Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நயமான ஊடல்.

Featured Replies

நயமான ஊடல்.

24dtmani1.jpg

 

பரத்தையரிடமிருந்து மீண்டும் தலைவியிடம் வந்த தலைவன் தம் புதல்வனைத் தூக்கி விளையாடினான்.. தலைவனுக்குத் தம் புதல்வனை நீங்கிச் செல்ல மனமும் இல்லை.. பரத்தையர் நினைவையும் அவனால் கைவிடமுடியவில்லை..பரத்தையரோ தலைவன் வேறு யாருடனும் கூடக் கூடாது என்பதற்காகப் பல  அணிகளையும் அடையாளமாக அணிவித்து அனுப்பிவைக்கிறாள். இதைப்  பார்த்து ஊடல் (கோபம்) கொண்ட தலைவி தலைவனை நீ இங்கு இருக்கவேண்டாம் பரத்தையரிடமே செல்க என்று கோபமாகச் சொன்னாலும்  நயமாக அவன் தவறை அவனுக்குப் புரியவைப்பது போலச் சொல்கிறாள்..

அழகான உவமை.

பறவைகள் ஒலிக்கின்ற அகன்ற வயல்! அங்கு,

ஒலிக்கின்ற செந்நெல் இடையிலே தாமரை மலர்ந்திருக்கிறது!

அந்தத் தாமரை மீது முதிர்ந்த கதிர்கள் சாய்ந்திருக்கின்றன!

இக்காட்சியானது புகழ்பெற்ற ஆடுமகளின் அழகிய நெற்றியில் தாழும்படி

அழகுடன் செருகி இருந்த “வயந்தகம்“ போல இருந்தது!

இத்தகைய குளிந்த துறையினைக் கொண்ட ஊரனே கேள்...

நயமான ஊடல்,

பரத்தையர் அணிந்த அணிகளோடு இங்கு வந்து நீ எம் புதல்வனைத்

தூக்கவேண்டாம்...

 

மணியை ஒத்த அவனது சிவந்த வாயிலிருந்து ஊரும் நீரெல்லாம் உன் மார்பில் அணிந்த சந்தனத்தை அழித்துவிடும். பிறகு உன்னை அனுப்பிய பரத்தை நீ  வேறு மகளிரோடு கூடினாயோ என்று வருந்துவாள் அல்லவா? எம் புதல்வனை நீ தழுவுதல் வேண்டாம். அவன் உன் மார்பில் அணியப்பட்ட வடங்களாகிய முத்தாரத்தைப் பிடித்து அறுப்பான். பின்.. உன் பரத்தையர் அவரிட்ட அடையளம் காணாது... உன்னோடு ஊடிவிடுவார்களல்லவா?

எம் புதல்வனை நீ தேடி எடுத்துக்கொள்ளாதபோதும் அவன் உன்னிடம் வருதல் கண்டாலும் அவனைத் தூக்கிக்கொள்ளாதே.. நின் தலையில் வண்டுகள் ஒலிக்கும் மலர்க்கொத்துகள் அணிந்துள்ளாய்! அவன் அம்மாலையை அறுப்பான். உன்னைச் சேர்ந்தவர்கள் யார் என்பதை

அறிய அடையாளமாக வைத்த மாலை அழகிழந்திருப்பதை அறிந்து அப்பரத்தையர் உன் மீது சினம் கொள்வாள் அல்லவா?

மலர் போல அழகிய கண்களைக் கொண்ட புதல்வனைப் பொய் பல சொல்லிப் பாராட்டி அவனைவிட்டு நீங்காமலும்... உன் பரத்தையர் உனக்கு அடையாளமாக அணிவித்து அனுப்பிய மாலை, அணிகலன், சந்தனம் உள்ளிட்டவை சிதையாது அவனிடமிருந்து பாதுகாத்தும் உன்னால் இருக்கமுடியாது அதனால் நீ எம் வாயிலில் நிற்காதே.. நின்றால் அவன் உன் அணியைச் சிதைப்பான்...

அதனால் எம் புதல்வனை எம்மிடம் தந்துவிட்டு நீ மீண்டும் பரதையரிடமே செல்வாயாக..... என்றாள் தலைவி..

பாடல் இதோ..

புள் இமிழ் அகல் வயல் ஒலி செந்நெல் இடைப் பூத்த

முள் அரைத் தாமரை முழு முதல் சாய்த்து, அதன்

வள் இதழ் உற நீடி, வயங்கிய ஒரு கதிர்,

அவை புகழ் அரங்கின்மேல் ஆடுவாள் அணி நுதல்

வகை பெறச் செரீஇய வயந்தகம் போல், தோன்றும்

தகை பெறு கழனி அம் தண் துறை ஊர! கேள்:

அணியொடு வந்து ஈங்கு எம் புதல்வனைக் கொள்ளாதி;

மணி புரை செவ் வாய் நின் மார்பு அகலம் நனைப்பதால்;

'தோய்ந்தாரை அறிகுவேன், யான்' என, கமழும் நின்

சாந்தினால் குறி கொண்டாள் சாய்குவள் அல்லளோ;

புல்லல் எம் புதல்வனை; புகல் அகல் நின் மார்பில்

பல் காழ் முத்து அணி ஆரம் பற்றினன் பரிவானான்;

மாண் இழை மட நல்லார் முயக்கத்தை நின் மார்பில்

பூணினால் குறி கொண்டாள் புலக்குவள் அல்லளோ;

கண்டே எம் புதல்வனைக் கொள்ளாதி; நின் சென்னி

வண்டு இமிர் வகை இணர் வாங்கினன் பரிவானால்;

'நண்ணியார்க் காட்டுவது இது' என, கமழும் நின்

கண்ணியால் குறி கொண்டாள் காய்குவள் அல்லளோ;

என ஆங்கு

பூங் கண் புதல்வனைப் பொய் பல பாராட்டி,நீங்காய் இகவாய் நெடுங் கடை நில்லாதி;

ஆங்கே அவர் வயின் சென்றீ அணி சிதைப்பான்

ஈங்கு எம் புதல்வனைத் தந்து.

கலித்தொகை -79

ஊடற் காலத்தே தலைவி தலைவனைச் செல்க எனக் கூறிவிடுத்தனள். தலைவன், இடமும் காலமும் பற்றி அறிந்து இனிச் செல்லான், உடன் இருப்பான் என்ற நிலையில் ஊடல் உள்ளத்தால் கூடப் பெறாதாள் செல்க எனக்கூறி விடுத்து ஆற்றினள்.

பாடல் வழியே..தலைவன் பரத்தையரிடம் செல்வது சங்ககால வழக்கமாக இருந்தது என்பதையும் அதனைச் சமூகம் தண்டிக்காவிட்டாலும். குடும்பத் தலைவி விரும்பவில்லை என்பதையும் பாடல் சுட்டுகிறது. தாமரை மலர் மீது நெற்கதிர்கள் தலைசாய்ந்திருப்பது ஆடுமகளின் நெற்றிச்சுட்டி போல இருந்தது என்ற உவமை மனம் கொள்ளத்தக்கதாக உள்ளது. தலைவி தலைவன் மீது ஊடல் கொண்டாலும் நயமாகப் பேசும் விதம் தலைவன் தன் தவறை உணர தக்க கருவியாக அமைகிறது.

தமிழ்ச் சொல் அறிவோம்.. :

இமிழ்தல் – ஒலித்தல்

செரிஇய - செருகிய

வயந்தகம் – நெற்றிச்சுட்டி

பல்காழ் – பல்வடம் (அணிகலன்)

காய்ககுவள் – வருந்துவள்.

முனைவர் இரா.குணசீலன்

நன்றி : http://www.gunathamizh.com/2011/10/blog-post_04.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழிலே கம்பராமாயணம் ,திருக்குறள், புறநானூறு, திவ்யப் ப்ரபந்தம்  என்று எதை எடுத்தாலும்  மிகமிக அழகான அற்புதமான உவமைகளைக் காணலாம். நன்றி கோமகன் !!

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப பொறுமையான தலைவி.. இந்தக்கால தலைவிமார் கத்தியெடுத்து அறுத்துப்போடுவார்கள்.. அதாவது கத்திற கத்தல் ஒரே அறுவையா இருக்கும் என்று சொல்லவந்தன்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

நயமான ஊடல்.

24dtmani1.jpg

 

பரத்தையரிடமிருந்து மீண்டும் தலைவியிடம் வந்த தலைவன் தம் புதல்வனைத் தூக்கி விளையாடினான்.. தலைவனுக்குத் தம் புதல்வனை நீங்கிச் செல்ல மனமும் இல்லை.. பரத்தையர் நினைவையும் அவனால் கைவிடமுடியவில்லை..பரத்தையரோ தலைவன் வேறு யாருடனும் கூடக் கூடாது என்பதற்காகப் பல  அணிகளையும் அடையாளமாக அணிவித்து அனுப்பிவைக்கிறாள். இதைப்  பார்த்து ஊடல் (கோபம்) கொண்ட தலைவி தலைவனை நீ இங்கு இருக்கவேண்டாம் பரத்தையரிடமே செல்க என்று கோபமாகச் சொன்னாலும்  நயமாக அவன் தவறை அவனுக்குப் புரியவைப்பது போலச் சொல்கிறாள்..

அழகான உவமை.

 

சங்க காலத்தில் மட்டுமல்ல இந்த நவீன காலத்திலும்

வீட்டில் எத்தனை அழகான மனைவி இருந்தும் அயல் வீட்டை 

எட்டிப்பார்க்கும் குணம் தான் மனித குணம்.

என்னுடைய கருத்து என்னவென்றால்  போனால் போனது தான் 

திரும்ப வீட்டுப்பக்கம் தலை வைக்க மாட்டேன்    :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புள் இமிழ் அகல் வயல் ஒலி செந்நெல் இடைப் பூத்த
முள் அரைத் தாமரை முழு முதல் சாய்த்து, அதன்
வள் இதழ் உற நீடி, வயங்கிய ஒரு கதிர்,
அவை புகழ் அரங்கின்மேல் ஆடுவாள் அணி நுதல்
வகை பெறச் செரீஇய வயந்தகம் போல், தோன்றும்
தகை பெறு கழனி அம் தண் துறை ஊர! கேள்:
அணியொடு வந்து ஈங்கு எம் புதல்வனைக் கொள்ளாதி;
மணி புரை செவ் வாய் நின் மார்பு அகலம் நனைப்பதால்;
'தோய்ந்தாரை அறிகுவேன், யான்' என, கமழும் நின்
சாந்தினால் குறி கொண்டாள் சாய்குவள் அல்லளோ;
புல்லல் எம் புதல்வனை; புகல் அகல் நின் மார்பில்
பல் காழ் முத்து அணி ஆரம் பற்றினன் பரிவானான்;
மாண் இழை மட நல்லார் முயக்கத்தை நின் மார்பில்
பூணினால் குறி கொண்டாள் புலக்குவள் அல்லளோ;
கண்டே எம் புதல்வனைக் கொள்ளாதி; நின் சென்னி
வண்டு இமிர் வகை இணர் வாங்கினன் பரிவானால்;
'நண்ணியார்க் காட்டுவது இது' என, கமழும் நின்
கண்ணியால் குறி கொண்டாள் காய்குவள் அல்லளோ;
என ஆங்கு
பூங் கண் புதல்வனைப் பொய் பல பாராட்டி,நீங்காய் இகவாய் நெடுங் கடை நில்லாதி;
ஆங்கே அவர் வயின் சென்றீ அணி சிதைப்பான்
ஈங்கு எம் புதல்வனைத் தந்து.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆகா அவ்வளவும் அற்புதம் அற்புதம்.....நன்றி கோமகன்.

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.....

 

அந்தக்காலத்திலாவது , வாழ்ந்திருந்திருக்கலாம்! :o

 

நன்றிகள், கோமகன்! :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த காலத்தில் womaniser என்ற பட்டத்துடன் விவாகரத்து.....

  • தொடங்கியவர்

தமிழிலே கம்பராமாயணம் ,திருக்குறள், புறநானூறு, திவ்யப் ப்ரபந்தம்  என்று எதை எடுத்தாலும்  மிகமிக அழகான அற்புதமான உவமைகளைக் காணலாம். நன்றி கோமகன் !!

 

உண்மைதான் சுவியர் ........ அதாலைதான் இதிலை விழுந்து கிடக்கிறன்  :D  :D .  வரவுக்கும் கருத்துக்கும் நன்றி :) :) .

 

  • தொடங்கியவர்

ரொம்ப பொறுமையான தலைவி.. இந்தக்கால தலைவிமார் கத்தியெடுத்து அறுத்துப்போடுவார்கள்.. அதாவது கத்திற கத்தல் ஒரே அறுவையா இருக்கும் என்று சொல்லவந்தன்.. :D

 

இன்றைய தலைவன்கள் அதிக பொறுமைசாலிகள் என்று சொல்கின்றீர்கள் :lol: :lol: . வருகைக்கும் கருத்த்துக்கும் நன்றி மாமு :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி கோ

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான் இணைப்பு கோமகன் அண்ணா.

 

மறந்துவிட்ட பல அழகிய தமிழ்ச் சொற்களை மீண்டும் மீட்டகூடியவறு இருந்தது.

(எடுத்துக்காட்டு : புள், கழனி)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.