்பி கல்யாணம் செய்து ஏமாந்தால் நான் பொறுப்பல்ல" :D  :lol:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு மார்க்கமாத் தான் வந்திருக்கிறிங்கள்.

 

தொடர்ந்திருங்கள்,,, நன்றி அண்ணா கவிதை க்கு.. :)

  • கருத்துக்கள உறவுகள்

இவை அத்தனையும் உண்மை.. கல்யாணம் கட்டியவர்களால் மட்டும்தான் இவைகளை உணரமுடியும்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி இதுதான் உதைக்குது

 

........புலத்தில் அவள் வேலையால் வர கணவன் அன்பாக பார்ப்பான் .....கி..கி...கவிதைக்கு நன்றி கவிதை

 

 

கவிதை எழுதின மனைவி வேலைவெட்டிக்குப் போகாமல் வள்ளுவர் கண்ட வாசுகியாய் தெரிகிறார். புலத்தில் வேலைக்குப் போய் வருகிற மனைவிகளுக்கும் கணவர்களுக்கும் இந்த வாசுகி வள்ளுவன் கதைகள் பொருந்தாது புத்தா.

:lol:

உந்தாள் கவிதை கல்யாணம் கட்டவில்லை போல இருக்கிறது.

 

எதுக்கும் உங்கடை வீட்டுக்கு ஒரு டசின் அகப்பைக் காம்புகள் அன்பளிப்புச் செய்யத்தானிருக்கு. :icon_idea:

 

 

நீங்கள் இதுக்கு ஒரு disclaimer கட்டாயம் போடவேண்டும்  .

 
" இது ஒரு கற்பனை. இதை நம்பி கல்யாணம் செய்து ஏமாந்தால் நான் பொறுப்பல்ல" :D  :lol:

 

 

காளான் றெம்ப பயப்பிடுறமாதிரியிருக்கு. சரி சரி பயப்பிடாமல் முன்வைத்த காலை பின் வைக்காமல் கலியாணத்தை கட்டீட்டு உங்கள் அனுபவத்தையும் சொல்லுங்கோ. :lol:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.