Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனித உரிமை ஆர்வலர் சுனிலா காலமானார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 
suila.jpgமனித உரிமை ஆர்வலரான சுனிலா அபேசேகர இன்று திங்கட்கிழமை மாலை காலமானார். இவர் மனித உரிமைகள் பிரசாரத்திற்காக அரும்பாடுபட்டமைக்காக 1999ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளினால் இவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இதற்கு மேலதிகமாக மனித உரிமைகள் ஆணையகமும் இவரின் சேவையை பாராட்டி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

 
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..! அங்கொன்றும் இங்கொன்றுமாக மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்கள் விரைவில் இறந்துபோகிறார்கள்..

இனவாதச் சிங்களவர்களால் வெறுக்கப்பட்ட பெண்மணி இவர். தொடர்ந்தும் மனித உரீமைகளுக்காகக் குரல் கொடுத்து வந்த ஆன்னாரது இழப்பு மனித உரிமை ஆர்வலர்களுக்கு ஒரு பேரிழப்பே...

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..! 

Sunila+Abeysekera.jpg

 

சர்வதேச விருது பெற்ற சமூக செயற்பாட்டாளரான சுனிலா அபேசேகர காலமானார். சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொழும்பில் இன்று திங்கட்கிழமை மாலை உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

1952ஆம் ஆண்டு பிறந்த சுனிலா அபேசேகர, கடந்த இரண்டு தசாப்த காலமாக இலங்கையிலும், தெற்காசியாவிலும் சமூக சிவில் செயற்பாட்டாளராக தொடர்ந்தும் செயற்பட்டுவந்தார். குறிப்பாக, பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்காக அனைத்து தரப்பு போராட்டங்களிலும் பங்கெடுத்திருந்தார்.

சுனிலா அபேசேகர, சிறந்த சமூக செயற்பாட்டாளருக்கான விருதை ஐக்கிய நாடுகளின் அப்போதைய செயலாளர் நாயகமான கொபி அனானிடமிருந்து 1999ஆம் ஆண்டு பெற்றுக்கொண்டிருந்தார். அத்தோடு, இலங்கையில் ஊடகங்கள் மிகவும் அச்சுறுத்தலாக உணர்ந்த 2005- 2009களில் சுதந்திர ஊடக இயக்கத்திலும் பங்களித்து ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக போராடி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.4tamilmedia.com/newses/srilanka/17080-sunila-abesekara-expired

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
வன்னியில் எமது சொந்தங்களை சிங்கள அரசபயங்கரவாதிகள் கொன்று குவித்தபோது இந்த அம்மணி குரல் கொடுத்தாரா ...... ? குறைந்தளவு மக்களையாவது திரட்டி வீதியில் தமது எதிர்ப்பை தெரிவித்தாரா .........?? நான் அப்படி எதனையும் கேள்விப்படவில்லை சிறிலங்காவில் உள்ள எந்த சிங்கள மனித உரிமை ஆர்வலர்களாலும் தமிழர்களுக்கு எந்த பயனும் இல்லை  :(
 
ஆழ்ந்த இரங்கல்கள்.
 

இவர் 2009 லும், முன்னரும் அகதிகள் முகாம்கள், கைதானவர், மறைந்தவர்கள் பற்றி எல்லாம் தனது எதிர்ப்புக்களை காட்டியத்தாக ஞாபகம்.

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்
எம் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.ஆத்மா சாந்தியடையட்டும்
 
  • கருத்துக்கள உறவுகள்

புத்தனின் பாரிய சிலைகளுக்குப் பின்னால், மனித அவலங்கள் மறைக்கப்படும்  தேசமொன்றில், துணிந்து தனது கருத்துக்களை முன் வைத்த ஒரு பெண்மணி!

 

இறுதி வரையும், மனித உரிமைகள் விடையத்தில் சமரசம் செய்யாமல் ஒலித்த குரல் இவருடையது!

 

ஆழ்ந்த அனுதாபங்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

 
  • கருத்துக்கள உறவுகள்
suila.jpg

மனித உரிமை ஆர்வலர், சுனிலா அபேசேகரவிற்கு.... ஆழ்ந்த இரங்கல்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.