Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விக்னேஸ்வரனுடன் அரசியல் ரீதியான எந்தத் தொடர்புகளில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் தனது உறவினராக இருந்தாலும் அவருடன் அரசியல் ரீதியான எந்த தொடர்புகளுமில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

 

தான் நம்புவது வர்க்க வேறுபாடுகளையே  அன்றி, இன ரீதியான அடையாளங்கள் அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.

 

எனது அரசியலும், உறவு முறையும் ஒன்றுடன் ஒன்று ஒத்துபோகும் விடயங்கள் அல்ல.  நான் 15வயதில் எனது பாடசாலை பருவத்தில் அரசியலை ஆரம்பித்தேன். நான் கம்யூனிஸவாதி,  குல பேதங்களையும் வகுப்பு வாதங்களையும் எதிர்ப்பவன்.  நாங்கள் வர்க்க போராட்டத்தையே  நம்புகிறோம்.

இன அடையாளங்களை நாங்கள் நம்புவதில்லை. இதனால் சகல மக்களுக்கும், அவர்களின் அடையாளத்திற்கு ஏற்ப உரிமைகளை வழங்க வேண்டும்.

நாட்டில் கஷ்டப்படும் மக்களுக்கான அரசியலையே நான் தெரிவு செய்துள்ளேன். இதனை உறவின் முறையாலோ, வேறு எந்த விதத்தினாலோ மாற்ற முடியாது என வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளரான சீ.வீ. விக்னேஸ்வரனின் புதல்வர், வாசுதேவ நாணயக்காரவின் மகளை திருமணம் செய்துள்ளார்.

 

அவரது இளைய புதல்வரும் சிங்கள பெண்ணை மணம் முடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94226/language/ta-IN/article.aspx

 
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு..என்னமோ..சம்பந்து ...மஹிந்து ..விளையாட்டின் உச்சக் கட்டம் போல தெரியுது....எங்கு போய் முடியுமோ...எம்மினத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது..

Edited by alvayan

விளையாட்டின் உச்ச கட்டம் யார் கோல் அடிப்பது என்பதில் தான் இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு..என்னமோ..சம்பந்து ...மஹிந்து ..விளையாட்டின் உச்சக் கட்டம் போல தெரியுது....எங்கு போய் முடியுமோ...எம்மினத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது..

 

முள்ளிவாய்க்காலில் காப்பற்றாத இறைவன் இனிமேலும் காப்பற்ற மாட்டான் ஆகவே நடப்பவை நன்மைக்கே என்று ருக்க வேண்டியதுதான்

  • கருத்துக்கள உறவுகள்

திறமையானவனும்......பெரும் ஆதரவு உள்ளவனும்  கோல் அடித்து வெல்லலாம்...ஆனால் மத்தியஸ்தரும்....துணைகளும் நேர்மையாக நடப்பார்களா என்பது சந்தேகமே...இதில் நீங்களும் ஒரு ஆளாக இருந்தால்...

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவுடன் சேரும் போதே வாசுதேவா தனது தனித்துவத்தை இழந்து விட்டார்.சுயநலவாதி என்பதால் அமைச்சர் பதவியையும் பெற்றுக்கொண்டார்.மிக நீண்ட காலமாக கம்யூனிஸ்ட் ஆக இருந்தவரை சிங்கள மக்கள் ஏற்கவில்லை.

 

 

 

 


விளையாட்டின் உச்ச கட்டம் யார் கோல் அடிப்பது என்பதில் தான் இருக்கு .

 

அதே பக்கத்துக்கு கோல் அடிக்காமல் விட்டாலே பெரிய புண்ணியமாக போய் விடும். இப்போதும் சொல்கிறேன் ஒரு மாவீரன் தமிழ் மக்களுக்கு செய்ததை ஆயிரம் விக்னேஸ்வரனால் செய்ய முடியாது. காலம் இதற்கான பதிலை சொல்லும். :huh:  :huh:

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

 

 

அதே பக்கத்துக்கு கோல் அடிக்காமல் விட்டாலே பெரிய புண்ணியமாக போய் விடும். இப்போதும் சொல்கிறேன் ஒரு மாவீரன் தமிழ் மக்களுக்கு செய்ததை ஆயிரம் விக்னேஸ்வரனால் செய்ய முடியாது. காலம் இதற்கான பதிலை சொல்லும். :huh:  :huh:

 

உண்மையிலும்  உண்மை....ஒரு சம்பந்தனால்...ஒரு சுமந்திரனால்.....இப்போது ஒரு விக்கினேஸ்வரனால்.......தறிகெட்ட னிலையில்தான் தமிழினம் சென்று கொண்டிருக்கிறது....அண்ணன் இல்லா அருமை இப்போது வெளிக்கிறது...

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

 

 

அதே பக்கத்துக்கு கோல் அடிக்காமல் விட்டாலே பெரிய புண்ணியமாக போய் விடும். இப்போதும் சொல்கிறேன் ஒரு மாவீரன் தமிழ் மக்களுக்கு செய்ததை ஆயிரம் விக்னேஸ்வரனால் செய்ய முடியாது. காலம் இதற்கான பதிலை சொல்லும். :huh:  :huh:

 

உண்மையிலும்  உண்மை....ஒரு சம்பந்தனால்...ஒரு சுமந்திரனால்.....இப்போது ஒரு விக்கினேஸ்வரனால்.......தறிகெட்ட னிலையில்தான் தமிழினம் சென்று கொண்டிருக்கிறது....அண்ணன் இல்லா அருமை இப்போது வெளிக்கிறது...

விளையாட்டின் உச்ச கட்டம் யார் கோல் அடிப்பது என்பதில் தான் இருக்கு .

உங்கட இயக்கத்தை நீங்கள் எல்லாருமாய் சேர்ந்து அழிச்சதாய் சொன்னியளே அதுமாதிரியா அண்ணே...??

தனது பிள்ளைகளின் நடவடிக்கையால், அவர்களின் சுதந்திரத்தை மதித்த அதேவேளை,  கடுமையான மன உளைச்சலுக்கு விக்னேஸ்வரன் அவர்கள் ஆளானதாக கூறுகிறார்கள்.

அவர் பிள்ளைகளுக்கு வழங்கிய சுதந்திரத்தை பயன்படுத்தி, அவரது பிள்ளைகள் தமது பலவீனகளுக்கு அடிமையாக மாறியதற்கு இவர் எப்படி பொறுப்பாக முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

எமது உறவுக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை; வாசுதேவ நாணயக்கார
 

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் எனது உறவினர் தான். இருப்பினும் எங்களுக்கிடையில் அரசியல் ரீதியான எந்தவொரு தொடர்புகளுமில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் நம்புவது வர்க்க வேறுபாடுகளையே இன ரீதியான அடையாளங்களை அல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்திருக்கும் சி.வீ. விக்கினேஸ்வரன் எமது உறவினர் தான். என்றாலும் எங்களுக்குள் அரசியல் ரீதியில் எந்தவொரு தொடர்புகளும் இல்லை.

எனது அரசியலும், உறவு முறையும் ஒன்றுடன் ஒன்று ஒத்துபோகும் விடயங்கள் அல்ல. நான் 15வயதில் எனது பாடசாலை பருவத்தில் இருந்தே அரசியலை ஆரம்பித்தேன். அத்துடன் நான் கம்யூனிஸ்வாதி, குல பேதங்களையும் வகுப்பு வாதங்களையும் எதிர்ப்பவன். நாங்கள் வர்க்க போராட்டத்தையே நம்புகிறோம். இன அடையாளங்களை அல்ல.

இதனடிப்படையில் நாட்டில் சகல மக்களுக்கும், அவர்களின் அடையாளத்திற்கு ஏற்ப உரிமைகளை வழங்க வேண்டும். அதனை அடிப்படையாகக் கொண்டே நாட்டில் கஷ்டப்படும் மக்களுக்கான அரசியலையே நான் தெரிவு செய்துள்ளேன். இதனை உறவு முறையாலோ அல்லது வேறு எந்த விதத்தினாலோ மாற்ற முடியாது என வாசுதேவ நாணயக்கார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தெரிவுசெய்யப்பட்ட சீ.வீ. விக்னேஸ்வரனின் புதல்வர்களில் ஒருவர் வாசுதேவ நாணயக்காரவின் மகளை திருமணம் முடித்துள்ளமை குறிப்பிடதக்கது.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=232762187621638808#sthash.soiAiUbN.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

ஒ, விசயம் அப்படியெல்லாம் இருக்குதோ 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனையும், விக்கியையும் சிங்களவர்கள் செல்லமாக (இனவாதிகளில் இருந்து) அங்கிள் என செல்லமாக அழைப்பார்களாம். கூட்டமைப்பில் இருந்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திரிக்கா அரசால் கொல்லப்பட்ட போதும் சம்பந்தரை அங்கிள் என கூப்பிடும் அளவுக்கு .........................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.